மகனை சுட்ட தந்தை கைது
Posted in இலங்கை செய்திகள்

மகனை சுட்ட தந்தை கைது

மகனை சுட்ட தந்தை கைது

மகனை சுட்ட தந்தை கைது ,தந்தை ஒருவர், தனது மகன் ஏர் ரைபிள் மூலம் சுடப்பட்டதில் காயமடைந்து, ஆனமடுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் புத்தளம் அடிப்படை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

துப்பாக்கிச் சூட்டில்

பள்ளம, மடவக்குளம், கம்மண்டலுவ பகுதியைச் சேர்ந்த தந்தையே இவ்வாறு துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். அவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டில் மடவக்குளம், கம்மண்டலுவ பகுதியைச் சேர்ந்த 18 வயது இளை​ஞனே பாதிக்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தந்தை இறைச்சி தொடர்பான தொழிலை நடத்தி வருபவர் என்பதும், அவர் தனது குடும்பத்தினருடனும் மகனுடனும்

தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வருபவர் என்பதும் பொலிஸார் விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மகனுடன் ஏதோ ஒரு பிரச்சினை தொடர்பாக சனிக்கிழமை (18) மதியம் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும்,

தந்தை இரும்பு கம்பியை எடுத்து மகனைத் தாக்கியதாகவும்

அதன் பிறகு தந்தை இரும்பு கம்பியை எடுத்து மகனைத் தாக்கியதாகவும், இதனால் அவரது மகனின் காலில் பலத்த காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

அதன் பிறகு, மகன் தந்தையின் தாக்குதல்களில் இருந்து தப்பிக்க ஓடியபோது, ​​தந்தை வீட்டிலிருந்து ஏர் ரைஃபிளை எடுத்து சுட்டார், அது மகனின் தோளில் பட்டது.

பின்னர், உள்ளூர்வாசிகள் மகனை உடனடியாக ஆனமடுவ மருத்துவமனையில் அனுமதித்தனர், மேலும் மேலதிக சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் புத்தளம் ஆதார மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

சம்பவம் தொடர்பாக தந்தையை கைது செய்ய பல்லம பொலிஸார் சென்றபோது, ​​அவர் வீட்டின் மேல் மாடியில் மறைந்திருந்தார், பின்னர் கைது செய்யப்பட்டார்.

குழந்தை மீது கொதிநீரை ஊற்றிய தந்தை கைது
Posted in இலங்கை செய்திகள்

குழந்தை மீது கொதிநீரை ஊற்றிய தந்தை கைது

குழந்தை மீது கொதிநீரை ஊற்றிய தந்தை கைது

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெயாவெல் தோட்டத்தில் மூன்று வயது ஆண் குழந்தை மீது கொதிநீரை ஊற்றி கொடூர செயலில் ஈடுப்பட்டவரை லிந்துலை பொலிஸார் (25) மாலை கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் பாதிக்கப்பட்ட குழந்தையின் தந்தை என லிந்துலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குழந்தை தனது பாட்டியின் ஆதரவுடன் லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் குழந்தையின் தந்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் இந்த கொடூர சம்பவம் (24) இரவு லிந்துலை பொயாவெல் தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

குழந்தை மீது கொதிநீரை ஊற்றிய தந்தை கைது

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குழந்தையின் தாய் கொழும்பில் பணிப் பெண்ணாக தொழிலாற்றி வருகிறார்.

இப் பெண்ணுக்கு ஆறு பிள்ளைகள் இருக்கின்றனர்.இவர்கள் தனது பாட்டி,மற்றும் தந்தையின் அரவணைப்பில் வசித்து வருகின்றனர்.

சம்பவ தினமான (24)இரவு குழந்தையின் தந்தை மது அருந்திய நிலையில் வீட்டுக்கு வருகை தந்திருந்த நிலையில் குழந்தையின் பாட்டியுடன் குடும்ப பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

இதன் போது தனது கடைசி குழந்தையான மூன்று வயதான ஆண் குழந்தை மீது கொதிநீரை ஊற்றியுள்ளார்.

இதனால் துடி துடித்த குழந்தையின் முதுகு பகுதி உள்ளிட்ட பல இடங்களில் நீர் பட்டு காயங்கள் ஏற்பட்டுள்ளது.

பின் லிந்துலை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதுடன்,தனது பாட்டியின் பாதுகாப்பில் குழந்தை சிகிச்சைபெற்று வருகிறது.

இந்த நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் லிந்துலை பொலிஸார் தகவல் அறிந்து விசாரணைகளை முன்னெடுதுள்ளனர்.

இதையடுத்து குழந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்திய தந்தையை (25) மாலை கைது செய்துள்ள பொலிசார் (26) நாளைய தினம் நுவரெலியா நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய நடவடிக்கை எடுத்துள்ளனர்

வாகனத் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது
Posted in இலங்கை செய்திகள்

இரு சிறுமிகள் துஷ்பிரயோகம் தந்தை கைது

இரு சிறுமிகள் துஷ்பிரயோகம் தந்தை கைது

கம்பளை வெவதென்ன பிரதேசத்தில் தன்னுடைய பிள்ளைகளான 13 மற்றும் 14 வயதுகளுடைய இரண்டு சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் கீழ், குறிப்பிட்ட பிள்ளைகளின் தந்தையை சிறுவர் மற்றும் பெண்கள் பணியக அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இந்த சிறுமிகளின் தாய், வெளிநாட்டுக்கு பணிப்பெண்ணாக சென்றுள்ளாதாகவும் தனது தந்தையின் பாலியல் வன்புணர்வை தாங்கிக்கொள்ள முடியாமையால், தங்களுக்கு நேர்ந்ததை அவ் இரு

இரு சிறுமிகள் துஷ்பிரயோகம் தந்தை கைது

சிறுமிகளும் வகுப்பாசிரியையிடம் தெரிவித்துள்ளதுடன் வகுப்பாசிரியை வழங்கிய தகவல்களின் அடிப்படையிலேயே சிறுமிகளை மீட்டு தந்தையை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுமிகள் இருவரையும் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்திய பொலிஸார், சந்தேக நபரான தந்தையை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.