Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
பாலம் உடைந்ததினால் இரு
ஊர்கள் பிரிந்தது
ஊர்கள் பிரிந்தது
பாலம் உடைந்ததினால் இரு
ஊர்கள் பிரிந்தது
கண்டி மாவட்டம் உடபளாத்த பிரதேசத்திற்கு உட்பட்ட கம்பளை நகர சபையையும் கங்கஹிகலகோரல பிரதேச சபைக்கு உட்பட்ட கம்பலவெல பிரதேசத்தையும் இணைக்கும் கம்பலவெல பிரதான
பாலத்தின் ஒரு பகுதி உடைவடைந்து உள்ளது. இந்த பாலம் உடைவடைந்து 06 வருடங்கள் ஆன போதும் இதனை திருத்துவதற்கான எந்தவித நடவடிக்கைகளும் இது வரைக்கும்
யாராலும் முன்னெடுக்கவில்லை. இதனால் கம்பளை நகர சபைக்கும் கங்கஹிகலகோரல பிரதேச சபைக்கும் உட்பட்ட பிரதேசங்களின் தொடர்பு முற்றாக துண்டிக்கபட்டுள்ளதுடன்
குறித்த பிரதேசங்களுக்கு செல்வதற்கு பல கிலோமீற்றர் தூரம் செல்ல வேண்டியுள்ளது. இந் நிiலில் இந்த பாலத்தை அமைத்து தருமாறுகோரி விடும் அதே வேலை இந்த பாலத்தை அமைத்து
தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்து பல ஆர்பாட்டங்களையும் நடாத்தினர். இது வரைக்கும் அவையும் வெற்றியளிக்கவில்லை.
இந்த பாலத்தின் ஊடாகவே கம்பலவெல பிரதேச மக்கள் தங்களின் நாளாந்த தேவைகளுக்காவும் மாணவர்கள் தங்கள் கல்வி நடவடிக்கைகளுக்காகவும் கம்பளை நகரத்திற்கு வந்து
செல்கின்றனர். தற்போது இதற்காக பல கிலோ மீற்றர் தூரம் நடந்தும் வாகனங்களுக்கு அதிக பணம் கொடுத்தும் தங்கள் வீடுகளுக்கு செல்ல வேண்டியுள்ளது. இந் நிலையில் இந்த
பாலத்தினை சம்பந்தபட்டவர்கள் கவனத்தில் கொண்டு திருத்தி அமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

பாலம் உடைந்ததினால் 
பாதை அவலத்தால் பாதிக்கப்பட்டுள்ள கஷ்ட பிரதேச தோட்ட மக்கள்
பாதை அவலத்தால் பாதிக்கப்பட்டுள்ள
கஷ்ட பிரதேச தோட்ட மக்கள்
நுவரெலியா மாவட்டம் கொத்மலை பிரதேச சபைக்கு உட்பட்ட வெதமுல்ல கிராம சேவகர் பிரிவு 474எல் வெதமுல்ல தோட்டம் கெமினிதன் பிரிவிற்கு செல்லும் பிரதான பாதையே இது.
இந்த பாதையில் நாளாந்தம் 1000 க்கு மேற்பட்டோர் பயணித்து வருகின்றனர். இந்த தோட்ட பிரதேசத்தில் 500 ஏக்கருக்கு மேற்பட்ட காணியில் விவசாய நடவடிக்கைகளும் முன்னெடுக்கபடுகின்றது.
ஆரம்ப பாடசாலை ஒன்றும் காணப்படுகின்றது. 166 குடும்பங்களை சேரந்த 750 மேற்பட்ட பொது மக்கள் வாழ்ந்து வருகின்றனர். 533 வாக்குகள் இங்கு காணப்படுகின்றது. அத்துடன் விவசாய
செய்கைக்கு வெளி இடங்களில் இருந்து வந்து தற்காலிகமாக நூற்றுக்கு மேற்பட்N;டார் வசித்து வருகின்றனர். மாணவரகள் ஆரம்ப மற்றும் உயர்நிலை கல்வி கற்பதற்கு இந்த தோட்டத்தில்
இருந்து இறம்பொடை தமிழ் மகா வித்தியாலயம் உட்பட ஏனைய பாடசாலைகளுக்கு நாளாந்தம் மாணவர்கள் நடந்தும் லொரி மற்றும் தனியார் வாகனங்ளிலும் நடந்துமே செல்கின்றனர். இங்கு
முறையான போக்குவரத்து சேவை இல்லை. தோட்ட பாடசாலைக்கு செல்லும் ஆசிரியர்களின் நிலமையும் இதுவே. இந்த பிரதேசம் மிகவும் குளிர்ந்த ஒரு கஷ்ட பிரதேசமாகும். கடல் மட்டத்தில் இருந்து
5000 அடிக்கு மேல் இந்த தோட்டம் காணப்படுகின்றது. நடந்து செல்லும் போது செங்குத்தான மலையில் 1200 படிகள் ஏற வேண்டும்.
நுவரெலியா கண்டி பிரதான பாதையில் வெதமுல்ல சந்தியில் இருந்து வெதமுல்ல தோட்டம் கயிர்கட்டி தோட்டம் ஊடாக இந்த கெமினிதன் தோட்டத்திற்கு செல்ல 11 கிலோமீற்றர் தூரம்
காணப்படுகின்றது. இந்த பாதையின் இடையிடையே குறிப்pட்ட தூரம் மலையக அரசியல் பிரமுகர்களின் பங்களிப்பு ஊடாக செப்பனிடபட்டாலும் பெருமளலாவான பாதை இன்னமும்
திருத்தப்படாமல் காணப்படுகின்றஙது. இங்குள்ள மக்கள் தங்களின் அபிருத்திகளுக்காக முன்னெடுக்கப்படும் அனைத்து செயற்பாடுகளுக்கும் பாதை அவலம் ஒரு தடையாக இருக்கின்றது.
தங்களது வீடுகளை கூட கட்டிக் கொள்ள முடியவி;ல்லை. அதற்கான மூலப்பொருட்களை கொண்டு செல்வதிலும் அதற்கான செலவும் அதிகமாக இருக்கின்றது.
இந்த பாதை அவலம் காரணமாக தோட்ட பொது மக்கள் பாடசாலை மாணவர்கள் விவசாயிகள் பெரிதும் பாதிப்படைந்து வருகின்றனர். விவசாயிகளின் விவசாய உற்பத்திகளுக்கு உற்பத்தி செலவும்
உற்பத்திகளை வினியோகிக்க சந்தைப்படுத்தும் செலவும் அதிகரித்து வருகின்றது. இதனால் விவசாயிகளும் பாதிப்படைந்து வருகின்றனர். விவசாய செயற்பாடுகளுக்கு வாகனங்களை
பயன்படுத்த முடியாத நிலையும் தோன்றி உள்ளது. அதற்கான செலவும் அதிகம். தோட்ட தொழிலாளர்கள் தங்கள் வருமானத்தை அதிகரித்து கொள்வதற்காக விவசாய நடவடிக்கைகளில்
ஈடுபட்டாலும் அதில் அவர்களுக்கு போதிய வருமானம் இல்லை. மக்கள் நாளாந்தம் தங்களின் வைத்திய சேவைகளை பெற்றுக் கொள்வதற்காகவும் அவசர தேவைகளின் போதும் இந்த
பாதையையே பாவித்து வருகின்றனர். இதனால் கர்பினி பெண்கள் வயோதிபர்கள் பெரிதும் பாதிப்படைகின்றனர். இந் நிலையில் இந்த
பாதையை சரி செய்து கொடுத்து இந்த மக்களின் சுபீட்சத்திற்கு வழி சமைத்து கொடுக்க வேண்டியது பொறுப்பானவர்களின் கடமையாகும்.

பாதை அவலத்தால் 
06 பாடசாலைகளுக்கான ஆசிரியர்கள் உரிய நேரத்திற்கு பாடசலைக்கு செல்லாததினால் மாணவர்கள் பாதிப்பு
06 பாடசாலைகளுக்கான ஆசிரியர்கள் உரிய நேரத்திற்கு பாடசலைக்கு செல்லாததினால் மாணவர்கள் பாதிப்பு
புசல்லாவை நகரிலிருந்து பொரட்டாசி தோட்டத்திற்கு காலை வேலையில் செல்லும் பஸ் போக்குவரத்து முறையான நேரத்திற்கு இன்மையால் இப்பகுதியிலுள்ள 06 பாடசாலைகளுக்கு செல்லும்
ஆசிரியர்களும் மற்றும் ஏனய அரச ஊழியர்கள்¸ தோட்ட உத்தியோகஸ்தர்கள் பெரிதும் பாதிப்புக்களை எதிர்நோக்கி
வருகின்றனர். மாணவர்கள் தனியார் வாகனங்களிலேயே புஸ்ஸல்லாவ நகரத்தில் இருக்கும் பாடசாலைகளுக்கு செல்கின்றனர
இப் பிரதேசத்தில் உள்ள நுவரெலியா மாவட்டம் கொத்மலை கல்வி வலையத்திற்கு உட்பட்ட ஹெல்பொட வடக்கு தமிழ் மகா வித்தியாலம் மேமொழி தமிழ் வித்தியாலயம் அயரி தமிழ் மகா
வித்தியாலயம்;; புரட்டொப் தமிழ் வித்தியாலயம் ரஸ்புரூக் தமிழ் வித்தியாலயம் கெமினிதன் தமிழ் வித்தியாலயம் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளுக்கும் வரும் ஆசிரியர்கள் அதிபர்கள்
சரியான போக்குவரத்து வசதி இன்மையால் பாடசாலைகளுக்கு காலை 09 மணி நேரங்களிலேயே பாடசாலைகளுக்கு செல்கின்றனர். காலை புஸ்ஸல்லாவ நகரத்திலிருந்து பெரட்டாசி
பிரதேசத்திற்கு 7.30 மணியளவிலேயே தனியார் பஸ் தனது சேவையை ஆரம்பிக்கின்றது. இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் சேவை சுமார் 10 வருட காலமாக இல்லை.
அசிரியர்கள் மீண்டும் பாடசாலை விடுவதற்கு முன் பகல் 01.30 மணிக்கெல்லாம் வீடு திரும்பியும் விடுகின்றார்கள். காரணம் இந்த பஸ்சை விட்டால் அடுத்த பஸ்சிற்காக நீண்ட நேரம் காத்திருக்க
வேண்டும். ஒரு சில அதிபர்களும் ஆசிரியர்களும் தங்களது சொந்த மோட்டார் சைக்கில் முற்சக்கர வண்டி ஆகியவற்றில் நேரத்திற்கு செல்கின்றனர். ஒரு ஆசிரியருக்கு தனது பாடசாலைக்கான சேவை
நேரத்தில் நான்கு மணித்தியாலயங்கள் மாத்திரமே பாடசாலையில் சேவை செய்யக் கூடியதாக இருக்கின்றது.
இந்த விடயம் தொடர்பில் தனியார் பஸ் உரிமையாளர்களிடம்
வினவிய போது நாங்கள் எங்கள் பஸ் சேவையை உரிய நேரத்திற்கு ஆரம்பிக்க ஆயுத்தமாக உள்ளோம். ஆசிரியர்கள் குறித்த நேரத்திற்கு வருவதில்லை விட்டு விட்டு போகவும் முடியாது.
இவர்கள் தங்கள் பிள்ளைகளை புஸ்ஸல்லாவ பிரசே பாடசாலைகளில் விட்டுவிட்டே வருகின்றனர் அது வரைக்கும் காத்து நிற்க்க வேண்டும். எங்களுக்கும் அதிகமானவர்கள்
பயணித்தால் தான் இலாபம் கிடைக்கும் பாதை அவலம் காரணமாக பஸ் அடிக்கடி உடைந்து விடுகின்றது. அதற்கும் செலவு செய்ய வேண்டும். மேற்படி பாடசாலைகளுக்கு எங்கள் பஸ்சில்
செல்லாத சொந்த வாகனங்களில் செல்பவர்களும் பாடசாலைகளுக்கு அருகில் இருப்பவர்களும் இவர்கள் வரும் வரைக்கும் இவர்களுடனே செல்கின்றனர். அவர்களும் பொருப்புடன்
நடந்துக் கொள்ள வேண்டும். இந்த தவைணையில் இருந்தே காலை 7.30 பஸ் போகின்றது இதற்கு முன்னர் பல வருடங்களாக காலை 8.15 க்கே பஸ் புறப்பட்டது தற்போது நாங்கள் ஒரு படி முன்னேறி
உள்ளோம். எங்களுக்கும் இந்த சமூகம் தொடர்பில் அக்கரை இருக்கின்றது. சிலர் செய்கின்ற குறைகளை பஸ் உரிமையாளர் எங்களை பாதிக்கின்றது. யாரும் எதுவும் கேட்டால் பஸ் லேட் என
இலகுவாக கூறி தப்பித்துக் கொள்கின்றனர். தற்போதைக்கு 8 பஸ்கள் சேவையில் உள்ளது என்று கூறினர்.
மேற்படி பிரதேசங்கள் மிகவும் பாதிக்கபட்ட ஒரு கஷ்ட்டபட்ட பிரதேசமாகும். இங்குள்ள மாணவர்கள் திறமையானவர்கள் நன்கு கல்வி கற்க கூடியவர்கள். பலர் பல்கலைகழகம் உட்பட தேசிய
கல்வியல் கல்லூரிகளில் கல்வி பயின்று வருகின்றனர். இவர்களுக்கான முiறான களம் அமைக்கப்படுமானால் மேலும் இவர்கள் அபிவிருத்தியை நோக்கி செல்வர். இதற்கு
பொருப்பானவர்கள் கவனம் செலுத்த வேண்டும்.
குறைபாடுகள் காரணமாக இப்பிரதேசதில் வாழும் தோட்ட தொழிலார்களின் பிள்ளைகளின் கல்வியில் பாரிய வீழ்ச்சி காணப்படுவதுடன் ஆசிரியர்கள் அதிபர்கள் பல இன்னல்களை
எதிர்நோக்கியும் வருகின்றனர். இதை எந்த கல்விசார் ஆளனியினரும் கண்டுக் கொள்வதில்லை. புஸ்ஸலாலவ நகரத்தில் உள்ள பாடசாலைகள் அனைத்தும் ஆரம்பிக்கப்பட்டு ஒரு மணி
‘நேரம் கழித்தே மேற்படி தூர பிரதேச பாடசாலைகளுக்கு ஆசிரியர்கள் செல்கின்றனர். முன்னுக்கு உள்ள பாடசாலைகளுக்கு நேரத்திற்கு சென்றாலும் ரஸ்புரூக் பாடசாலைக்கு ஆசிரியர்கள்
செல்லும் நேரம் அதிகமாகவே இருக்கின்றது. இவர்களின் இந்த பிரச்சனைக்கு இந்த பாதை ஒரு பாரிய காரணமாக இருந்தாலும் தற்போது இந்த பாதையின் ஒரு பகுதி திருத்தப்பட்டு
மிகுதியானவை செப்பனிடப்பட்டு வருகின்றன. இந் நிலையில் சரியான நேரத்திற்கான போக்குவரத்து வசதிகளை இவர்களுக்கு செய்து கொடுக்க வேண்டியது சம்பந்தபட்டவர்களின்
கடமையாகும். காலை 7.00 மணிக்கு புஸ்ஸல்லாவ நகரத்தில் இருந்து பஸ் மேற்படி பிரதேசத்திற்கு செல்லுமானால் அதிபர்கள் ஆசிரியர்கள் நேரத்திற்கு பாடசாலை செல்லலாம். அதே போல் பி.ப
2.00 மணிக்கு பின்னர் பஸ் மீண்டும் புஸ்ஸல்லாவ வருமானால் இந்த பிரச்சனைக்கு தீர்வு கிட்டும் இதனை சம்பந்தபட்டவர்கள்
செய்யாததினால் இந்த பிரச்சனை தொடர்ந்து 15 வருடங்களுக்கு மேல் இருந்து வருகின்றது.
பாதையின் அவல நிலை காரணமாக தனியார் பஸ் வண்டிகளும் அடிக்கடி பழுதடைகின்றன. இதனால் போக்குவரத்து மேற்கொள்வதில் பெரும்பாதிப்புகளை எதிர்நோக்க வேண்டியுள்ளதாக இப்பகுதி மக்கள் சுட்டிக்காட்டுகின்றன.;
பாடசாலை மாணவர்களுக்கும் இந் நிலையே சிங்களம் மற்றும் தமிழ்மொழி மூலமான மாணவர்கள் இப்பிரதேசத்திலிருந்து நகர பாடசாலைக்கும் செல்கின்றனர் இவர்களுக்கும் இந் நிலையே.
இதனால் மாணவர்களின் கல்வி நிலை பாதிப்புக்கு உள்ளாகின்றது. இதற்கு முன்னர் இரண்டு அரச இ.போ.ச வண்டிகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தன அவை தற்போது இ;ல்லை.
இந்நிலைமை குறித்த கம்பளை பஸ் டிப்போ முகாமையாளரை தொடர்பு கொண்டு கேட்ட போது சேவையில் ஈடுபட்டு வந்த இரண்டு பஸ் வண்டிகளும் பழுதடைந்து விட்டன. புதிய பஸ்
வண்டிகள் வாங்கும் வரை காத்திருக்கின்றோம். அத்துடன் பாதை பழுதடைந்தையால் பஸ் சேவையை முன்னெடுக்க முடியாமல் உள்ளதாக தெரிவித்தார். இருந்தும் தற்போது பாதை
செப்பனிடப்பட்டு வருவதால் உரிய நேரத்திற்கு செல்லக் கூடிய தனியார் அல்லது இ.போ.ச பஸ்களை சேவையில் ஈடுப்படுத்த முடியும்.
கடந்த காலங்களில் இப்பகுதியிலுள்ள வீதிகளையே 05 முறை பாரிய பஸ் விபத்துக்கள் இடம் பெற்றன. இவ் வீபத்துக்களில்
பாதிப்புக்குள்ளான நூற்றுக்கு;மேற்பட்டோர் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுள்ளனர். இதில் பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இவர்களின் பிரச்சினைகளுக்கு இதற்குறிய தீர்வு காண சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன் வருவார்களா?

06 பாடசாலைகளுக்கான 
வெள்ளத்தால் பாதிக்க பட்டவர்களுக்கு -நிதி உதவி -அரசு அறிவிப்பு
வெள்ளத்தால் பாதிக்க பட்டவர்களுக்கு -நிதி உதவி -அரசு அறிவிப்பு
சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் 21 மாவட்டங்களில் 1000 திற்கும் அதிகமான வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு பாதிக்கப்பட்ட வீடுகளின் உரிமையாளர்களுக்கு நஷ்டஈடு வழங்குவதற்காக பத்து மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மூன்று மாவட்டங்களுக்கு துரித நிவாரணம் வழங்குவதற்காக 15 இலட்சம்
ரூபாவை அரசாங்கம் வழங்கியிருப்பதாக தேசிய அனர்த்த நிவாரண
சேவை மத்தியநிலையத்தின் உதவிப் பணிப்பாளர் சாவித்திரி ஜயகொடி தெரிவித்துள்ளார்.
மண்சரிவு அபாயம் மக்களுக்கு எச்சரிக்கை
மண்சரிவு அபாயம் மக்களுக்கு எச்சரிக்கை
சீரற்ற காலநிலை காரணமாக 5 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்
சரிவு அனர்த்த எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் இருப்பதாக கட்டட ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.
கொழும்பு, காலி, களுத்துறை, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய
மாவட்டங்களுக்கே இந்த அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை
சீரற்ற கலநிலையின் காரணமாக பல பிரதேசங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
கொழும்பு ஆமர் விதி, தும்முல்ல சந்தி உள்ளிட்ட சில இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன
தடம் புரண்ட ரயில் போக்குவரத்து பாதிப்பு
தடம் புரண்ட ரயில் போக்குவரத்து பாதிப்பு
களுத்துறை தெற்கில் இருந்து நீர்கொழும்பு வரையில் சேவையில் ஈடுபடும்
கடுகதி ரயில் கொழும்பு கோட்டைக்கும் மருதாணைக்கும் இடையில் தடம்புரண்டுள்ளது.
இன்று காலை 8.15 மணியளவில் ரயில் இவ்வாறு தடம்புரண்டுள்ளது. இது
தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ளபட்டிருப்பதாகவும் ரயில்வே கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
இலங்கையில் நிலநடுக்கம் – பீதியில் மக்கள்
இலங்கையில் நிலநடுக்கம் – பீதியில் மக்கள்
மகாவலி நீர்த்தேக்க பகுதியில், எதிர்வரும் காலங்களில் சிறிய, சிறிய நிலநடுக்கங்கள், குறுகிய காலத்துக்குள் ஏற்படக்கூடுமென
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் பேராசிரியர் சி.பீ. திஸாநாயக்க தெரிவித்தார்.
இத்தகைய அதிர்ச்சிகள் நீர்த்தேக்கங்களில் உள்ள நீரின் அழுத்தம் அல்லது நீர்த்தேக்கங்களுக்கு அருகிலுள்ள சுண்ணாம்பு
கற்பாறைகளின் வெடிப்பால் ஏற்படுகின்றன எனத் தெரிவித்த அவர், நீர்த்தேக்கத்தின் நீர் அதிகரித்து, குறைவடையும் போது
இவ்வாறான அதிர்வுகளை எதிர்பார்க்க முடியுமென பேராசிரியர் திஸாநாயக்க மேலும் தெரிவித்தார்.
“ஓகஸ்ட் 29ஆம் திகதி இரவும் அதன்பின்னர் அவ்வப்போது, விக்டோரியா நீர்த்தேகத்தை அண்மித்த பிரதேசத்தங்களில் 2
ரிக்டருக்கு குறைவான அலகில், பூமியதிர்ச்சி பதிவாகியிருந்தது. இது, விக்டோரியா நீர்த்தேக்கத்துக்கு கீழே மையப்பகுதியில்
ஏற்பட்டது; சுனாமி எச்சரிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை” என்றார்.
“பாறைகளில் ஏற்பட்டிருந்த அழுத்தம் குறைந்து, கூடும். அதுவே, கண்டியில் ஏற்பட்டிருந்த இரண்டு, பூமியதிர்வுகளுக்கும் காரணமாக
அமைந்திருந்தது. இதனை சிறிய விடயமெனக் கருதி, நிராகரித்துவிடக்கூடாது. விக்டோரியா, ரத்தெனிகல, ரத்டெம்பே
ஆகிய நீர்த்தேக்கங்களில் பொருத்தப்பட்டுள்ள சமிக்ஞைக் கருவி தொகுதிகளிலும் நில அதிர்வு பதியப்பட்டுள்ளது” என்றார்
வெள்ளத்தில் மிதக்கும் வீடுகள் – மக்கள் அவதி
நாட்டில் தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை காரணமாக,
நீர்கொழும்பு கட்டுவ புவகவத்தை பிரதேசத்திலுள்ள பல வீடுகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன.
மேற்படி பிரதேசத்தை ஊடறுத்துச் செல்லும் ‘தெபா எல’ வாவியில், சட்டவிரோதமாக
தனிநபர் ஒருவர் கட்டி வரும் பாலம் ஒன்றின் காரணமாக தற்போது இந்த நிலை
ஏறபட்டுள்ளதாகவும் பாலத்தின் கீழ குப்பைகள் சேர்ந்துள்ளதன் காரணமாக,
நீரோட்டம் தடைப்பட்டுள்ளமையும் இதற்குக் காரணமாகுமென, பிரதேசவாசிகள் குற்றஞ்சான்றுகின்றனர்.
ஐந்து வீடுகள் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஏனைய வீடுகளில்
உள்ளவர்கள் மழை நீர் தேங்கி நிற்பதன் காரணமாக, வெளியில் செல்ல முடியாத நிலை எற்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக மழை பெய்யுமாயின் எனைய வீடுகளும் பாதிக்கப்படும் என பிரதேசவாசிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

இலங்கையில் பரவும் கொரனோ – மேலும் பலர் பாதிப்பு
இலங்கையில் மேலும் 2 பேருக்கு கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தியா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வந்த இருவருக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 3,123 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் பூரணமாக
குணமடைந்து வீடு திருப்பியவர்களின் எண்ணிக்கை 2,925ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
Covid-19 பரம்பலின் புதுப்பிக்கப்பட்ட தரவுகள் 2020-09-07 06:26:15
உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகள் – 3123
சிகிச்சை பெறும் நோயாளிகள் – 186
புதிதாக கண்டறியப்பட்ட நோயாளிகள் – 2
குணமடைந்த நோயாளிகளின் எண்ணிக்கை – 2925
இறப்பு எண்ணிக்கை – 12
கடும் புயல் -கடலுக்கு செல்லாதீர் – எச்சரிக்கை
இன்று (07 ஆம் திகதி) முற்பகல் 09.00 மணி வரையான காலப்பகுதியில் நாட்டைச் சூழவுள்ள ஆழம் கூடிய மற்றும் ஆழம்
குறைந்த கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 70 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய
சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழை நிலைமை:
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
நாட்டின் மேற்கு மற்றும் தென்மேற்கு ஆழம் கூடிய மற்றும் ஆழம் குறைந்த கடற்பரப்புகளில் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
காற்று :
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடும். காற்றின் வேகமானது
மணித்தியாலத்துக்கு 45-55 கிலோ மீற்றர் வரை காணப்படும். காற்றின்
வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 70 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
கடல் நிலை:
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகக்காணப்படும்.
குறிப்பிட்ட காலப்பகுதியில் கடற்பரப்புகளில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவது ஆபத்தானது என மீனவர்கள்
அறிவுறுத்தப்படுவதோடு, கடலில் பயணம் செய்வோர் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறும் வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.
பேருவளையிலிருந்து காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில்கடல் அலைகள் 2.0 – 2.5 மீற்றர் உயரம் வரை (இது
கரைக்கு வரும் அலைகளின் உயரம் அல்ல) மேலெழும்பக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.
19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் நாட்டிற்கு மதிப்பிட முடியாதளவு பாதிப்பு
19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் நாட்டிற்கு மதிப்பிட முடியாதளவு பாதிப்பு
நாட்டிற்கு 19 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் மதிப்பிட
முடியாத அளவு பாதிப்பு ஏற்பட்டதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இதனை நீக்கி, 20 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தைக் கொண்டுவர
மக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அதிகாரத்தை அரசாங்கத்திற்கு வழங்கியிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
அனைத்துப் பிரதேச செயலாளர் பிரிவிலும் ஒரு தேசிய பாடசாலையை
ஆரம்பிக்க அரசாங்கம் கவனம் செலுத்தியிருப்பதாகவும், ஜனாதிபதி
கோட்டாபய ராஜபக்ஷவிடம் இருந்து இதற்கான ஆலோசனை பெறப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
வவுனியாவில் 8 பேர் அதிரடி கைது
வவுனியாவில் 8 பேர் அதிரடி கைது
வவுனியா – பூவரசங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அரபாநகர் பகுதியில் புதையல் தோண்ட முற்பட்ட 8 பேரை கைது செய்துள்ளதாக பூவரசங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (05) காலை 9.30 மணியளவில் அரபாநகர் பகுதியிலுள்ள காணியொன்றில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் சிலர்
ஈடுபட்டு வருவதாக பூவரசங்குளம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து அப்பகுதிக்கு சென்ற பொலிஸார் 8 பேரை கைது செய்துள்ளனர்.
குறித்த சம்பவத்தில் கொழும்பு, வவுனியா உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளதுடன்,
அவர்களிடமிருந்து நிலத்தை தோண்டுவதற்கு பயன்படும் மண்வெட்டி உட்பட சில பொருட்களையும், இரண்டு சொகுசு கார்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களுள் ஒருவர் பொலிஸ் உத்தியோகத்தராக கடமையாற்றி வருவதாக தெரிவித்த பொலிஸார், அவர்கள்
அனைவரும் நாளையதினம் வவுனியா நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்துள்ளனர்.
குளிக்க சென்ற சிறுமி – நீரில் மூக்கி மரணம்
வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் மீள் குடியேற்ற கிராமமான குகனேசபுரம் கிராமத்தில் குளத்தில் நீராடச் சென்ற சிறுமி நீரில்
மூழ்கி மரணமடைந்த சம்பவம் ஒன்று நேற்று (05) மாலை இடம் பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் மீள் குடியேற்ற கிராமமான குகனேசபுரம் காலிகோவில் வீதி 06ம் குறுக்கை சேர்ந்த சன்முகநாதன் விஜய ரூகினியும் அவரது சகோதரியும் நேற்று
மாலை ஆலம்குளத்திற்கு குளிக்கச்சென்ற போதே இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வருவதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.
ஆலம்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் தரம் 06 ல் கல்வி பயின்று வந்த சன்முகநாதன் விஜய ரூகினி (வயது 12) என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மூன்று பேர் உள்ள குடும்பத்தில் இச் சிறுமி மூன்றாவது பிள்ளை என்பதும் குறிப்பிடத்தக்கது.
தென் இலங்கையில் உள்ளவர்கள் நடிக்கிறார்கள்- விக்கி காட்டம்
தென் இலங்கையில் உள்ளவர்கள் நடிக்கிறார்கள்- விக்கி காட்டம்
தமிழ் மொழி மூத்த மொழியென இந்திய உள்ளிட்ட பல உலக நாடுகளிலும் கூறப்படுகின்றதென தெரிவிக்கும் நாடாளுமன்ற
உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன், தான் அதனை கூறிய போது, தென்னிலங்கையில் உள்ளவர்கள் அதனை அறியாதவர்கள் போல நடிக்கிறார்கள் என்றும் தெரிவித்தார்.
கிளிநொச்சி சந்தைக்கு அருகில் இன்று (05) நடைபெற்ற மக்கள் சந்திபொன்றில் கலந்துகொண்டு மேலும் கருத்துரைத்த அவர்,
தன்மை நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்து மக்கள் தனது பொறுப்புக்களை அதிகரித்துள்ளனர் என்றும், தனித்து பயணிப்பது
தனக்கொரு புதிய அரசியல் அனுபவமாக உள்ளதெனவும் தெரிவித்தார்.
தமிழ் தலைமையகள் காலத்துக்கு காலம் செய்வது ஒன்றும் சொல்வது ஒன்றுமாக இருந்த காரணத்தாலேயே மக்களுக்கு
அரசியல் மீது வெறுப்பு ஏற்பட்டுள்ளதெனவும், தற்போதைய மாற்றம் தமிழ் தேசியத்தின் எழுச்சிக்கு வழி செய்யும் என்றும் தெரிவித்தார்.
தென்னிலங்கை அரசியல் சக்திகளும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட சகலரும் தன்மீது பெரும் அவதூறுகளை சாட்டியுள்ளனர்
எனத் தெரிவித்த அவர், அவற்றை நம்பாது தனக்கு வாக்களித்த மக்களுக்கும் நன்றி தெரிவித்தார்.
அதன்படி, மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறுகின்ற நிலைதான் எமது அரசியலின் முதல் பிழையாகவும்
தோல்வியாகவும் அமைகின்றது எனத் தெரிவித்த அவர், தேர்தலில் வெற்றி பெற்ற எனக்கு முன்னால் மிகப் பெரும் கடமைகள் காத்திருக்கின்றன என்றார்.
இப்போது, நாடாளுமன்றத்தில் தனக்கு எதிர்ப்பு வருகின்ற போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் மௌனிகளாக
இருக்கின்றார்கள் என்று தெரிவித்த அவர், தான் அவர்களுக்காத்தான் மறந்துபோயுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழ் மொழி உலகின் மூத்த மொழி என்று இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் கூறப்படுகின்றதென தெரிவித்துள்ள அவர், அதனை
தான் கூறும்போது தென்னிலங்கையில் உள்ளவர்கள் நடிக்கிறார்கள் என்றும், சாடினார்.
பயங்கரவாதத்துடன் தொடர்புபட்டவர்களை தடுத்து வைப்பதற்குரிய நிலையமாக தங்காலை பழைய சிறைச்சாலை பயன்படுத்தப்படவுள்ளது
பயங்கரவாதத்துடன் தொடர்புபட்டவர்களை தடுத்து வைப்பதற்குரிய நிலையமாக தங்காலை பழைய சிறைச்சாலை பயன்படுத்தப்படவுள்ளது
பயங்கரவாதத்துடன் தொடர்புபட்டவர்களை தடுத்து வைப்பதற்குரிய நிலையமாக தங்காலை பழைய சிறைச்சாலை பயன்படுத்தப்படவுள்ளது.
இதற்கான வர்த்தமானி அறிவிப்பு நேற்று (04) வெளியிடப்பட்டுள்ளது.
1982 ஆண்டு இலக்கம் 10 யின் கீழான பயங்கரவாதததை; தடுக்கும் (தற்காலிக விசேட ஏற்பாடுகள்) (திருத்தம்) சட்டத்துடன்
வாசிக்கப்பட வேண்டிய 1979 ஆண்டு இலக்கம் 48யின் கீழ் பயங்கரவாதத்தை தடுக்கும் (தற்காலிக) ஒழுங்கு விதிகள்
சட்டததின் 15 ஆவது சரத்தின் கீழ் தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைவாக அந்த சரத்தில் கூறப்பட்டுள்ள
பணிகளுக்காக – தங்காலை பழைய சிறைச்சாலையை பயங்கரவாதத்துடன் தொடர்புபட்டவர்களை தடுத்து வைக்கும் இடமாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தரவிற்கு
அமைய, பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன, இதற்குரிய வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்
நாடெங்கும் கனமழை – மக்களுக்கு எச்சரிக்கை
நாடெங்கும் கனமழை – மக்களுக்கு எச்சரிக்கை
நாட்டில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலையில் இன்று அதிகரிக்கக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழையோ
அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மேல், சப்ரகமுவ, மத்தியமற்றும்வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை,மன்னார்மற்றும்முல்லைத்தீவுமாவட்டங்களிலும் சில
இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
நாடு முழுவதும் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம்
காணப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை
குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
சூரியனின் தென் திசை நோக்கிய தொடர்பான இயக்கத்தின் காரணமாக இவ் வருடம் ஓகஸ்ட் மாதம் 28ஆம் திகதியிலிருந்து செப்டம்பர் மாதம் 07ஆம் திகதி வரை இலங்கையின்
அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது. இன்று (06ஆம் திகதி) பெந்தோட்டை, மீகம, தொடம்பபிட்டிய, பெலவத்தை,
போதகம மற்றும் கதிர்காமம் ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக நண்பகல் 12.09 அளவில் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..
இலங்கைக்குள் கடத்திவரப்பட்ட 133.6 மில்லியன் பெறுமதியான சிகரெட்டுகள்
இலங்கைக்குள் கடத்திவரப்பட்ட 133.6 மில்லியன் பெறுமதியான சிகரெட்டுகள்
இலங்கையில் கடந்த 12 மாதங்களில் வெளிநாடுகளில் இருந்து
சுமார் 133.6 மில்லியன் ரூபா பெறுமதியான சிகரெட்டுகள் கடத்தி வரப்பட்டுளள்ன
சுங்க திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட தீவிர சோதனையோ
நடவடிக்கையின் பொழுது மேற்படி கடத்தல்கள் முறியடிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
மேலும் தொடருந்து முன்னெடுக்க படும் கடத்தல்கள் கடும் சோதனை காரணமாக முறியடிக்க படுவதாக தெரிவிக்க படுகிறது
இலங்கை காவல்துறையில் அதிரடி மாற்றங்கள்- எகிறி பாயும் கோட்டா சட்டம்
இலங்கை காவல்துறையில் அதிரடி மாற்றங்கள்- எகிறி பாயும் கோட்டா சட்டம்
முன்னாள் பொலிஸ் மா அதிபர் இலங்ககோனினால் சமர்பிக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள
பரிந்துரைகளை ஆய்வுக்குட்படுத்தப்பட்ட பின்னர் பொலிஸ் சேவையை மருசீரமைப்பதற்கு குறித்த பரிந்துரைகளை அமைச்சு
அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர்ப்பாசன அமைச்சரும், உள்ளக பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சருமான சமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
மருசீரமைப்புக்களை அறிமுகப்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் தமது சொந்த கருத்துக்களை வழங்குமாறு
பொலிஸ் அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டதுடன், பொலிஸ் சேவையை மேலும் வினைத்திரன்கொண்டதாக மாற்றி
அமைக்க அவர்களது கருத்துக்களை பெற்றுக்கொள்ளும் வகையில் தொடர்ச்சியாக சந்திக்க திட்டமிட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள பொலிஸ் தலைமையகத்திற்கு இன்று (செப்டம்பர், 2) விஜயமொன்றை மேற்கொண்ட அமைச்சர் ராஜபக்ஷ, பொலிஸ்
அதிகாரிகள் சிறந்த முறையில் சேவையாற்றும் சூழலை உருவாக்க அமைச்சு நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்தார்.
“சிறந்த மற்றும் தரமான பொலிஸ் சேவையை பொதுமக்களுக்கு வழங்க பணியாற்றுவதற்கான சிறந்த சூழல் மற்றும் தொழில் திருப்தி முக்கியமானதாகும்” என அவர் தெரிவித்தார்.
பொலிஸ் தலைமையாக கட்டிடத்தின் தற்போதைய வெளித்தோற்றத்தை சுட்டிக்காட்டிய அமைச்சர் ராஜபக்ஷ, பொலிஸ்
அதிகாரிகளின் நலன்புரிகளை கருத்திற்கொண்டு அவர்களின் சேவையின் மதிப்பை உயர்த்துவதற்காக நாட்டின் பொலிஸ்
நிலையங்களின் வெளிப்புற தோற்றங்களை மேம்படுத்த அமைச்சு திட்டமிட்டுள்ளதகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
பொலிஸ் நிலையங்களுக்குச் சொந்தமான கட்டிடங்களின் நிலை உள்ளிட்ட உள்ளக பிரச்சினைகளுக்கு தீர்வு காண சிரேஷ்ட பொலிஸ்
அதிகாரிகளினால் வலுவான கண்காணிப்பு முறைமையை மேற்கொள்வதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.
நான் பொலிஸ் சேவையில் இருந்த நாட்களில், எங்கள் சிரேஷ்ட அதிகாரிகள் ஒரு சிறிய விடயமாக இருந்தாலும் கூட அவற்றை ஆராயும் அளவிற்கு கடுமையான கண்காணிப்பு முறைமையினை
மேற்கொண்டிருந்தனர், பொலிஸ் சேவையின் சிறந்த நற்பெயரை பெற இதுபோன்ற முறைமையினை நாங்கள் மீண்டும் கொண்டுவர வேண்டும். இல்லாவிடில் அது அரசிற்கு ஒரு அவப்பெயராக
காணப்படும். மக்களின் எதிர்பார்ப்புக்களை அடைய பொலிஸ் அதிகாரிகள் மத்தியில் சிறந்த ஒழுக்கத்தினை பராமரிப்பதன் அவசியத்தையும் இதன்போது அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
பாதாள உலக குற்றவாளிகள், போதைப்பொருள் கடத்தல், திட்டமிடப்பட்ட குற்றச்செயல்கள் மற்றும் கப்பம் பெறல் போன்ற குற்றச்செயல்களை முடிவுக்குக் கொண்டுவருவார்கள் என
எதிர்பார்தே மக்கள் இந்த அரசாங்கத்தை தேர்ந்தெடுத்துள்ளதாகவும், எனவே அவ்வாறான குற்றச்செயல்களில் இருந்து நாட்டை விடுவித்து மக்களின்
எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதில் பொலிஸாருக்கு முக்கிய பங்கு உள்ளதாகவும் பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன இங்கு தெரிவித்தார்.
பாதாள உலக குற்றவாளிகள், போதைப்பொருள் கடத்தல், திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களை முறியடிக்க பொலிஸ் அதிகாரிகள் பாரிய ஒத்துழைப்புக்களை வழங்கி தற்போது
பொதுமக்களின் நன்மதிப்பை பெற்றுள்ளனர். பொலிஸ் அதிகாரிகள் குறித்த குற்றச்செயல்களுக்கு எதிராக தொடர்ந்தும் போராடி வருவம் அதேவேளை, ஊழலில் ஈடுபடும் சில பொலிஸ்
அதிகாரிகளை திருத்தி அவர்களை சரியான பாதையில் இட்டுச்சென்று பொலிஸ் சேவையினை மக்கள் நட்பு சேவையாக
மாற்றுவது சிரேஷ்ட அதிகாரிகளின் பொறுப்பாக உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்கு நீதிவேண்டி பன்னாட்டு வாயில்களை நோக்கி போராட்டங்கள் !!
காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்கு நீதிவேண்டி பன்னாட்டு வாயில்களை நோக்கி போராட்டங்கள் !!
இலங்கைத்தீவில் சிங்கள ஆக்கிரமிப்பாளர்களால் வலிந்து காணாமலாக்கப்பட்ட தமிழ்உறவுகளுக்கு நீதிவேண்டி, கனேடிய
பிரதமரின் வாயில்தளத்தினை நோக்கி நீதிக்கான நெடு நடைப்பயணம் ஒன்று இடம்பெற்று வருவதோடு, பல்வேறு
புலம்பெயர்களிலும் கவனயீர்ப்பு போராட்டங்கள் இடம்பெற்றுள்ளன.
வலிந்து காணாமற் ஆக்கப்பட்டோருக்கான உலக நாளாகிய கடந்த ஓகஸ்ற் 30ஆம் நாள் பிரம்ரன் நகரசபை வாயிலில் இருந்து
தொடங்கிய இந்த நெடு நடைப்பயணம் இன்று வெள்ளிக்கிழமை 6வது நாளினை எட்டியுள்ளது. 424 கிலோ மீற்றர்களை கடந்து ஒட்டவா நாடாளுமன்றத்தினை அடையவிருக்கின்றது.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது கோரிக்கை மனுவினை நெடு நடைப்பயணத்தின்
செயல்வீரர்கள், கனேடிய பிரதமர் ஐஸ்டின் ட்ருடோ அவர்களிடம் கையளிக்கவுள்ளனர்.
வலிந்து காணாமற் ஆக்கப்படுதல் என்பது அடக்குமுறையின் ஒரு வடிவமாக மட்டுமல்லாமல், அது இனஅழிப்பின் கருவியாகவும்
உள்ளது என்பதனை சுட்டிக்காட்டும் இம்மனுவானது, தமிழர்கள் சிறிலங்கா அரசினால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட
இனஅழிப்பினை குறித்துரைத்துக் கொள்வதோடு, அதற்கான பன்னாட்டு நீதியினை இந்நெடு நடைப்பயணத்தின் ஊடாக வலியுறுத்துகினற்து.
ஒடுக்கும் அரசுகள் ஓவ்வொன்றும், திரைக்குப் பின்னால் சனநாயக விழுமியங்களையும், சட்டத்தின் ஆட்சியின்பால் மதிப்பையும், கிழித்தெறிந்து கொண்டே, பன்னாட்டு மனிதவுரிமை
நெறிகளை மதிப்பது போல் நாடகமாடுகின்றன. சிறிலங்கா போன்ற இனவழிப்பு அரசுகளின் நிலை இதுவே.
சிறிலங்காவில் அரசு வலிந்து ,காணாமற் ஆக்கப்படுதல்களைத், தமிழினவழிப்பின் கருவியாகப் பயன்படுத்திக் கொண்டது. வலிந்து காணாமற் போனவர்களைப் பற்றிய ஒரு தரவுத்தளத்தைப்
பதிவேற்றுவதற்கென்று சொல்லி காணாமற் போனோர் அலுவலகம் ஒன்றை சிறிலங்கா நிறுவிய போதிலும், ஆயுத மோதலின் போது சரணடைந்தவர்கள், கைது செய்யப்பட்டவர்களின் பட்டியலை
வெளியிடவே இல்லை. இந்தச் செயலின்மையும், பொறுப்புக்கூறாமையும் ஆண்டுக்கணக்கில் தொடர்வதை எதிர்த்து ஆயிரக்கணக்கான தாய்மார்கள் போராடி வருகின்றார்கள். அவர்களில் பலர் தங்கள் பிள்ளைகளுக்கு, உறவுகளுக்கு என்ன
நேரிட்டது என்று தெரியாமலே கல்லறைக்குச் செல்லும் கொடுமைக்கு உற்படுத்தப்பட்டுளார்கள்! வலிந்து காணாமல் ஆக்குதல் பற்றிய ஐ நா ஒப்பந்தத்தை சிறிலங்கா ஏற்று உறுதி
பூண்ட போதிலும், குறிப்பாக உறுப்பு 31க்கு மட்டும் ஆதரவளிக்காமல் ஒதுங்கிக் கொண்டது. இந்த உறுப்புதான் இந்த ஒப்பந்தத்தைத் தங்கள் நாடு மீறியது குறித்து பாதிப்புற்றவர்கள்
தாமே வலிந்து காணாமற் ஆக்கப்படுதல் பற்றிய குழுவிடம் பேச வாய்ப்பளிப்பதாகும். இந்தக் காரணத்தால் தான் ஈழத்
தமிழர்களுக்கும், உலகெங்கும் வலிந்து காணாமற் ஆக்கப்பட்டவர்களினால் பாதிப்புற்ற அனைவருக்கும் உங்கள்
ஆதரவு தேவை என கனேடிய பிரதரை நோக்கி இந்நெடு நடைப்பயணம் கோருகின்றது.
இதேவேளை, பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி , ஒஸ்றேலியா , அமெரிக்கா ஆகிய நாடுகளிலும் வலிந்து காணாமற்
ஆக்கப்பட்டோருக்கான உலக நாளாகிய கடந்த ஓகஸ்ற் 30ஆம் நாளன்று கவனயீர்ப்பு போராட்டங்கள் இடம்பெற்றிருந்தமை இங்கு குறிப்பிடதக்கது.

காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்கு 


ஜஸ்மின் சுக்காவிடம் 5 மில்லியன் இழப்பீடு கோரும் சிங்கள இராணுவத்தளபதி
ஜஸ்மின் சுக்காவிடம் 5 மில்லியன் இழப்பீடு கோரும் சிங்கள இராணுவத்தளபதி
இலங்கை இராணுவ தளபதி ஒருவர் தொடர்பாக ஜஸ்மின் சுக்கா வெளியிட்ட கடிதத்தில்
தவறாக பிற அதிகாரி ஒருவரது படத்தை வெளியிட்டுள்ளனர்
இதனால் சீற்றம் உற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலியின் படத்தை வெளியிட்ட
நிலையில் அவர் தனது பேருக்கும் ,புகழுக்கும் களங்கம் விளைவித்த நிலையில் ஐந்து மில்லியன் ரூபா நஷ்ட ஈடு கேட்டுள்ளார்
தவறாக அந்த அதிகாரி புகை படத்தை வெளியிட்டமைக்கு ஜாஸ்மின் சுக்கா மன்னிப்பு கேட்டுள்ளமை குறிப்பிட தக்கது






