Posted in Uncategorized

ரசியா தாக்குதலில் 70 உக்கிரேன் படைகள் மரணம்

ரசியா தாக்குதலில் 70 உக்கிரேன் படைகள் மரணம்

உக்கிரேன் மீது இராணுவ தாக்குதலை மேற்கொண்டு வரும் ரசிய படைகள் தொடர்ந்து முன்னேறிய வண்ணம் உள்ளனர்

இதில் உக்கிரேன் படை பிரிவு ஒன்றின் மீது ரசிய படைகள் தாக்குதலை நடத்தின

இந்த பீரங்கி தகத்தலில் சிக்கி 70 உக்கிரேன் படைகள் பலியாகினர்

தொடர்ந்து ரசியா படைகள் முன்னேறிய வண்னம் உள்ளன

    Posted in Uncategorized

    உக்கிரேனுக்கு அமெரிக்கா வழங்கிய வான்மறிப்பு ஏவுகணை

    உக்கிரேனுக்கு அமெரிக்கா வழங்கிய வான்மறிப்பு ஏவுகணை

    உக்கிரேன் மீது ரசியா போர் தொடுத்து வரும் நிலையில் அவசர அவசரமாக விசேட விமானம் ஒன்றின் மூலம் வான் மறிப்பு வுகணைகளை அமெரிக்கா வழங்கியுள்ளது

    உக்கிரேனுக்கு உதவுவது போல இந்த ஏவுகணை வழங்க பட்டாலும் ரசியாவின்

    ஏவுகணை வீச்சின் தாக்குதல் அமெரிக்காவின் இந்த ஏவுகணையால் தடுத்து அழிக்க

    முடியுமா என்பதை சோதனை செய்திடும் களமாக உக்கிரேனுக்கு அமெரிக்கா ஆயுத உதவி என்ற போர்வையில் சோதனை செய்வதை இவை எடுத்து காட்டுகிறது

    அப்படி என்றால் அமெரிக்கா ரசியா தம் மீதும் தாக்குதல் தொடுக்கலாம் என்பதை இப்போதே கணித்து கொள்கிறது என்பது பொருளாகிறது

      Posted in Uncategorized

      4300 ரசிய இராணுவம் மரணம் -53 விமானங்கள் அழிப்பு

      4300 ரசிய இராணுவம் மரணம் -53 விமானங்கள் அழிப்பு

      உக்கிரேன் மீது ரசியா நடத்தி வரும் போரில் இரு தரப்பிற்கும் இடையில் பலத்த இழப்பு

      ஏற்பட்டுள்ளது ,இவ்வேளை கீவ் நகரை கைப்பற்றும் நகர்வில் ரசியா படைகள் தொடர்ந்து முன்னேறி வருகின்றன


      ஆனால் இதுவரை ரசியாவிடம் வீழ்ச்சியடையவில்லை

      தமது தாக்குதல்களில் 146 பீரங்கிகள், 27 போர் விமானங்கள், 26 ஹெலிகாப்டர்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக
      உக்கிரேன் இராணுவம் தெரிவித்துள்ளது

      உக்கிரேனின் இரண்டாவது முக்கிய நகரமான கார்கிவிலும் போர் வெடித்துள்ளது ,இந்த

      தாக்குதல்கள் உச்சம் அடைந்துள்ள நிலையில் ரசியாவுடன் பேசிட தம் தயார் என உக்கிரேன் அறிவித்துள்ளது குறிப்பிட தக்கதாகும்

        Posted in Uncategorized

        வடகொரியா ஏவுகணை சோதனை – அதிர்ச்சியில் அமெரிக்கா

        வடகொரியா ஏவுகணை சோதனை – அதிர்ச்சியில் அமெரிக்கா

        உக்கிரேன் ரசியாவுக்கு இடையில் போர் வெடித்துள்ள நிலையில் வடகொரியா தற்பொழுது


        620 km சென்று தாக்கும் கூறும் தூர ஏவுகணைகள் இரண்டினை ஏவி சோதனை செய்த்துள்ளது

        தமது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு இவை தயாரிக்க பட்டு சோதனை செய்ய படுவதாக வடகொரியா தெரிவித்து வருவதும் ,இந்த சோதனையால்


        பிராந்தியத்தில் நாடுகளுக்கு இடையில் போர் பதட்டம் நிலவி வருவதாக பகைமை நாடுகள் கூக்குரல் இட்டு வருகின்றன

          Posted in Uncategorized

          உக்கிரேன் இராணுவத்தால் ரசியா இராணுவ சிப்பாய்கள் சிறை பிடிப்பு – வீடியோ

          உக்கிரேன் இராணுவத்தால் ரசியா இராணுவசிப்பாய்கள் சிறை பிடிப்பு – வீடியோ

          உக்கிரேன் மீது ரசியா நடத்தி வரும் இராணுவ தாக்குதலில் சில பலநூறு இராணுவத்தினர் பலியாகியுள்ளனர்

          ரசியா படைகளிற்கு எதிராக மக்களும் போராடிய வண்ணம் உள்ளனர் ,இவ்வாறான

          நிலையில் ரஷியா படைகள் பயணித்த வாகனங்கள் சேதமடைந்த நிலையில் அதில்

          உள்ள சிப்பாய்களை மக்கள் பிடித்து இராணுவத்திடம் ஒப்படைத்த காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

          இதில் அழுத்தி காணொளி பார்க்க

            Posted in Uncategorized

            உலகின் மிக பெரிய சரக்கு விமானம் ரசியாவினால் உக்கிரேனில் அழிப்பு

            உலகின் மிக பெரிய சரக்கு விமானம் ரசியாவினால் உக்கிரேனில் அழிப்பு

            உக்கிரேன் விமான நிறுவனத்தினால் தயாரிக்க பட்ட உலகின் மிக பெரும் சரக்கு விமானம் ஒன்று


            ரசியாவின் தாக்குதலில் முற்றாக அழிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

            கீவ் நகர் அருகில் உள்ள விமான நிறுவனத்தின் மீது தாக்குதல் நடத்த பட்ட பொழுதே

            இந்த இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது

            Posted in Uncategorized

            தந்தையை அடித்து கொன்று குப்பையில் வீசிய மகன்

            தந்தையை அடித்து கொன்று குப்பையில் வீசிய மகன்

            இலங்கை குருவிட்ட பகுதியில் குப்பை பகுதியில் இறந்த நிலையி கண்டெடுக்க பட்ட

            தந்தையின் சடலம் தொடர்பில் இடம்பெற்று வந்த விசாரணையில் ,குறித்த நபரை

            தாக்கி கொன்று குப்பையில் வீசிய குற்ற சாட்டில் அவரது மகன் கைது செய்ய பட்டுள்ளார்

            தனது கணவரின் மரணத்தில் சநதேகம் உள்ளதாக மனைவி தெரிவித்த நிலையில்

            போலீசார் மேற்கொண்ட விசாரணையின் பொழுதே இந்த விடயம் ஆரம்பிக்க பட்டுள்ளது

              Posted in Uncategorized

              ஐநா மனித உரிமை கூட்ட தொடர் ஆரம்பம்

              ஐநா மனித உரிமை கூட்ட தொடர் ஆரம்பம்

              ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கூட்ட தொடர் இன்று ஆரம்பிக்க பட்டுள்ளது

              இந்த கூட்ட தொடரில் இலங்கை தொடர்பான தீர்மானங்கள் கடுமையானதாக இருக்கும் என எதிர் பார்க்க படுகிறது

              இந்த கூட்ட தொடரில் வளமை போல இலங்கை தப்பிக்கும் நிலை ஏற்படலாம் என எதிர் பார்க்க படுகிறது

                Posted in Uncategorized

                அடி காயங்களுடன் இறந்த நிலையில் புலி மீட்பு

                அடி காயங்களுடன் இறந்த நிலையில் புலி மீட்பு

                இலங்கை Norton Bridge. தேயிலை தோட்ட பகுதியில் அடிகாயங்களுடன் பாதிக்க பட்டு இறந்த நிலையில் புலியின் சடலம் ஒன்று மீட்க பட்டுளள்து


                குறித்த புலியின் மரணம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன

                Posted in Uncategorized

                காவல்துறை திடீர் சுற்றிவளைப்பு -1,084 பேர் கைது

                காவல்துறை திடீர் சுற்றிவளைப்பு -1,084 பேர் கைது

                இலங்கை காவல்துறையினர் மேல் மாகாணத்தில் நடத்திய திடீர் சுற்றிவளைப்பு தேடுதலின் பொழுது
                1,084 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்

                இவர்களில் நீதிமன்றினால் தேடப்பட்டு வந்து 556 பேரும் குற்ற செயல்களில் ஈடுபட்ட 352 பேரும் உள்ளடங்குவர் என தெரிவிக்க பட்டுள்ளது

                Posted in Uncategorized

                உக்கிரேன் கீவ் நகருக்குள் நுழைந்துள்ள ரசியா இராணுவம்

                உக்கிரேன் கீவ் நகருக்குள் நுழைந்துள்ள ரசியா இராணுவம்

                ரசிய இராணுவம் மூன்று வழியூடாக கீவ் நகருக்குள் நுழைந்துள்ளது ,ஏவுகணைகள்

                பீரங்கி குண்டுகளினால் அந்த நகரம் அதிர்ந்த வண்ணம் உள்ளது ,ரசிய இராணுவத்தின் குண்டுகள் பாராளுமன்ற வளாகத்தை அண்மித்து வீழ்ந்து வெடித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன

                மக்கள் இன்றி அந்த பகுதிகள் வெறித்து காணப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன

                குறித்த பகுதி வீழ்ச்சியடைந்தால் உக்கிரேன் ரசியாவின் பூரண கட்டுப்பாட்டுக்கள் வீழ்ந்து விடும் என்பது தாக்குதல் நகர்வின் மூலமாக உள்ளது

                அந்த நட்டு அதிபர் தப்பி ஓடும் நிலை ,அல்லது சிறை பிடிக்க படும் நிலை ஏற்பட போகிறது
                இன்று அல்லது நாளை குறித்த பகுதி வீழ்ந்து விடும் என்பது உளவு நிறுவனங்களின் குறிப்பாக உள்ளது

                  Posted in Uncategorized

                  ரசிய மீது ஐரோப்பா உள்ளிட்ட உலக நாடுகளும் வங்கி முடக்க தடை

                  ரசிய மீது ஐரோப்பா உள்ளிட்ட உலக நாடுகளும் வங்கி முடக்க தடை

                  உக்கிரேன் மீது ரசியா போரினை ஆரம்பித்துள்ள நிலையில் ஐரோப்பா மற்றும் உலக

                  நாடுகள் இணைந்து அதன் பண பரிவர்த்தகத்தை முடக்கும் நடவடிக்கையா மேற்கொண்டு அறிவிப்பு வெளியிட்டுள்ளன

                  இதனால் ரசியாவுக்கு பெரும் நெருக்கடி ஏற்படுத்த பட்டுள்ளதாக லண்டன் ,அமெரிக்கா உள்ளிட்ட கூட்டு நாடுகள் இணைந்து கருது தெரிவித்துள்ளன

                  இந்த தடைகளை அடுத்து வெஸ்டன் நாடுகளுக்கு ரசியா எச்சரிக்கை விடுத்துள்ளது

                  ,இந்த செயல் பாடானது ரசியாவை வலிந்து போருக்கு இழுக்கும் செயல் பாடுகளின் மூலோபாயம் என கணிக்கலாம்

                  அப்டி என்றால் ஐரோப்பா மீது ரசியா போரை தொடுக்கும் நிலை ஏற்பட போகிறது அதற்கான ஆரம்பம் இதுவாக நோக்கலாம்

                  அதற்கு உக்கிரேனில் ரசிய தனது இராணுவ நடவடிக்கை மூலம் சொல்ல போகும் செய்தியை அடுத்தே ஐரோப்பா கதி கலங்கும் என அடித்து கூறலாம்

                  உக்கிரேன் வீழும் வரை காத்திருக்க வேண்டியது நமது பொறுப்பாகும்

                    Posted in Uncategorized

                    லண்டனில் Uber Eats and Just Eat சாரதிகள் பணிபுறக்கணிப்பு போராட்டம்

                    லண்டனில் Uber Eats and Just Eat சாரதிகள் பணிபுறக்கணிப்பு போராட்டம்

                    லண்டனில் மிக பெரும் நிறுவனங்களாக உள்ள Uber Eats and Just Eat சாரதிகளுக்கு

                    குறைந்த ஊதியம் வழங்குவதாகவும் அதனை அதிகரிக்க கோரி போராட்டம் இடம்பெற்றுள்ளது

                    ஊபர் நிறுவனம் குறைந்த வருமானத்தை வழங்குவதாக கூறி நீதிமன்றில் வழக்கு

                    தொடர பட்டது ,அதன் பின்னர் சாரதிகளுக்கு ஊதியம் அதிகரிக்க படுவதாக தெரிவிக்க பட்ட நிலையில் அவை தொடர்ந்து குறைக்க பட்டு வருவதாக சாரதிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்

                    இதுவே அவர்களுக்கு பெரும் நெருக்கடியை இப்பொழுது தருவித்துள்ளது

                    இந்த போராட்டமானது Sainsbury’s car park in Park Farm Road, Folkestone பகுதியில் இடம்பெற்றுள்ளது

                      Posted in Uncategorized

                      லண்டனில் நிர்வாணமாக மிதிவண்டி ஒட்டிய வெள்ளையர்கள்

                      லண்டனில் நிர்வாணமாக மிதிவண்டி ஒட்டிய வெள்ளையர்கள்

                      லண்டன் Folkestone பகுதியில் நிர்வாணமாக வெள்ளையர்கள் மிதிவண்டி பயணத்தை மேற்கொண்டனர்

                      உலக நிர்வாண ஊர்வலமாக இது தெரிவிக்க பட்டுள்ளது ,


                      இப்படியும் வினோதமான முறையில் இவர்கள் போராட்டம் நடாத்தியுள்ளமை வியக்க வைக்கிறது

                      Posted in Uncategorized

                      சுட்டு வீழ்த்தப்பட்ட உளவு விமானம்

                      சுட்டு வீழ்த்தப்பட்ட உளவு விமானம்

                      ஏமன் நாட்டு கவுதிய படைகளின் உளவு விமானம் ஒன்று சவுதிக்கு அண்மையில் பறந்து

                      கொண்டிருந்த பொழுது அந்த விமானத்தை சவுதிய இராணுவத்தினர் சுட்டு

                      வீழ்த்தியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது

                      கவுதிய படைகளிற்கும் சவுதிக்கு இடையில் பலத்த மோதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது

                      Posted in Uncategorized

                      உக்கிரேன் ரசியாவிடம் விழும் நிலை – அதிபர் சிறை பிடிக்க படலாம்

                      உக்கிரேன் ரசியாவிடம் விழும் நிலை – அதிபர் சிறை பிடிக்க படலாம்

                      உக்கிரேன் நாட்டின் மீது ரசியா படைகள் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளனர்

                      ,தற்போது ஏவுகணைகள் கீவ் நகர் மீது வீழ்ந்து வெடித்த வண்ணம் உள்ளது ,எங்கும் பெரும் குண்டு சத்தங்களினால் அதிர்ந்த வண்ணம் உள்ளது

                      உக்கிரேன் அதிபர் தப்பி ஓடவோ ,அல்லது சிறை பிடிக்கப்படவோ ,தற்கொலை

                      செய்துகொள்ளும் நிலை ஏற்படலாம் என எதிர்பார்க்க படுகிறது ,அத்துடன் இராணுவம் ரசியாவிடம் சரண் அடையும் நிலை இடம்பெற போகிறது

                      தலைநகர் கட்டு பாட்டை இழந்து வருகிறது ,சில மணி நேரத்தில் ரசியா இராணுவ போர் முற்று பெறும் என நம்பலாம்

                      இவ்விதம் நிகழ்வுகள் இடம்பெற்றால் புட்டீன் ஐரோப்பாவுக்கு விடுத்த முலாவது இராணுவ எச்சரிக்கை என்பதும் ,இதன் பின்னால் பல அதிரடி மாற்றங்கள் நிகழ கூடும் என்பது நமது கணிப்பு

                        Posted in Uncategorized

                        உக்கிரேனில் 1350 மக்கள் காயம் – 202 பேர் மரணம் – தொடரும் கடும் சண்டை

                        உக்கிரேனில் 1350 மக்கள் காயம் – 202 பேர் மரணம் – தொடரும் கடும் சண்டை

                        ரசிய இராணுவத்தினர் உக்கிரேன் மீது மேற்கொன்டு வரும்தாக்குதலில் இதுவரை 33 சிறுவர்கள் உள்ளிட்ட 1350 பேர் படுகாயமடைந்துள்ளனர்

                        202 பேர் பலியாகியுள்ளனர்

                        மேலும் ஆயிரத்திற்கு மேற்பட்ட வீடுகள் பலத்த சேதமடைந்துள்ளன ,

                        பேஸ்புக் வேட்டை

                        சமூக வலைத்தளங்களில் இந்த காட்சிகள் வெளியாகிய வண்ணம் உள்ளது ,இரத்தம் தோய்ந்த நிலையில் மக்கள் சிறுவர்கள் காயங்களுடன் அலறும் காட்சிகள் வெளியாகி வருகிறது

                        பேஸ்புக் இந்த காட்சிகளை தடை செய்து வருகிறது ,பலருடைய கணக்குகள் முடக்க

                        பட்டுள்ளன ,

                        உதவி கோரல்

                        மேலும் உக்கிரேன் மக்களுக்கு உதவிட செஞ்சிலுவை சங்கம் உலக மக்களிடம் இருந்து பணம் சேகரித்து வருகிறது

                        ரசிய படைகள் உக்கிரேன் தலைநகர் கீவ் பகுதியின் மையத்தை நோக்கி முன்னேறிய வண்ணம் உள்ளனர் ,இரு தரப்பிற்கும் இடையில் கடும் சண்டை இடம்பெற்ற வண்ணம் உள்ளது

                        ஆயுத பயிற்சி

                        உக்கிரேன் அணைத்து மக்களையும் ஆயுதங்களை தாங்கி ரசியாவுக்கு எதிராக போரிடும் படி உக்கிரேன் அதிபர் கட்டளை பிறப்பித்துள்ளளார்

                        ஆனால் மக்களோ போலந்து நாட்டுக்குள் நுளைந்த வண்ணம் உள்ளனர் இதுவரை ஐம்பது ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்

                        கைவிட்ட உலகம்

                        நேட்டோ அமைப்பில் தம்மை விரைந்து இணைக்கும் படி உக்கிரேன் வேண்டுதல்

                        விடுத்தது வருகிறது ,ஆனால் உலக நாடுகள் யாவும் உக்கிரேனை கைவிட்ட
                        நிலையில் ரசியாவிடம் மண்டியிடும் நிலை ஏற்பட்டுள்ளது

                          Posted in Uncategorized

                          உக்கிரேன் 800 இராணுவ நிலைகள் மீது ரசியா தாக்குதல் – எரியும் முகாம்கள்

                          உக்கிரேன் 800 இராணுவ நிலைகள் மீது ரசியா தாக்குதல் – எரியும் முகாம்கள்

                          உக்கிரேன் தலை நகருக்குள் நுழைந்துள்ள ரசியா இராணுவத்தினர் தொடந்து

                          தாக்குதல்களை தொடுத்த வண்ணம் உள்ளனர் ,முப்படையினர் கூட்டு போர் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

                          உக்கிரேன் இராணுவத்தின் 800 நிலைகள் மீது ரசிய இராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது

                          இதில் 14 இராணுவ விமான தளங்கள் அழிக்க பட்டுள்ளன ,விமான எதிர்ப்பு ஏவுகணை

                          தளங்கள் ,மற்றும் 48 ராடர் நிலைகள் என்பன தாக்கி அழிக்க பட்டுள்ளதாக ரசியா தெரிவித்துள்ளது

                          கீவ் நகர் உள்ளே நுழைந்துள்ள ரசிய இராணுவத்திற்கும் உக்கிரேன் படைகளிற்கு இடையில் கடும்சமர் இடம் பெற்ற வண்ணம் உள்ளது

                          இந்த மோதல்கள் கீவ் நகரின் வடக்கு பகுதி நிலை வாயில்களில் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

                            Posted in Uncategorized

                            ரசிய இரானுவத்தினரை சிறை பிடித்த உக்கிரேன் இராணுவம் வீடியோ

                            ரசிய இரானுவத்தினரை சிறை பிடித்த உக்கிரேன் இராணுவம் வீடியோ

                            உக்கிரேணுக்குள் நுழைந்து தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ள ரசிய படைகள் இழப்புக்களை சந்தித்த வண்ணம் முன்னேறிய வண்ணம் உள்ளனர்

                            இதில் ஒரு பகுதி வழியாக முன்னேறிய ரசியா படைகள் மீது உக்கிரேன் படைகள் கடும்

                            தாக்குதலை மேற்கொண்டன இந்த தாக்குதலில் சிக்கி இரண்டு இராணுவத்தினரை

                            உக்கிரேன் இராணுவம் கைது செய்துள்ளது


                            கைதான முதலாவது போர் கைதிகள் மீதுவிசாரணைகள் தொடந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன

                            இதில் அழுத்தி காணொளி பார்க்க

                              Posted in Uncategorized

                              ரசியாவின் 14 விமானங்கள் சுட்டு வீழ்த்தல் -1000 இராணுவம் பலி

                              ரசியாவின் 14 விமானங்கள் சுட்டு வீழ்த்தல் -1000 இராணுவம் பலி

                              உக்கிரேன் மீது ரசிய படைகள் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளனர் ,இதற்கு

                              பதிலடி தரும் வகையில் உக்கிரேனும் தாக்குதலை நடத்திய வண்னம் உள்ளது

                              இரு தரப்பு மோதல்களில் ரசியாவை சேர்ந்த ஆயிரம் இராணுவத்தினர் பலியாகியுள்ளனர்


                              மேலும் ஏழு விமானங்கள் மற்றும் 8 உலங்குவானூர்திகள் என்பன சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக உக்கிரேன் தெரிவித்துள்ளது