Tag: கழுத்தை அறுத்து கொலை
கழுத்தை அறுத்து மகன் கொலை தந்தை கைது
கழுத்தை அறுத்து மகன் கொலை தந்தை கைது
கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் நேற்று (24) மாலை கஹட்டகஸ்திகிலிய, குடாபட்டிய பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கஹட்டகஸ்திகிலிய பகுதியைச் சேர்ந்த 54 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 5ஆம் திகதி கஹட்டகஸ்திகிலிய, குடாப்பட்டிய பிரதேசத்தில் விவசாய கிணற்றில் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டது.
கழுத்தை அறுத்து மகன் கொலை தந்தை கைது
விசாரணையில், இறந்தவருக்கும் அவரின் தந்தைக்கும் இடையே நீண்டகாலமாக நிலவி வந்த தகராறு காரணமாக கொலை இடம்பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று (25) கஹட்டகஸ்திகிலிய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
- தென் கடற்கரையில் இரண்டாவது சரக்குக் கொள்கலன் கரை ஒதுங்கியதுby நிருபர் காவலன்
- கெலியோய பேராதெனியாவிற்கு திடீர் வெள்ள எச்சரிக்கைby நிருபர் காவலன்
- ஜெயவர்தனபுர மருத்துவமனையில் தலைமை வெற்றிடத்தால் நோயாளிகளுக்கு ஆபத்துby நிருபர் காவலன்
- கண்டியின் சில பகுதிகளுக்கு நிலச்சரிவு காரணமாக வெளியேற்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுby நிருபர் காவலன்
- யோஷித ராஜபக்ச மற்றும் கரன்னகோடா மீது குற்றப்பத்திரிகைகள் தாக்கல்by நிருபர் காவலன்












