யாழ் ஆலய திருவிழாவில் சங்கிலிகள் திருட்டு

Spread the love

யாழ் அலையை திருவிழாவில் சங்கிலிகள் திருட்டு

யாழ். திருநெல்வேலி காளி கோயில் தேர்த் திருவிழாவின் போது பக்தர்கள் நான்கு பேருடைய தங்கச் சங்கிலிகள் அறுக்கப்பட்டதாக தெரியவருகிறது.

நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை குறித்த ஆலயத்தில் தேர்த்திருவிழா இடம்பெற்றுக் கொண்டிருந்த சமயம் அங்கு கூடியிருந்த நான்கு பேருடைய தங்க சங்கிலிகள் அறுக்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து, ஆலயத்திற்கு வருகை தந்த வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் சிலரை பொலிசார் விசாரணைக்கு உட்படுத்தினர்.

மேலும் இது தொடர்பில் பல கோணங்களில் விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *