Posted in Uncategorized

ஆறுபேர் மீது கத்தி வெட்டு தாக்குதல்

ஆறுபேர் மீது கத்தி வெட்டு தாக்குதல்

அமெரிக்கா Philadelphia பகுதியில் நபர் ஒருவர் அங்கிருந்த ஆறு மக்கள் மீது சரமாரி

கத்தி வெட்டு தாக்குதலை நடத்தினார் ,இதில் பெண்கள் உள்ளிட்டவர்கள் பாதிக்க பட்டுள்ளனர்

நெஞ்சு ,நெத்தி ,கழுத்து கை ,உள்ளிட்ட பகுதிகளில் பலத்த வெட்டு காயங்கள்

ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன


குறித்த சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

Posted in Uncategorized

உக்கிரேனில் உள்ள அமெரிக்கர்களை வெளியேற – அமெரிக்கா அவசர உத்தரவு

உக்கிரேனில் உள்ள அமெரிக்கர்களை வெளியேற – அமெரிக்கா அவசர உத்தரவு

பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் முடிவதற்குள் ரஷ்யா உக்ரைன் மீது படையெடுக்கும் என்று அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் குறிப்பிட்டுள்ளார்.

உக்ரைனில் உள்ள அமெரிக்கர்கள் 48 மணி நேரத்திற்குள் வெளியேற வேண்டும்: வெள்ளை மாளிகை கெடு
ஜேக் சல்லிவன், விளாடிமிர் புடின்

அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அமைப்பில் உக்ரைனை சேர்ப்பதற்கும் ரஷியா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. கடந்த ஆண்டு நவம்பர் முதல் உக்ரைன் எல்லையில்

ரஷியா 1 லட்சத்திற்கும் அதிகமான வீரர்களை குவித்துள்ளது. இதனால்,உக்ரைன் மீது ரஷியா படையெடுக்கலாம் என்ற அச்சம் நிலவி வருகிறது.

இந்நிலையில் அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் பேசியதாவது:

உக்ரைனில் உள்ள அமெரிக்கர்கள் 24 முதல் 48 மணி நேரத்திற்குள் வெளியேற வேண்டும்.உளவுத்துறை மூலம் நமக்குக் கிடைத்த தகவல்கள்படி, புடின் தனது

படைகளை அதிகரிக்கும் விதம், அவற்றை (உக்ரைனில்) பயன்படுத்த என்பது எங்களுக்குத் தெளிவாகத் தெரிகிறது.

அது விரைவான காலக்கட்டத்தில் நடக்கும்.பெய்ஜிங் ஒலிம்பிக்ஸ் முடிவதற்குள் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், உக்ரைன் மீது இராணுவ நடவடிக்கை மற்றும் படையெடுப்புக்கு உத்தர விடுவார்.

எப்படியும் நாங்கள் தயாராக இருக்கிறோம்.அவர் இராஜ தந்திரத்தில் ஈடுபட விரும்பினால், நாங்கள் ஒரு இராஜதந்திர பாதை நோக்கி செல்ல விரும்புகிறோம். அவர்

படையெடுப்பை தேர்வு செய்தால், தீர்க்கமாகப் பதிலளிப்பதற்காக எங்கள் கூட்டாளிகளுடன் இணைந்து பணியாற்றுவோம்.

ஜெர்மனி, போலந்து, ஆர்மீனியா நாடுகளில் அமெரிக்கப் படைகள் நிலை நிறுத்தப்படுவது உக்ரைனில் ரஷ்யாவை எதிர்த்து போரிடுவதற்காக அல்ல. உக்ரேனிய

எல்லைக்கு வரும் புதிய படைகள் உட்பட ரஷ்ய ராணுவ விரிவாக்கத்தின் அறிகுறிகளை நாங்கள் தொடர்ந்து காண்கிறோம். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்

    அமெரிக்கா இராணுவம்
    Posted in Uncategorized

    விரட்டி தாக்க படும் அமெரிக்கா இராணுவம்

    விரட்டி தாக்க படும் அமெரிக்கா இராணுவம் – அதிர்ச்சியில் இராணுவ தலைமை

    ஈராக் Samawah-al-Diwaniyah பகுதியில் பயணித்து கொண்டிருந்த அமெரிக்கா

    இராணுவத்தின் இரண்டு தொடர் அணிகளை இலக்கு வைத்து சமவேளை ஒருங்கிணைத்த தாக்குதல் நடத்த பட்டுள்ளது

    இதில் அமெரிக்கா முப்படைகளின் இராணுவ கவச வண்டிகள் சேதமாகியுள்ளன

    தொடர்ந்து அமெரிக்கா இராணுவம் மீது இடைவிடாத தாக்குதல்கள் நடத்த பட்டு

    வருகின்றமையும் ,இந்த தாக்குதல் வீச்சு வேகம் பிடித்துள்ள நிலையில் ஈராக்கை விட்டு

    அமெரிக்கா படைகள் வெளியேறும் நிலை
    ஏற்பட்டுள்ளதாக சர்வதேச இராணுவ நிபுணர்கள் கருத்துரைத்து வருகின்றனர்

    Posted in Uncategorized

    தற்கொலை தாக்குதல்- 4பேர் மரணம் – 10 பேர் காயம்

    தற்கொலை தாக்குதல்- 4பேர் மரணம் – 10 பேர் காயம்

    சோமாலிய தலைநகர் Mogadishu பகுதியில் நடத்த பட்ட தற்கொலை தாக்குதலில் சிக்கி

    நால்வர் சம்பவ இடத்தில பலியாகினர் ,மேலும் பத்து பேர் படுகாயமடைந்துள்ளனர்

    பாரளுமன்ற தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் ,இதனை சீர்குலைக்கும் முகமாக இந்த

    தாக்குதல்கள் நடத்த பட்டு வருவதாக அரச இராணுவம் தெரிவித்துள்ளது

    Posted in Uncategorized

    சவூதி உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய போராளிகள்

    சவூதி உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய போராளிகள்

    ஏமான் நாட்டில் அரச படைகளுக்கு எதிராக போராடி வரும் கவுதிய கிளர்ச்சி படைகள்

    சவூதி நாட்டின் உளவு விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்தியுள்ளதாக தெரிவித்துள்ளனர்

    குறித்த விமானமானது Hajjah மாகாணத்தின் மேலாக பறந்து கொண்டிருந்த பொழுதி

    சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

    குறித்த போராளிகள் மீது சவுதி போர் விமானங்கள் தொடர் தாக்குதலை நடத்தி வரும்

    நிலையில் இந்த பதிலடி தாக்குதல் நிகழ்த்த பட்டுள்ளது

      Posted in Uncategorized

      ஈரான் இராணுவத்தில் 1,450 km பாயும் புதிய ஏவுகணை

      ஈரான் இராணுவத்தில் 1,450 km பாயும் புதிய ஏவுகணை

      ஈரானிய இராணுவத்தில் தற்போது புதிதாக தயாரிக்க பட்ட ஏவுகணை ஒன்று இணைக்க பட்டுள்ளது
      இதன் தூர அவீச்சு 1,450 km ஆக உள்ளது

      இவை கப்பல்கள் மற்றும் விமானங்கள் மூலமும் தாக்குதல் நடத்த வல்லமை என தெரிவிக்க படுகிறது


      இந்த காட்ச்சிகளை ஈரான் வெளியிட்டு அமெரிக்கா ,இஸ்ரேலுக்கு கொதிப்பை கிளப்பியுள்ளது

      Posted in Uncategorized

      கழுத்தில் சிக்கிய டயருடன் 6 ஆண்டுகளாக அவதிப்பட்ட முதலை

      கழுத்தில் சிக்கிய டயருடன் 6 ஆண்டுகளாக அவதிப்பட்ட முதலை

      முதலையின் கழுத்தில் இருந்து டயரை அகற்றும் நபருக்கு சன்மானம் வழங்கப்படும் என கடந்த 2020-ம் ஆண்டு உள்ளூர் நிர்வாகம் அறிவித்தது.

      கழுத்தில் சிக்கிய டயருடன் 6 ஆண்டுகளாக அவதிப்பட்ட முதலைக்கு விடிவு
      கழுத்தில் சிக்கிய டயருடன் 6 ஆண்டுகளாக அவதிப்பட்ட முதலைக்கு விடிவு

      இந்தோனேசியாவில் சுலாவேசி மாகாணம் பலூ நகரில் உள்ள ஆற்றில் வாழ்ந்து வரும் ஒரு முதலையின் கழுத்தில் 6 ஆண்டுகளுக்கு முன்பு இருசக்கர வாகனத்தின் டயர் சிக்கியது. முதலை வளரும் போது டயர் கழுத்தை இறுக்கி முதலை இறக்க கூடும் என

      மக்கள் அச்சப்பட்டனர். இதனால் முதலையின் கழுத்தில் சிக்கிய டயரை அகற்ற உள்ளூர் நிர்வாகம் பல்வேறு முயற்சிகளை எடுத்தது. ஆனால் துரதிருஷ்டவசமாக அந்த

      முயற்சிகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தது. முதலையின் கழுத்தில் இருந்து டயரை அகற்றும் நபருக்கு சன்மானம் வழங்கப்படும் என கடந்த 2020-ம் ஆண்டு உள்ளூர் நிர்வாகம் அறிவித்தது.

      இருப்பினும், முதலை மீதுள்ள அச்சம் காரணமாக யாரும் பெரிதாக அதில் ஆர்வம் காட்டவில்லை. முயற்சித்த ஒரு சிலருக்கும் தோல்வியே கிடைத்தது. இந்த நிலையில்

      உள்ளூரை சேர்ந்த டிலி (வயது 35) என்ற விலங்குகள் நல ஆர்வலர் பிரத்யேக பொறி ஒன்றினை அமைத்து அதில் கோழியாக இரையாக வைத்து, முதலையை பிடித்தார்

      . அதன் பின்னர் உள்ளூர் மக்கள் மற்றும் தீயணைப்பு வீரர்களின் உதவியோடு முதலையின் கழுத்தில் இருந்து டயரை வெட்டி எடுத்தார். அதனை தொடர்ந்து முதலை மீண்டும் ஆற்றில் விடப்பட்டது.

        Posted in Uncategorized

        பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் வெடிகுண்டு வீச்சு

        பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் வெடிகுண்டு வீச்சு

        பா.ஜனதா அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்த நிலையில் மிகவும் துணிச்சலாக பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் கட்சி நிர்வாகிகள் மற்றும் போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

        பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் வெடிகுண்டு வீச்சு- போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்த நிலையில் துணிகரம்
        பாஜக அலுவலகமான கமலாலயத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட இடத்தை படத்தில் காணலாம்.
        இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க “Play” பட்டனை கிளிக் செய்யவும்.

        தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில் தேர்தல் களம் களைகட்டி உள்ளது. அனைத்து கட்சித் தலைவர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

        நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறி பா.ஜனதா தனித்து போட்டியிடுகிறது. அந்த கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மாநில தலைவர் அண்ணாமலை தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

        இந்தநிலையில் தி.நகர் வைத்தியராமன் தெருவில் உள்ள பா.ஜனதா கட்சியின் மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

        பா.ஜனதா தலைமை அலுவலகத்தில் 24 மணிநேரமும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கும். துப்பாக்கி ஏந்திய காவலர்கள் சுழற்சி முறையில் பணியில் இருப்பார்கள். நேற்று இரவும் அதே போன்று போலீஸ்காரர் ஒருவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தார்.

        இந்தநிலையில் நள்ளிரவு 1.30 மணியளவில் வாலிபர் ஒருவர் அங்கு மோட்டார் சைக்கிளில் வந்தார்.

        பா.ஜனதா அலுவலகம் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்திய அந்த வாலிபர் திடீரென தான் மறைந்து வைத்து இருந்த 3 பெட்ரோல் குண்டுகளை எடுத்து சரமாரியாக பா.ஜனதா அலுவலகம் மீது வீசினார்.

        இதில் 3 பெட்ரோல் குண்டுகளும் அலுவலக வளாகத்திற்குள் விழுந்து ‘டமார், டமார்’ என்ற சத்தத்துடன் வெடித்து சிதறின.

        பெட்ரோல் குண்டுகள் வெடித்த போது அதில் இருந்து தீப்பிடித்தது. இதில் பா.ஜனதா அலுவலக வளாகத்தில் உள்ள சுவர்கள், தரை ஆகியவை லேசாக சேதம் அடைந்தன.

        தீப்பிடித்ததால் சுவர்கள் மற்றும் தரையில் போடப்பட்டு இருந்த டைல்ஸ் ஆகியவை கருப்பு நிறத்தில் மாறின. இதற்கிடையே பெட்ரோல் குண்டுகளை வீசிய நபர் தனது மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார்.

        பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர் திடீரென ஒரு வாலிபர் வந்து பெட்ரோல் வெடிகுண்டுகளை வீசியதைப் பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்தார். அவர் பெட்ரோல் குண்டுகளை வீசிய வாலிபர் யார் என்று பார்த்து பிடிக்க முயற்சி செய்த நிலையில் அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

        இதற்கிடையே பக்கத்து வீடுகளில் இருந்த பாதுகாவலர்களும், அக்கம் பக்கத்தினரும் பா.ஜனதா அலுவலகம் நோக்கி ஓடி வந்தனர்.

        இதுபற்றி தகவல் கிடைத்ததும் நள்ளிரவில் பா.ஜனதா நிர்வாகிகளும், கட்சி அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். பா.ஜனதா தேர்தல் பொறுப்பாளரான கராத்தே தியாகராஜனும் விரைந்து வந்தார். போலீசாரும் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.

        பெட்ரோல் குண்டு வீசப்பட்ட இடத்தில் தடயங்களை சேகரிப்பதற்காக தடயவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் பா.ஜனதா அலுவலக வளாகத்தில் சிதறிக் கிடந்த பெட்ரோல் குண்டு பாகங்களை சேகரித்து அதனை ஆய்வு செய்தனர்.

        பெட்ரோல் வெடிகுண்டு வீசிய சம்பவத்தை கண்டித்து பாஜகவினர் போராட்டம் நடத்தினர்.

        அதில் இருந்த தடயங்களையும் சேகரித்தனர். பெட்ரோல் குண்டாக பயன்படுத்தப்பட்ட கண்ணாடி பாட்டில் துண்டுகள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன. அவற்றையும் தடயவியல் நிபுணர்கள் சேகரித்தனர்.

        தடயவியல் சோதனை முடிந்த பிறகு பாதுகாப்பு பணிக்கு வந்த போலீசார் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட இடத்தை தண்ணீர் ஊற்றி கழுவி சுத்தப்படுத்தினார்கள்.

        பா.ஜனதா அலுவலகத்தில் திரண்ட கட்சி நிர்வாகிகள் நடந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.

        இந்தநிலையில் இன்று காலை 9 மணியளவில் பா.ஜனதா அலுவலகம் முன்பு நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அப்போது பெட்ரோல் குண்டு வீசிய நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோ‌ஷம் எழுப்பினார்கள்.

        இதன் பிறகு நிர்வாகிகள் ஒன்றுகூடி அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி ஆலோசனையும் நடத்தினார்கள்.

        பாஜக அலுவலகம்

        பா.ஜனதா அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்த நிலையில் மிகவும் துணிச்சலாக பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் கட்சி நிர்வாகிகள் மற்றும் போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

        இந்த சம்பவத்தை தொடர்ந்து பா.ஜனதா அலுவலகத்தில் கண்காணிப்பை அதிகப்படுத்த உயர் போலீஸ் அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். இதன்படி பா.ஜனதா அலுவலகம் முன்பு இன்று காலை முதல் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

        Posted in Uncategorized

        பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பான திருத்தம்

        இலங்கையில் இருந்து வந்த பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பான திருத்தம்

        பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

        எனினும் இதில் எவ்விதமான மாற்றம் ஏற்படுத்த பட்டுள்ளது என்பது தொடபில் இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை

          Posted in Uncategorized

          மகன் மரணம் – தாய், தந்தை கைது

          மகன் மரணம் – தாய், தந்தை கைது

          10 வயதான சிறுவன் மர்மமான முறையில் மரணமடைந்த சம்பவம் தொடர்பில், அச்சிறுவனின் தாய், தந்தை மற்றும் பாட்டி ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

          அச்சிறுவனின் சடலம், நீர்​கொழும்பு, படல்கம ஆண்டிபொலவில் உள்ள அவருடைய வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.

          அந்த வீட்டில் துர்நாற்றம் வீசுவதாக, கிடைத்த தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, அவ்வீட்டின் அறையொன்றுக்குள் இருந்து சிறுவனின் சடலம் நேற்று முன்தினம் (09) மாலை மீட்கப்பட்டுள்ளது.

          தொண்டையில் சளி சிக்கியமையால், அச்சிறுவன் கடந்த 7ஆம் திகதியன்று நோய்வாய்ப்பட்டுள்ளார்.

          அந்த நோயை சுகப்படுத்துவதற்காக அவருடைய பெற்றோர், தாங்கள் நம்பும் சமயத்தின் அடிப்படையில் தியானம் செய்துள்ளனர்.

          அந்த தியானத்தின் ​போதே சிறுவன் மரணமடைந்துள்ளார். எனினும், அவரை உயிர்பிப்பதற்காக, தொடர்ச்சியாக தியானம் செய்துள்ளனர் என்றும் விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.

          அவரை சுகப்படுத்துவதற்கு வைத்தியசாலையில் அனுமதிக்கவில்லை. இந்நிலையிலேயே தாய், தந்​தை மற்றும் பாட்டி ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

          இதேவேளை, கைது செய்யப்பட்ட மூவரையும் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்த படல்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்

            Posted in Uncategorized

            சிரியா மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

            சிரியா மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

            சிரியா மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்ககுதல் நடத்தியுள்ளது சிரியா தலைநகரை

            இலக்கு வைத்து நடத்த பட்ட இந்த ஏவுகணைகளை தாம் சுட்டு வீழ்த்தியுள்ளதாக சிரியா இராணுவம் தெரிவித்துள்ளது

            இஸ்ரேல் வலிந்து தாக்குதல்களை தொடராக நடத்திய வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது

              Posted in Uncategorized

              மனைவியின் தலையை வெட்டி வீதியில் உலவிய கணவன்

              மனைவியின் தலையை வெட்டி வீதியில் உலவிய கணவன்

              இதுபோன்ற நிகழ்வுகளைத் தடுக்க விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு அதிகாரிகளுக்கு ஈரான் மகளிர் விவகாரங்களுக்கான துணைத் தலைவர் தெரிவித்துள்ளார்.

              மனைவியின் துண்டிக்கப்பட்ட தலையுடன் தெருவில் நடந்த நபர் – ஈரானில் வைரலான வீடியோ

              விபச்சாரத்தில் ஈடுபட்டதாக கூறி தனது இளம் மனைவியின் துண்டிக்கப்பட்ட தலையுடன் தெருவில் நடந்த நபர் குறித்த வீடியோ ஈரான் நாட்டின் சமூக வலைதளங்களில் பரவியது. இது அந்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

              அந்த வீடியோவை ஆய்வு செய்த போலீசார், மோனா ஹெய்டாரி என்ற 17 வயது பெண்ணின் தலை அது என்பதை கண்டறிந்தனர். ஈரானின் தென்மேற்கு நகரமான

              அஹ்வாஸில் அந்த பெண் வாழ்ந்து வந்த இடத்தில் சோதனை நடத்தினர்.

              அப்போது அங்கு மறைந்திருந்த அந்த பெண்ணின் கணவர் மற்றும் மைத்துனர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடைபெற்று

              வருகிறது. இந்நிலையில் இந்த கொடூர சம்பவம் தொடர்பாக ஈரானிய செய்தித்தாள்கள் மற்றும் சமூக ஊடகங்களில் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

              இந்த வழக்கு மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஈரானின் மகளிர் விவகாரங்களுக்கான துணைத் தலைவர் என்சீஹ் கசாலி, பாராளு மன்றத்திற்கு

              கோரிக்கை விடுத்துள்ளார்.இதுபோன்ற நிகழ்வுகளைத் தடுக்க விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு அதிகாரிகளை அவர் கேட்டுக் கொண்டார்.

              ஹெய்டாரியின் கொலையைத் தொடர்ந்து, குடும்ப வன்முறைக்கு எதிராக பெண்களைப் பாதுகாக்க சட்டங்களைச் சீர்திருத்த வேண்டும் என்றும், பெண்களின்

              திருமணத்திற்கான சட்டப்பூர்வ வயதை உயர்த்த வேண்டும் என்றும் கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன.

              ஈரானில் கடந்த 2020 ஆண்டு தனது மகளின் தலையை துண்டித்து கௌரவ கொலை

              செய்த தந்தைக்கு ஒன்பது ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

                Posted in Uncategorized

                41 வயதாகும் நடிகையை 2வது திருமணம் செய்யும் பாலிவுட் நடிகர்

                41 வயதாகும் நடிகையை 2வது திருமணம் செய்யும் பாலிவுட் நடிகர்

                பிரபல பாலிவுட் நடிகர் பர்கான் அக்தர், 41 வயதாகும் நடிகையும் பாடகியுமான ஷிபானியை திருமணம் செய்ய இருக்கிறார்.

                41 வயதாகும் நடிகையை 2வது திருமணம் செய்யும் பாலிவுட் நடிகர்
                ஷிபானி தந்தேக்கர் – பர்கான் அக்தர்


                பிரபல இந்தி நடிகர் பர்கான் அக்தர். இவர் 2008-ல் வெளியான ராக் படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இவரது பாக மில்கா சிங் படம் பெரிய வெற்றி

                பெற்றது. பர்கான் அக்தர் நடிப்பில் கடந்த வருடம் டூபான் படம் வெளியானது. சில படங்களை இயக்கியும் இருக்கிறார்.

                அமீர்கான் நடித்த தில் சத்தா ஹை படத்தை பர்கான் அக்தர் இயக்கி இருந்தார். இந்த படம் தேசிய விருது பெற்றது. 2000-ம் ஆண்டு அதுனா பாபானி என்பவரை பர்கான்

                அக்தர் திருமணம் செய்து 17 ஆண்டுகளுக்கு பிறகு அவரை விவாகரத்து செய்து பிரிந்தார். பின்னர் இந்தி நடிகையும், பாடகியுமான ஷிபானி தந்தேக்கருடன் நெருக்கம் ஏற்பட்டது. இருவரும் 3 ஆண்டுகளாக காதலித்து வருவதாக கூறப்படுகிறது.

                இந்த நிலையில் 41 வயதாகும் ஷிபானியை 48 வயதாகும் பர்கான் அக்தர் இரண்டாவது

                திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளார். இவர்கள் திருமணம் வருகிற 21-ந்தேதி எளிமையான முறையில் நடக்க உள்ளது.

                  Posted in Uncategorized

                  கிரணின் உச்ச கட்ட கவர்ச்சி… முகம் சுளிக்கும் ரசிகர்கள்

                  கிரணின் உச்ச கட்ட கவர்ச்சி… முகம் சுளிக்கும் ரசிகர்கள்

                  ஜெமினி, வின்னர், வில்லன் படங்களில் நடித்து பிரபலமான கிரணின் கவர்ச்சி புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

                  கிரணின் உச்ச கட்ட கவர்ச்சி… முகம் சுளிக்கும் ரசிகர்கள்
                  கிரண்
                  ஜெமினி படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமானவர் கிரண். தொடர்ந்து அஜித்துடன் ‘வில்லன்’, பிரஷாந்துடன் ‘வின்னர்’, கமல்ஹாசனுடன் ‘அன்பே சிவம்’, எஸ்ஜே சூர்யாவின் ‘நியூ’ உள்ளிட்ட படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்.

                  குறிப்பாக சுந்தர்.சி இயக்கத்தில் பிரசாந்த், வடிவேலுவுடன் அவர் நடித்த ‘வின்னர்’ படம் சூப்பர் ஹிட்டானது. இதில் அதிக கவர்ச்சியில் கிரண் நடித்திருந்தார். தற்போது பட வாய்ப்பு இல்லாமல் இருக்கும் கிரண் சமூக வலைத்தளத்தில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

                  கிரண்

                  இந்நிலையில், மிகவும் கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படம் முகம் சுளிக்கும் அளவிற்கு இருப்பதால் ரசிகர்கள் பலர் ஆபாச கமெண்ட்டுகள் பதிவு செய்து வருகிறார்கள்.

                    Posted in Uncategorized

                    ஒருவர் குத்திக் கொலை

                    ஒருவர் குத்திக் கொலை

                    கம்பஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லக்ஷ்மி வீதிப் பகுதியில் வீடொன்றில் ஏற்பட்ட தகராறில் நபர் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

                    நேற்று (08) காலை லக்ஷ்மிபர பகுதியில் உள்ள வீடொன்றுக்கு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், அங்கிருந்தவர் மற்றும் இருவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

                    வாக்குவாதம் முற்றியதை அடுத்து மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் கூரிய ஆயுதத்தால் தாக்கியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

                    காயமடைந்த மூவரும் கம்பஹா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

                    ஏனைய இருவரும் கம்பஹா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

                    உயிரிழந்தவர் கம்பஹா லக்ஷ்மி வீதியைச் சேர்ந்த 62 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

                    கம்பஹா பகுதியைச் சேர்ந்த 35 மற்றும் 32 வயதுடைய சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டு கம்பஹா நீதவான் நீதிமன்றில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர்.

                    சந்தேகநபர்களை எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கம்பஹா நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

                    கம்பஹா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

                    Posted in Uncategorized

                    12 வயது சிறுமி மாயம்- தேடும் பொலிஸ்

                    12 வயது சிறுமி மாயம்- தேடும் பொலிஸ்

                    சகல பிள்ளைகளும் வீட்டின் வாசலில் விளையாடிக்கொண்டிருந்த போது, 12 வயதான சிறுமியொருவர் காணாமற் போய்விட்டார் என, கம்பளை மற்றும் கலஹா பொலிஸ்

                    நிலையங்களில் செய்யப்பட்ட முறைப்பாடுகளுக்கு அமைய பொலிஸ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

                    கம்பளை நில்ஓய காரியாலய சந்திப் பிரதேசத்தில் வசிப்பிடமாகக் கொண்ட யோகராஜா கலைவாணி என்ற சிறுமியே காணாமல் போயுள்ளார். இவர், பாடசாலை மாணவியாவார்.

                    சின்ன அம்மாவின் வீட்டுக்குச் சென்றிருந்த போதே, இவ்வாறு காணாமற் போயுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

                    சிறுமியின் தந்தையான கதிர்வேல் யோகராஜா, கண்டி பொதுச் சந்தையில் கடமையாற்றுகின்​றார், தாய், தன்னுடைய பெற்றோரின் வீட்டுக்குச் சென்றிருந்துள்ளார்.

                    அதனால், அவர்களின் பிள்ளைகள் மூவரும், சின்ன அம்மாவின் வீட்டிலேயே இருந்துள்ளனர்.

                    சின்ன அம்மாவின் பிள்ளைகள் இருவரும், இந்த சிறுவர்கள் மூவரும், இணைந்து ​விளையாடி கொண்டிருந்துள்ளனர். அவ்வாறு விளையாடி கொண்டிருந்த பிள்ளைகளிடம், பாடம் கற்கவேண்டுமென சின்ன அம்மா எச்சரித்துள்ளார்.

                    இவ்வாறான நிலையில், கடந்த 7 ஆம் திகதி இரவு, தொலைக்காட்சியை பார்த்துக்கொண்டிருந்த போதே, பிள்ளை காணாமல் போனமை தெரியவந்துள்ளது. அதனையடுத்து, சிறுமியை தேடும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.

                    கிராமத்தவர்கள் அனைவரும் இணைந்து அருகிலிருக்கும் வீடுகள் மற்றும் பிரதேசங்கள், பற்றைக்காடுகளில் தேடியுள்ளனர். சிறுமி தொடர்பில் எவ்விதமான தகவல்களும் கிடைக்காமையால், சின்ன அம்மாவான பீ. நா​கேஸ்வரி, சம்பவம் தொடர்பில் கலஹா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

                    விரைந்து செயற்பட்ட ​பொலிஸார், பொலிஸ் நாயின் உதவியுடன் சிறுமியை தேடும் நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர். நேற்று (08) வரையிலும் அச்சிறுமி தொடர்பில் எவ்விதமான தகவல்களும் கிடைக்கவில்லை.

                    பொலிஸ் நாய், கிராமத்திலிருந்து பிரதான வீதி வரையிலும் வந்து, நின்றுக்கொண்டது. இதனால், பொலிஸார் தமது விசாரணைகளை திசை திருப்பிவிட்டுள்ளனர்.

                      Posted in Uncategorized

                      ஐரோப்பா எமது இராணுவத்தால் முற்றுகையிட படும் – ரசியா மிரட்டல்

                      ஐரோப்பா எமது இராணுவத்தால் முற்றுகையிட படும் – ரசியா மிரட்டல்

                      உக்கிரேனுக்கும் ரசியாவுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள முறுகல் நிலை அதி உச்சம் பெற்றுள்ளது ,இதனால்


                      அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் ரசியாவை சுற்றி இராணுவத்தை குவித்து வருகின்றனர்

                      தமது நாட்டின் பாதுகாப்பை கருத்தில் மதிக்காது செயல் படும் நேட்டோ படைகளுக்கு எச்சரிக்கை விடுத்த ரசியா,

                      தற்போது நேரடியா எமது இராணுவ கட்டுப் பாட்டுக்குள் ஐரோப்ப உள்ளாக்கப்படும் என்ற செய்தி போர் பதட்டத்தை அதிகரித்துள்ளது

                      ரசியா உக்கிரேன் மீது போர் ஒன்றை ஆரம்பிக்கும் நிலை ஏற்படும் என எதிர்பார்க்க படுகிறது


                      ,அவ்விதம் படை எடுப்பை மேற்கொண்டால் , ரசியா மீது பொருளாதார தடை விதிக்க படும் என அமெரிக்கா அறிவித்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது குறிப்பிட தக்கது

                        Posted in Uncategorized

                        ரசியா மீது தாக்குதல் நடத்துவோம் – மிரட்டும் அமெரிக்கா

                        ரசியா மீது தாக்குதல் நடத்துவோம் – மிரட்டும் அமெரிக்கா

                        உக்கிரேன் மீது ரசியா படைகள் போரினை தொடுத்தால் தாம் ரசியா மீது விரைந்து

                        தாக்குதல் நடத்துவோம் என அமெரிக்கா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது

                        உக்கிரேனை தமது கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவரும் முகமாக அதன் எல்லைகளில்

                        பல்லாயிரம் இராணுவம் குவிக்க பட்டுள்ளது

                        இதனை அடுத்து அமெரிக்கா படைகள் அவசரமாக குவிக்க பட்டுள்ள நிலையில்

                        இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது

                          தலிபான்கள்
                          Posted in Uncategorized

                          50 ஐ எஸ் தீவிரவாதிகள் தலிபான்கள்பிடியில் சிக்கினர்

                          50 ஐ எஸ் தீவிரவாதிகள் தலிபான்கள் பிடியில் சிக்கினர்

                          தலிபான்கள் ஆட்சியில் இடம்பிடித்து நகரும் ஆப்கானில் அதே தாலிபான்களுக்கு

                          எதிராக தாக்குதல் நடத்தி வந்த ஐம்பது ஐ எஸ் தீவிரவாதிகள் அதே அமைப்பிடம் சரண் அடைந்துள்ளனர்

                          இவ்வாறு சரண் அடைந்தவர்கள் படுகொலை செய்ய படாது அவர்களின் பாதுகாப்பில்

                          வைத்து கொள்ள படுவார்கள் என தெரிவிக்க படுகிறது

                          Posted in Uncategorized

                          வெடித்து சிதறிய எண்ணெய் கப்பல் – 7 பேரை காணவில்லை

                          வெடித்து சிதறிய எண்ணெய் கப்பல் – 7 பேரை காணவில்லை

                          நையீரியா நாட்டில் எரிபொருள் ஏற்றிய வண்ணம் பயணித்த கப்பல் ஒன்று திடீரென

                          வெடித்து சிதறியது ,இதன் பொழுது இதில் பயணித்த ஐவர் உயிரோடு கடலில் மீட்க பட்டுள்ளனர்

                          மேலும் ஏழுபேர் காணாமல் போயுள்ளனர் ,காணாமல் போனவர்களை தேடும் பணியில்

                          சுழியோடிகள் மற்றும்
                          கடல் படையினர் ஈடுபட்டுள்ளனர்

                          இந்த கப்பல் வெடிப்பினால் கடலில் பல ஆயிரம்லீட்டர் எரிபொருள் கடலில் கலப்பதால்

                          கடல்வாழ் உயிரினங்கள் இறக்க கூடும் என எதிர் பார்க்க படுகிறது