Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
கொரோனா தொற்றுக்குள்ளான தாய்க்கு இரட்டை குழந்தை
கொரோனா தொற்றுக்குள்ளான தாய்க்கு இரட்டை குழந்தை
முல்லேரியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா தொற்றுக்குள்ளான 23 வயதுடைய தாய் ஒருவருக்கு
ஆரோக்கியமான நிலையில் இரட்டைக் குழந்தை பிறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நீரிழிவு மற்றும் இரத்த அழுத்தம் இருந்ததன் காரணமாக சிசேரியன் சத்திர சிகிச்சை முறைப்படி பிரசவம் பார்த்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளான 170 கர்ப்பிணி பெண்களுக்கு
அதிகமானவர்கள் முல்லேரியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
தமிழ் மக்கள் மிதிக்கப்படாமல் மதிக்கப்படும் சூழலை உருவாக்குவோம்- டக்கிளஸ் கூவல்
தமிழ் மக்கள் மிதிக்கப்படாமல் மதிக்கப்படும் சூழலை உருவாக்குவோம்- டக்கிளஸ் கூவல்
பேரினவாத தீக்கு எண்ணெய் வார்க்கின்ற செயற்பாடுகளை போலித் தமிழ் தேசிய வாதிகள் குத்தகைக்கு எடுத்துள்ளனர் என்று குற்றஞ்சாட்டியுள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,
சில தரப்புக்களிடம் சலூன் கதவுகள் போன்று இருக்கும் பேரினவாதத்தினை திறக்கச் செய்வதால் எமது மக்களே பாதிக்கப்படுகின்றனர் எனவும் ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று (10.12.2020) நடைபெற்ற வரவு செலவுத் திட்ட விவாதத்தின் இறுதி நாள் அமர்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய கடற்றொழில் அமைச்சர், மக்கள் வாழ்வாதாரம் – சுகாதாரம் – பொருளாதார ரீதியாக பெரும் பாதிப்புகளுக்கு முகங்கொடுத்து வருகின்ற நிலையில், மக்களது
பிரச்சினைகளை வேறு திசை நோக்கி திருப்பிவிடுகின்ற செயல்களில் போலி தமிழ்த் தேசியம் பேசுகின்றவர்களும், அதிதீவிர
போலி தமிழ்த் தேசியம் பேசுகின்றவர்களும் ஈடுப்பட்டு வருவதாகவும் சுட்டிக் காட்டினார்.
மேலும், ‘எமது மக்கள் முகங்கொடுத்துள்ள உண்மையான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு முன்வராமல், அந்தப்
பிரச்சினைகளை மேலும் வளரவிடுவதும். அதனோடு மேலும் பல பிரச்சினைகளை கோர்த்து விடுவதும் இவர்களது வரலாற்று செயற்பாடுகளாகவே தொடர்கின்றன.
புரெவி புயல் வந்துவிட்டுப் போய் விட்டது. ஆனால் இந்த போலித் தமிழ்த் தேசியவாதிகளின் பிறவிக் குணங்களில் எவ்வித மாற்றமும்
இல்லை. ஆயிரம் புரெவிகள் வந்தாலும் இவர்களது பிறவிக் குணங்கள் மாறுமா? என்பது சந்தேகமாகவே இருக்கின்றது.
இறுதி யுத்தத்தின்போது யார் யார் எங்கிருந்தார்கள் என்பது பற்றி இப்போது அறிக்கை பட்டிமன்றம் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அந்த அழிவு ஏற்படக் கூடாது என்ற எனது
மனிதாபிமான நோக்கு காரணமாக அதனை நிறுத்துவதற்கு அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களுடன் பேசுவோம் வாருங்கள் என அப்போது பாராளுமன்றத்தைப்
பிரதிநிதித்துவப் படுத்தியவர்களை அழைத்தபோது, அவர்கள் அதற்கு இணங்கியிருக்கவில்லை. புலிகள் அழிய வேண்டும் என்ற மனநிலையிலே இருந்தார்கள்.
இந்த நாட்டில் பேரினவாதத்திற்கும் குறிப்பிட்ட தமிழ் அரசியல்வாதிகளின் இனவாதத்திற்கும் இடையில் ஒப்பந்தங்கள் இருக்கக் கூடாது என்பதையே நான் வலியுறுத்த விரும்புகின்றேன்.
எனவே பதின்மூன்று பேர் சேர்ந்து, எமது மக்களை தொடர்ந்தும் மிதித்துக் கொண்டிருக்கின்ற நிலைமையை ஏற்படுத்தாமல் – எமது மக்களை மதித்துக் கொண்டிருக்கின்ற நிலைமையை இந்த நாட்டில்
ஏற்படுத்தவதற்கு முன்வருமாறு கேட்டுக் கொள்கின்றேன்’ என்று தன்னுடைய ஆதங்கத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.
அத்துடன், தமிழ் மக்களுக்கு அன்றாட – அபிவிருத்தி மற்றும் அரசியல் ரீதியிலான பிரச்சினைகள் உள்ளது என்பதை வலியுறுத்தியதுடன், அதேபோன்று முஸ்லிம் மக்களுக்கும்
கத்தோலிக்க மக்களுக்கும் பிரச்சினைகள் இருக்கின்ற நிலையில் அவற்றை தீர்ப்பதற்கு அரசாங்கத்தின் ஊடாக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
எனவே அரசாங்கத்துடன் இணைந்து எமது மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பகிரங்க அழைப்பினை விடுப்பதாவும் இறுதி யுத்த காலத்தில் அதனை புறக்கணித்தது போன்று, எமது
மக்களின் நலன்கருதிய இந்த அழைப்பையும் சுய இலாபங்களுக்காக கோட்டைவிட்டு விடாது, கைகோர்த்து வரும்படி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது..
நடிகை சித்திரா தற்கொலை – சடலம் ஒப்படைப்பு
நடிகை சித்திரா தற்கொலை – சடலம் ஒப்படைப்பு
பிரபல சின்னத்திரை நடிகை சித்திரா மரணத்தின் சந்தேகங்கள் உள்ளதாக
தெரிவிக்க பட்டு வந்த நிலையில்
இரு மருத்துவர்கள் முன்னிலையில் இடம்பெற்ற மரண
பரிசோதனையில் இவர் தற்கொலை செய்துள்ளமை தெரியவந்துள்ளது
படுகொலை என தெரிவிக்க பட்ட பொழுதும் மரண பரிசோதனை அறிக்கை இவ்விதம் தெரிவித்துள்ளது
தற்போது சடலம் பெற்றோர்களிடம் ஒப்படைக்க பட்டுள்ளது
எங்கள் உறவுகள் எங்கே – மக்கள் போராட்டம்
எங்கள் உறவுகள் எங்கே – மக்கள் போராட்டம்
சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்றைய நாளில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முல்லைத்தீவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8 ஆம் திகதி ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்பு போராட்டம் ஆனது
இன்று 1373 ஆவது நாளாக தொடர்ந்து போராடடத்தி ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்றைய நாள் சர்வதேச மனித உரிமைகள் தினமாகும் சர்வதேச மனித உரிமை நாளில் எமது உறவுகளின் நிலை அறியும் அடிப்படை உரிமைகளை கூட இழந்து
தவிக்கின்றோம் என்கின்ற நிலையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.
முல்லைத்தீவில் சற்று முன்னர் இந்த கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது குறித்த போராட்டத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பங்கெடுத்து இருப்பதோடு
போராட்டத்தின் இறுதியில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையத்தின் உடைய உயர்ஸ்தானிகர் அவர்களுக்கு மகஜர் ஒன்றும் அனுப்பி வைக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
முல்லைத்தீவு மாங்குளம் வீதியில் அமைந்துள்ள உறவுகள் தொடர்போராட்டம் நடாத்திவரும் கட்டிடத்துக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றவர்கள் மனித உரிமைகள்
நாாளில் உரிமைகள் மறுக்கப்பட்டு வீதியில் நாம், குற்றம் செய்பவர்களுக்கு யாரும் உடந்தையாக இருக்காதீர்கள், கோட்டா அரசே நீ கொண்டு போனவர்கள் எங்கே போன்ற வாசகங்கள்
எழுதப்பட்ட பதாதைகளை தாங்கியவாறும் எங்கே எங்கே உறவுகள் எங்கே, வேண்டும் நீதி வேண்டும் போன்ற கோஷங்களை
எழுப்பியவாறும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
குறித்த போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுடன் முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களும் கலந்து கொண்டுள்ளார்.

இலங்கை நீதி துறையில் நம்பிக்கையில்லை – சூத்து மாத்து சுமந்திரன்
இலங்கை நீதி துறையில் நம்பிக்கையில்லை – சூத்து மாத்து சுமந்திரன்
இலங்கையின் நீதிப் பொறிமுறையில் நம்பிக்கையிழந்த காரணத்தாலேயே, சர்வதேச விசாரணையைக் கோருகின்றோம் என்று தெரிவித்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும்
நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், இலங்கையில் சிறுபான்மை மக்களுக்கான நீதி
நிலைநாட்டப்படுவதில் நீண்டகால இழுத்தடிப்புகள் காணப்படுகின்றன என்றும் சுட்டிக்காட்டினார்.
நீதி அமைச்சு மற்றும் தொழில் அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் மீதான குழுநிலை விவாதத்தில் இன்று (09)
கலந்துகொண்டு உரையாற்றும் போதேஇ அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்துரைத்த சுமந்திரன் எம்.பி, ‘இலங்கையின் நீதித்துறை சுயாதீனமாக இல்லை என்பதைஇ ஆட்சி
செய்தவர்களும் ஆட்சி செய்கின்றவர்களும் முன்வைக்கும் விமர்சனங்களில் இருந்தே வெளியாகி விட்டன’ என்றார்.
‘நாட்டில் சிறுபான்மை மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படுவதில்லை. எமது மக்களின் பிரச்சினைகள்இ வேறு ஒரு கோணத்தில் இருந்தே பார்க்கப்படுகின்றது. அண்மைக் காலமாக,
சிறுபான்மை மக்களின் பிரச்சினைகள் மேலெழுகின்ற போது, நீதி அமைச்சர், டுவிட்டர் மூலமாக கருத்துகளைக் கூறுவதை மட்டுமே செய்து வருகின்றார். அதனை மாத்திரமே அவரால் செய்ய முடியும்.
‘சிறைச்சாலைகளில், 1983, 2000 மற்றும் 2012ஆம் ஆண்டுகளில், அரச பாதுகாப்புடன் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள் குறித்த
விசாரணைகள் இன்னமும் முன்னெடுக்கப்படவில்லை. இந்நிலையில், தற்போது மஹர சிறைச்சாலையிலும் படுகொலை அரங்கேற்றப்பட்டுள்ளது.
‘திருகோணமலையில் 5 மாணவர்கள் படுகொலை, கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தல், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோசப் பரராஜசிங்கம்,
சிவநேசன், ரவிராஜ் மற்றும் ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க போன்றோரின் படுகொலைகள், ஊடகவியலாளர் கீத் நோயர் கடத்தப்பட்டு கடுமையாகத் தாக்கப்பட்ட சம்பவம், ஊடகவியலாளர்
பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டுக் காணாமால் ஆக்கப்பட்ட சம்பவம், 34 தமிழ் ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்ட
சம்பவம் ஆகியவற்றுக்கு, இன்னமும் நீதி நிலைநாட்டப்படாதது ஏன்?
‘நாட்டில் மோசமான, சர்வதேசக் குற்றங்கள் பல இடம்பெற்றுள்ள காரணத்தாலேயே, சர்வதேச விசாரணைகளைக் கேட்கின்றோம்.
அதனை ‘வேண்டாம்’ எனக் கூற முடியாது’ என்று, அவர் மேலும் கூறினார்
போலீஸ் அதிகாரி படுகொலை – அதிர்ச்சியில் பொலிஸ்
போலீஸ் அதிகாரி படுகொலை – அதிர்ச்சியில் பொலிஸ்
மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் கான்ஸ்டபிள் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார் .
இச்சம்பவம், அம்பாறை – அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலமுனை பகுதியில் நேற்றிரவு (09) இடம்பெற்றுள்ளதுடன்,
சம்பவத்தில் தாஹிர் தஸ்பீக் (வயது-35) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையான பொலிஸ் கான்ஸ்டபிள் கொலை செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் 21 வயதான இளைஞன், அக்கரைப்பற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளர்.
பாலமுனையில் அமைந்துள்ள தனது உறவினர் ஒருவரின் காணி எல்லைப் பிரச்சினை தொடர்பாக சமாதானம் செய்ய நேற்றிரவு கான்ஸ்டபிள் சென்றுள்ளார். இதன்போது இடம்பெற்ற
வாக்குவாதத்தில் அவரது உறவினர் ஒருவரே அவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளமை தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, இச்சம்பவத்தில் காயமடைந்து சிகிச்சை பெற அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட
இருவரில் ஒருவர் சந்தேகத்தின் பேரில் அக்கரைப்பற்று பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை ஐநாவில் விரைவில் தண்டிக்க படும் -சவால் விடும் அமைப்பு
இலங்கை ஐநாவில் விரைவில் தண்டிக்க படும் -சவால் விடும் அமைப்பு
தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கான பரிகாரநீயினை வலியுறுத்தும் வகையில், இனப்படுகொலையை தடுப்பதற்கும்,
தண்டிப்பதற்குமான ஐ.நா பிரகடனத்தின் அனைத்துலக (டிசெம்பர் 9) நாளில் கருத்தரங்கொன்றினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுக்கின்றது.
இனப்படுகொலைக்கு உள்ளாகி பலியாகியவர்களை ஐ.நாவினால் நினைவு கொள்கின்ற அனைத்துலக உடன்படிக்கையின் 72வது ஆண்டாக இவ்வாண்டு அமைகின்றது.
இந்நாளினை முன்னிட்டு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அடுத்த தலைமுறை இளையோர் பிரிவான அலைகளினால்
முன்னெடுக்கப்படுகின்ற இக்கருத்தரங்கில் Prof Francis Boyle அவர்கள் சிறப்பு பேச்சாளராக கலந்து கொள்கின்றார்.
டிசெம்பர் 9ம் நாள் புதன்கிழமை, நியு யோர்க் நேரம் மாலை 4மணிக்கு இணைவழி இடம்பெற இருக்கின்ற இந்நிகழ்வினை tgte.tv
TGTE TV
The Transnational Government of Tamil Eelam. TV Channel
tgte.tv
வலைக்காட்சியூடாகவும், FB: @tgtealaigal2020, Youtube : @ALAIGAL WAVES ஆகிய ஊடகங்கள் வாயிலாகவும் காணமுடியும்.
சர்வதேச உடன்படிக்கைகள் பேச்சளவில் இல்லாது, அவைகள் காத்திரமான செயல்முனைப்பு கொண்டதாக அமைவதுதான், உண்மையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியினைப்
பெற்றுத்தரும் என பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் முன்னராக இந்நாள் தொடர்பில் குறிப்பிட்டிருந்ததோடு,
தமிழினப்படுகொலையினை புரிந்தவர்கள் தண்டிக்கபட்டு, தமிழர்களுக்கான பிரகாரநீதி சர்வதேச நீதியினால் வழங்கப்பட
வேண்டும் எனவும் தனது ருவிற்றர் பதிவில் தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடதக்கது.
சிங்கள இனவாத அரசின் ஒரு பகுதியே சிறிலங்காவின் நீதிமன்றங்கள் !
சிங்கள இனவாத அரசின் ஒரு பகுதியே சிறிலங்காவின் நீதிமன்றங்கள் !
சிறிலங்காவின் நீதிமன்றங்களும் சிங்கள இனவாத அரசின் ஒரு பகுதிதான் என்ற வரலாற்றுண்மையை நாம் மறந்து போகலாகாது. நீதின்றங்களுக்குச் செல்வதன் மூலம் தமிழர்களின் நினைவேந்தல்
உரிமைக்கான அரசியல் வெளியை சிறிலங்காவின் நீதிமன்றங்களின் மூலம் பெற முடியாது என்பதனை,
இனநல்லிணக்கம் பேசிப் பேசி நிலைமாறுகால நீதிக்கான வகுப்புக்களை எடுக்கும் சர்வதேச சமூகத்துக்கு வெளிப்படுத்தும்
களமாகப் பயன்படுத்திவிட்டு, மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்துவதற்கான மாற்று உத்திகளை தமிழர் தேசம் முதலிலேயே வகுத்திருக்க வேண்டும்
மாவீரர் நாளினையோ, அல்லது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளையோ ஒரு வெறும் சடங்காக மாற்றாமல், இந்த நாட்கள் முன்வைக்கின்ற அரசியலைக் கையிலெடுத்து, அதனை மக்கள்
மயப்படுத்திய அரசியல் போராட்டமாக மாற்ற வேண்டிய பொறுப்பு தமிழர் தலைவர்களுக்கு உண்டு. இதனை நோக்கிய
ஆக்கபூர்வமான செயல்முனைப்பே தமிழர் தேசத்தின் இன்றைய வேண்டுகையாகவுள்ளது.
ஆசிரியர் தலையங்கத்தின் முழுமை பின்வருமாறு :
சிங்கள பேரினவாதத்தினால் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியுள்ள தமிழர் தேசம், தனது தேசப்புதல்வர்களை நினைவேந்துவதில் சிறிலங்கா அரசின் பெரும் சவால்களை இவ் வருடம்
எதிர்கொண்டிருக்கிறது. தனது காவல்துறையினையும் நீதிமன்றங்களையும் பயன்படுத்தி மக்கள் தமது
வீரப்புதல்வர்களுக்கு வணக்கம் செலுத்துவதற்குச் சிறிலங்கா அரசு தடைவிதித்திருக்கிறது.
ஈழத் தமிழர் தேசத்தினை இனவழிப்புக்குள்ளாக்கும் சிங்கள இனவாத அரசின் இச் செயல் வியப்புக்குரியதொன்றல்ல.
எதிர்பார்க்கப்டாததொன்றுமல்ல. ஆனால் இத் தடையினை ஒரு அரசியல் முடிவாகக் காட்டாது சட்டம் ஒழுங்கு விடயம் போல காட்டுவதற்கு சிறிலங்கா அரசு முற்பட்டுள்ளது. கொரோனா
உலகப்பெருந்தொற்றுச் சூழலையும் சிறிலங்கா அரசு இவ் விடயத்தில் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தியுள்ளது.
தமிழீழ தேசத்தின் மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்துவது தமிழீழ தேசத்தின் அரசியல் உரிமை. அவர்களது ஜனநாயக உரிமை. அடிப்படையானதொரு மனித உரிமை. உலகளாவிய மக்கள் தங்கள்
தேசங்களின் மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தும் உரிமையினைக் கொண்டிருப்பது போல தமிழீழ மக்கள் இந்த உரிமையினைத் தம்;வசம் கொண்டுள்ளார்கள். ஈழத் தமிழர்
தேசத்தினை ஆக்கிரமித்து நிற்கும் சிங்கள பௌத்த பேரினவாத அரசு மாவீரர்களை நினைவுகூர்வதற்கு விதிக்கும் தடைகள் அப்பட்டமான ஜனநாயக மனிதவுரிமை மீறலாகும்.
ஈழத்தமிழர் தேசம் சிறிலங்கா இனவாத அரசின் இத் தடைகளை உடைப்பதற்கான வியூகங்களை வகுக்க வேண்டும். இதனை ஒரு நீதிமன்ற விடயமாகச் சுருக்கிக் கொள்ளக்கூடாது. நீதிமன்றங்களை
அரசியல் நியாயங்களை வெளிப்படுத்துவற்கான களங்களாகப் பயன்படுத்துவது வேறு. மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்துவற்கான அனுமதியினை நீதிமன்றங்களிடம் வாதாடி
வென்று விடலாம் என நம்புவது வேறு. சிறிலங்காவின் நீதிமன்றங்களும் சிங்கள இனவாத அரசின் ஒரு பகுதிதான் என்ற வரலாற்றுண்மையை நாம் மறந்து போகலாகாது.
நீதின்றங்களுக்குச் செல்வதன் மூலம் தமிழர்களின் நினைவேந்தல் உரிமைக்கான அரசியல் வெளியை சிறிலங்காவின் நீதிமன்றங்களின் மூலம் பெற முடியாது என்பதனை,
இனநல்லிணக்கம் பேசிப் பேசி நிலைமாறுகால நீதிக்கான வகுப்புக்களை எடுக்கும் சர்வதேச சமூகத்துக்கு வெளிப்படுத்தும்
களமாகப் பயன்படுத்திவிட்டு, மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்துவதற்கான மாற்று உத்திகளை தமிழர் தேசம் முதலிலேயே வகுத்திருக்க வேண்டும்.
சிங்கள அரச கட்டமைப்புக்கள் மாவீரர் நாளுக்கென விதித்த தடைகளுக்கு எதிராக ஒன்றுகூடிய தமிழர் தேசியகட்சிகள், மக்களை வீடுகளில் இருந்து மாவீரர்களுக்கு விளக்கேற்றுங்கள் எனக் கூறிவிட்டு ஒதுங்கிக் கொண்டனர். குறைந்தபட்சம் மக்களைத்
தத்தமது வீடுகளுக்குள் ஒதுங்கிக் கொள்ளாது வீட்டு வாசல்களிலும் மதில்களிலும் தீபங்களை ஏற்றுங்கள் என அறைகூவல் விடுத்து தமிழீழ தேசத்தைத் தீபங்களால் ஒளிரச் செய்திருக்க வேண்டும்.
ஆக்கிரமிப்புக்குள்ளாகி நிற்கும் நமது மக்களை ஆக்கிரமிப்பாளர்களை மூர்க்கத்துடன் எதிர்க்கும் போர்க்குணம்
கொண்டவர்களாக மாற்றும் சக்தி மாவீரர்களது மூச்சுக்கு உண்டு என்பதனை நமது அரசியற் தலைவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
மாவீரர் நாளினையோ, அல்லது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளையோ ஒரு வெறும் சடங்காக மாற்றாமல், இந்த நாட்கள்
முன்வைக்கின்ற அரசியலைக் கையிலெடுத்து, அதனை மக்கள் மயப்படுத்திய அரசியல் போராட்டமாக மாற்ற வேண்டிய பொறுப்பு தமிழர் தலைவர்களுக்கு உண்டு.
இதனை நோக்கிய ஆக்கபூர்வமான செயல்முனைப்பே தமிழர் தேசத்தின் இன்றைய வேண்டுகையாகவுள்ளது.
கணவன் மனைவி மீது கத்திகுத்து தாக்குதல்
கணவன் மனைவி மீது கத்திகுத்து தாக்குதல்
மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் சிறைக்கு சென்று திரும்பிய கணவன், மனைவியின் வீட்டிற்குள் நுழைந்து மனைவி மீது கத்திக் குத்து தாக்குதல் நடாத்திவிட்டு தப்பியோடியுள்ளார்.
இதில் படுகாயமடைந்த பெண் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் தலை மறைவாகியிருந்த கணவனை
நேற்று (08) கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
காத்தான்குடி பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள புதுக்குடியிருப்பு, புளியடிதீவு பிரதேசத்தைச் சேர்ந்த மேகலா என்ற பெண் திருமணம்
முடித்து இரண்டு குழந்தைகளுக்கு தாயான நிலையில் கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட முரண்பாடு காரணமாக நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
இதன்போது, கணவன் மனைவி பிரிந்து வாழ்ந்து வருவதால் மனைவி மற்றும் இரு குழந்தைகளுக்கும் கணவன் தாபரிப்பு பணம் செலுத்துமாறு நீதிமன்றம் கடட்ளையிட்டது.
இந்த நிலையில் இரு குழந்தைகளுடன் வாழ்ந்துவரும் மனைவிக்கு மாதாந்த தாபரிப்பு பணம் செலுத்தாமல் இருந்து வந்த கணவனான
செந்தூரன் என்பவருக்கு நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில் அவர் கைது செய்யப்பட்டு ஒரு வருடம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
தற்போது, சிறையில் இருந்து வெளியே வந்த 40 வயதுடைய செந்தூரன். சம்பவ தினமான திங்கட்கிழமை (07) அதிகாலை மனைவியின் வீட்டிற்குள் நுழைந்து அவரை சமையல்
அறைப்பகுதிக்கு இழுத்துச் சென்று அவரின் முதுகில் இரு கத்திகளால் 13 முறை தாக்குதல் நடாத்திவிட்டு தப்பியோடியுள்ளார்.
இதில் படுகாயமடைந்த பெண் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
இதனையடுத்து காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்ற தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி கே.சி.எம்..முஸ்தப்பா தலைமையிலான பொலிசார் தப்பிஒடி தலைமறைவாகிய செந்தூரனை தேடும் நடவடிக்கையில்
ஈடுபட்ட நிலையில். பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் பிரகாரம் அவரை மட்டக்களப்பு நகரில் வைத்து நேற்று (08) மாலையில் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக
விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.
1,795 கடற்படை வீரர்களுக்கு பதவி உயர்வு
1,795 கடற்படை வீரர்களுக்கு பதவி உயர்வு
இலங்கை கடற்படையின் 70 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு 66 அதிகாரிகள் உட்பட மொத்தம் 1,795 கடற்படை வீரர்களுக்கு பதவி
உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
கடற்படை ஊடகப் பேச்சாளர் கேப்டன் இந்திக டி சில்வா இதனை தெரிவித்தார்.
´சிலோன் ரோயல் நெவ்´ என்ற பெயரில் 1950 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 9ஆம் திகதி இலங்கை கடற்படை இந்நாட்டில் நிறுவப்பட்டது.
30 வருடங்களாக இடம்பெற்ற யுத்தத்தின் போது கடற்படை சமுத்திர பாதுகாப்பிற்காகவும் கடல் ஊடாக இந்நாட்டிற்கு ஏற்படும்
அச்சுறுத்தல்களை தடுப்பதற்காகவும் பாரிய அளவான பங்களிப்பினை வழங்கிய கடற்படை தற்போது நில கடமையில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றது.
கடற்படையின் 70 ஆவது ஆண்டு நிறைவு விழா இன்று தொடக்கம் எதிர்வரும் 13 ஆம் திகதி வரையில் காலிமுகத்திடலுக்கு முன் உள்ள கடல் பரப்பில் இடம்பெறவுளளமை குறிப்பிடத்தக்கது.
காணாமல்போன வெளிநாட்டவர் சடலமாக மீட்பு
காணாமல்போன வெளிநாட்டவர் சடலமாக மீட்பு
காலி, ரத்கம பகுதியில் தியானம் செய்யும் போது காணாமல் போன வெளிநாட்டு
துறவியின் சடலம் ரத்கம கலப்பு பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மூன்று நாட்களுக்கு முன்னர் குறித்த துறவி காணமல்
போயிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியாவில் பனி மூட்டம்- மக்கள் அவதி
வவுனியாவில் பனி மூட்டம்-மக்கள் அவதி
வவுனியாவில் இன்று (09) காலை அதிகளவான பனி மூட்டம் காணப்பட்ட நிலையில் சாரதிகள் வாகனங்களை செலுத்துவதில் பெரும் இடையூறுகளை சந்தித்திருந்தனர்.
வவுனியா நகர்ப்புறம் உட்பட அனைத்து இடங்களிலும் காலை 8.00 மணிவரை அதிகளவான பனி மூட்டம் காணப்பட்டது. இதன்
காரணமாக வேலைக்கு செல்வோர், வாகனச் சாரதிகள் எனப் பலரும் சிரமங்களை எதிர்கொண்டிருந்தனர்.
ஏ-9 வீதி உட்பட வவுனியாவில் வீதியால் சென்ற வாகனங்கள் காலை 8 மணிவரை ஒளியைப் பாய்சியபடி சென்றதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.
அண்மைக்காலமாக குளிருடன் கூடிய காலநிலை வவனியாவில் காணப்பட்ட போதிலும் இன்றைய நிலை போன்றதான பனி மூட்டம் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதிக குளிருடன் பனி மூட்டம் ஏற்படும் காலநிலை நுவரெலியாவில் நிலவும் நிலையில் தற்போது வவுனியாவிலும் உணரப்பட்டுள்ளது.

கண்டியில் இருந்து நுவரெலியாவுக்கு நெடுச்சாலை
கண்டியில் இருந்து நுவரெலியாவுக்கு நெடுச்சாலை
கண்டி நகரில் இருந்து நுவரெலியா வரையில் நெடுஞ்சாலை ஒன்றை அமைப்பது பற்றிய சாத்தியக்கூறு ஆய்வுகள்
மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற விவாதத்திலேயே அமைச்சர் இவ்வாறு உரையாற்றினார். பிரதான அதிவேக நெடுஞ்சாலைகளை
போன்று பிரதேச சிறிய வீதிகளையும் அபிவிருத்தி செய்ய அரசாங்கம் நிதியை ஒதுக்கீடு செய்யும் என்று அமைச்சர் கூறினார்.
இதேவேளை, மாகும்புர நகரிலிருந்து நாட்டின் ஏனைய பகுதிகளுக்கு பாடசாலை மாணவர்கள் பாடசாலைகளுக்கு
செல்வதற்கான பஸ் சேவைகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்திருந்தார்.
ன்மூலம் வெளியிடங்களில் இருந்து கொழும்பு செல்லும் பஸ் வண்டிகளின் எண்ணிக்கையை குறைப்பது இதன் நோக்கமாகும்.
இந்த வேலை திட்டத்திற்காக தனியார் துறையின் ஒத்துழைப்பும் பெற்றுக் கொள்ளப்படுகின்றது. கிராமிய வீதிகளுக்கான பஸ் போக்குவரத்து சேவையும் சித்தரிக்கப்படவுள்ளன.
இந்த வருட இறுதிக்குள் புதுப்பிக்கப்பட்ட 200 பஸ் வண்டிகளை மீண்டும் சேவையில் ஈடுபடுத்த எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் காமினி லொகுகே மேலும் தெரிவித்தார்.
கொதிக்கும் இலங்கை சோனகர் – அடக்கும் கோட்டா
கொதிக்கும் இலங்கை சோனகர் – அடக்கும் கோட்டா
கொரோனா வைரஸ் தொற்றால் மரணிப்போரை உலகில் உள்ள 197 நாடுகள் அடக்கம் செய்யும்போதுஇ இலங்கையில் மாத்திரம் அந்த
நடைமுறை ஏன் பின்பற்றப்படுவதில்லை எனக் கேள்வியெழுப்பிய இஷாக் ரஹ்மான் எம்.பி, முஸ்லிம்கள் ஈழத்தைக் கேட்கவில்லை.
கொரோனாவால் உயிரிழக்கும் முஸ்லிம்களை (ஜனாஸாக்களை) அடக்கம் செய்ய வேண்டுமென்றே கேட்கிறார்கள். இதனால்
சுற்றுச்சூழலுக்கு எந்தவிதமானப் பாதிப்புக்களும் ஏற்படாது என்றார்.
சுற்றாடல், வனஜீவராசிகள், வனப் பாதுகாப்பு அமைச்சின் குழு நிலை விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர்,
‘முஸ்லிம்கள் ஒருபோதும் நாட்டைப் பிரித்துக் கேட்கவில்லை. நாட்டுக்குப் பாதிப்பை ஏற்படுத்தியது இல்லை. நாட்டின்
அமைதிக்கும் பாதிப்பு ஏற்படுத்தியதில்லை. எனினும் முஸ்லிம்களின் பெயரைப் பயன்படுத்தி சிலர் நாட்டுக்குப் பாதிப்பை ஏற்படுத்தினார்கள்.
கொரோனா வைரஸால் உயிரிழக்கும் முஸ்லிம்கள் உடல்களை அடக்கம் செய்வதால் யாருக்கும் எந்தவிதமானப் பாதிப்புக்களும் ஏற்படாது என தொற்று நோய் விசேட நிபுணர் நிஹால் அபேசிங்க கூறியுள்ளார்.
முஸ்லிம்கள் ஒருபோதும் ஈழத்தையோ, நாட்டைப் பிரித்து தருமாறோ கேட்கவில்லை. எங்களது மத சம்பிரதாயங்களின்படி உயிரிழப்போரை அடக்கம் செய்யவே வழக்கமாக இருக்கிறது.
எனவே, இதனால் சுற்றுச் சூழலுக்கு எந்தவிதமானப் பாதிப்புக்களும் ஏற்படப்போவதில்லை. எனவே, இதுத் தொடர்பில் ஜனாதிபதி, சபாநாயகர் என அனைவரும் கவனஞ் செலுத்த வேண்டும்.’ எனக் கேட்டுக்கொண்டார்.
புயலினால் சேதமான நெடுந்தீவு – படகுகள் சேதம்
அசாதாரண சூழ்நிலையால் நெடுந்தீவில் படகுப் பயணங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக நெடுந்தீவு மீனவ கூட்டுறவுச் சங்கங்களின்
சமாசத் தலைவர் பத்திமாதாஸன் லீலியான்குறுஸ் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
தொடரும் மழை, மீனவ படகுகள் பல சேதம், கரையோரங்கள் கடுமையான அரிப்புக்கு உள்ளாகியுள்ளது.
மீனவர்களின் படகுகள் கரைகளில் உள்ள கற்பாறைகளுடன் மோதுண்டு பல படகுகள் மிகக் கடுமையான சேதங்களைச் சந்தித்துள்ளது.
படகுகளை பாதுகாப்பாக கட்டுவதற்கும் பாதுகாப்பு அணை வாண் இல்லாமை, இம் மீனவர்களது வாழ்வாதார முதலீடுகள் அழிக்கப்பட்டுள்ளது.
கடந்த புரவி சூறாவளியினால் நெடுந்தீவு J/1 தொடக்கம் J/6 வரையான கிராம சேவகர் பிரிவுகளிலும் 112 மீனவ குடும்பங்களின்
படகுகள் , இயந்திரம், தெப்பம், வலை, களஞ்கட்டி என்பன அழிவடைந்து பல இலட்சம் அழிவைச் சந்தித்துள்ளனர்.
நெடுந்தீவு J/ 1 தொடக்கம் J/6 வரையான கிராம சேவகர் பிரிவுகளிலும், 829 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்
கரையோரங்கள் பாரியளவில் சேதம் அடைந்து மீனவ குடும்பங்கள் பாரிய பாதிப்புக்களைச் சந்தித்துள்ளதாகவும் நெடுந்தீவு பிரதேச செயலர் F.C.சத்தியசோதி தெரிவித்தார்

யாழில் மக்களுக்கு உணவு வழங்கும் இராணுவம்
யாழில் மக்களுக்கு உணவு வழங்கும் இராணுவம்
யாழ்பாண பாதுகாப்புப் படை தலைமையகத்தின் 52 வது படைபிரிவின் 521 வது பிரிகேட்டின் 11 விஜயபாகு காலாட் படை
படையினர் 2020 டிசம்பர் மாதம் 03 ம் திகதி வல்வெட்டித்துறையில் சூறாவளி மற்றும் பாதகமான காலநிலை காரணமாக
பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு சமைத்த உணவுப் பொதிகளை விநியோகித்தனர்.
யாழ் பாதுகாப்புப் படை தலைமையகத்தின் தளபதி மேஜர் ஜெனரல் செனரத் பண்டார அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் அந்த
சமைத்த உணவு விநியோகிப்பதை 52வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கிதசிரி லியானகே மேற்பார்வை செய்தார்.
521 வது பிரிகேட் தளபதி கர்ணல் மஹேன் சல்வதுர, 11 வது விஜயபாகு காலாட்படையின் கட்டளை அதிகாரி லெப்டினன்ட்
கேணல் கீத் முனகமகே, அதிகாரிகள் மற்றும் படையினர் அவர்களின் அவசர தேவைகள் குறித்து விசாரித்தனர்.

வவுனியா ஓமந்தையில் தீயில் எரிந்த பெண்
வவுனியா ஓமந்தையில் தீயில் எரிந்த பெண்
வவுனியா ஓமந்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சேமமடு பகுதியில் தீயில்
எரிந்து படுகாயமடைந்த பெண் ஒருவர் இன்று வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த பெண் தனது வீட்டில் இருந்த சமயம் தீயில் எரிவதை அவதானித்த
அயலவர்கள் அவரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்ததுடன், பொலிஸாருக்கும் தெரியப்படுத்தினர்.
சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த ரஞ்சனி வயது 41 என்ற பெண்ணே
படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவத்திற்கு குடும்ப விவகாரமே காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பாக ஓமந்தை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
64 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 6,878 பேர்
64 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 6,878 பேர்
முப்படையினரால் நடத்தப்படு 64 தனிமைப்படுத்தல்
நிலையங்களில் 6,878 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், வைத்தியசாலைகள் மற்றும் சிகிச்சை நிலையங்களில் மேலும் 7,634 பேர் சிகிச்சைப் பெற்று வருவதாக கூறப்படுகின்றது.
இதேவேளை, திவுலுப்பிட்டிய – பேலியகொட கொரோனா கொத்தணியில் இதுவரை 17 396 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

நாட்டில் 648 பேருக்கு புதிதாக கொரோனா
நாட்டில் 648 பேருக்கு புதிதாக கொரோனா
நாட்டில் நேற்று 648 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு, தொற்று கண்டறியப்பட்டவர்களில் 451 பேர் சிறைச்சாலைக் கொத்தணியுடன் தொடர்பு டையவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், என்றும் ஏனைய 197 பேரும் பேலியகொட கொத்தணியைச் சேர்ந்தவர்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 27ஆயிரத்து 876ஆக அதிகரித்துள்ளது.
பொலிசாரால் 39 பேர் கைது
பொலிசாரால் 39 பேர் கைது
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறும் நபர்கள் தொடர்பில் அவதானத்துடன் உள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நேற்று (06) மாத்திரம் அவ்வாறான 39 நபர்களை கைது
செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.







