இலங்கைக்கு IMF உதவி பெற உத்தரவாதம்
Posted in இலங்கை செய்திகள்

சீனாவின் ஆதரவு இன்றி இலங்கைக்கு கடன்கள் வழங்க நடவடிக்கை |இலங்கை செய்திகள்

சீனாவின் ஆதரவு இன்றி இலங்கைக்கு கடன்கள் வழங்க நடவடிக்கை |இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள் |சீனாவின் ஆதரவு இன்றி இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் கடன் வழங்கிட நடவடிக்கை மேற்கொண்டுள்ளது .

சீனா கடன் தள்ளி வைப்பு நடவடிக்கைக்கு ரெண்டு வருடம் மட்டுமே அனுமதி வழங்கியது .


இந்த காலக்கெடு போதாமை உள்ளதினால் ,சீனாவை புறம் தள்ளி
கடும் நிபந்தனைகளுடன் இலங்கைக்கு நிதி வழங்க,
சர்வதேச நாணய நிதியம் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது .

இலங்கை இவ்வாறான நிலைக்கு செல்ல ,சீனாவே காரணமாக விளங்கியதும் ,
தொடர்ந்து இலங்கையை தனது பிடிக்குள் வைத்திருக்க சீனா
முயல்வதும் இதன் ஊடாக அம்பலமாகியுள்ளது .

இந்த விடயம் உலக முக்கிய செய்திகள் பக்கத்தில் இடம்பிடித்துள்ளமை குறிப்பிட தக்கது .

No posts found.
வெளியான புதிய புலிகள் எழுச்சி பாடல்|இலங்கை செய்திகள்
Posted in இலங்கை செய்திகள்

வெளியான புதிய புலிகள் எழுச்சி பாடல்|இலங்கை செய்திகள்

வெளியான புதிய புலிகள் எழுச்சி பாடல்

இலங்கை செய்திகள் |தமிழீழ விடுதலை புலிகளின் எழுச்சிமிகு பாடல் ஒன்று
வெளியாகியுள்ளது .

புலிகள் அமைப்பு அழிக்க பட்டாலும் அவர் தம் எழுச்சி குறையவில்லை .


தமிழர் கலைபண்பாடு மற்றும் கலை பண்பாட்டு கழகம் அழியாமல் தொடர்ந்து நடை போடுவதை இவ்வாறான ஈழ பாடல் வெளியீடுகள் எடுத்து காட்டுகின்றன .

இந்த பாடலை பாடியவர் பாவேந்தன் -இளங்கோவன்
இசையமைப்பு – இளங்கோ செல்லப்பா
பாடல் வரிகள் – ஸ்ரீகாந்தன்

இதில் அழுத்தி பாடலை பாருங்கள்

https://www.youtube.com/watch?v=pyIj0B62aEM
No posts found.
உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவிக்கும் இயற்கை விவசாய உணவு சந்தை|இலங்கை செய்திகள்
Posted in இலங்கை செய்திகள்

உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவிக்கும் இயற்கை விவசாய உணவு சந்தை|இலங்கை செய்திகள்

உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவிக்கும் இயற்கை விவசாய உணவு சந்தை|இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள் |உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவிக்கும் நோக்கில் இயற்கை உற்பத்திகளுக்கான விழிப்புணர்வும், விவசாய உணவு உற்பத்திச் சந்தையும்

உள்ளூர் சந்தைக்கான உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவிக்கும் நோக்கில் இயற்கை உற்பத்திகளுக்கான விழிப்புணர்வும், விவசாய உணவு உற்பத்திச் சந்தையும் திருகோணமலை இந்து கலாசார மண்டபத்தில் இன்று (16) இடம்பெற்றது.

ஜப்பான் அரசாங்க நிதியுதவியின் கீழ் ஜப்பான் நாட்டின் பீஸ் வெயின்ட் அரச சார்பாற்ற நிறுவனத்தின் ஏற்பாட்டில், கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்களம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக சித்த மருத்துவப் பிரிவு

இணைந்து நடாத்திய இந்நிகழ்வுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் பிரதம அதிதியாகவும், ஜப்பான் நாட்டு தூதுவர் கிடாக்கி மிஸிகோசு

கௌரவ அதிதியாகவும், கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள ஆணையாளர் வைத்திய கலாநிதி (திருமதி) இ.ஸ்ரீதர் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவிக்கும் இயற்கை விவசாய உணவு சந்தை|இலங்கை செய்திகள்

உள்ளூர் சந்தைக்கான உள்ளூர் உற்பத்திக்கூடங்களை பிரதம
அதிதி கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்தினால் திறந்து
வைத்து அங்கு வைக்கப்பட்டுள்ள உற்பத்திப் பொருட்களையும் பார்வையிட்டார்.

திருகோணமலை மாவட்டத்தில் மிகச் சிறந்த முறையில் சேதனைப் பசளைகளை உற்பத்தி செய்து அதன் மூலம் நல்ல விளைச்சலைப்பெற்ற உற்பத்தியாளர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுப் பொருட்களுடன் நினைவுச் சின்னங்களை ஆளுநர் மற்றும் ஜப்பான் நாட்டு தூதுவர் கிடாக்கி மிஸிகோசு ஆகியோரினால் வழங்கி கௌரவிக்கப்பட்டது .

அபு அலா –

No posts found.
பிரபாகரன் உயிரோடு இல்லை திருமாவளவன்| இலங்கை செய்திகள்
Posted in இலங்கை செய்திகள்

பிரபாகரன் உயிரோடு இல்லை திருமாவளவன்| இலங்கை செய்திகள்

பிரபாகரன் உயிரோடு இல்லை திருமாவளவன்| இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள் | தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர்
பிரபாகரன் உயிரோடு இல்லை என திருமாவளவன் தெரிவித்துள்ளார் .

இந்த பிரபாகரன் உயிரோடு உளளார் என்கின்ற
அறிவிப்பானது அரசியலுக்கும் ,மக்கள் எழுச்சிக்கு உரித்தானதல்ல .

காலம் கடந்து தெரிவிக்க படும் இந்த கருத்தியல் ஏற்புடையதல்ல .
தலைவர் பிரபாகரன் ஆளுமை ,அவரது கொள்கை நோக்கு
என்பன இந்த வெளிப்பாட்டுக்கு உகந்தது அல்ல என திருமாவளவன்
தெரிவித்தார் .

சிலரது அரசியல் தேவைக்கு ஏற்ப இவ்விதம் சில பரப்புரைகள் அவசியமாகிறது என திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார் .

இலங்கை உலக செய்திகளில் பிரபாகரன் உயிரோடு உள்ள செய்தி வாத பிரதி வாதங்களை ஏற்படுத்தியுள்ளது .

No posts found.
யாழில் இளம் பெண்ணின் நெகிழ்ச்சியான செயல் |இலங்கை செய்திகள்
Posted in இலங்கை செய்திகள்

யாழில் இளம் பெண்ணின் நெகிழ்ச்சியான செயல் |இலங்கை செய்திகள்

யாழில் இளம் பெண்ணின் நெகிழ்ச்சியான செயல் |இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள் | யாழ்ப்பாணத்தில் இளம் பெண் ஒருவர் செய்த நெகிழ்ச்சியான செயல் ஒன்று
சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாக மாற்றம் பெற்றுள்ளது .

தாம் ஒன்று தமது வாழ்வு ஒன்று என வாழும் இவ் வேளையில் .
இளம் பெண் ஒருவர் வெள்ளிக்கிழமை ,பசியால் வடியோருக்கு உணவு வழங்கியும் ,கச்சான் விற்ற தாய் ஒருவருக்கு புரிந்த செயல் ஒன்று பாராட்ட பெற்று வருகிறது .

இப்படியும் மனிதமுள்ள பெண்கள் யாழ்ப்பாணத்தில் உள்ளதை எண்ணி, பலர்
வியந்து உருகி பேசி வருகின்றனர் .

இந்த காணொளி பலராலும் விரும்பி பகிரப்பட்டு வருகிறது .
முடிந்தவரை உணர்வுகளை கட்டு படுத்தி
அழுகையை நிறுத்தி பாருங்கள்.

இதில் அழுத்தியும் காணொளி பார்க்கலாம் .

No posts found.
இலங்கை கடலில் தமிழக மீனவர்கள் மீது கொள்ளையர்கள் தாக்குதல் |இலங்கை செய்திகள்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை கடலில் தமிழக மீனவர்கள் மீது கொள்ளையர்கள் தாக்குதல் |இலங்கை செய்திகள்

இலங்கை கடலில் தமிழக மீனவர்கள் மீது கொள்ளையர்கள் தாக்குதல் |இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள் | இலங்கை கடல்பரப்பில் தமிழக மீனவர்கள் மீது
மர்ம கடல் கொள்ளையர்கள் தாக்குதல்
நடத்தி அவர்கள் ஐந்து லட்சம் மதிப்பிலான பொருட்கள்
கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளனர் .

இலங்கை கடல் படை , இந்த தாக்குதல்களை தாம் நடத்தவில்லை என்கிறது .

சீனா நாட்டின் ஆதரவு கடல்கொள்ளையர்களினாலே இந்த தாக்குதல்
இலங்கை கடற்பரப்பில் ,நடத்த பட்டுள்ளது என்ற சந்தேகத்தை
இந்தியா ஆதரவு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன .

No posts found.
ஆற்றில் இருந்து வாலிபன் சடலம் மீட்பு | இலங்கை செய்திகள்
Posted in இலங்கை செய்திகள்

ஆற்றில் இருந்து வாலிபன் சடலம் மீட்பு | இலங்கை செய்திகள்

ஆற்றில் இருந்து வாலிபன் சடலம் மீட்பு | இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள் | மட்டக்களப்பு ஆற்றில் இருந்து வாலிபன் ஒருவர் சடலமாக மீட்க பட்டுள்ளார் .


கடந்த மூன்று நாடுகளுக்கு முன்னர் காணாமல் போன வாலிபனே
ஆற்றில் இருந்து சடலமாக மீட்க பட்டுள்ளார் .

இந்த வாலிபன் மரணம் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

இலங்கையில் நாள் தோறும் நீர் நிலைகள் ,
காடுகளில் இருந்து மனித சடலங்கள் மீட்க பட்ட வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது .

No posts found.
துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி | இலங்கை செய்திகள்
Posted in இலங்கை செய்திகள்

துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி | இலங்கை செய்திகள்

துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி | இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள் | மினுவாங்கொடை பகுதியில் நடத்த பட்ட துப்பாக்கி சூட்டு தாக்குதலில் சிக்கி ஒருவர் பலியாகியுள்ளார் .

இருவர் மீது மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டின் பொழுதே ஒருவர் சூட்டுக்கு
இலக்காகி பலியாகியுள்ளார் .

இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன.

No posts found.
பெண் அடித்துக்கொலை குற்றவாளி கைது |இலங்கை செய்திகள்
Posted in இலங்கை செய்திகள்

பெண் அடித்துக்கொலை குற்றவாளி கைது |இலங்கை செய்திகள்

பெண் அடித்துக்கொலை குற்றவாளி கைது |இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள் | குடும்பப்பெண் ஒருவரை அடித்துக் கொலை செய்து தலைமறைவாகியிருந்த நபர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

சமுக பாகுபாட்டை சுட்டிக்காட்டி பேசியதனால் ஏற்பட்ட சடுதியான கோபத்தினால் பெண்ணை தாக்கியதாக சந்தேக நபர் வாக்குமூலம் வழங்கினார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் மாநகர் அத்தியடியில் 55 வயதுடைய தாய் 12 ஆம் திகதி இரவு அடித்து கொலை செய்யப்பட்டார்.

கணவனை பிரிந்து வாழும் அவர் பெண் பிள்ளை ஒருவருடன் வசித்து வந்தார்.

அவரது வீட்டிற்கு வேலைகளுக்காக ஒருவர் நீண்டகாலமாக தினமும் வருவது வழமை. நேற்றுமுன்தினம் காலையும் அவர் வழமைபோல வருகை தந்து இரவு வரை வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தார்.

குடும்பப் பெண்ணுடன் அவர் முரண்பட்டு வாய்த்தக்கம் செய்துள்ளார். வீட்டுக்குள் இருந்த பெண் பிள்ளை சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்தபோது வேலை செய்து கொண்டிருந்தவரை காணவில்லை் தாயார் குருதி தோய்ந்த நிலையில் நிலத்தில் சரிந்து காணப்பட்டார் என்று பொலிஸாரின் விசாரணைகளில் தெரிய வந்தது.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

பெண் அடித்துக்கொலை குற்றவாளி கைது |இலங்கை செய்திகள்

இந்த நிலையில் யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் பரிசோதகர் மேனன் தலைமையிலான பொலிஸ் பிரிவினர் மேற்கொண்ட விசாரணையில் கொலை செய்து தலைமறைவாகிய நபர் நாவற்குழியில் இருப்பதாகத் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் நேற்று (16) காலை கைது செய்யப்பட்டார்.

உயிரிழந்த பெண்ணுடன் 10 ஆண்டுகளாக நட்பு உறவாடி வருகின்றேன். அவர்கள் வீடு மாறுவதற்கு உதவுவதிலிருந்து பல உதவிகளை வழங்கி வந்தேன்.

அண்மையில் கோப்பாயில் ஒன்றரைக் கோடி ரூபாய்க்கு அவரது காணி ஒன்றை விற்பனை செய்து பணத்தையும் வழங்கினேன்.

தண்ணீர் குழாயை நிலத்துக்கு அடியால் புதைப்பதற்காக கிடங்கு வெட்டச் சொன்னார். எனது வீட்டில் கூலிக்கு வேலைக்கு போவதாக அறிந்தால் பிரச்சினை என நான் கூறிய போது, அவர் என்னை சமுக வேறுபாடு சொல்லி பேசிவிட்டார். அதனால் ஆத்திரத்தை அவரை கட்டையால் தாக்கிவிட்டேன். அவர் உயிரிழந்துவிட்டார் என்று சந்தேக நபர் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

சந்தேக நபர் யாழ்ப்பாணம் நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

No posts found.
யாழில் வாள்வெட்டு தாக்குதல் |இலங்கை செய்திகள்
Posted in இலங்கை செய்திகள்

யாழில் வாள்வெட்டு தாக்குதல் |இலங்கை செய்திகள்

யாழில் வாள்வெட்டு தாக்குதல் |இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள் | ஏ9 வீதி, யாழ். நாவற்குழி பகுதி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் QR இல்லாமல் பெற்றோல் அடிக்க முடியாது என்று தெரிவித்த ஊழியர் மீது வாள் வெட்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கையில் பலத்த காயங்களுக்குள்ளான ஊழியர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் நேற்று (16) இரவு 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சம்வத்தில் படுகாமடைந்தவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No posts found.
மார்ச் 1 ஆம் திகதி பாரிய வேலைநிறுத்த போராட்டம்-இலங்கை செய்திகள்
Posted in இலங்கை செய்திகள்

மார்ச் 1 ஆம் திகதி பாரிய வேலைநிறுத்த போராட்டம்|இலங்கை செய்திகள்

மார்ச் 1 ஆம் திகதி பாரிய வேலைநிறுத்த போராட்டம்-இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள் |மார்ச் 1 ஆம் திகதி கூட்டுப் பொது வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவிக்க தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன.

பல துறைகளில் தொழிற்சங்க பிரதிநிதிகள் நேற்று பிற்பகல் நடத்திய கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, எண்ணெய், மின்சாரம், துறைமுகம், நீர் வழங்கல், சுகாதாரம், கல்வி, வங்கி அமைப்பு உள்ளிட்ட பல துறைகளின் தொழிற்சங்கங்களுடன்
இணைந்து இந்தப் பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ள தொழிற்சங்கப் பிரதிநிதிகள் தீர்மானித்துள்ளனர்.

No posts found.
13ஆல் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காது: சி.வி.விக்னேஸ்வரன்
Posted in இலங்கை செய்திகள்

பொன்சேகாவை போர்த்துக்கல்லுக்கு அனுப்ப வேண்டிய நேரிடும்

பொன்சேகாவை போர்த்துக்கல்லுக்கு அனுப்ப வேண்டிய நேரிடும்

சரத் பொன்சேகாவை போர்த்துக்கல்லுக்கு அனுப்ப வேண்டிய நேரிடும் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்தார்

சமஷ்டி கோருபவர்களை லண்டனில் போய் கோருமாறு சரத்பொன்சேகா வெளியிட்ட கருத்திற்கு பதிலளிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எங்களை லண்டனுக்கு போக சொன்னால் அவரை நாங்கள் போர்த்துக்கல்லுக்கு அனுப்ப வேண்டி வரும் பொன்சேகா என்பது சிங்கள பெயருமல்ல
தமிழ் பெயரும் அல்ல அவரை போத்துக்கல்லுக்கு அனுப்ப வேண்டிவரும் எனவும் தெரிவித்தார்.

No posts found.
யாழில் 10 ரூபா சாப்பாட்டு கடை வீடியோ- இலங்கை செய்திகள்
Posted in இலங்கை செய்திகள்

யாழில் 10 ரூபா சாப்பாட்டு கடை வீடியோ| இலங்கை செய்திகள்

யாழில் 10 ரூபா சாப்பாட்டு கடை வீடியோ

இலங்கை செய்திகள்யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியில் 10 ரூபாவுக்கு சாப்பாடு உள்ளது .


இலங்கையில் எகிறிய விலைவாசிக்கு ,இப்படியும் ஒரு தமிழர், மக்களுக்கு இவ்வாறான சேவை செய்வது என்பது
பாராட்ட பட வேண்டிய ஒன்று .

இந்த கடைக்கு படையெடுக்கும் மக்களை இங்கே பாருங்கள்.
காணொளியை முழுமையாக பார்த்தால் வியந்து போவீர்கள் .

No posts found.
இலங்கையில் 150.000 க்கு கோழி விற்கும் லண்டன் தமிழன்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் 150.000 க்கு கோழி விற்கும் லண்டன் தமிழன்

இலங்கையில் 150.000 க்கு கோழி விற்கும் லண்டன் தமிழன் .


இலங்கைக்கு வெளிநாட்டு தமிழன் வந்தால் என்ன எல்லாம்
செய்வார்கள் என்பதற்கு இவர் உதாரணம் .


இப்போ காசு எங்க இருக்கு இலங்கையில்.ஆனால் இலங்கையில் உள்ளவன் என்ன செய்கிறார்கள் வெளிநாட்டு பணத்தை எதிர்பார்த்தபடி காத்துள்ளார் .


லண்டனில் ஒரு மணித்தியாலம் 9 பவுண்டுகள் சம்பளம் ..
கோடியில் இலங்கையில் வீடுகள் வாங்கினால் அவர்
எத்தனை மணித்தியாலம் லண்டனில் வேலை செய்திருப்பார்
என்கின்ற கேள்வியை அவரிடம் கேளுங்கள்.


2 அறை கொண்ட வீட்டில் வாழும் ஒரு குடும்பத்திற்கு
மாதம் தோறும் வீடு வாடகை
மட்டும் 1390 காஸ் மின்சாரம் நாள் ஒன்றுக்கு 10 பவுண்டுகள் .மொத்தம் 1690 .


இப்போ யோசிங்க வீடு காணிகள் இலங்கையில்
வாங்குபவர்கள் செய்யும் சூத்து மாத்து மேலும்
சொல்ல போனால் தவறான தொழில் அல்லது அவ்வாறான
ஒன்றை செய்கிறார்கள் என்பதே வெளிப்படை .

https://www.youtube.com/watch?v=1dXeSMdvoPw
No posts found.
இராணுவ வாகனத்தால் நேர்ந்த கோர விபத்து
Posted in இலங்கை செய்திகள்

இராணுவ வாகனத்தால் நேர்ந்த கோர விபத்து

இராணுவ வாகனத்தால் நேர்ந்த கோர விபத்து

அலவத்துகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏ-9 வீதியில் வெலிகந்த சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பல்லேகலையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த இராணுவத்திற்குச் சொந்தமான வாகனமொன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து எதிர்திசையில் வந்த இரண்டு மோட்டார் சைக்கிள்களுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.

உக்குவெல பிரதேசத்தை சேர்ந்த 58 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பில் இராணுவ வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

No posts found.
உணவு பொதி கொத்து பிரைட் ரைஸ் விலை அதிகரிப்பு
Posted in இலங்கை செய்திகள்

உணவு பொதி கொத்து பிரைட் ரைஸ் விலை அதிகரிப்பு

உணவு பொதி கொத்து பிரைட் ரைஸ் விலை அதிகரிப்பு

மின்கட்டண அதிகரிப்பு காரணமாக இன்று நள்ளிரவு முதல் உணவு பொதிகள், கொத்து மற்றும் ஃபிரைட் ரைஸ் ஆகியவற்றின் விலையை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன் விலை 10% ஆல் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை
உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் அசேல சம்பத் தெரிவித்தார்.

No posts found.
வெலிகம பொலிஸிற்கு முன்பாக பதற்றநிலை
Posted in இலங்கை செய்திகள்

வெலிகம பொலிஸிற்கு முன்பாக பதற்றநிலை

வெலிகம பொலிஸிற்கு முன்பாக பதற்றநிலை

மாத்தறை வெலிகம பொலிஸிற்கு முன்பாக இன்று (16) பிற்பகல் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.

வெலிகம, தெனிபிட்டிய பிரதேசத்தில் 12 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இளைஞர்களுக்கு இதில் தொடர்பில்லை என தெரிவித்து அங்கு கூடிய மக்களால் இவ்வாறு பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.

அண்மையில் குறித்த சிறுமி மேலதிக வகுப்பில் கலந்து கொண்டு வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த போது நான்கு இளைஞர்களால் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் சிறுமியின் பெற்றோர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் வெலிகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதன்படி நேற்று மாலை தெனிப்பிட்டிய பிரதேசத்தில் வைத்து சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, கைது செய்யப்பட்ட இளைஞரின் உறவினர்கள் பொலிஸ் நிலையம் முன் திரண்டதுடன், பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட இருவருக்கும் இது தொடர்பான சம்பவத்தில் தொடர்பில்லை எனத் தெரிவித்தனர்.

குறித்த இளைஞர்கள் பொலிஸாரால் தாக்கப்பட்டதாகவும்
கைது செய்யப்பட்ட இளைஞர் ஒருவரின் தாயார் தெரிவித்துள்ளார்.

No posts found.
வாகன வேலைத்தளம் ஒன்றில் தீ விபத்து
Posted in இலங்கை செய்திகள்

வாகன வேலைத்தளம் ஒன்றில் தீ விபத்து

வாகன வேலைத்தளம் ஒன்றில் தீ விபத்து

தாவடி வன்னிய சிங்கம் வீதியில் உள்ள வாகன வேலைத்தளம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக வாகன பெயிண்டிங் மற்றும் வாகன வேலைத்தளம் எரிந்து நாசமாகியுள்ளதோடு வேலைத் தளத்துக்குள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பட்டா ரக வாகனமும் முழுமையாக எரிந்துள்ளது.

வேலைத்தளத்தில் ஏற்பட்ட மின் ஒழுக்கு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

யாழ் மாநகர சபையின் தீயணைப்பு வாகனம்
வரவழைக்கப்பட்டு தற்பொழுது தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.

No posts found.
வீட்டில் இறந்த காட்டு யானை
Posted in இலங்கை செய்திகள்

மின்சாரம் தாக்கி யானை உயிரிழப்பு

மின்சாரம் தாக்கி யானை உயிரிழப்பு

செட்டிகுளம், முசல்குத்தி வீதியில் மின்சாரம் தாக்கி 30 வயது மதிக்கத்தக்க யானை ஒன்று இறந்த நிலையில் இன்று (15) மீட்கப்பட்டுள்ளது.

வவுனியா, செட்டிகுளம், முசல்குத்தி பகுதியில் உள்ள வயல் நிலங்களைச் சூழ போடப்பட்ட மின்சாரக் கம்பியில் சிக்கிய காட்டு யானை ஒன்று அப் பகுதியில் விழுந்து இறந்துள்ளது.

அப் பகுதிக்கு சென்றவர்கள் இதனை அவதானித்த நிலையில் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு தகவல் வழங்கியிருந்தனர்.

இதனையடுத்து வனஜீவராசிகள் திணைக்களத்தினர் மற்றும் கால்நடை வைத்திய அதிகாரி உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு சென்று யானையை பார்வையிட்ட போது யானை இறந்திருந்தது.

வயல் நிலங்களுக்கு வைக்கப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கியே குறித்த யானை மரணமடைந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இருப்பினும், யானையின் மரணம் தொடர்பில் கால்நடை வைத்திய அதிகாரியால் உடற்கூற்று பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது. 30 வயது மதிக்கத்தக்க ஆண் யானையே இவ்வாறு இறந்துள்ளது.
இது தொடர்பில் செட்டிகுளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

நீதிமன்ற அவமதிப்பு-ஓய்வு பெற்ற மேஜருக்கு 4 ஆண்டுகள் சிறை
Posted in இலங்கை செய்திகள்

நான்கு பொலிஸ் அதிகாரிகளுக்கு மரண தண்டனை

நான்கு பொலிஸ் அதிகாரிகளுக்கு மரண தண்டனை

நபர் ஒருவரை சுட்டுக் கொன்ற வழக்கில் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்ட நான்கு பொலிஸ் அதிகாரிகளுக்கு நீதிமன்றம் இன்று (15) மரண தண்டனை விதித்துள்ளது.

2005 ஆம் ஆண்டு திஸ்ஸமஹாராம பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டமைக்காக அதிகாரிகளுக்கு விசாரணையின் பின்னர் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

அப்போது திஸ்ஸமஹாராம பொலிஸில் கடமையாற்றிய குற்றப் பிரிவின் நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட 4 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு ஹம்பாந்தோட்டை மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு
எடுத்துக் கொள்ளப்பட்ட போது, ​​நீதிமன்றம் அதிகாரிகளுக்கு மரண தண்டனை விதித்தது.

No posts found.