Posted in உலக செய்திகள்

அமெரிக்காவில் – தீயில் எரிந்து இரண்டு மில்லியன் ஏக்கர் காடு

அமெரிக்காவில் – தீயில் எரிந்து இரண்டு மில்லியன் ஏக்கர் காடு

அமெரிக்காவில் கடந்த பன்னிரண்டு மாதங்காளிகள் சுமார்

இரண்டு மில்லியன் ஏக்கர் காடுகள் தீயில் எரிந்து அழிந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளன

இந்த தீ விபத்தினால் பல நூறு வீடுகள் மற்றும் சொத்துக்கள் எரிந்துள்ளன

வன விலங்குகள் மற்றும் உடைமைகள் என்பனவும் தீயில் எரிந்து அழிந்துள்ளன


மக்கள் வாழ்விடங்களை விட்டு அகதிகளாக இடம்பெயரந்துள்ளனர் என தெரிவிக்க பட்டுள்ளது

Posted in உலக செய்திகள்

கேக் வெட்டி மனைவியுடன் திருமண நாளை கொண்டாடிய எஸ்.பி.பி

கேக் வெட்டி மனைவியுடன் திருமண நாளை கொண்டாடிய எஸ்.பி.பி

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பி. தனது மனைவியுடன், ஐ.சி.யூ.வில் கேக் வெட்டி திருமண நாளை கொண்டாடி உள்ளார்.

ஐ.சி.யூ.வில் கேக் வெட்டி மனைவியுடன் திருமண நாளை கொண்டாடிய எஸ்.பி.பி
எஸ்.பி. பாலசுப்ரமணியம், சாவித்ரி


பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் கொரோனா தொற்று அறிகுறிகளுடன் கடந்த ஆகஸ்ட் 5-ந் தேதி சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில்

அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மிதமான அறிகுறிகளே இருந்த நிலையில், ஆகஸ்ட் 13-ம் தேதியன்று இரவு அவரது உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டது.

இதையடுத்து அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு, உயிர் காக்கும் இயந்திரங்கள் பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு

வருகிறது. அவரது உடல்நிலையில் படிப்படியாக முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று எஸ்.பி.பி. – சாவித்ரி தம்பதியின் 51வது திருமண நாள் என்பதால், எஸ்.பி.பி.யை பார்க்க மருத்துவமனைக்கு

வந்த அவரது மனைவி சாவித்ரி, தங்களது திருமண நாளை கேக் வெட்டி கொண்டாடியதாக தகவல் வெளியாகி உள்ளது. ஐ.சி.யூ.வில்

வைத்து டாக்டர்கள் உதவியுடன் எஸ்.பி.பி. – சாவித்ரி தம்பதி கேக் வெட்டியதாக கூறப்படுகிறது

Posted in உலக செய்திகள்

ஆட்டோ ஓட்டி வரும் அரசு ஆஸ்பத்திரி டாக்டர்

ஆட்டோ ஓட்டி வரும் அரசு ஆஸ்பத்திரி டாக்டர்

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தொல்லையால் வேலையை உதறிவிட்டு அரசு ஆஸ்பத்திரி டாக்டர் ஒருவர் ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தி வருகிறார்.

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தொல்லையால் வேலையை உதறிவிட்டு ஆட்டோ ஓட்டி வரும் அரசு ஆஸ்பத்திரி டாக்டர்


ஆட்டோ டிரைவராக மாறிய டாக்டர் ரவிந்தீரநாத்.
பெங்களூரு:

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தொல்லையால் வேலையை உதறிவிட்டு அரசு ஆஸ்பத்திரி டாக்டர் ஒருவர் ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தி

வருகிறார். இதுபற்றி அறிந்த சுகாதாரத் துறை மந்திரி ஸ்ரீராமுலு, பணிக்கு திரும்பும்படி அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த சம்பவம் பற்றி விவரம் வருமாறு:-

கர்நாடக மாநிலம் பல்லாரி மாவட்டத்தில் உள்ள பிம்ஸ் அரசு ஆஸ்பத்திரியில் தடுப்பூசி நிபுணராக டாக்டர் ரவீந்திரநாத்

பணியாற்றி வந்தார். இவரது சொந்த ஊர் தாவணகெரே மாவட்டம் பாட கிராமம் ஆகும். தற்போது கொரோனா பரவல் காரணமாக பல்லாரி பிம்ஸ் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா

நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் டாக்டர் ரவீந்திரநாத்தை, ஆஸ்பத்திரியின் கொரோனா சிறப்பு

வார்டில் தினமும் பணியாற்றும்படி அதிகாரிகள் வற்புறுத்தியதாக தெரிகிறது. இதன் காரணமாக மனம் உடைந்த அவர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.

இதனால் அவர் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டார். இந்த விடுப்பு முடிந்து பணிக்கு வந்த மறுநாளே 2-வது முறையாக அவருக்கு

கட்டாய விடுப்பு அளிக்கப்பட்டது. இதனால் மனம் உடைந்த டாக்டர் ரவீந்திரநாத் தனது வேலையை உதறினார். இதற்கு காரணம்

சுகாதாரத் துறை, மருத்துவத் துறையில் உள்ள 4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தான் காரணம் என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் வேலையை விட்டு நின்ற டாக்டர் ரவீந்திரநாத், தனது சொந்த ஊரான பாட கிராமத்திற்கு குடும்பத்தினருடன் இடம்பெயர்ந்தார்.

அங்கு தற்போது ரவீந்திரநாத் ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தி வருகிறார்.

அந்த ஆட்டோவின் முன்பகுதியில் கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அதிகார து‌‌ஷ்பிரயோகத்தால் தொல்லை கொடுத்ததாக வாசகத்தை எழுதியுள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த கர்நாடக சுகாதாரத் துறை மந்திரி ஸ்ரீராமுலு, ஆட்டோ ஓட்டி வரும் டாக்டர் ரவீந்திரநாத்தை செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது

உங்களது குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். நீங்கள் என்னை நேரில் வந்து சந்தித்து உங்கள் பிரச்சினைகளை தெரிவியுங்கள். மீண்டும் நீங்கள் பணிக்கு

திரும்பும் படி கேட்டுக்கொள்கிறேன் என்று மந்திரி ஸ்ரீராமுலு, டாக்டர் ரவீந்திரநாத்திடம் வேண்டுகோள் வைத்துள்ளார்.

அதன்படி விரைவில் டாக்டர் ரவீந்திரநாத், மந்திர ஸ்ரீராமுலுவை சந்தித்து தனக்கு தொல்லை கொடுத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பற்றி புகார் கொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Posted in உலக செய்திகள்

கண் தானம் செய்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

கண் தானம் செய்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

நாளை தேசிய கண் தான தினத்தையொட்டி கண் தானம் செய்வதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

கண் தானம் செய்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி
சென்னை:

நாளை தேசிய கண்தான தினத்தையொட்டி கண் தானம் செய்வதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

கண் தானம் செய்வதற்கான படிவத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கையெழுத்திட்டார்.

கண் தானத்தை ஊக்குவிக்கும் நடவடிக்கையாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது கண்களை தானம் செய்வதாக அறிவித்துள்ளார்..

Posted in உலக செய்திகள்

ஜனாதிபதி தேர்தலில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் எனக்கே வாக்களிப்பார்கள் – டிரம்ப்

ஜனாதிபதி தேர்தலில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் எனக்கே வாக்களிப்பார்கள் – டிரம்ப்

ஜனாதிபதி தேர்தலில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் தனக்கே வாக்களிப்பார்கள் என ஜனாதிபதி டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் எனக்கே வாக்களிப்பார்கள் – டிரம்ப் நம்பிக்கை
டிரம்ப்
வாஷிங்டன்:

அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் 3-ந் தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் 2-வது முறையாக போட்டியிடுகிறார்.

குடியரசு கட்சியின் சார்பில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பைடன் களம் இறக்கப்பட்டு உள்ளார். மேலும் அந்த கட்சியின்

சார்பில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுகிறார்.

எனவே அமெரிக்காவில் உள்ள இந்தியர்களின் வாக்கு ஜனநாயக கட்சிக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம்

குடியரசு கட்சியினரும் அமெரிக்க வாழ் இந்தியர்களின் வாக்குகளை கவரும் வகையில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தநிலையில் நடக்க இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் தனக்கே வாக்களிப்பார்கள் என ஜனாதிபதி டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது இதுகுறித்து அவர் கூறுகையில், “இந்தியாவில் இருந்து எங்களுக்கு

பெரும் ஆதரவு உள்ளது. பிரதமர் மோடியிடம் இருந்து எங்களுக்கு பெரும் ஆதரவு உள்ளது. அமெரிக்க வாழ் இந்தியர்களின் வாக்கு

இந்த ஜனாதிபதி தேர்தலில் முக்கிய பங்கு வகிக்கும். அவர்கள் எனக்கே வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது” எனக் கூறினார்.

Posted in உலக செய்திகள் கனடா செய்திகள்

கனடாவில் துப்பாக்கிச் சூடு – 5 பேர் பலி

கனடாவில் துப்பாக்கிச் சூடு – 5 பேர் பலி

கனடாவில் டொரண்டோவில் உள்ள ஒரு வீட்டில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரு பெண் உள்பட 5 பேர் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர்.

கனடாவில் துப்பாக்கிச் சூடு – 5 பேர் பலி
துப்பாக்கிச்சூடு நடந்த இடம்
ஒட்டாவா:

கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தின் தலைநகர் டொரண்டோவில் உள்ள ஒரு வீட்டில் நேற்று முன்தினம் மாலை திடீரென துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. இதைக்கேட்டு

அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் விரைந்து வந்த போலீசார், துப்பாக்கிச் சூடு நடந்த வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அங்கு ஒரு

பெண் உள்பட 5 பேர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர். மேலும் ஒரு பெண் படுகாயங்களுடன் உயிருக்கு

போராடிக்கொண்டிருந்தார். போலீசார் உடனடியாக அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் யார்? துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் என்ன? என்பன உள்ளிட்ட தகவல்கள் தெரியவில்லை.

இதுபற்றி போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். அதேசமயம் இந்த துப்பாக்கிச்சூடு பயங்கரவாத தாக்குதலுடன்

தொடர்புடையது அல்ல என்றும் பொதுமக்களுக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Posted in உலக செய்திகள்

ரஜினியுடன் இணைந்து அரசியலில் ஈடுபடுவேன் – ராகவா லாரன்ஸ்

ரஜினியுடன் இணைந்து அரசியலில் ஈடுபடுவேன் – ராகவா லாரன்ஸ்

ரஜினிகாந்த் தனது ஆன்மீக அரசியலை துவங்கியவுடன் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அவருடன் சேர்ந்து சமூகத்திற்காக எனது

சிறந்த சேவையைச் செய்வேன் என்று ராகவா லாரன்ஸ் கூறியிருக்கிறார்.

ரஜினியுடன் இணைந்து அரசியலில் ஈடுபடுவேன் – ராகவா லாரன்ஸ்
ராகவா லாரன்ஸ் – ரஜினிகாந்த்
நடிகர் ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு வணக்கம், இன்று நான் மிக முக்கியமான ஒன்றை தெளிவு படுத்த விரும்புகிறேன். கடந்த மாதம் நான் ஒரு விஷயத்தை பதிவு செய்திருந்தேன் அரசியலில்

நுழையாமல் கூட நாங்கள் சேவை செய்ய முடியும் என்று. இந்த அறிக்கையின் பின்னணியில் எனது காரணம் என்னவென்றால், நான் பல சமூகப் பணிகளைச் செய்து கொண்டிருக்கும்போது, எனது

நண்பர்கள், ரசிகர்கள், ஊடக நண்பர்கள் மற்றும் பல அரசியல்வாதிகள் என்னிடம் கேட்கிறார்கள், நான் அரசியலில்

நுழைவதற்கு இதையெல்லாம் செய்கிறேனா என்றும், மேலும் சிலர் என்னால் அரசியலில் நுழைந்தால் இன்னும் அதிகமாகச் செய்ய முடியும் என்று அறிவுறுத்துகிறார்கள்.

கொரோனா காலகட்டத்தில் நான் செய்த சேவையின் மூலம் அரசியலில் நுழையும் அழுத்தம் அதிகரித்துள்ளது. அனைவருக்கும்,

நான் ஒரு பொதுவான நபர் என்று சொல்ல விரும்புகிறேன். நான் எனது சேவையை எனது சொந்த வீட்டில் குழந்தைகளுக்காக தொடங்கினேன்.

எனக்கு உதவி தேவைப்படும்போதெல்லாம் நான் அரசாங்கத்திடம் கோரிக்கை வைப்பேன் அதற்கு எனக்கு அனைவரும்

உறுதுணையாக இருந்துள்ளனர். கலைஞர் அய்யா, ஸ்டாலின் சார், அன்புமனி ராமதாஸ் சார் போன்றோர் பல இதய அறுவை

சிகிச்சைகளுக்கு உதவியுள்ளனர். ஜெயலலிதா அம்மா, எடப்பாடி. கே.பழனிசாமி ஐயா, ஓ.பன்னீர்செல்வம் சார், விஜய பாஸ்கர் சார் மற்றும் பலர் பல்வேறு சேவைகளை செய்ய எனக்கு ஆதரவளித்துள்ளனர்.

ராகவா லாரன்ஸ் – ரஜினிகாந்த்

நான் அரசியலில் நுழைந்தால் ஒற்றை மனிதனாகச் செய்வதை விட அதிக சேவையைச் செய்ய முடியும் என்பதை நான் நன்கு அறிவேன், ஆனால் நான் அரசியலில் நுழையாததற்கு காரணம், எதிர்மறை அரசியலை நான் விரும்பாததால் தான், என் அம்மாவுக்கும் அதே கருத்துதான்.

ஏனென்றால் நாம் எல்லோரையும் பற்றியும் மோசமாக பேச வேண்டும், மற்றும் காயப்படுத்த நேரிடும். ஆனால் நான் அதை செய்யமாட்டேன், அனைவரையும் மதிக்கிறேன். எனவே, யாராவது எதிர்மறை அல்லாத ஒரு கட்சியைத் தொடங்கினால், நாங்கள்

மோசமாகப் பேசவோ அல்லது மற்றவர்களைப் புண்படுத்தவோ தேவையில்லை என்றால், அவர்களுடன் சேர்ந்து பொதுமக்களுக்கு சேவை செய்ய நான் எனது பங்களிப்பை அளிப்பேன். இந்தியாவில்

நேர்மறையான அணுகு முறையைக் கொண்ட அத்தகைய கட்சியை எனது குரு தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தால் மட்டுமே தர முடியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன், ஏனெனில் அவர் ஒரு

அரசியல் காரணத்திற்காக இருந்தாலும் யாரையும் காயப்படுத்தவில்லை. எனவே, அவர் கட்சியைத் தொடங்கினாலும் அவர் ஒருபோதும் யாரையும் காயப்படுத்த மாட்டார்.

தலைவர் தனது ஆன்மீக அரசியலைத் தொடங்கிய பிறகு, அவரது கோடிக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவனாக இருப்பதால்,

அவருடன் சேர்ந்து எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் சமூகத்திற்காக எனது சிறந்த சேவையைச் செய்வேன் என்று கூறியிருக்கிறார்..

Posted in உலக செய்திகள்

கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2.70 கோடியை தாண்டியது

கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2.70 கோடியை தாண்டியது

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2.70 கோடியைத் தாண்டியுள்ளது.

உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2.70 கோடியை தாண்டியது
சிகிச்சை பெறும் நோயாளிகள்
ஜெனீவா:

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 210 நாடுகளுக்கு

மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2.70 கோடியைத் தாண்டியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 8.82 லட்சத்தைக் கடந்துள்ளது.

கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் 60,930 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. கொரோனா வைரஸ்

தாக்குதலில் சிக்கி மீண்டவர்கள் எண்ணிக்கை 1.91 கோடியைக் கடந்துள்ளது.

Posted in உலக செய்திகள்

அமெரிக்காவில் குழிக்குள் வீழ்ந்த வீடு – அதிர்ச்சியில் உறைந்த கிராமம்

அமெரிக்காவில் குழிக்குள் வீழ்ந்த வீடு – அதிர்ச்சியில் உறைந்த கிராமம்

அமெரிக் அப்புலிரிடா பகுதியில் இருபதடி ஆழத்தில் குழி ஒன்று தோன்றியுள்ளது .


இந்த குழியினால் அழகிய பெரும் வீடொன்று அந்த குழிக்குள் பாதி வீழ்ந்துள்ள நிலையில் காண படுகிறது

இது இயற்கையாக ஏற்பட்ட குழி என தெரிவிக்க படுகின்ற பொழுதும்

எவ்வாறு இந்த குழி ஏற்பட்டது என்பது தொடர்பில் விசாரணைகள் இடம் பெற்ற வண்ணம் உள்ளது

அமெரிக்காவில் குழிக்குள்
அமெரிக்காவில் குழிக்குள்
Posted in உலக செய்திகள்

சிறையில் இருந்து வெளிவரும் சசிகலா -பீதியில் கட்சி

சிறையில் இருந்து வெளிவரும் சசிகலா -பீதியில் கட்சி

சசிகலா மற்றும் அவரது உறவினர்களுக்கு சொந்தமான இடங்களில் கடந்த 2017-ம் ஆண்டு வருமான வரி சோதனை நடைபெற்றது.

அதனடிப்படையில் சென்னை போயஸ் கார்டனில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா இல்லத்துக்கு எதிரே 8 கிரவுண்டு இடத்தை

சசிகலா பினாமி பெயரில் வாங்கி இருப்பதாக கூறி, அந்த இடத்தை வருமான வரித்துறை முடக்கி உள்ளது.

அங்கு கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் வேளையில் நேற்று முன்தினம் வருமான வரித்துறை சார்பில், ‘பினாமி தடுப்பு

சட்டத்தின் கீழ் இந்த இடம் முடக்கப்பட்டு உள்ளது’ என்று நோட்டீஸ் ஒட்டப்பட்டது.

இந்த இடம் மட்டுமின்றி சசிகலாவின் பல கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டு உள்ளன. இதுதொடர்பாக சிறையில்

இருக்கும் சசிகலா மற்றும் சொத்துகளை பதிவு செய்த சார்பதிவாளர் உள்ளிட்டோருக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.

வருமான வரித்துறையினரின் இந்த நடவடிக்கைக்கு சசிகலா தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து சசிகலாவின் வக்கீல் ராஜாசெந்தூர் பாண்டியன் கூறியதாவது:-

வருமான வரித்துறையினர் நடந்து கொண்ட விதம் மிகவும் தவறாகும். இப்பிரச்சினையை நாங்கள் சட்ட ரீதியாக

எதிர்கொள்வோம். போயஸ் கார்டனில் கட்டப்பட்டு வரும் ஒரு வீட்டை சசிகலாவின் பினாமி சொத்து என்று வருமான வரித்துறையினர் எப்படி சொல்கிறார்கள்? என்று தெரியவில்லை.

ஏனென்றால் அந்த இடம் தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனத்துக்கு சொந்தமானதாகும்.

இந்த இடம் 2013-2014-ம் ஆண்டு வாங்கப்பட்டது. இந்த நிறுவனத்தில் சசிகலா பங்குதாரராக இருக்கிறார். ஒருவர் பங்குதாரராக

சேர்ந்தால் அந்த கம்பெனியின் சொத்து, அவரது சொத்தாக எப்படி மாறும்?

இந்தியாவில் எத்தனையோ கம்பெனிகள் உள்ளன. அந்த கம்பெனியில் யார் வேண்டுமானாலும் பங்குதாரராக சேருவார்கள்.

அப்படி சேர்ந்தால் அந்த கம்பெனியின் சொத்தை அவரது சொத்து என்று எப்படி கூற முடியும்?

ஒருவர் தான் செலவு செய்த பணத்திற்கு முறையாக கணக்கு காட்டவில்லை என்றால்தான் வருமான வரித்துறையினர் நுழைய

முடியும். இதில் பங்குதாரர் மீது தவறு என்றால் ‘ரிஜிஸ்திரார் ஆப் கம்பெனி’ என்ற துறைதான் நடவடிக்கை எடுக்க முடியும். வருமான

வரித்துறை அதிகாரிகள் தவறாக புரிந்து கொண்டு இது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதற்கு சட்டம் இடம் கொடுக்காது. எங்களது பதிலை 90 நாட்களுக்குள் உரிய அதிகாரியிடம் சமர்ப்பிப்போம். அந்த பதிலை ஏற்காத பட்சத்தில் நாங்கள் நீதிமன்றத்துக்கு செல்வோம்.

நான் சசிகலாவின் வக்கீலாக சொல்ல விரும்புவது அவருக்கோ அல்லது எங்களுக்கோ இதுவரை வருமான வரித்துறை நோட்டீஸ்

நகல் கிடைக்கவில்லை. சசிகலா இந்த மாத இறுதிக்குள் (செப்டம்பர்) வெளியே வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

சசிகலா கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் தண்டனை குறைப்பு பெற்று விடுதலை நிலையை அடைந்துவிட்டார். அதற்கான சட்டப்பணிகளை நாங்கள் மேற்கொண்டு இருக்கிறோம்.

கர்நாடக சிறை விதிகளின் அடிப்படையில் சிறை கைதிகள் நன்னடத்தையின்படி ஒவ்வொரு மாதமும் 3 நாட்கள் தண்டனை

குறைப்பு சலுகையை பெற முடியும். ஊழல் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்கு இந்த சலுகை கிடையாது என்று கர்நாடக சிறை விதியில் எங்கும் குறிப்பிடப்படவில்லை.

எனவே 43 மாத காலம் சிறைவாசம் முடிவடைந்து உள்ள சசிகலா, 43 மாதங்களுக்கு தலா 3 நாட்கள் வீதம் 129 நாட்கள் தண்டனை

குறைப்பு சலுகை பெற தகுதி உடையவர் ஆகிறார். எனவே இந்த மாதம்(செப்டம்பர்) இறுதியில் அவர் வெளியே வருவதற்கு வாய்ப்புகள் மிக அதிகம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Posted in உலக செய்திகள்

உலக பணக்கார பெண்கள் பட்டியல்: ‘அமேசான்’ தலைவரின் முன்னாள் மனைவி முதலிடம்

உலக பணக்கார பெண்கள் பட்டியல்: ‘அமேசான்’ தலைவரின் முன்னாள் மனைவி முதலிடம்

உலக பணக்கார பெண்கள் பட்டியலில் ‘அமேசான்’ தலைவரின் முன்னாள் மனைவி முதலிடம் பிடித்துள்ளார். விவாகரத்து மூலம் கிடைத்த பணத்தால் இந்த இடம் கிடத்துள்ளது.

உலக பணக்கார பெண்கள் பட்டியல்: ‘அமேசான்’ தலைவரின் முன்னாள் மனைவி முதலிடம்
மெக்கென்சி ஸ்காட்


2020-ம் ஆண்டுக்கான உலக பணக்கார பெண்கள் பட்டியலை ப்ளூம்பெர்க் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் அமெரிக்காவைச் சேர்ந்த மெக்கென்சி ஸ்காட் முதலிடம் பிடித்துள்ளார்.

50 வயதாகும் அவரது தற்போதைய சொத்து மதிப்பு 6 ஆயிரத்து 800 கோடி டாலராகும். இவர் ‘அமேசான்’ நிறுவன சி.இ.ஓ.-வும் உலக

பணக்காரர்களின் பட்டியலில் முதலிடம் வகிப்பவருமான ஜெப் பெசோசின் முன்னாள் மனைவி ஆவார்.

மெக்கென்சி ஸ்காட் தனது கணவர் ஜெப் பெசோசுடனான 25 ஆண்டு கால திருமண வாழ்க்கையில் இருந்து விவாகரத்து

பெற்றபோது அவரிடம் இருந்த ‘அமேசான்’ நிறுவன பங்குகளில் 4 சதவீத பங்குகளை பெற்றார்.

அவற்றின் அப்போதைய மதிப்பு ரூ.3500 கோடி டாலர் ஆகும். தற்போது அந்த பங்கு மதிப்பு இரட்டிப்பு ஆகி உள்ளதால்

மெக்கென்சி ஸ்காட்டின் சொத்து மதிப்பும் கணிசமான அளவு உயர்ந்துள்ளது.

விவகாரத்து மூலம் கிடைத்த பணத்தால் மெக்கென்சி ஸ்காட் பணக்கார பெண்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். ஒட்டுமொத்த பணக்காரர்களில் அவர் 12-ம் இடத்தில் உள்ளார்.

உலக பெண்கள் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்த லோரியால், அழகு சாதன பொருட்கள் நிறுவனத்தின் வாரிசுதாரர்

பெட்டன்கோர்ட் மேயர்ஸ் 6,600 கோடி டாலர் சொத்துடன் 2-ம் இடத்தில் உள்ளார்.

Posted in உலக செய்திகள்

42 மாலுமிகள் 6000 பசுக்களுடன் நடுக்கடலில் மூழ்கிய கப்பல்

42 மாலுமிகள் 6000 பசுக்களுடன் நடுக்கடலில் மூழ்கிய கப்பல்

ஜப்பான் அருகே 42 மாலுமிகள், 6000 பசுக்களுடன் சரக்கு கப்பல் ஜப்பான் அருகே நடுக்கடலில் மூழ்கியது.

42 மாலுமிகள், 6000 பசுக்களுடன் நியூசிலாந்திலிருந்து சீனா நோக்கி புறப்பட்டது

சரக்கு கப்பல். ஜப்பானின் தென்மேற்கு கடல்பகுதியின் அமாமி ஒஹிமா தீவு அருகே பயணித்தது.

அப்போது, கடும் புயல் வீசியதால், கப்பலின் இன்ஜின் பகுதியை ராட்சத அலை தாக்கியதில் கப்பல் தலைகீழாக கவிழ்ந்து மூழ்கியது.

இதில் பயணித்த மாலுமிகளில் 39 பேர் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்கள்,

இரண்டு பேர் நியூசிலாந்து நாட்டை சேர்ந்தவர்கள், இரண்டு பேர்

ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர்கள் கப்பலுடன் மூழ்கியதாக அஞ்சப்படுகிறது.

புயல் தா்க்கிய போது ஒரு மாலுமி மட்டும் கடலில் குதித்து உயிர் தப்பியதாகவும் கூறப்படுகிறது

Posted in இந்தியா செய்திகள் உலக செய்திகள்

சீனாவின் 118 செயலிகளைதடை செய்யும் இந்தியா குமுறும் சீனா

சீனாவின் 118 செயலிகளைதடை செய்யும் இந்தியா குமுறும் சீனா

உலகில் முதன்மை வல்லரசாக மாற்றம் பெற்று வரும் சீனாவின் ஆதிக்கம்

உலக மக்களை கட்டி போட்டுள்ளது ,இதில் டிக் டாக் பிரபலமான சமூக வலைத் தளமாகும் ,

இது உள்ளிட்ட சுமார் நூற்றி பதினெட்டு செயலிகளை தாம் தடை செய்ய உள்ளதாக இந்தியா மீள இன்று அறிவித்துள்ளது

இதனால் சீனா இந்தியாவுக்கு இடையில் முறுகல் நிலை உக்கிரம் பெற்றுள்ளது குறிப்பிட தக்கது

Posted in உலக செய்திகள்

அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி போட திட்டம்

அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி போட திட்டம்

அறிவியல் ரீதியான நடைமுறைகளை முடிக்கும் முன்பே கொரோனா தடுப்பூசியை அமெரிக்க அரசு மக்களின்

பயன்பாட்டுக்கு கொண்டு வர இருப்பதாக சுகாதாரத் துறை நிபுணர்கள் கவலை தெரிவித்து இருக்கிறார்கள்.

அமெரிக்காவில் நவம்பர் 1-ந் தேதிக்குள் கொரோனா தடுப்பூசி போட திட்டம் – நிபுணர்கள் கவலை
கொரோனா வைரஸ் பரிசோதனை
வாஷிங்டன்:

உலக அளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின்

எண்ணிக்கை 62 லட்சத்தை தாண்டிவிட்டது. கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அங்கு வருகிற நவம்பர் மாதம் 3-ந் தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது.

இதில் மீண்டும் போட்டியிடும் ஜனாதிபதி டிரம்ப், தேர்தலுக்கு முன்பாக கொரோனா தடுப்பூசியை கொண்டு வந்துவிட வேண்டும் என்பதில் மிகவும் தீவிரமாக இருக்கிறார். தடுப்பூசியை

பயன்பாட்டுக்கு கொண்டு வருவதன் மூலம் மக்களின் நம்பிக்கையை பெற முடியும் என்றும், இது தனது வெற்றிக்கு வழிவகுக்கும் என்றும் அவர் நம்புகிறார். அங்குள்ள

அஸ்ட்ராஜெனேகா நிறுவனம் தாங்கள் தயாரித்துள்ள தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் மூன்றாவது கட்ட சோதனையை எட்டி உள்ளது.

இதற்கிடையே தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கும் அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகத்தின் தலைவர் ஸ்டீபன் ஹான் கூறுகையில், தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும்

மூன்றாவது கட்ட சோதனை முடிவதற்கு முன்பே அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதிக்க தயாராக இருப்பதாக தெரிவித்து உள்ளார்.

எனவே அக்டோபர் மாதத்திலேயே தடுப்பூசியை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான ஆயத்த நடவடிக்கைகளை டிரம்ப் நிர்வாகம் மும்முரமாக மேற்கொண்டு உள்ளது.

இது தொடர்பாக அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் இயக்குனர் ராபர்ட் ரெட்பீல்டு, மாகாண கவர்னர்களுக்கு கடிதம் எழுதி இருக்கிறார்.

அதில், கொரோனா தடுப்பூசியை வினியோகிப்பதற்காக மெக்கசன் கார்ப்பரேஷன் நிறுவனம் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்துடன் ஒப்பந்தம் செய்து உள்ளதாகவும், தடுப்பூசியை

சுகாதார துறை, ஆஸ்பத்திரிகளுக்கு சப்ளை செய்வதற்கான அனுமதி கோரி அந்த நிறுவனத்திடம் இருந்து மாநிலங்களுக்கு விரைவில் விண்ணப்பங்கள் வரும் என்றும், அதற்கு தயாராக

இருக்குமாறும் கூறி உள்ளார். மேலும் விண்ணப்பங்களை விரைவில் பரிசீலித்து நவம்பர் 1-ந் தேதிக்குள் முழு அளவில் மக்களுக்கு

தடுப்பூசியை போடுவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறும் கடிதத்தில் அவர் கேட்டுக்கொண்டு இருக்கிறார்.

கொரோனா தடுப்பூசி ஒரு மாத இடைவெளியில் இரு முறை போடப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கிடையே, அறிவியல் ரீதியான நடைமுறைகளை முடிக்கும் முன்பே, ஜனாதிபதி தேர்தலை கருத்தில் கொண்டு அரசியல் காரணங்களுக்காக தடுப்பூசியை அமெரிக்க அரசு மக்களின்

பயன்பாட்டுக்கு கொண்டு வர இருப்பதாக சுகாதாரத் துறை நிபுணர்கள் கவலை தெரிவித்து இருக்கிறார்கள். மூன்றாவது கட்ட

பரிசோதனையை நடத்தாமலேயே தடுப்பூசியை பயன்பாட்டுக்கு கொண்டு வருவது என்றால், அந்த மருந்தின் செயல்பாடு பற்றிய

முழு தகவலும் எப்படி தெரியும்? என்று பிலடெல்பியா குழந்தைகள் நல ஆஸ்பத்திரி டாக்டர் பால் ஆப்பிட் கேள்வி எழுப்பி உள்ளார்.

தடுப்பு மருந்து வேலை செய்யுமா? முழு அளவில் பாதுகாப்பானதுதானா? என்பது தெரியும் முன்பே அதன் பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்க இருப்பது மிகுந்த கவலை

அளிப்பதாக பேய்லர் பல்கலைக்கழக துணை வேந்தர் பீட்டர் ஹோட்டஸ் தெரிவித்து இருக்கிறார்.

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பாகவே தடுப்பூசியை பயன்பாட்டுக்கு கொண்டு வர இருப்பதை ‘அக்டோபர் ஆச்சரியம்‘ என்றுதான் கூற

வேண்டும் என்று மின்னிசோட்டா பல்கலைக்கழகத்தின் தொற்றுநோய் நிபுணர் மைக்கேல் ஆஸ்டர்ஹோம் கூறி உள்ளார்.

என்றாலும் இதுவரை நடத்தப்பட்ட 2 கட்ட பரிசோதனைகளின் மூலம், பெரிய அளவில் பாதுகாப்பு பிரச்சினைகள் எதுவும்

எழவில்லை என்றும், தேவையான நோய் தடுப்பு சக்தியை தடுப்பூசி வழங்கி இருக்கிறது என ஆராய்ச்சியாளர்கள் கூறி இருப்பதாக மருத்துவ இதழ் ஒன்றில் செய்தி வெளியாகி உள்ளது.

சனோபி மற்றும் கிளாஸ்கோஸ்மித்லைன் மருந்து தயாரிப்பு நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவலில், மனிதர்களுக்கு நடத்தப்பட்ட கொரோனா தடுப்பூசியின் ஆரம்பகட்ட

பரிசோதனையின் முடிவு நம்பிக்கை அளிப்பதாக உள்ளதாகவும், அடுத்ததாக தடுப்பூசியை அமெரிக்காவில் 11 இடங்களில் 440

பேருக்கு செலுத்தி பரிசோதிக்க தீர்மானித்து இருப்பதாகவும், அதன் முடிவு டிசம்பர் மாத தொடக்கத்தில் தெரியவரும் என எதிர்பார்ப்பதாகவும் கூறப்பட்டு உள்ளது.

Posted in உலக செய்திகள்

இஸ்ரேல் இராணுவ அடாவடி – கழுத்தை நெரிக்கும் பயங்கரம்

இஸ்ரேல் இராணுவ அடாவடி – கழுத்தை நெரிக்கும் பயங்கரம்

பாலஸ்தீனத்தை சேந்த மக்கள் அமைதிவழி போராட்டத்தை நடத்தினர் ,இதில் போராட்டம் நடத்திய


நபர் ஒருவரை வீழ்த்தி அவரது கழுத்தில் காலால் நெரித்து அவரை கொலை செய்யும் நிலைக்கு அழைத்து சென்ற பின்னர் இழுத்து செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளன

இது இஸ்ரேல் இராணுவத்திற்கு எதிராக அந்த மக்கள் மீள போராடும் செயலுக்கு வழி அமைத்து கொடுக்கும் செயலாக பார்க்க முடிகிறது

blob:https://www.facebook.com/215ed6b3-3d4f-4183-af6a-f4bdddcb68adblob:https://www.facebook.com/215ed6b3-3d4f-4183-af6a-f4bdddcb68ad

Posted in உலக செய்திகள்

சிரியா இராணுவ முகாம்கள் மீது இஸ்ரேல் கடும் ஏவுகணை தாக்குதல்

சிரியா இராணுவ முகாம்கள் மீது இஸ்ரேல் கடும் ஏவுகணை தாக்குதல்

மத்திய சிரியாவின் மிக முக்கிய நான்கு இராணுவ நிலைகளை இலக்கு

வைத்து இஸ்ரேல் விமானங்கள் கடும் தாக்குதலை நடத்தியுள்ளன ,இதில்

சிரியா அரச இராணுவத்திற்கு பாரிய இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது

ரசியா படைகள் களத்தில் உள்ள பொழுதும் சிரியா இஸ்ரேல் மேற்கொள்ளும்

இந்த தாக்குத சிரியா படைகளிற்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது

குறித்த பகுதிக்கு அருகில் ஈரான் இராணுவ நிலைகள் உள்ளமை இங்கே

சுட்டி காட்ட தக்கது ,எனினும் இந்த தாக்குதலினால் ஏற்பட்ட சேத விபாரங்ககள் தெரியவரவில்லை

Posted in உலக செய்திகள்

கண்டதும் எல்லையில் மக்களை சுட்டு கொல்ல வடகொரியா உத்தரவு

கண்டதும் எல்லையில் மக்களை சுட்டு கொல்ல வடகொரியா உத்தரவு

சீனாவுடனான வடகொரியாவின் எல்லையிலிருந்து அரை மைல் தூரத்துக்குள் தென்படும் எவரையும் கண்டதும் சுட்டுக் கொல்ல

நாட்டின் இராணுவத்தினர் மற்றும் பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

வடகொரியாவில் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவரும் பொருட்டு, கிம் ஜாங் உன் இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.

கடுமையான இந்த புதிய நடவடிக்கையானது வியாழக்கிழமை நள்ளிரவில்

நடைமுறைக்கு வருவதற்கு ஒரு நாளுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எல்லைப்பகுதியில் உள்ள பொலிஸார் மற்றும் இராணுவ முகாம்களுக்கு

தேவையான துப்பாக்கி குண்டுகளையும் வடகொரிய அரசாங்கம் லொறிகளில் அனுப்பி வைத்துள்ளது.

மேலும், துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளும் அதிகாரிகள் மீது துறை

ரீதியான எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவலை முன்னிட்டு இரு நாடுகளும் எல்லைகளை மூடி வர்த்தகத்தை

நிறுத்திய போதிலும் எல்லை அருகாமையில் உள்ள மக்கள் ரகசியமாக வர்த்தகத்தை முன்னெடுத்து வந்துள்ளனர்.

Posted in உலக செய்திகள்

நீதிபதி மீது திடீர் தாக்குதல்- குற்றவாளி தப்பி ஓட்டம்

நீதிபதி மீது திடீர் தாக்குதல்- குற்றவாளி தப்பி ஓட்டம்

அமெரிக்கா தலைநகர் New York City பகுதியில் உச்ச கிரிமினல் நீதிமன்ற

நீதிபதியுமாக விளங்கி வரும் பெண் நீதிபதி தனது நீதிமன்றுக்கு காலை

ஒன்பது மணியளவில் நடந்து சென்ற வண்ணம் இருந்தார்
அப்பொழுது

அவரை பின் தொடர்ந்து வந்த நபர் ஒருவர் திடீரென தாக்குதலை நடத்தி விட்டு மறைந்து விட்டார்

பலத்த காயங்களுக்கு உள்ளான அவர் சிகிச்சை பெற்றுவந்தார்

,எனினும் தற்போது அவர் உடல் நலமாக உள்ளதாக தெரிவிக்க படுகிறது

இவர் மீது நடத்த பட்ட இந்த தாக்குதல் காரணம் குறித்து உடனடியாக

தெரிவிக்க படவில்லை ,போலீஸ் விசாரணைகள்தொடர்ந்த வண்ணம் உள்ளது

    Posted in உலக செய்திகள்

    வீழ்ந்து கொண்டிருந்த விமானத்தில் குதித்து தப்பிய விமானிகள் உள்ளிட்ட நால்வர்

    வீழ்ந்து கொண்டிருந்த விமானத்தில் குதித்து தப்பிய விமானிகள் உள்ளிட்ட நால்வர்

    அமெரிக்கா Norfolk கடற்படை விமானதளத்தில் இருந்து பறப்பில்

    ஈடுபட்ட விமானம் ஒன்று விபத்தில் சிக்கியது ,இதனால அந்த

    விமானம் தரையை நோக்கி வேகமாக வீழ்ந்து கொண்டிருந்தது ,

    அப்பொழுது பிரதான நுழைவாயில் வாயிலாக இரண்டு விமானிகள்

    மற்றும் இரு சிப்பந்திகள் அதில் இருந்து குதித்து உயிர் தப்பித்து கொண்டனர்

    விமானம் வீழ்ந்து சுக்கு நூறானது ,ஆனால் மயிரிழையில் இவர்கள் தப்பித்து கொண்ட செயல் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது

    குறித்த விமான விபத்து தொடர்பில் தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன ,உயிர் வாழும் அதிஷ்டம் இப்படியும்

    நிகழும் என்பதற்கு இது ஒரு முன் உதாரணம் ஆகும் என்பதாக பதிய பெற்றுள்ளது

    வீழ்ந்து கொண்டிருந்த விமானத்தில்
    வீழ்ந்து கொண்டிருந்த விமானத்தில்
      Posted in உலக செய்திகள்

      படுக்கை அறைக்குள் புகுந்த அனகொண்டா பாம்பு – பதறி ஓடிய குடும்பம்

      படுக்கை அறைக்குள் புகுந்த அனகொண்டா பாம்பு – பதறி ஓடிய குடும்பம்

      அவுஸ்ரேலியா குயின்லாந் பகுதியில் உள்ள வீடொன்றின் கூரையை பிய்த்து கொண்டு
      இரண்டு பாம்புகள் வீழ்ந்துள்ளன

      இதில் இரண்டு படுக்கையறைக்குள் வீழ்ந்துள்ளது கண்டு அந்த வீட்டின் உரிமையாளர் அதிர்ச்சி அடைந்தார்

      ஒரு பெண் பாம்ப்பினை துரத்திய வண்ணம் பாலுறவில் ஈடுபட இரு பாம்புகள் முனைந்துள்ளன

      வீட்டின் கூரையின் மேல் அமைக்க பட்டிருந்த சீட்டினை உடைத்து கொண்டு

      அவை அவர்கள் உறங்கும் படுக்கை அறைக்குள் பாலுறவை பகிர வீழ்ந்துள்ளன

      இதனால் அதிர்ச்சியுற்ற வீட்டின் உரிமையாளர்கள் அவசர இலக்கத்திற்கு

      அழைத்த நிலையில் பாம்பு பிடி நிபுணர்கள் வரவழைக்க பட்டு பாம்பு பிடிக்க பட்டது

      ஒவ்வொரு பாம்ப்பின் எடையும் சுமார் இருபத்தி ஐந்து கிலோ என தெரிவிக்க பட்டுள்ளது ,மயிரிழையில் குடும்பத்தினர் தப்பித்தனர்

      ,இல்லை எனின் பாம்புக்கு இவர்கள் இரையாகி இருப்பார்கள் என சுட்டி காட்ட பட்டுள்ளது

      மயிரிழையில் மனிதர்கள் தப்பித்து கொண்ட செயல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது