முள்ளிவாய்க்காலில் துப்பாக்கிகள் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

முள்ளிவாய்க்காலில் துப்பாக்கிகள் மீட்பு

முள்ளிவாய்க்காலில் துப்பாக்கிகள் மீட்பு

முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளிவாய்க்கால் பகுதியில் தனியார் காணி ஒன்றில் கிணற்றினை தோண்டும் போது கிணற்றில் இருந்து துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் மக்கள் பாதுகாப்பு தரப்பினருக்கு வழங்கிய தகவலையடுத்து
குறித்த பகுதிக்கு சென்ற சிறப்பு அதிரடிப்படையினர் துப்பாக்கிகளை மீட்டு முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்கள்.

குறிப்பாக பழுதடைந்த துருப்பிடித்த நிலையில் இருந்த ஏ.கே துப்பாக்கி ஒன்றும் கைத்துப்பாக்கி ஒன்றுமே மீட்கப்பட்டுள்ளது.

இதனை நீதிமன்றில் சமர்ப்பிக்கும் நடவடிக்கையில் முல்லைத்தீவு பொலிஸார் ஈடுபட்டுள்ளார்கள்.

No posts found.
கொழும்பு குண்டு வெடிப்பு மைத்திரி உள்ளிட்டவர்கள் இழப்பீடு வழங்க உத்தரவு
Posted in இலங்கை செய்திகள்

சிறைக்கு செல்லும் பீதியில் மைத்திரி

சிறைக்கு செல்லும் பீதியில் மைத்திரி

உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உயர் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி 10 கோடி ரூபா இழப்பீட்டை செலுத்த தவறினால் நான் சிறைக்கு செல்ல நேரிடும் என்று முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இதனால், தமக்கு நெருக்கமான மக்கள் மற்றும் அன்புக்குரியவர்களிடமிருந்து பணத்தை திரட்டுவதற்கு நிதியமொன்றை ஸ்தாபிக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

சிறைக்கு செல்லும் பீதியில் மைத்திரி

இவ்வளவு பாரிய தொகையை நட்டஈடாக செலுத்தும் திறன் தன்னிடம் இல்லாததால், மக்களிடம் பணம் வசூலிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.

என்னிடம் சொந்தமாக உந்துருளி கூட இல்லை. நிதியத்தை நிறுவுவதற்காக குழுவொன்றை அமைப்பேன். நாடு முழுவதிலும் இருந்து பணம் சேகரிக்க வேண்டும்.

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்கத் தவறினால், நான் சிறைக்கு செல்ல நேரிடும்” என்று அவர் கூறினார்.

மூன்று ஏக்கர் நிலத்தில் மாம்பழம் பயிரிட்டேன். எனக்கு மாம்பழ செய்கையை தவிர வேறு வருமான வழியில்லை என்றார்.

இந்தியாவில் 40 கோட்ஸி மோசே புலிகள் திருட்டு
Posted in இலங்கை செய்திகள்

புலிகளை பிளவுபடுத்தவே உதவிகளைச் செய்தோம்

புலிகளை பிளவுபடுத்தவே உதவிகளைச் செய்தோம்

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் மாத்தயா, யோகியை பிளவுபட வைக்கவே எனது தந்தையின் காலத்தில் சில உதவிகள் செய்யப்பட்டன என எதிர்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (19) இடம்பெற்ற தேர்தல் செலவீனத்தை ஒழுங்குபடுத்தல் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றிய எதிர்க்கட்சித்

தலைவர் சஜித் பிரேமதாச அதில் ஒரு கட்டத்தில் தன்னால் பாடசாலைக்குளுக்கு வழங்கப்பட்டுவரும் பஸ்கள் மற்றும் உதவிகள் தொடர்பில் பட்டியலிட்டார் .

இதன்போது குறுக்கிட்ட அரச தரப்பு பிரதம கொறடாவும் அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க, உங்கள் தந்தையான பிரேமதாசாவின் ஆட்சிக்காலத்தில் விடுதலைப்புலிகளுக்கு திறைசேரி ஊடாக காசோலைகள்

புலிகளை பிளவுபடுத்தவே உதவிகளைச் செய்தோம்

வழங்கப்பட்டன.அதற்கு நன்றிக்கடனாகவே தற்போது வெளிநாடுகளில் உள்ள விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் உங்களுக்கு நிதி உதவி அளிப்பதாகவும்

அதனை வைத்துத்தான் நீங்கள் இவ்வாறு பஸ்களை அன்பளிப்பு செய்வதாகவும் மக்கள் பேசிக்கொள்கின்றனர் என்றார்.

இதற்கு எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச பதிலளிக்கையிலேயே, இரண்டாம் உலக மகா யுத்தத்தில் பெயர்ட் பவர் என்பவர் ஹிட்லரின்

படைகளுக்கும் முசோலினியின் படைகளுக்கும் ஆயுதங்களை வழங்கி உதவினார். இது இரு அணியில் உள்ளவர்களையும் பிளவு படுத்தும் தந்திரம்.

அதேபோன்றுதான் விடுதலைப்புலிகள் அமைப்பில் அதன் தலைவர் பிரபாகரனோடு மாத்தயாவும் யோகியும் முரண்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் சில உதவிகளை வழங்கி அவர்களை மேலும் பிளவடைய வைக்கப்பட்டது.

விடுதலைப்புலிகளுக்கு எனது தந்தை காசு கொடுத்தது என்றால் 2005
ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்‌ஷவும் விடுதலைப்புலிகளுக்கு காசு கொடுத்துத்தான் தேர்தலில் வெற்றி பெற்றார் என்றார்.

No posts found.
கொழும்பின் ஒரு பகுதி முடங்கியது
Posted in இலங்கை செய்திகள்

கொழும்பின் ஒரு பகுதி முடங்கியது

கொழும்பின் ஒரு பகுதி முடங்கியது

கொழும்பு கோட்டை லோட்டஸ் சுற்றுவட்டத்திலிருந்து காலி முகத்திடல் வரையான வீதி பொலிஸாரால் முற்றாக மூடப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக இவ்வாறு வீதி மூடப்பட்டுள்ளது.

குறித்த வீதியை பயன்படுத்தும் சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு சுதந்திர சதுக்கம் வீதியும் பொலிஸாரால் முற்றாக மூடப்பட்டுள்ளது.

No posts found.
இந்தியா வெளிவிவகார அமைச்சர் இலங்கை வந்தார்
Posted in இலங்கை செய்திகள்

இந்தியா வெளிவிவகார அமைச்சர் இலங்கை வந்தார்

இந்தியா வெளிவிவகார அமைச்சர் இலங்கை வந்தார்

இந்தியா வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் இலங்கை வந்தடைந்தார் .
இலக்கை வந்த இவருடன் ரணில் விக்கிரமகிங்கா பேச்சில் ஈடுபடுவர்,
என எதிரி பார்க்க படுகிறது .

இலங்கைக்கு நிதி கையளிப்பு மற்றும் ,
பொருளாதார பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பில் ,
பேச்சில் ஈடுபடுவார் என எதிர் பார்க்க படுகிறது .

No posts found.
யாழில் குளத்தில் இருந்து பெண் சடலமாக மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

யாழில் குளத்தில் இருந்து பெண் சடலமாக மீட்பு

யாழில் குளத்தில் இருந்து பெண் சடலமாக மீட்பு

யாழ்ப்பாணம் நாயன்மார் கட்டு பகுதியில் உள்ள குளம் ஒன்றில் இருந்து,
பெண் ஒருவர் சடலமாக மீட்க பட்டுள்ளார் .

இவ்வாறு சடலமாக மீட்க பட்டவர் ,
அறுபது வயதுடைய அதே பகுதியை சேர்ந்த பெண் என தெரிவிக்க பட்டுள்ளது .

இவர் கொலை செய்யப் பட்டாரா அல்லது ,
தற்கொலை செய்யப் பட்டாரா என்பது ,
தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

No posts found.
ஆற்றில் மிதந்த ஆணின் சடலம் இலங்கையில் எகிறும் கொலைகள்
Posted in இலங்கை செய்திகள்

சிறுமி மற்றும் இளைஞன் சடலமாக மீட்பு

சிறுமி மற்றும் இளைஞன் சடலமாக மீட்பு

கலேவெல, அடவல பிரதேசத்தில் உள்ள பாழடைந்த வீடொன்றின் இருந்து சிறுமி மற்றும் இளைஞனின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கலேவெல பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுமிக்கு 14 வயது என்றும், இளைஞனுக்கு 20 வயது என்றும் பொலிஸார் கூறியுள்ளனர்.

இளைஞனுக்கும் சிறுமிக்கும் இடையே காதல் தொடர்பு இருந்ததாக விசாரணைகளில் தகவல் வெளியாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

நன்னடத்தையின் பின்னர் சிறுமி சில நாட்களுக்கு முன்னதாக தாயிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

No posts found.
காதலியை ஏமாற்றி குற்றி கொன்ற காதலன்
Posted in இலங்கை செய்திகள்

காதலியை ஏமாற்றி குற்றி கொன்ற காதலன்

காதலியை ஏமாற்றி குற்றி கொன்ற காதலன்

விசேடமாக ஒன்றை கூறவேண்டும். உங்களை ஆச்சரியப்படுத்தும் (சைப்ரைஸ்) வகையில் ஒன்றை செய்ய​ப்போகின்றேன். எனக் கூறியே அவளை நான், குதிரை பந்தைய திடலுக்கு அழைத்துச் சென்றேன்.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் 3ஆம் வருட மாணவியொருவர், செவ்வாய்க்கிழமை (17) நண்பகல், கத்திக் குத்துக்கு இலக்காகி உயிரிழந்தார்.

கொழும்பு – 07, குதிரைப் பந்தய திடலில் இரத்த வெள்ளத்தில் கிடந்த நிலையில் கறுவாத்தோட்ட பொலிஸாரினால் சடலம் மீட்கப்பட்டதுடன், அவருடைய காதலனும் கொலன்னாவை, வெல்லம்பிட்டிய பிரதேசத்தில் வைத்து, அன்றைய தினமே கைது செய்யப்பட்டார்.

நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் சந்தேகநபரான காதலன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவர், பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலத்திலே​யே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து வாக்குமூலமளித்த அவர், அவ்வாறு அழைத்துவரும் போது இருவரும் பேசிக்கொண்டே வந்தோம். ஓர் இடத்தில் அமர்ந்து பேசி​னோம். மற்றுமோர் இடத்துக்குச் சென்றோம். அங்கு வைத்தும் இருவரும் பேசிக்கொண்டிருந்தோம்.

“சூட்டி” என்னை மனநோயாளி என கூறிக்கொண்டே இருப்பாள். அதனால் நான், கடும் வேதனையில் இருந்தேன். எனக்கு கிடைக்காத அவள், வேறு எவருக்கும் சொந்தமில்லை. அவளை கொல்லவேண்டும் என நினைத்தேன்.

நான், சுமார் ஒரு மாதமாக திட்டமிட்டேன். உன்னிடம் அவசரமாக ஒன்றைச் சொல்லவேண்டும் எனக்கூறி, குதிரை பந்தைய திடலுக்கு அழைத்துச் சென்றேன்.

இந்த சம்பவத்தில் மரணமடைந்த பெண், கொழும்பு பல்கலைக்கழகத்தில் பிரயோக விஞ்ஞான பீடத்தில் மூன்றாம் வருடம் கல்விக்கற்கும் சத்துரி ஹங்சிஹா மல்லாகாராச்சி (வயது 24) என்பவராவார்.

அந்த பீடத்திலேயே கல்விப் பயிலும்பசிது சந்துரங்க (வயது 24) என்ற இளைஞனே, பொலிஸாரிடம் இவ்வாறு வாக்குமூலம் அளித்துள்ளார்.

நான், 2019 ஆம் ஆண்டு முதல் மனநலநோய் சம்பந்தமாக மருந்து குடித்துவருகின்றேன். சூட்டியுடன் 2020 நண்பனானேன். அதன் பின்னர் காதலர்கள் ஆனோம். நான் மனநலநோய்க்கு மருந்து எடுப்பது அவளுக்கு தெரியாது. நானும் சொல்லவில்லை.

எனினும், கடந்த 4 அல்லது 5 மாதங்களுக்கு முன்னர். அதனை அவள் தெரிந்துகொண்டாள். என்னுடன் சண்டையிட்டாள். கோபித்துக்கொண்டாள். எங்களுடைய தொடர்பை நிறுத்திக்கொள்வோம் எனக் கூறினாள்.

காதலியை ஏமாற்றி குற்றி கொன்ற காதலன்

அவள் மாறிவிட்டாள், என்னை எப்போதும் “பைத்தியம்” என்றே ஏசுவாள். வேறு தொடர்பு இருப்பதால்தான் இவளிடம் மாற்றம் ஏற்பட்டுள்ளது என நினைத்தேன். நான் தேடிப்பார்த்தேன். எனினும். அவ்வாறான தொடர்புகள் எவையும் அவளிடம் இல்லை.

அதுதொடர்பில் எனக்கு எவ்விதமான சந்தேகமும் இல்லை. மனநோயாளி, பைத்தியம் என தொடர்ந்து என்னைத் திட்டியதால். நான் அவளுடன் கோபத்தில் இருந்தேன். மனவேதனை அடைந்திருந்தேன்.

தொடர்புகள் இன்மையால் அவள் எனக்கு சொந்தமில்லை. எனக்கு கிடைக்காதது வேறு எவருக்கும் கிடைப்பதற்கு இடமளிக்க மாட்டேன். ஆகையால், அவளைக் கொலைச் செய்யவேண்டுமென திட்டமிட்டேன்.

கடந்த வெள்ளிக்கிழமை அவள் என்னுடன் சண்டையிட்டால். நாங்கள் எங்களுடைய தொடர்பை நிறுத்திக்கொள்வோம் எனக் கூறினாள். அப்போது அவளுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டிருந்தது.

அவளைக் கொல்லவேண்டும் என நான் திட்டம் தீட்டினேன். வெல்லம்பிட்டிய சந்தியில் ஞாயிற்றுக்கிழமை கத்தியொன்றை வாங்கினேன்.

அந்த கத்தியை பேக்கில் போட்டுக்கொண்டு, செவ்வாய்க்கிழமை அன்று பல்கலைக்கழகத்துக்கு வீட்டில் இருந்தே வந்தேன்.

காலையில் முதலாவது விரிவுரையில் பங்கேற்றேன். பின்னர் சூட்டி உன்னுடன் விசேடமாக கதைக்கவேண்டும். குதிரை பந்தைய திடலுக்கு போவோம் எனக் கூப்பிட்டேன்.

வருவதற்கு முதலில் மறுத்தாள். நான் கட்டாயப்படுத்தியதால் விருப்பம் தெரிவித்தாள். நாங்கள் இருவரும் நடந்தே குதிரை பந்தைய திடலுக்கு வந்தோம்.

கொகுனு எனுமிடத்தில் நாங்கள் இருவரும் நின்று பேசிக்கொண்டிருந்தோம். அவளுடன் கோபத்தில் இருந்தமையால் அவளைக் கொல்லவே வேண்டுமென நினைத்தேன்.

உனக்கு சைப்ரைஸ் ஒன்றை நான் கொடுக்கவேண்டும். அப்படியே கூறிக்கொண்டு அவளை, குதிரை பந்தைய திடலின் ஸ்கோர்போர்ட் இருக்கும் இடத்துக்கு அழைத்துச் சென்றேன்.

அவள், மீண்டும் என்னிடம் கேட்டாள் என்ன சைப்ரைஸ் என்று, கைலிருந்த கைக்குட்டையால் அவருடைய கண்களைக் கட்டினேன். ​பையில் இருந்து சைப்ரைஸ் பார்சலை எடுப்பதைப் போல, கத்தியை எழுத்து கழுத்தில் குத்தினேன்.

பாரிய சத்தம் எழுப்பிய அவர், கண்களை கட்டியிருந்த கைக்குட்டை அவிழ்த்து, உதவிக்காக அபாயக் குரல் எழுப்பினாள். அப்போது, மற்றுமொரு தடவை கத்தியால் கழுத்திலேயே குத்தினேன்.

சம்பவம் இடம்பெற்ற இடத்துக்கு அண்மையில் இளைஞர்கள் சிலர் இருந்தனர். அவர்கள் அவ்விடத்துக்கு ஓடிவருவதை கண்டு. அங்கிருந்து நான் தப்பியோடினேன்.

நான் தப்பியோடிய போது, சூட்டி இருந்த இடத்தை நோக்கி திரும்பி பார்த்தேன். எவ்விதமான அசைவுகளும் இன்றி சூட்டி விழுந்து கிடந்தாள்.

குதிரை பந்தைய திடலில் இருந்து வெளியே ஓடிச்சென்ற நான், பஸ்ஸில் ஏறி, வெல்லம்பிட்டியவுக்குச் சென்​றேன்.

ரயிலில் பாய்ந்து தன்னுயிரை மாய்த்துக்கொள்ளவே சென்றேன். எனினும், நீண்ட நேரமாக ரயில் வரவே இல்லை. அதனால் வீட்டுக்குச் சென்றேன். அங்கு என்னுடைய புத்தகப்பை உள்ளிட்ட பொருட்களை வைத்துவிட்டு, களனி கங்கையில் பாய்ந்து தன்னுடைய உயிரை மாய்த்துக்கொள்வதற்காக நடந்தே சென்று, கங்கையில் இரண்டு முறை குதித்தேன். இறுதியில் பொலிஸார் என்னை கைது செய்துவிட்டனர். என்றும் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

காதலனை தடுத்துவைத்து விசாரணைக்கு உட்படுத்தி வந்த பொலிஸார், அவரை கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் 18ஆம் திகதியன்று மாலை ஆஜர்படுத்தினர்.
சந்தேகநபரை எதிர்வரும் 30ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்

மஹிந்த ராஜினாமா
Posted in இலங்கை செய்திகள்

மஹிந்த ராஜினாமா

மஹிந்த ராஜினாமா

வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் பதவியில் இருந்து அமைச்சர் மஹிந்த அமரவீர இராஜினாமா செய்துள்ளார்.

பதவியில் இருந்து இன்றைய தினம் அவர் இராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எனினும், விவசாயத்துறை அமைச்சராக அவர் தொடர்ந்தும் பதவியில் இருப்பார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No posts found.
சிறுமியை கொடுமை படுத்திய பேயோட்டி கைது
Posted in இலங்கை செய்திகள்

சிறுநீரக மோசடி சம்பவம் 4 பேர் கைது

சிறுநீரக மோசடி சம்பவம் 4 பேர் கைது

பொரளை பகுதியில் தனியார் வைத்தியசாலையொன்றை மையமாகக் கொண்டு இடம்பெற்றுவந்ததாகக் கூறப்படும் சிறுநீரக சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்களையும் எதிர்வரும் 31ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திரா ஜயசூரிய நேற்று (17) உத்தரவிட்டார்.

இச்சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிரதான சந்தேக நபர் என கூறப்படுபவரும், இச்சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள மற்றுமொரு பிரதான தரகர் ஒருவர் என கூறப்படுபவரும்,

வெல்லம்பிட்டிய மற்றும் கொலன்னாவ பிரதேசங்களுக்கு பொறுப்பான கிராம உத்தியோகத்தர்; மற்றும் ராஜகிரிய பிரதேச கிராம உத்தியோகத்தர் ஆகிய சந்தேக நபர்கள் நேற்று (17) கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இச்சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர்இமுகத்துவாரம்இ மட்டக்குளிய பிரதேசத்தில் வறுமையில் வாடும் மக்களை சிறுநீரகம் தானம் செய்வதற்கு தூண்டிய தரகர் ஒருவர் என்று மனு தொடர்பில் ஆஜரான சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

சிறுநீரக மோசடி சம்பவம் 4 பேர் கைது

இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள இரண்டு கிராம உத்தியோகத்தர்களும் போலியான கிராம உத்தியோகத்தர் சான்றிதழ்களை வழங்கி இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

சுந்தேகநபரான் ஒரு கிராம உத்தியோகத்தர், அபுதாபி பிஜை ஒருவருக்கு சிறுநீரக சத்திரசிகிச்சைக்காக கிராம உத்தியோகத்தர் சான்றிதழை வழங்கியுள்ளார். இலங்கையில் வெளிநாட்டவர்களுக்கு சிறுநீரக சத்திரசிகிச்சை மேற்கொள்வது தடை செய்யப்பட்டுள்ளபோதிலும் அவர் இந்த சட்டவிரோத செயலில் ஈடுபட்டுள்ளார்.

அடுத்த கிராம உத்தியோகத்தர், சிறுநீரகம் தானம் செய்வதற்காக வந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவரை, ராஜகிரிய பிரதேசத்தில்; வசிப்பவர் எனக்கூறி போலியான சான்றிதழை வழங்கியுள்ளார் என்றும் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

இது மிகவும் பாரதூரமானதொரு செயல் ஆகும். நீதிமன்றங்களில் பிணைக்கும் இவ்வாறான போலி சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் குறிப்பிட்டார்.

இதன்படி, சந்தேகநபர்கள் சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட பிணை கோரிக்கையை நிராகரித்த கொழும்பு மேலதிக நீதவான், சந்தேகநபர்கள் அனைவரையும் எதிர்வரும் 31ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிட்டார்.

இந்த சம்பவம் தொடர்பில் தேடப்படும் சந்தேக நபருக்கு பயணத்தடை விதிக்குமாறு பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றில் கோரிக்கை விடுத்தார்.

இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதவான், குறித்த நபருக்கு வெநிநாட்டு பயணத்தடை விதிக்கவும் உத்தரவிட்டார்.

No posts found.
கூட்டமைப்பு நிலைப்பாட்டுக்கு ஆதரவு அரசியலமைப்பு பேரவை நியமனம் தொடர்பில் மனோ கணேசன்
Posted in இலங்கை செய்திகள்

மலையக கட்சிகளுடனும் நான் உரையாடுவேன் என இங்கு வந்துள்ள மனோ கணேசனுக்கு உறுதி கூறுகிறேன்

மலையக கட்சிகளுடனும் நான் உரையாடுவேன் என இங்கு வந்துள்ள மனோ கணேசனுக்கு உறுதி கூறுகிறேன்

  • ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

இப்போது வடக்கு கிழக்கு தமிழ் கட்சிகளுடன் கலந்துரையாடுவதை போன்று மலையக கட்சிகளுடனும் உரையாடுவேன் என்பதை இங்கு வந்துள்ள திரு. மனோ கணேசனுக்கு உறுதி கூற விரும்புகிறேன். அதேபோல் முஸ்லிம்

கட்சிகளுடனும் உரையாடுவேன் என பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற அகில இலங்கை ஜம்இயத்துல் உலமா நூற்றாண்டு விழாவில் பிரதம அதிதியாக கலந்துக்கொண்டு உரையாற்றுகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

சபாநாயகர், அமைச்சர்கள், நசீட் அஹமத், அலி சப்ரி, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்

மலையக கட்சிகளுடனும் நான் உரையாடுவேன் என இங்கு வந்துள்ள மனோ கணேசனுக்கு உறுதி கூறுகிறேன்

ரவுப் ஹக்கீம் உட்பட பல்வேறு பிரமுகர்கள் கலந்துக்கொண்ட இந்நிகழ்வில், மேலும் உரை நிகழ்த்துகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்ததாவது,

தமிழ் கட்சிகளுடன் இன்று இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் பேசுகிறேன். ஆனால், அது மாத்திரம் போதாது.

நான் இப்படி கூறும்போது, இந்நிகழ்வில் கலந்துக்கொண்டுள்ள திரு. மனோ கணேசன் என்னை உற்று நோக்குகிறார். வடக்கு கிழக்கு கட்சிகளுடன் கலந்துரையாடுவதை போன்று மலையக கட்சிகளுடனும் உரையாடுவேன் என நான் அவருக்கு உறுதி கூற விரும்புகிறேன்.

முஸ்லிம் கட்சிகளுடனும் நான் பேசுவேன். இலங்கையில் சிங்களவர், இலங்கை தமிழர், மலையக தமிழர், முஸ்லிம்கள் என இனக்குழுக்கள் வாழ்கிறார்கள். அனைவரையும் இணைத்து இலங்கை தேசத்தை கட்டி எழுப்புவதே என் நோக்கம்.

அனைவருக்கும் வெவ்வேறு பிரச்சினைகள் உள்ளன.
ஆகவே எல்லாவற்றையும் ஒன்றாக ஒரே இடத்தில் பேச முடியாது.


ஒன்றுடன் ஒன்று சிக்கி சிக்கலை ஏற்படுத்தும். ஆகவே வெவ்வேறு இனங்களை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகளுடன்
வெவ்வேறாக பேச முடிவு செய்துள்ளேன். கடைசியில் அனைவரும் ஒன்றாக அமர்ந்து இலங்கை தேசத்தை கட்டி எழுப்புவோம்.

No posts found.
விபத்தில் கர்ப்பிணி மரணம்
Posted in இலங்கை செய்திகள்

சிறுமியை கர்ப்பமாக்கி கர்ப்பவதி கிளினிக் அழைத்து வந்த இளைஞன்

சிறுமியை கர்ப்பமாக்கி கர்ப்பவதி கிளினிக் அழைத்து வந்த இளைஞன்

முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் பகுதியில் சிறுமியுடன் குடும்பம் நடத்திய இளைஞன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

முள்ளிவாய்க்கால் பகுதியினைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞன் 15 வயதுடைய சிறுமியுடன் கடந்த 8 மாத காலமாக குடும்பமாக வாழ்ந்து வந்து, சிறுமியை கர்ப்பமாக்கியுள்ளார்.

இந்த நிலையில், சிறுமியை கர்ப்பவதி கிளினிக்கிற்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு சென்ற போது, சிறுமியின் வயதினை அறிந்த சட்டவைத்திய அதிகாரிகள் சிறுமி கர்ப்பமானது தொடர்பிலான பரிசோதனையினை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் குறித்த சிறுமி 7 மாத கர்ப்பமாக காணப்பட்டுள்ளார். சிறுமி பாதுகாப்பான மருத்துவ பராமரிப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

சிறுமியை கர்ப்பமாக்கி கர்ப்பவதி கிளினிக் அழைத்து வந்த இளைஞன்

சட்டத்திற்கு முரணான இந்த சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸாருக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய இளைஞன் கைது செய்யப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது இளைஞனை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டுள்ளது.

குறித்த சிறுமியினை சட்டத்திற்கு முரணாக குடும்பமாக
வாழ வைத்த சிறுமியின் பெற்றோர்களை விசாரணை செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளார்கள்.

No posts found.
மாணவியை பலியெடுத்த காதலனுக்கு விளக்கமறியல்
Posted in இலங்கை செய்திகள்

மாணவியை பலியெடுத்த காதலனுக்கு விளக்கமறியல்

மாணவியை பலியெடுத்த காதலனுக்கு விளக்கமறியல்

கொழும்பு பல்கலைக்கழகத்தின் 3ஆம் வருட மாணவியொருவர், செவ்வாய்க்கிழமை (17) நண்பகல், அவருடைய காதலன் என்று கூறப்படும் நபரால் மேற்கொள்ளப்பட்ட கத்திக் குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

கொழும்பு – 07, குதிரைப் பந்தய திடலில் இரத்த வெள்ளத்தில் கிடந்த நிலையில் குறுந்துவத்த பொலிஸாரினால் சடலம், கண்டெடுக்கப்பட்டது. உயிரிழந்தவர் ஹோமாகம பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதான மாணவி என்பது குறிப்பிடத்தக்கது.

உயிரிழந்த மாணவியின் கழுத்தில் ஆழமான வெட்டுக் காயங்கள் காணப்பட்டன. கொலை செய்தாகக் கூறப்படும் சந்தேகநபரும் அதே பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவன் ஆவார்.

அவர், கொலன்னாவை, வெல்லம்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மாணவியை பலியெடுத்த காதலனுக்கு விளக்கமறியல்

சம்பவ இடத்தில் நீதவான் விசாரணை இடம்பெற்ற பின்னர், சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, மேலதிக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

காதலன் என கூறப்படும் நபர், மூன்று மணிநேரத்துக்கு சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அவரை தடுத்துவைத்து விசாரணைக்கு உட்படுத்தி வந்த பொலிஸார், அவரை கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.


24 வயதான சந்தேகநபரை எதிர்வரும் 30ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

No posts found.
வறிய குடும்ப மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு
Posted in இலங்கை செய்திகள்

வறிய குடும்ப மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

வறிய குடும்ப மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

வறிய குடும்ப மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!

திருகோணமலை – குளிக்குஞ்சிமலை கிராமத்தில் வசித்துவருகின்ற மிக வறிய குடும்பங்களின் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு காப்போம் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்றுப்

பணிப்பாளர் கு.பிரதீப்கரன் தலைமையில் குளிக்குஞ்சிமலை கிராம அபிவிருத்திச் சங்க கட்டடத்தில் நேற்று மாலை (16) இடம்பெற்றது.

வறிய குடும்ப மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

குளிக்குஞ்சிமலை கிராமத்தில் தெரிவு செய்யப்பட்ட மிக வறிய குடும்பங்களிலுள்ள 30 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் அடங்கிய புத்தகப் பைகளை காப்போம் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்றுப்

பணிப்பாளர் கு.பிரதீப்கரன், செயலாளர் கு.எப்சிதா, ஆலோசகர் க.ஞானேந்திரன் உள்ளிட்ட நிருவாக உறுப்பினர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.

குறிப்பாக, அக்கிராமத்தில் வசித்துவருகின்ற மாணவர்களுக்கு கடந்த
ஒரு வருடகாலமாக மாலைநேர வகுப்புக்களை முற்றிலும் இலவசமாக


காப்போம் நிறுவனத்தின் உதவியுடன் நடாத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

அபு அலா –

No posts found.
மட்டக்களப்பு மாவட்ட புதிய அரசாங்க அதிபராக கலாமதி பத்மராஜா நியமனம்
Posted in இலங்கை செய்திகள்

மட்டக்களப்பு மாவட்ட புதிய அரசாங்க அதிபராக கலாமதி பத்மராஜா நியமனம்

மட்டக்களப்பு மாவட்ட புதிய அரசாங்க அதிபராக கலாமதி பத்மராஜா நியமனம்

மட்டக்களப்பு மாவட்ட புதிய அரசாங்க அதிபராக திருமதி.கலாமதி பத்மராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.

திருமதி. பத்மராஜா மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராகவும், கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளராகவும் முன்னர் பதவி வகித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றிய கே.கருணாகரன் ஓய்வு பெற்றதனால் நிலவிய வெற்றிடத்திற்கு புதிய அரசாங்க அதிபராக இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் கடந்த 2020 ஆண்டு ஜனவரி தொடக்கம் ஒக்டோடர் வரையான காலப்பகுதியில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றியிருந்தமை குறிப்பிடித்தக்கது.

மேலும் மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், கொழும்பு மற்றும் மொனராகலை
ஆகிய மாவட்டங்களுக்கும் புதிய அரசாங்க அதிபர்கள் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No posts found.
பிரித்தானிய வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலக நிரந்தர துணை செயலாளருக்கும் இடையில் கலந்துரையாடல்
Posted in இலங்கை செய்திகள்

பிரித்தானிய வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலக நிரந்தர துணை செயலாளருக்கும் இடையில் கலந்துரையாடல்

பிரித்தானிய வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலக நிரந்தர துணை செயலாளருக்கும் இடையில் கலந்துரையாடல்

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் வெளிவிவகார, பொதுநலவாய மற்றும்

அபிவிருத்தி அலுவலகத்தின் நிரந்தர துணைச் செயலாளர் சேர் பிலிப் பார்டன் ஆகியோர் 2023 ஜனவரி 17, செவ்வாய்க்கிழமை கொழும்பில் உள்ள வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வைத்து கலந்துரையாடினர்.

ஐக்கிய இராச்சிய – இலங்கை இராஜதந்திர உறவுகளின் 75வது ஆண்டில் இந்த ஆக்கபூர்வமான இருதரப்பு ஈடுபாடு இடம்பெற்றது.

வெளிவிவகார செயலாளர் விஜேவர்தன, நாட்டின் தற்போதைய அபிவிருத்திகள் மற்றும் 2023ஆம் ஆண்டிற்கான சமூகப் பொருளாதார ஸ்திரத்தன்மை, நல்லிணக்கம் மற்றும் மீட்சிக்கான அரசாங்கத்தின் திட்டங்கள்

குறித்து ஐக்கிய இராச்சியத்தின் நிரந்தர துணைச் செயலாளருக்கு விளக்கமளித்தார்.

நிரந்தர துணைச் செயலாளர் பார்டன், இலங்கையின் முயற்சிகளை ஊக்குவித்ததோடு, இது தொடர்பாக ஐக்கிய இராச்சியத்தின் ஆதரவை மீண்டும் வலியுறுத்தினார்.

பிரித்தானிய வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலக நிரந்தர துணை செயலாளருக்கும் இடையில் கலந்துரையாடல்

பொருளாதார மீட்சி மற்றும் அபிவிருத்திக்கு இலங்கை அளிக்கும் முன்னுரிமையின் அடிப்படையில், ஐக்கிய இராச்சிய சந்தைக்கான வரியில்லாத அணுகலை வழங்கும் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின்

வர்த்தகத் திட்டத்தின் கீழ், இலங்கையின் சுற்றுலா மற்றும் திறமையான தொழிலாளர் குடியேற்றத்தில் ஐக்கிய இராச்சியத்தின் பங்களிப்பை மேம்படுத்துதல் போன்ற துறைகளில் இலங்கையின் பொருளாதாரப் பங்காளித்துவத்தின் முக்கியத்துவத்தை வெளிவிவகார செயலாளர்

எடுத்துரைத்தார். காலநிலை மாற்ற நோக்கங்களுக்கான எதிர்வினை உட்பட வர்த்தக மற்றும் முதலீட்டு உறவுகளை மேலும் விரிவுபடுத்துவதற்கான

சாத்தியக்கூறுகள் மற்றும் 2030ஆம் ஆண்டளவில் 70% புதுப்பிக்கத்தக்க ஆற்றலை அடையும் இலங்கையின் இலக்கை அடைந்து கொள்வதில் இரு தரப்பினரும் பாராட்டினர்.

தற்போதுள்ள பன்முக ஈடுபாட்டை உயர்த்துதல் மற்றும் பரஸ்பரம் நன்மை பயக்கும் ஒத்துழைப்பின் பல துறைகளில் முடிவு சார்ந்த அணுகுமுறையின் மூலம் உறுதியான முடிவுகளை அடைதல் ஆகியவற்றை நோக்கமாகக்

கொண்ட, 2023ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இலங்கை – ஐக்கிய இராச்சிய உரையாடலைத் தொடங்குவதற்கு இரு தரப்பும் பரஸ்பர ஆர்வத்தை மீண்டும் வலியுறுத்தியது.

வெளிவிவகார செயலாளர் விஜேவர்தன மற்றும் வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தின் நிரந்தர துணைச் செயலாளர் ஆகியோர், ஐக்கிய இராச்சியத்தில் உள்ள இலங்கைப்

பாரம்பரியத்தின் குறிப்பிடத்தக்க சமூகத்திலிருந்து வெளிப்படும் துடிப்பான மக்கள் உறவுகளைப் பாராட்டினர். பரஸ்பர நலனுக்காக அவர்களது கூட்டுறவை சிறப்பாகப் பயன்படுத்துவதற்காக வெளிநாட்டிலுள்ள இலங்கை

சமூகத்துடன் மேலும் ஈடுபடுவதற்கான அரசாங்கத்தின் நோக்கம் குறித்து நிரந்தர துணைச் செயலாளருக்கு வெளிவிவகார செயலாளர் விஜேவர்தன விளக்கமளித்தார். நீண்ட கால உறவுகளை முன்னோக்கி, முடிவுகளை

நோக்குவதை பிரதிபலிக்கும் வகையில் இந்த ஆண்டு ஐக்கிய இராச்சிய – இலங்கை இராஜதந்திர உறவுகளின் 75வது ஆண்டு நிறைவை நினைவுகூருவதற்கு இதன்போது ஒப்புக் கொள்ளப்பட்டது.

பிராந்திய மற்றும் சர்வதேச அபிவிருத்திகள் குறித்த கருத்துப் பரிமாற்றத்தில், இந்து சமுத்திர ஈடுபாட்டில் இலங்கையின் கொள்கை முன்னுரிமைகள் மற்றும்

இந்த ஆண்டு இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் தலைமைப் பதவியை ஏற்றுக்கொண்டமை ஆகியன குறித்து வெளிவிவகார செயலாளர் விஜேவர்தன நிரந்தர துணைச் செயலாளருக்கு விளக்கினார்.

இந்த விஜயத்தின் போது, நிரந்தர துணைச் செயலாளர் சேர் பார்டன், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி, நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க மற்றும் ஜனாதிபதியின் தலைமைப் பணிப்பாளர் சாகல

ரத்நாயக்க ஆகியோரை சந்தித்தார். சேர் பிலிப் பார்டனுடன் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன் மற்றும் பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம்

மற்றும் ஐக்கிய இராச்சிய வெளிநாட்டு, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலக அதிகாரிகள் ஆகியோரும் இணைந்திருந்தனர்.
இந்த சந்திப்பில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

No posts found.
நாளை கொலசிப் தயாராகும் மாணவர்கள்
Posted in இலங்கை செய்திகள்

மாணவர்களை தாக்கிய வெறியர்கள்

மாணவர்களை தாக்கிய வெறியர்கள்

கிளிநொச்சி கண்ணகைபுரம் கிராமத்தில் இருந்து முக்கொம்பன் மகா வித்தியாலயத்திற்கு சென்ற மாணவர்களில் சுமார் 15 மாணவர்களை, வழியில் போதையில் நின்ற நான்கு பேர் தடிகளினால் தாக்கியுள்ளனர்.

இது தொடர்பில் அக்கராயன் பொலிஸாரினால் ஒருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், மூவர் கைது செய்யப்படவில்லை எனவும் பெற்றோர்களினால் தெரிவிக்கப்படுகின்றது.

கண்ணகைபுரம், 150 வீட்டுத் திட்டப் பகுதிகளில் கசிப்பு உற்பத்தி கூடுதலாக காணப்படுவதாகவும் இதனை கட்டுப்படுத்துமாறு பொது மக்களினால் தெரிவிக்கப்பட்ட நிலையில் மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் இடம் பெற்றுள்ளது.

மாணவர்களை தாக்கிய வெறியர்கள்

கசிப்பினை கட்டுப்படுத்துவதற்கு முக்கொம்பனில் காவல் பிரிவு ஒன்று அமைக்குமாறு பெற்றோர்களினால் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு இரணைமடுவில் உள்ள கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களுக்கான பிரதி பொலிஸ் மா அதிபரின் அலுவலகத்தில் முறைப்பாடுகள் செய்யப்பட்ட நிலையில் மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் இடம் பெற்றுள்ளது.

தாக்குதலினால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் பலர் பாடசாலைக்கு வரவில்லை எனவும் மாணவர்களின்
பாதுகாப்பினை உறுதிப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.

No posts found.
தடம் புரண்ட ரயில் போக்குவரத்து பாதிப்பு
Posted in இலங்கை செய்திகள்

களனிவெளி ரயில் சேவை பாதிப்பு

களனிவெளி ரயில் சேவை பாதிப்பு

அவிசாவளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்த ரயில், கொஸ்கம ரயில் நிலையத்திற்கு அருகில் இன்று(18) காலை தடம் புரண்டுள்ளது.

இதனையடுத்து, களனிவெளி ஊடான ரயில் சேவை தற்காலிகமாக தடைப்பட்டுள்ளது.

ரயில் போக்குவரத்தை வழமைக்கு கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

No posts found.
இரும்பு கம்பியால் வாலிபர் அடித்து கொலை
Posted in இலங்கை செய்திகள்

கொழும்பில் பெண் கொலை

கொழும்பில் பெண் கொலை

கொழும்பு – குதிரை பந்தயத் திடலில் யுவதி ஒருவர் கொலை செய்யப்பட்டமைக்கான காரணத்தை வெளியிட்ட பொலிஸார் சந்தேகநபர் ஒருவரை கைது செய்துள்ளனர்.

பல்கலைக்கழகத்தில் விரிவுரைகளை முடித்துக் கொண்டு இன்று காலை 11 மணியளவில் தனது காதலனுடன் பேசுவதற்காக குதிரை பந்தயத் திடாலை நோக்கி சென்றுள்ளமை விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இவரது காதலனும் கொழும்பு பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டில் கல்வி கற்கும் இளைஞன் என பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பில் பெண் கொலை

சம்பவத்தின் போது குறித்த இளைஞன், குதிரை பந்தயத் திடாலுக்கு அருகே நடந்து செல்வது அருகிலுள்ள CCTV கமெராவில் பதிவாகியுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் கொழும்பு தெற்கிற்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜயந்த மாரப்பனவின் மேற்பார்வையில் இடம்பெற்று வருகின்றன.

உயிரிழந்த யுவதி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் தனது காதலனிடம் உறவை முறித்துக் கொள்ளுமாறு யோசனை கூறியுள்ளார்.

எனினும், தனது காதலி வேறொருவருக்கு
சொந்தமாகிவிடுவார் என எண்ணி கொலை செய்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

No posts found.
பிரிட்டன் லீவர்பூளில் துப்பாக்கி சூடு ஒருவர் மரணம் 3பேர் காயம்
Posted in இலங்கை செய்திகள்

துப்பாக்கி சூடு ஒருவர் காயம்

துப்பாக்கி சூடு ஒருவர் காயம்

பேலியகொட, களுபள்ளம் பிரதேசத்துக்கு அருகில் இன்று (17) காலை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கியால் சுட்டதில் 32 வயதுடைய நபர் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் காலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன்,
சம்பவத்தில் காயமடைந்த இளைஞர் அண்மையில் விளக்கமறியலில் இருந்து விடுவிக்கப்பட்டதாக பொலிஸார் கூறினர்.

No posts found.