Posted in இலங்கை செய்திகள்

சுற்றுலா நகரங்களுக்கான வீதிகளை மேம்படுத்துவதற்கு பிரதமர் திட்டம்

சுற்றுலா நகரங்களுக்கான வீதிகளை மேம்படுத்துவதற்கு பிரதமர் திட்டம்

உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை மிகவும் ஈர்த்த சுற்றுலா நகரங்களுக்கான வீதிகளை

மேம்படுத்துவது தொடர்பில் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்று (2020.09.12) சம்பந்தப்பட்ட அமைச்சுகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

சுபீட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்திற்கு அமைய சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் கௌரவ பிரதமர் இத்தீர்மானத்தை முன்னெடுத்துள்ளார்.

சுற்றுலா நகரங்களுக்கு செல்வதற்கான வீதிகள் மற்றும் ஏசதமடைந்த நிலையில் காணப்படும் அனைத்து வீதிகளையும்

புனரமைக்கும் நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறும் பிரதமர் சம்பந்தப்பட்ட தரப்பினரை அறிவுறுத்தியுள்ளார்.

உள்ளூர் சுற்றுலாப் பயணிகள் இதுவரையில் தங்களது சுற்றுலா நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர். இதேவேளைஇ சுற்றுலாப்

பயணம் மேற்கொள்வதற்கு பாதுகாப்பான நாடாக இலங்கை விளங்குவதாக வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளின் கவனம்

திரும்பியுள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் நாட்டின் பிரதான வருமான மார்க்கமாக காணப்படும் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி

செய்வதற்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாகும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

விமான நிலையங்கள் திறக்கப்பட்டதன் பின்னர் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை மற்றும் சுற்றுலாத்துறையை

கட்டியெழுப்புவதற்கான முன்னேற்பாடாக இந்த வீதிகளை புனரமைக்கும் வேலைத்திட்டத்தை வெகுவிரைவில் ஆரம்பிக்குமாறு பிரதமர் வலியுறுத்தினார்.

Posted in இலங்கை செய்திகள்

சிறைச்சாலையினுள் வீசப்பட்ட கைப்பேசிகள் கண்டுபிடிப்பு

சிறைச்சாலையினுள் வீசப்பட்ட கைப்பேசிகள் கண்டுபிடிப்பு

அகுனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையின் பாதுகாப்பு சுவரின் மீது வீசப்பட்டிருந்த

09 கைப்பேசிகள் மற்றும் 18 சிம் அட்டைகள் மற்றும் புகையிலை பெக்கெட்

ஒன்றும் சிறைச்சாலை அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் மேலும் 7 பேருக்கு கொரோனா

இலங்கையில் மேலும் 7 பேருக்கு கொரோனா

இலங்கையில் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வந்த 7 பேருக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 3,169 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இலங்கையில் மேலும் 14 பேர் கொரோனா வைரஸில் இருந்து பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு நேற்று (11) சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன் அடிப்படையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,969 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், 181 கொரோனா தொற்றாளர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இலங்கையில் இதுவரை கொரோனா வைரஸ் (கொவிட் – 19) தொற்றுக்கு உள்ளாகி 12 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in இலங்கை செய்திகள்

வாள்வெட்டு குழுவின் தலைவர் உட்பட இருவர் கைகுண்டு வாளுடன் கைது

வாள்வெட்டு குழுவின் தலைவர் உட்பட இருவர் கைகுண்டு வாளுடன் கைது

மட்டக்களப்பு வாள்வெட்டு குழுவின் தலைவர் தனு உட்பட இருவரை வாள் மற்றும் கைக்குண்டுடன் நேற்று (11) கைது செய்துள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள நாற்கேணி மற்றும் ஊறணி தொடர்ச்சியாக வாள்வெட்டு மற்றும் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டுவரும் வாள் வெட்டுக்குழு ஒன்று பல்வேறு

குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும், பெண்கள் தனிமையில் வீடுகளில் இருக்க முடியாத நிலை மற்றும் மக்களை அச்சுறுத்தி வருவதாகவும் இக் குழுவால் தங்களுக்கு உயிர் ஆபத்து

ஏற்படும் என மக்கள் பொலிஸில் முறைப்பாடு செய்வதற்கு பயந்து வருவதாக பொலிஸாருக்கு நீண்ட காலமாக முறைப்பாடுகள் கிடைக்பெற்று வந்தது.

இந்த நிலையில் புலனாய்வுத் துறையினருக்கு பொலிஸார் இவ் வாள்வெட்டு குழு பற்றி அறிவித்ததை அடுத்து புலனாய்வுத் துறையினர் தொடர்ச்சியாக இவர்கள் தொடர்பாக தகவல்களை

திரட்டிவந்துள்ள நிலையில், நேற்று மாலை நாவற்கேணி பிரதேசத்தில் வாள் வெட்டுக்குழுவின் தலைவர் தனு வாளுடன் மக்களை அச்சுறுதி வருவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதனை அடுத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பி.கே. ஹொட்டியாராச்சியின் ஆலோசனையில், குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸ் சப் இன்பெஸ்டர் முகமட் பொலிஸ் சாஜன் கிருபா

தலைமையிலான பொலிஸ் குழுவினர் அங்கு சென்று அவரை கைது செய்ய முற்பட்ட போது, அவர் பொலிஸார் மீது வாளால் வெட்ட முற்பட்டுள்ளார்.

பின்னர் பொலிஸார் சுற்றிவளைத்து அவரையும் அவரது சாகாவான சாந்தன் ஆகிய இருவரை கைது செய்ததுடன் தனுவின் இடுப்பில் இருந்து கைக்குண்டு ஒன்று வாள் ஒன்றையும் மீட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

இதில் கைது செய்யப்பட்ட வாள் வெட்டுகுழுவின் தலைவனான தனு கடந்த 2018 ஆண்டு சிறு குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸார் இருவர் விசாரணைக்கு நாவற்கேணி பிரதேசத்துக்கு சென்ற போது

அவர்களை துரத்தி துரத்தி தாக்குதல் மேற்கொண்டு தாக்கி காயப்படுத்தியது தொடர்பாக மட்டக்களப்பு நீதவான்

நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு வழக்கு நிலுவையில் உள்ளதுடன் அவர் பிணையில் வெளி வந்துள்ளார்.

அதேவேளை அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் 9 வழக்குகள் உள்ளதுடன் சிறு குற்றப் பிரிவில் 4 முறைப்பாடுகள் தாக்குதல் செய்யப்பட்டுள்ளதாகவும் யாழ்பாணத்தில் உள்ள ஆவா வாள் குழு

போன்று இவர்களும் இங்கு இயங்கி வருவதாகவும், இக் குழுவில் மேலும் பிரதான 4 பேர் தலைமறைவாகியுள்ளதுடன் அவர்களை

கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Posted in இலங்கை செய்திகள்

கொரனோ தொடர்பில் மக்கள் அலட்சிய போக்கில் செயற்படுகின்றனர் – வடமாகாண ஆளுநர்

கொரனோ தொடர்பில் மக்கள் அலட்சிய போக்கில் செயற்படுகின்றனர் – வடமாகாண ஆளுநர்

Covid 19 தொற்று இடர் நிலையினை தொடர்ந்தும் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பது தொடர்பான அறிவுறுத்தல்களை

வழங்கும் கலந்துரையாடல் வடமாகாண ஆளுநர் பீ.எஸ்.எம் சாள்ஸின் தலைமையில் வடமாகாண ஆளுநர் செயலகத்தில் (08.09.2020) இடம்பெற்றது.

கலந்துரைடலில் மாகாணத்திற்கு உட்பட்ட மாவட்ட செயலாளர்கள்,சுகாதார துறைசார் அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் ஆகியோர் கலந்து கொண்டனர். மாவட்ட ரீதியாக COvid

19 தொற்றின் தற்போதைய நிலைமை பற்றி கேட்டறிந்த ஆளுநர் தற்போது அனைத்து இடங்களிலும் Covid 19 தொடர்பில் மக்கள்

அலட்சிய போக்கில் செயற்படுவது அவதானிக்கப்பட்டதாக குறிப்பிட்டார்.

இந்நிலையில் Covid 19 இடர் தொற்று தொடர்பில் ஆளுநர் பின்வரும் அறிவுறுத்தல்களை வழங்கியிருந்தார்.

மாதத்திற்கு இரு தடவை ஒவ்வொரு பிரதேச செயலகங்கள் ரீதியாகவும் கிராமசேவகர்இ சுகாதார துறையினர் மற்றும்

பாதுகாப்பு துறையினர் உள்ளடக்கி Covid 19 தொற்று தொடர்பில் ஆராயப்பட வேண்டுமென குறிப்பிட்டார்.

ஆலய திருவிழா காலங்களில் ஒரே நேரத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடுவதை தவிர்த்து ஆலயங்களில் வேறுபட்ட பூசை நேரங்கள் ஏற்பாடு செய்து சமூக

இடைவெளியை பேணி சன நெருக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

தற்போது பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் பாடசாலைக்கு அண்மையில் உள்ள உணவகங்களை சுகாதார பரிசோதகர்கள்

கடுமையான சுகாதார பரிசோதனைகள் மூலம் கண்காணிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

எதிர்வரும் மாதங்கள் மழைக்காலம் .ஆதலால் சூழலை சுத்தமாக பேணி டெங்கு பரவலை தடுக்க சுகாதார மற்றும் பாதுகாப்ப

பிரிவினர் சட்டநடவடிக்கைகளை தொடர்ச்சியாக மேற்கொள்ள வேண்டுமென்று வவலியுறுத்தப்பட்டது.

நாம் இந்தியாவிற்கு மிக அண்மையில் இருப்பதால் Covid 19 இடர் நிலை தொடர்பாக மிகவும் அவதானமாக செயற்பட வேண்டியுள்ளதாக குறிப்பிட்ட ஆளுநர், வெளிநாடுகளில் இருந்து

வருபவர்கள் தொடர்பாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது அவசியமாகுமென வலியுறுத்தப்பட்டது.

விழாக்கள், பொதுபோக்குவரத்து, பாடசாலைகள்இஆலய திருவிழாக்கள் மற்றும் உணவகங்களில் சமூக இடைவெளி பேணல்

மிக கடுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டது.

மேலும் மண் அகழ்வு, கிரவல் அகழ்வு தொடர்பில் குறிப்பாக மன்னார், வவுனியா ஆகிய இடங்களில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டுமென குறிப்பிட்டப்பட்டது.

பயன்படுத்தப்படாதுள்ள காணிகளை இனங்கண்டு அவற்றை சீர்செய்து அவற்றில் உப உணவு பயிர்களை பயிரிட்டு அரசின்

விவசாய அபிவிருத்திக்கு பங்களிக்க வேண்டுமென ஆளுநர் தெரிவித்தார்.

Posted in இலங்கை செய்திகள்

3 பூசாரிகளை கொன்று கோவிலில் கொள்ளை

3 பூசாரிகளை கொன்று கோவிலில் கொள்ளை

3 பூசாரிகளை கொலை செய்து கோவிலில் கொள்ளை நடந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் 3 பூசாரிகளை கொன்று கோவிலில் கொள்ளை

கர்நாடக மாநிலம் மண்டியா டவுனை ஒட்டியுள்ளது, குட்டலு கிராமம். இங்கு பிரசித்தி பெற்ற அர்க்கேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் அதே பகுதியை சேர்ந்த கணேஷ்,

பிரகாஷ், ஆனந்த் ஆகியோர் பூசாரிகளாக வேலை பார்த்து வந்தனர். அவர்கள் தினமும் கோவிலில் பூஜை மேற்கொண்டு

வந்தனர். மேலும் இரவில் 3 பேரும் கோவிலுக்குள் படுத்து தூங்குவதை வழக்கமாக வைத்திருந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவும் கோவிலில் பூஜையை முடித்துவிட்டு 3 பூசாரிகளும் கோவிலில் படுத்து தூங்கினர். அப்போது நள்ளிரவில் மர்மநபர்கள் கோவிலுக்குள் புகுந்து

கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். இதை 3 பூசாரிகளும் தடுத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த மர்மநபர்கள், 3

பூசாரிகளையும் பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக தாக்கினர். இதில் 3 பேரும் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடி, துடித்து உயிரிழந்தனர்.

இதைதொடர்ந்து மர்மநபர்கள் கோவிலின் உள்ளே இருந்த 3 உண்டியல்களையும் பெயர்த்து எடுத்து கோவிலில் இருந்து வெளியே கொண்டு வந்துள்ளனர். பின்னர் அதன் பூட்டுகளை உடைத்த

மர்மநபர்கள் அதில் இருந்த பணத்தை கொள்ளையடித்து விட்டு, உண்டியல்களை அங்கேயே போட்டு விட்டு தப்பிச் சென்றுவிட்டனர்.

நேற்று காலை வழக்கம் போல் கோவிலுக்கு வந்த பக்தர்கள் கோவில் கதவுகள் உடைக்கப்பட்டு கிடப்பதையும் பார்த்து அதிர்ச்சி

அடைந்தனர். மேலும் அவர்கள் கோவிலுக்குள் சென்று பார்த்தனர். அங்கு பூசாரிகள் 3 பேரும் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே சம்பவம் குறித்து மண்டியா கிழக்கு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது மர்மநபர்கள் நள்ளிரவில்

கோவிலில் புகுந்து உண்டியல் பணத்தை கொள்ளையடித்துள்ளனர். இதை தடுத்த 3 பூசாரிகளையும் அவர்கள் ஆயுதங்களால் தாக்கி கொலை செய்ததும் தெரியவந்தது.

இதுதொடர்பாக மண்டியா கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 3 பூசாரிகளை கொலை செய்து கோவிலில்

கொள்ளை நடந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

பலியான 3 பூசாரிகளின் குடும்பத்தினருக்கும் கர்நாடக அரசு சார்பில் தலா ரூ.5 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்துள்ளார்.

Posted in இலங்கை செய்திகள்

புலிகளை அழிக்க ஆறுமுகம் தொண்டமான் உதவினார் – மகிந்தா

புலிகளை அழிக்க ஆறுமுகம் தொண்டமான் உதவினார் – மகிந்தா

அமரர் ஆறுமுகம் தொண்டமான் நாட்டை பிரிக்கும் சக்திகளுக்கு எதிராக செயற்பட்டது மாத்திரமின்றி பயங்கரவாதத்தை ஒழிக்கும் செயற்பாடுகளுக்கும் அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்பட்டதாக

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (2020.09.11) பாராளுமன்றத்தில் அனுதாப பிரேரணை மீதான விவாதத்தின்போது தெரிவித்தார்.

தோட்டத் தொழிலாளர்களின் போராட்டத் தலைவனாக ஆறுமுகம் தொண்டமான் இறுதி தருணத்திலும் பெருந்தோட்ட மக்கள் குறித்து

கொண்டிருந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் என்ற வகையில் கடமைப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

அமரர் ஆறுமுகம் தொண்டமான் தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் நிகழ்த்திய அனுதாப உரை வருமாறு:

‘சௌமியமூர்த்தி இராமநாதன் ஆறுமுகம் தொண்டமான் அவர்களை நினைவுகூறும் போது சௌமியமூர்த்தி தொண்டமான்

முதல் இலங்கை அரசியலுக்கு தொண்டமான் தலைமுறையினர் ஆற்றிய பங்களிப்பு எனக்கு நினைவிற்கு வருகிறது.

அதனால் ஆறுமுகம் தொண்டமான் அவர்களின் மறைவு அனைத்து பெருந்தோட்ட மக்களுக்கு போன்றே தனிப்பட்ட ரீதியில் எனக்கும் ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்திய சம்பவமாகும். அவரது உயிர்

பிரிவதற்கு ஒரு சில மணிநேரங்களுக்கு முன்புகூட என்னை சந்தித்தார். குறித்த சந்திப்பின்போதும் பெருந்தோட்ட

தொழிலாளர்களின் வளர்ச்சி மற்றும் அவர்களின் இடர்களை கலைவது தொடர்பிலேயே கலந்துரையாடியிருந்தார்.

1964ஆம் ஆண்டு மே 29ஆம் திகதி இந்தியாவில் பிறந்திருந்தாலும் தனது பாட்டனாரின் வழியில் சென்று ஆறுமுகம் தொண்டமான் அவர்கள் 1985ஆம் ஆண்டு இலங்கை தொழிலாளர்

காங்கிரஸினூடாக தீவிர அரசியலுக்குள் நுழைந்தார். 1994ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் நுவரெலியா

மாவட்டத்திலிருந்து முதல் முறையாக பாராளுமன்றத்திற்கு தெரிவான அவர் 26 வருட காலங்கள் தொடர்ச்சியாக நுவரெலியா

மாவட்டத்திலிருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவாகும் பாக்கியத்தை கொண்டிருந்தார்.

1999ஆம் ஆண்டு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமானின் மறைவின் பின்னர் அக்கட்சியின் தலைமைக்கு நியமிக்கப்பட்ட ஆறுமுகம்

தொண்டமான் தோட்டத் தொழிலாளர்களின் போராட்டத் தலைவனாக அவர்களின் சம்பள உயர்விற்காக தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட தலைவராவார். குறிப்பாக இந்திய

வம்சாவளியை சேர்ந்த 3 இலட்சத்திற்கும் அதிகமான தோட்டத் தொழிலாளர்களுக்கு குடியுரிமையை பெற்றுக் கொடுப்பதற்கு அவர் ஆற்றிய சேவை மகத்தானது.

ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்த ஆறுமுகம் தொண்டமான் அவர்கள் தோட்ட மக்கள் இடையே பயங்கரவாத சித்தாந்தங்கள் தோற்றம் பெற

இடமளிக்கவில்லை. முப்பது ஆண்டுகால யுத்தத்தை நிறைவு செய்யும் மனிதாபிமான போராட்டத்திற்கு அது பெரும் ஆதரவாக அமைந்தது. ஆறுமுகம் தொண்டமான் அவர்கள் அனைத்து

சந்தர்ப்பங்களிலும் நாட்டை பிரிக்கும் சக்திகளுக்கு எதிராக செயற்பட்டது மாத்திரமின்றி பயங்கரவாதத்தை ஒழிக்கும் செயற்பாடுகளுக்கும் அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்பட்டார்.

நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு அவரது அந்த ஜனநாயக பண்புகள் தீர்க்கமான தாக்கம் செலுத்தியது என்பதை இத்தருணத்தில் நினைவுபடுத்த வேண்டும்.

அமைச்சர் பதவியை பெற்றுக்கொண்ட அனைத்து சந்தர்ப்பங்களிலும் பெருந்தோட்ட மக்களுக்காக சேவையாற்றுவதற்கு முதன்மையாக செயற்பட்ட ஆறுமுகம்

தொண்டமான் அவர்கள் பெருந்தோட்ட மக்களின் வாழ்க்கையுடன் தொடர்புடைய அத்தியவசிய தேவைகளை பூர்த்தி செய்ய போராடினார். சம்பளத்திற்கான போராட்டங்களின் போது

மட்டுமன்றி தோட்ட வீடமைப்பு, சிறந்த வேலைவாய்ப்பை பெற்றுக்கொள்ளல், வைத்தியசாலை, நெடுஞ்சாலை, மின்சாரம், பாடசாலை மற்றும் பல்கலைக்கழகமொன்றை பெற்றுக் கொள்வது

வரை பெருந்தோட்ட மக்களுக்கான ஒரு மாறுபட்ட அரசியல் நோக்கை அவர் கொண்டிருந்தார்.

அதேபோன்று ஆறுமுகம் தொண்டமான் அவர்கள் நாட்டை நேசித்த சிறந்த குடிமகனாவார். இன, மத, சாதி பாகுபாடின்றி செயற்பட்ட அவர் எப்போதும் மதத்திற்கு கட்டுப்பட்டு வாழ்வதற்கு மதிப்பளித்தார்.

பல இக்கட்டான சூழ்நிலைகளிலும் எம்மை கைவிடாத அவர் அரசியலில் நம்பிக்கைக்குரிய நண்பராவார்.

இறுதி தருணத்திலும் பெருந்தோட்ட மக்களுக்காக அவருக்கு இருந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் என்ற வகையில் நாம் கடமைப்பட்டுள்ளதாக நான் இந்த வேளையில் குறிப்பிட

விரும்புகிறேன். அவரது புதல்வர் ஜீவன் தொண்டமான் அவரது பூட்டனாரின் வழியில் சென்று பெருந்தோட்ட மக்களுக்கும்

நாட்டிற்கும் சேவையாற்றுவார் என நான் உறுதியாக நம்புகின்றேன்.’

Posted in இலங்கை செய்திகள்

நாட்டின் மருந்து தேவையின் 50% வீதத்தை உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்

நாட்டின் மருந்து தேவையின் 50% வீதத்தை உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்

எதிர்வரும் மூன்று வருட காலப்பகுதியில் நாட்டின் மருந்து தேவையில் 50% வீதத்தை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

வெளிநாட்டு சந்தைகளை இலக்காகக் கொள்வதும் மக்களுக்கு தேவையான தரம் வாய்ந்த மருந்து பொருட்களை கட்டுப்படியான விலையில் வழங்குவதும் இதன் நோக்கமாகும். உலக சுகாதார

தாபனத்தின் பரிந்துரை மற்றும் நியமங்களுக்கு ஏற்ற வகையில் அனைத்து உற்பத்திகளும் மேற்கொள்ளப்பட உள்ளது. நாட்டின் மருந்து தேவையில் 85% வீதம் தற்போது இறக்குமதி

செய்யப்படுகின்றது. இதற்காக வருடாந்தம் 130 பில்லியன் ரூபா செலவிடப்படுகின்றது. நாட்டின் மருந்து தேவையை

உள்நாட்டிலேயே நிறைவேற்றிக்கொள்வதன் மூலம் வருடாந்தம் 60 பில்லியன் ரூபா நாட்டுக்கு மீதமாகும். குறித்த இலக்கை

வெற்றிகொள்வதற்கு எமக்கு முடியுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

மருந்துப் பொருள் உற்பத்தி மருந்தாக்கல், விநியோகம் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சின் எதிர்கால திட்டங்கள்

குறித்து நேற்று (10) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்

தற்போது ஆசிய வலயத்தில் அதிக மருந்து பொருட்களை இறக்குமதி செய்யும் நாடு இலங்கையாகும். உடனடியாக இந்த

நிலைமை மாற்றப்பட வேண்டுமென சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இதற்கு பங்களிப்பதற்கு பாரியளவில் சுதேச முதலீட்டாளர்கள் விருப்பம் தெரிவித்திருப்பதாக குறிப்பிட்டார்.

வெளிநாட்டு சந்தைகளை இலக்காக்கொண்ட மருந்து உற்பத்திக்காக 400 ஏக்கரில் முதலீட்டு வலயம் ஒன்று ஹம்பாந்தோட்டை கைத்தொழில் நகரில் தாபிக்கப்பட உள்ளது.

இத்திட்டத்தில் இணைந்துகொள்வதற்கு உலகின் முன்னணி மருந்து பொருள் உற்பத்தி நிறுவனங்கள் முன்வந்துள்ளன. ஆபிரிக்கா

மற்றும் தென்கிழக்காசிய வலயத்தில் மருந்து பொருட்களுக்கு அதிக கேள்வி உள்ளது. இந்த சந்தை வாய்ப்புக்களை பயன்படுத்திக்கொள்வதும் இதன் ஒரு நோக்கமாகும்.

அரச துறையை முன்னேற்றும் அதேநேரம் தனியார் துறை தொழில் முயற்சியாளர்களையும் பலப்படுத்துவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது. மருந்து பொருட்கள் உற்பத்திக்காக

முதலீட்டு முயற்சிகளில் இணைந்துகொள்ளுமாறு ஜனாதிபதி மருந்து பொருள் உற்பத்தி இறக்குமதி நிறுவனங்களிடம் திறந்த அழைப்பொன்றை விடுத்தார்.

சுதேச முதலீட்டாளர்களுக்கு முதலீட்டு வலயம் ஒன்று அனுராதபுரம் ஒயாமடு பிரதேசத்தில் 100 ஏக்கர் நிலப் பகுதியில் நிர்மாணிக்கப்பட உள்ளது. 25 நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் 300 மில்லியன்

அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான முதலீட்டை செய்வதற்கு தயாராக உள்ளனர். தற்போதைய அரசின் கீழ் நாட்டின் மருந்து உற்பத்தியில் சிறந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

தற்போது நாட்டில் அத்தியாவசிய மருந்து பொருட்களுக்கு எவ்வித பற்றாக்குறையும் இல்லை என்பது தெரிய வந்துள்ளது. ஒவ்வொரு மாதமும் புதிய மருந்து ஒன்றை நாட்டில் உற்பத்தி செய்யும் பணிகள்

ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அடுத்த வருடத்தில் இரண்டு வாரங்களுக்கு ஒரு புதிய மருந்தை உற்பத்தி செய்வதை இலக்காகக் கொள்ளப்பட்டுள்ளது.

மருந்து உற்பத்தியை பதிவு செய்வதற்கு சுமார் ஒரு வருட காலம் ஆகின்றது. அக்கால தாமதத்தை தவிர்ப்பதற்கு தேவையான சட்ட திருத்தங்களை உடனடியாக அறிமுகப்படுத்த வேண்டியதன்

தேவையை ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார். மருந்து பொருட்கள் ஒழுங்குபடுத்தும் அதிகார சபையில் சுதேச மருந்து பொருட்களை பதிவு செய்தல் உள்ளிட்ட பிரச்சினைகளை

தீர்ப்பதற்காக தனியான பிரிவொன்றை தாபிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

அரச மருந்துப் பொருள் உற்பத்தி கூட்டுத்தாபனத்தின் உற்பத்திகளை பொது மக்களுக்கு கட்டுப்படியான விலையில் பெற்றுக்கொள்வதற்காக நாடளாவிய ரீதியில் சதோச மற்றும்

கூட்டுறவு பல்பொருள் அங்காடி நிலையங்களில் 100 மருந்து விற்பனை நிலையங்களை தாபிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது. வீடுகளுக்கே மருந்துகளை விநியோகிக்கும் நிகழ்ச்சித்திட்டம் பற்றியும் கவனம் செலுத்தப்பட்டது.

அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி, இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன, பொருளாதார புத்தெழுச்சிக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பெசில் ராஜபக்ஷ,

ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தர ஆகியோரும் அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சுக்களினதும்

துறைசார்ந்த நிறுவனங்களின் அதிகாரிகளும் மருந்து பொருள் கம்பனிகளின் பிரதிநிதிகளும் இக்கலந்துரையாடலில் பங்குபற்றினர்.

Posted in இலங்கை செய்திகள்

கனடா தமிழ் முதலீட்டாளர்களை அலரி மாளிகைக்கு அழைத்து பிரதமர் நேரில் பாராட்டு

கனடா தமிழ் முதலீட்டாளர்களை அலரி மாளிகைக்கு அழைத்து பிரதமர் நேரில் பாராட்டு

கனடா தமிழ் முதலீட்டாளர்களை இன்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அலரி மாளிகைக்கு அழைத்திருந்தார்.

வடக்கு – கிழக்கில் இருக்கக்கூடிய முதலீடுகளை ஊக்கப்படுத்தும் முகமாகவும், மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் முகமாகவும் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது

இந்தச் சந்திப்பில் கனடாவில் இருக்கக்கூடிய முதலீட்டாளர்களான சுகந்தன் சண்முகநாதன் மற்றும் சதீஸ் ராஜலிங்கம் ஆகியோர் கலந்துக் கொண்டிருந்தனர்.

பனை அபிவிருத்தி நிறுவனத்துடன் இணைந்து சில வேலைத்திட்டங்களை செய்து வரக்கூடிய குறித்த இரண்டு

முதலீட்டாளர்களும் வடக்கு – கிழக்கு மக்களை தொழில் ரீதியாக உள்ளவாங்கியதற்காக பிரதமர் பாராட்டுக்களை தெரிவித்தார்.

இச் சந்திப்பில் மீன்பிடித்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் கலந்துக் கொண்டார்.

இச்சந்திப்பின்போது பிரதமர் தற்போது நாட்டில் உள்ள சூழ்நிலையில் வடக்கு – கிழக்கு பகுதியில் தங்களின் முதலீடுகளை

ஊக்கப்படுத்தி, அங்கு இருக்கக்கூடிய மக்களுக்குத் தொழில் வாய்ப்புகளை அதிகரித்துக் கொடுப்பதனூடாக அப் பகுதிகளில்

தனியார் நிறுவனங்களை வெகுவிரைவில் அதிகரிக்க வேண்டுமெனவும், அம்முயற்சிக்குத் தான் முழுமையான

ஒத்துழைப்பை வழங்குவதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்தார்.

கனடா தமிழ் முதலீட்டாளர்களை
கனடா தமிழ் முதலீட்டாளர்களை
Posted in இலங்கை செய்திகள்

செம்மணி சுடலைக்குள் மருத்துவ கழிவுகளை கொட்டும் யாழ் மருத்துவமனை – மக்கள் எதிர்ப்பு

செம்மணி சுடலைக்குள் மருத்துவ கழிவுகளை கொட்டும் யாழ் மருத்துவமனை – மக்கள் எதிர்ப்பு

யாழ்ப்பாண போதனா வைத்திசாலையின் மருத்துவ கழிவுகளை செம்மணி

சுடலைக்கு கொட்டி வரும் யாழ்ப்பாண மருத்துவ மனையின் செயலுக்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்

இந்த மருத்துவ கழிவுகளின் மக்களின் வாழ்வுக்கு பெரும் அச்சறுத்தல்

ஏற்படும் என்ற நிலையில் மக்கள் எதிர்ப்பு பலமாக உள்ளது ,இதனால்

நோய் தோற்று அதிகமாகும் என அஞ்ச படுவதால் , இந்த கழிவு கொட்டும் செயல் தடுக்க பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது

யாழ் மருத்துவ மனையின் சமீப கால செயல் பாடுகள் மக்கள் மத்தியில்

கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகின்றமை குறிப்பிட தக்கது

Posted in இலங்கை செய்திகள்

வவுனியாவில் மாணவனின் பல்லை உடைத்த – வாத்தியார்

வவுனியாவில் மாணவனின் பல்லை உடைத்த – வாத்தியார்

கடந்த தினம் வவுனியாவில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற பிராத்தனை நிகழ்வு ஒன்றில் ஒலிவாங்கி செயல் இழந்துள்ளது

அதனை அடுத்து மீள ஒன்றை எடுத்து வரும் படி வாத்தியார் ஒருவர் கட்டளை

பிறப்பித்துள்ளார் ,எனினும் அதனை எடுத்து வர அவர் மறுத்த நிலையில் கன்னத்தில் ஓங்கி அடித்துளளார்

இவரது அடியினால் மாணவனின் பள்ளு உடைந்ததுடன் ,அவனது கன்னம் வீங்கிய நிலையில் உள்ளது

வீடு சென்ற மாணவன் அங்கு இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் பெற்றவருக்கு தெரிவித்த நிலையில் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்க பட்டுள்ளார்

குறித்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கும் படி கோரி மாணவர்கள் போராட்டத்தில் குதிக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது

ரவுடிகளாகி மாறி வரும் ஆசிரியர்கள்

Posted in இலங்கை செய்திகள்

யாழில் ரவுடிகள் அடாவடி – வீடு புகுந்து மோட்டார் சைக்கிள் எரிப்பு

யாழில் ரவுடிகள் அடாவடி – வீடு புகுந்து மோட்டார் சைக்கிள் எரிப்பு

யாழ்ப்பாண பகுதியில் வீடொன்றுக்குள் புகுந்த ரவுடி கும்பல் ஒன்று அந்த

வீட்டின் உடமைகளை அடித்து நொறுக்கியதுடன் அங்கிருந்த பெறுமதி மிக்க மோட்டார் சைக்கிள் ஒன்றை எரித்து சென்றுள்ளது

மேற்படி சம்பவம் அந்த கிராம மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது

குறித்த சம்பவம் தொடர்பில் போலீசார் விசாரணைகள் செய்து வருகின்றனர் ,

கோட்டாவினால் உருவாக்க பட்ட ரவுடி கும்பல் ஒன்றே மேற்படி இழி செயலை செய்துள்ளதாக மக்கள் மத்தியில் பேச படுகிறது

Posted in இலங்கை செய்திகள்

எம்ரீ நியூ டயமண்ட் கப்பல் 50 கடல் மைல் தொலைவிற்கு அப்பால் – கடற்படை

எம்ரீ நியூ டயமண்ட் கப்பல் 50 கடல் மைல் தொலைவிற்கு அப்பால் – கடற்படை

நிர்கதிக்குள்ளாகியுள்ள எம்ரீ நியூ டயமண்ட் கப்பல் கல்முனை துறையில் இருந்து 50 கடல் மைல் தொலைவிற்கு அப்பால்

இழுத்துச்சௌ;ளப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் கெப்டன் இந்திக டி சில்வா நேற்று (10) தெரிவித்துள்ளார்.

இன்றிலிருந்து குறித்த நடவடிக்கையில் சிங்கப்பூர் டக் படகும் இணைந்துகொள்ளும் என அவர் மேலும் தெரிவித்தார்.

கப்பலை அண்மித்த கடற்பரப்பில் எண்ணெய் மாதிரிகள் பெறப்பட்டு அவை தொடர்பான விசாரணைகளை உரிய

அதிகாரிகள் முன்னெடுத்து வருவதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

இதேவேளைஇ நேற்று (10) காலை 10.00 மணியளவில் உளவு நடவடிக்கைகளை மேற்கோள்வதற்காக சீனக்குடா விமான

நிலையத்திலிருந்து பீச்கிராப்ட் ரக விமானம் ஒன்று சென்றுள்ளதாக விமானப்படை பேச்சாளர் குரூப் கெப்டன் துஷான் விஜேசிங்க தெரிவித்தார்.

குறித்த கப்பலை இலங்கை கடற்பரப்பிற்கு அப்பால் கொண்டு செல்லுமாறு எம்ரீ நியூ டயமண்ட் கப்பல் உரிமையாளர் உட்பட

அனைத்து வெளி நிறுவனங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவி தர்ஷனி லஹண்டபுற தெரிவித்தார்.

இதேவேளை, சிங்கப்பூரை தளமாக கொண்ட சர்வதேச நிறுவனமான ஸ்மித் சிங்கப்பூர் தனியார் நிறுவனத்தின்

பணியாளர்கள்இ எம்ரீ நியூ டயமண்ட் கப்பலின் நிலைமை குறித்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Posted in இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் சிறு கைத்தொழில் முயற்சியாளர்களுக்கு கடன் வசதி

மட்டக்களப்பில் சிறு கைத்தொழில் முயற்சியாளர்களுக்கு கடன் வசதி

மட்டக்களப்பில் சிறு கைத்தொழிலில் ஈடுபட்டு வரும் முயற்சியாளர்களுக்கு சுயசக்தி கடன் திட்டத்தின்கீழ் தொழில் விருத்தியினை மேற்கொள்வதற்காக 30 இலட்சம் ரூபா

பெறுமதியான காசேலை மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. கலாமதி பத்மராஜாவினால் நேற்று (10) மாவட்ட செயலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.

மாவட்ட செயலகத்தில் செயற்பட்டு வரும் சிறுகைத்தொழில் அபிவிருத்திப் பிரிவின் வழிகாட்டலில் சிறுதொழில் முயற்சியில்

ஈடுபட்டு வருகின்ற உற்பத்தியாளர்களின் தொழில் விருத்தியினை மேம்படுத்தும் நோக்குடன் நிதி மற்றும் துணைச் சேவைப்பிரிவு

இவர்களுக்கான கடன் வசதியினைப் பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கையினை மேற்கொண்டிருந்தது.

நாட்டின் பொறுளாதாரத்தினை மேம்படுத்தும் அரசின் திட்டத்திற்கமைய சிறுதொழில் முயற்சியாளர்களுக்கு இக்கடன்

வசதிகளை வங்கிகள் மூலம் 5.5 வீத வட்டியில் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக இம்மாவட்டத்தில் தையல் தொழில், அரிசி மா உற்பத்தி, சீமெந்து மற்றும் செங்கல் உற்பத்தி, மாடு வளர்ப்பு, காளான் வளர்ப்பு, வீட்டுத் தோட்டம் மற்றும் மிக்சர் உற்பத்தி

போன்ற தொழில்களில் ஈடுபட்டுவரும் 12 தொழில் முயற்சியாளர்களுக்கு ஹட்டன் நெசனல் வங்கியினால் தலா 2 இலட்சத்தி 50 ஆயிரம் ரூபா கடன் வசதி முதற்கட்டமாக வழங்கி

வைக்கப்பட்டுள்ளது. இதற்கான காசோலைகளை அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா பயனாளர்களுக்கு வழங்கி வைத்தார்.

இதன்போது அரசாங்க அதிபர் கருத்து தெரிவிக்கையில் படித்து பட்டம் பெற்றுவிட்டு அரசாங்க தொழிலை மாத்திரம் எதிர்பாரத்திருக்கும் மனநிலை இளம்சமுதாயத்திடமிருந்து

மாறவேண்டும். அவர்கள் சிறு கைத்தொழில் முயற்சியில் ஈடுபட்டு தங்களையும், தாங்கள் சார்திருப்போரையும், நாட்டையும் பொருளாதார ரீதியாக உயர்த்திட முன்வரவேண்டும். பிரபல

தொழிலதிபர்களாக விளங்குபவர்கள் பெரும்பாலும் ஒரு சிறிய தொழிலை ஆரம்பித்து முன்னேறியவர்களே. இக்கடன் வசதியினைப் பெற்றுக் கொள்பவர்கள் தமது தொழிலுக்காக

மாத்திரம் அதனைப் பயன்படுத்தி தொழில் விருத்தியடையச் செய்ய வேண்டுமெனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

Posted in இலங்கை செய்திகள்

போலி ஆவணங்கள் மூலம் சென்னையில் பாஸ்போர்ட், ஆதார் அட்டை பெற்ற இலங்கை தம்பதி

போலி ஆவணங்கள் மூலம் சென்னையில் பாஸ்போர்ட், ஆதார் அட்டை பெற்ற இலங்கை தம்பதி

சென்னையில் போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட், ஆதார் அட்டை பெற்ற இலங்கையை சேர்ந்த தம்பதியர் சிக்கினர். அவர்களிடம் ‘கியூ’ பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.

போலி ஆவணங்கள் மூலம் சென்னையில் பாஸ்போர்ட், ஆதார் அட்டை பெற்ற இலங்கை தம்பதி
பாஸ்போர்ட்
சென்னை:

சென்னை அண்ணாநகர் மேற்கு அன்பு காலனியில் வசித்து வரும் தனியார் காப்பீடு நிறுவன ஊழியர் தாஜூதீன் (வயது 55), அவரது மனைவி ஆஷா (60) ஆகியோர் இலங்கையை சேர்ந்தவர்கள்

என்றும், அவர்கள் இந்திய அரசின் ஆதார் அடையாள அட்டை, பாஸ்போர்ட் உள்பட அரசு அங்கீகார அட்டைகள் பெற்று

இருப்பதாகவும் மத்திய உளவுப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதுதொடர்பாக தமிழக ‘கியூ’ பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அவர்கள் 2 பேரிடம் ‘கியூ’ பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், ‘தாஜூதீனும், ஆஷாவும் இலங்கை நாட்டில் இருந்து கடந்த 1987-ம் ஆண்டு தமிழகம் வந்து, நெல்லை மாவட்டத்தில் தங்கி

இருந்ததும், பின்னர் 1998-ம் ஆண்டு அவர்கள் சென்னையில் குடியேறியதும், தற்போது அவர்களுடைய மகன் ஜூலியன் (33) பெங்களூருவில் இருப்பதும் தெரிய வந்தது.

இவர்கள் போலி ஆவணங்கள் மூலம் ஆதார் அட்டை, பாஸ்போர்ட் என அரசு அங்கீகார அட்டைகளை பெற்று சட்டவிரோதமாக தங்கி இருந்ததும் கண்டறியப்பட்டது.

பின்னர் ‘கியூ’ பிரிவு போலீசார் அவர்கள் 2 பேரையும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். மத்திய

குற்றப்பிரிவு போலீசாரும் இலங்கை தம்பதியிடம் தனியாக விசாரணை நடத்தினர்.

போலி ஆவணங்கள் தயாரித்தது எப்படி? இதற்கு யார் உடந்தையாக இருந்தார்கள்? என்ற கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டது.

விசாரணை முடிவில் தாஜூதீன் கைது செய்யப்பட்டார். அவருடைய மனைவி ஆஷாவை மீண்டும் விசாரணைக்கு அழைக்கும் போது

வரவேண்டும் என்று சொல்லி போலீசார் அனுப்பி வைத்ததாக தெரிகிறது.

Posted in இலங்கை செய்திகள்

மாணவனை அடித்து கொன்ற யானை – கண்ணீரில் கிராமம்

மாணவனை அடித்து கொன்ற யானை – கண்ணீரில் கிராமம்

கிராந்துருகோட்டை பஹலரக்கிந்த பிரதேசத்தில் காட்டு யானை தாக்குதலுக்கு

உள்ளாகி பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று இரவு 7 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

காட்டு யானையின் தாக்குதலில் உயிரிழந்த மாணவன் 16 வயதுடையவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் அதிகரித்த கொரனோ நோயாளர்கள்

இலங்கையில் அதிகரித்த கொரனோ நோயாளர்கள்

நாட்டில் மேலும் ஐந்து பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து, கொரோனா

தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 3,152 ஆக அதிகரித்துள்ளது.

மாலைத்தீவிலிருந்து நாட்டிற்கு வருகை தந்து தனிமைப்படுத்தலில் இருந்தவர்களுக்கே இவ்வாறு கொரோனா தொற்று

உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்த 2,951 பேர் வீடுகளுக்கு சென்றுள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

194 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Posted in இலங்கை செய்திகள்

வெளிநாட்டு தமிழர்களை இலங்கை வர அழைக்கும் – ஹிட்லர் மகிந்தா

வெளிநாட்டு தமிழர்களை இலங்கை வர அழைக்கும் – ஹிட்லர் மகிந்தா

புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்கள் மற்றும் மக்கள் அமைப்புகள், எந்தவித அச்சமுமின்றி எம்முடன் இணைந்துப்

பணியாற்ற வாருங்கள்” என புலம்பெயர்ந்துள்ள சில முதலீட்டாளர்களைச் சந்தித்தபோது, பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

அங்கு, இலங்கையின் முதலீடுகளை ஊக்குவித்தல் தொடர்பில் கருத்து வெளியிட்ட பிரதமர், “கடந்த ஆட்சிக் காலத்தில், இலங்கையில் பல முதலீடுகளை மேற்கொள்ள வருகைதந்த

புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்களாகிய நீங்கள் அனுபவித்த சிரமங்களை நாம் நன்கறிவோம். குறிப்பாக, இலங்கையில் முதலீடுகளைச் செய்வதற்கு, உள்ளுர் முகவர்கள் தரகுப் பணம் பெற

முற்பட்டதால், நீங்கள் பலர், நாட்டில் முதலீடு செய்வதைத் தவிர்த்து வெளியேறியுள்ளமை, எமக்கு மிகவும் வேதனை அளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

“எமது அரசாங்கம், உங்களுக்ளுக்கான முழுமையான பாதுகாப்பை உறுதிப்படுத்தும். அத்துடன், உங்களிடம் யாராவது தரகுப் பணம்

அல்லது வேறு ஏதாவது தொல்லைகள் கொடுத்தால், நீங்கள் ஜனாதிபதி மற்றும் பிரதமர் அலுவலகத்துக்கு நேரடியாகத் தெரியப்படுத்தலாம்.

“வெயில் – பனி என்று பாராமல் உங்களை வருத்தி, நீங்கள் உழைக்கும் பணத்தை, உங்கள் மண்ணில் நீங்கள் தைரியத்துடன்

முதலீடு செய்வதற்கு, எமது அரசாங்கம் என்றும் உங்களுக்குப் பக்கபலமாகச் செயற்படும்.

“எம் அனைவரதும் அழகிய இலங்கைத் தீவை, உங்கள் வரவால் வெகு விரைவில் இன்னும் பன்மடங்கு அழகிய மற்றும் வளம்

கொழிக்கும்; உலகம் திரும்பிப் பார்க்கும் நாடாக்குவதற்கு, நாம் அனைவரும் கைகோர்த்துப் பயணிப்போம்” என,

புலம்பெயர்ந்துள்ள முதலீட்டாளர்களிடம், பிரதமர் நம்பிக்கை வெளியிட்டார்.

Posted in இலங்கை செய்திகள்

பூசா சிறையில் கைதிகள் உண்ணாவிரதம்

பூசா சிறையில் கைதிகள் உண்ணாவிரதம்

இலங்கை கொடிய சிறை சாலையாக விளங்கும் பூசா சிறை சாலையில்

தடுத்து வைக்க பட்டுள்ள கைதிகள் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் குதித்துள்ளனர்

விசாரணைகளில் ஏதும் இன்றி பல்வேறு பட்ட குற்ற சாட்டில் அடைத்து

வைக்க பட்டுள்ள இவர்களே இவ்விதம் உண்ணவிரத போரில் குதித்துள்ளனர் என்பது குறிப்பிட தக்கது

Posted in இலங்கை செய்திகள்

பெரியபந்தன் பகுதியில் காதலர்கள் சடலமாக மீட்பு

பெரியபந்தன் பகுதியில் காதலர்கள் சடலமாக மீட்பு

கிளிநொச்சி பெரியபந்தன் பகுதியில் இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இளைஞர் ஒருவரும், யுவதி ஒருவருமே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி பரந்தன் குமரபுரம் பகுதியைச் சேர்ந்த இளைஞரும், இரத்தினபுரம் கிராமத்தைச் சேர்ந்த யுவதியுமே சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

கடந்த சில நாட்களாக இருவரையும் காணவில்லை என அவரவர் குடும்பத்தினர் தேடியுள்ளர். இந்த நிலையில் பெரியபரந்தன் பகுதியிலிருந்து துர்நாற்றம் வீசியுள்ளது.

இதனை தொடர்ந்தே இன்று (10) காலை சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

சடலமாக மீட்கப்பட்ட யுவதி கடந்த சில நாட்களுக்கு முன் பட்டதாரி நியமனம் பெற்றவர் என்றும் இளைஞர் இலங்கை மின்சார

சபையில் ஒப்பந்தப் பணியில் ஈடுப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலதி விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார மேற்கொண்டு வருகின்றனர்..