முல்லைத்தீவில் கிணற்றில் இருந்து ஆயுதங்கள் மீட்பு

Spread the love

முல்லைத்தீவில் கிணற்றில் இருந்து ஆயுதங்கள் மீட்பு

முல்லைத்தீவு – தீர்த்தக்கரை பகுதியில் உள்ள கிணற்றில் இருந்து, 1,529 துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன.

நேற்று (16) மாலை, தீர்த்தக்கரை பகுதியில் உள்ள கிணறு ஒன்றை துப்புரவு செய்யும் போது, வெடிபொருட்கள் இருப்பதாக மக்கள் தகவல் கொடுத்துள்ளதை தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு

விரைந்த விசேட அதிரடிப்படையினர், கிணற்றை சுத்தம் செய்பவர்களை தொடர்ச்சியாக துப்புரவு செய்யுமாறு கூறியுள்ளார்கள்.

கிணற்றை துப்புரவு செய்துகொண்டிருக்கும் போது, துப்பாக்கி ரவைகள் தொடர்ச்சியாக கிணற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.

இதன் போது, கிணற்றில் இருந்து 1,529 துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன.

இவை முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

    Author: நலன் விரும்பி

    Leave a Reply