Posted in சினிமா

குடிபோதையில் சித்ரவதை- கணவர் மீது நடிகை பரபரப்பு புகார்

குடிபோதையில் சித்ரவதை- கணவர் மீது நடிகை பரபரப்பு புகார்

பிரபல இந்தி நடிகையான ஸ்வேதா திவாரி, நாகினி உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றும் பிரபலமானார். இவர் நடிகர் ராஜா சவுத்ரியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பாலக் என்ற பெண் குழந்தை உள்ளது. பின்னர் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து பிரிந்தனர்.

அதன்பிறகு நடிகர் அபினவ் கோலியை காதலித்து 2-வது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண்குழந்தை உள்ளது. தற்போது 2-வது கணவருடனும் மோதல் ஏற்பட்டுள்ளது. அபினவ் கோலி மது போதையில் தினமும் தன்னை அடித்து சித்ரவதை செய்வதாக ஸ்வேதா திவாரி போலீசில் புகார் அளித்தார். போலீசார் அபினவ்வை கைது செய்தனர். தற்போது அபினவ்வை பிரிந்து தனியாக வசிக்கிறார். தொலைக்காட்சி தொடர்களிலும் நடிக்கிறார்.

கணவருடன் ஸ்வேதா திவாரி

நடிகை

குடும்ப வாழ்க்கை குறித்து ஸ்வேதா திவாரி அளித்துள்ள பேட்டி வருமாறு:- “கணவரை பிரிந்த பிறகு மகிழ்ச்சியாக இருக்கிறேன். எனது வாழ்க்கை ஒரு விஷக்கிருமியிடம் சிக்கி இருந்தது. அந்த கிருமி என்னை கொடுமைப்படுத்தி சித்ரவதை செய்தது. இப்போது கிருமியை அறுவை சிகிச்சை மூலம் வெட்டி எறிந்து விட்டேன். பல பெண்கள் தங்கள் பிரச்சினையை வெளியே சொல்ல பயப்படுகிறார்கள். தொல்லைகளை பொறுத்துக்கொள்கிறார்கள். எனக்கு தைரியம் உள்ளது.”

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Posted in சினிமா

பாடகர் சுஜித்தாவை காணவில்லை – வீடியோ

பாடகர் சுஜித்தாவை காணவில்லை – வீடியோ
Posted in சினிமா

ரொமாண்டிக் படத்தில் ரம்யா கிருஷ்ணன்

ரொமாண்டிக் படத்தில் ரம்யா கிருஷ்ணன்

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை வைத்திருப்பவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். இவர் தற்போது ரொமாண்டிக் என்ற திரைப்படத்தில் பிசியாக நடித்து வருகிறார்.

காதல் காமெடி படமான இந்த திரைப்படத்தில் ஆகாஷ் பூரி மற்றும் கித்திகா ஷர்மா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் நடிகை ரம்யா கிருஷ்ணாவின் காட்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

ரம்யா கிருஷ்ணன்

இதற்காக படக்குழுவினர் கோவா சென்றிருக்கின்றனர். அடுத்து வரும் 30 நாட்களுக்கு ரம்யாகிருஷ்ணன் படத்தில் இடம்பெறும் காட்சிகள் அனைத்தும் படம் பிடிக்கப்படும் எனவும் படக்குழுவினர் அறிவித்து உள்ளனர்.

Posted in சினிமா

ஜோதிகாவுடன் நடிக்கும் பிரபல நடிகர்

ஜோதிகாவுடன் நடிக்கும் பிரபல நடிகர்

ஜோதிகா திருமணத்துக்கு பிறகு 36 வயதினிலே, காற்றின் மொழி, நாச்சியார், ராட்சசி, ஜாக்பாட் என்று வித்தியாசமான கதை மற்றும் கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்துள்ளார். மணிரத்னம் இயக்கிய செக்க சிவந்த வானம் படத்திலும் அவரது கதாபாத்திரம் பேசப்பட்டது.

தற்போது கார்த்தியுடன் இணைந்து புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஜீத்து ஜோசப் இயக்குகிறார். அடுத்து பொன்மகள் வந்தாள் என்ற படமும் ஜோதிகா கைவசம் உள்ளது. இதில் பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர். ஜே.ஜே.பிரட்ரிக் இயக்குகிறார். இந்த படத்துக்கு பிறகு கத்துகுட்டி படத்தை எடுத்து பிரபலமான இரா.சரவணன் இயக்கும் படத்தில் ஜோதிகா நடிப்பது உறுதியாகி உள்ளது.

ஜோதிகா – சசிகுமார்

இந்த படத்தில் இயக்குனரும் நடிகருமான சசிகுமார் நடிக்கிறார். சசிகுமார் அண்ணனாகவும், ஜோதிகா தங்கையாகவும் நடிப்பதாக கூறப்படுகிறது. சமுத்திரக்கனி, சூரி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள். இதர நடிகர்-நடிகைகள் தேர்வு நடக்கிறது. இந்த மாதம் இறுதியில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

Posted in சினிமா

விஜய்யின் அடுத்த படத்தை இயக்குபவர் இவரா?

விஜய்யின் அடுத்த படத்தை இயக்குபவர் இவரா?

பிகில் படத்தை தொடர்ந்து விஜய் தற்போது தளபதி 64 படத்தில் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தில் விஜய்யுடன் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு டெல்லியில் நடைபெற்று வருகிறது.

இப்படத்தை தொடர்ந்து விஜய் யாருடைய இயக்கத்தில் நடிப்பார் என்ற கேள்வி எழுந்து வருகிறது. இந்நிலையில், அருண் விஜய்யின் தடம் படத்தை இயக்கிய மகிழ் திருமேணி விஜய்யிடம் கதையை கூறி ஒப்புதல் வாங்கி இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

விஜய் – மகிழ்திருமேணி

விஜய் தற்போது நடித்து வரும் ‘தளபதி 64’ படம் ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கிறது. 65வது படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

Posted in சினிமா

மிக மிக அவசரம் படத்தை பாராட்டிய பாண்டிச்சேரி முதலமைச்சர்

மிக மிக அவசரம் படத்தை பாராட்டிய பாண்டிச்சேரி முதலமைச்சர்

சுரேஷ் காமாட்சி இயக்கி தயாரித்துள்ள படம் மிக மிக அவசரம். இப்படத்தில் ஸ்ரீ பிரியங்கா கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

பெண் கான்ஸ்டபிள் வேடத்தில் நடித்த ஸ்ரீபிரியங்காவிற்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், இப்படத்தை பாண்டிச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி பார்த்து படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டை தெரிவித்திருக்கிறார்.

நாராயணசாமியுடன் படக்குழுவினர்

இப்படத்தில் நாயகனாக ஹரீஷ்குமார் முக்கிய தோற்றத்திலும் நடித்துள்ளார். சீமான், வழக்கு எண் முத்துராமன், ஈ.ராமதாஸ், லிங்கா உள்ளிட்ட பலர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

Posted in சினிமா

காதலில் விழுந்த அனுபமா

காதலில் விழுந்த அனுபமா

தமிழ் சினிமா மலையாள சினிமாவில் இருந்து பல்வேறு நடிகைகளை அறிமுகம் செய்திருக்கிறது. நயன்தாரா துவங்கி, சாய் பல்லவி வரை பல்வேறு மலையாள நடிகைகள் தமிழ் சினியாவில் வலம் வருகின்றனர். அந்த வகையில் இளம் நடிகை அனுபமா பரமேஸ்வரனும் ஒருவர்.

மலையாளத்தில் நடிகர் நிவின் பாலி நடித்த பிரேமம் படம் தமிழ் தெலுங்கு இந்தி என பல மொழி ரசிகர்களையும் கவர்ந்தது. இந்த படத்தில் மலர் டீச்சருக்கு பின்னர் ரசிகர்களை கவர்ந்தது நடிகை அனுபமா தான். இவர் தொடர்ந்து தனுஷ் நடித்த கொடி படத்திலும், வேறு தெலுங்கு படங்களிலும் நடித்தார்.

அனுபமா பரமேஸ்வரன்

இப்போது படவாய்ப்புகள் இல்லாமல் மாடலிங் செய்து புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்பு தேடி வருகிறார். படங்களில் கவர்ச்சிக்கு மறுத்து வந்த அனுபமா சமீபத்தில் பத்திரிகையின் அட்டை படத்திற்கு கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

சமீபத்தில் குளத்தில் போட்டோஷூட் ஒன்றை நடத்தினார். இந்நிலையில் இவர் மாடர்ன் உடையில் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் படம் சமூகவலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. இவர்தான் அனுபமாவின் காதலர் என்ற ரீதியில் செய்திகள் பரவுகின்றன.

Posted in சினிமா

தள்ளிப்போகும் நயன்தாரா திருமணம்?

தள்ளிப்போகும் நயன்தாரா திருமணம்?

தென்னிந்திய மொழி படங்களில் அதிக சம்பளம் பெறும் நடிகையாக வலம் வரும் நயன்தாரா ‘பிகில்’ படத்துக்கு பிறகு ரஜினியுடன் ‘தர்பார்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையான ‘நெற்றிக்கண்’ படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. அடுத்து திருமணத்துக்கு தயாராவதாக கூறப்பட்டது.

நயன்தாரா ஏற்கனவே இரண்டு தடவை காதல் முறிவை சந்தித்து 3-வது முறையாக இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதல் வயப்பட்டு உள்ளார். இருவரும் வெளிநாடுகளில் ஜோடியாக சுற்றும் புகைப்படங்களை வலைத்தளத்தில் வெளியிட்டு மகிழ்கிறார்கள். டிசம்பர் மாதம் அல்லது அடுத்த வருடம் தொடக்கத்தில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளதாக நெருக்கமானவர்கள் பேசினர்.

இதனால் கைவசம் உள்ள படங்களை விரைவாக முடித்து கொடுக்க அவசரம் காட்டுவதாக கூறப்பட்டது. சமீபத்தில் இருவரும் திருப்பதி சென்று சாமி கும்பிட்டு விட்டு திரும்பியபோது நயன்தாராவிடம் உங்கள் திருமணம் எப்போது? என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு பதில் சொல்லாமல் சிரித்தபடி நழுவினார்.

நயன்தாரா, விக்னேஷ் சிவன்

இந்த நிலையில் எல்.கே.ஜி. படத்தில் நடித்து பிரபலமான ஆர்.ஜே. பாலாஜி நடிக்கும் ‘மூக்குத்தி அம்மன்’ படத்தில் கதாநாயகியாக நடிக்க நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். இதன்மூலம் திருமணத்தை தள்ளி வைத்து இருப்பதாக கூறப்படுகிறது.

Posted in சினிமா

நடிகையின் கவர்ச்சி அவதாரம்

நடிகையின் கவர்ச்சி அவதாரம்

அருவி படத்தில் நடித்து நல்ல நடிகை என பெயர் எடுத்தவர் அதிதி பாலன். கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட அருவி படத்திற்கு எல்லா தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்தன. இந்த படத்தை தொடர்ந்து, அதிதி பாலனுக்கு பல பட வாய்ப்புகள் வரிசை கட்டின.

ஆனால், நடித்தால், சிறப்பான கதையம்சம் இருக்கும் படத்தில் தான் நடிப்பேன் என கூறி, பல பட வாய்ப்புகளை தட்டி விட்ட அதிதி பாலனுக்கு தொடர்ச்சியான சினிமா வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் போனது. தற்போது, ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் ஜாக் அண்டு ஜில் படத்தில் அதிதி பாலன் நடித்து வருகிறார்.

அதிதி பாலன்

வேறு பட வாய்ப்புகள் இல்லாததால், எல்லா நடிகைகளையும் போலவே, கவர்ச்சியாக போஸ் கொடுத்து, போட்டோ ஷூட்களை நடத்தி அதை வெளியிட்டு, வாய்ப்பு தேடி வருகிறார். இதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஆனால், அவருக்கு வேறு பட வாய்ப்புகள் இல்லாததால், எல்லா நடிகைகளையும் போலவே, கவர்ச்சியாக போஸ் கொடுத்து, போட்டோ ஷூட்களை நடத்தி அதை வெளியிட்டு, வாய்ப்பு தேடி வருகிறார். இதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Posted in சினிமா

பிரிந்து வாழும் பெற்றோரை சேர்த்து வைக்காதது ஏன்? – சுருதிஹாசன் விளக்கம்

பிரிந்து வாழும் பெற்றோரை சேர்த்து வைக்காதது ஏன்? – சுருதிஹாசன் விளக்கம்

கமல்ஹாசனின் மூத்த மகள் சுருதிஹாசன். முன்னணி கதாநாயகியாக திகழ்கிறார்.

அவர் தனது பெற்றோர்களின் வாழ்க்கை பற்றி முதன்முறையாக மனம் திறந்துள்ளார். ஒரு பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:-

என்னுடைய வாழ்க்கையில் மிக முக்கியமான பாகம் என்றால் அது என்னுடைய அப்பா கமல்ஹாசன் மற்றும் அம்மா சரிகா தான். பொதுவாக அப்பா அம்மா பிரிந்து வாழ்ந்தால் மற்றவர்களுக்கு வேண்டுமானால் செய்தியாக இருக்கலாம்.

ஆனால் வீட்டில் உள்ளவர்களுக்கு அது மிகவும் வருத்தமான ஒன்றாகவே இக்கும். ஆனால் என்னை பொறுத்தவரையில் எனது அப்பா, அம்மா பிரிந்தது எனக்கு மகிழ்ச்சியான வி‌ஷயம் ஆகும்.

தாயாருடன் சுருதிஹாசன்.

ஏனென்றால் என் அப்பா அம்மா இருவருமே மிகப்பெரிய நடிகர்கள். இருவரும் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக்கொண்டு, நிம்மதி இல்லாமல் இருப்பதை விட தனித்தனியாக பிரிந்து அவரவர்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்வதே சிறந்த வி‌ஷயமாகும்.

அப்பா அம்மா இருவரும் பிரிந்தது கஷ்டமாக இருந்தாலும் சேர்ந்து வாழும் போது நிறைய பிரச்சனைகள் உருவாகியது.

என் அப்பா அம்மா இருவரையும் சேர்த்து வைக்க வேண்டும் என்று தான் நினைத்தேன். ஆனால் அவர்கள் இருவரும் மீண்டும் சேர்ந்தால் ஒருவருக்கொருவர் சண்டையிட்டு மன நிறைவு இல்லாமல் தான் இருப்பார்கள். அதனால் தான் நான் அவர்கள் இருவரையும் சேர்த்து வைக்கும் முயற்சியில் ஈடுபடவில்லை.

இவ்வாறு சுருதிஹாசன் கூறியுள்ளார்.

Posted in சினிமா

எல்லாவற்றுக்குமே எல்லை உண்டு – எஸ்.ஏ.சந்திரசேகர்

எல்லாவற்றுக்குமே எல்லை உண்டு – எஸ்.ஏ.சந்திரசேகர்

புரட்சி இயக்குனர்கள் என்று பெயர் பெற்ற நீங்கள் ஏன் இளைஞர்களுக்கான படம் என்று மாறினீர்கள்?
இப்போது தியேட்டர்களுக்கு வந்து படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிட்டது. இதுபற்றி கடந்த 5 ஆண்டுகளாக ஆய்வு செய்ததில் தியேட்டர்களுக்கு வருபவர்களில் 80 சதவீதம் பேர் இளைஞர்கள் தான். எனவே இளைஞர்களுக்கான படம் எடுக்க விரும்பினேன். அந்த இளைஞர்கள் எதை விரும்புகிறார்கள் என்பதை அப்டேட் செய்துகொண்டேன். புதிய இளைஞர்களின் படங்களையும் பார்த்து இந்த கதையை எழுதினேன். இளைஞர்களுக்கு இந்த படம் சில புரிதல்களை ஏற்படுத்தும். ரத்தக்கண்ணீர் எம்.ஆர்.ராதா போல இன்றைய இளைஞர்கள் ஆடாத ஆட்டம் எல்லாம் ஆடுகிறார்கள். எல்லாவற்றுக்குமே எல்லை உண்டு. எல்லை மீறும்போது ஏற்படும் பிரச்சினைகளும் சிக்கல்களுமே கதை. அறிவுரையாக இல்லாமல் சுவாரசியமாக சொல்லி இருக்கிறேன்.

எஸ்.ஏ.சந்திரசேகர் தனது 70வது படமாக கேப்மாரி படத்தை இயக்கி இருக்கிறார். ஜெய், அதுல்யா, வைபவி சாண்டில்யா உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படம் இந்த மாதம் வெளியாக இருக்கிறது. இதையொட்டி எஸ்.ஏ.சந்திரசேகர் அளித்த பேட்டி:-

எஸ்.ஏ.சந்திரசேகர்

கேப்மாரி என்ற தலைப்பு ஏன்?
ஆங்கிலேயர் காலத்தில் தொப்பியை மாற்றி மாற்றி போட்டு ஏமாற்றுபவர்களை கேப் மாறி விளையாடுபவர்கள் என்று அழைக்க தொடங்கி பின்னர் கேப்மாரி என்ற வார்த்தை கெட்ட வார்த்தை போல மாறிவிட்டது. ஒரு இளைஞன் 4 பெண்களுடன் விளையாடுகிறான் என்னும்போது இந்த தலைப்பு பொருத்தமாக இருந்தது. வாழ்க்கையை கொண்டாட்டமாக எடுத்துக்கொண்டு எதையும் எளிதாக எடுத்துக்கொண்டு வாழும் ஜாலியான பையன் கதாபாத்திரத்துக்கு ஜெய் பொருந்தினார். அவர் படத்துக்குள் வந்த பிறகு படமே எளிதாகி விட்டது. அதுல்யாவும் வைபவியும் கூட நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார்கள். மூவரையும் வேலை வாங்கியது எனக்கு எளிதாக இருந்தது. காமெடி வேடத்தில் சித்தார்த் விபின் கலக்கி இருக்கிறார். படம் பார்ப்பவர்கள் 2 மணி நேரம் ஜாலியாக படத்தோடு ஒன்றி பார்க்கலாம்.

Posted in சினிமா

மீ டூ-வில் சிக்கிய பிரபல வில்லன் நடிகர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்.

மீ டூ-வில் சிக்கிய பிரபல வில்லன் நடிகர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்.

தமிழில் விஷாலின் ‘திமிரு’ படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானவர் விநாயகன். சிம்புவின் சிலம்பாட்டம், தனுசின் மரியான் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். மலையாளத்தில் முன்னணி நடிகராக இருக்கிறார். பா.ஜனதாவுக்கு எதிரான கருத்தை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கினார். சமூக வலைத்தளத்தில் நிறம் மற்றும் சாதி தொடர்பான தாக்குதலுக்கும் உள்ளானார்.

இந்த நிலையில் பாலியல் புகாரிலும் சிக்கினார். கேரளாவை சேர்ந்த சமூக ஆர்வலரும் மாடல் அழகியுமான மிருதுளா தேவி, விநாயகன் மீது மீடூ-வில் பாலியல் புகார் தெரிவித்தார். அவர் கூறும்போது, “நிகழ்ச்சியொன்றில் கலந்து கொள்ள வருமாறு நடிகர் விநாயகனை அழைத்தேன். அப்போது போனில் தன்னிடம் ஆபாசமாக பேசினார். நான் மட்டுமன்றி எனது தாயும் அவர் விருப்பத்துக்கு இணங்க வேண்டுமென்றார் என்று கூறினார்.

விநாயகன்

இது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. விநாயகன் மீது கல்பட்டா போலீசில் மிருதுளா தேவி புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விநாயகனை கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுதலை ஆனார். இந்த நிலையில் விநாயகன் மீது கல்பட்டா நீதிமன்றத்தில் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதில் குற்றத்தை விநாயகன் ஒப்புக்கொண்டதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த வழக்கு விசாரணை கோர்ட்டில் அடுத்த மாதம் நடக்கிறது.

Posted in சினிமா

என்னையும் ரஜினியையும் யாராலும் பிரிக்க முடியாது- கமல் பேச்சு

என்னையும் ரஜினியையும் யாராலும் பிரிக்க முடியாது- கமல் பேச்சு

சென்னை ஆழ்வார்பேட்டையில் ராஜ்கமல் நிறுவனத்தின் புதிய அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதில் இயக்குநர் கே.பாலச்சந்தரின் சிலை திறப்பு விழா இன்று நடைபெற்றது. நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் இணைந்து இயக்குநர் கே.பாலச்சந்தரின் மார்பளவு சிலையை திறந்து வைத்தனர். கமல் இந்த விழாவில் பேசத் தொடங்கியதும் ரஜினியை ஆர்.கே அவர்களே என்று அழைத்து தொடங்கினார்.

அவர் பேசியதாவது:- இந்திய திரைப்பட துறையில் ரஜினியை தாமதமாக கவுரவித்து இருந்தாலும் சரியான நபரை தான் கவுரவித்து இருக்கிறார்கள். அவர் சினிமா வாழ்க்கைக்காக எடுத்துக்கொண்ட சிரத்தை எனக்கு சற்றும் குறையாதது. எங்களது பாணி தான் வெவ்வேறு. நாங்கள் அப்போதே ஏ.வி.எம். மரத்தடியில் பேசி தெளிவாக முடிவு எடுத்தோம்.

ஒருவருக்கு ஒருவர் நட்பாகவும் மரியாதையாகவும் இருந்துகொள்ள வேண்டும் என்பது நாங்கள் பேசி முடிவெடுத்தது தான். எங்களுக்கு ரசிகர்கள் உருவாவதற்கு முன்பு எங்களது முதல் ரசிகர்கள் நாங்கள் தான். எனக்கு அவரும், அவருக்கு நானும் ரசிகர்களாக இருப்போம். என்றும் நாங்கள் தெளிவாக இருப்போம். ஹேராம் போன்ற படங்கள் ஏன் எடுக்கிறீர்கள் என்று கேட்டார்கள்.

கமல்ஹாசன், ரஜினிகாந்த்

நானும் ரஜினியும் பேசியதை எல்லாம் காசு வந்த பிறகு எடுக்காமல் விட்டால் தான் தவறு. நான் மட்டும் அல்ல மணிரத்தினமும் அவற்றை எடுத்து வருகிறார். முதல் படத்திலேயே மணிரத்தினத்தை பார்த்து வியந்தது உண்டு. அதே வியப்பு ரஜினிக்கும் இருந்தது தெரியும். தளபதி டைட்டிலை ரஜினி சொன்னபோது என் காதுகளுக்கு முதலில் கணபதி என்று விழுந்துவிட்டது. எனவே பிடிக்கவில்லை என்றேன்.

விநாயகருக்கான டைட்டிலாக இருக்கிறதே என்று கேட்டேன். பின்னர் தெளிவாக சொன்னதும் தான் அற்புதமான டைட்டில் என்றேன். எங்கள் ரசிகர்கள் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக்கொள்வார்கள். ஆனால் நாங்கள் தனிமையில் பேசிக்கொள்வதை கேட்டால் அவர்கள் அதிர்ச்சியடைவார்கள். ஆச்சர்யப்படுவார்கள்.

பாலச்சந்தர் சிலையாக இங்கே இருக்கிறார். நிலையாக என்றுமே இருப்பார். பாலச்சந்தர், அனந்து இரண்டு பேர் தொலைபேசி எண்களும் என் போனில் இருந்து அழிக்க முடியாதவை. கடந்த மாதம் கூட தனிமையாக நினைத்தபோது அனந்து சார் எண்ணுக்கு அழைத்தேன். அது அவரது வீடு என்றதும் கண்கலங்கிவிட்டேன்.

அப்போது அவர்கள் 8-ந்தேதி பிறந்தநாள் என்றார்கள். தெரியும் என்றேன். அந்த தேதியில் பாலச்சந்தருக்கு சிலை திறப்பது சிறப்பான ஒன்று. பாலச்சந்தர் சார் சிலை இங்கே வைத்ததால் அவர் என்னை கண்காணித்துக்கொண்டே இருக்கிறார் என்ற எண்ணம் எனக்குள் இருக்கும்.

ரஜினிகாந்த், கமல்ஹாசன்

ராஜ்கமல் நிறுவனத்தின் 50-வது படம் கூடிய விரைவில் அறிவிக்கப்படும். அதில் நான் நடிக்க வேண்டிய அவசியம் இல்லை. பிறரை வைத்து படங்கள் தயாரிக்கும் அளவுக்கு நீங்கள் இந்த நிறுவனத்தை வளர்த்து விட்டிருக்கிறீர்கள். அவ்வை சண்முகி ராஜ்கமலுக்காக ஓகே சொல்லி வைத்து இருந்த கதை. வேறு ஒரு தயாரிப்பாளர் கேட்டதும் கொடுத்தோம். தசாவதாரம் படமும் அப்படி தான். மணிரத்தினத்துக்கும் எனக்கும் எண்ண ஓட்டம் ஒன்றுதான்.

வைரமுத்துவின் முதல் பாடலை கேட்டு அவர்தான் வேண்டும் என்று அடம் பிடித்து அழைத்தவன் நான். பின்னர் அவரது புத்தகம் ஒன்றை அவருக்கே மனப்பாடமாக வாசித்து காண்பித்து அசத்தினேன். இவர்கள் எல்லாம் சேர்ந்து தூக்கி நிறுத்திய ராஜ்கமல் தான் இன்று நடைபோட்டுக்கொண்டு இருக்கிறது. எங்களின் பயணம் அற்புதமான பயணம். சினிமா துறையில் கோபம், அவமானம், அவமரியாதை எல்லாமும் வரும். இருந்தும் எங்களை யாராலும் பிரிக்க முடியவில்லை.

முக்கியமாக நானும் ரஜினியும். இத்தனை ஆண்டுகளாக இணைபிரியாத நண்பர்களாக இருக்கிறோம். எங்கள் கைகளை யாராலும் பிரிக்க முடியாது. நாங்கள் சந்தித்தால் எல்லாவற்றையும் பேசிக் கொள்வோம். இருவருக்கும் இடையே போட்டு கொடுப்பது இதனாலேயே குறைந்துவிட்டது. இந்த நிறுவனத்தை தாங்கி பிடித்தது நிறைய பேர். ராஜ்கமலை நடத்தியவர்கள் நடத்துபவர்கள் தான் இந்த விழாவுக்கு காரணம்.

நான் பிறந்த விழாவை விட அதிகம் கொண்டாடும் விழா ராஜ்கமல் பிறந்தநாள் விழா. ரஜினி ஐகான் விருது பெறுவதற்கு போனில் வாழ்த்து சொல்லி விட்டேன். நேரிலும் சொல்லிக் கொள்கிறேன். அவர் திரைப்படத்துறைக்கு வந்த முதல் ஆண்டே ஐகான் ஆகிவிட்டார். சிவாஜி போல அறிமுகமான முதல் ஆண்டே ஐகான் ஆனவர் அவர். 44 ஆண்டுகள் தாமதமாக செய்து இருந்தாலும் செய்தவர்களுக்கு நன்றி. ராஜ்கமலை கவனிப்பவர்கள் தொடர்ந்து கவனியுங்கள். தொடர்ந்து இணைந்து பயணிப்போம்.

கமல்

இங்கே அன்பு இருக்கிறது அது வெல்லும். நான் அலுவலகம் அமைக்க போகிறேன் என்றதும் இங்கே படம் எடுக்க போகிறேன் என்றார் பாலச்சந்தர். அவர் படப்பிடிப்புக்காக காத்திருந்து பின்னர் தான் அலுவலகம் திறந்தோம். அவர் தடம் பதித்த இடத்தில் அலுவலகம் அமைவது எனக்கு சிறப்பு.

இவ்வாறு கமல் பேசினார்.

Posted in சினிமா

மம்முட்டி பட ரிலீசுக்காக திருமண தேதியை மாற்றிய ரசிகர்

மம்முட்டி பட ரிலீசுக்காக திருமண தேதியை மாற்றிய ரசிகர்

கேரள மாநிலம் பரவூர் பகுதியை சேர்ந்தவர் மேமன் சுரேஷ். இவர் நடிகர் மம்முட்டியின் தீவிர ரசிகர். மம்முட்டி படம் வெளியாகும் போதெல்லாம் முதல் நாள் முதல் ஷோ பார்ப்பது இவரது வழக்கம். மேமன் சுரேசுக்கு வருகிற 21-ந் தேதி திருமணம் செய்ய அவரது வீட்டாரால் தேதி குறிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் மம்முட்டி நடிப்பில் மாமாங்கம் என்ற புதிய திரைப்படம். மேமன் சுரேசுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட தேதியில் வெளியாக இருந்தது. தன்னுடைய திருமண நாளிலேயே தனக்கு பிடித்த நடிகரின் திரைப்படமும் வெளியாக உள்ளது என்பதால் தனது திருமணத்தை மேமன் சுரேஷ் கடந்த மாதம் 30-ந் தேதிக்கு மாற்றி வைத்திருக்கிறார்.

மம்முட்டி

மேமன் சுரேசுக்கு கடந்த மாதம் 30-ந்தேதி அவருக்கு நிச்சயம் செய்த பெண்ணுடன் நல்ல முறையில் திருமணம் நடைபெற்றது. புது மனைவியுடன் தனக்கு பிடித்த மம்முட்டியின் திரைப்படத்தை வருகிற 21-ந்தேதி முதல் நாளே பார்க்கலாம் என்று சந்தோ‌ஷமாக காத்திருக்கிறார்.

Posted in சினிமா

வைரலாகும் அமலாபாலின் குளியலறை படம்

வைரலாகும் அமலாபாலின் குளியலறை படம்

தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி என்ற திரைப்படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை அமலாபால். ஆனால் அவரது முதல் படமே சர்ச்சையை ஏற்படுத்தியது. மைனா படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். அதன் பின்னர் விஜய், ஜெயம் ரவி, தனுஷ் போன்ற பல முன்னணி நடிகர்களின் படங்களில் நாயகியாக நடித்த அமலாபால் பிரபல இயக்குனர் விஜய்யை திருமணம் செய்து பின்னர் விவாகரத்து பெற்றார்.

அமலாபாலின்

அதனை தொடர்ந்து விளம்பரங்கள், படங்கள் என்று பிசியாக இருந்த அமலா பால் சமீபத்தில் ஆடை என்ற படத்தில் நடித்திருந்தார். அந்த படம் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியது. தற்போது படவாய்ப்புகள் எதுவும் இல்லாத நிலையில் அமலா பால் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று வருகிறார். அங்கு எடுக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோ போன்றவற்றையும் அவ்வப்போது சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார்.

அமலாபால்

இந்நிலையில் அவர் தற்போது பூக்கள் நிரப்பப்பட்ட குளியல் தொட்டியில் மேலாடை இல்லாமல், ஜன்னல் வழியாக அருகில் செல்லும் ஓடையை வேடிக்கை பார்த்தப்படி போஸ் கொடுத்த படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

Posted in சினிமா

ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினிதான் – சல்மான் கான்

ரஜினிகாந்த், நயன்தாரா, சுனில் ஷெட்டி, பிரதீக் பார்பர், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘தர்பார்’. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். இதன் படப்பிடிப்பு முடிந்து இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் தீம் மியூசிக் உடன் கூடிய வீடியோ போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது.

இதனை தமிழில் கமல்ஹாசன், தெலுங்கில் மகேஷ் பாபு, மலையாளத்தில் மோகன்லால் மற்றும் இந்தியில் சல்மான் கான் ஆகியோர் வெளியிட்டனர். இதன் தீம் மியூசிக் மற்றும் ரஜினியின் ஸ்டைலான லுக் ஆகியவற்றுக்கு ரஜினி ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இந்தி போஸ்டரை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட சல்மான் கான், “என் வாழ்த்துகள் வெறும் சூப்பர் ஸ்டாருக்கு அல்ல, ஒரே சூப்பர் ஸ்டாருக்கு” என்று தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த், சல்மான் கான்

தர்பார் வரும் பொங்கல் வெளியீடாக திரைக்கு வரவுள்ளது. இந்த படத்தில் ஆதித்யா அருணாச்சலம் என்ற காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் ரஜினி நடித்துள்ளார். ஆதித்யா என்பது படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாசின் மகன் பெயர். அருணாச்சலம் என்பது முருகதாசின் அப்பா பெயர். ‘தர்பார்’ படத்தை தொடர்ந்து ரஜினி, சிவா இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்தவுள்ளார்.

Posted in சினிமா

ராணாவுடன் காதலா? – ரகுல் பிரீத் சிங்

ராணாவுடன் காதலா? – ரகுல் பிரீத் சிங்

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் ரகுல் பிரீத் சிங். அவர் பாகுபலி நடிகர் ராணாவை காதலிக்கிறார் என்று கிசுகிசுக்கப்பட்டது. சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரகுல் பிரீத் சிங் இதற்கு விளக்கமளித்துள்ளார்

அவர் கூறியுள்ளதாவது: “எங்கள் இருவரது வீடும் மிக அருகில் தான் உள்ளது. நான் சினிமாவுக்கு வந்ததில் இருந்தே ராணாவை தெரியும். நாங்கள் நண்பர்களாக மட்டுமே பழகி வருகிறோம். நான் சிங்கிள் தான். இதுவரை யாரையும் காதலித்ததில்லை. அதற்கு நேரமும் இல்லை” என கூறியுள்ளார்.

ரகுல் பிரீத் சிங்

ரகுல் பிரீத் சிங் தமிழில் யுவன், தடையறத்தாக்க, புத்தகம், என்னமோ ஏதோ, ஸ்பைடர், தீரன், தேவ், என்ஜிகே ஆகிய படங்களில் நடித்துள்ளார். சிவகார்த்திகேயனின் எஸ்.கே. 14, இந்தியன் 2 ஆகிய திரைப்படங்களில் தற்போது நடித்து வருகிறார்.

Posted in சினிமா

யாரையும் காதலிக்க நான் தயாராக இல்லை – இலியானா

யாரையும் காதலிக்க நான் தயாராக இல்லை – இலியானா

தமிழில் நண்பன் படத்தில் நடித்து பிரபலமான இலியானா இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார். இலியானாவுக்கும் ஆண்ட்ரூ என்பவருக்கும் நீண்ட நாட்களாக இருந்த காதல் இப்போது முறிந்துள்ளது.

இலியானா அளித்த பேட்டி வருமாறு:-

இனிமேல் யாரையும் காதலிக்க நான் தயாராக இல்லை. இப்போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன். என் வாழ்க்கை முறையை மாற்றி புதிய வழியில் வாழப்போகிறேன். உங்கள் மீது அக்கறையோடு இருங்கள். வாழ்க்கை எப்போதும் ஒரே மாதிரி இருக்காது. சில நேரம் மற்றவர்களை நம்ப வேண்டி வரும். அந்த நேரத்தில் அவர்கள் மீது சார்ந்து இருக்க நினைப்போம். ஆனால் வாழ்நாள் முழுவதும் அவர்கள் நம்மோடு இருப்பார்களா? என்பது தெரியாது. நாம் மட்டும் மனப்பூர்வமாகவும், கண்மூடித்தனமாகவும் நம்பி அவர்களை அனுசரிப்போம். அப்படி இருக்க கூடாது. நம்மை பற்றி அதிகம் யோசிக்க வேண்டும்.

இலியானா

வாழ்க்கையில் எது நடந்தாலும் முதலில் நமக்காக இருப்பது நாம் மட்டும்தான். அதனால் என்மீது நான் அதிக அக்கறை எடுக்கிறேன். உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் என்னை நன்றாக வைத்துக்கொள்கிறேன். இது நமது வாழ்க்கை. நாம்தான் பாதுகாக்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டேன்”.

இவ்வாறு இலியானா கூறினார்.

Posted in சினிமா

போக்கிடம் இல்லாமல் அரசியலுக்கு வரவில்லை – கமல்ஹாசன் video

Posted in சினிமா

திருமண ஆசையில் மிதக்கும் நடிகை

தமிழில் மேயாத மான், மெர்குரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளவர் இந்துஜா. சமீபத்தில் வெளியான மகாமுனி, பிகில் போன்றா படங்கள் இந்துஜாவுக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்துள்ளது. கதாபாத்திரமாகவே மாறி விடுகிறார் என்ற பாராட்டுகளை பெற்று தந்துள்ளது. திரைப்படங்களை போல் சமூக வலைதளத்திலும் ஆக்டிவாக இருக்கும் இந்துஜா, அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

இந்துஜாவின் இன்ஸ்டாகிராம் பதிவு

அந்த வகையில் சமீபத்தில் போட்டோ ஒன்றை பதிவிட்டிருந்தார். அதற்கு ஏராளமான லைக்குகளும், கமெண்டுகளும் குவிந்து வந்தன. இந்துஜாவின் புகைப்படத்தை பார்த்த நடிகை மகிமா நம்பியார், திருமணம் செய்து கொள்ளலாமா என கமெண்ட் செய்திருந்தார். அதற்கு பதிலளித்துள்ள நடிகை இந்துஜா, திருமணம் செய்து கொள்ளலாம் என்று சம்மதம் தெரிவித்துள்ளார். இதேபோல் நடிகை அதுல்யாவும் இந்துஜாவை திருமணம் செய்ய காத்திருப்பதாக பதிவிட்டுள்ளார். நடிகை இந்துஜா, மகிமா நம்பியார் மகாமுனி படத்தில் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.