வேறொருவரின் எரிந்த வீட்டுக்கு இழப்பீடு பெற்ற ராஜபக்ஷ
Posted in இலங்கை செய்திகள்

வேறொருவரின் எரிந்த வீட்டுக்கு இழப்பீடு பெற்ற ராஜபக்ஷ

வேறொருவரின் எரிந்த வீட்டுக்கு இழப்பீடு பெற்ற ராஜபக்ஷ

வேறொருவரின் எரிந்த வீட்டுக்கு இழப்பீடு பெற்ற ராஜபக்ஷ ,அரகலயவின் போது செவனகலவில் மற்றொரு நபரின் வீடு எரிக்கப்பட்டதற்காக இழப்பீடு

பெற்ற ராஜபக்ச உறுப்பினர்களின் பட்டியல் மிக விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க புத்தளவில் திங்கட்கிழமை (31) தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் புத்தள கண்காட்சி மைதானத்தில் நடைபெற்ற

மக்கள் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இதனைத் தெரிவித்தார்.

இழப்பீடு பெற்ற ராஜபக்ஷ, எரிந்த வீட்டின் உரிமையாளர் அல்ல என்று கூறிய ஜனாதிபதி அனுர திசாநாயக்க, நிலப் பத்திரம் வேறு பெயரில் இருப்பதாகவும், வீட்டுப் பத்திரம் வேறு பெயரில் இருப்பதாகவும் கூறினார்.

இருப்பினும், இழப்பீட்டைப் பெற்றவர் ஒரு ராஜபக்ஷ என்று ஜனாதிபதி வெளிப்படுத்தினார்.

தொடர்புடைய அறிக்கை சமீபத்தில் தனக்குக் கிடைத்ததாகவும், ஆனால் அது இன்னும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை என்றும் ஜனாதிபதி கூறினார்.

முன்னாள் அமைச்சரின் செயலாளர் துப்பாக்கியுடன் கைது
Posted in இலங்கை செய்திகள்

முன்னாள் அமைச்சரின் செயலாளர் துப்பாக்கியுடன் கைது

முன்னாள் அமைச்சரின் செயலாளர் துப்பாக்கியுடன் கைது

முன்னாள் அமைச்சரின் செயலாளர் துப்பாக்கியுடன் கைது ,ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் அமைச்சர் ஒருவரின் செயலாளர் எனக் கூறிக்கொள்ளும் ஒருவர் ஓட்டிச் சென்ற சொகுசு காரில் இருந்து 9 மிமீ துப்பாக்கியொன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக முல்லேரியா பொலிஸார் தெரிவித்தனர்.

உரிமம் இல்லாமல் துப்பாக்கி வைத்திருந்ததற்காகவும், குடிபோதையில் வாகனம் ஓட்டியதற்காகவும் காரின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அங்கொடை, புத்கமுவ பகுதியைச் சேர்ந்த 52 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

திருடப்பட்டு குவிக்கப்பட்ட சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் ஜனாதிபதி
Posted in இலங்கை செய்திகள்

திருடப்பட்டு குவிக்கப்பட்ட சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் ஜனாதிபதி

திருடப்பட்டு குவிக்கப்பட்ட சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் ஜனாதிபதி

திருடப்பட்டு குவிக்கப்பட்ட சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் ஜனாதிபதி ,சட்டவிரோதமாக ஈட்டிய சொத்துக்களை அரசுடமையாக்கும் சட்டமூலம் ஏப்ரல் 8 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

மாத்தறை வெலிப்பிட்டிய பகுதியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போது ஜனாதிபதி இதை குறிப்பிட்டார்.

மேலும், மோசடி செய்பவர்கள் மற்றும் ஊழல்வாதிகளுக்கு மீண்டும் நாட்டை ஆட்சி செய்ய வாய்ப்பு வழங்கப்படாது என்றும் சுட்டிக்காட்டினார்.

திருடப்பட்டு குவிக்கப்பட்ட சொத்துக்களை அரசுடமையாக்கும் சட்டத்தை வரும் 8ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவோம். சட்டவிரோதமாக வாங்கிய சொத்துக்களை பறிமுதல் செய்யும் சட்டம்.

யாரையும் தனிப்பட்ட முறையில் பழிவாங்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை. “எங்கள் தாய்நாட்டில் சட்டத்தின் ஆட்சியையும் இறையாண்மையையும் மீண்டும் நிலைநாட்டுவதே எங்கள் எதிர்பார்ப்பு.” என்றார்

தேநீர் சீஸ் விலைகள் அதிகரிப்பு
Posted in இலங்கை செய்திகள்

தேநீர் சீஸ் விலைகள் அதிகரிப்பு

தேநீர் சீஸ் விலைகள் அதிகரிப்பு

தேநீர் சீஸ் விலைகள் அதிகரிப்பு ,பால் மாவின் விலை அதிகரிப்பால், பால் தேநீரின் விலை மற்றும், பால் சார்ந்த பழச்சாறுகள், சீஸ் ஆகியவற்றின் விலைகள் இன்று திங்கட்கிழமை (31) நள்ளிரவு 12.00 மணி முதல் 10 ரூபாவால்

அதிகரிக்கப்படும் என்று அகில இலங்கை சிற்றுண்டிசாலைகள் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் (AICROA) ஹர்ஷனா ருக்‌ஷன் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது,

பால் மாவின் விலை உயர்வைக் கருத்தில் கொண்டு, பால் தேநீர் தவிர, பாலைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் அனைத்து வகையான பழச்சாறுகளின் ஒரு கோப்பையின் விலை இன்று நள்ளிரவு முதல் 10 ரூபாயால் அதிகரிக்கப்படும்.

இது தவிர, பாலைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் சீஸ், கொட்டு உள்ளிட்ட பல வகையான உணவுப் பொருட்களின் விலையும் ரூ.10 உயர்த்தப்படும் என்று சங்கத்தின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போது கீரி சம்பா மற்றும் சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக உணவக உரிமையாளர்கள் கடுமையான சிரமங்களை எதிர்கொள்டு வருகின்றனர்.

தற்போதுள்ள பற்றாக்குறை காரணமாக, வணிகர்கள் இரண்டு வகையான அரிசியையும் கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு வாங்க வேண்டியுள்ளது.

அரிசி விலை உயர்வை அடிப்படையாகக் கொண்டு, உணவுப் பொருட்களின் விலையை உயர்த்தினால், மக்கள் கடுமையான சிரமங்களை எதிர்கொள்வார்கள் என்பதால், உணவுப் பொருட்களின் விலையை உயர்த்த மாட்டோம்.

அரிசி பற்றாக்குறை மற்றும் அதிக விலைக்கு விற்பனை செய்வது குறித்து நுகர்வோர் விவகார அதிகாரசபை தகவல் தெரிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளது என்றார்.

நீதி கிடைக்க வேண்டும் எம் பி அடைக்கலநாதன்
Posted in இலங்கை செய்திகள்

நீதி கிடைக்க வேண்டும் எம் பி அடைக்கலநாதன்

நீதி கிடைக்க வேண்டும் எம் பி அடைக்கலநாதன்

நீதி கிடைக்க வேண்டும் எம் பி அடைக்கலநாதன் ,நான்கு பேர் தடை தொடர்பில் பிரித்தானியாவின் நிலைப்பாடு சர்வதேச நீதிமன்றம் வரை செல்ல வேண்டும். அதன் ஊடாக நீதி கிடைக்க வேண்டும் என ஜனநாயக

தமிழ்த் தேசியக் கூட்டணியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ரெலோ அமைப்பின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

வவுனியா, வைரவ புளியங்குளம் பகுதியில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (30) இடம்பெற்ற ஊடகசந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

பிரித்தானியா மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக நான்கு பேருக்கு தடை விதித்துள்ளது. இதனை நாம் முதலில் வரவேற்கின்றோம். ஆனால் வினோதம்

நடைபெறுகிறது. தென்னிலங்கையில் தற்போது உள்ளஅரசு சார்ந்தவர்கள் உட்பட எல்லா அரசியல் கட்சிகளும் ஒன்றாக நின்று இவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கின்றார்கள்.

ஜேவிபி அரசாங்கம் ஆரம்பத்தில் எமது இனப்பிரச்சினை தொடர்பில் ஐ.நா தீர்மானம் எடுக்கப்பட்ட உடனேயே அதை நடை முறைப்படுத்துவதற்கான ஆதரவை கொடுக்கவில்லை. இப்பொழுது நான்கு பேருக்கு தடை விதித்ததை

வைத்துக் கொண்டுஅமைச்சர் அனைவரும் கூக்குரல் போடுவது இனவாதத்தின் அடிப்படையில் இந்தஅரசாங்கம் செயற்படுவதை தெட்டத் தெளிவாக காட்டுக்கின்றது.

ஆகவே,எங்களைப் பொறுத்தவரை எப்படி சிங்கள தேசத்தில் ஒருவருக்கு பிரச்சனை என்றால் ஆட்சியாளர்கள், கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட்டு

அதற்குஎதிராக குரல்கொடுக்கின்ற விடயத்தை நாம் வரலாற்று ரீதியாக பார்க்கின்ற விடயம்.தற்போதும் பார்க்கின்றோம். ஆனால் எங்களுக்குள் ஒற்றுமையீனத்தை பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.

எங்களது போராட்டங்களும் ஒருமித்த போராட்டமாக நடைபெறுவதில்லை. ஆகவே தொடர்ந்து, மனித உரிமை மீறல்கள் செய்தவர்களுக்கு ஐ.நா சபை கூட

அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் என்று கூறுகின்ற நிலையில், தமிழ் மக்கள் அனைவரும் இதனைஆதரிக்க வேண்டும்.

மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களுக்கு சர்வதேச நீதமன்றத்தின் மூலம் நீதி வருவதற்கு நாம் அதனை செயற்படுத்த வேண்டும். நாங்கள் ஒற்றுமையாக இல்லை என்றால் தென்னிலங்கையில் உள்ளவர்கள் ஒற்றுமையாக இருந்து

எம்மை அழிக்கின்ற செயற்பாட்டை முன்னெடுப்பார்கள். புதிய அரசாங்கம் கூட போராட்ட இயக்கம் என்கின்ற நிலை மாறி ஒரு இனவாதஅரசாக பார்க்க

கூடியநிலையில் உள்ளது.பிரித்தானியாவின் நிலைப்பாடு சர்வதேச நீதிமன்றம் வரைசெல்ல வேண்டும். அதன் மூலம் நீதி கிடைக்க வேண்டும்.

எங்களுக்குள் இருக்கும் பகைமைகளை மறந்து எங்களுக்காக மரித்த மக்கள்,போராளிகள் அனைவருக்காகவும், தொடர்ந்தும் தமிழர் பகுதிகளில்

இடம்பெற்ற பௌத்தமயமாக்கல், நிலஅபகரிப்பு தொடரும் அரசஅடக்கு முறைகளுக்கு எதிராக ஓரணியில் செயல்பட வேண்டும்.

புதிதாக வந்தஅரசாங்கம் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோருகின்ற போது அரசியல் கைதிகள் இல்லை எனக் கூறினார்கள்.

தற்போது அரசியல் கைதிகள் விடுதலை சம்பந்தமாக நாட்கள் செல்லும் என கூறியுள்ளது. ஆகவே,அரசியல் கைதிகள் இருக்கிறார்கள் என்பதைஇந்தஅரசுஒத்துக் கொண்டுள்ளது.

தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் கைதிகள் தொடர்பில் பேசுவதை கவனத்தில் கொள்ளவேண்டும். தேர்தல் காலங்களில் மாவட்டஅபிவிருத்திக்

குழுக் கூட்டங்கள் நடைபெறுகிறது. என்ன வேலைத்திட்டங்களை செய்யப் போகின்றோம் எனக் கூறுகிறார்கள்.

பாராளுமன்றத்தில் கூடுதலான ஆசனங்களை பெற எவ்வாறு செயற்பட்டார்களோ அதேபோல் வடக்கு,கிழக்கில் பல சபைகளை

கைப்பற்றும் நோக்கில் செயற்படுகிறார்கள் என தெரிகின்றது எனத்தெரிவித்தார்.

பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக கவனயீர்ப்பு
Posted in இலங்கை செய்திகள்

பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக கவனயீர்ப்பு

பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக கவனயீர்ப்பு

பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக கவனயீர்ப்பு ,நோன்பு பெருநாள் தினமாகிய திங்கட்கிழமை (31) அல் அக்ஸா கல்லூரியில் ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் தொழுகையை தொடர்ந்து பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவித்து பேரணி ஒன்று இடம் பெற்றது.

இஸ்ரேலுக்கு எதிரான இக் கண்டனப் பேரணியில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக பல கோசங்களையும் எழுப்பியிருந்தது டன் இதனை

திருகோணமலை மாவட்ட பள்ளிவாசல் சம்மேளன செயலாளர் எம்.எம்.மஹ்தி ஏற்பாடு செய்திருந்தார். இதன் போது பலஸ்தீன கொடியை ஏந்தியவாறு பலர் கலந்து கொண்டனர் .

இதனை தொடர்ந்து திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் கலந்து கொண்ட பலஸ்தீனத்துக்கு ஆதரவான மற்றுமொரு நிகழ்வும் கிண்ணியா குறிஞ்சாக்கேணி vc மைதானத்தில் இடம் பெற்றது.

இதன் போது கருத்து தெரிவித்த எம்.எம்.மஹ்தி பாலஸ்தீன மக்கள் பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கிக் கொண்டு புனிதமான இந்த நாளிலே

இருக்கிறார்கள்.இஸ்ரேல் இன அழிப்பு விடயத்தை செய்து கொண்டிருக்கின்றது. இதனை இந்த நாடு கண்டிக்க வேண்டும் என்பதுடன் ஆதரவாக குரல் கொடுக்க வேண்டும் .

அண்மையில் முஹம்மது ருஸ்தி எனும் இளைஞன் ஸ்டிக்கர் ஒட்டியதற்காக பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார் எனவே

ஜனாதிபதி இந்த விவகாரத்தில் தலையிட்டு உடனடியாக இளைஞனை விடுதலை செய்ய வேண்டும்.

பாலஸ்தீன மக்களுக்கு அநுர அரசாங்கம் குரல் கொடுக்க வேண்டும். பாலஸ்தீனர்களுக்கு தனி நாடு , தனி இராஜ்ஜியம் என்ற அடிப்படையில்

வழங்கப்பட வேண்டும் .இன அழிப்பை செய்யும் இஸ்ரேலியர்களுக்கு எதிராக மக்கள் கொந்தளிக்கும் நிலை காணப்படுகின்றது.

ஆகவே கைது செய்யப்பட்ட முஹம்மது ருஸ்தி விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதை மீண்டும் இங்கு வலியுறுத்துகின்றோம்.தற்போதைய

அரசாங்கமும் பாலஸ்தீன மக்களுக்கு குரல் எழுப்ப வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றேன் என்றார்.

10ஆவது குழந்தைக்கு தாயானார் 66 வயது பெண்
Posted in இலங்கை செய்திகள்

10ஆவது குழந்தைக்கு தாயானார் 66 வயது பெண்

10ஆவது குழந்தைக்கு தாயானார் 66 வயது பெண்

10ஆவது குழந்தைக்கு தாயானார் 66 வயது பெண் ,பெண்ணொருவர் தனது 66-வது வயதில் 10-வது குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

ஜெர்மனியின் பெர்லின் நகரைச் சேர்ந்த அலெக்சான்ட்ரா ஹில்டெப்ரான்ட் (66) பெர்லின் சுவர் அருங்காட்சியகத்தை நடத்தி வருகிறார். இவருக்கு கடந்த 1970-

களில் முதல் குழந்தை பிறந்தது. அதன் பிறகு அடுத்தடுத்து 8 குழந்தைகளை பெற்றார். 50 வயதை கடந்த பிறகும் குழந்தைகளை பெற்று வந்தார்.

அனைத்து குழந்தைகளும் அறுவை சிகிச்சை மூலமே பிறந்தன. இதில் முதல் குழந்தையான ஸ்வெட்லானாவுக்கு 46 வயதாகி விட்டது. 9-வது குழந்தையான கதரினாவுக்கு 2 வயதாகிறது.

இந்நிலையில், அலெக்சான்ட்ரா தனது 66-வது வயதில் 10-வது குழந்தையை கடந்த 19-ம் திகதி பெற்றெடுத்தார். ஆண் குழந்தையான அதற்கு பிலிப் என

பெயரிட்டுள்ளார். இத்தனைக்கும் இயற்கைவழியில்தான் இவர் கருத்தரித்திருக்கிறார்.

இதுகுறித்து அலெக்சான்ட்ரா கூறும்போது, “சத்தான உணவுகளை சாப்பிடுகிறேன். தினமும் ஒரு மணி நேரம் நீச்சல் பயிற்சி செய்கிறேன். 2 மணி

நேரம் ஓடுகிறேன். புகை மற்றும் மது பழக்கம் இல்லை. கருத்தடை சாதனங்களை பயன்படுத்தியதே இல்லை” என்றார்.

இந்தப் பெண் இவ்வளவு அதிக வயதில் குழந்தை பெற்றுக் கொண்டது ஒன்றும் புதிது அல்ல. கடந்த 2023-ம் ஆண்டு உகாண்டாவைச் சேர்ந்த சபினா

நமுக்வாயா என்ற பெண், 70-வது வயதில் ஐவிஎப் மூலம் இரட்டை குழந்தை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் எச் ஐ வி தொற்றாளர்கள் அதிகரிப்பு
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் எச் ஐ வி தொற்றாளர்கள் அதிகரிப்பு

இலங்கையில் எச் ஐ வி தொற்றாளர்கள் அதிகரிப்பு

இலங்கையில் எச் ஐ வி தொற்றாளர்கள் அதிகரிப்பு ,இலங்கையில் எச்.ஐ.வி. பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதாக தேசிய பாலியல் பரவும் நோய் மற்றும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம் தெரிவித்துள்ளது.

சமீப காலங்களில் நாட்டில் எச்.ஐ.வியுடன் வாழும் புதியவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக குறித்த திட்டம் சுட்டிக்காட்டியுள்ளது.

அதன்படி, 2024ஆம் ஆண்டில் மட்டும், புதிய எச்.ஐ.வியுடன் வாழும் 824 பேர் பதிவாகியுள்ளனர். அவர்களில் 718 பேர் ஆண்கள் என கூறியுள்ளது.

சமீபத்திய காலங்களில் 15-24 வயதுக்குட்பட்டவர்களில் புதிய எச்.ஐ.வியுடன் வாழும் மக்களின் எண்ணிக்கையிலும் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

அதன்படி, 2024ஆம் ஆண்டில் மட்டும், 15-24 வயதுக்குட்பட்டவர்களில் 115 பேர் புதிய எச்.ஐ.வி. தொற்றுக்குள்ளானவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும், 2024ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட எய்ட்ஸ் இறப்புகளின் எண்ணிக்கை 47 ஆகும். 2023 ஆம் ஆண்டில், எய்ட்ஸ் இறப்புகள் 20% குறைக்கப்பட்டுள்ளன.

இது குறித்த கூடுதல் தகவல்களை www.aidscontrol.gov.lk இல் காணலாம்.

அதிகம் கூச்சலிடுபவர்கள்தான் அதிகம் பயப்படுகிறார்கள் ஜனாதிபதி
Posted in இலங்கை செய்திகள்

அதிகம் கூச்சலிடுபவர்கள்தான் அதிகம் பயப்படுகிறார்கள் ஜனாதிபதி

அதிகம் கூச்சலிடுபவர்கள்தான் அதிகம் பயப்படுகிறார்கள் ஜனாதிபதி

அதிகம் கூச்சலிடுபவர்கள்தான் அதிகம் பயப்படுகிறார்கள் ஜனாதிபதி ,அரசாங்கத்திற்கு எதிராக இப்போது அதிகம் கூச்சலிடுபவர்கள்தான் அதிகம் பயப்படுகிறார்கள் என்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க கூறினார்.

இதேவேளை, மே மாதத்தில் அதிக எண்ணிக்கையிலான சர்ச்சைக்குரிய வழக்குகள் தாக்கல் செய்யப்படும் என்றும் ஜனாதிபதி கூறினார்.

வழக்குப் பதிவு செய்து வழக்கை விசாரித்த பிறகு குற்றவாளிகள் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்றும் கூறினார்.

இதுவரை மூன்று முன்னாள் அமைச்சர்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

பெலியத்தயில் இன்று நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தேசிய மக்கள் சக்தியின் முதலாவது பேரணியில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

“நாட்டை திவாலாக்கியவர்கள் மீண்டும் அரசாங்கங்களை அமைக்க வருகிறார்கள். யார் வேண்டுமானாலும் கனவு காணலாம். அவை வெறும் கனவுகள்தான். அவை ஒருபோதும் நிஜமாகாது.”

மூன்று முதல் நான்கு ஆண்டுகளில், பிராந்தியத்தில் மிகக் குறைந்த மின்சாரக் கட்டணங்களைக் கொண்ட நாடாக இலங்கை மாறும் என்றும் ஜனாதிபதி கூறினார்

ரணில் வீடு எரிப்பு பிரதி அமைச்சருக்கு தொடர்பில்லை
Posted in இலங்கை செய்திகள்

ரணில் வீடு எரிப்பு பிரதி அமைச்சருக்கு தொடர்பில்லை

ரணில் வீடு எரிப்பு பிரதி அமைச்சருக்கு தொடர்பில்லை

ரணில் வீடு எரிப்பு பிரதி அமைச்சருக்கு தொடர்பில்லை ,முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இல்லத்திற்கு தீ வைத்த சம்பவத்தில் தொடர்புடையவராக கருதப்படும் வழக்கில், இளைஞர் விவகார பிரதி

அமைச்சர் எரங்க குணசேகர சந்தேக நபராகப் பெயரிடப்பட்டதாகக் கூறப்படும் செய்திகளை இளைஞர் விவகார அமைச்சகம் மறுத்துள்ளது.

கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை 9ஆம் திகதி அன்று நடந்த சம்பவம் தொடர்பாக குணசேகர சந்தேக நபராக அடையாளம் காணப்படவில்லை

என்றும், பிடியாணை பிறப்பிக்கப்படவில்லை என்றும் துணை அமைச்சரின் செய்தித் தொடர்பாளர் தெளிவுபடுத்தினார்.

“வழக்கை கையாண்ட கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தைத் தொடர்பு கொண்டபோது, அத்தகைய பிடியாணை எதுவும் பிறப்பிக்கப்படவில்லை என்பதை அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

தீயை அணைக்கும் போது தீயணைப்புப் படையினர் தடுத்தனர் என்ற கூற்று முற்றிலும் தவறானது” என்றும் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

பெண் வேட்பாளர்களுக்கு சிறப்புத் திட்டம்
Posted in இலங்கை செய்திகள்

பெண் வேட்பாளர்களுக்கு சிறப்புத் திட்டம்

பெண் வேட்பாளர்களுக்கு சிறப்புத் திட்டம்

பெண் வேட்பாளர்களுக்கு சிறப்புத் திட்டம் உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்க சிறப்புத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இணையம் மற்றும் சமூக ஊடக

தளங்களில் நிகழும் வன்முறைகள் குறித்து சிறப்பு கவனம் செலுத்தப்படும் என்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர் சரோஜா சாவித்திரி பால்ராஜ் தெரிவித்தார்.

பெண் வேட்பாளர்கள் பெரும்பாலும் வன்முறை, அடக்குமுறை, அவமதிப்பு மற்றும் பாலியல் துன்புறுத்தலை ஒன்லைனில் எதிர்கொள்வதாக அவர் குறிப்பிட்டார்.

இதுபோன்ற சம்பவங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான ஒரு திட்டம் பல தரப்பினரின் ஈடுபாட்டுடன் செயல்படுத்தப்படுகிறது என்றார்.

இந்த முயற்சிக்கு “அவர்களுடைய பயணத்தை ஆதரிப்போம்” (Let’s Support Her Journey) என்று பெயரிடப்பட்டுள்ளது.

கடற்கரை வீதியில் புதிய மின்விளக்குகள்
Posted in இலங்கை செய்திகள்

கடற்கரை வீதியில் புதிய மின்விளக்குகள்

கடற்கரை வீதியில் புதிய மின்விளக்குகள்

கடற்கரை வீதியில் புதிய மின்விளக்குகள் ,கல்முனை மாநகர சபைக்குட்பட்ட கடற்கரைப் பிரதேசங்களில் மக்கள் ஒன்று கூடுகின்ற பல முக்கிய இடங்கள் பிரகாசமிக்க மின்விளக்குகளால் ஒளியூட்ட பட்டுள்ளன.

நோன்புப் பெருநாளை முன்னிட்டு கடற்கரைப் பகுதிகளுக்கு வருகை தருகின்ற பொது மக்களின் பாதுகாப்பு மற்றும் நலன்களைக் கருத்தில்

கொண்டும் குற்றச் செயல்களை தடுக்கும் நோக்கிலும் கல்முனை மாநகர சபை இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டதாக மாநகர ஆணையாளர் ஏ.ரி.எம். றாபி தெரிவித்தார்.

இதன் பிரகாரம் விஷேடமாக ஒரு தொகுதி பிரகாச மின் விளக்குகள் கொள்வனவு செய்யப்பட்டு, அவை கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட சாய்ந்தமருது தொடக்கம் பெரிய நீலாவணை வரையான கடற்கரைப்

பிரதேசங்களில் மக்கள் பொழுதுபோக்கிற்காக ஒன்று கூடுகின்ற பகுதிகளில் துரிதமாக பொருத்தப்பட்டு, ஒளியூட்ட பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

கடற்கரை வீதியில் ஏற்கனவே பொருத்தப்பட்டிருக்கும் தெரு விளக்குகளுக்கு மேலதிகமாக கடற்கரைப் பகுதிகளை நோக்கியதாக இந்த புதிய மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முதன்முதலாக இலங்கை டின் மீன் ஏற்றுமதி
Posted in இலங்கை செய்திகள்

முதன்முதலாக இலங்கை டின் மீன் ஏற்றுமதி

முதன்முதலாக இலங்கை டின் மீன் ஏற்றுமதி

முதன்முதலாக , இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் டின் மீன் ஏற்றுமதி தொகுதி நேற்று மதுரங்குளியவில் உள்ள ஓஷன் ஃபுட் தொழிற்சாலை வளாகத்தில் அதிகாரப்பூர்வமாக கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வு மீன்பிடி, நீர்வளம் மற்றும் சமுத்திர வள அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் ரத்ன கமகே தலைமையில் நடைபெற்றது.

இந்த பதிவு செய்யப்பட்ட மீன்கள் ஐக்கிய அரபு இராச்சியத்திறகு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் டின் மீன்கள் சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்படுவது இதுவே முதல் முறை என்று அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் கலந்து கொள்கிறார் பிரதமர்
Posted in இலங்கை செய்திகள்

பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் கலந்து கொள்கிறார் பிரதமர்

பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் கலந்து கொள்கிறார் பிரதமர்

பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் கலந்து கொள்கிறார் பிரதமர் ,ஆறாவது பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு துணை

அமைச்சர் அருண் ஹேமசந்திர ஆகியோர் இந்த வார இறுதியில் தாய்லாந்து செல்வார்கள் என த சண்டே டைம்ஸ் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த உச்சிமாநாடு ஏப்ரல் 3 மற்றும் 4 ஆகிய திகதிகளில் பாங்கொக்கில் “வளமான, நெகிழ்ச்சியான மற்றும் வெளிப்படையான” என்ற கருப்பொருளின் கீழ் நடைபெறும். வங்காள விரிகுடாவின் பல்துறை தொழில்நுட்ப மற்றும்

பொருளாதார ஒத்துழைப்புக்கான முன்முயற்சி (BIMSTEC) உறுப்பு நாடுகளின் தலைவர்கள் வர்த்தகம், தொடர்பு, பாதுகாப்பு மற்றும் காலநிலை மீள்தன்மை

ஆகியவற்றில் பிராந்திய ஒத்துழைப்பு குறித்து கலந்துரையாட சந்திக்க உள்ளனர்.

பிரதமர் அமரசூரிய பதவியேற்ற பிறகு மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும், இது அவரது ஆரம்பகால சர்வதேச ஈடுபாடுகளில் ஒரு முக்கிய தருணத்தைக் குறிக்கிறது.

இளங்குமரன் எம்பியுடன் இந்திய மீனவர்கள் சந்திப்பு
Posted in இலங்கை செய்திகள்

இளங்குமரன் எம்பியுடன் இந்திய மீனவர்கள் சந்திப்பு

இளங்குமரன் எம்பியுடன் இந்திய மீனவர்கள் சந்திப்பு

இளங்குமரன் எம்பியுடன் இந்திய மீனவர்கள் சந்திப்பு ,இலங்கை – இந்திய மீனவர் விவகாரம் தொடர்பில் இந்திய மீனவர் பிரதிநிதிகள் பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரனைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

இந்தச் சந்திப்பின் பின்னர் இளங்குமரன் எம்.பி. ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடுகையில்,

இலங்கைக்கு வந்துள்ள இந்திய மீனவர் சங்கப் பிரதிநிதிகள் மீனவர் பிரச்சினை தொடர்பில் என்னைச் சந்தித்து கலந்துரையாடி இருந்தனர்.

இந்தச் சந்திப்பில் இழுவைமடித் தொழிலை தாங்கள் கைவிடுவதாக எம்மிடம் கூறியிருக்கின்றார்கள். இது அவர்கள் எமக்குக் காட்டிய நல்லெண்ண சமிக்ஞையாக நாங்கள் பார்க்கின்றோம்.

அதற்கான நடைமுறைச் செயற்பாடுகள் தொடர்பிலும் இங்கு ஆராய்ந்துள்ளனர். அவர்கள் இழுவைமடித் தொழிலைக் கைவிட்டால் அவர்களுக்கான மாற்றுத் தொழில் ஏற்பாடுகளை அந்த நாட்டு அரசு செய்ய வேண்டும்.

குறிப்பாக இந்த இழுவைமடித் தொழிலாளர்கள் அந்த நாட்டு அரசிடம் கடலட்டைப் பண்ணை வைப்பதற்கு அனுமதி கேட்டுள்ளனர். உண்மையில் அவர்களது இந்த மாற்று முயற்சி நியாயமானது.

அவர்கள் சொல்வது போன்று இழுவைமடித் தொழிலை அவர்களாகவே நிறுத்தத் தீர்மானித்துள்ளமை நல்ல விடயம் என்றார்

ஆனையிறவு உப்பு தொழிற்சாலை திறப்பு
Posted in இலங்கை செய்திகள்

ஆனையிறவு உப்பு தொழிற்சாலை திறப்பு

ஆனையிறவு உப்பு தொழிற்சாலை திறப்பு

ஆனையிறவு உப்பு தொழிற்சாலை திறப்பு தேசிய உப்பு நிறுவனத்தின் தலைவர் கயான் வெல்லால கூறுகையில், இந்த தொழிற்சாலை ஒரு மணி நேரத்திற்கு 5 மெட்ரிக் தொன் உப்பை உற்பத்தி செய்கிறது என்றார்.

இந்த உப்பள நிறுவனத்தால் பல மில்லியன் வருமானம் ஈட்டி கொள்வதுடன் பல நூறு பேருக்கு வேலை வாய்ப்பும் கிடைக்க பெற்றுள்ளது .

கிளிநொச்சி மாவட்டத்தில் இந்த உப்பள கூட்டு தாபனம் முதன்மையான ஒன்று என்பது குறிப்பிட தக்கது .

சுன்னாகம் விபத்தில் வாலிபர் பலி
Posted in இலங்கை செய்திகள்

சுன்னாகம் விபத்தில் வாலிபர் பலி

சுன்னாகம் விபத்தில் வாலிபர் பலி

சுன்னாகம் விபத்தில் வாலிபர் பலி ,யாழ்ப்பாணம் – சுன்னாகம் பகுதியில் இன்று (29) இடம்பெற்ற விபத்தில் இளைஞர் உயிரிழந்ததுடன் ஒருவர் காயமடைந்தார்.

ஏழாலை தெற்கு மயிலங்காட்டைச் சேர்ந்த 19 வயதான சிவராசா பிரவீன் என்பவரே உயிரிழந்தார்.

சுன்னாகம், கந்தரோடை பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ஏற்பட்டது.

சம்பவம் தொடர்பாக சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

தூதரகங்களுக்கு கைமாறும் சொகுசு வீடுகள்
Posted in இலங்கை செய்திகள்

தூதரகங்களுக்கு கைமாறும் சொகுசு வீடுகள்

தூதரகங்களுக்கு கைமாறும் சொகுசு வீடுகள்

தூதரகங்களுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான அமைச்சர்களின் சொகுசு வீடுகளை வழங்குவதில் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

முப்பதுக்கும் மேற்பட்ட வெவ்வேறு நிறுவனங்கள், அமைச்சர்களின் சொகுசு வீடுகளை வாடகைக்கு விடுமாறு பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளாட்சி அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளன.

இவற்றில் தூதரகங்கள், பல்வேறு அமைச்சுகள், நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் அடங்கும் என்று அமைச்சின் வட்டாரங்கள் தெரிவித்தன.

மாணவர் விடுதிகளை நடத்துவதற்கு அந்த அமைச்சுப் பணியாளர் சொகுசு வீடுகளை வழங்குமாறு பல்கலைக்கழகங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

இது தவிர, பல நீதிபதிகள் தங்களுக்கு அமைச்சர்களின் உத்தியோகபூர்வ இல்லங்களை வழங்குமாறு கோரியுள்ளதாகவும் அமைச்சு கூறியுள்ளது.

இந்த விவகாரத்தை ஆராய்ந்த குழு, இந்த அமைச்சர்களின் குடியிருப்புகளை பொருளாதார ரீதியாக உற்பத்தி செய்யும் திட்டத்திற்குப் பயன்படுத்துமாறு ஜனாதிபதிக்கு பரிந்துரைத்துள்ளது.

அந்தக் குழுவின் அறிக்கை சமீபத்தில் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

தற்போதைய அரசாங்க அமைச்சர்கள், அமைச்சர் வீடுகளை ஏற்றுக்கொள்வதில்லை என்ற கொள்கை முடிவை எடுத்துள்ளனர்.

கொழும்பில் முப்பத்தைந்து அமைச்சர்களின் சொகுசு வீடுகள் உள்ளன.

கொழும்பு சிறைச்சாலையில் இடமில்லை
Posted in இலங்கை செய்திகள்

கொழும்பு சிறைச்சாலையில் இடமில்லை

கொழும்பு சிறைச்சாலையில் இடமில்லை

கொழும்பு விளக்கறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், அங்கு நெரிசல் ஏற்பட்டுள்ளது.

குறிப்பிட்ட சிறைச்சாலையில் 650 கைதிகளை அடைக்க முடியும் என்றால், தற்போது சுமார் 2,100 பேர் அங்கு அடைக்கப்பட்டுள்ளனர் என்று, சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பு விளக்கறியல் சிறைச்சாலையில் பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வியாளேந்திரன் ஆகியோரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், மற்ற சிறைச்சாலைகளில் நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிகமான கைதிகள் தற்போது அடைத்து

வைக்கப்பட்டுள்ளதாக, சிறைச்சாலை வட்டாரங்கள் மேலும் தெரிவித்த்துள்ளன.

வன்னி மைந்தன் தளம் ஊடாக யாத்திரிகளுக்கு தேனீர் ஆகாரங்கள்
Posted in இலங்கை செய்திகள்

வன்னி மைந்தன் தளம் ஊடாக யாத்திரிகளுக்கு தேனீர் ஆகாரங்கள்

வன்னி மைந்தன் தளம் ஊடாக யாத்திரிகளுக்கு தேனீர் ஆகாரங்கள்

வன்னி மைந்தன் தளம் ஊடாக யாத்திரிகளுக்கு தேனீர் ஆகாரங்கள் ,வன்னி மைந்தன் தளம் ஊடாக பல மாவட்டங்களில் இருந்து வவுனியா கல்வாரி மலை நோக்கி வருகை தந்த நடை பாதை யாத்திரிகளுக்கு தேனீர் ஆகாரங்கள் வழங்கப்பட்பது

1500க்கும் மேற்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டது.இதற்கான நிதியை இன்று பிறந்த நாள் கொண்டாடும் லண்டனை சேர்ந்த ராஜ் அண்ணா மற்றும் ராசன் அவர்கள் வழங்கிய நிதி பங்களிப்பில் இடம்பெற்றுள்ளது .

நிதி உதவி மறிய ரெக்க்ஷன் 15000/மற்றும் ராஜ் அண்ணா 10.656/ ரூபா பங்களிப்பில் வழங்கி வைக்க பட்டுள்ளது .

இந்த பெரும் உதவிகளை வழங்கிய ராஜ் அண்ணா மற்றும் ரக்சன் அகியோருக்கு எதிரி இணையத்தின் நெஞ்சு நிறைந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம் .

வன்னி மைந்தன் தளம் ஊடாக யாத்திரிகளுக்கு தேனீர் ஆகாரங்கள்
வன்னி மைந்தன் தளம் ஊடாக யாத்திரிகளுக்கு தேனீர் ஆகாரங்கள்