Posted in இலங்கை செய்திகள்

முதலாளியை அடித்து கொன்ற தொழிலாளி

முதலாளியை அடித்து கொன்ற தொழிலாளி

வெலிகம, பெலென சுற்றுவட்டத்தை அண்மித்த பகுதியில் தனியார் பஸ் நடத்துநரால்

மற்றுமொரு தனியார் பஸ் நடத்துநர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

சில வாரங்களுக்கு முன்னர் அம்பலாங்கொடை பஸ் நிறுத்தத்தில் ஏற்பட்ட

முரண்பாடு காரணமாக இந்த படுகொலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மாத்தறை – கொழும்பு சேவையில் ஈடுபடும், ஹக்மன பகுதியை சேர்ந்த 40 வயதுடைய நடத்துநரே இவ்வாறு கொலை

செய்யப்பட்டுள்ளதுடன், அந்த பஸ்ஸின் உரிமையாளரும் அவரே என்று தகவல் வெளியாகியுள்ளது.

சடலம் மாத்தறை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், கைதுசெய்ய

நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்