Posted in சினிமா

இணையத்தை கலக்கும் ஜாலியோ ஜிம்கானா

இணையத்தை கலக்கும் ஜாலியோ ஜிம்கானா

விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தில் இடம் பெற்றிருக்கும் 2வது சிங்கிளான ஜாலியோ ஜிம்கானா என்ற பாடல் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

இணையத்தை கலக்கும் ஜாலியோ ஜிம்கானா…. பீஸ்ட் 2வது சிங்கிள்
பீஸ்ட் படத்தில் விஜய் – பூஜா ஹெக்டே


‘மாஸ்டர்’ திரைப்படத்திற்கு பிறகு விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘பீஸ்ட்’. நெல்சன் திலீப்குமார் இயக்கி இருக்கும் இப்படத்தில் நடிகை பூஜா ஹெக்டே

கதாநாயகியாக நடித்துள்ளார். இயக்குனர் செல்வராகவன் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவு பெற்றது. தற்போது பின்னணி பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஏப்ரல்

மாதம் வெளியாகும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். முதல் சிங்கிளான அரபிக் குத்து பாடல் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது.

இந்நிலையில் 2வது சிங்கிளான ‘ஜாலியோ ஜிம்கானா…’ என்ற பாடலை படக்குழுவினர்

இன்று வெளியிட்டனர். விஜய் பாடியுள்ள இந்த பாடல் ரசிகர்களை கவர்ந்து இணையத்தை கலக்

    Posted in சினிமா

    ரஜினி ஒரு சிறந்த கதாசிரியர் – இளையராஜா

    ரஜினி ஒரு சிறந்த கதாசிரியர் – இளையராஜா

    சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற இளையராஜாவின் இசைக்கச்சேரியில், ரஜினியை பற்றி பேசி ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறார்.

    ரஜினி ஒரு சிறந்த கதாசிரியர் – இளையராஜா புகழாரம்
    ரஜினி – இளையராஜா


    இளையராஜாவின் இசைக்கச்சேரி ராக் வித் ராஜா என்ற பெயரில் சென்னை தீவுத்திடலில் நடைபெற்றது. முதல் முறையாகத் தமிழ்நாடு சுற்றுலா இந்த நிகழ்ச்சிக்காக இடத்தைக் கொடுத்திருந்தது. பதினைந்தாயிரம் பேர் கலந்து கொண்ட

    இந்த நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள், காவல்துறையை சேர்ந்த உயரதிகாரிகள் பலரும் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். தனுஷ், கங்கை அமரன் உட்பட திரையுலகினர்

    பலரும் கலந்து கொண்டனர். வான வேடிக்கை முழங்க, ரசிகர்கள் எழுந்து நின்று கரகோசம் செய்தனர். சரியாக 7.20 மணிக்கு இளையராஜா மேடைக்கு வந்து தனது ஜனனி ஜனனி பாடலோடு ஆரம்பித்தார்.

    அடுத்தடுத்து இளமை இதோ..இதோ. மாமன் வூடு மச்சு வூடு, ராக்கு முத்து ராக்கு, நிலாவே வா, மேகம் கொட்டட்டும், என் உள்ளே போன்ற பாடல்கள் ஒலித்தன.

    எஸ்.பி.பாலசுப்ரமணியன் பாடலை சரணும், மனோவும், பாடினார்கள். ஆனால் அந்த இடத்தை அவர்களால் எட்ட முடியவில்லை. எஸ்.பி.பி., லதா மங்கேஷ்கருக்கு ஒரு நிமிடம்

    மௌன அஞ்சலி செலுத்தும்படி கேட்டுக்கொண்டார். நிகழ்ச்சியின் இடையே இளையராஜா பேசியதாவது,

    என் பால்ய சினேகிதன் பாலு இந்த நேரத்தில் இல்லாதது வருத்தமாக இருக்கிறது. அநியாயமாக கொரோனாவால் இறந்து விட்டார். வள்ளி படத்தில் இடம் பெற்ற

    என்னுள்ளே பாடலைக்கேட்டுக் கைதட்டினீர்கள். அந்த பாடல் அவ்வளவு அழகாக இருக்கக் காரணம் ரஜினிகாந்த் என்னிடம் கதையை அப்படி அழகாக விளக்கினார்.

    ரஜினி – இளையராஜா

    அவரை ஒரு நடிகராக நான் பார்த்திருக்கிறேன். அவருக்குள் ஒரு சிறந்த திரைக்கதையாசிரியர் இருந்ததை நான் அன்றுதான் பார்த்தேன். நல்ல கதாசிரியர்

    ரஜினி. என்று புகழ்ந்து பேசிவிட்டு தனுஷ் எழுந்து நில்லு இந்தப் பாடல் இவ்வளவு அழகாக வர உன் மாமனார்தான் காரணம் என்று கூறினார். இதைக்கேட்டு ரசிகர்கள் கரகோசம் செய்தனர்.

    தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் எண்பதுகளின் மெலடி பாடல்களைப் பாடி ரசிகர்களை உற்சாகம் குறையாமல் வைத்தார் இளையராஜா.

      Posted in சினிமா

      அந்த நடிகையை திருமணம் செய்யும் இந்த நடிகர்

      அந்த நடிகையை திருமணம் செய்யும் இந்த நடிகர்

      டார்லிங், சார்லி சாப்ளின் படங்களில் நடித்த நிக்கி கல்ராணியை ஈரம் படம் அறிமுகமான நடிகர் ஆதி திருமணம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

      நிக்கி கல்ராணியை திருமணம் செய்யும் ஆதி
      ஆதி – நிக்கி கல்ராணி


      தமிழில் டார்லிங் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நிக்கி கல்ராணி. தொடர்ந்து யாகாவா ராயினும் நாகாக்க, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், நெருப்புடா, கலகலப்பு-2, சார்லி சாப்ளின் உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார்

      . நிக்கி கல்ராணியும், நடிகர் ஆதியும் காதலிப்பதாக ஏற்கனவே கிசுகிசுக்கள் வந்தன. இருவரும் யாகவா ராயினும் நாகாக்க படத்தில் இணைந்து நடித்தபோது காதல் வயபட்டதாக கூறப்பட்டது. இதனை அவர்கள் மறுக்கவில்லை.

      ஆதி வீட்டில் நடந்த குடும்ப நிகழ்ச்சிகளில் நிக்கி கல்ராணி பங்கேற்ற புகைப்படங்கள் வலைத்தளத்தில் வெளியாகி நெருக்கத்தை உறுதிப்படுத்தியது. மிருகம் படத்தில் ஆதி

      அறிமுகமாகி ஈரம், அய்யனார், அரவான், மரகத நாணயம், யு டர்ன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கிறார்.

      ஆதி – நிக்கி கல்ராணி

      இந்த நிலையில் நிக்கி கல்ராணிக்கும், ஆதிக்கும் திருமண ஏற்பாடுகள் நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்க உள்ளதாகவும்

      கூறப்படுகிறது. ஆனாலும் இதனை இருவர் தரப்பிலும் உறுதிப்படுத்தவில்லை

        Posted in சினிமா

        ஏமாற்றம்தான்-நம்பிக்கையுடன் இருக்கிறேன் – ஹன்சிகா

        ஏமாற்றம்தான்-நம்பிக்கையுடன் இருக்கிறேன் – ஹன்சிகா

        தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருக்கும் ஹன்சிகா, தன்னுடைய படம் பற்றி சமீபத்தில் பேட்டியளித்து இருக்கிறார்.

        ஏமாற்றம்தான்… ஆனால் நம்பிக்கையுடன் இருக்கிறேன் – ஹன்சிகா
        ஹன்சிகா


        நடிகை ஹன்சிகா மோத்வானி முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் படம் ‘மஹா’. இது அவருடைய 50வது திரைப்படம். இதில் நடிகர் சிம்பு கவுரவ வேடத்தில் நடித்திருக்கிறார்.

        மேலும் ஶ்ரீகாந்த், கருணாகரன், தம்பி ராமையா, பேபி மானஸ்வி, மற்றும் பல முக்கிய நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.

        மஹா படம் நீண்ட காலமாக உருவாகி வருகிறது. இயக்குனருக்கும் தயாரிப்பாளருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் தான் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. உங்களின் 50வது படம் தாமதமாகிக் கொண்டிருக்கிறது என்பது

        உங்களுக்கு கஷ்டமாக இருக்கிறதா? என்று ஹன்சிகாவிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு, “ஆமா, வருத்தமாக இருக்குது என்று நான் சொல்லமாட்டேன், ஆனால் அதற்கு இவ்வளவு காலம் எடுத்துக்கிட்டிருக்கிறது ஏமாற்றம் என்று சொல்லலாம்.

        ஆனால் இது எனது 50வது படம் என்பதால் நம்பிக்கையுடன் இருக்கிறேன். இன்று என்னுடைய 55வது படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறேன். ஆனால் பரவாயில்லை!

        ஒவ்வொரு படத்திற்கும் விதி-ன்னு ஒன்று இருக்கிறது. அது மாதிரி மஹா படத்திற்கும் அதன் விதி இருக்கிறது. மஹா ரிலீசை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். விரைவில்

        எல்லாம் சீராகும். இந்த தாமதம் உள்பட எல்லாமே படத்திற்கு சாதகமாக அமையும் என்றும் நம்புகிறேன்’ என்றார்

          Posted in சினிமா

          மனைவி ஐஸ்வர்யாவை வாழ்த்திய தனுஷ்

          .மனைவி ஐஸ்வர்யாவை வாழ்த்திய தனுஷ்
          தனுஷ்-ஐஸ்வர்யா இருவரின் திருமண வாழ்க்கை பிரிவிற்கு பிறகு தனுஷ், ஐஸ்வர்யாவை வாழ்த்திய விதத்தால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

          ஐஸ்வர்யாவை வாழ்த்திய தனுஷ்… ரசிகர்கள் அதிர்ச்சி
          தனுஷ் – ஐஸ்வர்யா


          நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா தற்போது ‘பயணி’ என்ற இசை ஆல்பம் ஒன்றை இயக்கியுள்ளார். இந்த இசை ஆல்பம் தமிழில் ‘பயணி’, தெலுங்கில் ‘சஞ்சாரி’, மலையாளத்தில் ‘யாத்ரக்காரன்’, இந்தியில் ‘முசாபிர்’ என்ற பெயரில் தயாராகி உள்ளது.

          இந்த ‘பயணி’ இசை ஆல்பத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். விவேகா பாடல் வரிகள் எழுதியுள்ளார். இந்த பாடலை நடிகர் ரஜினிகாந்த் இன்று தன்னுடைய சமூக வலைதளத்தில் வெளியிட்டார். தமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதியாக வலம் வந்த

          தனுஷ்- ஐஸ்வர்யா, கடந்த மாதம் பிரிய போவதாக அறிவித்து சினிமா உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தினர். இதன் மூலம் அவர்களது 18 வருட திருமண வாழ்க்கை

          முறிந்தது. அதைத் தொடர்ந்து இருவரும் அவரவர் வேலைகளில் கவனம் செலுத்த தொடங்கினர்.

          இந்த நிலையில் நடிகர் தனுஷ் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பயணி இசை ஆல்பத்தை பகிர்ந்து, ஐஸ்வர்யாவை தோழி என குறிப்பிட்டு அவருக்கு வாழ்த்து

          தெரிவித்தார். இந்நிலையில், தனது இசை ஆல்பத்தை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்த தனுஷுக்கு,
          ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார்.

            Posted in சினிமா

            இடுப்பழகை காட்டி ரசிகர்களை கிறங்க வைத்த ஷெரின்

            இடுப்பழகை காட்டி ரசிகர்களை கிறங்க வைத்த ஷெரின்

            சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமடைந்த நடிகை ஷெரின் இடுப்பழகை காட்டி எடுத்த புகைப்படம் வைரலாகியுள்ளது.

            இடுப்பழகை காட்டி ரசிகர்களை கிறங்க வைத்த ஷெரின்
            ஷெரின்


            செல்வராகவன் இயக்கத்தில் 2002ம் ஆண்டு வெளியான துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை ஷெரின். தெலுங்கு, கன்னடம்,

            மலையாளம் ஆகிய மொழி படங்களிலும் நடித்துள்ளார். கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசனில் கலந்துக் கொண்டு மிகவும் பிரபலமானார்.

            பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது குண்டாக இருந்த ஷெரின் அதன்பின் 10 கிலோ வரை உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறினார். அவ்வப்போது சமூக

            வலைத்தளத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வரும் ஷெரின் தற்போது மஞ்சள் நிற சேலையில் இடுப்பழகை காட்டி ரசிகர்களை கிறங்க வைக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது

              Posted in சினிமா

              ரஜினியுடன் இணையும் பிரியங்கா மோகன்

              ரஜினியுடன் இணையும் பிரியங்கா மோகன்

              எதற்கும் துணிந்தவன் படத்தின் வெற்றியை தொடர்ந்து பிரியங்கா மோகன், அடுத்ததாக ரஜினியுடன் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

              ரஜினியுடன் இணையும் பிரியங்கா மோகன்
              பிரியங்கா மோகன்


              சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி வெற்றிப்பெற்ற படம் டாக்டர். நெல்சன் இயக்கிய இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்திருந்தார். இப்படத்தின் மூலம் தமிழில் கதாநாயகிய அறிமுகமான இவர் தன்

              நடிப்பால் முதல் படத்திலேயே அனைவரையும் கவர்ந்து, பிறகு பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்து பாராட்டை பெற்றார் பிரியங்கா மோகன்.

              இவர் நடிப்பில் டான் திரைப்படம் உருவாகி உள்ளது. இதில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். அறிமுக

              இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இப்படத்தின் மூலம் அறிமுகமாகிறார். டான் திரைப்படம் வருகிற மே மாதம் 13-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

              இந்நிலையில், நடிகை பிரியங்கா மோகன் அடுத்ததாக நெல்சன் இயக்கத்தில் உருவாக இருக்கும் தலைவர் 169 படத்தில் ரஜினியுடன் இணைந்து நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

                Posted in சினிமா

                அப்படி ஒன்றும் நடக்கவே இல்லை.. விஜய் தரப்பு விளக்கம்

                அப்படி ஒன்றும் நடக்கவே இல்லை.. விஜய் தரப்பு விளக்கம்

                முன்னணி நடிகராக இருக்கும் விஜய் பற்றி வெளியான தகவல்களுக்கு அவர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

                அப்படி ஒன்றும் நடக்கவே இல்லை.. விஜய் தரப்பு விளக்கம்
                விஜய்


                விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘பீஸ்ட்’. நெல்சன் இயக்கி வரும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். அனிருத் இப்படத்திற்கு

                இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்திலிருந்து வெளியான அரபிக் குத்து பாடல் அனைவரையும் கவர்ந்து பல சாதனைகளை முறியடித்தது.

                சமீபத்தில் ஹைதராபாத் படப்பிடிப்பிலிருந்த நடிகர் விஜய்யை பிரஷாந்த் கிஷோர் சந்தித்தாகவும், ஒன்றரை மணி நேரம் இந்த சந்திப்பு நடந்ததாகவும் செய்திகள்

                வெளியானது. இந்த சந்திப்பில் தமிழக அரசியல் குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. ஆனால், விஜய் தரப்பில் இந்த சந்திப்பு நடைபெறவில்லை என்றும், சந்தித்ததாக வந்த தகவல்கள் அனைத்தும் வதந்தி என்று கூறப்பட்டுள்ளது

                  Posted in சினிமா

                  .திருட்டில் ஈடுபட்ட பிரபல நடிகை கைது

                  .திருட்டில் ஈடுபட்ட பிரபல நடிகை கைது

                  கொல்கத்தாவில் நடைபெற்ற சர்வதேச புத்தகக் கண்காட்சியில் திருட்டில் ஈடுபட்ட குற்றச் சாட்டில் பிரபல தொலைக்காட்சி நடிகை ஒருவரைப் பொலிஸார் கைது செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

                  மேற்கு வங்காள மாநிலம், கொல்கத்தாவில் கடந்த 12 ஆம் திகதி சர்வதேச புத்தகக் கண்காட்சியொன்று நடைபெற்றது. இக் கண்காட்சியில் கலந்து கொண்ட பிரபல தொலைக்காட்சி நடிகையான ‘ரூபா தத்தா‘ குப்பைக் கூடை ஒன்றில் ஒரு பணப்பையை எறிவதைப் பொலிஸ் அதிகாரி ஒருவர் கண்டுள்ளார்.

                  இதனையடுத்து இது குறித்து ரூபா தத்தாவிடம் அவர் விசாரித்தபோது, அவர் தடுமாற்றமாய் பதிலளித்தார்.

                  இதனால் சந்தேகம் அடைந்த குறித்த பொலிஸ் அதிகாரி நடிகையின் பையை பரிசோதித்தபோது அதில் பல பணப்பைகளும், சுமார் 75 ,000 ரூபா பணமும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

                  விசாரணையில் பணப்பையைக் குப்பைக் கூடையில் போட்டு, அதை மற்றவர்களுடையதா என்று கேட்டு அவர்களின் கவனத்தைத் திசை திருப்பி அவர்களது பணப்பையைத் திருடுவதை நடிகை ரூபா தத்தா வழக்கமாக வைத்திருந்தார் என்பது தெரியவந்துள்ளது.

                  இந்நிலையில் அவரைக் கைது செய்த பொலிஸார் இதில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா என்று விசாரணை செய்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது

                  Posted in சினிமா

                  விஜய் வழக்கு- தீர்ப்பை தள்ளி வைத்த நீதிபதி

                  விஜய் வழக்கு- தீர்ப்பை தள்ளி வைத்த நீதிபதி

                  சொகுசு கார் இறக்குமதி செய்த விவகாரத்தில் விஜய் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி, தீர்ப்பு தேதியை குறிப்பிடாமல் தள்ளி வைத்திருக்கிறார்.

                  விஜய் தொடர்ந்த வழக்கு… தீர்ப்பை தள்ளி வைத்த நீதிபதி
                  விஜய்


                  நடிகர் விஜய் கடந்த 2005 ஆம் ஆண்டு அமெரிக்காவில் இருந்து சொகுசு காரை இறக்குமதி செய்திருந்தார். இந்தக் காருக்கான நுழைவு வரியை அவர் செலுத்த தாமதப்படுத்தியதாக கூறி வணிக வரித்துறை அபராதம் விதித்தது.

                  இந்த நிலையில் விஜய் தரப்பில், ஏற்கனவே நுழைவு வரி செலுத்தப்பட்டுவிட்டது. அதிகப்படியான அபராதம் விதித்ததை எதிர்த்தே வழக்கு தொடர்ந்துள்ளேன். ஆகவே

                  அபராதம் விதிப்பது தொடர்பான நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று கூறி மனு தாக்கல் செய்தார்.

                  விஜய்

                  இந்த வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது வணிகவரித்துறை சார்பில் நடிகர் விஜய்யின் மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று

                  கூறியது. இது குறித்து மேலும் சில விபரங்களைக் கேட்ட நீதிபதி, நடிகர் விஜய் வழக்கின் தீர்ப்பு தேதியை குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்

                    Posted in சினிமா

                    கவர்ச்சியில் கலக்கும் நடிகை

                    கவர்ச்சியில் கலக்கும் நடிகை

                    இதய திருடன், மச்சக்காரன், ராஜாதி ராஜா உள்ளிட்ட படங்களில் நடித்த காம்னா, மீண்டும் தமிழ் படங்களில் ரீ-என்ட்ரி கொடுக்க இருக்கிறார்.

                    ரீ-என்ட்ரி கொடுக்கும் காம்னா ஜெத்மலானி
                    காம்னா


                    கடந்த 2005 ஆம் ஆண்டு, ஜெயம் ரவி நடித்த ‘இதயதிருடன்’ படத்தின் மூலம் இளம் ரசிகர்கள் மனதை தன்னுடைய கவர்ச்சியால், அழகாலும் கொள்ளை கொண்டவர்,

                    நடிகை காம்னா. இப்படத்திற்குப் பிறகு ஜீவனுடன் ‘மச்சக்காரன்’, லாரன்ஸுடன் ’ராஜாதி ராஜா’ ’காசேதான் கடவுளடா’ உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

                    இவர் தமிழ் மொழி மட்டுமில்லாமல், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார். கவர்ச்சியால் பல ரசிகர்களை தன் வசமாக்கிய காம்னா, தற்போது சிறிய

                    இடைவெளிக்குப் பிறகு அதே அழகுடன் ரசிகர்களை கவர மீண்டும் களமிறங்க இருக்கிறார்.

                    சமூக வலைத்தள பக்கத்தில் அவ்வப்போது தன்னுடைய அழகிய புகைப்படங்களை வெளியிடுவதையும் வழக்கமாக வைத்திருக்கும் காம்னா, சமீபத்தில் வெளியிட்டுள்ள

                    புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் லைக்குகள் குவிந்து வருகிறது. மேலும் பலர் இன்னும் அதே அழகுடன் இருப்பதாகவும் பதிவு செய்து வருகிறார்கள்.

                    காம்னா

                    இந்நிலையில், நடிகை காம்னா, தமிழில் நடிக்க ஆர்வமாக கதைகளை கேட்டு வருகிறார். கதைக்கு ஏற்றவாறு எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் நடிக்க தயாராகி

                    இருக்கும் காம்னா, விரைவில் தான் நடிக்கும் படங்கள் பற்றிய விவரங்களை அறிவிக்க இருக்கிறார்.

                      Posted in சினிமா

                      ரசிகர்கள் என்னிடம் எதிர்பார்ப்பது வேற சன்னி லியோன்

                      ரசிகர்கள் என்னிடம் எதிர்பார்ப்பது வேற சன்னி லியோன்

                      நடிகை சன்னி லியோன் சமீபத்தில் அளித்த பேட்டி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

                      ரசிகர்கள் என்னிடம் எதிர்பார்ப்பது வேற… சன்னி லியோன்
                      சன்னி லியோன்


                      வெளிநாட்டில் ஆபாச படங்களில் நடித்து நடிகையான சன்னி லியோன் தற்போது இந்தி படங்களில் நடித்து வருகிறார். தமிழில் ‘வடகறி’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனம்

                      ஆடினார். தற்போது தமிழ், இந்தி, கன்னட மொழிகளில் தயாராகும் வீரமாதேவி என்ற சரித்திர படத்தில் நடித்து வருகிறார். மேலும் பேய்ப்படம் ஒன்றில் நடித்து வருகிறார்.

                      தனியார் பத்திரிக்கைக்கு அவர் கொடுத்த நேர்காணலில், 40 வயதான சன்னி லியோன் தனது திரையுலக பயணம், நல்லது, கெட்டது மற்றும் தனது மோசமான தருணங்கள் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார். இந்நிலையில், சன்னி லியோன் தனது வாழ்க்கை

                      ரசிகர்கள் என்னிடம் எதிர்பார்ப்பது வேற சன்னி லியோன்

                      வரலாற்றுப் படமான “கரன்ஜித் கவுர்” – தி அன்டோல்ட் ஸ்டோரி ஆஃப் சன்னி லியோனுக்குப் பிறகு, அனாமிகா என்ற வெப் சீரிஸில் நடித்து வருகிறார்.

                      சன்னி லியோன்
                      சன்னி லியோன்

                      இதுகுறித்து அவர் தனியார் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

                      “அனாமிகா செட்டில் நான் செலவழித்த ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு நாளும் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது, ஏனென்றால் சண்டை காட்சிகள் எனக்கு

                      ரசிகர்கள் என்னிடம் எதிர்பார்ப்பது வேற சன்னி லியோன்

                      உண்மையிலேயே பிடிக்கும். எனது நிஜ வாழ்க்கையில் நான் ஒருபோதும் சண்டையிட மாட்டேன், எனவே இந்த வித்தியாசமான விஷயங்களை எப்படி செய்வது என்று கற்றுக்கொள்வது மிகவும் சந்தோசமாக இருந்தது.

                      அனாமிகா என்று படத்திற்கு பெயர் வைத்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. விக்ரம் சாரிடம் நிறைய கற்றுக்கொண்டேன். நடிப்பாக இருந்தாலும் சரி, சண்டை காட்சியாக இருந்தாலும் சரி, என்னையும் என் கதாபாத்திரத்தையும் அவர் எப்படி

                      உருவாக்கினார் என்பது இதுவரை நான் அனுபவித்திராத ஒன்று. யாரோ ஒருவர் தங்கள் முழு முயற்சியையும் என் மீது நம்பிக்கையையும் வைத்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

                      சன்னி லியோன்
                      சன்னி லியோன்

                      நான் கவர்ச்சியான கதாபாத்திரத்தில் நடிப்பேன் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள் அவ்வாறு நடிப்பதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. இது ஒரு நல்ல

                      சமநிலையான கதாபாத்திரம், காதல் இருக்கிறது, நெருக்கமான காட்சிகள் உள்ளன, ஆனால் இது மக்கள் என்னிடம் வழக்கமாக எதிர்பார்க்கும் கதாபாத்திரம் அல்ல.

                      நான் என் ரசிகர்களை நேசிக்கிறேன், அவர்கள் என்னை முழு மனதுடன் ஏற்றுக்கொண்டார்கள். அவர்கள் என்னை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள், காலப்போக்கில் அவர்கள் என்னை ஏற்றுக்கொள்கிறார்கள். ஒவ்வொரு படமும்

                      வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன், நான் செய்வதை மக்கள் விரும்புவார்கள், சில சமயங்களில் அவர்கள் விரும்ப மாட்டார்கள், ஆனால் ஒரு

                      நடிகராக, நான் தொடர்ந்து வித்தியாசமான விஷயங்களைச் செய்து, என்னிடம் இருப்பதை நிரூபிக்க விரும்புகிறேன்” என்றார்

                        Posted in சினிமா

                        நயன்தாரா ரகசிய திருமணம்

                        நயன்தாரா ரகசிய திருமணம்

                        நடிகை நயன்தாராவும் அவருடைய காதலர் விக்னேஷ் சிவனும் ரகசிய திருமணம் செய்துக்கொண்டதாக ரசிகர்கள் சில புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர்.

                        நயன்தாரா ரகசிய திருமணம்?.. வைரலாகும் புகைப்படம்
                        விக்னேஷ் சிவன் – நயன்தாரா


                        நடிகர், பாடலாசிரியர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்டவர் விக்னேஷ் சிவன். இவர் சிம்புவின் ‘போடா போடி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார்

                        இதையடுத்து 2015-ம் ஆண்டு அவர் இயக்கிய ‘நானும் ரவுடி தான்’ படத்தின் போது, நயன்தாராவுக்கும், அவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இவர்களது காதல் 6

                        ஆண்டுகளாக நீடித்து வருகிறது. விரைவில் இவர்கள் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

                        சமீபத்தில் நடிகை நயன்தாரா, தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் சென்னை தம்புச்செட்டி தெருவில் உள்ள காளியம்மாள் கோவிலில் சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த சென்னை மாநகராட்சியின் புதிய பெண் மேயர்

                        பிரியா ராஜனை சந்தித்து பேசி எடுத்துக் கொண்ட புகைப்படமும் வைரலானது. இந்நிலையில், அங்கு எடுக்கப்பட்ட சில புகைப்படத்தில், நடிகை நயன்தாரா நெற்றியில்

                        குங்குமத்துடன் இருப்பதை போன்று தெரிகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் ரகசிய


                        திருமணம் செய்துக்கொண்டதாக பதிவிட்டு, சமூக வலைத்தளங்கில் அவர்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

                          Posted in சினிமா

                          பட வாய்ப்பு இல்லாததால் திருமணம் செய்ய ஆசைப்படும் நடிகை

                          பட வாய்ப்பு இல்லாததால் திருமணம் செய்ய ஆசைப்படும் நடிகை

                          பல வெற்றி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருப்பவர், பட வாய்ப்பு இல்லாததால் திருமணம் செய்ய முடிவு செய்திருக்கிறாராம்.

                          திருமணம் செய்ய ஆசைப்படும் நடிகை

                          தமிழ் சினிமாவில் 20 வருடங்களுக்கு மேலாக கதாநாயகியாக நடித்து வரும் நடிகைக்கு தற்போது சில காலமாக பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கிறாராம். நடிகை நடித்த ஒரு

                          சில படங்கள் ரிலீசாகாமல், பிரச்சனைகளில் சிக்கி இருக்கிறதாம். இதனால் நடிகை திருமணம் செய்ய முடிவு செய்திருக்கிறாராம்.

                          திருமணம் தற்போது வேண்டாம் என்று தவிர்த்து வந்த நடிகை, தற்போது பட வாய்ப்புகள் இல்லாததால் தன் மனதை மாற்றி இருக்கிறாராம்.

                          இதற்காக பெற்றோர்கள் நடிகைக்காக வலைவீசி மாப்பிள்ளை தேடி வருகிறார்களாம்

                            Posted in சினிமா

                            நீச்சலுடையில் கலக்கும் காதல் இளவரசி ஓவியா

                            நீச்சலுடையில் கலக்கும் காதல் இளவரசி ஓவியா

                            பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை ஓவியா கடலில் குளிக்கும் புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

                            நீச்சலுடையில் ஓவியா… வைரலாகும் புகைப்படங்கள்
                            ஓவியா


                            களவாணி படம் மூலம் பலருடைய கவனத்தை ஈர்த்த ஓவியா, பிக்பாஸ் நிகழ்ச்சி மிகவும் பிரபலமானார். இந்நிகழ்ச்சியில் முதல் முதலில் ஆர்மி ஆரம்பிக்கப்பட்டது

                            ஓவியாவுக்கு தான். ஆனால், பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு பல படங்களில் நடிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், எந்த பட வாய்ப்பும் இல்லாமல் இருக்கிறார்.

                            ஓவியா

                            இவர் அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிடுவதோடு தத்துவங்களையும் பதிவு செய்வார்.

                            இந்நிலையில், தனது சமூக வலைத்தள பக்கத்தில் பிகினி உடையில் கடலில் குளிக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

                            ஓவியா

                            மேலும் இந்த புகைப்படத்திற்கு கேப்ஷனாக ’கவலைகளை கடலில் கரைத்து விடுங்கள்’

                            என்றும் அவர் பதிவு செய்துள்ளார். ஓவியாவின் இந்த கிளாமர் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள்

                              Posted in சினிமா

                              தொழிலபதிபரை மணந்தார் பாடகி

                              தொழிலபதிபரை மணந்தார் பாடகி

                              தமிழ் சினிமாவில் பாடகியாகவும், நடிகையாகவும் வலம் வரும் ஸ்வாகதா தொழிலதிபரை திருமணம் செய்திருக்கிறார்.

                              தொழிலபதிபரை மணந்தார் பாடகி ஸ்வாகதா
                              கணவருடன் ஸ்வாகதா


                              தமிழ் சினிமாவில் பாடகியாகவும், நடிகையாகவும் வலம் வருபவர் ஸ்வாகதா. இவர் பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர் அக்‌ஷய் குமாரை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். கங்கை நதிக்கரையில் இமயமலை அடிவாரத்தில் ரிஷிகேஷில்

                              இவர்களின் திருமணம் நடைபெற்றுள்ளது. மார்ச் 4 ஆம் தேதி நடந்த இந்த விழாவில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர்.

                              தனது திருமண விழாவின் படங்களை தற்போது பகிர்ந்து கொண்ட ஸ்வாகதா, “எங்கள் பெற்றோர்கள், எங்கள் குரு மற்றும் எங்களை ஒன்றிணைத்த அனைவரின் ஆசியுடன்,

                              நான் மார்ச் 4, 2022 அன்று ரிஷிகேஷில் ஆற்றங்கரையில் நடந்த அழகான திருமண விழாவில் அக்ஷய் குமாரை மணந்தேன். கங்கா” என்று தெரிவித்துள்ளார்.

                              ஸ்வாகதா

                              ஸ்வாகதா தமிழில் சில பாடல்களையும், காயல் மற்றும் இன்ட்ரா ஆகிய படங்களில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார். இந்த படங்கள் விரைவில் வெளியாக இருக்கிறது

                                Posted in சினிமா

                                மாலத்தீவில் கவர்ச்சி.. வைரலாகும் வரலட்சுமி

                                மாலத்தீவில் கவர்ச்சி.. வைரலாகும் வரலட்சுமி

                                தமிழ் தெலுங்கு என பல மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை வரலட்சுமி சரத்குமாரின் கவர்ச்சி வீடியோ வைரலாகி வருகிறது.

                                மாலத்தீவில் கவர்ச்சி.. வைரலாகும் வரலட்சுமி வீடியோ
                                வரலட்சுமி சரத்குமார்


                                ‘போடா போடி’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் வரலட்சுமி. இப்படத்தில் துறுதுறுவான நடிப்பால் இளைஞர்களை கவர்ந்தார். பாலா இயக்கத்தில் வெளியான ‘தாரைதப்பட்டை’ படம் இவருக்கு நல்ல அடையாளத்தை தந்தது. அதன்பின் வரலட்சுமி

                                சரத்குமார், ’விக்ரம் வேதா’, ‘மாரி-2’, ‘கன்னிராசி’, ‘பாம்பன்’, ‘ நீயா-2’, ‘எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்’, ‘மிஸ்டர் சந்திரமௌலி’, ‘ சண்டக்கோழி-2’, ,சர்க்கார்’

                                உள்ளிட்ட படங்களில் நடித்து அனைவரையும் கவர்ந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வருகிறார்.

                                வரலட்சுமி சரத்குமார்

                                இந்நிலையில், வரலட்சுமி மாலத்தீவிற்கு சென்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அதனை பதிவி செய்யும் வகையில் அங்கு எடுத்துக்கொண்ட

                                கவர்ச்சி புகைப்படங்கள் அடங்கிய வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

                                  Posted in சினிமா

                                  சென்னை மேயருடன் நயன்தாரா-அவருடைய காதலர் விக்னேஷ்

                                  சென்னை மேயருடன் நயன்தாரா-அவருடைய காதலர் விக்னேஷ்

                                  நடிகை நயன்தாராவும் அவருடைய காதலர் விக்னேஷ் சிவனும் சென்னை மேயருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகியுள்ளது.

                                  சென்னை மேயருடன் நயன்தாரா.. வைரலாகும் புகைப்படம்
                                  நயன்தாரா


                                  நடிகர், பாடலாசிரியர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்டவர் விக்னேஷ் சிவன். இவர் சிம்புவின் ‘போடா போடி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதையடுத்து 2015-ம் ஆண்டு அவர் இயக்கிய ‘நானும் ரவுடி தான்’ படத்தின் போது,

                                  நயன்தாராவுக்கும், அவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இவர்களது காதல் 6 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. விரைவில் இவர்கள் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

                                  பிரியா ராஜன் – நயன்தாரா – விக்னேஷ் சிவன்
                                  பிரியா ராஜன் – நயன்தாரா – விக்னேஷ் சிவன்

                                  இந்நிலையில், நடிகை நயன்தாரா, தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் சென்னை தம்புச்செட்டி தெருவில் உள்ள காளியம்மாள் கோவிலில் சாமி தரிசனம் செய்ய

                                  செறுள்ளனர். அப்போது அங்கு வந்த சென்னை மாநகராட்சியின் புதிய பெண் மேயர் பிரியா ராஜனை சந்தித்து பேசி, இருவரும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

                                  அந்தப் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி அனைவரையும் கவர்ந்து வருகிறது

                                    Posted in சினிமா

                                    ஐஸ்வர்யா ரஜினிகாந்தை நெகிழ்ந்து பேசிய பிரபு தேவா

                                    .ஐஸ்வர்யா ரஜினிகாந்தை நெகிழ்ந்து பேசிய பிரபு தேவா

                                    இந்திய சினிமாவின் முன்னணி நடன இயக்குனரும் நடிகருமான பிரபு தேவா, ஐஸ்வர்யா ரஜினிகாந்தை நெகிழ்ந்து பேசிய வீடியோ வைரலாகியுள்ளது.

                                    ஐஸ்வர்யா ரஜினிகாந்தை நெகிழ்ந்து பேசிய பிரபு தேவா.. வைரலாகும் வீடியோ
                                    பிரபு தேவா


                                    ஐஸ்வர்யா-தனுஷ் திருமணம் உறவு முறிந்த பிறகு, ஐஸ்வர்யா தனது இயக்குனர் வேலையில் ஆர்வம் காட்டுவதாக சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டது. அதன்படி ஐஸ்வர்யா தனது ‘பயணி’ மியூஸிக் ஆல்பம் வீடியோ வேலைகளை ஆரம்பித்துள்ளதாக

                                    அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். இதற்கான பணிகள் ஹைதராபாத்தில் அவர் தொடங்கியிருந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என நான்கு மொழிகளில்

                                    இப்பாடல் உருவாகியுள்ளது. அன்கித் திவாரி இசையமைத்துள்ள இப்பாடலை தமிழில் அனிருத், மலையாளத்தில் ரஞ்சித் கோவிந்த், தெலுங்கில் சாகர், இந்தியில் அன்கித் திவாரி என இசை கலைஞர்கள் பாடியுள்ளனர்.

                                    ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
                                    ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

                                    இப்பாடல் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் சினிமா பிரபலங்கள் ரசிகர்கள் என பலரும் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை பாராட்டி வருகின்றனர்.


                                    அந்த வகையில் நடன இயக்குனரும், நடிகருமான பிரபு தேவா ஐஸ்வர்யா ரஜினிகாந்தை வாழ்த்தி, நெகிழ்ந்து பேசி வீடியோ வெளியிட்டுள்ளார்
                                    . இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

                                      Posted in சினிமா

                                      அந்த நடிகருடன் ஜோடி சேர்ந்த சுருதிஹாசன்

                                      அந்த நடிகருடன் ஜோடி சேர்ந்த சுருதிஹாசன்

                                      சுருதிஹாசன் தனக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக சிரஞ்சீவி சமூக வலைத்தளத்தில் தெரிவித்து உள்ளார்.

                                      பிரபல நடிகருடன் ஜோடி சேர்ந்த சுருதிஹாசன்
                                      சுருதிஹாசன்


                                      சுருதிஹாசன் நடிப்பில் கடந்த வருடம் லாபம் படம் வெளியானது. மேலும் அவர் நடித்த 3 தெலுங்கு படங்கள், ஒரு இந்தி படம் ஆகியவையும் ரிலீசானது. தற்போது பிரபாஸ்

                                      ஜோடியாக தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாள மொழிகளில் தயாராகும் சலார் படத்தில் நடித்து வருகிறார். ரூ.150 கோடி செலவில் இரண்டு பாகங்களாக இந்த படம் உருவாகிறது.

                                      அடுத்து தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா ஜோடியாக புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இது பாலகிருஷ்ணாவுக்கு 107-வது படம். படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இந்த நிலையில் சிரஞ்சீவியின் 154-வது படத்தில் அவருக்கு

                                      ஜோடியாக நடிக்க சுருதிஹாசனிடம் பேசி வந்தனர். வயதான நடிகரான சிரஞ்சீவியுடன் ஜோடிசேர சுருதிஹாசன் சம்மதிப்பாரா என்று சிலர் சந்தேகம் கிளப்பினர். இந்த

                                      நிலையில் சுருதிஹாசன் தனக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக சிரஞ்சீவி சமூக வலைத்தளத்தில் தெரிவித்து உள்ளார். இருவரும் ஜோடியாக இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்