Posted in சினிமா

வதந்திகளை நம்பாதீர்கள் – யோகி பாபு வேண்டுகோள்

வதந்திகளை நம்பாதீர்கள் – யோகி பாபு வேண்டுகோள்

ரஜினியுடன் ‘தர்பார்’, சிவகார்த்திகேயனுடன் ‘ஹீரோ’, விஜய் சேதுபதியுடன் ‘கடைசி விவசாயி’ என யோகி பாபுவின் கால்ஷீட் டைரி நிரம்பி வழிகிறது. கதையின் நாயகனாக ‘மண்டேலா’ உள்ளிட்ட சில படங்களிலும் நடித்து வருகிறார். இதனிடையே ‘சத்யம்’ இயக்குநர் ராஜசேகர் இயக்கத்தில் உருவாகும் படத்தில் யோகி பாபு நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் யோகிபாபு ஒரு பெண்ணுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகி வைரலாகியுள்ளது. அந்த பெண் யோகிபாபுவின் வருங்கால மனைவி என்றும் செய்திகள் வெளியானது.

யோகிபாபு

இதற்கு மறுப்பு தெரிவித்து நடிகர் யோகி பாபு ட்விட்டர் பக்கத்தில், ‘என் கல்யாணம் பற்றிய தவறான தகவல்கள் பரவி வருகிறது. அது வெறும் வதந்தியே. எனது கல்யாணம் முடிவானதும் நானே அனைவருக்கும் முறையாக அறிவிப்பேன். நன்றி.’ என்று பதிவு செய்துள்ளார்.

Posted in சினிமா

சிம்பு மீது ஈர்ப்பு – நடிகை தன்ஷிகா பேட்டி

சிம்பு மீது ஈர்ப்பு – நடிகை தன்ஷிகா பேட்டி

சிம்பு மீது ஈர்ப்பு – நடிகை தன்ஷிகா பேட்டி

தமிழ் சினிமாவில் பேராண்மை, அரவாண், பரதேசி, கபாலி போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை தன்ஷிகா. கடந்த வருடம் வெளியான காலக்கூத்து படத்தினை தொடர்ந்து தற்போது கிட்னா, யோகிடா, இருட்டு ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.ரஜினியுடன் கபாலி படத்தில் நடித்ததன் மூலம் இன்னும் பிரபலமானார். கபாலி படத்தில் இவரின் நடிப்பை பலரும் பாராட்டினர்.

தன்ஷிகா

இந்நிலையில் தற்போது சமீபத்தில் நடைப்பெற்ற பேட்டி ஒன்றில் தன்ஷிகா கூறியதை கேட்டு ரசிகர்கள் வியந்து வருகின்றனர். அந்த பேட்டியில் தன்ஷிகா நடிகர் சிம்பு மீது தனக்கு ஈர்ப்பு இருப்பதாக கூறியுள்ளார். மேலும் தனக்கு வரவேண்டிய கணவர் நம்பிக்கையுடையவராக இருக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

Posted in சினிமா

ஒரு பாடலுக்கு ஆட ஒரு கோடி கேட்ட பிரபல நடிகை

ஒரு பாடலுக்கு ஆட ஒரு கோடி கேட்ட பிரபல நடிகை

ஒரு பாடலுக்கு ஆட ஒரு கோடி கேட்ட பிரபல நடிகை

தமிழ் சினிமாவில் நடிகர் பரத்துக்கு ஜோடியாக பழனி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை காஜல் அகர்வால். ஆனால் இவர் அதற்கு முன்பு தெலுங்கு சினிமாவில் நடித்து பிரபலமானவர். பின்னர் தெலுங்கில் வெளியான மகதீரா என்ற படத்தில் நடித்ததன் மூலம் மேலும் பிரபலமானார். அதனை தொடர்ந்து இவருக்கு பட வாய்ப்புகள் குவியவே, முன்னணி நடிகையாக வலம் வர தொடங்கி விட்டார்.

இதுவரை 50 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். தமிழில் முன்னணி நடிகர்களான விஜய், அஜித், சூர்யா, கார்த்தி போன்ற நடிகர்களும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். இந்நிலையில் இன்றும் பிசியாக இருந்து வரும் நடிகை காஜல் அகர்வாலிடம் தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிக்கும் ஒரு படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட இவரை அழைத்துள்ளனர்.

காஜல் அகர்வால்

அதற்கு காஜல் சம்பளமாக ஒரு கோடி கேட்டுள்ளார். இதனை கேட்ட தயாரிப்பாளர் ஒரு படத்திற்கு ஒரு நடிகை பெறும் சம்பளத்தை ஒரு பாடலுக்கு இவர் கேட்கிறாரே என அதிர்ச்சியாகி உள்ளார். இதனால் அந்த பாடலுக்கு நடனம் ஆடுவரா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

Posted in சினிமா

ரஜினி பிறந்தநாளுக்கு ரீ-ரிலீசாகும் பாட்ஷா

ரஜினி பிறந்தநாளுக்கு ரீ-ரிலீசாகும் பாட்ஷா

ஜினிகாந்தின் தர்பார் படத்துக்காக அவரது ரசிகர்கள் காத்திருக்கும் வேளையில் தற்போது வெளியான தகவல் அவர்களை மேலும் கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது. 1995 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியான படம் ரஜினியின் ‘பாட்ஷா’. சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் உருவான இந்த படத்தில் நக்மா, ரகுவரன், விஜயகுமார், தேவன், ஜனகராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்கும் மேலாக திரையில் ஓடி ப்ளாக்பஸ்டர் வெற்றியை பெற்ற படம் ’பாட்ஷா’. இந்த படம் சமீபத்தில் டிஜிட்டல் வடிவில் மாற்றியமைக்கப்பட்டு மீண்டும் திரையிடப்பட்டது.

ரஜினி

இந்நிலையில், கோவா திரைப்பட விழாவில் ரஜினிகாந்த் கோல்டன் ஐகான் விருது பெற்றதை வரவேற்கும் விதமாகவும், அவரது பிறந்தநாள் அடுத்த மாதம் 12 ந் தேதி கொண்டாடப்படவுள்ளதை முன்னிட்டும் பாட்ஷா படத்தை மீண்டும் திரையிட அதன் தயாரிப்பு நிறுவனமான சத்யா மூவிஸ் டுவிட்டரில் தெரிவித்துள்ளது. அதில், “டிசம்பர் 11ம் தேதி ரஜினியின் பாட்ஷா படம் உலக அளவில் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் திரையிடப்பட உள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posted in சினிமா

காதல் சர்ச்சையில் சிக்கிய அனுபமா

காதல் சர்ச்சையில் சிக்கிய அனுபமா

கொடி படம் மூலம், தமிழில் அறிமுகமான அனுபமா பரமேஸ்வரன், தற்போது, மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். இவர், இந்திய கிரிக்கெட் வீரர் பும்ராவை காதலிப்பதாக, சமீபத்தில் தகவல் வெளியானது. உடனடியாக, அனுபமா அதை மறுத்தார். இந்நிலையில், இந்தி நடிகர் ஒருவருடன், அனுபமாவுக்கு காதல் என, தகவல்கள் வெளியாகின.

அனுபமா பரமேஸ்வரன்

இதனால், ஆத்திரம் அடைந்த அனுபமா, ”காதலிப்பதோ, திருமணம் செய்து கொள்வதோ, அவரவரின் தனிப்பட்ட விஷயம். இதில், அடுத்தவர் தலையிடுவது அநாகரிகம். என் வாழ்க்கையை தீர்மானிக்க, எனக்கு தெரியும். இது குறித்து, பிறர் கவலைப்பட வேண்டாம்,” என, கோபமாக தெரிவித்துள்ளார்.

மிஞ்சிய சாதம் தூக்கி போடாமல் 10 நிமிடத்தில் தித்திக்கும் ஸ்வீட் செஞ்சு அசத்துங்க|LeftOverRice Sweet
Posted in சினிமா

என் வாழ்க்கையை மாற்றியது அவர்தான் – ரஜினிகாந்த்

என் வாழ்க்கையை மாற்றியது அவர்தான் – ரஜினிகாந்த்

கோவா சர்வதேச திரைப்பட விழாவில் ‘ஐகான் ஆப் கோல்டன் ஜூப்ளி’ என்ற மத்திய அரசின் சிறப்பு விருது ரஜினிக்கு வழங்கப்பட்டது. இதையொட்டி ரஜினிகாந்த் தூர்தர்‌ஷன் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- கோல்டன் ஐகான் விருது அறிவிக்கப்பட்டது ஆச்சர்யத்தை அளித்தது. இந்த விருதுக்கு நான் தகுதியானவனா என்ற எண்ணம் கூட ஏற்பட்டது. இருப்பினும், பெருமையுடன் விருதை ஏற்று கொண்டேன். விருதை அறிவித்த அரசிற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

மற்றவர்களை போல தான் நானும் வாழ்கிறேன். பாலச்சந்தரை சந்தித்தது திருப்பு முனையாக இருந்தது. அவர்தான் எனது வாழ்க்கையை மாற்றினார். நான் கதாநாயகனாக வருவேன் என நினைத்தது இல்லை. பாலசந்தர் தான் என்னை தமிழ் படிக்குமாறு கூறினார். எனக்குள் இருந்த திறமையை வெளிக்காட்டினார். பழைய நண்பர்களுடன் தொடர்பில் உள்ளேன். அவர்களுடன் இருக்கும் போது, மகிழ்ச்சியாக உள்ளேன்.

ரஜினிகாந்த்

சிவாஜி ராவாக உணர்கிறேன். வாழ்க்கையில் அனைத்தும் நடிப்பு தான். ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் சிறப்பாக நடிக்க வேண்டும். எனது துறையை, நடிப்பை மிகவும் ரசிக்கிறேன். ராகவேந்திரர் மீது நம்பிக்கை உள்ளது. இமயமலை செல்வதால், எனக்கு புத்துணர்ச்சி கிடைக்கிறது. இளம் நடிகர்கள், தங்களது பணியை எந்த பணியாக இருந்தாலும், அதனை ரசித்து செய்ய வேண்டும்.

Posted in சினிமா

தனுஷ் படத்தில் நடிக்க மறுத்த அனுஷ்கா

தனுஷ் படத்தில் நடிக்க மறுத்த அனுஷ்கா

பூமணி எழுதிய வெக்கை நாவலை அடிப்படையாக கொண்டு வெற்றிமாறன் இயக்கிய படம் அசுரன். தீண்டாமை உள்ளிட்ட அடக்குமுறைக்கு எதிராக பேசிய இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ள இப்படம் 50 நாட்களை கடந்து திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தை டோலிவுட்,பாலிவுட் பிரபலங்களும் பார்த்து பாராட்டினர்.

மஞ்சு வாரியர், தனுஷ்

அசுரன் படம் தெலுங்கில் ரீமேக் ஆகிறது. படப்பிடிப்புக்கான வேலைகள் தொடங்கி உள்ளன. இதில் தனுஷ் கதாபாத்திரத்தில் வெங்கடேஷ் நடிக்கிறார். மஞ்சுவாரியர் கதாபாத்திரத்தில் நடிக்க கதாநாயகி தேர்வு நடந்தது. முன்னணி நடிகைகள் பரிசீலிக்கப்பட்டனர். மஞ்சுவாரியர் கதாபாத்திரத்தில் முதலில் ஸ்ரேயா நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. பின்னர் அனுஷ்காவை நடிக்க வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அவர் நடிக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

Posted in சினிமா

இதற்காக தான் தினமும் 12 மாத்திரைகள் சாப்பிட்டேன் – இலியானா

இதற்காக தான் தினமும் 12 மாத்திரைகள் சாப்பிட்டேன் – இலியானா

நடிகை இலியானா தமிழ் சினிமாவில் கடந்த 2006-ம் ஆண்டு வெளிவந்த கேடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். விஜய் நடிப்பில் ‌ஷங்கர் இயக்கத்தில் வெளியான ‘நண்பன்’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். தெலுங்கு, இந்தி திரைப்படங்களிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார். கடந்த சில ஆண்டுகளாக ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த ஆண்ட்ரூவை தீவிரமாக காதலித்து வந்தார். இலியானாவுக்கும் அவரது காதலருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக இருவரும் ஒருவரை ஒருவர் பிரிந்துவிட்டனர்.

காதல் முறிந்ததை அடுத்து அவர் சமூக வலைத்தளங்களில் இருந்து விலகி இருந்தார். தன் காதலரை விட்டு பிரிந்ததால் இலியானா மிகவும் மன அழுத்தத்துக்கு உள்ளானதாகவும், அதிலிருந்து மீண்டது குறித்து அவர் கூறியதாவது:- வாரந்தோறும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்று வருவதால் படங்களில் நடிப்பதை கூட ஒத்தி வைத்திருக்கிறேன்.

இலியானா

மன அழுத்தத்தால் சில சமயங்களில் ஒரு நாளைக்கு 12 மாத்திரைகள் சாப்பிட்டு வந்தேன். அதனால் உடல் எடையும் அதிகமாக கூடி விட்டது. உடல் எடையை குறைப்பதற்காக ஜிம்முக்கு சென்று விட்டு வெளியே வரும்போது அந்த புகைப்படங்களை எடுத்து சமூக வலைத்தளத்தில் பலர் பதிவிடுகிறார்கள். இதனாலேயே நான் ஜிம்முக்கு செல்வதையும் தவிர்த்து வருகிறேன்.

இவ்வாறு அவர் கூறி இருக்கிறார்.

Posted in சினிமா

16 வயதில் டேட்டிங் சென்றேன் – ராசி கன்னா

16 வயதில் டேட்டிங் சென்றேன் – ராசி கன்னா

தமிழ் சினிமாவில் இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்தவர் ராசி கன்னா. தொடர்ந்து ஜெயம் ரவிக்கு ஜோடியாக அடங்கமறு, விஷாலுடன் அயோக்யா, விஜய் சேதுபதியுடன் சங்கத்தமிழன் படங்களில் நடித்து பிரபலமாகியுள்ளார். இவர் நடிப்பில் கடந்த வாரம் சங்கத்தமிழன் படம் திரைக்கு வந்தது.

ராசி கன்னா

இந்த படத்தில் இவரின் நடிப்பு எல்லோராலும் கவரப்பட்டுள்ளது, இந்த நிலையில் ராசி கன்னா ஒரு பேட்டியில் தான் டேட்டிங் சென்றது குறித்து பேசியுள்ளார். அதில் ‘நான் 16 வயதில் ஒரு பையனுடன் டேட்டிங் சென்றேன். அந்த பையனின் வயதும் 16 தான்’ என்று கூறியுள்ளார். இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, இந்தி, மலையாளம் போன்ற பல்வேறு மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

Posted in சினிமா

குழந்தை பிறக்கும் தேதியை அறிவித்த சமந்தா

குழந்தை பிறக்கும் தேதியை அறிவித்த சமந்தா

நடிகை சமந்தா கோலிவுட், டோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. இவர் தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை கடந்த 2017-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார். சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் சமந்தா, அவ்வப்போது ரசிகர்களுடன் உரையாடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார். அவ்வாறு உரையாடும் போது அவரிடம் பெரும்பாலானோர் கேட்கும் கேள்வி உங்களுக்கு எப்பொழுது குழந்தை பிறக்கும்? என்பது தான்.

சமந்தா, நாக சைதன்யா

இதற்காக ஒவ்வொரு முறையும் பதில் சொல்லி சலித்துப்போன சமந்தா, ’வருகின்ற 2022-ம் ஆண்டு, ஆகஸ்ட் 7ந் தேதி காலை 7 மணிக்கு எனக்கு குழந்தை பிறக்கும்’ என்று கிண்டலுடன் கூறியுள்ளார். நடிகை சமந்தா தனது செல்ல நாய் குட்டியின் முதலாவது பிறந்தநாளை சமீபத்தில் கணவருடன் கொண்டாடினார். இதுகுறித்த புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Posted in சினிமா

எவ்வளவு சம்பளம் கொடுத்தாலும் அதில் நடிக்க மாட்டேன் – சாய் பல்லவி

எவ்வளவு சம்பளம் கொடுத்தாலும் அதில் நடிக்க மாட்டேன் – சாய் பல்லவி

நடிகை சாய் பல்லவிக்கு தென்னிந்தியாவில் அதிக ரசிகர்கள் உள்ளனர். அதிலும் குறிப்பாக தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் அவருக்கு நல்ல வரவேற்பு உள்ளது. அதை பயன்படுத்தி அவரை விளம்பரத்தில் நடிக்க வைக்க பல நிறுவனங்கள் முயற்சித்து வருகின்றன.

சாய் பல்லவி

அந்த வகையில் ஒரு பிரபல துணி விற்பனை மால்கள் வைத்துள்ள நிறுவனம் சாய் பல்லவியை தங்கள் விளம்பரத்தில் நடிக்கவைக்க பேசியுள்ளது. ஒரு வருடத்திற்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் தரவும் தயார் எனவும் கூறியுள்ளனர். ஆனால் சாய் பல்லவி மறுத்துவிட்டார்.

Posted in சினிமா

சர்வதேச திரைப்பட விழாவில் சிறப்பு விருது பெற்றார் ரஜினி

சர்வதேச திரைப்பட விழாவில் சிறப்பு விருது பெற்றார் ரஜினி

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச திரைப்பட விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 50-வது சர்வதேச திரைப்பட விழா கோவாவில் இன்று தொடங்கி நவ.28-ந்தேதி வரை 9 நாட்கள் மிக பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்தியாவும், ரஷியாவும் ஒருங்கிணைந்து இந்த விழாவை நடத்துகின்றன.

மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தலைமையில் நடைபெற்ற தொடக்க விழாவில் பிரபல நடிகர்கள் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த் உள்ளிட்டோர் பங்கேற்று, குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடக்கி வைத்தனர்.

சர்வதேச திரைப்பட விழாவுக்கு இந்த ஆண்டு பொன்விழா என்பதால் இந்திய சினிமாவுக்கு முக்கிய பங்களிப்பு செய்த திரைப்பட கலைஞர்களை கவுரவிக்க முடிவு செய்த மத்திய அரசு, நடிகர்-நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு விருதுகள் அறிவித்திருந்தது.

குத்துவிளக்கு ஏற்றிய ரஜினி

இந்த நிலையில் 50-வது ஆண்டு சர்வதேச திரைப்பட விழாவின் கவுரவ விருதான “ஐகான் ஆப் கோல்டன் ஜுப்ளி” எனும் விருது ரஜினிகாந்துக்கு வழங்கப்பட்டது. மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் மற்றும் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் ஆகியோர் இணைந்து ரஜினிகாந்துக்கு விருது வழங்கினர்.

விருது வாங்கியபின் ரஜினிகாந்த் பேசியதாவது: “ஐகான் ஆப் கோல்டன் ஜுப்ளி” விருது பெற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன். எனக்கு விருது வழங்கி கவுரவித்த இந்திய அரசுக்கு நன்றி. தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், ரசிகர்கள் மற்றும் என்னை வாழவைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கு இந்த விருதை சமர்ப்பிக்கிறேன்” என கூறினார்.

Posted in சினிமா

பட வாய்ப்பு இல்லாததால் பாதைமாறிய பார்வதி

பட வாய்ப்பு இல்லாததால் பாதைமாறிய பார்வதி

தமிழில் பூ, மரியான், பெங்களூரு நாட்கள் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பார்வதி. ஆனால் சமீபகாலமாக அவருக்கு மலையாளத்திலும் தமிழிலும் பட வாய்ப்புகள் இல்லை. அவர் சில காலத்திற்கு சினிமாவிலிருந்து ஒதுங்கி இருக்கலாம் என அவரே முடிவு எடுத்து விட்டதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் மலையாளத்தில் பிரபல இயக்குனர்களான வேணு மற்றும் ஆஷிக் அபு உள்ளிட்ட 4 இயக்குனர்கள் இணைந்து உருவாக்கும் ஆந்தாலஜி படத்தில் இடம்பெறும் நான்கு குறும்படங்களில் ஒன்றில் கதாநாயகியாக நடிக்கிறார் பார்வதி. இந்த நான்கு கதைகளுமே பெண்களை மையப்படுத்தி அவர்களை கதாநாயகர்களாக முன்னிலைப்படுத்தி உருவாக இருக்கிறதாம்.

பார்வதி

வேணுவின் டைரக்‌ஷனில் உருவாகும் குறும்படத்தில் தான் பார்வதி நடிக்க இருக்கிறாராம். இதுதவிர பார்வதி நடிப்பில் உருவாகியுள்ள வர்த்தமானம் என்கிற படம் தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

Posted in சினிமா

சூழல் ஏற்பட்டால் கமலுடன் நிச்சயம் இணைவேன்- ரஜினி பேட்டி

சூழல் ஏற்பட்டால் கமலுடன் நிச்சயம் இணைவேன்- ரஜினி பேட்டி

நானும், ரஜினியும் சேர்ந்து பயணிக்க வேண்டும் என்றால் பயணிப்போம் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் கோவா செல்லுவதற்கு முன் சென்னை விமான நிலையத்தில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக மக்களின் நலனுக்காக நானும், கமலும், இணையும் சூழல் ஏற்பட்டால் நிச்சயம் இணைவோம்.
ஓ பன்னீர்செல்வம்
துணை முதல்வர் ஓபிஎஸ் எனக்கு கண்டனம் தெரிவித்தது அவரது தனிப்பட்ட கருத்து. அதுகுறித்து பதில் கூற விரும்ப வில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Posted in சினிமா

இந்தியன் 2 கமல் குறித்த தகவலை வெளியிட்ட ஷங்கர்

இந்தியன் 2 கமல் குறித்த தகவலை வெளியிட்ட ஷங்கர்

இந்தியன் படம் திரைக்கு வந்து 23 வருடங்களுக்கு பிறகு அதன் இரண்டாம் பாகம் இந்தியன்-2 என்ற பெயரில் கமல்ஹாசன்-ஷங்கர் கூட்டணியில் தயாராகி வருகிறது. இதில் காஜல் அகர்வால் கதாநாயகியாக நடிக்கிறார். சித்தார்த், ரகுல் பிரீத்சிங், பிரியா பவானிசங்கர், விவேக், சமுத்திரக்கனி, வித்யுத் ஜமால், பாபி சிம்ஹா ஆகியோரும் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

கமல்ஹாசன்

இந்நிலையில், கடந்த ஞாயிறன்று, கமலின் 60 ஆண்டுகால கலை பயணத்தை கவுரவிக்கும் வகையில் ‘உங்கள் நான்’ எனும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் கலந்துகொண்டு பேசிய இயக்குனர் ஷங்கர், கமல்ஹாசன் போன்ற நேர்த்தியான நடிகரை நான் பார்த்ததில்லை, இந்த வயதிலும் அவர் ஆல்-ரவுண்டராக திகழ்வது ஆச்சர்யமாக இருக்கிறது என கூறிய இயக்குனர் ஷங்கர், இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசன் குஜராத்தி மொழி பேசியுள்ளதாகவும் குறிப்பிட்டார்

Posted in சினிமா

வைரலாகும் சைக்கோ பட பாடல்

வைரலாகும் சைக்கோ பட பாடல்

மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், அதிதிராவ், நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள படம் சைக்கோ. டபுள்மீனிங் புரடக்‌ஷன்ஸ் சார்பில் அருண்மொழிமாணிக்கம் தயாரித்துள்ள இந்த படத்தை டிசம்பர் இறுதியில் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். படத்தின் டீசர் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் படத்தில் இடம்பெற்ற உன்னை நினைச்சு என்ற பாடல் நேற்று வெளியானது.

இளையராஜா 70 வயதை தாண்டியும் இன்றும் படங்களுக்கு இசையமைத்து வருகின்றார். அதிலும் இன்றைய ட்ரெண்ட் இளைஞர்களின் பேவரட் சித் ஸ்ரீராமையும் தன் இசையில் பாட வைத்து அசத்தியுள்ளார். இளையராஜா இசையில் முதன்முறையாக சித்ஸ்ரீராம் பாடியுள்ள இந்த பாடல் தான் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.

Posted in சினிமா

தளபதி 64-ல் அனிருத் இசையில் பாடும் விஜய்

தளபதி 64-ல் அனிருத் இசையில் பாடும் விஜய்

விஜய்யின் 64-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது டெல்லியில் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்க உள்ளார். மேலும் சாந்தனு, ஆண்டனி வர்கீஸ், ஆண்ட்ரியா, கவுரி கிஷான் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

அனிருத், விஜய்

இப்படத்தில் விஜய் ஒரு பாடல் பாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் வெளியான பிகில் படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் விஜய் முதன்முறையாக பாடிய வெறித்தனம் பாடல் பட்டி தொட்டி எங்கும் நல்ல வரவேற்பை பெற்றதால், தளபதி 64-ல் விஜய் பாட உள்ள பாடல் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. நடிகர் விஜய் ஏற்கனவே அனிருத் இசையில் கத்தி படத்தில் ‘செல்பி புள்ள’ பாடலை பாடியது குறிப்பிடத்தக்கது.

Posted in சினிமா

மேலாடையால் சர்ச்சை- சமூக வலைத்தளங்களில் நடிகைக்கு எதிர்ப்பு

மேலாடையால் சர்ச்சை- சமூக வலைத்தளங்களில் நடிகைக்கு எதிர்ப்பு

தமிழில் நானி ஜோடியாக ‘ஆஹா கல்யாணம்’ படத்தில் நடித்து பிரபலமானவர் வாணி கபூர். சமீபத்தில் ஹிருத்திக் ரோஷன் நடித்து திரைக்கு வந்த ‘வார்’ இந்தி படத்தில் கதாநாயகியாக நடித்து இருந்தார். தற்போது ரன்பீர் கபூர், சஞ்சய்தத்துடன் ‘ஷாம்ஷேரா’ என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார்.

தனது சமூக வலைத்தள பக்கத்தில் பிகினி போன்ற கவர்ச்சி மேலாடை அணிந்த புகைப்படம் ஒன்றை சமீபத்தில் பதிவேற்றி இருந்தார். அந்த மேலாடையில் ஹரே ராம் ஹரே கிருஷ்ணா என்ற வாசகம் இருந்தது. புகைப்படத்தின் கீழ் வாழ்க்கையை மிகவும் சீரியஸ் ஆக எடுத்துக்கொள்ள வேண்டாம். இங்கு யாருமே உயிருடன் இருக்கப் போவதில்லை என்ற வாசகத்தை பதிவிட்டு இருந்தார்.

வாணி கபூர்

அதைப் பார்த்த வலைத்தளவாசிகள் வாணிகபூரை கடுமையாக கண்டித்தனர். புகைப்படத்தை வலைத்தளத்தில் இருந்து நீக்க வேண்டும். மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வற்புறுத்தினர். வாணி கபூருக்கு மிரட்டல்களும் வந்தன. இதைத்தொடர்ந்து சர்ச்சையான அந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் இருந்து நீக்கிவிட்டார். ஆனால் முகநூல் பக்கத்தில் இருந்து நீக்கவில்லை.

Posted in சினிமா

எனக்கும் அவருக்கும் தொடர்பா? – சீறுகிறார் ஸ்ரீரெட்டி

எனக்கும் அவருக்கும் தொடர்பா? – சீறுகிறார் ஸ்ரீரெட்டி

நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது பாலியல் புகார் சொல்லி பரபரப்பு ஏற்படுத்தியவர் ஸ்ரீரெட்டி. ஆந்திராவில் அரை நிர்வாண போராட்டமும் நடத்தினார். தமிழ் நடிகர்கள், இயக்குனர்களும் ஸ்ரீரெட்டி பாலியல் புகார் பட்டியலில் சிக்கினர். தற்போது ஸ்ரீரெட்டியின் வாழ்க்கை ரெட்டி டைரி என்ற பெயரில் படமாகி வருகிறது.

சமூக வலைத்தளத்தில் அடிக்கடி சர்ச்சை கருத்துகளையும், கவர்ச்சி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார் ஸ்ரீரெட்டி. இந்நிலையில், உதயநிதியை பற்றி ட்விட்டர் கணக்கில் பதிவு ஒன்றை செய்திருக்கிறார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது.

உதயநிதி – ஸ்ரீ ரெட்டி

இதுகுறித்து ஸ்ரீரெட்டி கூறும்போது, ‘உதயநிதியை நான் நேரில் கூட பார்த்தது கிடையாது. உதயநிதியை பற்றி தவறுதலாக போடப்பட்ட பதிவு எனது ட்விட்டர் கணக்கு இல்லை. போலியான கணக்கு, உதயநிதி பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சி. வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் என்னையும் வாழ வைக்கும் என நம்புகிறேன். மிக விரைவில் அரசியலுக்கு வருகிறேன். தமிழகத்திற்கு சேவை செய்ய காத்திருக்கிறேன்’ என்றார்.

Posted in சினிமா

நியூயார்க்கில் அஜித் தயாரிப்பாளரை சந்தித்த நயன்தாரா

நியூயார்க்கில் அஜித் தயாரிப்பாளரை சந்தித்த நயன்தாரா

விஜய்யுடன் நயன்தாரா நடித்த பிகில் திரைப்படம் தற்போது வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. ரஜினியுடன் நயன்தாரா ‘தர்பார்’ படத்தின் பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நயன்தாரா வரும் நவம்பர் 18ம் தேதி தனது பிறந்த நாளை கொண்டாட இருக்கிறார். இதற்காக தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் நியூயார்க் சென்றிருக்கிறார். அங்கு அஜித்தை வைத்து ‘நேர்கொண்ட பார்வை’ படத்தை தயாரித்தவரும், தற்போது ‘வலிமை’ படத்தின் தயாரிப்பாளர் போனி கபூரை சந்தித்திருக்கிறார்கள்.

போனிகபூருடன் நயன்தாரா, விக்னேஷ் சிவன்

நயன்தாரா

நியூயார்க்கில் போனி கபூரின் இளையமகள் குஷி கபூர் படித்து வருவதால், அவருடன் கடந்த சில நாட்களாக போனி கபூர் தங்கி வருகிறார். இதனிடையே, நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் போனி கபூர் மற்றும் குஷி கபூரை நேரில் சந்தித்து டின்னர் சாப்பிட்டுள்ளனர். இது தொடர்பான புகைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்