Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
நாடு பூராகவும் 5,000 குளங்கள் உடனடியாக புனர்நிர்மாணம் – கோட்டா உத்தரவு
நாடு பூராகவும் 5,000 குளங்கள் உடனடியாக புனர்நிர்மாணம் – கோட்டா உத்தரவு
புராதன தொழிநுட்பம் மற்றும் நவீன விஞ்ஞான பொறிமுறைகளின் ஊடாக நாடு பூராகவும் 5,000 குளங்களை உடனடியாக புனர்நிர்மாணம் செய்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ
அவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளார். அத்துடன் நாடளாவிய ரீதியில் கைவிடப்பட்டுள்ள வயல்கள் 120,000 ஏக்கர்கள் நிலப்பரப்பில் ‘தேசிய உணவு உற்பத்தி பங்களிப்பு வேலைத்திட்டம்’
நடைமுறைப்படுத்தப்படும். குளங்களை புனர்நிர்மாணம் செய்யும் செயற்திட்டத்தை துரிதப்படுத்துவதற்காக சிவில் பாதுகாப்பு படையினரின் ஒத்துழைப்பும் பெற்றுக்கொள்ளப்படும்.
கிராமிய வயல்கள் சார்ந்த குளங்கள்இ நீர்த்தேக்கங்கள் மற்றும் நீர்ப்பாசன அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக ஜனாதிபதியின் தலைமையில் நேற்று (09)
முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் உத்தேசிக்கப்பட்ட நிகழ்ச்சித்திட்டம் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.
‘இதற்கு முன்னரும் குளங்களை புனர்நிர்மாணம் செய்யும் செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. அது நிபுணர்களினதும் மக்களினதும் பலத்த விமர்சனத்திற்குள்ளாகியது. குளங்களை
தோண்டி ஆழப்படுத்தினாலும் நீரை தேக்கி வைக்கக்கூடிய புராதன தொழிநுட்பம் மற்றும் விஞ்ஞான ரீதியான முறைகள் பயன்படுத்தாமையே இதற்கான காரணமாகும். அவ்வாறான
குறைபாடுகளை களைந்து பொதுவான வழிமுறைகளின் மூலம் அந்தந்த பிரதேசங்களுக்கு மற்றும் குளங்களுக்கு உரிய
முறைமைகளின் கீழ் புனர்நிர்மாணம் செய்யப்பட வேண்டும்’ என்று ஜனாதிபதி தெளிவுபடுத்தினார்.
குளங்களில் படிவுகள் நிரம்புவதினால் அவற்றின் கொள்ளளவு குறைந்துள்ளது. அதிகளவான குளங்களில் கரைகள் இடிந்து விழுந்துள்ளன. பெரும்போகத்தை இலக்காக்கொண்டு அவற்றை
உடனடியாக புனர்நிர்மாணம் செய்வதன் அவசியத்தை பொருளாதார புத்தெழுச்சி தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பெசில் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.
வயல் நிலங்களுக்கு மாத்திரமன்றி குடிநீரை பெற்றுக்கொள்ளல் மற்றும் ஏனைய நீர்த் தேவைகளை நிறைவு
செய்துகொள்வதற்காகவும் குளத்து நீரை பயன்படுத்துவதன் இயலுமை பற்றி ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
நீர்ப்பாசன கட்டமைப்பின் மூலம் இயங்குகின்ற விவசாய காணி பயன்பாடு தொடர்பாக காணி உபயோகத் திணைக்களம் மற்றும் கமத்தொழில் திணைக்களம் ஒன்றிணைந்து கணக்கெடுப்பு
ஒன்றை செய்துள்ளது. இதன் மூலம் கண்டறியப்பட்ட தகவல்களை அடிப்படையாகக்கொண்டு சிறப்பான முறையில் நீரை
முகாமைத்துவம் செய்து ஏனைய போகங்களில் இனங்காணப்பட்ட 17 வகையான பயிரினங்களை பயிரிடுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
குளங்களை புனர்நிர்மாணம் செய்தல்இ குளம் சார் கைத்தொழில்களை பாதுகாக்கக்கூடிய வகையில் முன்னெடுக்கப்பட வேண்டும். விவசாயம் சார் நிறுவனங்கள்
மற்றும் விவசாய அமைப்புக்களுடன் ஒன்றிணைந்த வகையில் செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது அவசியமாகும். குளங்களை புனர்நிர்மாணம் செய்வதுடன்இ கால்வாய்கள்
உள்ளிட்ட நீர்ப்பாசன கட்டமைப்பை புனர்நிர்மாணம் செய்யுமாறும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.
பயிர்ச் செய்கைக்கான நீரை வழங்குதல் மற்றும் குடிநீர் விநியோகத்தை நோக்கமாகக்கொண்டு திட்டமிடப்பட்ட ‘உத்துரு மெத மகா எல’ (வடமத்திய பாரிய கால்வாய்) மற்றும் ‘வயம்ப எல’
(வடமேல் கால்வாய்) திட்டங்களை துரிதமாக நிறைவு செய்வதன் அவசியம் பற்றியும் இக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. அதன் கீழ் வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் 1500 கிராமிய
குளங்கள் சார்ந்த 80இ000 ஹெக்டெயார் பயிர் நிலங்களில் இரு போகங்களிலும் பயிரிடுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் உள்ள நீர்ப்பாசன கட்டமைப்பு மற்றும் ஆறுகளை அண்டிய பகுதியில் உள்ள வன ஒதுக்கீடுகளை ஆறு மாதங்களுக்குள்
வர்த்தமானி மூலம் அறிவிப்பது தொடர்பாகவும் இந்நிகழ்வில் கலந்துரையாடப்பட்டது.
வன ஒதுக்கீடுகளுக்குள் உள்ள 500 சிறியளவிலான குளங்களை மிருகங்கள் பயன்படுத்தக்கூடிய வகையில் உடனடியாக புனர்நிர்மாணம் செய்யுமாறும் ஜனாதிபதி ஆலோசனை
வழங்கினார். அதற்காக நீர்ப்பாசனஇ வனஜீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்புத் திணைக்களம் ஒன்றிணைந்து ஒரு வருட வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படும்.
நீர்ப்பாசனத் துறையில் நீண்டகாலமாக நிலவி வருகின்ற பொறியியலாளர் மற்றும் தொழிநுட்ப அதிகாரிகள் வெற்றிடங்களை தாமதமின்றி நிரப்புவதன் அவசியம் பற்றியும் கவனம் செலுத்தப்பட்டது.
புதிய விவசாய தொழிநுட்பங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் இளம் தொழில் முயற்சியாளர்கள் 500 பேரை சேதனப் பசளை விவசாயத்திற்கு ஈடுபடுத்துவதற்காக திட்டமிடப்பட்டுள்ள (தருன
கொவி சௌபாக்கியாஇ காபனிக்க கொவிபல வெடசட்டஹன) – ‘இளம் விவசாய சுபீட்ச சேதனப் பசளை பயிர் நில வேலைத்திட்டம்’ பற்றியும் இங்கு ஆலோசிக்கப்பட்டது. மாதுறு ஓயவின் தெற்கு
கரையில் 5,000 ஏக்கர்களை உள்ளடக்கிய வகையில் இத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. அதற்கு அவசியமான உட்கட்டமைப்பு வசதிகளை வழங்கவும் இணக்கம் தெரிவிக்கப்பட்டது.
அமைச்சர் சமல் ராஜபக்ஷஇ இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்னஇ பொருளாதார புத்தெழுச்சி தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பெசில் ராஜபக்ஷஇ ஜனாதிபதியின்
செயலாளர் பீ.பி.ஜயசுந்தர ஆகியோருடன் அமைச்சுஇ இராஜாங்க அமைச்சுக்களினதும் துறைசார் நிறுவனங்களின் அதிகாரிகள்
விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.
கடன் வழங்குவதில் தளர்வான கொள்கைகளை கடைப்பிடியுங்கள் – அரச வங்கிகளின் தலைவர்களுக்கு பிரதமர் அறிவுறுத்தல்
கடன் வழங்குவதில் தளர்வான கொள்கைகளை கடைப்பிடியுங்கள் – அரச வங்கிகளின் தலைவர்களுக்கு பிரதமர் அறிவுறுத்தல்
பல்வேறு பொருளாதா நெருக்கடிகளுக்கு உள்ளாகியுள்ள மக்களை அதிலிருந்து மீட்டெடுப்பதற்கு கடன்களை வழங்கும் போது
தளர்வான கொள்கைகளை கடைப்பிடிக்குமாறு அத்துறைக்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில், பிரதமர் மஹிந்த
ராஜபக்ஷ நேற்று ( 2020.09.09) அரச வங்கிகளின் தலைவர்களுக்கு அறிவுறுத்தினார்.
நிதி அமைச்சில் நடைபெற்ற நிதி அமைச்சின் முன்னேற்ற மறுஆய்வுக் கூட்டத்தின் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார். கடனை மீளச் செலுத்துவதற்கு முடியாத மற்றும் புதிதாக கடன்
பெறுவதற்கு வரும் பொதுமக்களை வங்கி நடவடிக்கைகளின் போது தேவையற்ற சிரமத்திற்கு உட்படுத்த வேண்டாம் எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.
இலங்கை கொடுகடன் தகவல் பணியகத்தின் (CRIB) தரவுகளை சரிபார்க்கும் செயற்பாட்டின் போது பொதுமக்களுக்கு ஏற்படும்
சிரமங்கள் தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் இதன்போது கவனத்திற்கு கொண்டு வந்தார்.
கடன் பெற்று ஒருவர் அதனை மீள செலுத்த தவறும் பட்சத்தில், அவருக்கு உத்தரவாதம் வழங்கும் நபரின் பெயர் இலங்கை கொடுகடன் தகவல் பணியகத்தின் தரவுகளில்
உள்ளடக்கப்படுவதால் குறித்த நபர் கடனொன்றை பெற்றுக் கொள்வதற்கு தகுதியற்றவராக விளங்குகின்றமை உள்ளிட்ட
விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்திய பிரதமர், அதற்கு உரிய நிவாரண நடைமுறைகளை பின்பற்றுமாறு கூறினார்.
கடந்த அரசாங்கத்தில் சமுர்த்தி கொடுப்பனவுகளை பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கைகளின்போது குறிப்பிடத்தக்க தரப்பினரை விசேடமாக கருத்தி கொண்டு கொடுப்பனவுகள்
வழங்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.
இது தொடர்பில் ஆராய்ந்து அரசியல் பாகுபாடின்றி குறைந்த வருமானம் பெறும் அனைத்து குடும்பங்களுக்கும் சமுர்த்தி
கொடுப்பனவை பெற்றுக் கொடுக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் ஆலோசனை வழங்கினார்.
சுபீட்சத்தின் நோக்கு திட்டத்தின் கீழ் ‘சபிரி கமக்’ (வளமான கிராமம்) வேலைத்திட்டத்திற்காக ரூபாய் 28 பில்லியன்
ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய நாட்டின் 14021 கிராம அலுவலர் பிரிவுகளுக்கும் ரூபாய் 2 மில்லியன் வீதம் வழங்கப்படவுள்ளது.
இதேவேளை, பிரதமரின் ஆலோசனைக்கேற்ப கிராமிய சனசமூக குழுக்களின் மூலம் தெரிவுசெய்யப்பட்ட கீழ்காணும் திட்டங்கள் செயற்படுத்தப்படவுள்ளன.
- கிராம வீதிகள், படிகள், வடிகால்கள், சிறிய பாலங்கள், பக்க வடிகால் என்பவற்றை மேம்படுத்துதல்
- விவசாய பொருட்கள் உற்பத்திக்கு தேவையான களஞ்சிய வசதிகளை மேம்படுத்துதல்
- கிராம மட்டத்தில் பொருளாதார மையங்கள், வாராந்திர சந்தைகள் மற்றும் சந்தை இடங்களின் மேம்பாடு
- சிறிய குளங்கள், கால்வாய்கள், அணைக்கட்டுகள், குளங்கள், விவசாய கிணறுகள் புனரமைப்பு
- சமூக குடிநீர் விநியோக திட்டங்கள்
- கிராமப்புற மருத்துவ மையங்களை நவீனமயப்படுத்துதல் மற்றும் மேம்படுத்துதல்
- பாடசாலைகளுக்கான மின்சாரம், நீர் மற்றும் சுகாதார வசதிகளை மேம்படுத்துதல்
- வனவிலங்குகளினால் மக்களின் வாழ்விடங்களுக்கு ஏற்படும் அபாயங்களை இல்லாது செய்வதற்கு அல்லது குறைப்பதற்கான திட்டங்கள்
குறித்த சந்தர்ப்பத்தில் நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால், சமுர்த்தி, வதிவிட பொருளாதார, நுண் நிதி, சுயதொழில், வியாபார அபிவிருத்தி மற்றும் அரச வளங்கள் அபிவிருத்தி
இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆடிகல, மத்திய வங்கியின் ஆளுநர்
பேராசிரியர் டப்ளிவ்.டீ.லக்ஷ்மன், அரச வங்கிகளின் தலைவர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
பொலிசார் வேட்டை -420 பேர் கைது
பொலிசார் வேட்டை -420 பேர் கைது
மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 420 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (09) காலை 05 மணிமுதல் இன்று (10) அதிகாலை 05 மணிவரையான காலப்பகுதியில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது, 174 பேர் ஹெரோயினுடம் 105 பேர் கஞ்சாவுடனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொதுமக்கள் தினமாக திங்கட்கிழமை- இலங்கை அறிவிப்பு
பொதுமக்கள் தினமாக திங்கட்கிழமை- இலங்கை அறிவிப்பு
அடுத்த வாரம் முதல் பொது மக்கள் தினமாக திங்கட்கிழமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த தீர்மனம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அமைச்சரவை ஊடக பேச்சாளர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் இன்று காலை நடைபெற்ற அமைச்சரவை தீர்மனங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பிலேவே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
60 வருட காலமாக பொது மக்கள் தினமாக புதன் கிழமை இடம்பெற்றிருப்பதாக தெரிவித்த அமைச்சர் அன்றைய தினத்தில் பாராளுமன்ற அமர்வு இடம்பெறுவதினால் அமைச்சர்கள்
பாராளுமன்றத்திற்கு சமுகமளிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்பதினால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக உதய கம்மன்பில குறிப்பிட்டார்.
இது தொடர்பான அமைச்சரவை தீர்மானம் பின்வருமாறு:
- திங்கட்கிழமையை அரச நிறுவனங்களில் ‘பொதுமக்கள் தினம்’ ஆகப் பிரகடனப்படுத்தல்
அரச நிறுவனங்களில் பல்வேறு சேவைகளைப் பெறுவதற்காக மக்களுக்கு இலகுவான வகையில் புதன்கிழமையை தற்போது ‘பொதுமக்கள் தினம்’ ஆக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும்
திங்கட்கிழமை ‘பொதுமக்கள் தினமாக’ பிரகடனப்படுத்தினால் மக்களுக்கு மிகவும் இலகுவாக அமையுமென யோசனைகள் முன்மொழியப்பட்டுள்ளது. அதற்கமைய இன்றிலிருந்து திங்கட்
கிழமை ‘பொதுமக்கள் தினமாக’ பிரகடனப்படுத்தவும், அனைத்து அரச நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள் பொதுமக்களின்
தேவைகளை நிறைவேற்றும் வகையில் குறித்த தினத்தில் அலுவலகத்தில் கட்டாயமாக இருத்தல் அவசியமெனவும் அமைச்சரவை தீர்மானித்துள்ளது
சிங்கள பொலிசார் மீது திடீர் தாக்குதல் – பலர் கைது
சிங்கள பொலிசார் மீது திடீர் தாக்குதல் – பலர் கைது
பண்டாரகம, அட்டுலுகம, மாராவ பிரதேசத்தில் போதைப்பொருள் சுற்றிவளைப்பு
நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிஸார் மீது பிரதேச மக்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பிரதேசத்தில் கஞ்சா விநியோகத்தில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர்
கைதுசெய்யப்பட்ட நிலையில் அவரிடம் இருந்து கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய பிரதான சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, சந்தேக நபரை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச்
சென்ற ஜீப் வண்டியை வழிமறித்து பிரதேச மக்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.
நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக அருகிலுள்ள பொலிஸ்
நிலையங்களின் உத்தியோகத்தர்கள் மற்றும் விசேட அதிரடிப்படையினர் அங்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தில் இரண்டு பெண் மற்றும் இரண்டு ஆண் உத்தியோகத்தர்கள்
காயமடைந்துள்ளதாகவும் பண்டாரகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், சம்பவம் தொடர்பில் 3 பெண்கள் உள்ளிட்ட நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
நான்கு பெண்கள் மற்றும் நான்கு ஆண்கள் ஆகியோர் பொலிஸார் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜேர்மனியில் நடைபெற்ற மெய்வல்லுனர் போட்டியில் இலங்கை சாதனை
ஜேர்மனியில் நடைபெற்ற மெய்வல்லுனர் போட்டியில் இலங்கை சாதனை
ஜேர்மனியில் நடைபெற்ற மெய்வல்லுனர் போட்டியில்
இலங்கைக்கான புதிய சாதனையை யுபுன் அபேயகோன் நிலைநாட்டியுள்ளார்.
நேற்று (08) இடம்பெற்ற ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்
போட்டியில் குறித்த தூரத்தை10 தசம் ஒன்று – ஆறு வினாடிகளில் பூர்த்தி செய்து இந்தச் சாதனையை புரிந்துள்ளார்.
இதற்கு முன்னர் இந்த சாதணை ஹிமாஷ ஏஷான் வசமிருந்தது. அவர்
100 மீற்றர் தூரத்தை 10 தசம் இரண்டு – இரண்டு வினாடிகளில் பூரணப்படுத்தியிருந்தார்.
யுபுன் அபேயகோன இத்தாலியில் தற்போது பயிற்சி பெற்று வருகிறார்.
இவருக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ வாழ்த்துத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நிரம்பி வழியும் குளங்கள் – வெள்ள பெருக்கு அபாயம்
நிரம்பி வழியும் குளங்கள் – வெள்ள பெருக்கு அபாயம்
தற்பொழுது பெய்துவரும் கன மழை காரணமாக மத்திய மலைநாட்டில்
நீர் ஏந்து பிரதேசங்களான காசல்ரீ மற்றும் மவுசாகல நீர்த்தேக்கங்களின்
நீர் மட்டம் உயர்வடைந்துள்ளதாக நீர் நிலைக்கு பொறுப்பான பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக கெனியோன், லக்ஷபான, புதிய லக்ஷபா, பொல்பிட்டிய,
விமலசுரேந்திர ஆகிய மின் உற்பத்தி நிலையங்களில் உயர்ந்தபட்ச மின்
உற்பத்தி கிடைக்குமென மின்சார பொறியிலாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
சிறையில் இருந்து தப்பி ஓடிய பெண் கைதி
சிறையில் இருந்து தப்பி ஓடிய பெண் கைதி
களுத்துறை சிறைச்சாலையில் இருந்து தப்பிச்சென்ற பெண் கைதி கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளை அடுத்து, ஹொரணை பகுதியில் வைத்து குறித்த பெண் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
ஹெரோய்ன் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்டு சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த குறித்த கைதி,
கூரையை பிரித்து நேற்று (08) பிற்பகல் தப்பிச்சென்றிருந்தாக தெரிவிக்கப்படுகின்றது.
களுத்துறை பமுணுகம பிரதேசத்தை சேர்ந்த குறித்த பெண், 1300 மில்லிகிராம் ஹெரோய்ன் போதைப்பொருளுடன் களுத்துறை
வடக்கு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டிருந்தாக கூறப்படுகின்றது
யாழில் -வீட்டை உடைத்து தங்க நகைகள் திருட்டு
யாழில் -வீட்டை உடைத்து தங்க நகைகள் திருட்டு
ஆவரங்காலில் உள்ள வீடொன்றில் குடியிருப்பாளர்கள் வெளியில் சென்றிருந்தவேளை
பட்டப்படகலில் 22 பவுண் தங்க நகைகள் மற்றும் 20 ஆயிரம் ரூபாய் பணம் திருடப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் நேற்று (08) இடம்பெற்றதாக என்று அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
வீட்டில் உள்ளவர்கள் வெளியில் சென்றுவிட்டு வந்த போது, வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டுள்ளதை கண்டுள்ளனர்.
பின்னர், அதுதொடர்பில் ஆராய்ந்த போதே 22 பவுண் தங்க நகைகள் மற்றும் 20 ஆயிரம் ரூபாய் பணம் திருடப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் அச்சுவேலிப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கறுப்பு பட்டி அணிந்து பாராளுமன்றம் நுழைந்த எதிர்க்கட்சி
கறுப்பு பட்டி அணிந்து பாராளுமன்றம் நுழைந்த எதிர்க்கட்சி
மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்வதற்கு இடமளித்தமைக்கு ஐக்கிய மக்கள் சக்தி எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.
எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாடாளுமன்றில் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் கறுப்பு பட்டி அணிந்துள்ளனர்.
முன்னதாக இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
இதனையடுத்து, பிரேமலால் ஜயசேகரவின் பதவிப்பிரமாணம் சட்டத்திற்கு முரணானது என தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தியின்
நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்றைய அமர்விலிருந்து வௌிநடப்பு செய்துள்ளனர்.
பிரேமலால் ஜயசேகரவை நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று அனுமதி அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மீன் உணவு உற்பத்தி தொழிற்சாலையின் உற்பத்தி திறனை அதிகரிக்க வேண்டும் – அமைச்சர் டக்ளஸ்
மீன் உணவு உற்பத்தி தொழிற்சாலையின் உற்பத்தி திறனை அதிகரிக்க வேண்டும் – அமைச்சர் டக்ளஸ்
இலங்கையில் முதலாவது மீன்களுக்கான உணவு உற்பத்தி தொழிற்சாலையாக நிர்மாணிக்கப்பட்ட எக்ரி ஸ்டார் பிஷ் மீல்ஸ் தனியார் நிறுவனத்தின் உற்பத்திகளை நாளொன்றுக்கான சராசரி
1500 கிலோ வரை அதிகரிப்பது தொடர்பான கலந்துரையாடல் நேற்றுமுன்தினம் (07.09.2020) கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.
மாளிகாவத்தையில் அமைந்துள்ள அமைச்சு அலுவலகத்தில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில் மீன் உணவு உற்பத்திகளை அதிகரிப்பதில் காணப்படும் சவால்கள் தொடர்பில் அமைச்சரின்
கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.ரி ஸ்டார் பிஷ் மீல்ஸ் தனியார் நிறுவனமானது தேசிய நீரியல் வள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முகவர் நிறுவனத்தின் (நாரா) ஆலோசனையுடன் கடந்த வருடம்
ஆரம்பிக்கப்பட்ட குறித்த நிறுவனமானது இலங்கையில் மீன்களுக்கான உணவு உற்பத்தியில் ஈடுபடும் முதலாவது நிறுவனமாகும்.
தற்போது இங்கு மீன்களுக்கான உணவு உற்பத்தி செய்யப்பட்டாலும் இயந்திரங்களின் வினைத்திறனற்ற செயல்பாடுகள் காரணமாக உற்பத்தியை முழுவீச்சுடன் மேற்கொள்ள முடியாத
நிலையேற்பட்டுள்ளது. இத்தொழிற்சாலை அமைக்கப்பட்ட போது விசேடமாக தருவிக்கப்பட்ட இயந்திரங்கள் தற்போது உலகில்
பாவனையில் உள்ள அதி நவீன தொழில்நுட்பம் கொண்ட இயந்திரங்ளுக்கு இணையானவை அல்ல என்பதன் காரணமாகவே இந்நிலை ஏற்பட்டுள்ளது.
நாரா நிறுவனத்தின் பொறியியலாளர்களும் எக்ரி ஸ்டார் பிஷ் மீல்ஸ் தனியார் நிறுவனத்தின் பொறியியலாளர்களும் இவ்வியந்திரங்களை நவீனமயப்படுத்தவதற்கு பாரிய
முயற்சிகளை மேற்கொண்ட போதும் இத்தொழிற்சாலையின் மூலம் தற்போது நாளாந்தம் குறிப்பிட்ட அளவிலான மீன் உணவுகளையே உற்பத்தி செய்யக் கூடியதாக உள்ளது.
ஆகவே பொருத்தமான நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய இயந்திரங்களை பெற்றுத் தருமாறு இத்தொழிற்சாலையின்
உரிமையாளர்களால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் இதன்போது வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கைத் திட்டத்தின் பிரகாரம் இந்நாட்டில் உற்பத்தி செய்யக்கூடிய அனைத்து பொருட்களையும் இலங்கையிலேயே உற்பத்தி செய்யும்
கொள்கையின் அடிப்படையில் நாட்டுக்கு தேவையான மீன் உணவவு அனைத்தையும் நம் நாட்டிலேயே உற்பத்தி செய்வதே
அரசாங்கத்தின் நோக்கமென தெரிவித்த அமைச்சர், எதிர்வரும் 14 ஆம் திகதி குறித்த தொழிற்சாலைக்கு நேரடியாக விஜயம் செய்து
தீர்க்கமான மற்றும் சாதகமான முடிவொன்றை மேற்கொள்வதாகவும் உறுதியளித்தார்.
இதன்போது கருத்து தெரிவித்த நாரா நிறுவனத்தின் பொறியியலாளர்கள் புதிய இயந்திரமொன்றை கொள்வனவு
செய்வதைவிட இருக்கும் இயந்திரங்களை மேலும் மேம்படுத்தி உற்பத்தியை அதிகரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமென தெரிவித்தனர்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தொழிற்சாலைக்கான தனது விஜயத்தின் பின்னர் இவ்விடயம்
தொடர்பில் பொருத்தமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென தெரிவித்தார்.
இக்கலந்துரையாடலில் நாரா நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் நவரத்னராஜா, எக்ரி ஸ்டார் பிஷ் மீல்ஸ் தனியார் நிறுவனத்தின்
பணிப்பாளர் ஜயந்த குரே, கடற்றொழில் ராஜாங்க அமைச்சின் செயலாளர் ஜயந்த சந்திரசோம, நாரா நிறுவனத்தின் பொறியியலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பெரும்போகத்திற்கு தட்டுப்பாடு இன்றி உரம் – ஜனாதிபதி பணிப்பு
பெரும்போகத்திற்கு தட்டுப்பாடு இன்றி உரம் – ஜனாதிபதி பணிப்பு
இம்முறை பெரும்போகம் விவசாய வரலாற்றில் ஒரு புரட்சி…
• சேதனப் பசளையின் பங்களிப்பு 25% வீதம் வரை….
• அவசியமான உரத்தை நாட்டிற்குள் உற்பத்தி செய்வதற்கு திட்டம்…
பெரும்போகத்திற்கு அவசியமான உரத்தை தட்டுப்பாடின்றி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
அரசாங்கம் எதிர்வரும் பெரும்போகத்தில் இந்நாட்டு விவசாய வரலாற்றில் பயிர்ச் செய்கையில் புரட்சி ஒன்றை ஏற்படுத்த எதிர்பார்க்கின்றது. கைவிடப்பட்டுள்ள காணிகள் உள்ளிட்ட
பரந்தளவிலான பயிர் நிலங்களில் பல தசாப்தங்களின் பின்னர் நெல் உட்பட பல பயிரினங்களை பயிரிடுவதற்கு விவசாயிகள் ஆர்வத்துடன் இருக்கின்றனர்.
இவ்வருடத்தில் இறக்குமதி செய்யப்பட்ட உரத்திற்கு உரிய வகையில் கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளன.
பெருந்தோட்டங்களுக்கும் விவசாயிகளுக்கும் அவசியமான உரத்தை உரிய அளவில்இ உரிய நேரத்தில், உயர் தரத்துடன் வழங்க வேண்டுமென்று ஜனாதிபதி தெரிவித்தார்.
பசளை உற்பத்தி மற்றும் விநியோகங்கள்இ இரசாயன பசளைகள் மற்றும் கிருமிநாசினி பயன்பாட்டு ஒழுங்குபடுத்தல் இராஜாங்க
அமைச்சின் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக நேற்று (08) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.
பயிர்ச் செய்கையில் புரட்சியொன்றை ஏற்படுத்துவதற்கு அவசியமான ஒத்துழைப்பை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பொருளாதார புத்தெழுச்சி தொடர்பான
ஜனாதிபதி செயலணியின் தலைவர் பெசில் ராஜபக்ஷஇ குறிப்பிட்டார். தட்டுப்பாடு இன்றி உரத்தை வழங்குவதற்கு அரசாங்கத்தின் மற்றும் தனியார் துறையின்
இறக்குமதியாளர்களுக்கு வேண்டிய பின்புலத்தை தயார் செய்து கொடுத்துள்ளதாக பெசில் ராஜபக்ஷ சுட்டிக் காட்டினார்.
இறக்குமதியில் தங்கி இருக்காது நாட்டுக்கு தேவையான உரத்தை நாட்டிலேயே உற்பத்தி செய்துகொள்ள வேண்டுமென ஜனாதிபதி குறிப்பிட்டார்.
ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல பல்கலைக்கழகங்கள் ஆய்வுகளை நடத்தி இருப்பதனால் பிரதான
உர வகைகளை எதிர்வரும் இரண்டு வருடங்களுக்குள் உள்நாட்டு சந்தைக்கு வழங்க முடியுமென்று பெசில் ராஜபக்ஷ கூறினார்.
எப்பாவல போஸ்பேட் சார் Single superphosphate ஐ நாட்டுக்கு அவசியமான அளவில் உற்பத்தி செய்ய முடியுமென்று ஆய்வுகளின்
மூலம் கண்டறியப்பட்டுள்ளது. நெனோ தொழிநுட்பத்தை பயன்படுத்தி புதிய உர வகைகளின் உற்பத்தி தொடர்பாகவும் ஆய்வுகள் இடம்பெற்று வருகின்றன.
உர உற்பத்தியை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார். அவசியமான முதலீடுகளை கமத்தொழில் அமைச்சு வழங்கும்.
கடந்த போகத்தில் 25,000 ஹெக்டெயர்கள் சேதனப் பசளை பயன்படுத்தப்பட்டது. அதன் மூலம் எதிர்பார்க்கப்பட்ட விளைச்சல் 30% வீதத்தை தாண்டியுள்ளதாக கமத்தொழில் அமைச்சின்
அதிகாரிகள் குறிப்பிட்டனர். பெரும்போகத்தில் முழு பயிர் நிலத்தில் 25% வீதத்தை சேதனப் பசளையை பயன்படுத்துவதற்கான இயலுமை பற்றி உடனடியாக கண்டறியுமாறு ஜனாதிபதி
ஆலோசனை வழங்கினார். அதன் மூலம் இரசாயன உரப் பாவனையை இவ்வருடத்தில் 25% வீதத்தினால் குறைப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
சேதனப் பசளை பயன்பாட்டினால் பெறுகின்ற விளைச்சல் மற்றும் ஏனைய பிரதிபலன்கள் தொடர்பாக விவசாயிகளை தெளிவுபடுத்துவதற்கு முறையான வேலைத்திட்டமொன்றை
தயார்படுத்தும்படி ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார். இரசாயன உரத்தின் மூலம் நீர் மற்றும் பயிர் நிலத்திற்கு ஏற்படும் பாதிப்பை தடுப்பதற்கும், சிறுநீரக
நோயினாலும் ஏனைய நோய்களினாலும் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்றுவதற்கும், சுற்றாடல் சமநிலை தன்மையை
பாதுகாப்பதும் ‘சுபீட்சத்தின் நோக்கு’ கொள்கைப் பிரகடனத்தில் உறுதியளிக்கப்பட்டுள்ள விடயங்களாகும்.
இரசாயன உரம் மற்றும் சேதனப் பசளை 70% மற்றும் 30% என்ற வீதத்தில் பயன்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாக கமத்தொழில் அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகே தெரிவித்தார்.
மரக்கறி பயிர்ச் செய்கையாளர்களிடம் இருந்து நேரடியாக கொள்வனவு செய்து 6 வகையான மரக்கறிகள் அடங்கிய பொதியை 350 ரூபாவிற்கு கொழும்பு மாவட்டத்தில் 10 இடங்களில் இன்று
வெற்றிகரமாக விற்பனை செய்ததாக அமைச்சர் குறிப்பிட்டார். எதிர்காலத்தில் விவசாயிகளையும் நுகர்வோரையும் பாதுகாத்துஇ கமத்தொழில் அமைச்சு மற்றும் துறைசார் அமைச்சுக்கள்
ஒன்றிணைந்து நேரடியாக நுகர்வோருக்கு தொடர்ந்து வழங்குவதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகேஇ இராஜாங்க அமைச்சர் மொஹான் டி சில்வாஇ பொருளாதார புத்தெழுச்சி தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பெசில் ராஜபக்ஷஇ
ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தர ஆகியோருடன் துறைசார் அமைச்சுக்களின் அதிகாரிகள் உர நிறுவனங்களின்
பிரதிநிதிகள் மற்றும் பயிர்ச் செய்கையாளர்கள் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.
கொழும்பு இராணுவ வைத்தியசாலையில் தொற்று நோய் மூலக்கூறு கண்டறியும் ஆய்வகம்
கொழும்பு இராணுவ வைத்தியசாலையில் தொற்று நோய் மூலக்கூறு கண்டறியும் ஆய்வகம்
இலங்கை இராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு சுமார் 300 கொவிட் -19 தொற்று நோய்க்கான பி.சி.ஆர்
சோதனைகளை நடத்தும் திறன் கொண்ட ஒரு முழுமையான தொற்று நோய் மூலக்கூறினை கண்டறியும் ஆய்வுகூடம் (நேற்று) 8
ஆம் திகதி கொழும்பு இராணுவ வைத்தியசாலையில் ஆரம்பித்துவைக்கப்பட்டது.
குறித்த வசதிகள் மூலம் பி.சி.ஆர் சோதனைகள் மற்றும் ஏனைய தொற்று நோய்களுக்கான சோதனைகளை நடத்துவதினூடாக
அரசாங்கத்தின் தேசிய முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குகின்றது.
தற்போது, நாடு முழுவதும் உள்ள 20 ஆய்வகங்களில் வைராலஜிஸ்ட் ஆலோசகர்கள் மற்றும் நுண்ணுயிரியலாளர்களின்
மேற்பார்வையில் கொவிட்-19 தொற்று நோய்க்கு எதிராக கண்டறியும் பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்கின்றன.
கொழும்பு இராணுவ வைத்தியசாலையின் பணிப்பாளர் பிரிகேடியர் கிருஷாந்த பெர்னாண்டோவின் அழைப்பின் பேரில் கொவிட்-19 பரவலை தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தின்
தலைவரும், பாதுகாப்பு தலைமை பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா பிரதம
அதிதியாக கலந்து கொண்டு பிரதான வைத்தியசாலை கட்டிடத்தில் குறித்த வசதியினை ஆரம்பித்து வைத்தார்.
குறித்த வசதிகளை மேற்கொள்வதற்கு சம்பத் வங்கி பி.எல்.சி, வரையறுக்கப்பட்ட டபிள்யூ.எஸ்.ஓ 2 லங்கா தனியார் நிறுவனம்
மற்றும் இலங்கை பிஸ்கட் லிமிடெட் இணைந்து ரூபா 30 மில்லியன் நிதியுதவியினை அளித்துள்ளன.
குறித்த திறப்பு விழாவிற்கு இராணுவ சுகாதார சேவைகளின் முன்னாள் பணிப்பாளர் நாயகமும் தற்போதைய சுகாதார மற்றும்
சுதேச மருத்துவ நடைமுறைகள் அமைச்சின் செயலாளருமான மேஜர் ஜெனரல் சஞ்சீவ முனசிங்க மற்றும் அனுசரனையாளர்களின் முக்கிய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
ஆரம்பத்தில், புதிய தொற்று நோய் மூலக்கூறு கண்டறியும் ஆய்வக வசதி சுமார் 300 கொவிட்-19 தொற்று நோய் மதிப்பீடுகளுக்கான திறனைக் கொண்டிருக்கும், மேலும் பயிற்சி பெற்ற ஊழியர்களை
இணைப்பதன் மூலம், தேசிய தேவையைப் பூர்த்தி செய்வதற்காக அதன் சோதனை திறனை 600 வரை அதிகரிக்க மிக விரைவில் திட்டமிட்டுள்ளது. அத்துடன். இந்த நோய்த்தொற்றின் பரவலான
சமூக பரவலைத் தடுப்பதில் மூலோபாய அணுகுமுறை அறிகுறி மற்றும் அறிகுறியற்ற நோயாளிகளில் கடுமையான தொற்றுநோயைக் கண்டறிதல் மற்றும் அனைத்து நிகழ்வுகளையும்
தனிமைப்படுத்துதல், விரிவான தொடர்புத் தடமறிதல் மற்றும் வெளிப்படுத்தப்பட்ட தொடர்புகளின் தனிமைப்படுத்தல் மற்றும் பரவும் சங்கிலிகளை முறியடிக்க தேவையான பயனுள்ள பொது
சுகாதாரம் மற்றும் தொற்று தடுப்பு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் ஆகியவற்றினை கொழும்பு இராணுவ வைத்தியசாலையானது பிரதிபலிக்கின்றது.
குறித்த திறப்பு விழாவின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா ‘இலங்கையில் மிகவும் பயனுள்ள ஆய்வக சோதனை
மூலோபாயத்தைத் தொடர்வது நமது நாட்டில் கொவிட் – 19 தொற்றுநோயை மட்டுமல்லாமல் மற்ற தொற்று நோய்களையும்
இந்த புதிய நோய்களைக் குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன என்று சுட்டிக்காட்டினார்.
எனவே தேசிய முயற்சிகளை வலுப்படுத்துவதற்கான சரியான திசையில் ஒரு படியாக இருக்கும். ‘இராணுவ வரலாற்றில் முதல்முறையாக, ஊழுஏஐனு-19 மட்டுமல்லாமல் பிற தொற்று
நோய்களையும் கண்டறியக்கூடிய இந்த நவீன வசதியை நாங்கள் பெற முடிந்தது அதிர்ஷ்டம். தானியங்கி இயல்பு இதுபோன்ற நோயறிதல் சோதனைகளை துரிதப்படுத்த உதவும் ஒரு குறுகிய
எழுத்து மற்றும் இது நமது தேசிய முயற்சிகளுக்கு மிகப்பெரிய தூண்டுதலாக இருக்கும், இது ஜனாதிபதி மற்றும பிரதமர் மற்றும் பிற பங்குதாரர்கள் தலைமையில் இடம்பெறுகின்றது.’
‘சமுதாயத்தில் இன்னும் கொவிட் தொற்று நோய் பரவல் காணப்படவில்லை என்றாலும், நாம் அனைவரும் பரிந்துரைக்கப்பட்ட சுகாதார நடைமுறைகளை கடைபிடிக்க
வேண்டியது அவசியம், ஏனெனில் ஒரு சிறிய குறைபாடு கடந்த காலங்களில் நாம் அனுபவித்ததைப் போல பரவலை ஏற்படுத்தும். இந்த கொவிட் -19 ஆய்வகத்தினை நிறுவும் திட்டத்தின்
பின்னணியில் கொழும்பு இராணுவ வைத்தியசாலையின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமாக சேவையாற்றிய மேஜர்
ஜெனரல் சஞ்சீவ முனசிங்க காணப்பட்டார் என்பதனையும் அவர் சுட்டிக்காட்டினார்.
நமது அண்டை இந்தியாவைப் பற்றி நீங்கள் நினைக்கும் போது ஒரு நாளைக்கு 90,000 க்கும் மேற்பட்ட கொவிட் தொற்று நோய் பதிவாகியுள்ளது. குறித்த பரவலை கட்டுப்படுத்துவதில் எங்கள்
முயற்சிகளை ஆதரிக்கும் ஒழுக்கத்துடனும் அர்ப்பணிப்புடனும் காணப்படும் எங்கள் மக்கள் நடந்து கொண்டதாக நாங்கள்
உணர்கிறோம், இந்த நடைமுறை தொடரப்பட வேண்டும், ‘என்று அவர் கூறினார்.
இந்த தொற்று நோயால் உலகம் முழுவதுமே பாதிக்கப்பட்டுள்ள ஒரு நேரத்தில் ஆய்வகத்தின் ஆதரவாளர்கள் தங்கள் தேசிய
அக்கறைக்கு லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா பாராட்டினார்.
கோட்டா ஆட்சியில் புதுமையான பஸ் நிலையம்- பாருங்க
கோட்டா ஆட்சியில் புதுமையான பஸ் நிலையம்- பாருங்க
கண்டி நுவரெலியா பிரதான பாதையில் கொத்மலை பிரதேசத்திற்கு உட்பட்ட குடாஒயா பிரேதேசத்தில் நுவரெலியாவில் இருந்து கண்டி நோக்கி செல்லும் பஸ்கள் நிறுத்துவதற்காக மத்திய
மாகாண போக்குவரத்து அதிகார சபையினால் அமைக்கபட்ட பஸ் நிலையமே இது. தற்போது இந்த பஸ் நிலையம் உடைவடைந்து கூரைகள் இன்றி பாதிக்கபட்ட நிலையில் காணப்படுகின்றது.
இதனை திருத்தி அமைப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவிக்கபட்ட போதும். இது வரைக்கும் திருத்தி
அமைக்கபடவில்லை. இந்த பஸ் நிலையத்தில் பஸ்சிற்காக காத்திருக்க வேண்டுமானால் மழைக்காலங்களில் குடையுடனே செல்ல வேண்டும்
இந்த பிரதேசத்தில் குடாஓயா வித்தியாலயம் காணப்படுகின்றது. இங்கு கல்வி கற்க வரும் நூற்றுக் கணக்கான மாணவர்களும்
ஆசிரியர்களும் கிராம மக்களும் லபுக்கலை தோட்ட மக்களும் நாளாந்தம் இந்த பஸ் நிலையத்தை பாவித்து வருகின்றனர்.
இவ்வாறான நிலையில் இந்த பஸ் நிலையத்தை உடனடியாக திருத்தி அமைத்து கொடுக்க வேண்டியது மத்திய மாகாண
போக்குவரத்து அதிகார சபையின் கடமையாகும். இதனை உடனடியாக திருத்தி அமைத்து தருமாறு இப்பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

கோட்டா ஆட்சியில் புதுமையான ப 
1300 இரண்டாம் மொழி பயிலுனர்களுக்கு ஆப்பு வைத்த கோட்டா – இருந்த தொழிலும் போச்சு
1300 இரண்டாம் மொழி பயிலுனர்களுக்கு ஆப்பு வைத்த கோட்டா – இருந்த தொழிலும் போச்சு
அன்மையில் தேசிய ஒருமைபாடு அரசகரும மொழிகள் சழூக மேப்பாடு அமைச்சின் ஊடாக இரண்டாம் மொழியை கற்பிப்பதற்கு மொழிகளில் தகமை உள்ள 1300 விண்ணப்பதாரிகள்; தெரிவு
செய்யப்பட்டார்கள். இவர்களுக்காகன நியமன கடிதங்கள் முன்னால் அமைச்சர் மனோ கணேசன் அவர்களின் ஏற்பாட்டில் முன்னால் பிரதமர் ரனில் விக்கரமசிங்க தலைமையில் கடந்த 2019
செப்டம்பர் மாதம் 10 ஆம் திகதி அலரி மாலிகையில் வழங்கி கைக்கப்பட்டது. இவர்களில் தமிழ் மொழி மூலம் 800 பேரும்
சிங்களமொழி மூலம் 300 பேரும் ஆங்கில மொழிமூலம் 200 பேருமாக அடங்குவர்.
இந்த இரண்டாம் மொழி கற்பிப்பதற்காக தெரிவு செயய்பட்டவர்களுக்கு நாடாளாவிய ரீதியில் காணப்படும் தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் ஊடாக பயிற்சிகள்
ஆரம்பிக்கபட்டு நடைபெற்று வந்தன. கடந்த மாதம் 15 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தலுக்காக இவர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்ட போதும் இது வரை பயிற்சிகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவில்லை.
இந் நிலமை குறித்து பயிலுனர்கள் குறித்த பயிற்சி நிறுவன அதிகாரிகளையும் பயிற்றுவிப்பாளர்களையும் தொடர்பு கொண்டு வினவிய போதும் பொருத்தமான பதில்கள் வழங்காததினாலும்
பயிற்சிகள் ஆரம்பிப்பது குறித்து உரிய திகதியை வழங்காதிதினாலும் பயிற்றுவிப்பாளர்கள் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர்.
குறிப்பாக இந்த நியமனங்களை பெற்றவர்கள் ஏற்கனவே சில அரச மற்றும் தனியார் துறைகளில் தொழில் புரிந்தவர்கள். தங்களுக்கு ஒரு பொருத்தமான தொழி;ல் கிடைக்க போகின்றது என்ற நோக்கில்
இருந்த தொழிலையும் விட்டுவிட்டு இந்த தொழிலில் இணைந்து பயிற்சிகளை பெற்று வந்தனர். இவ்வாறான நிலையில் இவை எந்த காரணம் இன்றியும் உரிய பதில்கள் இன்றியும் இடை
நிருத்தப்பட்டமையால் பயிலுனர்கள் பெரிதும் பாதிப்பு அடைந்துள்ளனர். இரண்டாம் மொழி சிங்களம் கற்பிக்க தமிழ்மொழி மூலம் 800 பயிலுனர்கள் தெரிவு செயய்பட்டு
இருந்தனர.; இவர்களில் பெரும்பாலானோர் மலையத்தை சேர்ந்த இளைஞர் யுவதிகள். இவர்களுக்கு சிங்களமொழியில் கூடிய பரீட்சயம் இருந்ததாலும் சிங்களவர்களுக்கு தமிழ்மொழி கற்பிக்க
கூடிய தகமை இருந்ததாலும் இவர்கள் தெரிவு செய்யப்பட்டு இருந்தார்கள். தற்போது இவர்களின் நிலை கேள்வி குறியாகி உள்ளதுடன். உலரீதியில் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர்.
தற்போது தெரிவு செய்யபட்ட சில பயிலுனர்களுக்கு இருந்த தொழிலும் இல்லாமல் போய் கிடைத்த தொழிலும் இல்லாமல் போய் உள்ளது. நாட்டில் மொழிக் கொள்கையை திறம்பட முன்னெடுத்து
செல்ல வேண்டும் என்ற நோக்கில் முன்னெடுக்கப்பட்ட இந்த செயற்திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க வேண்டும். இதனை நம்பி இத்துறைக்கு விண்ணப்பித்து தற்போது நிர்க்கதியாகி
உள்ளவர்களுக்கு உரிய தீர்வினை பெற்றுக் கொடுக்க வேண்டும் என பாதிக்கபட்ட விண்ணப்பதாரிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
பிரபாகரனைச் சந்தித்தது ஏன்?
பிரபாகரனைச் சந்தித்தது ஏன்?
பயங்கரவாதிகளுக்குப் புனர்வாழ்வளித்ததாக கூறும் மஹிந்த ராஜபக்ஷ, 2005ஆம் ஆண்டு அப்போதைய நோர்வே நாட்டின்
சமாதான தூதுவர் ஊடாக தேசிய தலைவர் பிரபாகரனைச் சந்திக்க ஆசைப்பட்டது ஏன்?” என, வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பினார்.
யாழ்ப்பாணத்தில், இன்று (08) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரைத்த அவர், 2002ஆம் ஆண்டில், அப்போதைய நாட்டின்
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைவர் பிரபாகரனுடன் போர் நிறுத்த உடன்படிக்கை ஒன்றினை செய்திருந்தாரென்றார்.
அத்தோடு, இராணுவ உயர் அதிகாரிகளும் நாட்டின் அரசியல் தலைவர்களும்
ஏன் தலைவர் பிரபாகரனைப் பாராட்டுகிறார்கள் எனவும், அவர் வினவினார்.
இரத்தினக்கல், தங்க ஆபரணக் கைத்தொழில் மீது விதிக்கப்பட்ட வரி நீக்கம்
இரத்தினக்கல், தங்க ஆபரணக் கைத்தொழில் மீது விதிக்கப்பட்ட வரி நீக்கம்
ஆபரண உற்பத்தியாளர்களுக்கு 4மூ வீத வட்டிக்கு ஒரு மில்லியன் ரூபா
இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரணக் கைத்தொழிலாளர்கள் ஈட்டும் இலாபத்தின் மீது விதிக்கப்பட்டிருந்த 14மூ வீத வருமான வரி
மற்றும் 15மூ வீத தங்க இறக்குமதி வரிகளை நீக்குவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானம் மேற்கொண்டுள்ளார்.
1971ஆம் ஆண்டு முதல் தங்கம் மற்றும் ஆபரணக் கைத்தொழிலுக்கு வழங்கப்பட்டிருந்த வரிச் சலுகை 2017ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட வருமான வரிக் கொள்கையில்
நீக்கப்பட்டது. தங்கம் மற்றும் ஆபரண ஏற்றுமதியில் ஈட்டப்படும் உண்மையான வருமானம் இதன் மூலம் வெளிக்கொணரப்படாத நிலை தோன்றியது.
2018ஆம் ஆண்டு தங்க இறக்குமதிக்கு 15மூ வீத வரி விதிக்கப்பட்டது. தங்க நகைகளின் விலை உயர்வடைவதற்கு இவ்வரி காரணமாக அமைந்தது. குறித்த வரியை உடனடியாக
நீக்கிஇ இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண கைத்தொழிலின் மேம்பாட்டிற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரணங்கள் சார் கைத்தொழில்கள் இராஜாங்க அமைச்சின் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக நேற்று (07) பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.
உலகச் சந்தையில் இலங்கை இரத்தினக்கல்லின் கேந்திர நிலையமாக மாறுவதற்கு முடியாமல் போனமைஇ அவை சார்ந்த
பிரச்சினைகளை தீர்ப்பதற்கு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே முன்வைத்த 14 ஆலோசனைகள் பற்றி விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இந்நாட்டில் கண்டெடுக்கப்படாத உலகின் ஏனைய நாடுகளுக்குரிய விலை கூடிய இரத்தினக்கற்களை இறக்குமதி செய்வதற்கான
வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்கவும் மற்றும் இரத்தினக்கல் கையிருப்பை பாதுகாத்து வருவதன் முக்கியத்துவம் பற்றியும் லொஹான் ரத்வத்தே சுட்டிக்காட்டினார்.
இரத்தினக்கல் அகழ்வுக்கான அனுமதி பத்திரம் விநியோகிக்கும்போது இடம்பெறுகின்ற தாமதங்களை தடுப்பதற்காக உரிய அனைத்து நிறுவனங்களையும் ஒரே இடத்தில்
ஸ்தாபிக்குமாறு ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார். தங்க நகை உற்பத்தியாளர்கள் மற்றும் சம்பிரதாய ரீதியாக தங்க நகைகளை
உற்பத்தி செய்பவர்களுக்கு தங்கத்தை கொள்வனவு செய்வதற்காக அரச வங்கிகளினால் 4மூ வீத சலுகை வட்டி அடிப்படையி்ல் 10 இலட்சம் ரூபா கடன் வழங்குமாறு ஜனாதிபதி அரச வங்கிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
பெருந்தோட்ட நிறுவனங்களுக்குரிய இரத்தினக்கல் படிவுகளைக்கொண்ட பயிரிடப்படாத காணிகளை இரத்தினக்கல் கைத்தொழிலுக்கு வழங்குவதற்கு தடையாக உள்ள விடயங்களை
நீக்கி அகழ்வுக்காக பெற்றுக்கொள்வதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. இரத்தினபுரி தெமுவாவத்தையில் நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ள இரத்தினக்கல் விற்பனை
சந்தைத்தொகுதி மற்றும் பயிற்சி மத்திய நிலையத்தின் பணிகளை உடனடியாக நிறைவு செய்யுமாறும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.
இரத்தினபுரி மாவட்டத்தில் இரத்தினக்கல் பரவலாக உள்ள பிரதேசங்களில் அனுமதி இன்றி இரத்தினக்கல் அகழ்வு நடவடிக்கைகள் பாரியளவில் இடம்பெற்று வருகின்றன.
இயந்திரங்களை பயன்படுத்தி சுற்றாடலைப் பாதிக்கும் வகையில் இடம்பெற்று வருகின்ற இரத்தினக்கல் அகழ்வுகளை உடனடியாக
நிறுத்துவதற்கும் சம்பிரதாயமாக இரத்தினக்கல் அகழ்வுகளில் ஈடுபட்டுள்ளவர்கள் முகங்கொடுத்து வருகின்ற தடைகளை நீக்குமாறும் ஜனாதிபதி உத்தரவிட்டார்.
தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண அதிகார சபையின் இரத்தினக்கல் ஆய்வு கூடத்தை சர்வதேச தரத்திற்கு தரம்
உயர்த்துதல் உட்பட இத்துறையின் மேம்பாட்டிற்கான பல கருத்துக்கள் இக்கலந்துரையாடலில் முன்வைக்கப்பட்டது.
அமைச்சர் விமல் வீரவங்சஇ இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தேஇ பொருளாதார புத்தெழுச்சி தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பெசில் ராஜபக்ஷஇ ஜனாதிபதியின்
செயலாளர் பீ.பி.ஜயசுந்தர ஆகியோருடன் துறைசார் அமைச்சுக்களின் அதிகாரிகள் மற்றும் இரத்தினக்கல்இ ஆபரணக் கைத்தொழிலாளர்கள் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.
கப்பலில் மீண்டும் தீ – கட்டுப்படுத்த விசேட நடவடிக்கை
கப்பலில் மீண்டும் தீ – கட்டுப்படுத்த விசேட நடவடிக்கை
கிழக்குக் கடற்பரப்பில்; தீ விபத்திற்கு உள்ளான MT New Diamond எரிபொருள் கப்பலில் இரண்டாவது தடவையாக ஏற்பட்ட தீ ஓரளவு
கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக கடற்படை அறிவித்துள்ளது.
கப்பலின் வெப்பநிலை மற்றும் சுற்றுச்சூழல் காரணங்களினால் தீ மீண்டும் வருவதைத் தடுக்க இரசாயனங்கள் மற்றும் தண்ணீரைப்
பயன்படுத்தி பேரழிவு மேலாண்மை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இருப்பினும், சங்கமங்கந்த பிரதேசத்தில் இருந்து சுமார் 30 கடல் மைல் தொலைவில் இந்த கப்பல் நிறுத்தப்பட்டுள்ள கடல் பகுதியில்
நிலவும் பாதகமான வானிலை காரணமாக மற்றும் அதிக உஷ்ணத்துடன் கப்பல் இருந்த நிலையில் இவ்வாறு மீண்டும் தீ பரவியுள்ளது.
கப்பலின் மூலம் ஏற்படக்கூடிய சமுத்திரவியல் பாதிப்புக்களைப் பற்றி ஆராய்வதற்காக இன்று அதிகாலை நான்கு மணியளவில் நிபுணர்கள் குழுவொன்று ஸ்தலத்திற்கு
அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக கடற்படையின் பேச்சாளர் கப்டர் இந்திக்க டீ சில்வா தெரிவித்தார்.
இந்தக் கப்பல் முதற்தடவையாக தீ விபத்திற்கு உள்ளான இடத்தில் இருந்து பெறப்பட்ட கடல் நீர் மாதிரிகள் இன்று சோதனையிடப்படவுள்ளன. இது தொடர்பான விசேட
கலந்துரையாடல் நேற்று துறைமுக மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சில் இடம்பெற்றது. அமைச்சர் ரோஹித்த அபய குணவர்த்தன இதனை தலைமை தாங்கினார்.
போதைப்பொருள் பயன்படுத்திய 547 பேர் கைது
போதைப்பொருள் பயன்படுத்திய 547 பேர் கைது
மேல் மாகாணத்தில் பொது இடங்களில் போதைப்பொருளை பயன்படுத்திய 547 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று மாலை 6.00 மணி தொடக்கம் இரவு 9.00 மணிவரையில் முன்
னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையின் போது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் மத்தியில் ஆக கூடுதலானோர் ஹெரோயின் போதைப்பொருளை பயன்படுத்தியுள்ளனர். இவர்களின்
எண்ணிக்கை 265 ஆகும். இவர்களிடம் இருந்து 89 கிராம் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது
அனைத்து பாடசாலைகளிலும் இன்று முதல் கல்வி நடவடிக்கைககள் வழமைக்குத் திரும்பின.
அனைத்து பாடசாலைகளிலும் இன்று முதல் கல்வி நடவடிக்கைககள் வழமைக்குத் திரும்பின.
நாட்டில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மூடப்பட்ட
அனைத்து பாடசாலைகளிலும் இன்று (08) முதல் கல்வி நடவடிக்கைககள் வழமைக்குத் திரும்பியுள்ளன.
இதனடிப்படையில், காலை 7.30 மணி முதல் பகல் 1.30 மணி வரை வழமையான
நேரத்தில் கல்வி நடவடிக்கைகள் நடைபெறும் என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
எனினும், பாடசாலைகளில் மாணவர்கள் சுகாதார நடைமுறைகளை
தொடர்ச்சியாக பின்பற்ற வேண்டும் எனவும் கல்வி அமைச்சு வலியுறுத்தியுள்ளது.
கொரோனா தொற்று காரணமாக விடுமுறை வழங்கப்பட்ட அனைத்து
அரச பாடசாலைகளிலும் கடந்த 10 ஆம் திகதி முதல் கட்டம் கட்டமாக கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.






