Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
முதலாளியை அடித்து கொன்ற தொழிலாளி
முதலாளியை அடித்து கொன்ற தொழிலாளி
வெலிகம, பெலென சுற்றுவட்டத்தை அண்மித்த பகுதியில் தனியார் பஸ் நடத்துநரால்
மற்றுமொரு தனியார் பஸ் நடத்துநர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
சில வாரங்களுக்கு முன்னர் அம்பலாங்கொடை பஸ் நிறுத்தத்தில் ஏற்பட்ட
முரண்பாடு காரணமாக இந்த படுகொலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மாத்தறை – கொழும்பு சேவையில் ஈடுபடும், ஹக்மன பகுதியை சேர்ந்த 40 வயதுடைய நடத்துநரே இவ்வாறு கொலை
செய்யப்பட்டுள்ளதுடன், அந்த பஸ்ஸின் உரிமையாளரும் அவரே என்று தகவல் வெளியாகியுள்ளது.
சடலம் மாத்தறை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், கைதுசெய்ய
நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
லண்டனில் கொரனோ பரப்பும் தமிழர்கள்
லண்டனில் கொரனோ பரப்பும் தமிழர்கள்
பிரிட்டன் தழுவிய நிலையில் பரவி வரும் கொரனோ நோயினால்
நாள் தோறும் பல நூறு மக்கள் பலியாகி வருகின்றனர்
இவ்வேளை தமிழர்களும் அதிகம் பாதிக்க பட்டுள்ளனர் ,இவ்வாறு
நோயினால்பாதிக்க பட்ட சில தமிழர்கள் தமது குடும்பத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்
எனினும் இவர்கள் தம்மை சுய தனிமை படுத்தலுக்குஉள்ளாக்க பட வேண்டும் .,
ஆனால் இவர்கள் அரசும் கூறும் அந்த விதிகளை ஏறி நிகழ்வுகளில் கலந்த
கொள்வது மற்றும் ,தனிமை படுத்துதலை மறைத்து ,தமக்கு நோயுள்ளதையும்
மறைத்து சாதாரண மனிதர்கள் போல கலந்து கொளவதாக மக்கள் மத்தியில் பேச படுகிறது
இவ்வாறு தனிமை படுத்துதலை மேற்கொள்ள மறுத்து வெளியில் நடமாடிய
தமிழர்கள் சிலருக்கு பல்லாயிரம் பவுண்டுகள் தண்டம் அறவிட பட்டுள்ளது
,அதிக கூடிய தொகையாக பத்து ஆயிரம் பவுண்டுகள் அறவிட படுகிறது ,அத்துடன் கிரிமினல் குற்றம் ஆகிறது என்பது குறிப்பிட தக்கது
கொரனோ தாக்குதலில் சிக்கி லண்டனில் தமிழர் மரணம்
கொரனோ தாக்குதலில் சிக்கி லண்டனில் தமிழர் மரணம்
பிரிட்டன் லண்டன் பகுதியில் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி
தமிழ் வாலிபர் ஒருவர் பலியாகியுள்ளார் ,இவரை போன்று ஐம்பதுக்கு மேற்பட்ட தமிழர்கள் பலியாகியுள்ளனர்
இரண்டாம் அலையாக வீரியம் கொண்டு பரவி வரும் கொரனோ நோயின்
தாக்குதலில் சிக்கி கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 1500 க்கு மேற்பட்ட அப்பாவி மக்கள் பிரிட்டன் தழுவிய நிலையில்
பலியாகியுள்ளனர்
ஐம்பது ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் பாதிக்க பட்டுள்ளனர்
,தொடர்ந்து பத்து ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் மிக ஆபத்தான நிலையில் உள்ளனர் என்பது குறிப்பிட தக்கது
சிறுமி கொலை – விசாரணை செய்ய கோரி மக்கள் போராட்டம்
மட்டக்களப்பு – களுவாஞ்சிடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் சுதாகரன் அஸ்வினி என்ற 11 வயதுச் சிறுமியின் மரணம் தொடர்பில் முறையான விசாரணை
நடத்தக்கோரியும் சம்பந்தப்பட்டவர்களை கைதுசெய்யுமாறு வலியுறுத்தியும், பெரியகல்லாறு பிரதான வீதியில் நேற்று (13) மாலை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில், கொட்டும் மழையின் மத்தியிலும் வீதியை மறித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது சிறுமியின் மரணம் கொலையெனவும் சிறுமி கடுமையான முறையில் சித்திரவதை செய்யப்பட்டுள்ளாரெனவும்
அவரது மரணத்துக்கு நியாயம் வேண்டும் எனவும் அவர்கள் கோசமெழுப்பினர்.
இதனையடுத்து போராட்ட இடத்துக்கு வந்த களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, பொதுமக்களுடன்
கலந்துரையாடியதுடன், குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைதுசெய்வதற்கான நடவடிக்கை
முன்னெடுக்கப்படுவதாகவும் 48 மணித்தியாலத்துக்குள் அவர்களை கைது
செய்வோம் எனவும் வழங்கிய உறுதிமொழியையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.

கோட்டா தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தி
கோட்டா தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தி
உழவர் திருநாளான தைப்பொங்கல், உலகெங்கிலும் வாழும் தமிழ் மக்களின் முதன்மையான சமய மற்றும் கலாச்சார பண்டிகையாகும். இது இயற்கையுடன் பிணைந்த, விவசாயத்தை
அடிப்படையாகக் கொண்ட பாரம்பரிய வாழ்க்கை முறையையும் பயிர்களுக்கு வளம் சேர்த்த சூரியனுக்கு நன்றி செலுத்துவதையும் குறிக்கிறது. இந்து சமயத்தின்படி வாழும் தமிழ் மக்கள்
தைத்திருநாளை தங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் ஒரு புதிய ஆண்டின் விடியலாக கருதுகின்றனர். அந்த மகிழ்ச்சியை
கொண்டாடும் எமது நாட்டின் சகோதர தமிழ் மக்களுடன் நானும் மகிழ்ச்சியுடன் இணைந்து கொள்கிறேன்.
விளைச்சலின் மூலம் கிடைக்கும் புத்தரிசியை பாலுடன் சேர்த்து பொங்க வைத்து தங்களுக்கும், தங்கள் குடும்பத்திற்கும், நாட்டிற்கும், முழு உலகிற்கும் சுபீட்சம் கிட்ட வேண்டும் என்று
அவர்கள் பிரார்த்திக்கின்றனர். இன, மத பேதமின்றி இலங்கை மக்கள் அனைவருக்கும் சுபீட்சத்தை கொண்டுவருவது
என்னுடையவும் எமது அரசாங்கத்தினதும் ஒரே நோக்கமாகும். இந்த உன்னதமான நோக்கத்தை அடைந்துகொள்வதற்கான
வழிவகைகள் எமது அரசாங்கத்தின் நாட்டைக் கட்டியெழுப்பும் ‘சுபீட்சத்தின் நோக்கு’ கொள்கைத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
நன்றியுணர்வு என்பது இலங்கை சமூகத்தின் ஒரு தனித்துவமான பண்பாகும். அறுவடையின் முதல் பகுதியை சூரியனுக்கு படைக்கும் தைப்பொங்கல் பண்டிகை, பழங்காலத்திலிருந்தே நம் சமூகம்
மதித்து வரும் விழுமியங்களை குறிக்கிறது. இதன் காரணமாக தைப்பொங்கல் பண்டிகை தேசிய கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக மாறியுள்ளது.
மனித சமூகத்தின் உன்னதமான நன்னெறிகளை குறிக்கும் வகையில், தைப்பொங்கல் திருநாளை கொண்டாடும் இலங்கை
வாழ் தமிழ் மக்களுக்கு எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இலங்கையிலும் புதிய வகை கொரோனா
இலங்கையிலும் புதிய வகை கொரோனா
ஐக்கிய இராச்சியத்தில் இருந்து வருகை தந்த நபர் ஒருவருக்கு இங்கிலாந்தில் இனங்காணப்பட்ட புதிய வகை கொரோனா வைரஸ்
தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக விஷேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
வௌிநாடுகளில் இருந்து வருகை தரும் நபர்கள் தொடர்பில் கவனம் செலுத்தி மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளின் அடிப்படையில்
குறித்த தொற்றாளர் இனங்காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
பேராசிரியர் நீலிக மாளவிகே மற்றும் ஶ்ரீஜயவர்தனபுர
பல்கலைகழக ஆய்வு குழு இதனை உறுதி செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பிள்ளையான் விடுதலை – வழக்கு தள்ளுபடி
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பிலான வழக்கில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை
சந்திரகாந்தன் (பிள்ளையான்) உட்பட ஐந்து பேரும் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு, மட்டக்களப்பு மேல் நீதிமன்ற விசேட நீதிபதி டி.சூசைதாசன் முன்னிலையில் இன்று (13) விசாரணைக்கு
எடுத்துக்கொள்ளப்பட்டபோதே, வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதுடன், இவர்கள் ஐந்து பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம், 2005ஆம் ஆண்டு டிசெம்பர்
மாதம் 25ஆம் திகதி மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் படுகொலை செய்யப்பட்டார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளர்
“பிரதீப் மாஸ்டர்” எனும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்த ராஜா, “கஜன் மாமா” எனும் கனகநாயகம், இராணுவப் புலனாய்வு உத்தியோகத்தர் எம்.கலீல் மற்றும் முன்னாள் இராணுவ வீரரான
மதுசிங்க (வினோத்) ஆகியோர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டு வந்தனர்.
இந்நிலையில், 2015ஆம் ஆண்டு தாங்கள் கைதுசெய்யப்பட்டு, குற்ற ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்ட 1ஆம் மற்றும் 02ஆம் எதிரிகளின் வாக்குமூலமானது சுயேட்சையாக வழங்கப்படவில்லை, தூண்டுதல்
அல்லது அச்சுறுத்தல் காரணமாக அந்த வாக்குமூலத்தை வழங்கியிருந்தார்கள், பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால்
நேரடியாக நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு வாக்குமூலம் வழங்கியிருந்ததாக தெரிவித்து, மேன்முறையீட்டு நீதிமன்றில் மீளாய்வு விண்ணப்பித்தனர்.
இதன்பிரகாரம், குறித்த ஒப்புதல் வாக்குமூலத்தை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்தன் அடிப்படையில், கடந்தாண்டு நவம்வர்
24ஆம் திகதி, மட்டக்களப்பு மேல்நீதிமன்றத்தில் சட்டமா அதிபரின் ஒப்புதலின் பேரில் பிணை வழங்கப்பட்டிருந்தது.
இதேவேளை, கடந்த திங்கட்கிழமை (11) சட்டமா அதிபர் திணைக்களம் இந்த வழக்கினை தொடர்ந்து நடத்தமுடியாது என
மட்டக்களப்பு மேல் நீதிமன்றுக்கு அறிவித்திருந்த நிலையில், வழக்கின் குற்றச்சாட்டுகளில் இருந்து இன்று அவர்களை விடுவித்து வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
விக்கி சம்பந்தி வாசுதேவ நாணயக்காரவுக்கு கொரனோ
ஜனவரி மாதம் 06 ஆம் திகதி முதல் தன்னை சந்தித்த சகலரும், தங்களை சுய தனிமைக்கு உட்படுத்துமாறு, கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ள அமைச்சர் வாசுதேவ நாணயக்கார கோரியுள்ளார்.
அமைச்சரின் ஊடகச் செயலாளர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காய்ச்சல் அறிகுறி காரணமாக கடந்த 09 ஆம் திகதி பிசிஆர் பரிசோதனை மேற்கொண்டதையடுத்து, அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.
கொரனோ தாக்குதல் 4 பேர் மரணம்
கொவிட் 19 தொற்றாளர்களாக நேற்று(12) 584 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதற்கமைய நாட்டில் இதுவரை பதிவான தொற்றாளர்களின் எண்ணிக்கை 49,537 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன், கொவிட் 19 தொற்றுக்கு இலக்காகி மேலும் நால்வர் உயிரிழந்துள்ளனர்.
இதனையடுத்து உயிரிழப்புகளின் எண்ணிக்கை 244 ஆக அதிகரித்துள்ளது.
கொழும்பு-13, ஹங்வெல்ல, மாத்தளை, வெல்லம்பிட்டிய ஆகிய பகுதிகளைச் சேர்ந்தோரே உயிரிழந்துள்ளனர்
காணாமல் போனவர் சடலமாக மீட்பு
காணாமல் போனவர் சடலமாக மீட்பு
கம்பளையில் கடந்த வெள்ளிக்கிழமை (08) காணாமல்போன ஆண் ஒருவர் நேற்று காலை மகாவலி கங்கையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கம்பளை, கங்கவட்ட பகுதியில் குடும்பம் ஒன்று சுயதனிமைக்கு உட்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் தனிமைப்படுத்தல் காலம்
முடிவடைந்ததை அடுத்து குறித்த வீட்டில் இருந்து நபர் ஒருவர் (வயது – 60) கடந்த வெள்ளிக்கிழமை வெளியில் சென்றுள்ளார்.
இவ்வாறு சென்றவர் மீண்டும் வீட்டுக்கு வரவில்லை. இதனால் பதற்றமடைந்த உறவினர்கள் அது தொடர்பில் கம்பளை பொலிஸ்
நிலையத்தில் முறைப்பாடு செய்தனர். பொலிஸ் விசாரணைகளும் ஆரம்பமாகி இருந்தன.
இந்நிலையில் கம்பளை ரயில்வே கடவைக்கு அருகில் மகாவலி கங்கையில் சடலம் ஒன்று இருப்பதாக பொலிஸாருக்கு நேற்று
தகவல் வழங்கப்பட்டுள்ளது. அது காணாமல்போன நபருடைய சடலம் என்பதனை உறவினர்கள் ஊடாக பொலிஸார் உறுதிப்படுத்தினர்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக கம்பளை வைத்தியசாலைக்கு எடுத்து
செல்லப்பட்டது. இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் பல கோணங்களில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
மட்டு. போதனா வைத்தியசாலையில் 21 பேருக்கு கொரோனா
மட்டு. போதனா வைத்தியசாலையில் 21 பேருக்கு கொரோனா
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் ஊழியர்கள் 21 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி
செய்யப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் கே.கலாரஞ்சனி தெரிவித்தார்.
வைத்தியசாலை பணிப்பாளர் அலுவலகத்தில் இன்று (12) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறினார்.
இது தொடர்பாக மேலும் கருத்துரைத்த வைத்தியசாலை பணிப்பாளர், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில்
ஊழியர்கள் 21 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், நோயாளிகளுக்கு வைரஸ் பரவாமலும்
நோயாளிகளிருந்து ஊழியர்களுக்குப் பரவாமலும் தடுப்பதற்கு சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதேவேளை, வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகள், போதனா வைத்தியசாலைக்கு வருவதை தவிர்த்து,
அருகில் உள்ள வைத்தியசாலைகளில் தங்களுக்கான சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்ளுமாறும் கிளிக் வரும்
நோயாளிகள் தங்களது மருந்துகளை, கிராம சேவகர் ஊடாகவும் அல்லது 0653133330, 0653133331 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் ஊடாக பெற்றுக்கொள்ளுமாறும் அவர் அறிவித்தல் விடுத்தார்.
ரஞ்சன் ராமநாயக்கவுக்கு நான்கு வருட கடூழிய சிறை
ரஞ்சன் ராமநாயக்கவுக்கு நான்கு வருட கடூழிய சிறை
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன்
ராமநாயக்கவுக்கு நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கான உத்தரவை மூன்று பேர் கொண்ட உயர் நீதிமன்ற
நீதியரசர்கள் குழாம் இன்று (12) பிறப்பித்துள்ளது.
யாழ் பல்கலைக்கழக நினைவு தூபிநாம் உடைக்கவில்லை – சிங்கள இனவாதிகள் கொக்கரிப்பு
யாழ் பல்கலைக்கழக நினைவு தூபிநாம் உடைக்கவில்லை – சிங்கள இனவாதிகள் கொக்கரிப்பு
யாழ்ப்பாண பல்கலைக்கழக நினைவு தூபி உடைக்கப்பட்டது தொடர்பில் அரசாங்கத்திற்கு எந்தவித சம்பந்தமும் இல்லை. அதுதொடர்பில் அரசாங்கம் எந்தவித தீர்மானத்தையும்
மேற்கொள்ளவில்லை என்று அமைச்சரவை இணைப்பேச்சாளரும், அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.
இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர்கள் மாநாட்டில் யாழ்;ப்பாண பல்கலைக்கழகத்தில் அகற்றப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி தொடர்பாக
ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இந்த விடயத்தை கூறினார்.
இவ்வாறான நினைவு தூபிகள் வடக்கில் மாத்திரமின்றி நாட்டில் ஏனைய பல்லைக்கழகங்களிலும் உண்டு. இவ்வாறான நினைவு தூபிகளை உடைப்பதற்கு அரசாங்கம் அனுமதி அளித்ததா? என்ற
கேள்விக்கு அமைச்சர் பதிலளிக்கையில், இந்த பல்கலைக்கழக நினைவு தூபியை உடைப்பதற்கு தீர்மானத்தை மேற்கொண்டது
பல்கலைக்கழக துணைவேந்தரும், பல்கலைக்கழக நிர்வாகமும் ஆகும். அதனை மீள அமைப்பதற்கு துணைவேந்தரும், நிர்வாகமுமே தீர்மானித்தனர் என்றும் அமைச்சர் கூறினார்.
பல்கலைக்கழங்களில் இருக்க வேண்டியதை தீர்மானிக்க வேண்டியது துணைவேந்தரும் அதன் நிர்வாகமுமே ஆகும். இதன் அடிப்படையில் அதனை மீள அமைப்பதற்கு தீர்மானித்துள்ளனர் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனை தொடர்பில் பிரதமர் தெரிவித்த கருத்து முக்கியமானது. அவர் அரசாங்கத்தின் சிரேஸ்ட அமைச்சர் என்ற ரீதியில் பாராளுமன்றத்தில் இதுதொடர்பாக கேட்ட கேள்விக்கு பிரதமர் சமீபத்தில் பதிலளித்துள்ளார் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
திரைப்பட துறைக்கு ஈராண்டு வருடத்திற்கு பொழுதுபோக்கு வரி விலக்கு
திரைப்பட துறைக்கு ஈராண்டு வருடத்திற்கு பொழுதுபோக்கு வரி விலக்கு
கொவிட்-19 தொற்றுக்கு மத்தியில் உள்நாட்டு திரைப்படத்துறையை பாதுகாக்கும் நோக்கில் ஈராண்டு காலத்திற்கு நிவாரணம் பெற்றுத் தருமாறு திரைப்படத்துறை சார்ந்தவர்கள் முன்வைத்த
கோரிக்கைக்கு அமைய கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தீர்மானத்திற்கேற்ப திரைப்படத்துறையை ஈராண்டு
காலத்திற்கு பொழுதுபோக்கு வரியிலிருந்து விலக்களிப்பதற்கு நேற்று (2021.01.11) சம்பந்தப்பட்ட அமைச்சுக்களின் ஒப்புதல் கிடைத்துள்ளது.
அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூரட்சி மன்ற அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி மற்றும் புத்தசாசன சமய
மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன ஆகியோரும் இத்தினத்தில் இது குறித்து ஒப்புதல் வழங்கியுள்ளனர்.
அதற்கமைய 2021-2022 ஆகிய இரண்டு ஆண்டுகளுக்கு திரைப்படத்துறையில் நாடளாவிய ரீதியில் தாக்கம் செலுத்தும் வகையில் பொழுதுபோக்கு வரியிலிருந்து விலக்களிக்கப்படும். 2023
ஆண்டு முதல் திரைப்படத்துறைக்கான பொழுதுபோக்கு வரியை 7.5 சதவீதமாக குறைப்பதற்கும் இதன்போது ஒப்புதல் வழங்கப்பட்டது.
இதுவரை 5 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை பல்வேறு சதவீதங்களின் அடிப்படையில் நாடளாவிய ரீதியில் உள்ளூராட்சி
மன்றங்களினால் பொழுதுபோக்கு வரி அறவிடப்பட்டது. இப்புதிய ஒப்புதலுக்கமைய முழு நாட்டிற்கும் ஒரு பொழுதுபோக்கு வரி அறிமுகப்படுத்தப்படும்.
உள்ளூர் திரைப்பட கலைஞர்களின் கூட்டணி, இலங்கை திரைப்பட இயக்குநர் சங்கம், இலங்கை திரைப்பட காட்சிபடுத்துனர் சங்கம் மற்றும் இலங்கை திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்
ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்தி பல கலைஞர்கள் கடந்த 8ஆம் திகதி கௌரவ பிரதமரை சந்தித்து கொவிட்-19 நெருக்கடிக்கு
மத்தியில் திரைப்படத்துறை மிகவும் ஆபத்தான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினர்.
அவர்களின் பிரதான கோரிக்கைகளில் பொழுதுபோக்கு வரியை நீக்குமாறும் கோரப்பட்டது. அதற்கமைய கௌரவ பிரதமரின்
தீர்மானத்திற்கேற்ப இன்றைய தினம் இந்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
கோட்டா பாதுகாப்பு 33 சிங்கள இராணுவத்திற்கு கொரனோ
கோட்டா பாதுகாப்பு 33 சிங்கள இராணுவத்திற்கு கொரனோ
இலங்கையில் ஆளும் இரத்த காட்டேறியும் ,தமிழ் இன
படுகொலையாழியும் ஆளும் ஜனாதிபதியாக விளங்கும்
கோட்டபாயாவுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட 33 சிறப்பு அதிரடி
படையினருக்கு கொரனோ நோயுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது
இதனால் கோட்டாவுக்கும் கொரனோ ஏற்பட்டு இருக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது
பொலிஸ் வேட்டையி 34 பேர் திடீர் கைது
பொலிஸ் வேட்டையி 34 பேர் திடீர் கைது
இலங்கையில் பரவி வரும் நோயின் தாக்குதலை கட்டு படுத்த
அரசால் விதிக்க பட்ட விதிகளை மீறி செயல்பட்ட 34 பேர்
காவல்துறையினரால் கைது செய்ய பட்டுள்ளனர்
இவர்களில் பெரும்பாலானோர் முகக் கவசம் அணிய மறுத்த
நிலையில் கைது செய்ய பட்டுள்ளனர்
போதை பொருள் கடத்திய 13 அரச அதிகாரிகள்
போதை பொருள் கடத்திய 13 அரச அதிகாரிகள்
இலங்கையில் அரசு அப்பணியியல் ஈடுபட்டு வந்த 13 அதிகரைகள் போதைவஸ்து
கடத்தலில் ஈடுபட்டமை கண்டுபிடிக்க பட்ட நிலையில் அவர்களுக்கு
எதிராக நீதிமன்ற விசாரணைகள் இடம்பெற்று வருகிறது
இதனை அடுத்து எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பணிப்புரை வழங்க பட்டுள்ளது
ஈழத்தமிழ் சினிமாவின் திரைகடலோடியை தமிழர்தேசம் இழந்துவிட்டது : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் !
ஈழத்தமிழ் சினிமாவின் திரைகடலோடியை தமிழர்தேசம் இழந்துவிட்டது : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் !
ஈழத்தமிழ் சினிமாவுக்கான தனித்துவத்தையும், அடையாளத்தையும் வேண்டி ஓயாது பயணித்துக் கொண்டிருந்த
ஓர் வேட்கையாளனை, நாட்டுப்பற்றாளனை தமிழர் தேசம் இழந்துவிட்டது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஈழத்தமிழர் சினமாவின் அடையாளங்களில் ஒன்றான மூத்தகலைஞரனான திரு.நவரட்ணம் கேசவராஜா அவர்கள்
மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். அன்னாரின் மறைவு தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் கவலையினை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் விடுத்துள்ள இரங்கல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஈழத்தமிழ் சினிமா மீது தீராத வேட்கையும், காதலும் கொண்ட திரு.நவரட்ணம் கேசவராஜா அவர்களது மறைவு எம்மை கவலையிலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.
ஈழத்தமிழ் சினிமாவுக்கான தனித்துவத்தையும், அடையாளத்தையும் வேண்டி ஓயாது பயணித்துக் கொண்டிருந்த
ஓர் வேட்கையாளனை, நாட்டுப்பற்றாளனை தமிழர் தேசம் இழந்துவிட்டது.
கடந்த மூன்று தசாப்தங்களாக இயங்கிக் கொண்டிருந்த ஓர் ஆளுமை. கடலோரக்காற்று, பிஞ்சுமனம், தாயகமே தாகம், மரணம் வாழ்வில் முடிவல்ல, திசைகள், வெளிக்கும் என போர்க்காலத்தில்
அன்னார் படைத்த படைப்புக்கள் ஒவ்வொன்றும், காலத்தை கடந்து நிற்கும் படைப்புக்கள் மட்டுமல்லாது வரலாற்றை பதிவு செய்த பெரும் ஆவணங்களாகவும் அமைகின்றன.
தமிழர் தேசம் ஆக்கிரமிப்புக்கு உள்ளான இன்றைய இடர்நிலையிலும் ‘பனைமரக்காடு’ எனும் அன்னாரது சமீபத்திய
படைப்பு, அவர் கொண்டிருந்த வேட்கை எந்நிலையிலும் தணியாத ஒன்று என்பதனை எடுத்துக்காட்டியிருந்தது.
அன்னாரின் இழப்பினால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உறிவினர்கள், நண்பர்கள், கலைஞர்கள் அனைவரது கரங்களையும்
இறுகப்பற்றிக் கொள்வதோடு, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது மரியாதை வணக்கத்தினை தெரிவித்துக் கொள்கின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு முழுக்க இராணுவ வெற்றி சின்னங்களை நிறுவிக்கொண்டு, மக்களின் யுத்த நினைவு சின்னங்களை அழிப்பது என்ன நியாயம்?-மனோ கணேசன்
வடக்கு முழுக்க இராணுவ வெற்றி சின்னங்களை நிறுவிக்கொண்டு, மக்களின் யுத்த நினைவு சின்னங்களை அழிப்பது என்ன நியாயம்?
-மனோ கணேசன்
யாழ்ப்பாண மாணவர்கள், ஊழியர்கள், உறவுகள் நினைவு கூற பல்கலைக்கழ பூமியின் உள்ளேயே நிர்மாணிக்கப்பட்ட நினைவு தூபியை உடைத்து அழித்ததன் மூலம், உயிர் வாழும் மற்றும் உயிர் இழந்த தமிழ் இலங்கையர்களை இந்த அரசு அவமானப்படுத்தி உள்ளது.
யுத்தத்தை நாம் மறக்க வேண்டும். அதுபற்றி விவாதம் இல்லை. இரண்டு பேச்சு இல்லை. ஏனெனில் இந்த யுத்தம் இன்னொரு நாட்டுடன் நடைபெறவில்லை. அது உள்நாட்டு பிரச்சினையாகும். அதை மறந்து முன்னாலே செல்வோம். பிரச்சனை இல்லை. அப்படியானால் அது இரண்டு புறமும் நிகழ வேண்டும்.
வடமாகாணம் முழுக்க எங்களுக்கு இராணுவ வீரர்களின் வெற்றி தூபிகள் காணக்கிடைக்கின்றன. இராணுவ வீர்களின் உருவங்கள் துப்பாக்கியை காட்டியபடி, உயர்த்தியபடி, ஆயுதங்களை காட்டியபடி இருக்கின்றன. யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார், வவுனியா மாவட்டங்களில் காணக்கிடக்கின்றன.
இந்நிலையில் தமிழர்களின் யுத்த நினைவு சின்னங்களை மாத்திரம் அழிப்பதில் என்ன நியாயம் உள்ளது? என கொழும்பு மாவட்ட எம்பி, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் இன்று கொழும்பில் நடத்திய விசேட ஊடக மாநாட்டில் கேள்வி எழுப்பி உள்ளார்.
எம்பி மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது,
தெற்கில் ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில், வயம்ப பல்கலைக்கழகத்தில், அக்காலத்தில் ஆயுத போராட்டம் செய்த ஜேவீபி போராளிகளின் நினைவு தூபிகள் இருக்கின்றன. அப்படியானால், ஏன் ஒருபுறம் மட்டும் ஒரு சட்டம்?
இப்போது பார்க்கப்போனால், துறைசார் அமைச்சர் சரத் வீரசேகர, இதில் அரசுக்கு தொடர்பு இல்லை என்று தன்னை காப்பற்றிக்கொள்கிறார். பொலிஸ் அங்கு சட்டம், ஒழுங்கை நிலைநாட்டவே சென்றது என்கிறார். இது விகாரமான நகைச்சுவை.
அதுபோல, பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு தலைவர், ஐயோ, எமக்கு இதனுடன் தொடர்பில்லை என்கிறார். இதை செய்தது, யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் என்கிறார். அப்படி சொல்லிவிட்டு நிறுத்தவில்லை. நான் சொன்னது போல, யுத்த நினைவுகள் எங்களுக்கு தேவையில்லை. யுத்தத்தை ஞாபகப்படுத்தும் நினைவு தூபிகள் அவசியமில்லை என்கிறார்.
அவசியமில்லைதான், ஆணைக்குழு தலைவரே! ஆனால், இப்படியான நினைவு தூபிகள் நாட்டின் ஏனைய பல்கலைக்கழகங்களில் உள்ளனவே. நாட்டின் ஏனைய இடங்களில்
உள்ளனவே. யுத்தம் எங்களுக்கு தேவையில்லைதான். நாம் பேச்சுவார்த்தைக்கு செல்வோம். யுத்தம் என்பது துரதிஷ்டவசமானது. யுத்தம் என்பது ஒரு குற்றம். சிங்கள, தமிழர் என இருபுறமும் நாம் சண்டையிட்டோம். இருபுறமும் மக்கள் இறந்தார்கள். அது எமக்கு தேவையில்லை. அவற்றை நாம் மறப்போம்.
ஆனால், அப்படி செய்யும் போது நாம் அதை ஒரே சட்டத்தின் கீழ் செய்வோம். நான் இந்த அரசுக்கு ஒன்றை கூற விரும்புகிறேன். தயவுசெய்து இந்த ஒரே நாடு, ஒரே சட்டம் என்ற கூச்சலை நிறுத்துங்கள். ஒரே நாடு என்பது எமக்கும் சரி. ஆனால், ஒரே சட்டம் என்ற அந்த “ஜோக்கை” விகாரமான “ஜோக்கை” நிறுத்துங்கள்.
தயவுசெய்து நாட்டில் இன்று இருக்கும் சட்டத்தையாவது ஒழுங்காக அமுல் செய்யுங்கள். எல்லோருக்கும் ஒரே சமத்துவமாக அமுல் செய்யுங்கள். தமிழருக்கு ஒன்று, சிங்களவருக்கு வேறொன்று,
முஸ்லிம்களுக்கு இன்னொன்று என்று செய்ய வேண்டாம், என நாட்டி பிளவுபடுத்த வேண்டாம். நாட்டை பிளவு படுத்த வேண்டாம் நாம் கூறுகிறோம்,
இலங்கை சட்டம் எமக்கு தேவை. பேச்சுவார்த்தையை ஆரம்பியுங்கள். அப்படியானால், இப்படியான காரியங்களை செய்யாதீர்கள். தமிழ் மக்களின் மனங்களை உடைக்க வேண்டாம்.
நாம் கவலையடைந்துள்ளோம். மரணித்த எம் தாய்மார்கள், தந்தைமார்கள், சகோதர, சகோதரிகள், அண்ணன், தம்பிகள், தங்கைகள் ஆகியோரை நினைவு கூற எமக்கு முடியாதா? எமக்கு முடியாதா?
ஏன்?, தென்னிலங்கை பல்கலைக்கழகங்களின் சிங்கள மாணவர்களுக்கு வழங்கப்படும் உரிமையும், நீதியும், வடக்கு
பல்கலைக்கழகங்களின் தமிழ் மாணவர்களுக்கு, யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்படுவதில்லை என நான் கேள்வி எழுப்ப விரும்புகிறேன்.
யாழில் நினைவுத்தூபி அழிப்பு – கோட்டா அரசுக்கு எச்சரிக்கை கண்டனம்
யாழில் நினைவுத்தூபி அழிப்பு – கோட்டா அரசுக்கு எச்சரிக்கை கண்டனம்








