Posted in இலங்கை செய்திகள்

கிழக்கு மாகாண ஆளுனருக்கு மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் வழங்கிய அதிரடி உத்தரவு

கிழக்கு மாகாண ஆளுனருக்கு மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் வழங்கிய அதிரடி உத்தரவு

கிழக்கு மாகாண கணக்காய்வு திணைக்களத்தில், கணக்காய்வு அலுவலராக தங்களை நியமனம் செய்ய வேண்டும் என 8 வருடம் கணக்காய்வு திணைக்களத்தில் கடமையாற்றிய அரச உத்தியோகத்தர்கள் நால்வர், கிழக்கு மாகாண ஆளுநர் செயலாளர் மற்றும் 11 எதிர் மனுதாரர்களுக்கு எதிராக திருகோணமலை மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

அந்த நால்வரையும் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் கிழக்கு மாகாண உள்ளக கணக்காய்வு திணைக்களத்தில் கணக்காய்வு உத்தியோகத்தர்களாக நியமனம் செய்யும் படி கிழக்கு மாகாண புதிய ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு, திருகோணமலை மேல் நீதிமன்றில் நீதிபதி இளஞ்செழியனால் இன்று (27.07) உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

13 வது திருத்தச் சட்டத்தில் அதிகார பரவலாக்கல் வழங்கப்பட்ட போதும் வடக்கு மாகாணம் மற்றும் தென் மாகாணமும் இத்தகைய நியமனம் வழங்கி இருக்கும் நிலையில் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர், அதிகாரியின் அசமந்தப் போக்கு, கவனயீனமான செயற்பாடுகள், 13வது திருசத்தச் சட்டத்தில் அதிகாரம் வழங்கப்பட்ட போதும் அதை செயற்படுத்தாமை, கடந்த 10 ஆண்டுகளாக இவ்வழக்கின் மனுதாரர்களுக்கு குறிக்கப்பட்ட நியமனங்களை வழங்காது இழுபறி நிலைமையை ஏற்படுத்தி காலதாமதப்படுத்தியமை போன்ற பல சட்ட விடயங்களை சுட்டிக்காட்டிய நீதிபதி இளஞ்செழியின் உடன் நடைமுறைக்கு வர வேண்டும் என புதிய ஆளுநருக்கு உத்தரவு பிறப்பித்து இன்று தீர்ப்பளித்துள்ளார்.

கிழக்கு மாகாண ஆளுனருக்கு மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் வழங்கிய அதிரடி உத்தரவு

இன்றைய கட்டளையை உடனடியாக புதிய ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு அனுப்பி வைக்குமாறு மேல் நீதிமன்று கட்டளை பிறப்பித்துள்ளது.

முன்னாள் ஆளுநர் செய்த தவறுகளை சுட்டிக்காட்டிய நீதிபதி இளஞ்செழியன் புதிதாக நியமிக்கப்பட்ட ஆளுநரிடம் இந்த நீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்துமாறு நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

புதிய ஆளுநர் இவ்வழக்கில் எந்தவித விடயங்களையும் கையாளவில்லை என்றபோதும் பழைய ஆளுநர்களின் தவறுகளை சுட்டிக்காட்டிய நீதிபதி இந்த மனுதாரர்களின் எதிர்பார்க்கும் நியமனத்தை புதிய ஆளுநர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கட்டளை பிறப்பித்துள்ளார்.

Posted in இலங்கை செய்திகள்

பிரான்ஸ் ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம்

பிரான்ஸ் ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம்

பிரான்ஸ் ஜனாதிபதி இமெனுவல் மேக்ரோன் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார். அவர் எதிர்வரும் 28ஆம் திகதி அவர் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

அவர், பபுவா நியூகினி நாட்டுக்கான அதிகாரபூர்வ விஜயத்தின் பின்னர் அவர் இலங்கை விஜயம் செய்ய உள்ளார்.

28ஆம் திகதி இரவு இலங்கையில் தங்கி இருக்கும் நேரத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை அவர் சந்திப்பார் என தெரிவிக்கப்படுகிறது. பிரான்ஸ் நாட்டு ஜனாதிபதி ஒருவர் இலங்கைக்கு விஜயம் செய்யும் முதல் சந்தர்ப்பம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரான்ஸ் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் முன்கூட்டியே அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Posted in இலங்கை செய்திகள்

தகாத உறவில் ஈடுபட்ட பௌத்த பிக்கு விவகாரம் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

தகாத உறவில் ஈடுபட்ட பௌத்த பிக்கு விவகாரம் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

நவகமுவ பிரதேசத்தில் பௌத்த பிக்கு ஒருவரும், இரண்டு பெண்களும் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 8 சந்தேகநபர்களும் பிணையில் செல்ல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தேகநபர்களை நேற்று கடுவலை நீதிவான் விசாரணைகளுக்காக முன்னிலைப்படுத்திய போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட 8 பேரையும் தலா 100,000 ரூபா சரீரப் பிணையிலும் கடுமையான பிணை நிபந்தனைகளிலும் விடுவிக்குமாறு கடுவலை நீதவான் சனிமா விஜேபண்டார உத்தரவிட்டுள்ளார்.

நவகமுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசத்தில் அமைந்துள்ள விகாரையொன்றில் பிக்கு ஒருவரும், இரண்டு பெண்களும் ஒரே அறையில் இருந்த நிலையில் பிரதேச மக்களால் தாக்கப்படும் காணொளியொன்று தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

தகாத உறவில் ஈடுபட்ட பௌத்த பிக்கு விவகாரம் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

இந்நிலையில், சம்பந்தப்பட்ட பெண்களை கடுமையாக தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 8 பேருக்கும் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Posted in இலங்கை செய்திகள்

வவுனியாவில் சீனித் தொழிற்சாலைக்கு காணி கொடுப்பது தொடர்பில் தெரியாது என்கிறார் வடக்கு ஆளுனர்

வவுனியாவில் சீனித் தொழிற்சாலைக்கு காணி கொடுப்பது தொடர்பில் தெரியாது என்கிறார் வடக்கு ஆளுனர்

வவுனியாவில் சீனித் தொழிற்சாலைக்கு காணி கொடுப்பது தொடர்பில் எனக்கு எதுவும் தெரியாது என வடமாகாண ஆளுனர் பீ.எச்.எம்.சாள்ஸ் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் ஆளுனரின் இணைப்பு அலுவகத்தை திறந்து வைத்த பின் ஊடகவியலாளர்கள் ‘சீனித் தொழிற்சாலைக்கு வவுனியாவில் காணி ஒதுக்கப்பட்டதாக கூறப்படுகிறது’ இது தொடர்பில் உங்கள் கருத்து என்ன என கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

வவுனியாவில் சீனித் தொழிற்சாலைக்கு காணி கொடுப்பது தொடர்பில் எனக்கு தெரியாது. இது சம்மந்தமாக ஊடகங்களுக்கு மறைக்க வேண்டிய தேவை இல்லை. உண்மையில் இது தொடர்பில் எனக்கு தெரியாது எனத் தெரிவித்தார்.

Posted in இலங்கை செய்திகள்

வவுனியாவில் வாள்வெட்டு மற்றும் தீ வைப்பு சம்பவம் இடம்பெற்ற வீட்டில் கொழும்பில் இருந்து வந்த பொலிசார் விசேட சோதனை

வவுனியாவில் வாள்வெட்டு மற்றும் தீ வைப்பு சம்பவம் இடம்பெற்ற வீட்டில் கொழும்பில் இருந்து வந்த பொலிசார் விசேட சோதனை

வவுனியாவில் வாள்வெட்டு மற்றும் தீ வைப்பு சம்பவம் இடம்பெற்ற வீட்டினை கொழும்பில் இருந்து வருகை தந்த பொலிசாரின் இராசாயன பகுப்பாய்வாளர்கள் இன்று சோதனை செய்துள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக் அதிகாலை வவுனியா, தோணிக்கல் பகுதியில் உள்ள வீடு ஒன்றிற்குள் நுழைந்த 10 பேர் கொண்ட குழு வாள்வெட்டு தாக்குதலில் ஈடுபட்டதுடன், வீட்டிற்கும் பெற்றோல் ஊற்றி தீ வைத்தனர்.

இச் சம்பவத்தில் 21 வயது இளம் குடும்ப பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானதுடன், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 10 பேரில் குறித்த பெண்ணின் கணவரான 32 வயது இளம் குடும்பஸ்தர் இன்று (26.07) அதிகாலை சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

வவுனியாவில் வாள்வெட்டு மற்றும் தீ வைப்பு சம்பவம் இடம்பெற்ற வீட்டில் கொழும்பில் இருந்து வந்த பொலிசார் விசேட சோதனை

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிசார் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில், குறித்த வீடு எரியூட்டப்பட்டமை மற்றும் அங்கு எரிந்த பொருட்கள் தொடர்பில் இராசாயன பகுப்பாய்வை மேற்கொள்வதற்கு கொழும்பில் இருந்து விசேட பொலிசார் வருகை தந்து சம்பவம் நடைபெற்ற இடத்தை பார்வையிட்டு இரசாயன பகுப்பாய்வு செய்துள்ளனர்.

இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிசார் பல்வேறு தரப்புக்களிடமும் வாக்கு மூலம் பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 

குழந்தை மீது கொதிநீரை ஊற்றிய தந்தை கைது
Posted in இலங்கை செய்திகள்

குழந்தை மீது கொதிநீரை ஊற்றிய தந்தை கைது

குழந்தை மீது கொதிநீரை ஊற்றிய தந்தை கைது

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெயாவெல் தோட்டத்தில் மூன்று வயது ஆண் குழந்தை மீது கொதிநீரை ஊற்றி கொடூர செயலில் ஈடுப்பட்டவரை லிந்துலை பொலிஸார் (25) மாலை கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் பாதிக்கப்பட்ட குழந்தையின் தந்தை என லிந்துலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குழந்தை தனது பாட்டியின் ஆதரவுடன் லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் குழந்தையின் தந்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் இந்த கொடூர சம்பவம் (24) இரவு லிந்துலை பொயாவெல் தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

குழந்தை மீது கொதிநீரை ஊற்றிய தந்தை கைது

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குழந்தையின் தாய் கொழும்பில் பணிப் பெண்ணாக தொழிலாற்றி வருகிறார்.

இப் பெண்ணுக்கு ஆறு பிள்ளைகள் இருக்கின்றனர்.இவர்கள் தனது பாட்டி,மற்றும் தந்தையின் அரவணைப்பில் வசித்து வருகின்றனர்.

சம்பவ தினமான (24)இரவு குழந்தையின் தந்தை மது அருந்திய நிலையில் வீட்டுக்கு வருகை தந்திருந்த நிலையில் குழந்தையின் பாட்டியுடன் குடும்ப பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

இதன் போது தனது கடைசி குழந்தையான மூன்று வயதான ஆண் குழந்தை மீது கொதிநீரை ஊற்றியுள்ளார்.

இதனால் துடி துடித்த குழந்தையின் முதுகு பகுதி உள்ளிட்ட பல இடங்களில் நீர் பட்டு காயங்கள் ஏற்பட்டுள்ளது.

பின் லிந்துலை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதுடன்,தனது பாட்டியின் பாதுகாப்பில் குழந்தை சிகிச்சைபெற்று வருகிறது.

இந்த நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் லிந்துலை பொலிஸார் தகவல் அறிந்து விசாரணைகளை முன்னெடுதுள்ளனர்.

இதையடுத்து குழந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்திய தந்தையை (25) மாலை கைது செய்துள்ள பொலிசார் (26) நாளைய தினம் நுவரெலியா நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய நடவடிக்கை எடுத்துள்ளனர்

ரணிலுக்கு எதிராக யாழில் தமிழ் மக்கள் போராட்டம்
Posted in இலங்கை செய்திகள்

இன்று மாலை சர்வகட்சி கூட்டம்

இன்று மாலை சர்வகட்சி கூட்டம்

தேசிய நல்லிணக்கம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள சர்வகட்சி கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.

மாலை 5 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இந்த கூட்டம் நடைபெறவுள்ளது.

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி இந்த கூட்டத்தில் பங்கேற்க தீர்மானித்துள்ளது.

இன்று மாலை சர்வகட்சி கூட்டம்

ஜனாதிபதி தலைமையிலான கூட்டத்தில் தாம் பங்கேற்கப்போவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கூறியுள்ளார்.

இந்த சர்வகட்சி கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தி இன்றைய சர்வகட்சி கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது

நீர்க்குழாய்களுக்கு தீயிட்ட 6 மாணவர்கள் கைது
Posted in இலங்கை செய்திகள்

பம்பரகலை பெரிய ராணிவத்த தோட்டத்தில் தீ பலர் நிர்க்கதி

பம்பரகலை பெரிய ராணிவத்த தோட்டத்தில் தீ பலர் நிர்க்கதி

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாகசேன பம்பரகலை தோட்ட பிரிவான பெரிய ராணிவத்த தோட்டத்தில் நேற்று இரவு 09 மணியலவில் தீ பரவல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தில் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்ட 24 தொடர் வீடுகளை கொண்ட இலக்கம் ஒன்று தொடர் விட்டு லயம் தீ பிடிக்கப்பட்டுள்ளது என லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.

அதேநேரத்தில் வீடுகளில் வசித்தவர்களுக்கு உயிர் ஆபத்துக்கள் ஏதும் ஏற்படவில்லை என தெரிவித்த பொலிஸார், இந்த பிரதேசத்தில் அதிகமாக காற்று வீசுவதால் தீயை கட்டுக்கு கொண்டுவர ஊர் மக்கள், உள்ளிட்ட பலர் போராடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பம்பரகலை பெரிய ராணிவத்த தோட்டத்தில் தீ பலர் நிர்க்கதி

மின்சார ஒழுக்கு காரணமாக இந்த தீ பரவல் சம்பவம் இடம்பெற்றதாக சொல்லப்படுகிறது. இருப்பினும் சம்பவம் தொடர்பில் லிந்துலை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் பத்து வீடுகளுக்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாக சொல்லப்படுகின்றது. அதேநேரத்தில் நிர்கதிக்கு உள்ளானவர்கள் உறவினர்கள் வீடுகளிலும்,தோட்டத்தின் பொது இட கட்டடங்களிலும் பாதுக்காப்பு கருதி தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பயிற்ச்சியாளர் பணி நீக்கம்
Posted in இலங்கை செய்திகள்

பாலியல் துஷ்பிரயோகம் செய்த பொலிஸ் கைது

பாலியல் துஷ்பிரயோகம் செய்த பொலிஸ் கைது

60 வயதுடைய பெண்ணொருவரைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை, வீட்டிலிருந்தவர்கள் கட்டி வைத்த சம்பவம் ஒன்று றம்புக்கன பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தையடுத்து குறித்த சந்தேக நபரை கைது செய்துள்ளதாக றம்புக்கன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் றம்புக்கன பொலிஸ் பிரிவில் கடமையிலிருந்த பொலிஸ் சர்ஜன்ட் ஆவார்.

சர்வக்கட்சி மாநாடு ஏமாற்று வித்தையெனில் டெலிபோன்வெளியேறும்
Posted in இலங்கை செய்திகள்

சர்வக்கட்சி மாநாடு ஏமாற்று வித்தையெனில் டெலிபோன்வெளியேறும்

சர்வக்கட்சி மாநாடு ஏமாற்று வித்தையெனில் டெலிபோன்வெளியேறும்

அரசியல் ஏமாற்று வித்தைகள் இல்லாமல் சரியான முறையில் கலந்துரையாடலுக்கு வருவீர்களாக இருந்தால் வாருங்கள் என்று தெரிவித்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித்

தலைவருமான சஜித் பிரேமதாச, வழமையான அரசியல் ஏமாற்று வித்தை என்று கருதும் பட்சத்தில் அந்நிமிடமே குறித்த கலந்துரையாடல் மேசையை விட்டு ஐ.ம.ச வெளியேறும் என்றார்.

தற்போதைய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் இடையே பொது நிகழ்ச்சி நிரல்,வேலைத்திட்டம், கருத்து ஒற்றுமை, கூட்டுப் பொறுப்புடன் ஒரு கருத்துடன் செயற்படும் நிலைப்பாடுகள் இல்லை என்றும் குறிப்பிட்டார்.

சர்வக்கட்சி மாநாடு ஏமாற்று வித்தையெனில் ‘டெலிபோன்வெளியேறும்

நாட்டையும் மக்களையும் பற்றி சிந்தித்து எதிர்க்கட்சி ஒருவேளை இந்த கலந்துரையாடலுக்குச் சென்றாலும்,இந்த கலந்துரையாடல் வழமையான அரசியல் ஏமாற்று வித்தை என்று கருதும் பட்சத்தில் அந்நிமிடமே குறித்த கலந்துரையாடல் மேசையை விட்டு வெளியேறும் என்றார்.

பிரபஞ்சம் வேலைத்திட்டத்தின் கீழ் பிபில மெதகம தேசிய பாடசாலைக்கு பேருந்து வழங்கும் நிகழ்வில் செவ்வாய்க்கிழமை (25) கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

அரசாங்கப் பேச்சுவார்த்தை நேர்மையுடன் நடந்தால் மட்டுமே வெற்றி கிடைக்கும் என்றும்,வெற்றிபெற வேண்டுமானால், பேச்சுவார்த்தைகள் தூய்மையான நோக்கத்துடன் நடக்க வேண்டும் என்றும், அது அரசியல்

ஏமாற்று வித்தையாக இருக்கக்கூடாது என்றும்,நாட்டு நலனுக்காக செய்யப்படும் பணியாக பேச்சுவார்த்தை அமையப்பெறுவதாக இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

சர்வக்கட்சி மாநாடு ஏமாற்று வித்தையெனில் ‘டெலிபோன்வெளியேறும்

அரசாங்கத்திடம் தெளிவான வேலைத்திட்டம் இருக்க வேண்டும் என்றும், இந்த கலந்துரையாடல்களுக்கு தாம் அழைக்கப்பட்ட போதிலும், நிகழ்ச்சி நிரலில் உள்ள விடயங்கள் குறித்து தமக்கு இன்னும் அறிவிக்கப்படவில்லை

என்றும்,நாட்டுக்கு நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையில் மக்கள் பக்கம் இருந்து எதிர்க்கட்சி இதில் கலந்து கொள்வதாக எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன் இந்த அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் 134 உறுப்பினர்களுக்கும் இடையில் பல கருத்து முரண்பாடுகள் எழுந்துள்ளன .கலந்துரையாடலுக்கு வருவதற்கு முன்னர் கருத்து வேறுபாடுகளை சமாளித்து ஒரு நிலைப்பட்ட கருத்தொற்றுமைக்கு வருமாறும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு சுட்டிக்காட்டினார்.

லண்டனில் வசமாக சிக்கிய தமிழ் லோயர்
Posted in இலங்கை செய்திகள் உளவு செய்திகள்

லண்டனில் வசமாக சிக்கிய தமிழ் லோயர்

லண்டனில் வசமாக சிக்கிய தமிழ் லோயர்

உங்கள் மீதான குற்ற சாட்டு தொடர்பில் எமக்கு ஏதாவது தெரிவிக்க விரும்பினால் ,அது தவறு என கருதினால்
எம்மை தொடர்பு கொள்ளுங்கள் ,அதனை இங்கே பதிவிட தயாராக இருக்கிறோம்

வடக்கு கிழக்கு அபிவிருத்தி, நல்லிணக்கம் குறித்து ஜனாதிபதி முன்வைத்த திட்டம்
Posted in இலங்கை செய்திகள்

வடக்கு கிழக்கு அபிவிருத்தி, நல்லிணக்கம் குறித்து ஜனாதிபதி முன்வைத்த திட்டம்

வடக்கு கிழக்கு அபிவிருத்தி, நல்லிணக்கம் குறித்து ஜனாதிபதி முன்வைத்த திட்டம்

ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆன்ட்ரே பிராஞ்ச் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்த சந்திப்பு நேற்று இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

வடக்கு கிழக்கு அபிவிருத்தி, நல்லிணக்கம் குறித்து ஜனாதிபதி முன்வைத்த திட்டம்

இந்த சந்திப்பின் போது இலங்கையின் மறுசீரமைப்புகளின் போதான நியாயமான படுகடன் பரிகாரத்தை உறுதி செய்வதில் ஐ.நாவின் உதவி குறித்து ஆராய்ந்தார்.

நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு அபிவிருத்தி மற்றும் நல்லிணக்கத்திற்கான திட்டங்களையும் ஜனாதிபதி இதன்போது முன்வைத்ததாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது

திடீரென வெடித்த கண்ணீர் புகை குண்டு பொலிஸ் அதிகாரிக்கு ஏற்பட்ட நிலை
Posted in இலங்கை செய்திகள்

திடீரென வெடித்த கண்ணீர் புகை குண்டு பொலிஸ் அதிகாரிக்கு ஏற்பட்ட நிலை

திடீரென வெடித்த கண்ணீர் புகை குண்டு பொலிஸ் அதிகாரிக்கு ஏற்பட்ட நிலை

கொழும்பு – பம்பலப்பிட்டிய பகுதியிலுள்ள பொலிஸ் மேலதிக படைத் தலைமையகத்திற்குள் நேற்று முன்தினம் (23) பிற்பகல் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதில் கண்ணீர் புகைக்குண்டு ஒன்று வெடித்ததாகவும், பொலிஸ் அதிகாரி ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.

திடீரென வெடித்த கண்ணீர் புகை குண்டு பொலிஸ் அதிகாரிக்கு ஏற்பட்ட நிலை

கொழும்பு மாநகர சபைக்கு அருகில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக எடுத்துச் செல்லப்பட்ட கண்ணீர் புகைக்குண்டு மீண்டும் கொண்டு வரப்பட்ட போது இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் சந்தேகிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் நாரஹேன்பிட்டி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மகள் மருமகனை கொன்று ஆற்றில் வீசிய தந்தை
Posted in இலங்கை செய்திகள்

கழுத்தை அறுத்து மகன் கொலை தந்தை கைது

கழுத்தை அறுத்து மகன் கொலை தந்தை கைது

கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் நேற்று (24) மாலை கஹட்டகஸ்திகிலிய, குடாபட்டிய பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கஹட்டகஸ்திகிலிய பகுதியைச் சேர்ந்த 54 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 5ஆம் திகதி கஹட்டகஸ்திகிலிய, குடாப்பட்டிய பிரதேசத்தில் விவசாய கிணற்றில் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டது.

கழுத்தை அறுத்து மகன் கொலை தந்தை கைது

விசாரணையில், இறந்தவருக்கும் அவரின் தந்தைக்கும் இடையே நீண்டகாலமாக நிலவி வந்த தகராறு காரணமாக கொலை இடம்பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று (25) கஹட்டகஸ்திகிலிய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

பொலிஸ் அதிகாரம் கட் 22ஆவது திருத்தம் வருகிறது
Posted in இலங்கை செய்திகள்

பொலிஸ் அதிகாரம் கட் 22ஆவது திருத்தம் வருகிறது

பொலிஸ் அதிகாரம் கட் 22ஆவது திருத்தம் வருகிறது

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டத்தில் உள்ள பொலிஸ் அதிகாரங்களை நீக்கும் 22ஆவது திருத்தச்சட்டத்தை அடுத்தவாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பிலவே இந்த திருத்த சட்டத்தை தனிநபர் ​பிரேரணையாக கொண்டுவரவுள்ளார்.

பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைமையகத்தில் திங்கட்கிழமை (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

பொலிஸ் அதிகாரம் கட் 22ஆவது திருத்தம் வருகிறது

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

“எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்றுக்கொள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஏற்படுத்திக்கொண்டுள்ள இணக்கப்பாட்டின் பிரகாரம் 13ஆவது திருத்தச்சட்டத்தை முழுயைாக நடைமுறைப்படுத்தும் உறுதிமொழியை வழங்கியுள்ளார்.

ஜனாதிபதியுடனான சந்திப்பில் பொலிஸ் அதிகாரத்தை பின்னரும் ஏனைய அதிகாரங்களை நடைமுறைப்படுத்தவும் இணக்கப்பாடுகள் எட்டப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அறிவித்திருந்தார்.

அதற்காக சர்வக்கட்சி கூட்டமொன்றுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார். ரணில் விக்ரமசிங்கவுக்கு அதிகாரம் கிடைத்திருந்த அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளதுடன், அது இருள் சூழ்ந்த யுகத்துக்கே தள்ளப்பட்டிருந்தது என்றார்.

இந்நிலையில், தேசப்பற்றாளர்களை இனங்காணும் வகையில், அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தம், பொலிஸ் அதிகாரங்களை களையும் வகையில் கொண்டுவரப்படவுள்ளது என்றார்.

வெடித்த ஏவுகணை கிடங்கு பல இராணுவம் காயம்
Posted in இலங்கை செய்திகள்

வெடித்த ஏவுகணை கிடங்கு பல இராணுவம் காயம்

வெடித்த ஏவுகணை கிடங்கு பல இராணுவம் காயம்


9 இந்திய மீனவர்கள் கைது
Posted in இலங்கை செய்திகள்

9 இந்திய மீனவர்கள் கைது

9 இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 9 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நெடுந்தீவு அருகே நேற்று (24) இரவு இந்திய மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டபோது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் 2 படகையும் அதிலிருந்த 9 மீனவர்களையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்களை காங்கேசன்துறைக்கு அழைத்து வந்து விசாரணைகளுக்கு பின்னர் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களத்தினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

லண்டனில் கலக்கிய தமிழ் பெண்கள் வீடியோ
Posted in இலங்கை செய்திகள் உளவு செய்திகள்

லண்டனில் கலக்கிய தமிழ் பெண்கள் வீடியோ

லண்டனில் கலக்கிய தமிழ் பெண்கள் வீடியோ

லண்டன் குரோலி பகுதியில் இடம்பெற்ற காராட்டி நிகழ்வு ,
18 நாடுகளை சேர்ந்த மாணவர்கள் பங்காற்றி சிறப்புற இடம்பெற்று முடிவுற்றது .

லண்டனில் இளங்கோ மார்க் எனும் தமிழரினால் நடத்தி முடிக்க பட்ட மாபெரும் சாதனை நிகழ்வின் இரண்டாம் பாதிப்பு .

காணொளியை முழுவதுமாக பாருங்கள் மக்களே .

ethirinews குழுமத்தோடு தொடர்பு கொள்ள 0044 7536707793

ஒரு லட்சகம் ஏக்கர் சில இராணுவத்தால் ஆக்கிரமிப்பு
Posted in இலங்கை செய்திகள்

ஒரு லட்சகம் ஏக்கர் சில இராணுவத்தால் ஆக்கிரமிப்பு

ஒரு லட்சகம் ஏக்கர் சில இராணுவத்தால் ஆக்கிரமிப்பு

இலங்கை வடக்கு முல்லைத்தீவு பகுதியை அண்மித்த தமிழர் பாரம்பரிய பிரதேசங்களாக விளங்கிய ஒரு லட்சம் ஏக்கர், அபகரிக்க பட்டுள்ளதாக திருவாளர் ரவிகரன் அவர்கள் தெரிவித்துள்ளார்

முல்லைதீவு மாவட்டங்களுக்கு நெல் உற்பத்தியை தருவித்து ,அதன் மிகுதியை ஏற்று தமிழர்கள் ,சிங்கள இனவாத அக்கிரமிப்பினால் செயல் இழந்து ,வாழ்வாதாரம் முடக்க பட்டு ,பெரும் துன்பியல் நிலையில்
சிக்கி தவித்து வருவதாக கண்ணீருடன் தெரிவித்துள்ளார் .

ஆற்றில் சிசுவின் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

ஆற்றில் சிசுவின் ஆற்றில் சிசுவின்

ஆற்றில் சிசுவின் சடலம் மீட்பு

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வென்ஞ்சர் தோட்ட தொழிற்சாலைக்கு அருகில் உள்ள பாலத்துக்கு அடியிலிருந்து பொலித்தீன் பையில் சுற்றப்பட்ட நிலையில் சிசுவொன்றின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.

இன்று (24) காலை குறித்த பகுதியில் வேலைக்கு சென்ற தோட்ட தொழிலாளர்கள் நோர்வூட் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்தே இச்சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கெசல்கமுவ ஓயாவுடன் இணையும் ஆற்றிலேயே பொலிதத்தீன் பையில் சுற்றப்பட்ட நிலையில் சிசு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பின் மேலதிக விடயங்களை அறிவதற்கு விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் நோர்வூட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

  • எல் நினோவின் விளைவுகள் ஏப்ரல் 2027 பெரும் பாதிப்பு ஏற்படும்
    Your browser does not support iframes. Your browser does not support iframes. எல் நினோவின் விளைவுகள் ஏப்ரல் 2027 பெரும் பாதிப்பு ஏற்படும் எல் நினோவின் விளைவுகள் ஏப்ரல் 2027 பெரும் பாதிப்பு ஏற்படும் எல் நினோவின் விளைவுகள் ஏப்ரல் 2027 வரை தொடரும் என அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர். வறண்ட வானிலை நிலவும் வறண்ட வானிலை காரணமாக, தீவின் பல பகுதிகளில் உணரப்படும் வெப்பநிலை கவலைக்கிடமான நிலைக்கு உயர்ந்துள்ளதாக வானிலை ஆய்வுத் துறை…
  • இலங்கை கடல் படையால் தமிழக மீனவர்கள் கைது
    Your browser does not support iframes. Your browser does not support iframes. இலங்கை கடல் படையால் தமிழக மீனவர்கள் கைது இலங்கை கடல் படையால் தமிழக மீனவர்கள் கைதுதலைமன்னார் கடற்பகுதியில் ஒன்பது மீனவர்களுடன் இந்திய மீன்பிடி இழுவைப் படகைக் கடற்படை பறிமுதல் செய்தது இலங்கை கடல் எல்லை தலைமன்னார், உருமலை முனைக்கு அருகே இலங்கை கடல் எல்லைக்குள் மீன்பிடித்ததற்காக, ஒரு மீன்பிடி இழுவைப் படகையும் அதனுடன் ஒன்பது இந்திய மீனவர்களையும் இலங்கை கடற்படை…
  • வரியை செலுத்துங்க உள்நாட்டு வருவாய்த் துறை எச்சரிக்கை
    Your browser does not support iframes. Your browser does not support iframes. வரியை செலுத்துங்க உள்நாட்டு வருவாய்த் துறை எச்சரிக்கை வரியை செலுத்துங்க உள்நாட்டு வருவாய்த் துறை எச்சரிக்கை மதிப்புக்கூட்டு வரி (VAT) மற்றும் பிற வரிகளைச் செலுத்துவதற்கான காலக்கெடுவை உள்நாட்டு வருவாய்த் துறை (IRD) அறிவித்துள்ளது. ஜூலை மாதத்திற்கான மதிப்புக்கூட்டு வரி 2026 ஜூலை மாதத்திற்கான மதிப்புக்கூட்டு வரியை (VAT) ஆகஸ்ட் 20, 2026 அன்றோ அல்லது அதற்கு முன்னரோ செலுத்த…
  • ஜப்பான் இலங்கைக்கு உதவி
    Your browser does not support iframes. Your browser does not support iframes. ஜப்பான் இலங்கைக்கு உதவி ஜப்பான் இலங்கைக்கு உதவி இலங்கையின் மீட்பு மற்றும் பொருளாதார அபிவிருத்திக்கான ஆதரவை ஜிகா மீண்டும் உறுதிப்படுத்துகிறது ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகமையின் (ஜிகா) சிரேஷ்ட துணைத் தலைவர் ஷோஹெய் ஹரா மற்றும் ஒரு தூதுக்குழுவினர், இலங்கையின் பேரிடருக்குப் பிந்தைய மீட்பு இலங்கையின் பேரிடருக்குப் பிந்தைய மீட்பு, பொருளாதார அபிவிருத்தி மற்றும் எதிர்கால ஒத்துழைப்பு குறித்து விவாதிப்பதற்காக,…
  • ஹீத்ரோவை முந்தி உலகின் பரபரப்பான விமான நிலையமாக தென் கொரியாவின் இன்சியான் விமான நிலையம்
    Your browser does not support iframes. Your browser does not support iframes. ஹீத்ரோவை முந்தி உலகின் பரபரப்பான விமான நிலையமாக தென் கொரியாவின் இன்சியான் விமான நிலையம் ஹீத்ரோவை முந்தி உலகின் பரபரப்பான விமான நிலையமாக தென் கொரியாவின் இன்சியான் விமான நிலையம் உருவெடுத்துள்ளது சர்வதேச பயணிகள் போக்குவரத்தின் அடிப்படை சர்வதேச பயணிகள் போக்குவரத்தின் அடிப்படையில், தென் கொரியாவின் இன்சியான் விமான நிலையம் முதன்முறையாக உலகின் பரபரப்பான விமான நிலையமாக உருவெடுத்துள்ளது என…
  • ஒருவர் சுட்டு கொலை அதிகரித்த சூடு
    Your browser does not support iframes. Your browser does not support iframes. ஒருவர் சுட்டு கொலை அதிகரித்த சூடு ஒருவர் சுட்டு கொலை அதிகரித்த சூடுபழிவாங்கும் தாக்குதலில் பேக்ஹோ சமனின் தாய் கொல்லப்பட்டதாக சந்தேகிக்கப்படுவதாக காவல்துறை தெரிவிக்கிறது. பூசா உயர் பாதுகாப்பு சிறை தற்போது பூசா உயர் பாதுகாப்பு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிர்மலா பிரசங்கா என்ற “பேக்ஹோ சமன்” என்பவரின் தாயார் சுட்டுக் கொல்லப்பட்டது, பாதாள உலக தாதா கணேமுல்லா சஞ்சீவாவின் கொலைக்கு…
  • பாம்பைக் காப்பாற்றும் முயற்சி மூன்று வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் முடிந்தது
    Your browser does not support iframes. Your browser does not support iframes. பாம்பைக் காப்பாற்றும் முயற்சி மூன்று வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் முடிந்தது பாம்பைக் காப்பாற்றும் முயற்சி மூன்று வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் முடிந்தது நேற்று (11) தெற்கு அதிவேக நெடுஞ்சாலையைக் கடந்து சென்ற பாம்பைத் தவிர்ப்பதற்காக ஓட்டுநர் ஒருவர் திடீரென பிரேக் மூன்று வாகனங்கள் சேதமடைந்தன போட்டதில், மூன்று வாகனங்கள் சேதமடைந்தன மற்றும் மூன்று பேர் காயமடைந்தனர் என்று போலீசார் தெரிவித்தனர்….
  • எரியும் தீப்பந்தங்களுடன் போராட்டம்
    Your browser does not support iframes. Your browser does not support iframes. எரியும் தீப்பந்தங்களுடன் போராட்டம் எரியும் தீப்பந்தங்களுடன் போராட்டம் ரிடீமாலியெட்டா மற்றும் நாகடிவா திட்டம் உள்ளிட்ட மஹியங்கனாவின் பல பகுதிகளைச் சேர்ந்த மக்கள், காட்டு யானைகளின் அச்சுறுத்தலை அரசாங்கம் புறக்கணிப்பதாகக் குற்றம் சாட்டி, எரியும் தீப்பந்தங்களை ஏந்தியபடி மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். திங்கட்கிழமை இரவு (10) எரியும் தீப்பந்தங்களை ஏந்தியபடி மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசாங்கத்தின் முக்கியத் தலைவர்கள் ஆட்சிக்கு வந்த…
  • சுகீஸ்வர பண்டார மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்
    Your browser does not support iframes. Your browser does not support iframes. சுகீஸ்வர பண்டார மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார் சுகீஸ்வர பண்டார மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார் ஜனாதிபதி செலவினத் தலைப்பின் நிதிகளைக் குற்றவியல் ரீதியாக கீழ் ஒதுக்கப்பட்ட நிதிகளைக் குற்றவியல் ரீதியாக முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் தனிச் செயலாளர் சுகீஸ்வர லெனின் பண்டாரவை ஆகஸ்ட் 25 ஆம் தேதி வரை மேலும் கொழும்பு…
  • யோஷித ராஜபக்ச குற்றப் புலனாய்வுத் துறையிலிருந்து வெளியேறினார்
    Your browser does not support iframes. Your browser does not support iframes. யோஷித ராஜபக்ச குற்றப் புலனாய்வுத் துறையிலிருந்து வெளியேறினார் யோஷித ராஜபக்ச குற்றப் புலனாய்வுத் துறையிலிருந்து வெளியேறினார் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச, வாக்குமூலம் அளித்த பின்னர் சற்று நேரத்திற்கு முன்பு குற்றப் புலனாய்வுத் துறையிலிருந்து (CID) வெளியேறினார். தொடர்ந்து நடைபெற்று வரும் ஒரு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் ஒரு…