Posted in Uncategorized

உக்கிரேன் அணு உலைமீது தாக்குதல் – சுற்றி றைவளைத்த ரசிய இராணுவம்

உக்கிரேன் அணு உலைமீது தாக்குதல் – சுற்றி றைவளைத்த ரசிய இராணுவம்

உக்கிரேன் தென்கிழக்கு பகுதிக்குயில் அமைந்துள்ள, Russian forces seize Zaporizhzhia plant அணுமின் உலையினை,
ரசிய இராணுவத்தினர் தற்பொழுது மீட்டுள்ளனர்.

பலத்த குண்டு தாக்குதலை அடுத்து. குறித்த பகுதி ரசிய படையிடம் வீழ்ந்துள்ளது.

மக்களின் விடுதலை குறித்து .ரசியவுடன் பேசிட தாம் தயாராக உள்ளதாக .உக்கிரேன் அதிபர் பேச்சுக்கு அழைப்பு விடுத்துளளார்.

ஆனால் ஐரோப்பிய நாடுகளோ .ரசியா மீது பொருளாதார தடைகளை விதித்த வண்ணம் உள்ளன.

இந்த நிகழ்வானது ஐரோப்பாவுக்கு .பெரும் சேதங்களை ஏற்படுத்தும் என .எதிர் பார்க்க படுகிறது.

    Posted in Uncategorized

    ரசியாவுக்கு எதிரான ஐநா தீர்மானத்தில் இலங்கை இந்தியா சீனா வெளியேற்றம்

    ரசியாவுக்கு எதிரான ஐநா தீர்மானத்தில் இலங்கை இந்தியா சீனா வெளியேற்றம்

    உக்கிரேன் மீது ரசிய தொடர்ந்து வரும் போருக்கு எதிரான நடவடிக்கை மேற்கொள்ள

    வாக்களிக்கும் வாக்கெடுப்புக்கு விட பட்டது ,இதன் பொழுது அந்த வாக்கெடுப்பில்

    கலந்து கொள்ளாது சீனா ,இந்தியா இலங்கை உள்ளிட்ட நாடுகள் வெளியேறின

    இவை ரசியாவுக்கு ஆதரவு தருவிக்கும் வகையில் இந்த் செயல் பாட்டில் ஈடுபட்டதாக நோக்க படுகிறது

      கொத்து குண்டு தாக்குதலில் 12 சிறுவர்கள் மரணம் - சவூதி அட்டூழியம்
      Posted in Uncategorized

      உக்கிரேனில் இந்திய மாணவன் சுட்டு கொலை

      உக்கிரேனில் இந்திய மாணவன் சுட்டு கொலை

      உக்கிரேனில் இடம்பெற்று வரும் போரில் சிக்கி இந்திய மாணவர் ஒருவர் பலியாகியுள்ளார்

      ரசிய இராணுவம் போரை தொடர்ந்து வரும் நிலையில் அங்கு போர்வலய பகுதியில் சிக்கியுள்ள மக்களில் பலர் இறந்த வண்னம் உள்ளனர்

      ஏனையவர்கள் அகதிகளாக ஓடிய வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது

        Posted in Uncategorized

        9000 ரசியா இராணுவம் மரணம் – 61 வானூர்திகள் அழிப்பு

        9000 ரசியா இராணுவம் மரணம் – 61 வானூர்திகள் அழிப்பு

        ரஷியாவுக்கு எதிராக 8-வது நாளாக போரில் தாக்குப்பிடித்து வரும் உக்ரைன் ராணுவம், 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரஷிய வீரர்களை வீழ்த்தியுள்ளதாக அறிவித்துள்ளது.

        உக்ரைன் கொடுத்த பதிலடியில் ரஷியாவுக்கு ஏற்பட்ட சேதம் எவ்வளவு?
        கோப்புப்படம்
        இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க “Play” பட்டனை கிளிக் செய்யவும்.

        உக்ரைன் மீது ரஷியா கடந்த வியாழக்கிழமை தாக்குதலை தொடங்கியது, இன்று 8-வது நாளாக சண்டை நடைபெற்று வருகிறது. உக்ரைன் எளிதாக வீழ்ந்துவிடும் என ரஷியா

        நினைத்தது. ஆனால், கடைசி வரை போராடுவோம் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அறிவித்த நிலையில் உக்ரைன் ராணுவம் எதிர்தாக்குதல் நடத்தி வருகிறது.

        மேற்கு நாடுகள் ஆயுத உதவிகள் வழங்கி வருவதால் உக்ரைன் எதிர் தாக்குதலை

        அதிகரித்துள்ளது. ஊருக்குள் புகுந்த ரஷிய துருப்புகளை உக்ரைன் ராணுவம் வீழ்த்தி வருகிறது. இதனால் ரஷியாவுக்கு இழப்பு அதிகமாக இருந்து வருகிறது.

        இதனால் வீரர்கள், விமானங்கள், ஹெலிகாப்டர்கள் என ரஷியா இழப்புகளை சந்தித்துள்ளது. இந்த நிலையில் இதுவரை எதிர் தாக்குதலில் 9 ஆயிரம் வீரர்களை

        வீழ்த்தியுள்ளோம் என உக்ரைன் பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், 30 விமானங்கள், 31 ஹெலிகாப்டர்கள், 217 பீரங்கிகள், 374 ராணுவ வாகனங்களை அழித்துள்ளோம் எனவும் தெரிவித்துள்ளது

          Posted in Uncategorized

          ரஷிய குடிமக்களின் சொத்துக்களை முடக்கிய உக்கிரேன்

          ரஷிய குடிமக்களின் சொத்துக்களை முடக்கிய உக்கிரேன்

          ரஷியாவுக்கு எதிராக பல்வேறு நாடுகளும் பொருளாதார தடை விதித்து வரும்

          நிலையில், உக்ரைனில் வசிக்கும் ரஷிய குடிமக்களின் சொத்துக்களை முடக்க அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

          ரஷிய குடிமக்களின் சொத்துக்களை முடக்க உக்ரைன் நாடாளுமன்றம் ஒப்புதல்
          உக்ரைன் நாடாளுமன்றம்


          உக்ரைன் மீது ரஷியா கடந்த வியாழக்கிழமை தாக்குதலை தொடங்கியது, இன்று 8-வது நாளாக சண்டை நடைபெற்று வருகிறது. உக்ரைன் எளிதாக வீழ்ந்துவிடும் என ரஷியா

          நினைத்தது. ஆனால், கடைசி வரை போராடுவோம் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அறிவித்த நிலையில் உக்ரைன் ராணுவம் எதிர்தாக்குதல் நடத்தி வருகிறது.

          மேற்கு நாடுகள் ஆயுத உதவிகள் வழங்கி வருவதால் உக்ரைன் எதிர் தாக்குதலை

          அதிகரித்துள்ளது. ஊருக்குள் புகுந்த ரஷிய துருப்புகளை உக்ரைன் ராணுவம் வீழ்த்தி வருகிறது. இதனால் ரஷியாவுக்கு இழப்பு அதிகமாக இருந்து வருகிறது.

          ரஷியாவுக்கு எதிராக பல்வேறு நாடுகளும் பொருளாதார தடை விதித்து வருகிறது.

          இந்நிலையில், உக்ரைனில் உள்ள ரஷிய குடிமக்களின் சொத்துக்களை முடக்கும் சட்டத்திற்கு உக்ரைன் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

            கொத்து குண்டு தாக்குதலில் 12 சிறுவர்கள் மரணம் - சவூதி அட்டூழியம்
            Posted in Uncategorized

            காவல்துறையால் ஒருவர் சுட்டு கொலை

            காவல்துறையால் ஒருவர் சுட்டு கொலை

            இலங்கை நாவுல, எலஹெர பகுதியில் வீதி சோதனையில் ஈடுபட்ட போலீசாருக்கும்

            நபருக்கும் இடையில் ஏற்பட்ட முறுகளை அடுத்து 32 வயதுடைய நபர் ஒருவர் சுட்டு கொலை செய்ய பட்டுள்ளார்

            மேற்படி படுகொலை சம்பவம் மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது

              Posted in Uncategorized

              லண்டனில் உணவகத்திற்குள் புகுந்த கார் – தப்பிய மக்கள்

              லண்டனில் உணவகத்திற்குள் புகுந்த கார் – தப்பிய மக்கள்

              லண்டன் கென்ட் பகுதியில் உள்ள Knoxbridge cafe ஒன்றுக்குள் வேகமாக பயணித்த கார்

              ஒன்று சாரதியின் கட்டு பாட்டை இழந்து அந்த உணவகத்தின் சுவரை இடித்து உள்ளே நுழைந்துள்ளது

              இதில் சாரதி பலத்த காயமடைந்துள்ளார் ,ஆனால் அங்கு நின்ற மக்கள் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளார்

              குறித்த விபத்து தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

                Posted in Uncategorized

                வெடித்து சிதறிய காவல்துறை வண்டி – பலர் மரணம்

                வெடித்து சிதறிய காவல்துறை வண்டி – பலர் மரணம்

                பாகிஸ்தான் தென் மேற்கு பகுதியில் பாகிஸ்தான் காவல்துறையினர் பயணித்த

                வாகனத்தை இலக்கு வைத்து நடத்த பட்ட வெடி குண்டு தாக்குதலில் சிக்கி அந்த வண்டி முற்றாக சேதமடைந்தது

                அதில் பயணித்த மூவர் பலியாகியும் பலர் படுகாயமடைந்துள்ளனர்

                தலிபான்கள் அயல் நாட்டில் ஆட்சி பீடம் அமர்ந்த பின்னர் பாகிஸ்தானில் தொடராக குண்டுகள் வெடித்த வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது

                  Posted in Uncategorized

                  உக்கிரேனில் இந்திய மாணவன் சுட்டு கொலை

                  உக்கிரேனில் இந்திய மாணவன் சுட்டு கொலை

                  கார்கீவ், கீவ் போன்ற நகரங்களில் ரஷியா நடத்தி வரும் கடும் தாக்குதலில் இந்திய மாணவர்கள் வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.

                  உக்ரைன் கார்கீவ் நகரில் நடந்த துப்பாக்கி சண்டையில் இந்திய மாணவர் உயிரிழப்பு
                  உயிரிழந்த மாணவர் நவீன் சேகரப்பா
                  இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க “Play” பட்டனை கிளிக் செய்யவும்.

                  உக்ரைன் ரஷியா இடையே ஆறாவது நாளாக போர் நடந்து வருகிறது. கார்கீவ், கீவ்

                  போன்ற நகரங்களில் ரஷியா நடத்தி வரும் கடும் தாக்குதலில் இந்திய மாணவர்கள் வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.

                  இதற்கிடையே, மாணவர்கள் உள்பட இந்தியர்களை மீட்கும் நடவடிக்கையாக ஆபரேஷன் கங்கா திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

                  இந்நிலையில், இந்த போர் களத்தில் சிக்கி உக்ரைன் கார்கீவ் நகரத்தில் உள்ள மருத்துவ கல்லூரி ஒன்றில் படித்து வந்த கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த நவீன் சேகரப்பா

                  என்கிற மாணவர் உயிரிழந்துள்ளார். இதனை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது

                    Posted in Uncategorized

                    ரஷியா மீது வங்கி முடக்க தடை விதிக்க சீனா மறுப்பு

                    ரஷியா மீது வங்கி முடக்க தடை விதிக்க சீனா மறுப்பு

                    உக்கிரேன் மீது ரசியா இராணுவ நடவடிக்கை மேற்கொண்டு வரும் நிலையில் ,உலக

                    நாடுகள் இணைந்து வங்கி முடக்க நிலையை தீவிர படுத்தின ,இந்த முடக்க நிலைக்குள் சீனா சிக்காது தப்பித்து ரசியாவுக்கு ஆதரவாக களம் இறங்கியுள்ளது

                    இந்த பொருளாதார முடக்க நகர்வுகள் ஏனைய நாடுகளுக்கும் முன்னுதாரணம் என்பது

                    போல அமெரிக்கா உள்ளிட்ட கூட்ட்டமைப்பு நாடுகள் மேற்கொண்டுள்ளன

                    எனினும் இந்த நகர்வுகள் ரசியாவை பாதிக்குமா அதனால் ஐரோப்பிய நாடுகள்

                    ரசியாவின் இராணுவ நகர்வில் இருந்து தப்பிக்குமா என்பதே கேள்வியாக உள்ளது

                      Posted in Uncategorized

                      ரசியாவிடம் முழுதாக வீழ்ந்த Kherson சிட்டி – தொடரும் சண்டை

                      ரசியாவிடம் முழுதாக வீழ்ந்த Kherson சிட்டி – தொடரும் சண்டை

                      ரசிய இராணுவத்தினர் மேற்கொண்ட ஆறாவது நாள் தாக்குதலை அடுத்து Kherson நகரம் முற்று முழுதாக ரசிய இராணுவத்தின் கட்டுப்பாட்டில் சென்றுள்ளது

                      ஆக்கிரமிக்க பட்ட பகுதிகளை பல படுத்தியவாறு தொடர்ந்து ரசிய படைகள் முன்னேறிய வண்ணம் உள்ளனர்

                      மூன்று முனை ஊடாக மிக பெரும் தாக்குதலை தொடுத்த வண்ணம் முன்னேறிவரும்

                      ரசிய படைகள் சில தினங்களில் கீவ் உள்ளிட்ட நகரங்களி கைப்பற்றி விடுவார்கள் என எதிர் பார்க்க படுகிறது

                      Posted in Uncategorized

                      ரசிய தாக்குதலில் 2000 மக்கள் மரணம்

                      ரசிய தாக்குதலில் 2000 மக்கள் மரணம்

                      உக்கிரேனின் முக்கிய நகர் மீது அரசியா படைகள் நடத்திய தாக்குதலில் பலியாகியுள்ளனர்


                      தொடர்ந்த முன்னேறி வரும் ரசிய படைகள் உக்கிர தாக்குதலை தொடுத்த வண்ணம் உள்ளனர்

                      ஐரோப்பிய யூனியனில் உக்கிரேன் இணைத்து கொள்ள பட்டு சில மணி நேரங்களில் அகோர தாக்குதலை இடைவிடாது ரசிய படைகள் நடத்திய வண்ணம் உள்ளன

                        Posted in Uncategorized

                        ரசியாவுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை

                        .புதின் சர்வாதிகாரி போல் நடந்து கொண்டு இருப்பதால் உலகில் ஜனநாயகத்துக்கும் சர்வாதிகாரத்துக்கும் இடையே கடும் போராட்டம் ஏற்பட்டுள்ளது என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

                        சர்வாதிகார செயல்கள் வெற்றி பெற்றதாக வரலாறு இல்லை- புதினை கடுமையாக தாக்கிய ஜோ பைடன்

                        ரஷியா-உக்ரைன் போருக்கு இடையே இன்று அமெரிக்கா பாராளுமன்றம் கூடியது. கூட்டத்தில் அதிபர் ஜோபைடன் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார்.

                        ரஷிய அதிபர் புதினையும் மிக கடுமையாக தாக்கி பேசினார். அவரது பேச்சு விவரம் வருமாறு:-

                        ரஷிய அதிபர் புதின் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் நியாயமில்லாதவை. அவரது செயல்பாடுகள் உலகை அச்சுறுத்தும் வகையில் உள்ளது. ரஷியா நடத்தி வரும் போர் மிகவும் தவறானது.

                        புதின் சர்வாதிகாரி போல் நடந்து கொள்கிறார். இதனால் உலகுக்கு மாபெரும் ஆபத்தும், அச்சுறுத்தலும் ஏற்பட்டு உள்ளது. இந்த சூழ்நிலையில் உக்ரைன் மக்கள் பக்கம் அமெரிக்கா உறுதியான நிலைப்பாட்டுடன் உள்ளது.

                        தற்போது ஏற்பட்டுள்ள சண்டையில் அமெரிக்கா நேரடியாக ரஷியாவுடன் மோதல் போக்கை கடை பிடிக்காது. உக்ரைனுக்குள் சென்று ரஷிய படைகளை எதிர்த்து போராடும் திட்டம் எதுவுமில்லை. அதே சமயத்தில் நேட்டோ நாடுகளுக்கு தேவையான எல்லா உதவிகளும் செய்யப்படும்.

                        புதின் சர்வாதிகாரி போல் நடந்து கொண்டு இருப்பதால் உலகில் ஜனநாயகத்துக்கும் சர்வாதிகாரத்துக்கும் இடையே கடும் போராட்டம் ஏற்பட்டுள்ளது. இந்த போராட்டத்தில் நிச்சயம் ஜனநாயகம் வெற்றி பெறும்.

                        புதின் உக்ரைன் தலைநகர் கீவ்வை சுற்றி ஏராளமான பீரங்கிகளை நிறுத்தலாம். கீவ் நகருக்கு கடும் சேதங்களை ஏற்படுத்தலாம். ஆனால் ஒருபோதும் உக்ரைன் மக்களின் மனதில் இடம்பிடிக்க முடியாது.

                        இந்த உலகம் சுதந்திரமாக இயங்குவதை முடக்க புதின் முயற்சி செய்கிறார். ஆனால் அதை அமெரிக்கா அனுமதிக்காது.

                        உக்ரைன் நாட்டுக்கு தேவையான எல்லா உதவிகளும் செய்யப்படும். அமெரிக்காவுக்கு ஆதரவாக இருக்கும் நாடுகளுடன் சேர்ந்து கூட்டு முயற்சியுடன் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். நேட்டோ நாடுகளின் ஒரு இஞ்ச் இடத்தை கூட யாராலும் அபகரிக்க முடியாது.

                        உக்ரைன் நாட்டு மக்கள் உண்மையான வீரத்துடன் போராடி வருகிறார்கள். புதின் அவர்களை வெல்லலாம். ஆனால் இதற்கு ரஷியா நீண்ட நாட்கள் மிக அதிக விலை கொடுக்க வேண்டியதிருக்கும்.

                        புதின் உக்ரைன் போரை தவறாக கணித்து விட்டார். அவரது கணிப்பு நிச்சயம் நிறைவேறாது. அவரது முடிவால் ரஷிய பொருளாதாரம் வரலாறு வகையில் பலவீனம் அடையும் என்பது உறுதி.

                        ரஷியாவால் ஏற்பட்டிருக்கும் குழப்பம் உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது. உலகில் அமைதியை ஏற்படுத்தவே இரண்டாம் உலகப்போருக்கு பிறகு நேட்டோ அமைப்பு உருவாக்கப்பட்டது. அதில் அமெரிக்கா உறுப்பினராக இருக்கிறது. நேட்டோ அமைப்பு தனது கடமைகளை செய்யும்.

                        இதன் காரணமாக உக்ரைன் மீண்டும் வலிமை பெறும். புதின் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு மிகப்பெரிய வலிமை உண்டாகும். அதே சமயத்தில் ரஷிய பொருளாதாரம் மிகப்பெரிய சீரழிவை சந்திக்கும்.

                        உக்ரைன் விடுதலை பெற நேட்டோ முழு அளவில் உதவி செய்யும். தொடர்ந்து உக்ரைனுக்கு நாங்கள் ஆதரவாக இருப்போம். மனிதாபிமான அடிப்படையிலும், பொருளாதார அடிப்படையிலும் ராணுவ அடிப்படையிலும் அனைத்து உதவிகளும் தொடர்ந்து செய்யப்படும்.

                        விமானம் பறக்க தடை

                        ரஷியா விமானங்கள் அமெரிக்க வான்வெளியில் பறப்பதற்கு தடை விதிக்கப் படுகிறது. ரஷியா இனியாவது தனது போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும்.

                        ரஷியாவின் நியாயமற்ற செயலுக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துக் கொள்கிறது. தவறுக்கு மேல் தவறு செய்வதால் புதின் தனிமைப்படுத்தப்படுகிறார்.

                        அமெரிக்கா மேற்கொண் டுள்ள நடவடிக்கைகள் காரணமாக ரஷியா நிச்சயம் பலவீனம் அடையும்.

                        அமெரிக்காவும், அதன் கூட்டு நாடுகளும் ரஷியா மீது சக்தி வாய்ந்த பொருளாதார தடைகளை விதித்து வருகின் றன. ரஷியாவின் பண பரிமாற்றத்தை சர்வதேச அளவில் நாங்கள் முடக்கி உள்ளோம். ரஷியாவின் வங்கி நடவடிக்கைகள் விரை வில் முடங்கும்.

                        வாழ்நாள் முழுக்க நாம் பாடம் கற்றுக்கொண்டு இருக்கிறோம். சர்வாதிகார செயல்கள் வெற்றி பெற்றதாக வரலாறு இல்லை.

                        இவ்வாறு அமெரிக்க அதிபர் ஜோபைடன் பேசினார்.

                        அவரது பேச்சுக்கு அமெரிக்கா பாராளுமன்ற இருசபை உறுப்பினர்களும் எழுந்து நின்று கரகோ‌ஷம் செய்து வாழ்த்து தெரிவித்தனர்.

                        வடகொரியா ஏவுகனை சோதனை - பீதியில் எதிரி நாடுகள்
                        Posted in Uncategorized

                        அரசியல் தீர்வு ஒருபோதும் கிடையாது

                        அரசியல் தீர்வு ஒருபோதும் கிடையாது

                        தமிழ் மக்களது முழுமையான நிலைப்பாட்டை கட்சிகள் வெளிப்படுத்தாத காரணத்தால் நாங்கள் ஜெனீவாவுக்கு தனியாக கடிதம் எழுதவேண்டிய தேவை

                        ஏற்பட்டதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

                        கட்சிகள் ஒவ்வொன்றும் தனியாக ஜெனிவாவிற்கு கடிதம் எழுதியமை தொடர்பாக வல்வெட்டித்துறையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

                        அவர் மேலும் தெரிவிக்கையில், இம்முறை ஜெனிவாவிற்கு தமிழ் மக்கள் கூட்டணி,தமிழீழ விடுதலை இயக்கம், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், ஈழமக்கள்

                        புரட்சிகர விடுதலை முன்னணி,தமிழ்த் தேசியக் கட்சி ஆகிய 5 கட்சிகள் கூட்டாக தமிழர் பிரச்சினையை தீர்க்க வடக்கு கிழக்கில் பொதுஜன வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என வலியுறுத்தி கடிதத்தை எழுதியுள்ளது.

                        தமிழ் தேசிய மக்கள் முன்னணி இலங்கை தமிழரசுக் கட்சி போன்றவை இதுவரை சர்வதேச சமூகத்திடம் பொதுசன வாக்கெடுப்பு தேவை என்ற விடயத்தை .

                        வலியுறுத்தவில்லை. இந்நிலையில் தமிழ் மக்களது முழுமையான நிலைப்பாட்டை கட்சிகள் வெளிப்படுத்தாத காரணத்தால் நாங்கள் தனியாக ஜெனிவாவுக்கு

                        கடிதத்தினை அனுப்பியுள்ளோம். ஒரே நிலைப்பாட்டில் கட்சிகள் இருக்குமானால் ஜெனீவாவுக்கு பல்வேறு கடிதங்கள் போக வேண்டிய தேவையிருக்காது.

                        இலங்கைக்குள் அரசியல் தீர்வு ஒருபோதும் கிடையாது. ஒற்றையாட்சியை விட்டு ஒரு அங்குலமும் அரசாங்கம் வழங்காது. அரசியல் தீர்வு வழங்கப்படும் ஆனால் கூட ஒற்றையாட்சியை மலினப்படுத்துவதாக அந்த தீர்வு இருக்காது.

                        சர்வதேச நாடுகள் மற்றும் சர்வதேச சமூகம் இலங்கையில் வடக்கு கிழக்கு

                        மாகாணங்களில் ஒரு பொதுசன வாக்கெடுப்பை நடத்த வேண்டும். அதுவே அரசியல் தீர்வுக்கான வழி என்பதை நாங்கள் இறுக்கமாக வலியுறுத்தி இருக்கின்றோம் என்றார்.

                          Posted in Uncategorized

                          யாழ் ஆலய திருவிழாவில் சங்கிலிகள் திருட்டு

                          யாழ் அலையை திருவிழாவில் சங்கிலிகள் திருட்டு

                          யாழ். திருநெல்வேலி காளி கோயில் தேர்த் திருவிழாவின் போது பக்தர்கள் நான்கு பேருடைய தங்கச் சங்கிலிகள் அறுக்கப்பட்டதாக தெரியவருகிறது.

                          நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை குறித்த ஆலயத்தில் தேர்த்திருவிழா இடம்பெற்றுக் கொண்டிருந்த சமயம் அங்கு கூடியிருந்த நான்கு பேருடைய தங்க சங்கிலிகள் அறுக்கப்பட்டுள்ளன.

                          சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து, ஆலயத்திற்கு வருகை தந்த வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் சிலரை பொலிசார் விசாரணைக்கு உட்படுத்தினர்.

                          மேலும் இது தொடர்பில் பல கோணங்களில் விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

                            Posted in Uncategorized

                            உக்கிரேனில் தரை இறங்கிய ரசிய இராணுவம்

                            .

                            உக்கிரேனில் தரை இறங்கிய ரசிய இராணுவம்

                            ரசியா இராணுவத்தினர் வான்வழியூடாக கிழக்கு உக்கிரேன் ,கார்கிவில் தரை இறங்கியது.


                            இந்த வான்வழி தரையிறக்கம் ,வெற்றிகரமாக அமைந்த நிலையில் ,குறித்த படையினர் , அந்த பகுதிகளை இலக்கு வைத்து, அகோர தாக்குதலை நடத்தினர்.

                            இதில்;மருத்துவமனை உள்ளிட்டவை சேதமடைந்துள்ளதாக .உக்கிரேன் தெரிவித்துள்ளது.

                            தொடர்ந்து உக்கிர மோதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

                            உக்கிரேனில் தரை இறங்கிய ரசியா இராணுவத்தினருக்கு ,ஆதரவாக ,வான்வழி தாக்குதல்கள் இடம்பெற்ற வண்னம் உள்ளது .

                            தற்போது குண்டுகளினால் ,உக்கிரேன் அதிர்ந்த வண்னம் உள்ளது .

                              Posted in Uncategorized உலக செய்திகள்

                              இராணுவத்தை உடனே விலக்க வேண்டும் ஐநா ரசியாவுக்கு எச்சரிக்கை

                              இராணுவத்தை உடனே விலக்க வேண்டும் ஐநா ரசியாவுக்கு எச்சரிக்கை

                              உடனடியாக போர் நிறுத்தம் மேற் கொள்ள வேண்டும் என்று ஐ.நா.சபை சிறப்பு அவசர கூட்டத்தில் பங்கேற்ற நாடுகள் கேட்டுக் கொண்டுள்ளன.

                              ராணுவ வீரர்களை திரும்ப பெற வேண்டும் – ரஷியாவிற்கு ஐ.நா.சபை வலியுறுத்தல்
                              அன்டோனியா குட்டரெஸ்
                              ஜெனீவா:

                              உக்ரைன் ரஷியா இடையேயான போர் 5-வது நாளாக தொடரும் நிலையில், ரஷியாவின் போர் நடவடிக்கைக்கு முட்டுக்கட்டை போடுவது தொடர்பாக விவாதிக்க ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு அவசர கூட்டம் இன்று இரவு 8.30 மணியளவில் தொடங்கியது.

                              இதில் பேசிய ஐ.நா.பொதுச்செயலாளர் ஆன்டோனியோ குட்டரெஸ், உக்ரைன் மீதான ரஷியாவின் ராணுவ தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்தார்.

                              போர் நடவடிக்கையால் அப்பாவி பொதுமக்கள் பலியாவதாகவும், இதனால் ரஷிய ராணுவ வீரர்கள் திருப்பி செல்ல வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். பொதுமக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், உக்ரைனுக்கு மனிதாபிமான உதவிகள் வழங்கப்பட வேண்டியது அத்தியாவசிய தேவையாக உள்ளதாகவும் அவர் கூறினார்.

                              சமாதானம் மட்டுமே இந்த பிரச்சினைக்கான தீர்வாக இருக்கும் என்றும், உக்ரைனுக்கு ஐ.நா.சபை தொடர்ந்து உதவி செய்யும், அவர்களை கைவிடாது எனவும் அவர் குறிப்பிட்டார். உக்ரைன் மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவோம் என்று அந்நாட்டு அதிபருக்கு தாம் உறுதி யளித்துள்ளதாகவும் ஐ.நா.பொதுச்செயலாளர் தெரிவித்தார்.

                              இந்நிலையில், ரஷியா-உக்ரைன் இடையே உடனடியாக போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும், தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற வேண்டும் என்று ஐ.நா. சபை கூட்டத்தில் பங்கேற்ற நாடுகளின் ஒட்டு மொத்த கருத்ததாக
                              தெரிவிக்கப்பட்டுள்ளது.

                              இதையும் படியுங்கள்…உயிரை காப்பாற்றிக் கொள்ளுங்கள்- ரஷிய வீரர்களுக்கு உக்ரைன் அதிபர் எச்சரிக்கை

                              Posted in Uncategorized

                              உக்ரைனுக்கு 70 போர் விமானங்களை அனுப்பிய ஐரோப்பா

                              உக்ரைனுக்கு 70 போர் விமானங்களை அனுப்பிய ஐரோப்பா


                              பல்கேரியா, போலந்து, சுலோவாக்கியா ஆகிய 3 நாடுகள் 70 போர் விமானங்களை வழங்க உள்ளதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

                              உக்ரைனுக்கு 70 போர் விமானங்களை அனுப்புகிறது ஐரோப்பிய நாடுகள்
                              போர் விமானம்
                              கீவ்:

                              உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ளதால் உக்ரைனுக்கு பெரும்பாலான நாடுகள் ஆயுத உதவிகளை வழங்கி வருகிறது. இந்த வி‌ஷயத்தில் ரஷியா தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. பெரும்பாலான நாடுகள் ரஷியாவுக்கு பொருளாதார தடை விதித்துள்ளது.

                              ஐரோப்பிய ஒன்றிய நாடுகளான பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மனி, போர்ச்சுக்கல், இத்தாலி, ருமேனியா, நெதர்லாந்து, டென்மார்க் செக்குடியரசு மற்றும் அமெரிக்கா, கனடா, இஸ்ரேல் ஆகியவை ராணுவ உதவிகளை உக்ரைனுக்கு அளித்துள்ளன.

                              இந்த நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள 3 நாடுகள் 70 போர் விமானங்களை உக்ரைனுக்கு வழங்குகின்றன.

                              உக்ரைனுக்கு 70 போர் விமானங்களை அனுப்புகிறது ஐரோப்பிய நாடுகள்

                              பல்கேரியா-30, போலந்து -28, சுலோவாக்கியா-12 ஆகிய 3 நாடுகள் 70 போர் விமானங்களை வழங்க உள்ளதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

                              இதேபோல் உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்குவதாக ஆஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளது.

                                Posted in Uncategorized

                                உக்ரைன் அதிபரை கொல்ல 400 கூலிப்படையினர்-ரசியா உத்தரவு

                                உக்ரைன் அதிபரை கொல்ல 400 கூலிப்படையினர்-ரசியா உத்தரவு

                                ஒருபுறம் பேச்சுவார்த்தைக்கு ஒப்புக் கொண்டுவிட்டு, உக்ரைன் அதிபரை கொல்ல கூலிப்படையை ரஷியா அனுப்பி உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

                                உக்ரைன் அதிபரை கொல்ல 400 கூலிப்படையினர்- புதின் உத்தரவிட்டுள்ளதாக பரபரப்பு தகவல்
                                வால்டிமிர் ஜெலன்ஸ்கி – புதின்
                                கீவ்:

                                நேட்டோ படையில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷியா கடந்த 24-ந் தேதி முதல் அந்த நாடு மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

                                குண்டுகளை பொழிந்தும், ஏவுகணைகளை வீசியும் அதிரடியான தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. 6-வது நாளாக ரஷிய ராணுவப் படைகள் தலைநகர் கீவ், கார்கீவ் போன்ற முக்கிய நகரங்களின் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

                                இந்தநிலையில் உக்ரைன் அதிபர் வால்டிமிர் ஜெலன்ஸ்கியை கொல்ல 400 கூலிப்படையினரை ரஷியா அனுப்பி உள்ளதாக பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.

                                ரஷியாவில் உள்ள வாக்னர் குழுவை சேர்ந்த தனியார் கூலிப்படை அமைப்பு 400 பேரை ரஷியாவுக்கு அனுப்பி உள்ளது. இவர்கள் ஆப்பிரிக்காவில் இருந்து உக்ரைன் தலைநகர் கீவ்வுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

                                வாக்னர் குழுமத்தில் 2 ஆயிரம் முதல் 4 ஆயிரம் பேர் வரை கூலிப்படையினராக உள்ளனர். இந்த அமைப்பு ரஷிய அதிபர் விளாடிமிர் புதினின் கூட்டாளியான யெவ்ஜெனி பிரிகோஜினால் நடத்தப்படுகிறது.

                                இந்த கூலிப்படையை சேர்ந்த 400 பேர் ஆப்பிரிக்காவில் இருந்து பெலாரஸ் வழியாக கீவ் நகருக்குள் 5 வாரங்களுக்கு முன்பு நுழைந்து விட்டதாகவும் அந்த தகவல் தெரிவிக்கிறது. இந்த கூலிப்படையினருக்கு உக்ரைன் அதிபர் வால்டிமிர் ஜெலன்ஸ்க்கியை தேடி கண்டுபிடித்து கொல்ல உத்தரவிடப்பட்டுள்ளது.

                                உக்ரைன் அதிபரை கொல்ல 400 கூலிப்படையினர்

                                உக்ரைன் அதிபரோடு அவரது மந்திரி சபையில் உள்ள மந்திரிகள், அதிகாரிகள் உள்பட மொத்தம் 23 பேரை கொல்வதற்கு ரஷியா உத்தரவிட்டு இருக்கிறது. இதற்காக அவர்களுக்கு மிகப்பெரிய தொகையும் முதல்கட்டமாக அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் பரிசுத்தொகை விவரம் எதுவும் தெளிவாக தெரிய வில்லை.

                                ரஷிய அதிபர் விளாடிமிர் புதின்தான் தனது கூட்டாளியான கூலிப்படை அமைப்புக்கு இந்த உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாகவும் அந்த தகவல் தெரிவிக்கிறது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

                                ரஷியாவில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்த பிறகு இந்த கூலிப்படையினர் ஜெலன்ஸ்க்கியை கொல்ல திட்டமிட்டுள்ளனர்.

                                ஒருபுறம் பேச்சுவார்த்தைக்கு ஒப்புக் கொண்டுவிட்டு, உக்ரைன் அதிபரை கொல்ல கூலிப்படையை அனுப்பி உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

                                உக்ரைன் அதிபர் ஏற்கனவே தன்னை கொல்ல ரஷியா திட்டமிட்டுள்ளது என்று குற்றம் சாட்டி இருந்தார். தன்னை கொல்வதுதான் ரஷியாவின் முதன்மை நோக்கம் என்றும், தன்னையும் தனது குடும்பத்தையும் அழித்துவிட்டால் நாட்டை அழித்து விடலாம் என்று ரஷியா கருதுவதாகவும் அவர் கூறி இருந்தார்.

                                மேலும் கீவ் நகருக்குள் நாசவேலையில் ஈடுபடும் குழுக்கள் நுழைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்து இருந்தார்.

                                  Posted in Uncategorized

                                  மனைவியை குத்திக் கொன்ற கணவன்

                                  மனைவியை குத்திக் கொன்ற கணவன்

                                  தம்பகல்ல, தெலிவ பிரதேசத்தில் பெண்ணொருவர் கணவனால் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

                                  நேற்று (28) மாலை மொனராகலை சிறிகல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக தம்பகல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

                                  உயிரிழந்தவர் ருவல்வெல பிரதேசத்தில் வசிக்கும் 28 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

                                  குடும்ப தகராறு காரணமாக இந்த கொலை நடந்துள்ளதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

                                  34 வயதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், தம்பகல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்