Posted in இலங்கை செய்திகள்

யாழில் இருந்து கொழும்பு சென்ற சொகுசு பேருந்தில் பயணித்த ஒருவர் வவுனியாவில் கைது

யாழில் இருந்து கொழும்பு சென்ற சொகுசு பேருந்தில் பயணித்த ஒருவர் வவுனியாவில் கைது

யாழில் இருந்து கொழும்பு சென்ற சொகுசு பேரூந்தில் பயணித்த ஒருவர் வவுனியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற சொகுசு பேருந்தில் கஞ்சா கடத்தப்படுவதாக வவுனியா பொலிஸ் புலனாய்வு பிரிவிற்கு தகவல் கிடைக்கப்பெற்றிருந்தது. இதற்கமைய வவுனியா மணிக்கூட்டுகோபுர சந்தியில் இன்று காலை சோதனையில் ஈடுபட்ட பொலிசார் குறித்த பேருந்தை வழிமறித்து அதில் சோதனைகளை முன்னெடுத்தனர்.

யாழில் இருந்து கொழும்பு சென்ற சொகுசு பேருந்தில் பயணித்த ஒருவர் வவுனியாவில் கைது

இதன்போது பேருந்தில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் காணப்பட்ட ஒரு கிலோ 900 கிராம் கேரள கஞ்சாவினை மீட்டனர்.அதனை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவரும் கைதுசெய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்டவரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவரும் பொலிசார் அவரை நீதிமன்றில் முற்ப்படுத்துவற்கான நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தனர்.

யாழில் மருத்துவமனை அலட்சியம் முதியவர் மரணம்
Posted in இலங்கை செய்திகள்

யாழில் மருத்துவமனை அலட்சியம் முதியவர் மரணம்

யாழில் மருத்துவமனை அலட்சியம் முதியவர் மரணம்

யாழ்ப்பாணம் மருத்துவமனையின் அலட்சியம் காரணமாக முதியவர் ஒருவர் பலியான சம்பவம் இடம்பெற்றுள்ளது .

அச்சுவேலி மருத்துவமனையில் அனுமதிக்க பட்ட முதியவர் அங்கிருந்து ,மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு மாற்ற பட்டுள்ளார் .

யாழில் மருத்துவமனை அலட்சியம் முதியவர் மரணம்

அப்பொழுது அட்மிசன் எடுத்து செல்ல மறந்த நிரையில் ,
கோப்பாய் வரை சென்ற அம்புலன்ஸ் மீளவும் அச்சுவேலி வந்து ,
அதனை எடுத்து சென்றுள்ளது .

அதற்கு இடையில் நெஞ்சு வலியால் துடித்த முதியவர் பரிதாபகரமாக பலியாகியுள்ளார் .


இந்த சம்பவத்தால் அச்சுவேலி மருத்துவமனை முன்பாக, மக்கள் போராட்டத்தில் ஈடுபடலாம் என எதிர்பார்க்க படுகிறது .

No posts found.
மண்மேடு சரிந்து இருவர் மரணம்
Posted in இலங்கை செய்திகள்

மண்மேடு சரிந்து இருவர் மரணம்

மண்மேடு சரிந்து இருவர் மரணம்

இலங்கை நுவரெலியா பழைய கச்சேரி பகுதியில் 25 அடி மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் ,அதற்குள் புதைந்து இருவர் பலியாகியுள்ளனர் .

குறித்த மண்மேட்டை அகற்றும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த ஒன்பது பேரில் இரு தொழிலாளர்களே இறந்துள்ளனர் .

ஒன்றரை மணிநேர போராட்டத்தின் பின்னர் மண்ணுக்குள் புதையுண்டவர்கள் சடலமாக மீட்க பட்டுள்ளனர் .மேற்படி சம்பவம் அந்த பகுதி மக்கள் மத்தியில் துயரை ஏற்படுத்தியுள்ளது .

No posts found.
யாழில் வாலிபன் மீது வாள்வெட்டு ஆவா குழு தலைவன் கைது
Posted in இலங்கை செய்திகள்

யாழில் வாள்வெட்டு ரவுடிகள் அட்டகாசம்

யாழில் வாள்வெட்டு ரவுடிகள் அட்டகாசம்

யாழ்ப்பாணம் இளவாலை பகுதியில் வாலிபன் ஒருவர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்த பட்டுள்ளது .

சுன்னாக்தை சேந்த வாலிபன் ஒருவர் அவரது நண்பனை சந்திக்க சென்றவேளை ,அவரை பின் தொடர்ந்த வாள்வெட்டு குழு, அவர் மீது சரமாரி வாள் வெட்டை நடத்திவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளது .

ஊந்துருளியில் வந்து தாக்குதலை நடத்திவிட்டு, தப்பி சென்ற நால் வரையும் கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர் .

No posts found.
பருத்தித்துறையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

பல்கலைக்கழகத்தில் மாணவன் சடலமாக மீட்பு

பல்கலைக்கழகத்தில் மாணவன் சடலமாக மீட்பு

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மஹரகம, கட்டுவல பிரதேசத்தில் பல்கலைக்கழகத்தினால் நடத்தப்படும் மாணவர் விடுதியின் கீழ் தளத்தில் அவர் சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அந்த விடுதியில் ஏறக்குறைய 64 மாணவர்கள் தங்கி இருப்பது தெரியவந்துள்ளது.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை பகுதியை சேர்ந்த 23 வயதான மாணவா் ஒருவரே இவ்வாறு மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, மாணவனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து, உயிரிழந்த மாணவனின் உறவினர்கள் நீதவான் விசாரணையை கோரியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மஹரகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

No posts found.
Posted in இலங்கை செய்திகள்

முடிந்தால் செய்து காட்டுங்கள் என சரத் வீரசேகரக்கு சவால் விட்ட செல்வம் அடைக்கலநாதன்!

முடிந்தால் செய்து காட்டுங்கள் என சரத் வீரசேகரக்கு சவால் விட்ட செல்வம் அடைக்கலநாதன்!

சரத்வீரசேகர இராணுவத்தில் றொட்டி சுட்டுக் கொண்டா இருந்தார். முடிந்தால் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை கைது செய்து காட்டுங்கள் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ரெலோ அமைப்பின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று (16.06) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

முன்னாள் அமைச்சர் சரத்வீரசேகர அவர்கள் கடந்த காலங்களில் பல கருத்துக்களை கூறியுள்ளார். குறிப்பாக தமிழ் பிரதேசங்களில் நடைபெறுகின்ற அடக்கு முறைக்கு எதிராக குரல் கொடுக்கின்ற தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று சொல்லியிருக்கின்றார். மாகாணசபை முறையையும் இல்லாது ஒழிக்க வேண்டும் என்றும் கோரிக்கை முன்வைத்துள்ளார்.

முடிந்தால் செய்து காட்டுங்கள் என சரத் வீரசேகரக்கு சவால் விட்ட செல்வம் அடைக்கலநாதன்!

சரத் வீரசேகர அவர்கள் இராணுவத்தில் றொட்டி சுட்டுக் கொண்டா இருந்தார். ஏனெனில் எங்களது மக்களது பிரச்சனை என்பது காலம் காலமாக இருந்து வரும் பிரச்சனை. தங்களது பிரச்சனைகளைப் பேசுவதற்கே மக்கள் பாராளுமன்றம் அனுப்புகிறார்கள். தங்களுக்கான அநீதிகளை சுட்டுக் காட்டும் வழியிலும் தான் நாடாளுமன்றம் அனுப்புகிறார்கள். அந்தவகையில் தங்களது தேசத்து மக்களது பிரச்சனைகளை பாராளுமன்ற உறுப்பினர்கள் பேசுகிறார்கள். இவர் யார்? தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை கைது செய்து சிறையில் அடைக்கச் சொல்வதற்கு இவருக்கு என்ன உரிமை இருக்கிறது? முடிந்தால் அதை செய்து பார்க்கட்டும். சும்மா இராணுவத்தில் இருந்து எதையெல்லாம் செய்து போட்டு வந்து கொக்கரிக்க கூடாது. எனவே அவருக்கு சவால் விடுகின்றேன். மக்கள் நலன் சார்ந்து பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்களை கைது செய்யுங்கள் பார்க்கலாம். அடுத்து என்ன நடக்கும் என பார்ப்பீர்கள் எனத் தெரிவித்தார்.

Posted in இலங்கை செய்திகள்

நான்கு சிங்கள குடியேற்ற கிராமங்கள் வவுனியா வடக்கு பிரதேச செயலகத்துடன் இணைக்க தீர்மானம்: செல்வம் எம்.பியும் பங்கேற்பு

நான்கு சிங்கள குடியேற்ற கிராமங்கள் வவுனியா வடக்கு பிரதேச செயலகத்துடன் இணைக்க தீர்மானம்: செல்வம் எம்.பியும் பங்கேற்பு

நான்கு சிங்கள குடியேற்ற கிராமங்களை வவுனியா வடக்கு பிரதேச செயலகத்துடன் இணைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்ட எல்லை மீள் நிர்ணயம் தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று (16.06) மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார் தலைமையில் இடம்பெற்றது. இதன்போதே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது.

இதன்போது, வவுனியா மாவட்டத்தில் உள்ள மக்கள் தொகையை அடிப்படையாக கொண்டு சில கிராம அலுவலர் பிரிவுகளை பிரிப்பதற்கும், சில பிரிவுகளை இணைப்பதற்கும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டிருந்தது.

வவுனியா மாவட்டத்தில் உள்ள மக்கள் நிர்வாக நடவடிக்கைகளை இலகுவாக மேற்கொள்ளும் பொருட்டு வவுனியா பிரதேச செயலக பிரிவில் பட்டாணிச்சூர், வேப்பங்குளம், பண்டாரிக்குளம், கூமாங்குளம், உக்குளாங்குளம், மகாறம்பைக்குளம் என்பனவும் செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவில் மெனிக்பாம், ஆண்டியாபுளியங்குளம் என்பனவும் தனி கிராம அலுவர் பிரிவுகளாக பிரிப்பதற்கும், கலாபோகஸ்வேவ உள்ளிட்ட 4 சிங்கள குடியேற்ற கிராமங்களின் நிர்வாக நடவடிக்கையை வவுனியா வடக்கு பிரதேச செயலகத்துடன் இணைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

நான்கு சிங்கள குடியேற்ற கிராமங்கள் வவுனியா வடக்கு பிரதேச செயலகத்துடன் இணைக்க தீர்மானம்: செல்வம் எம்.பியும் பங்கேற்பு

குறித்த கலந்துரையாடலில் மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கு.திலீபன், பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், பிரதேச செயலாளர்கள், உள்ளுராட்சி மன்றங்களில் செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

மாத்தறையில் துப்பாக்கிச்சூடு
Posted in இலங்கை செய்திகள்

துப்பாக்கி சூடு பெண் மரணம்

துப்பாக்கி சூடு பெண் மரணம்

இலங்கை மெதிரிகிரிய பகுதியில் நடத்த பாட்ட துப்பாக்கி சூட்டில் பெண் ஒருவர் மரணித்துள்ளார் .

வீதியால் பயணித்து கொண்டிருந்த பெண் மீது மறைந்திருந்த நபர் நடத்திய துப்பாக்கி சூட்டு தாக்குதலில் ,அவர் பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு எடுத்து செல்ல பட்ட பொழுதும் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார் .

கொலையாளியை கைது செய்திடும் நடவடிக்கையில் போலீசார் ஈடு பட்டுள்ளனர் .

இலஞ்சம் வாங்க மறுத்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு சன்மானம்
Posted in இலங்கை செய்திகள்

இலஞ்சம் வாங்கிய அதிகாரி கைது

இலஞ்சம் வாங்கிய அதிகாரி கைது

இலங்கை பாணந்துறை டிப்போ பகுதியில் லஞ்சம் வாங்கிய அதிகாரி ஒருவர் கைது செய்ய பட்டுள்ளார் .

போக்குவரத்து சபையின் களுத்துறை அலுவலகத்தில் வழங்க பட்ட முறைப்பாட்டை அடுத்து இந்த கைது இடம்பெற்றுள்ளது .

இலங்கையில் ஊதி பெருத்துள்ள லஞ்சத்தினால் நாடு சூடு காடாக மாறிய வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது .

மோதிய பயணிகள் பேரூந்து 5 பேர் காயம்
Posted in இலங்கை செய்திகள்

மோதிய பயணிகள் பேரூந்து 5 பேர் காயம்

மோதிய பயணிகள் பேரூந்து 5 பேர் காயம்

மன்னாரில் இருந்து தியத்தலாவை நோக்கி பயணித்த தனியார் பயணிகள் பேரூந்து இரண்டு நேரெதிர் மோதியதில் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர் .

.காயமாய்ந்த ஐந்து மாணவர்களும் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் ,

சாரதிகள் அலட்சிய போக்கே இந்த விபத்திற்கான காரணம் என தெரிவிக்க படுகிறது ,விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

No posts found.
மாணவியின் நிர்வாண புகைப்படம் இராணுவ சிப்பாயின் அசிங்க செயல்
Posted in இலங்கை செய்திகள்

மாணவியின் நிர்வாண புகைப்படம் இராணுவ சிப்பாயின் அசிங்க செயல்

மாணவியின் நிர்வாண புகைப்படம் இராணுவ சிப்பாயின் அசிங்க செயல்

இலங்கையில் 17 வயதுடைய பாடசாலை மாணவியின் நிர்வாண புகைப்படங்களை ,சமூக வலைத்தளங்களில் வெளியிடுவேன் என அச்சுறுத்திய ,சிங்கள சிப்பாய்
ஒருவர் கட்டுகஸ்தோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார் .

மாணவி வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைய ,
விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் குறித்த நபரை கைது செய்தனர் .

23 வயதாகும் மின்னேரிய இராணுவ முகாமில் கடமையாற்றும்,
இராணுவ சிப்பாயே இந்த அநாகரிக செயலில் ஈடுபட்டுள்ளார் .

மேற்படி சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது

No posts found.
கயேந்திரகுமார் அணியை சேர்ந்த மூவர் கைது
Posted in இலங்கை செய்திகள்

கயேந்திரகுமார் அணியை சேர்ந்த மூவர் கைது

கயேந்திரகுமார் அணியை சேர்ந்த மூவர் கைது

தமிழ் தேசிய முன்னணியாக விளங்கும் ,கயேந்திர குமார் ,
அணியை சேர்ந்த மூவர் காவல்த்துறையால கைது செய்யப் பட்டுள்ளனர் .

யாழ்ப்பாணம் மருந்தாங்கேணி சம்பவம் தொடர்ப்பில் ,
இடம்பெற்று வந்த விசாரணைகளின் பின்னரே இந்த கைது வேட்டை இடம்பெற்றுள்ளது .

இது அரசியல் பழிவாங்கும் வங்குரோத்து நிகழ்வு என குறித்த கட்சி குற்றம் சுமத்தியுள்ளது

No posts found.
இலங்கையில் ரஸ்யா அணு உலை கொதிக்கும் அமெரிக்கா
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் ரஸ்யா அணு உலை கொதிக்கும் அமெரிக்கா

இலங்கையில் ரஸ்யா அணு உலை கொதிக்கும் அமெரிக்கா

இலங்கையில் இரண்டு அணு உலைகளை இயக்கி அதன் ஊடாக ,300 மெகாவாட் ஆற்றலை உற்பத்தி செய்யக்கூடிய அணுமின் நிலையத்தை நிர்மாணிக்க ரஷ்ய அணுசக்தி நிறுவனமான ரொசாட்டம் உடன் இலங்கை ஒப்பந்தம் செய்துள்ளதாக ரஷ்யாவிற்கான இலங்கைத் தூதுவர் தெரிவித்துள்ளார் .

இந்தியப் பெருங்கடல் தீவு தேசம் எரிசக்தி நெருக்கடியை சமாளிக்க தனக்கென சொந்த மின் உற்பத்தி நிலையத்தை வைத்திருக்க இலங்கை விரும்புத்தகாக அவர் தெரிவித்தார்

.விரைவில் இந்த கட்டுமானத்தை தொடங்குவதற்கான அனுமதியை அரசு துரிதப்படுத்தும்என நம்பிக்கை வெளியிட்டார் .

இந்த அறிவிப்பு அமெரிக்காவுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது ,இலங்கை வாலாதிக்க நாடுகளின் போட்டி காலமாக மாற்றம் பெற்றுள்ளது .

No posts found.
நடந்து சென்ற பெண்ணை இடித்து கொன்ற ஆசாமி
Posted in இலங்கை செய்திகள்

நடந்து சென்ற பெண்ணை இடித்து கொன்ற ஆசாமி

நடந்து சென்ற பெண்ணை இடித்து கொன்ற ஆசாமி

இலங்கை ஏறாவூர் பொலிஸ் பகுதியில் நடந்து சென்ற பெண் ஒருவரை
ஆசாமி ஒருவர் இடித்து கொன்றுள்ளார் .

சாலையை கடக்கும் பொழுது வேகமாக ஊந்துருளியில் பயணித்த ,
ஆசாமி ,அவரது கட்டு பாட்டை இழந்து ,
குடும்பம் பெண் மீது மோதியதில் ,பெண் சம்பவ இடத்தில பலியாகியுள்ளார் .

ஆசாமி பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் தப்பியுள்ளார் .
அதிக மது போதையில் ,மோட்டார் சைக்கிளை செலுத்தி சென்றதினால் ,
இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதக போலீசார் தெரிவித்துள்ளனர் .

இலங்கையில் தறிகெட்டு செயல் படும் இவ்வாறான ,ஆசாமிகளினால் ,
அதிக விபத்துக்கள் ஏற்பட்டு ,மக்கள் பலியாகி வருகின்றமை,
அதிகரித்து காணப்படுகின்றமை குறிப்பிட தக்கது .

No posts found.
மன்னாரில் எரிந்த வந்த பல லட்சம் நாசம்
Posted in இலங்கை செய்திகள்

மன்னாரில் எரிந்த வாகனம் பல லட்சம் நாசம்

மன்னாரில் எரிந்த வாகனம் பல லட்சம் நாசம்

மன்னார் முருங்கன் பகுதியில் பொருட்களை காவிய படி பயணித்த ,
சிறிய லொறி ஒன்று தீ பற்றி எரிந்தது நாசமாகியுள்ளது .

வாகனத்தில் தீ பரவல் ஏற்படத்தை அடுத்து சாரதியும் ,ஓட்டுனரும் குதித்தனர் ,
அவர்கள் தப்பித்த பொழுதும்,வண்டி முற்றாக தீயில் எரிந்து அழிந்துள்ளது.

இந்த தீ பரவலுக்கான காரணம் தெரியவரவில்லை .,
விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது .

No posts found.
டிக் டாக்கில் மதுபான தயாரிப்பு 6 வாலிபர்கள் கைது
Posted in இலங்கை செய்திகள்

டிக் டாக்கில் மதுபான தயாரிப்பு 6 வாலிபர்கள் கைது

டிக் டாக்கில் மதுபான தயாரிப்பு 6 வாலிபர்கள் கைது

பொசன் பௌர்ணமி தினத்தன்று டிக் டாக்கில் மதுபான தயாரிப்பு கலவையில் செயல்பட்ட 6 வாலிபர்கள் கைது செய்ய பட்டுள்ளனர் .

.நடத்தப்பட்ட மதுபான ‘தன்சல’ காட்சியை சமூக ஊடகமான ‘டிக்டோக்’ தளத்தில் பதிவேற்றம் செய்து, மதுபானத்தை விளம்பரப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் ஆறு இளைஞர்களை இலங்கை காவல்துறையின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

இந்த காணொளி சமூக ஊடகங்களில் பரவியதையடுத்து, பொலிஸ் மா அதிபர் (IGP) இது தொடர்பான விசாரணைகளை கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளார்.

அதன்படி, 20 முதல் 25 வயதுக்குட்பட்ட 6 பேர் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டு, அவர்களிடம் இருந்து வீடியோ தொடர்பாக நீண்ட வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

டிக் டாக்கில் மதுபான தயாரிப்பு 6 வாலிபர்கள் கைது

இவர்கள் கட்டுநாயக்க பிரதேசத்தில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

விசாரணைகளின் போது, ​​இளைஞர்கள் தங்கள் உறவினர் ஒருவரால் கொண்டு வரப்பட்ட வெற்று வெளிநாட்டு மதுபான போத்தல்களில் தேநீரை ஊற்றியதாகவும், டிக்டோக்கில் வெளியிடுவதற்காக வீடியோ கிளிப்பை தயாரிப்பதற்காக இந்த செயலை மேற்கொண்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், குறித்த ஆறு பேரையும் கைது செய்த புலனாய்வு அதிகாரிகள், கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியுள்ளனர்.

No posts found.
வீதியில் நடந்த துப்பாக்கி சூடு
Posted in இலங்கை செய்திகள்

வீதியில் நடந்த துப்பாக்கி சூடு

வீதியில் நடந்த துப்பாக்கி சூடு

இலங்கை லுனுகம்வெஹர பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர்,மீது வீதியோரம் மறைந்திருந்த மர்ம நபர்கள் இருவர் துப்பாக்கிச் சூடுநடத்தினர்

எனினும் இந்த துப்பாக்கிச் சூட்டில் மோட்டார் சைக்கிளின் பக்கவாட்டு கண்ணாடி ,சேதமடைந்துள்ளதாகவும், உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


குறித்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்து வருகின்றனர் .

No posts found.
யாழ்ப்பாணத்தில் 36 லட்சம் நகைகள் கொள்ளை
Posted in இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் 36 லட்சம் நகைகள் கொள்ளை

யாழ்ப்பாணத்தில் 36 லட்சம் நகைகள் கொள்ளை

யாழ்ப்பாணம் ஊர்காவல்துறை பகுதியில் வீடொன்றின் கூரையை பிய்த்து ,
இறங்கிய திருடர்கள் அங்கிருந்த 22 பவுன் நகைகளை கொள்ளை அடித்து சென்றுள்ளனர் .

இரு பெண்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவேளை ,வீட்டின் உள்ளே நுழைந்த திருடர்கள் சத்தம் இன்றி நகைகளை திருடி தப்பி சென்றுள்ளனர்

பாதிக்க பட்ட பெண்கள் காவல்துறையில் முறைப்பாடு செய்ய பட்ட நிலையில் தற்போது விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன

மேற்படி சம்பவம் அந்த பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

No posts found.
இலங்கைக்கு IMF உதவி பெற உத்தரவாதம்
Posted in இலங்கை செய்திகள்

கடனை கேட்டவர் மீது தாக்குதல்

கடனை கேட்டவர் மீது தாக்குதல்

மட்டக்களப்பு தலைநகர் பகுதியில் தனது அண்ணனுக்கு 17 வருடத்துக்கு முன்னர் கடனாக கொடுத்த பணத்தை கேட்டு வீட்டுக்கு சென்ற போது அவர்

மீது அவரது சகோதர்கள் கூரிய ஆயுதத்தால் தாக்குதல் நடத்தியதில் அவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக அவரது அண்ணன், அக்கா மற்றும் அக்காவின் கணவர் அவரது மகள் ஆகிய 4 பேரை இன்று (14) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தில் படுகாயமடைந்த மட்டு. கல்லடி பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடையவர் தனது காணியை கடந்த 17 வருடங்களுக்கு முன்னர் விற்று

அந்த பணத்தில் 6 1/2 லட்சம் ரூபாவை மூத்த சகோதரனுக்கு கடனாக வழங்கிய நிலையில் அவர் மத்திய கிழக்கு நாட்டுக்கு சென்று விட்டு கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் திரும்பி வந்துள்ளார்.

கடனை கேட்டவர் மீது தாக்குதல்

இந்த நிலையில் கொடுத்த கடணை கேட்டு சகோதரனின் வீட்டுக்கு சென்ற நிலையில் அவர் அங்கு இல்லாத நிலையில், அவர் தனது சகோதரியின் வீட்டில் இருப்பதாக அறிந்த அவர் சம்பவ தினமான நேற்று (13) மாலை 6 மணியளில்

சகோதரியின் வீட்டுக்கு சென்ற நிலையில் அங்கு ஏற்பட்ட வாய் தர்க்கம் அதிகம் ஆனாதால் அவர் மீது அவரது சகோதரன், சகோதரி, சகோதரியின்

கணவர் அவர்களது மகள் சேர்ந்து தாக்குதல் நடாத்தியதில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் என பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இச்சம்பவத்தில் தாக்குதலை மேற்கொண்ட இரு பெண்கள், இரு ஆண்கள் உட்பட 4 பேரை கைது செய்துள்ளதாகவும் அவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

No posts found.
சிறுமியை கொடுமை படுத்திய பேயோட்டி கைது
Posted in இலங்கை செய்திகள்

பொது மக்களை அச்சுறுத்திய அரசியல்வாதி கைது

பொது மக்களை அச்சுறுத்திய அரசியல்வாதி கைது

ஐக்கிய மக்கள் சக்தியின் ஹொரணை அமைப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான P.D.அபேரத்ன கைது செய்யப்பட்டுள்ளார்.

தனது துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு பொது மக்களை அச்சுறுத்திய குற்றத்திற்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட அவர் நாளைய தினம் (15) நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளதாக
பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.