14000 வீடுகளுக்கு இலவச சூரிய ஔி மின்சாரம்
Posted in இலங்கை செய்திகள்

நடுத்தர வருமானமுள்ள மக்களுக்கு 3500 வீடுகள்

நடுத்தர வருமானமுள்ள மக்களுக்கு 3500 வீடுகள்

இந்த வருடம் 2024இல் கொழும்பை அண்மித்த பகுதிகளில் 10,000 வீடுகள் நிர்மாணிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இவற்றில் கிட்டத்தட்ட 6,500 வீடுகள் கொழும்பில் வாழும் குறைந்த வருமானம் பெறும் மக்களை மீள்குடியேற்றுவதற்காக கட்டப்படும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதற்காக 11 வீட்டுத்திட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளன. இதில் 06 வீடமைப்புத் திட்டங்கள் சீன அரசாங்கத்தின் உதவியுடன் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. அதற்காக 552 மில்லியன் சீன யுவான் (இலங்கை மதிப்பில் 22 பில்லியன் ரூபாய்) உதவியாகப் பெறப்படும்.

கட்டப்படும் வீடுகளின் எண்ணிக்கை 1996 ஆகும். இதன் நிர்மாணப் பணிகள் வரும் மார்ச் மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

எஞ்சிய 4,500 வீடுகள் அப்பிள் வத்த கொழம்பகே மாவத்தை, பெர்கியூசன் வீதி, ஸ்டேடியம் கம, ஒபேசேகரபுர மற்றும் மாதம்பிட்டிய ஆகிய இடங்களில் நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட தொகை 15,728 மில்லியன் ரூபாவாகும். இந்த திட்டம் கொழும்பு நகர மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படுகிறது.

நடுத்தர வருமானமுள்ள மக்களுக்கு 3500 வீடுகள்

2010 ஆம் ஆண்டு கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் 50,000 குடும்பங்களை மீள்குடியேற்றுவதற்காக ஆரம்பிக்கப்பட்ட நகர மறுமலர்ச்சித் திட்டத்தை விரைவுபடுத்துவதற்காக இந்த உதவித் திட்டம் 2019 இல் ஆரம்பிக்கப்பட்டது.

இது ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) நிதியுதவியின் கீழ் செயல்படுகிறது. கொழும்பு நகர மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் இதுவரை நிர்மாணிக்கப்பட்ட வீட்டுத் திட்டங்களின் எண்ணிக்கை 23 ஆகும். வீடுகளின் எண்ணிக்கை 14,611 ஆகும். 11,269 குடும்பங்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளன.

இதனால் கொழும்பு நகரின் 116 ஏக்கர் மீள் அபிவிருத்திக்காக நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு கிடைத்துள்ளது.

அதற்கான புதிய முதலீட்டு திட்டங்கள் கண்டறியப்பட்டு வருவதாக அமைச்சர் பிரசன்ன தெரிவித்தார். மேலும் 3,500 வீடுகள் நடுத்தர வருமான வீட்டுத் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்படும்.

நடுத்தர வருமானம் பெறும் மக்களுக்காக கட்டப்படும் இந்த வீட்டுத் திட்டங்களின் எண்ணிக்கை 11 ஆகும்.

இந்த 11 வீட்டுத் திட்டங்களின் நிர்மாணப் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் கோவிட் தொற்றுநோய் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக, அவற்றில் சில தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

அந்த நிறுத்தி வைக்கப்பட்டுள்ள திட்டங்கள் இந்த ஆண்டில் தொடங்கப்பட்டு முடிக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

இலங்கையில் சாராயம் சிகரெட் விலை ஏற்றம் குடி மகன்கள் அவதி
Posted in இலங்கை செய்திகள்

சாராய மதுபானங்களின் விலை அதிகரிப்பு

சாராய மதுபானங்களின் விலை அதிகரிப்பு

அதிவிசேஷ சாராயம் மற்றும் தென்னஞ் சாராயம் ஆகிய மதுபானங்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, ஒரு போத்தல் அதிவிசேஷ மற்றும் தென்னஞ் சாராயம் 400 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளன.

கலால் வரி மற்றும் வற் வரி அதிகரிப்பிற்கு அமைய இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக Distilleries Company of Sri Lanka PLC தெரிவித்துள்ளது.

வீடியோ

வற் வரியால் பாதிக்கப்படும் மக்கள் இவர்கள்தான்
Posted in இலங்கை செய்திகள்

வற் வரியால் பாதிக்கப்படும் மக்கள் இவர்கள்தான்

வற் வரியால் பாதிக்கப்படும் மக்கள் இவர்கள்தான்

புதிய வற் வரி திருத்தமானது கிராமப்புற மக்களை விட நகர்ப்புற மக்களையே அதிகம் பாதிக்கும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளியியல் துறையின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.

இந்த வற் வரி திருத்தம் நகர்ப்புறங்களில் வசிக்கும் நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த மக்களைக் கடுமையாகப் பாதிக்கும் என அவர் தெரிவித்தார்.

“வற் வரியால், நாட்டில் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் கணிசமாக உயர்ந்துள்ளன.
எரிபொருள் விலை உயர்ந்துள்ளது.
அதேபோல், எரிவாயு விலையும் உயர்ந்துள்ளது.

வற் வரியால் பாதிக்கப்படும் மக்கள் இவர்கள்தான்


அதன்படி, போக்குவரத்து துறையில் விலை உயரக்கூடும்.
அதே சமயம், பேக்கரி பொருட்கள் உட்பட ஏராளமான பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் உயர்ந்துள்ளன என்பது தெளிவாகிறது.


இது இந்நாட்டின் கிராமப்புற மக்களை விட நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தினரையும் ஏழை மக்களையும் அதிகம் பாதிக்கலாம்.


நகர்ப்புறங்களில் உள்ள நடுத்தர வர்க்கத்தினர், ஏழைகள் மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு இந்த பொருட்கள் மற்றும் சேவைகளின் அதிகரிப்பை தாங்க முடியாத சூழலுக்கு வழிவகுக்கும்” என்றார்.

இதேவேளை, வற் வரி திருத்தத்துடன், இந்த ஆண்டு ஒவ்வொரு குடும்பமும் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு மாதாந்தம் 32,000 ரூபா வரி செலுத்த வேண்டியுள்ளதாக முன்னிலை சோசலிச கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜாகொட தெரிவித்தார்.

நாட்டை கட்டியெழுப்புவதற்கு தற்போதைய முறைமை ஏற்றதல்ல என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

வீடியோ

மாணவன் மரணம் குற்றவாளிகள் கைது
Posted in இலங்கை செய்திகள்

நாடளாவிய ரீதியில் யுக்திய பொலிஸ் நடவடிக்கை 822 பேர் கைது

நாடளாவிய ரீதியில் யுக்திய பொலிஸ் நடவடிக்கை 822 பேர் கைது

நாடளாவிய ரீதியில் ‘யுக்திய’ பொலிஸ் நடவடிக்கையின் கீழ் நேற்று (01) முதல் இன்று (02) அதிகாலை வரை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் 822 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, ​​273 கிராம் ஹெரோயின், 111 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 426 போதை மாத்திரைகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

லிட்ரோ எரிவாயுவின் புதிய விலை
Posted in இலங்கை செய்திகள்

லாஃப்ஸ் எரிவாயு விலையும் அதிகரிப்பு

லாஃப்ஸ் எரிவாயு விலையும் அதிகரிப்பு

சமையல் எரிவாயு விலையை அதிகரிக்க லாஃப்ஸ் நிறுவனமும் தீர்மானித்துள்ளது.

இதற்கமைய, 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயுவின் விலை 755 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயுவின் புதிய விலை 4,740 ரூபாவாகும்.

அத்துடன், 05 கிலோ கிராம் சமையல் எரிவாயுவின் விலை 305 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 1,900 ரூபாவாகும்

வீடியோ

திருகோணமலையில் பதற்றம்
Posted in இலங்கை செய்திகள்

திருகோணமலையில் பதற்றம்

திருகோணமலையில் பதற்றம்

திருகோணமலை நகரின் துறைமுக வீதியில் இ.போ.ச பேரூந்து மோதியதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

அதே பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய ஒருவரே இவ்வாறு காயமடைந்துள்ளார்.

விபத்து நடந்ததையடுத்து, அப்பகுதியில் திரண்ட அப்பகுதி மக்கள் பேரூந்தை தாக்கி சேதப்படுத்தினர்.

திருகோணமலையில் பதற்றம்

பேருந்திற்கு தீ வைக்க முயற்சித்ததையடுத்து, அங்கு வந்த பொலிஸார் குழுவை கலைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தற்போது பேருந்து பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் பேருந்தின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் திருகோணமலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

வீடியோ

இலங்கையரா நீங்கள்|இதை செய்ய தவறினால் சிறை தண்டம்|உடனே தெரிந்து கொள்ளுங்கள்
Posted in இலங்கை செய்திகள் இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள்

இலங்கையரா நீங்கள்|இதை செய்ய தவறினால் சிறை தண்டம்|உடனே தெரிந்து கொள்ளுங்கள்


இலங்கையரா நீங்கள்|இதை செய்ய தவறினால் சிறை தண்டம்|உடனே தெரிந்து கொள்ளுங்கள்

இலங்கை யாரா நீங்கள் உடனே இதனை செய்து கொள்ளுங்கள் ,
இதை தெரியாது இதை செய்தல் உங்களுக்கு ஆபத்து .


இலங்கை வரி விதிப்பு உடனே இதை தெரிந்து மேற்கொள்ளுங்கள் ,
சட்டத்தை மதிக்க தவறினால் சிறை ,தண்டம்

வீடியோ

வரலாறு காணாத வகையில் மரக்கறிகளின் விலை உயர்வு
Posted in இலங்கை செய்திகள்

வரலாறு காணாத வகையில் மரக்கறிகளின் விலை உயர்வு

வரலாறு காணாத வகையில் மரக்கறிகளின் விலை உயர்வு

வரலாற்றில் முதன்முறையாக மரக்கறிகளின் விலை அதிகளவிற்கு அதிகரித்த போதிலும் விவசாயிகளுக்கு எவ்வித இலாபமும் கிடைக்கவில்லை என நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலையத்தின் தலைவரும்

முன்னாள் தலைவருமான அகில இலங்கை கூட்டு விசேட பொருளாதார நிலையத்தின் தற்போதைய புரவலர் அருண சாந்த ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

2024 ஆம் ஆண்டு புத்தாண்டுக்கு விவசாய சமூகம் மற்றும் விவசாயம் சார்ந்த வாழ்வாதாரத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விசேட செய்தியாளர் மாநாட்டை இன்று (01) காலை நுவரெலியா பொருளாதார நிலையத்தில் வைத்து அருண சாந்த ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு மேலும் கருத்து தெரிவித்த நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலையத்தின் தலைவர்,

பொருளாதார மையத்தில் இன்றைய மொத்த விற்பனை விலை கேரட் கிலோ 750 ரூபாய், பீட்ரூட் கிலோ 360-380 ரூபாய், முட்டைகோஸ் கிலோ 500 ரூபாய், வெண்டைக்காய் கிலோ 250-270 ரூபாய், பீன்ஸ் கிலோ 600-650 ரூபாய், 600. -ஒரு கிலோ தக்காளி, மற்றும் பச்சை மிளகாய் 700 ரூபாய்.கிலோ 1,600-1,800 ரூபாய் வரை விலை அதிகரித்துள்ளது.

வரலாறு காணாத வகையில் மரக்கறிகளின் விலை உயர்வு

வரலாற்றில் இல்லாத அளவுக்கு தற்போதைய காய்கறி விலை உயர்ந்துள்ளது என்று குறிப்பிடலாம்.

காய்கறிகளின் விலை உயர்ந்தாலும், கடந்த காலம் முழுவதும் பெய்த கனமழை மற்றும் மோசமான வானிலை காரணமாக விவசாயிகளின் பயிர்கள் முற்றிலும் நாசமடைந்துள்ளன.

கடந்த ஆண்டுகளில் இந்த பருவத்தில் 100 கிலோ காய்கறிகளை சேமித்த விவசாயிகள், இந்த ஆண்டு பத்து கிலோ காய்கறிகளை மட்டுமே சேமித்துள்ளனர்.

100 கிலோ காய்கறிகளை 100 ரூபாய்க்கு விற்றபோது 10,000 ரூபாய் கிடைத்தது. இம்முறை 300 க்கு 10 கிலோவுக்கு 3,000 ரூபா கிடைத்துள்ளது.

விலை உயர்ந்துள்ளதால், காய்கறி சாகுபடிக்கு கிடைத்ததை விட, மூன்று மடங்கு அதிகமாக செலவு செய்ததால், லாபம் இல்லை.

2023ஆம் ஆண்டைப் போல அல்லாமல், 2024ஆம் ஆண்டை முறையான திட்டத்தின்படி செயல்படுத்த வேண்டும் என்று அரசைக் கேட்டுக் கொள்கிறோம்.

இதற்கு, 2025 ஆம் ஆண்டை விவசாயிகளுக்கு நல்ல ஆண்டாக மாற்ற, சம்பந்தப்பட்ட துறை அமைச்சர், அதிகாரிகள் மற்றும் ஒட்டுமொத்த அரசின் ஆதரவை பெற வேண்டும், என்றார்.

நுவரெலியா மத்திய சந்தையில் மலையக மரக்கறிகளின் சில்லறை விற்பனை தொடர்பில் நாம் மேற்கொண்ட விசாரணையின் போது, ​​பொருளாதார நிலையத்தின் மொத்த விலையை விட 50% அதிக விலைக்கு சில்லறை மரக்கறிகள் விற்பனை செய்யப்படுவதாக அறிந்தோம்.

கடந்த ஆண்டுகளில் புத்தாண்டைக் கொண்டாட நுகர்வோர்கள் கிலோ கணக்கில் காய்கறிகளை எடுத்துச் சென்றதுடன், தற்போது காய்கறிகளின் சில்லறை விலை உயர்வால் 250 கிராமாக குறைந்துள்ளதாக சில்லறை விற்பனையாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

வீடியோ

வயிற்றில் கத்தியுடன் இளைஞன் அனுமதி
Posted in இலங்கை செய்திகள்

வயிற்றில் கத்தியுடன் இளைஞன் அனுமதி

வயிற்றில் கத்தியுடன் இளைஞன் அனுமதி

இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலை விலக்கச்​ சென்ற இளைஞன் மீது கத்தியால் குத்தியதில், அக்கத்தி வயிற்றில் சிக்கிய நிலையில் புத்தளம் வைத்தியசாலையில் இளைஞன் இன்று (1) அனுமதிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் தலைமையக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

புத்தளம் மஸ்ஜிதில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது இரண்டு இளைஞர் குழுக்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.

மேலும் கத்தியால் தாக்கப்பட்ட 20 வயது இளைஞன் கூறுகையில், மோதலை தவிர்க்க முயன்ற போது, ​​ஒரு தரப்பினர் மற்றொரு தரப்பினரிடம் இருந்து கத்தியால் குத்தியதாக தெரிவித்தார்.

வயிற்றில் கத்தியுடன் இளைஞன் அனுமதி

கத்திக்குத்துக்கு இலக்கான இளைஞனை இவ்விரு தரப்பினரும் சேர்ந்து வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றனர்.

இரத்தம் வெளியேறாமல் இருக்க அறுவை சிகிச்சைக்கு சிறப்பு மருத்துவர் வரும் வரை கத்தியை கழற்றாமல் இளைஞனை வார்டில் வைத்திருந்தனர். கத்தியை அகற்றும் சத்திரசிகிச்சை புத்தளம் வைத்தியசாலையில் இன்று காலை ஆரம்பமானது

வீடியோ

நீரில் மூழ்கிய ஆமர் வீதி
Posted in இலங்கை செய்திகள்

நீரில் மூழ்கிய ஆமர் வீதி

நீரில் மூழ்கிய ஆமர் வீதி

பெய்து வரும் கன மழை காரணமாக கொழும்பு – ஆமர் வீதி முழுவதுமாக நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக குறித்த பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், குறித்த வீதியை பயன்படுத்தும் சாரதிகள் மாற்று வீதியை பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

வீடியோ

ஐஓசி சினோபெக் எரிபொருட்களின் விலைகளும் உயர்வு
Posted in இலங்கை செய்திகள்

ஐஓசி சினோபெக் எரிபொருட்களின் விலைகளும் உயர்வு

ஐஓசி சினோபெக் எரிபொருட்களின் விலைகளும் உயர்வு

லங்கா ஐஓசி நிறுவனம் மற்றும் சினோபெக் நிறுவனமும் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் விலைகளுக்கு சமாந்திரமாக எரிபொருட்களின் விலைகளை திருத்தம் செய்ய தீர்மானித்துள்ளன.

இன்று அதிகாலை 5 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்களின் விலைகளை திருத்தியமைத்துள்ளது.

அதன்படி, 346 ரூபாயாக காணப்பட்ட ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றில் விலை 20 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

ஐஓசி சினோபெக் எரிபொருட்களின் விலைகளும் உயர்வு

இதற்கமைய, 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 366 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், 426 ரூபாயாக நிலவிய ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றரின் விரை 38 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 464 ரூபாவாகும்.

இதேவேளை, 329 ரூபாயக காணப்பட்ட ஒரு லீற்றர் ஒட்டோ டீசலின் விலை 29 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் புதிய விலை 358 ரூபாவாகும்.

434 ரூபாயக நிலவிய லங்கா சுப்பர் டீசல் 4 ஸ்டார் யூரோ 4 இன் லீற்றர் ஒன்றின் விலை 41 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 475 ரூபாவாகும்.

இதேவேளை, மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 11 ரூபாவினால் ​குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 236 ரூபாவாகும்.

வீடியோ

விலை அதிகரிப்பால் மக்கள் கவலை
Posted in இலங்கை செய்திகள்

விலை அதிகரிப்பால் மக்கள் கவலை

விலை அதிகரிப்பால் மக்கள் கவலை

வெட் வரி திருத்தத்திற்கு அமைய மதுபானம் மற்றும் சிகரெட் விலைகளும் இன்று முதல் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இன்று (01) முதல் அமுலுக்கு வரும் வகையில் மதுபானங்களின் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என டிஸ்டில்லரீஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன்படி, 750 மில்லி லீற்றர் மதுபான போத்தல் ஒன்றின் விலை 90 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மது வரி மற்றும் வெட் வரி அதிகரிப்புடன் இன்று முதல் சிகரெட்டின் விலை 4 வகைகளின் கீழ் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, சிகரெட்டின் விலை 5 ரூபா, 15 ரூபா, 20 ரூபா மற்றும் 25 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

வீடியோ

ரணிலுக்கு எதிராக யாழில் தமிழ் மக்கள் போராட்டம்
Posted in இலங்கை செய்திகள்

ஜனாதிபதியின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

ஜனாதிபதியின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

பல சவால்களுக்கும் எதிர்பார்ப்புக்களுக்கும் மத்தியிலேயே நாம் 2024 புது வருடத்தை ஆரம்பிக்கிறோம்.

ஆயிரக்கணக்கிலான எண்ணங்களைப் பூர்த்தி செய்துகொள்ள, நம் நாடு தற்போது எதிர்கொண்டிருக்கும் நெருக்கடிகளில் இருந்து நாட்டை மீட்டெடுக்க வேண்டியது அவசியமாகும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது புதுவருட வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்.

கடந்த காலங்களில் நீங்கள் செய்த அர்ப்பணிப்புக்கள் மற்றும் துயரங்களைத் தாங்கிக் கொண்டதன் பலனாக நாட்டை வங்குரோத்து நிலையிலிருந்து மீட்பதற்கான அடிப்படைக் கட்டமைப்பை உருவாக்க எம்மால் முடிந்துள்ளது.

இருப்பினும் பொருளாதார ஸ்திரத்தன்மைக்காக, அதேபாதையில் தொடர்ந்து பயணிக்க வேண்டியது அவசியமாகும். அது மலர் பாதையாக இல்லாமல், முட்களும், கற்களும் நிறைந்த பாதையாகவே அமைந்திருக்கும்.

ஜனாதிபதியின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

இதனால், இலங்கை மீளக் கட்டியெழுப்பும் போது எதிர்கொள்ளும் சவால்களைப் புரிந்துகொள்ள வேண்டியது இலங்கையராகிய எமது பொறுப்பாகும்.

ஜனவரி மாதத்திற்கு ஜேனஸ் எனும் கடவுளின் பெயர் சூட்டப்பட்டது. அக்கடவுளினால் முன்னோக்கி மாத்திரம் அன்றி, பின்னோக்கியும் பார்க்க முடியுமாம்.!

அதனால் எதிர்காலம் தொடர்பில் மட்டுமன்றி, கடந்த காலம் தொடர்பிலும் அறிந்து, ஒவ்வொருவரினதும் சவால்களைப் புரிந்துகொள்ள வேண்டும். நாட்டின் முன்னேற்றத்துக்காக எமது பொறுப்புக்களை அறிந்துகொள்வோம். அவற்றை செயற்படுத்தி, தாய் நாட்டை பலப்படுத்துவோம்.

அதற்காக பொறுப்புடனும் அர்பணிப்புடனும் செயற்படுவோம். அதனால் புத்தாண்டை செழிப்பானதாக மாற்றிக்கொள்வோம்.

பிறந்திருக்கும் இந்த ஆண்டு, அனைவருக்கும் வெற்றிகரமான ஆண்டாக அமைய வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார்

வீடியோ

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவேன் மைத்திரிபால சிறிசேன
Posted in இலங்கை செய்திகள்

ஜனாதிபதி வேட்பாளராக மைத்திரி

ஜனாதிபதி வேட்பாளராக மைத்திரி

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போட்டியிட உள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச இதனைத் தெரிவித்துள்ளார்

வீடியோ

கிளிநொச்சியில் அசானிக்கு நடந்த சோதனை
Posted in இலங்கை செய்திகள்

கிளிநொச்சியில் அசானிக்கு நடந்த சோதனை

கிளிநொச்சியில் அசானிக்கு நடந்த சோதனை

கிளிநொச்சியில் வைத்து அரசியல் பிரமுகர்கள் முன்னிலையில் அசானிக்கு பொண்ணாடைகள் போர்த்தி சான்றிதழ்கள் கேடயங்கள் வழங்கி ஹவுரவிக்க பட்டுள்ளார்

தமிழகம் ஜீ தமிழ் தலைக்காட்சியில் கலந்து கொண்டு சரிகமபா நிகழ்வில் பாடி அசத்தி வந்தார் .

அசானி மீது ஏற்பட்ட மக்கள் அனுதாப அலை காரணமாக உலகம் முழுவதும் அவர் அதிக மக்களினால் இரசித்து பார்க்க பட்டார் .

அவரது பாட்டு திறமைக்கு அப்பால் அவர் மீது கொண்ட அனுதாப அலையாகும் .

தமது பிள்ளை மீளவும் இலக்கை வந்தடைந்த நிலையில் அவருக்குரிய நிகழ்வுகளை தற்போது பல காட்சிகள் ,சமுக ஆர்வலர்கள் முன்னெடுத்து செய்து வருகின்றனர் என்பது குறிப்பிட தக்கது

கிளிநொச்சியில் அசானிக்கு நடந்த சோதனை

வீடியோ

பிரான்ஸல் 14 தமிழருக்கு சிறை
Posted in இலங்கை செய்திகள்

மாத்தறை சிறைச்சாலையில் இரண்டாவது உயிரிழப்பு

மாத்தறை சிறைச்சாலையில் இரண்டாவது உயிரிழப்பு

மாத்தறை சிறைச்சாலையில் பரவி வரும் காய்ச்சலால் மாத்தறை பொது வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மற்றுமொரு கைதி உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

வலஸ்முல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 53 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

வீடியோ

பருத்தித்துறையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

மர்மமான முறையில் நால்வர் உயி​ரிழப்பு

மர்மமான முறையில் நால்வர் உயி​ரிழப்பு

மாலம்பே, கஹந்தோட்ட வீதி பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்து தாய், மகன்மார் இருவர் மற்றும் மகள் ஒருவரின் சடலங்கள் இன்று (31) அதிகாலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சடலங்கள் மாலபே நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த குடும்பத்தின் தந்தை கடந்த 28ஆம் திகதி உயிரிழந்துள்ளதாகவும், இறுதிச் சடங்குகள் நேற்று (30) இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸ் வட்டாரங்கள்

தெரிவிக்கின்றன. இது தற்கொலையா என பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்

வீடியோ

மாத்தறையில் துப்பாக்கிச்சூடு
Posted in இலங்கை செய்திகள்

துப்பாக்கிச் சூட்டில் பொலிஸ் அதிகாரி பலி

துப்பாக்கிச் சூட்டில் பொலிஸ் அதிகாரி பலி

மாத்தறை – வெலிகம பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்தார்.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் கடமையாற்றிய பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சோதனை நடவடிக்கையின் போது இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

வெலிகம – பெலேன பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் இன்று (31) அதிகாலை துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதுடன், துப்பாக்கிச் சூடு நடத்திய வேனை வெலிகம பொலிஸார் துரத்திச் சென்று துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

இதன்போது இடம்பெற்ற பதில் துப்பாக்கிச் சூட்டில் பொலிஸ் அதிகாரி கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வீடியோ

குற்றச் செயலில் ஈடுபட்ட 5 பொலிஸார் இடைநிறுத்தம் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு - திருகோணமலை மாவட்டங்களில் பொலிஸார் ஒழுக்கம் தவறி மேற்கொண்ட குற்றச் செயல் தொடர்பாக கைது செய்யப்பட்ட 5 பொலிஸார் பணியில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளதாக இன்று (23) பொலிஸ் உயர் அதிகாரி தெரிவித்தார். மட்டக்களப்பு, வாகரை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த இரு பொலிஸாருக்கிடையே கடந்த 6 ஆம் திகதி மாலை ஏற்பட்ட கைகலப்பில் கல்லால் தாக்கிய சம்பவத்தில் ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் காயமடைந்ததையடுத்து தாக்கிய பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் வெளிவந்த பின் பணியில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து கடந்த 11 ஆம் திகதி ஏறாவூரைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் மட்டக்களப்பு நகரில் வேலைபார்த்து வரும் கடையில் வேலை முடித்து கொண்டு இரவு 11 மணிக்கு நடந்து வீடுதிரும்பிக் கொண்டிருந்த இளைஞனை முச்சக்கரவண்டியில் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 3 பொலிஸார் இளைஞனை நிறுத்தி அச்சுறுத்தி அவரிடம் இருந்து 6,500 ரூபாவை பறித்தெடுத்தனர். இச்சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த 3 பொலிஸாரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட 3 பேரையும் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டனர். அதேவேளை கடந்த 20 ஆம் திகதி கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் கடமையற்றி வந்த அதேபிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் 150,000 ரூபா பெறுமதியான மாடு ஒன்றை திருடிய குற்றத்தில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற பிணையில் வெளிவந்த நிலையில் அவரும் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டார். இவ்வாறு குற்றச் செயல் காரணமாக கிழக்கு மாகாணத்தில் கடந்த 15 நாட்களில் 5 பொலிஸார் கைது செய்யப்பட்டு பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸ் உயர் அதிகாரி தெரிவித்தார்.
Posted in இலங்கை செய்திகள்

கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்

கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்

கொழும்பில் இன்று (31) விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு இன்று கொழும்பு நகரில் ஏற்படக்கூடிய வாகன நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கில் மாலை 5 மணி

முதல் இந்த போக்குவரத்து திட்டம் காலிமுகத்திடல் உள்ளிட்ட பகுதிகளில் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்

வீடியோ

வவுனியாவில் விபத்து ஐவர் காயம்
Posted in இலங்கை செய்திகள்

கோர விபத்தில் 9 பேர் படுகாயம்

கோர விபத்தில் 9 பேர் படுகாயம்

புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் முந்தல் பிரதேச செயலகத்திற்கு முன்னால் இன்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 09 பேர் காயமடைந்துள்ளனர்.

புத்தளம் பகுதியில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற காரும், நீர்கொழும்பில் இருந்து புத்தளம் நோக்கிப் பயணம் செய்த மற்றுமொரு காரும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் இரு கார்களிலும் பயணித்த மூன்று சிறுவர்கள் உட்பட 09 பேர் காயமடைந்த நிலையில் முந்தல் மாவட்ட வைத்தியசாலையில்

கோர விபத்தில் 9 பேர் படுகாயம்

அனுமதிக்கப்பட்டதுடன், அதில் எட்டு பேர் மேலதிக சிகிச்சைக்காக சிலாபம் மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் முந்தல் பொலிஸார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வீடியோ