Posted in Uncategorized

மனைவியை குத்திக் கொன்ற கணவன்

மனைவியை குத்திக் கொன்ற கணவன்

தம்பகல்ல, தெலிவ பிரதேசத்தில் பெண்ணொருவர் கணவனால் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (28) மாலை மொனராகலை சிறிகல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக தம்பகல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் ருவல்வெல பிரதேசத்தில் வசிக்கும் 28 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குடும்ப தகராறு காரணமாக இந்த கொலை நடந்துள்ளதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

34 வயதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், தம்பகல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்