பேரூந்து லொறி மோதல் 12 பேர் காயம்
Posted in இலங்கை செய்திகள்

பேரூந்து லொறி மோதல் 12 பேர் காயம்

பேரூந்து லொறி மோதல் 12 பேர் காயம்

இலங்கை தெற்கு அதிவேக சாலையில் ,பேரூந்து மற்றும் லொறி என்பன மோதி விபத்தில் சிக்கியதில் 12 பேர் படு காயமடைந்துள்ளனர் .

காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவ மனைக்கு எடுத்து செல்ல பட்டுள்ளனர் .

பேரூந்து பலத்த சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது .

அதேபோல வெங்காயம் மற்றும் இதர காய்கறிகளை ஏற்றி சென்ற லொறியும் பலத்த சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது .

இது குறித்த காவல்துறை விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

No posts found.
லண்டனில் கொடி கட்டி பறக்கும் தமிழர் மோர்லி உணவகம் வீடியோ
Posted in இலங்கை செய்திகள்

லண்டனில் கொடி கட்டி பறக்கும் தமிழர் MORLEY உணவகம் வீடியோ

லண்டனில் கொடி கட்டி பறக்கும் தமிழர் MORLEY உணவகம் வீடியோ

லண்டன் பகுதியில் அணைத்து மக்களின் நன்மதிப்பை பெற்று ,கொடி கட்டி பறக்கும் தமிழர் MORLEY மோர்லி உணவகம் .

இந்த உணவகத்தின் உணவின் தரம் ,சுவை விலை என்பனவற்றால் கவர பட்ட மக்கள் ,நூற்று கணக்கில் குவிந்து நாள் தோறும் சிக்கன் மூலம் தயாரிக்க படும் ,விதமான உணவுகளை வாங்கி உண்டு செல்கின்றனர் .

அவ்வாறான பிரபல உணவகத்தினை இங்கே பார்க்கலாம் .

லண்டனில் கொடி கட்டி பறக்கும் தமிழர் MORLEY உணவகம் வீடியோ

லண்டன் பெக்சலியத் பகுதியில் உள்ள புதுக்குடியிருப்பை சேர்ந்த சகோதர்களான ,பவான் அமுதன் நடத்தி வரும் ,இந்த MORLEY மோர்லி உணவகத்தை பார்க்கலாம் வாருங்கள் .

உணவு தயாரிப்பு மற்றும் உணவகத்தின் உள் கட்டமைப்பு பார்ப்பவர்களை வியக்க வைக்கிறது .

இதில் அழுத்தி காணொளியை முழுமையாக பாருஙகள் மக்களே .
எங்கு சென்றாலும் எம் தமிழர்கள் கொடி பறப்பது மகிழ்ச்சியே .

இதில் அழுத்தியும் காணொளி பார்க்கலாம்

https://www.youtube.com/watch?v=GC3B6loKUho
No posts found.
இலங்கையில் 9 மாதத்தில் 1500 பேர் கற்பழிப்பு
Posted in இலங்கை செய்திகள்

அழகிய 15 வயது சிறுமி கடத்தி மூவரால் கற்பழிப்பு

அழகிய 15 வயது சிறுமி கடத்தி மூவரால் கற்பழிப்பு

இறக்குவானையில் இருந்து 15 வயதுடைய சிறுமியை முச்சக்கர வண்டியில் கடத்திச் சென்று பாழடைந்த வீட்டிற்குள் வைத்து பலவந்தமான முறையில் மது கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இறக்குவானை பொலிஸ் பிரிவில் வசிக்கும் 24 வயதுடையவர் என்றும், அவர் ஒரு பிள்ளையின் தந்தை என்றும் கூறப்படுகின்றது.

சந்தேக நபர் சிறுமியை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திய பின்னர், அவரது இரண்டு நண்பர்களும் குறித்த சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக அப்பகுதியின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அழகிய 15 வயது சிறுமி கடத்தி மூவரால் கற்பழிப்பு

சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் ஏனைய இருவரை கைது செய்ய இறக்குவானை பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முதலில் கைது செய்யப்பட்ட 24 வயதுடைய சந்தேக நபருடன் குறித்த சிறுமி காதல் உறவில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அவளது காதலன் என்று கூறிக்கொண்ட 24 வயது இளைஞன், முதலில் சிறுமிக்கு பலவந்தமாக மது வழங்கிவிட்டு, பாலியல் பலாத்காரம் செய்ததாகவும்,
பின்னர் அவரது இரண்டு நண்பர்களும் அவளை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

No posts found.
யாழில் நீரில் மிதந்த வாலிபன் சடலம்
Posted in இலங்கை செய்திகள்

யாழில் நீரில் மிதந்த வாலிபன் சடலம்

யாழில் நீரில் மிதந்த வாலிபன் சடலம்

யாழ். அச்சுவேலி பொலிஸ் பிாிவிற்குட்பட்ட புத்துாா் – வாதரவத்தை பகுதியில் ஆடு மேய்க்க சென்றிருந்த இளைஞா் ஒருவா் சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றாா்.

மாலை ஆடு மேய்ப்பதற்காக சென்றிருந்த வாதரவத்தை – பொிய பொக்கணை பகுதியை சோ்ந்த செ.ராகுலன் (வயது25) என்ற இளைஞன் காலை ஆகியும் வீடு திரும்பவில்லை.

இந்நிலையில் இளைஞனின் தந்தை இளைஞனை தேடிச் சென்றிருந்தபோது நீாில் மூழ்கி அவா் உயிாிழந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வலிப்பு காரணமாக நீாில் மூழ்கி உயிாிழந்திருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தொியவந்துள்ளது.

சம்பவம் தொடா்பாக அச்சுவேலி பொலிஸாா் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனா்.

No posts found.
50 புதிய எரிபொருள் நிலையங்கள்
Posted in இலங்கை செய்திகள்

சீன எரிபொருள் மானியத்தை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க நடவடிக்கை

சீன எரிபொருள் மானியத்தை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க நடவடிக்கை

ஒரு ஹெக்டெயருக்கு குறைவான நிலத்தில் நெற்செய்கையில் ஈடுபடும் ஒவ்வொரு விவசாயிக்கும், சீனாவினால் வழங்கப்படும் எரிபொருள் மானியத்தை இலவசமாக வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.


ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, சீன அரசாங்கத்தினால் இலங்கைக்கு கிடைத்த 10.06 மில்லியன்

லீற்றர் எரிபொருள் மானியத்தில் இருந்து 6.98 மில்லியன் லீற்றர் எரிபொருளை இலங்கையின் நெற்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு நிவாரணமாக

சீன எரிபொருள் மானியத்தை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க நடவடிக்கை

வழங்க தீர்மானித்துள்ளதாக விவசாயம், வனசீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அத்துடன் இவ்வாறு கிடைக்கப்பெற்ற எரிபொருள் மானியத்தின் மிகுதியை, நாட்டின் மீன்பிடித்துறைக்கு வழங்கப்பட உள்ளது.

அந்தந்த மாவட்டங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான


எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூலம் இந்த எரிபொருள் விநியோகிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்..

No posts found.
பாடசாலை மாணவர்களுக்கு 1 கோப்பை கஞ்சி
Posted in இலங்கை செய்திகள்

சாதாரண தரம் உயர்தரத்தில் சித்தியடையாத மாணவர்களுக்கு தகவல் தொழில்நுட்பத் துறையை தொடர வாய்ப்புகள்

சாதாரண தரம் உயர்தரத்தில் சித்தியடையாத மாணவர்களுக்கு தகவல் தொழில்நுட்பத் துறையை தொடர வாய்ப்புகள்

அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் வழிகாட்டலின் பேரில் க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தரத்தில் சித்தியடையாத

மாணவர்களுக்கு தகவல் தொழில்நுட்பத் துறையை தொடருவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் சுட்டிக்காட்டியுள்ளார்.

தெஹியோவிற்ற படங்கல இளைஞர் பயிற்சி நிலையத்தில் ஆரம்பமான LIGHTING DIGITAL தகவல் தொழிநுட்ப பயிற்சி முகாமின் மாணவர்களுடனான

சந்திப்பின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்….

சாதாரண தரம் , உயர்தரத்தில் சித்தியடையாத மாணவர்களுக்கு தகவல் தொழில்நுட்பத் துறையை தொடர வாய்ப்புகள்

2023ஆம் ஆண்டு இலங்கையில் தகவல் தொழில்நுட்பத் துறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் ஆண்டாக இருக்கும். இதற்காக இளைஞர், யுவதிகளை இந்தத் துறையில் இணைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

தகவல் தொழிநுட்பத் துறையைச் சேர்ந்த பலர் நாட்டை விட்டு வெளியேறுகின்றனர். எனவே அந்த இடைவெளியை நிரப்புவது அவசியமானது. க.பொ.த சாதாரண தர அல்லது உயர்தரத்தில் தேர்ச்சியடையாத மாணவர்களை இத்துறைக்குள் உள்வாங்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

டிஜிட்டல் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப வேண்டும் என்பதே ஜனாதிபதியின் இலக்கு தகவல் தொழில்நுட்பத் துறையில் முழுமையான அறிவைக் கொண்ட நிபுணர்களை உருவாக்குவதன் ஊடாகவே இதனை வெற்றி கொள்ள முடியும் என்றும் அமைச்சர் கூறினார்.

மேலும், சாதாரண தரம் அல்லது உயர் தரம் என்பது வெறும் சான்றிதழ் மட்டுமே. ஆனால் அந்தத் தேர்வில் தேர்ச்சியடையாத பெரும்பாலான மாணவர்கள் தகவல் தொழில்நுட்பத் துறையில் அதிக திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர். நீங்கள் இந்தப் பரீட்சைகளில் தேர்ச்சியடையவில்லை என்றால், வாழ்க்கையில் நம்பிக்கையை இழக்க வேண்டிய அவசியமில்லை.

இன்று சர்வதேச மட்டத்தில் மென்பொருள் அமைப்புகளை உருவாக்குவதில் இலங்கை மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். தற்போது தகவல் தொழில்நுட்பத் துறையில் சுமார் 50,000 பேர் சுதந்திரமாகத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

2021 ஆம் ஆண்டில்,Free lance களாக பணிபுரியும் நபர்கள் நாட்டிற்கு 140 மில்லியன் டொலர் வருமானத்தை ஈட்டியுள்ளனர். அடுத்த வருடத்திற்குள் இதேபோன்ற இன்னுமொரு குழுவை உருவாக்குவது தொழில்நுட்ப அமைச்சின் மற்றுமொரு இலக்காகும் என்றும் இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

இந்ந நிகழ்வுக்கு கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுதத் மஞ்சுள உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

No posts found.
மிருகக்காட்சிசாலையை இலவசமாக பார்வையிட வாய்ப்பு
Posted in இலங்கை செய்திகள்

மிருகக்காட்சி சாலையை இலவசமாக பார்வையிட வாய்ப்பு

மிருகக்காட்சிசாலையை இலவசமாக பார்வையிட வாய்ப்பு

தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையை பாடசாலை மாணவர்கள் ,இன்று (23) முதல் நாளையும் (24), நாளை (25)மறுதினமும் இலவசமாக பார்வையிட முடியும்.

மிருகக்காட்சிசாலையால் பாடசாலை மாணவர்களுக்காக கல்வி கண்காட்சியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொழுதுபோக்கிற்கான நிகழ்ச்சிகளுடனான இந்த கண்காட்சி காலை 8.30 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் என்று மிருகக்காட்சிசாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மிருகக்காட்சிசாலையை இலவசமாக பார்வையிட வாய்ப்பு

இதேவேளை நாளை 24ம் திகதி 60 வயதுக்கு மேற்பட்ட சிரேஷ்ட பிரஜைகள் மிருகக்காட்சிசாலையை இலவசமாக பார்வையிடலாம். அவர்களுக்காகவும் பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, விலங்கியல் பூங்கா திணைக்களம் அறிவித்துள்ளது

இதேவேளை, நத்தார் தினத்தன்று மிருகக்காட்சிச்சாலைகளில் விசேட நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான மேலதிக தகவல்களை 071 8095 868 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ள முடியும்.

No posts found.
தொலைதூரங்களுக்கு பயணிகள் சென்று வருவதற்கான ஏற்பாடுகள் இதன் ஊடாக செய்யப்பட்டுள்ளன
Posted in இலங்கை செய்திகள்

பண்டிகையை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவை

பண்டிகையை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவை

இலங்கையில் நத்தார் மற்றும் புதுவருடத்தை முன்னிட்டு நாடெங்கும் விசேட போக்குவரத்து வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன .

பேரூந்து ரயில்கள் என்பன இவ்விதம் விசேட சேவைகளை ஆரம்பித்துள்ளன .

தொலை தூரங்களுக்கு பயணிகள் சென்று வருவதற்கான ஏற்பாடுகள் இதன் ஊடாக செய்யப்பட்டுள்ளன .

No posts found.
வவுனியா காட்டுக்குள் ஆண் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணம் ஆழியவளை கடற்கரையோரத்தில் சடலம்

யாழ்ப்பாணம் ஆழியவளை கடற்கரையோரத்தில் சடலம்

யாழ்ப்பாணம், வடமராட்சி – ஆழியவளைப் பகுதியிலுள்ள கடற்கரையோரத்தில் சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்று புதன்கிழமை (21) பகல் வேளை சடலம் கரையொதுங்கியது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சடலம் அடையாளம் காணப்படாத நிலையில் மருதங்கேணி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த சடலம் மீனவர்களுடையதா அல்லது விபத்துக்களில் ஏற்பட்ட உயிரிழப்பா என்பது தொடர்பில் சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.

No posts found.
வடக்கின் காணிகள் மற்றும் அரசியல் கைதிகளை விடுவிக்க ரணில் இணக்கம் -சுமந்திரன்
Posted in இலங்கை செய்திகள்

வடக்கின் காணிகள் மற்றும் அரசியல் கைதிகளை விடுவிக்க ரணில் இணக்கம் -சுமந்திரன்

வடக்கின் காணிகள் மற்றும் அரசியல் கைதிகளை விடுவிக்க ரணில் இணக்கம் -சுமந்திரன்

வடக்கின் காணிகள் மற்றும் அரசியல் கைதிகளை விடுவிக்க உடனடி நடவடிக்கை எடுப்பதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதிக்கும் தமிழ் கட்சித் தலைவர்களுக்கும் இடையில் நேற்று (21) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

தேசிய நல்லிணக்கத்தின் ஊடாக இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் பொது இணக்கப்பாட்டுக்கு வரும் நோக்கில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த 14 ஆம் திகதி சர்வகட்சி மாநாட்டை கூட்டியிருந்தார்.

ஜனாதிபதிக்கும் தமிழ் கட்சி பிரதிநிதிகளுக்கும் இடையிலான மற்றுமொரு கலந்துரையாடல் நேற்றிரவு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

No posts found.
இலங்கையில் நத்தாருக்கு மறுநாள் விடுமுறை
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் நத்தாருக்கு மறுநாள் விடுமுறை

இலங்கையில் நத்தாருக்கு மறுநாள் விடுமுறை

இலங்கையில் நத்தாருக்கு மறுநாள் விடுமுறை தினமாக அறிவிக்க பட்டுள்ளது .

இந்த விடுமுறை தின அறிவிப்பு மக்கள் மத்தியில் குசியை ஏற்படுத்தியுள்ளது .

இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இவ்வேளையில் பல விடுமுறைகளை அறிவித்து வந்தமை இங்கே குறிப்பிட தக்கது .

No posts found.
விக்டோரியா தமிழ்ச் சங்க தமிழ்ப் பாடசாலைகளின் வருடாந்த பரிசளிப்பு விழா
Posted in இலங்கை செய்திகள்

விக்டோரியா தமிழ்ச் சங்க தமிழ்ப் பாடசாலைகளின் வருடாந்த பரிசளிப்பு விழா

விக்டோரியா தமிழ்ச் சங்க தமிழ்ப் பாடசாலைகளின் வருடாந்த பரிசளிப்பு விழா

அவுஸ்திரேலியா மெல்பேர்னில் 40 வருடங்களுக்கு மேலாக புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு தமிழ்க் கல்வி பயிற்றுவிப்பதில் முன்னணி வகிக்கும்

விக்டோரியா தமிழ்ச் சங்க தமிழ்ப் பாடசாலைகளின் நரே வொரென் வளாகம் தனது வருடாந்த பரிசளிப்பு விழாவை Holt பாராளுமன்ற உறுப்பினர்

கசாண்ட்ரா பெர்னாண்டோ (Hon. MP Cassandra Fernando) தலைமையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (18/12/22)
கொண்டாடப்பட்டது.

ஒவ்வொரு வகுப்புகளிலும் பல பிரிவுகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு விருதுகள் வழங்கியதுடன், விக்டோரியா மாநிலத்தால் நடாத்தப்படும் VCE தமிழ் பரீட்சையில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு உயர் விருதும், நரே

வொரென் வளாகத்தில் அதிக மதிப்பெண்ணைப் பெற்ற மாணவி நிருத்திகா தவீசனுக்கு $500 பணப் பரிசும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.

கடந்த 25 ஆண்டுகளாக, விக்டோரியா மாநிலத்தால் VCE தமிழ் பரீட்சை நடாத்தப்படுகிறது. அண்மைக் காலங்களில் அதிகமான மாணவர்கள் VCE பரீட்சையில் தமிழை ஒரு பாடமாக தேர்வு செய்து வருகிறார்கள்.

விக்டோரியா தமிழ்ச் சங்க தமிழ்ப் பாடசாலைகளின் வருடாந்த பரிசளிப்பு விழா

இனி வரும் காலங்களில், மேலும் பல மாணவர்கள் தமிழை VCE பரீட்சையில் ஒரு பாடமாக தெரிவு செய்வதை ஊக்குவிப்பதற்காக நரேவொரென் வளாகத்தில் வெட்டு புள்ளி 40க்கு மேல் பெறும் மாணவர்களுக்கு $1000 பணப் பரிசு வழங்கிக் கௌரவிக்க பெற்றோர் சங்கம் எண்ணியுள்ளது.

மேலும், பரிசளிப்பு விழாவின் இறுதியில், அவுஸ்திரேலியா மண்ணில் தமிழ் சமூகத்தின் கலை, கலாச்சார,


சமய வளர்ச்சிக்கும், தமிழ் தேசியத்திற்கும், தமிழ்க்கல்வி, ஊடகத்துறையின் வளர்ச்சிக்கும், தாயக உதவித்திட்டங்களுக்கும் அயராது 1977ம்
ஆண்டுமுதல் அவர் மறையும் 2012ம் ஆண்டு வரை உழைத்த அமரர் சோமா சோமசுந்தரம் அவர்களுக்கு Narre Warren VTA


தமிழ்ப் பாடசாலை சமூகத்தினால் சாதனைத் தமிழன் விருதினை Holt மாண்புமிகு பாராளுமன்ற உறுப்பினர் கசாண்ட்ரா பெர்னாண்டோ


(Hon. MP Cassandra Fernando) அவர்களினால், அன்னாரின் துணைவியார் திருமதி ரஞ்சி சோமசுந்தரம் அவர்களுக்கு, பல மக்கள் முன்னிலையில் VTCC கற்பகதரு
மண்டபத்தில் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது

No posts found.
மலையகம் 200 தலைப்பில் இலங்கைக்கு இந்திய தமிழர் வருகையை நினைவுறுத்தும் நிகழ்வு பெப் 26ம் நாள் நடைபெறும் தமுகூ தலைவர் மனோ கணேசன்
Posted in இலங்கை செய்திகள்

மலையகம் 200 தலைப்பில் இலங்கைக்கு இந்திய தமிழர் வருகையை நினைவுறுத்தும் நிகழ்வு பெப் 26ம் நாள் நடைபெறும்
தமுகூ தலைவர் மனோ கணேசன்

மலையகம் 200 தலைப்பில் இலங்கைக்கு இந்திய தமிழர் வருகையை நினைவுறுத்தும் நிகழ்வு பெப் 26ம் நாள் நடைபெறும்
தமுகூ தலைவர் மனோ கணேசன்

“மலையகம் – 200” என்ற தலைப்பில், இலங்கைக்கு வந்த முதலாம் தலைமுறை இந்திய வம்சாவளி தமிழர்களின் வருகையை நினைவுறுத்தும் நிகழ்வை பெப் 26ம் நாள் ஞாயிறன்று தமிழ் முற்போக்கு கூட்டணி நடத்தும்.

இதில் கலந்துக்கொள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் பல்வேறு கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது, என தமிழ் முற்போக்கு கூட்டணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

மனோ எம்பி இதுபற்றி மேலும் கூறியுள்ளதாவது,

மலையகம் 200 தலைப்பில் இலங்கைக்கு இந்திய தமிழர் வருகையை நினைவுறுத்தும் நிகழ்வு பெப் 26ம் நாள் நடைபெறும் தமுகூ தலைவர் மனோ கணேசன்

இலங்கை இந்திய மலையக தமிழர், இலங்கைக்கு வந்த 1823ம் ஆண்டிலிருந்து கடந்த 200 வருடங்களாக இலங்கையின் தேசிய பொருளாதாரத்துக்கு வழங்கி

வரும் பங்களிப்பை ஆராய்வு செய்து அங்கீகரிக்க, அமைச்சரவை பத்திரம் மூலம் இலங்கை அரசு அதிகாரபூர்வமாக தீர்மானித்துள்ளமையை நாம் வரவேற்கின்றோம்.


அதேவேளை இந்திய வம்சாவளி மலையக தமிழர் ஜனத்தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் இந்நாட்டில் மிகவும் பின்தங்கிய பிரிவினராக, வறுமை, உணவின்மை, காணியுரிமை இன்மை, வீட்டுரிமை இன்மை, கல்வியுரிமை இன்மைஆகிய

கொடுமைகளை எதிர்கொண்டு, இலங்கை தேசிய தளத்தில் முழுமையான பிரஜைகளாக இல்லாமல், பெருந்தோட்டங்களிலும், தொழில் தேடி மாநகரங்களிலும், வாழ்கிறார்கள்.

இந்த மக்களின் பின்தங்கிய குறைவளர்ச்சியை ஆய்வு செய்து அவர்கள் இதுவரை காலமும்


இழந்த வளர்ச்சிகளை எட்டிபிடிக்கும் நோக்கில், அரசியலமைப்பு ஏற்றுக்கொண்டுள்ள,
மீளுறுதி (affirmative action) நடவடிக்கைகளை அரசாங்கம் எதிர்வரும் 200வது ஆண்டு முதல் முன்னெடுக்க ஆரம்பிக்க வேண்டும் என நாம் அரசாங்கத்தை கோருகிறோம்.

No posts found.
கொக்குத்தொடுவாய் காணிகளை அபகரிக்கும் முயற்சி மக்கள் எதிர்ப்பு
Posted in இலங்கை செய்திகள்

கொக்குத்தொடுவாய் காணிகளை அபகரிக்கும் முயற்சி மக்கள் எதிர்ப்பு

கொக்குத்தொடுவாய் காணிகளை அபகரிக்கும் முயற்சி மக்கள் எதிர்ப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் மத்தி எனப்படும் தமிழ் மக்களுக்குச் சொந்தமான பூர்வீக காணிகளை, வனஜீவராசிகள் திணைக்களத்தின் ஆதரவுடன், வெலிஓயா பகுதியில் உள்ள நில

அளவைத்திணைக்களத்தினர் குறித்த பகுதிக்கு வந்து, எல்லைக் கற்களை நாட்டியுள்ளார்கள். இதனை மக்கள் தடுத்து நிறுத்தியுள்ளதுடன் நாட்டப்பட்ட எல்லைக்கற்களையும் அகற்றவைத்துள்ளார்கள்.

கொக்குத்தொடுவாய் பிரதேசத்துக்கு உட்பட்ட கோட்டைக்கேணி பிள்ளையார் கோவில், அம்பட்டன் வாய்க்கால், வெள்ளைக்கல்லடி, குஞ்சுக்கால்வெளி,

சிவந்தா முறிப்பு போன்ற பகுதிகளிலேயே மேற்படி எல்லை கற்கள் நாட்டப்பட்டிருந்தன.


இந்தச் சம்பவம் குறித்து மக்கள், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் து. ரவிகரனுக்கு முறையிட்டதுடன் அரச திணைக்கள அதிகாரிகளுக்கும் தெரியப்படுத்தினர்.

இன்னிலையில், திங்கட்கிழமை (19) கரைதுறைப்பற்று பிரதேச செயக உத்தியோகத்தர்கள், காணிப்பகுதி உத்தியோகத்தர்கள், கிராம சேவையாளர்

ஆகியோர் சம்பவ இடத்துக்கு பிரசன்னமாகிய நிலையில், குறித்த பகுதிக்கு வனஜீவராசிகள் திணைக்களத்தின் அதிகாரிகளும் நில அளவைத் திணைக்களத்தினரும் வருகை தந்துள்ளார்கள்.

இந்த எல்லைக்கற்கள் போடப்பட்ட இடங்கள் மக்களின் உறுதிக்காணி என்பதை மக்கள் மற்றும்


கமக்கார அமைப்புகள் தெளிவு படுத்தியதுடன் அவர்கள் போட்ட கற்களையும் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

No posts found.
சதோச நிறுவனத்தினால் 5 பொருட்களின் விலைகள் குறைப்பு
Posted in இலங்கை செய்திகள்

சதோச நிறுவனத்தினால் 5 பொருட்களின் விலைகள் குறைப்பு

சதோச நிறுவனத்தினால் 5 பொருட்களின் விலைகள் குறைப்பு

லங்கா சதோச நிறுவனம் இன்று (21) முதல் 5 பொருட்களின் விலையைக் குறைக்கத் தீர்மானித்துள்ளது.

நத்தார் தினத்தை முன்னிட்டு வாடிக்கையாளர்களுக்கு சலுகைகளை வழங்கும் நோக்குடன் பெரிய வெங்காயம், சிகப்பு பருப்பு, டின்மீன் (உள்நாட்டு),

மிளகாய் மற்றும் நெத்தலி போன்றவற்றின் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லங்கா சதொச வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய ஒருகிலோ பெரிய வெங்காயம் 158 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

ஒரு கிலோ பருப்பின் புதிய விலை 378 ரூபாவாகும். ஒரு கிலோ நெத்தலியின் புதியவிலை ஆயிரத்து 100 ரூபா. 425 கிராம் எடைகொண்ட டின்மீனின் புதிய விலை ஆயிரத்து 482 ரூபாவாகும்.

No posts found.
வடமாகாண மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தொழிற்பயிற்சி நிலையம்
Posted in இலங்கை செய்திகள்

வடமாகாண மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தொழிற்பயிற்சி நிலையம்

வடமாகாண மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தொழிற்பயிற்சி நிலையம்

வடமாகாணத்தில் உள்ள மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான தொழிற்பயிற்சி நிலையம் கிளிநொச்சி மாவட்டத்தில் நேற்று (20) திறக்கப்பட்டுள்ளது.

மகளீர் சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூகசேவை அமைச்சின் சமூக சேவைகள் திணைக்களத்தினால் இந்த தொழிற்பயிற்சி நிலையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

முதல் தடவையாக 50 மாணவர்கள் பயிற்சி நெறிக்கு இணைத்துக் கொள்ளப்பட்டதோடு தையல் மற்றும் தகவல் தொழில்நுட்ப பயிற்சிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

வடமாகாண மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தொழிற்பயிற்சி நிலையம்

இப் பயிற்சி நிலையம் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான இலவச வதிவிட பயற்சியினை வழங்கும் நிறுவனமாக தொழிற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்வரன், மகளீர் சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக சேவைகள் அமைச்சின் மேலதிக செயலாளர்
திரு.ரத்நாயக்க ஆகியோர் கலந்துகொண்டு பயிற்சி நிலையத்தை திறந்துவைத்தமை குறிப்பிடத்தக்கது.

No posts found.
கூட்டமைப்பு நிலைப்பாட்டுக்கு ஆதரவு அரசியலமைப்பு பேரவை நியமனம் தொடர்பில் மனோ கணேசன்
Posted in இலங்கை செய்திகள்

கூட்டமைப்பு நிலைப்பாட்டுக்கு ஆதரவு
அரசியலமைப்பு பேரவை நியமனம் தொடர்பில் மனோ கணேசன்

கூட்டமைப்பு நிலைப்பாட்டுக்கு ஆதரவு
அரசியலமைப்பு பேரவை நியமனம் தொடர்பில் மனோ கணேசன்

அரசியலமைப்பு பேரவையில் நியமிக்கப்பட உள்ள ஏழு எம்பிக்களுக்கான நியமனங்களில், ஐந்து சிங்கள எம்பிக்களும், ஒரு முஸ்லிம் எம்பியும் இப்போது பெயரிடப்பட்டுள்ளார்கள்.

இறுதி ஏழாவது எம்பியாக ஒரு தமிழ் எம்பி இருக்க வேண்டும் என்பது மிக, மிக நியாயமான ஒரு எதிர்பார்ப்பு. ஆனால், இதையும்கூட தட்டி பறிக்க உதயகம்மன்பில, விமல் வீரவன்ச ஆகியோரின் “உத்தர சபை” கட்சி முயல்கிறது.

அந்த நியமனம் உதய கம்மன்பில எம்பிக்கு வழங்க வேண்டும் என அந்த கட்சி பிடிவாதம் பிடிக்கிறது. இது உச்சக்கட்ட பெரும்பான்மைவாதம். திருத்த முடியாத திமிர்வாதம்.

இதை எதிர்த்து முறியடிப்பதில், தமிழ் தேசிய கூட்டமைப்புடன், தமிழ் முற்போக்கு கூட்டணி, இரட்டை குழல் துப்பாக்கியாக இணைந்து செயற்படும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி தெரிவித்தார்.

கூட்டமைப்பு நிலைப்பாட்டுக்கு ஆதரவு அரசியலமைப்பு பேரவை நியமனம் தொடர்பில் மனோ கணேசன்

அரசியலமைப்பு பேரவை நியமனங்களில் ஏற்பட்டுள்ள இழுபறி நிலைமை தொடர்பில் மனோ எம்பி மேலும் கூறியதாவது,

அரசியலமைப்பு பேரவையில் சட்டப்படி பத்து உறுப்பினர்கள் இடம் பெறுவார்கள். அதில் ஏழு எம்பிக்களும், மூன்று சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் இடம் பெற வேண்டும்.

இந்த எம்பிகளில், நான்கு சிங்கள எம்பிகளும், தலா ஒரு எம்பியாக மூன்று எம்பீக்கள், வடகிழக்கு தமிழர், முஸ்லிம்கள், இலங்கை இந்திய தமிழர் ஆகியோரை பிரதிநிதித்துவம் செய்ய வேண்டும். இதுவே நியாயமான நடவடிக்கை. ஆனால், இது நடைபெறவில்லை.

சபாநாயகர், பிரதமர், எதிர்கட்சி தலைவர் ஆகிய மூவரும் தம் பதவிநிலை காரணமாக அரசியலமைப்பு பேரவையில் இடம் பெறுகின்றார்கள்.

ஜனாதிபதியும், எதிர்கட்சி தலைவரும் தம் பிரதிநிதிகளை நியமிக்க வேண்டும். இதன்படி ரணில் விக்கிரமசிங்க, தமது பிரதிநிதியாக எம்பி நிமல் சிறிபால சில்வாவையும், சஜித் பிரேமதாச தமது பிரதிநிதியாக எம்பி கபீர் ஹசீமையும் நியமித்துள்ளனர்.

கூட்டமைப்பு நிலைப்பாட்டுக்கு ஆதரவு அரசியலமைப்பு பேரவை நியமனம் தொடர்பில் மனோ கணேசன்

அரசாங்கம், பிரதான எதிர்கட்சி ஆகிய கட்சிகளை சாராத சிறுகட்சிகளின் பிரதிநிதியாக ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என்பது சட்டம்.

அதன்படி, எம்பி சித்தார்தனின் பெயரை தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரேரித்துள்ளது. இப்போது இதுவே பிரச்சினையாக மாறியுள்ளது.

மொட்டு கூட்டணியில் தெரிவாகி விட்டு, அரசாங்கங்கத்தின் எல்லா தவறுகளுக்கும் காரணமாகி விட்டு, இப்போது எதிர்கட்சி பக்கத்தில் வந்து உட்கார்ந்துள்ள உதயகம்மன்பில, விமல் வீரவன்ச கும்பல், இதையும் தட்டி பறிக்க பார்க்கிறது.

உண்மையில், இந்த விவகாரத்தில் மலையக இந்திய வம்சாவளி தமிழரே முதலில், அநீதிக்கு உள்ளாக்கப்பட்டார்கள்.

ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரிடம், அவர்கள் நியமிக்கும் எம்பியாக இந்திய வம்சாவளி தமிழரை பிரதிநித்துவம் செய்யும் ஒரு எம்பியை நியமிக்கும்படி, நானும், எம்பி பழனி திகாம்பரமும் கோரிக்கை விடுத்தோம்.

தான் ஏற்கனவே, எம்பி நிமல் சிறிபால சில்வாவை பெயரிட்டு விட்டதாகவும், முதலிலேயே கூறி இருந்தால், பரிசீலிக்க இடமிருந்தது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எம்மிடம் கூறினார்.

தமிழ் முற்போக்கு கூட்டணி எம்பி ஒருவரை தமது பிரதிநிதியாக நியமிக்க முதலில் எம்மிடம் உடன்பட, எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, பிறகு தமது கட்சியில் இருந்து, எம்பி கபீர் ஹீசிமை நியமிக்க வேண்டிய கட்டாயம் தனக்கு உள்ளதாக கூறினார்.

எம்பி கபீர் ஹீசிம் சகோதர முஸ்லிம் எம்பி என்பதால் அதை நாம் புரிந்துக்கொண்டோம்.

இந்நிலையில், மூன்று சிவில் சமூக செயற்பாட்டாளர்களில் ஒருவர், கட்டாயம் மலையக இந்திய வம்சாவளி தமிழராக இருக்க வேண்டும் என்ற

கோரிக்கையும், அதற்கான பெயரையும் நாம், தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பாக, பிரதமர், எதிர்கட்சி தலைவர்ஆகியோரிடம் சிபாரிசு செய்து வழங்கியுள்ளோம்.

இத்தகைய பின்னணியில், இறுதியான ஒரேயொரு எம்பி நியமனத்தில்,
எம்பி சித்தார்தனின் பெயரை தமிழ் தேசிய கூட்டமைப்பு சிபாரிசு செய்துள்ளது.


அது சட்டப்படியும், அரசியல் நியாயப்படியும் சரியானது. ஆகவே அதை நாமும் ஆதரிக்கிறோம்.


இதையே இன்று பிரச்சினைக்கு உள்ளாக்கி, அதையும் தட்டிப்பறித்து, ஈழத்தமிழ்,மலையக தமிழ் என்ற பேதமில்லாமல் ஒரு தமிழ் எம்பிகூட அரசியலமைப்பு பேரவையில் இடம்பெற முடியாத நிலைமையை இனவாதிகள் ஏற்படுத்த முயல்கிறார்கள்.

No posts found.
வவுனியா காட்டுக்குள் ஆண் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

விபத்தில் மூன்று பெண்கள் பலி

விபத்தில் மூன்று பெண்கள் பலி

நாரம்மல – பெந்திகமுவ சந்தியில் இடம்பெற்ற விபத்தில் மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளனர்.

நாரம்மலையில் இருந்து குருநாகல் நோக்கி பயணித்த சிற்றூர்தியொன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து, பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த பெண்கள் மூவரை மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

சம்பவத்தில் பலத்த காயமடைந்த இருவர் நாரம்மல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதுடன் மற்றைய பெண் மேலதிக சிகிச்சைகளுக்காக
குருணாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

No posts found.
8 பில்லியனை வழங்கியது ஆசிய அபிவிருத்தி வங்கி
Posted in இலங்கை செய்திகள்

8 பில்லியனை வழங்கியது ஆசிய அபிவிருத்தி வங்கி

8 பில்லியனை வழங்கியது ஆசிய அபிவிருத்தி வங்கி

ஜனாதிபதியின் வேண்டுகோளின் பேரில் 8 பில்லியன் ரூபாவினை ஆசிய அபிவிருத்தி வங்கி இலங்கைக்கு வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, ஒரு ஹெக்டேருக்கு குறைவாக சாகுபடி செய்யும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 10,000 ரூபாவும் மற்றும் ஒரு ஹெக்டேருக்கு மேல் சாகுபடி செய்யும் குடும்பங்களுக்கு 20,000 ரூபாவும் வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

அடுத்த வாரம் முதல் விவசாயிகளின் கணக்கில் பணம் வைப்பு செய்யப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

No posts found.
வெளிநாட்டு முதலீட்டாளர்களை வரவழைப்பதில் அரசு கவனம் செலுத்தியுள்ளது
Posted in இலங்கை செய்திகள்

வெளிநாட்டு முதலீட்டாளர்களை வரவழைப்பதில் அரசு கவனம் செலுத்தியுள்ளது

வெளிநாட்டு முதலீட்டாளர்களை வரவழைப்பதில் அரசு கவனம் செலுத்தியுள்ளது

காலநிலை மாற்றத்தைக் குறைக்கும் திட்டங்களில் ஒன்றாக அதனை தணிக்கும் வகையிலான செயற்பாடுகளை முன்னெடுக்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்களை இலங்கைக்கு வரவழைப்பதில் அரசு கவனம் செலுத்தியுள்ளது.

மீள் புதுப்பிக்கத்தக்க சக்தியின் 70 சதவீத இலக்கை அண்மித்தல், 2050இற்குள் காபன் மத்திய நிலையை (Carbon Neutrality) எட்டுதல், காபன் வெளியேற்ற

அனுமதி பத்திரத்துக்கு பதிலாக சர்வதேச சந்தையைக் கண்டறிவது ஆகிய மூன்று இலக்குகளையும் அடைவதற்காக வெளிநாட்டு முதலீட்டாளர்களை வரவழைப்பதே அரசின் திட்டம் ஆகும்.

இது தொடர்பான கலந்துரையாடல் நேற்று (19) ஜனாதிபதி அலுவலகத்தில் காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன்

விஜயவர்தன மற்றும் சர்வதேச காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் எரிக் சொல்ஹெய்ம் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

எதிர்கால எரிசக்தி ஆதாரங்கள், கார்பன் வெளியேற்றம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் ஹைட்ரஜன் போன்றவற்றின் மீதான தனது சர்வதேச அறிவை

சொல்ஹெய்ம் இந்தக் கலந்துரையாடலுக்கு வந்திருந்த அதிகாரிகளுடன் பகிர்ந்து கொண்டார்.

புதுப்பிக்கத்தக்க சக்தி தொடர்பில் கருத்து தெரிவித்த எரிக் சொல்ஹெய்ம், இந்தியா, சீனா போன்ற நாடுகள் இதன்மூலம் அதிக நன்மைகளை

வெளிநாட்டு முதலீட்டாளர்களை வரவழைப்பதில் அரசு கவனம் செலுத்தியுள்ளது

பெற்றிருப்பதாகவும் அதே நன்மைகளை இலங்கையாலும் பெற முடியும் என்றும் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், நாட்டில் ஏற்பட்டுள்ள அனைத்து பிரச்சினைகளையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தீர்த்து வைப்பார் என தாம் நம்புவதாகவும் சொல்ஹெய்ம் மேலும் சுட்டிக்காட்டினார்.

இங்கு உரையாற்றிய காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜயவர்தன, புதுப்பிக்கத்தக்க சக்தி மிக

வேகமாக வளர்ந்து வரும் ஒரு துறை என்றும், ஐரோப்பா, அமெரிக்கா, கனடா உள்ளிட்ட ஏனைய நாடுகளில் இத்துறை சார்ந்த முதலீட்டாளர்கள் அதிகளவில் இருப்பதாகவும் தெரிவித்தார்.

எனவே இலங்கை மக்கள் பயன்பெறும் வகையில் அவ்வாறான முதலீடுகள் நாட்டுக்குள் கொண்டுவரப்பட வேண்டுமென சுட்டிக்காட்டிய ருவன்

விஜயவர்தன, கொள்கைகளை உருவாக்கும் போது இது தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டுமெனவும் தெரிவித்தார்.

மேலும், புதுப்பிக்கத்தக்க சக்தி தொடர்பான மாநாடு ஒன்றை எதிர்காலத்தில் நடத்தவிருப்பதாகவும் அதன் ஊடாக முதலீட்டாளர்களை எமது நாட்டுக்கு ஈர்க்க முடியும் என நம்புவதாகவும் ருவன் விஜயவர்தன மேலும் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில், சுற்றாடல் அமைச்சின் செயலாளர் அனில் ஜாசிங்க, காலநிலை மாற்றம் தொடர்பான அலுவலக பணிப்பாளர் குமுதுனி வித்யாலங்கார, உதவிப் பணிப்பாளர் ஆர்.எம்.ஆர்.டி.வீரசூரிய, மின்வலு மற்றும் எரிசக்தி

அமைச்சின் பணிப்பாளர் பன்டு டி சில்வா, இலங்கை மின்சார சபையின் பிரதிப் பொது முகாமையாளர் பொறியியலாளர் எம்.எல். வீரசிங்க, பிரதம பொறியியலாளர் வஜிர விஜேகோன்,பிரதம பொறியியலாளர் கே. ராம்ஜி, சஜனா சூரியராச்சி, ஹஷான் ஜெயகொடி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

No posts found.