Posted in உலக செய்திகள்

படிக்காமல் முதல் முயற்சியிலேயே ‘நீட்’ தேர்வில்

படிக்காமல் முதல் முயற்சியிலேயே ‘நீட்’ தேர்வில்

பயிற்சி மையத்துக்கு சென்று படிக்காமல் முதல் முயற்சியிலேயே ‘நீட்’ தேர்வில் மாநில அளவில் 3-ம் இடம் பிடித்து சென்னை மாணவி சாதனை படைத்துள்ளார்.

பயிற்சி மையத்துக்கு சென்று படிக்காமல் முதல் முயற்சியிலேயே ‘நீட்’ தேர்வில் சாதித்த சென்னை மாணவி

சென்னை மடிப்பாக்கத்தை சேர்ந்த கணேஷ்குமார்-கலைச்செல்வி தம்பதியினரின் மகள் ஜி.ஸ்வேதா. இவர் சென்னை மேல

அயனம்பாக்கத்தில் உள்ள வேலம்மாள் வித்யாலயா பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து முடித்தார். இவர் கடந்த மாதம் நடந்த ‘நீட்’ தேர்வில் பங்கேற்று 720 மதிப்பெண்களுக்கு 701 மதிப்பெண்கள்

பெற்றுள்ளார். அகில இந்திய அளவில் 62-வது இடமும், மாநில அளவில் 3-ம் இடமும் பிடித்து அவர் சாதனை படைத்துள்ளார்.

சாதனை மாணவி ஜி.ஸ்வேதாவுக்கு பாராட்டு விழா, சென்னை முகப்பேரில் உள்ள வேலம்மாள் மெட்ரிகுலேசன்

மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. பள்ளியின் முதல்வர்கள் உமா மகேஸ்வரன், ஜெயந்தி ராஜகோபாலன் ஆகியோர் மாணவி

ஸ்வேதாவுக்கு பூங்கொத்து கொடுத்து பாராட்டினர். மாணவியின் பெற்றோர் இனிப்பு வழங்கி மகிழ்ந்தனர்.

அதனைத்தொடர்ந்து மாணவி ஜி.ஸ்வேதா நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சிறுவயதில் இருந்தே எனது கனவு டாக்டர் ஆவது தான். அதற்காகவே ‘நீட்’ தேர்வுக்கு தயாராகி வந்தேன். இதற்காக எந்த

பயிற்சி மையத்துக்கும் செல்லவில்லை. பள்ளியில் வழங்கப்படும் ‘நீட்’ தேர்வுக்கான ஆன்-லைன் வழி பயிற்சியில் முழுமூச்சாக

ஈடுபட்டேன். தினமும் 10 முதல் 12 மணி நேரம் வரை படிப்பேன். எனது முதல் முயற்சியிலேயே ‘நீட்’ தேர்வில் சாதித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த வெற்றிக்கு பெற்றோரும், பள்ளி ஆசிரியர்கள்

கொடுத்த உத்வேகமும், ஊக்கமுமே காரணம். பள்ளிகள் வழக்கம்போல செயல்பட்டு வகுப்புகள் நடைபெற்றிருந்தால் நிச்சயம் இன்னும் அதிகமாக மதிப்பெண்கள் எடுத்திருப்பேன்.

Posted in உலக செய்திகள்

பட்டினி குறியீட்டில் இந்தியா 94-வது இடம்

பட்டினி குறியீட்டில் இந்தியா 94-வது இடம்

உலகளாவிய பட்டினி குறியீட்டில் இந்தியா 94-வது இடம் வகிக்கிறது. இதற்காக மத்திய அரசை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சாடி உள்ளார்.

பட்டினி குறியீட்டில் இந்தியா 94-வது இடம் – மத்திய அரசு மீது ராகுல் காந்தி பாய்ச்சல்

உலகளாவிய பட்டினி குறியீட்டு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அட்டவணையானது, உலகெங்கும் உள்ள பட்டினி அளவையும், ஊட்டச்சத்து குறைபாட்டு அளவையும் கொண்டுள்ளது.

107 நாடுகள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இவற்றில் இந்தியா 94-வது இடத்தில் உள்ளது.

கடந்த ஆண்டு 102 நாடுகளில் இந்தியா 94-வது இடத்தில் இருந்தது. எனவே இந்தியா நடப்பு ஆண்டில் சற்றே முன்னேற்றம் கண்டுள்ளது.

இருப்பினும் பாகிஸ்தான் (88-வது இடம்), வங்காளதேசம் (75-வது இடம்) ஆகிய நாடுகளைவிட இந்தியா பின்தங்கி இருக்கிறது.

இந்தியாவை விட 13 நாடுகள் மோசமான நிலையில் உள்ளன. அந்த நாடுகளில் ருவாண்டா (97), நைஜீரியா (98), லிபியா (102), மொசாம்பிக் (103), சாட் (107) அடங்கும்.

107 நாடுகளில் இந்தியாவின் மொத்த புள்ளிகள் 27.2 ஆகும். இது இந்தியாவை தீவிரமான பட்டினி பிரிவில் வைத்துள்ளது.

இந்த அட்டவணையின்படி, இந்தியாவில் 14 சதவீத மக்கள் ஊட்டச்சத்து குறைபாடு உடையவர்கள் என தெரியவந்துள்ளது.

இந்தியாவின் பட்டினி நிலை கண்டு மத்திய அரசு மீது காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சாடி உள்ளார். இது குறித்து அவர்

டுவிட்டரில் நேற்று வெளியிட்ட ஒரு பதிவில், “இந்தியாவில் ஏழை மக்கள் பட்டினி கிடக்கிறார்கள். ஏனென்றால் அரசு, தனது சிறப்பு

நண்பர்களில் சிலரது பைகளை நிரப்புவதில் தீவிரமாக உள்ளது” என கூறி உள்ளார்.

உலகளாவிய பட்டினி குறியீட்டு அட்டவணை வரைபடத்தையும் டுவிட்டரில் ராகுல் காந்தி இணைத்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Posted in உலக செய்திகள்

அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி – மீனவர்களுக்கு எச்சரிக்கை

அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி – மீனவர்களுக்கு எச்சரிக்கை

அந்தமான் கடல் பகுதிகளில் புதிதாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.

இதனால் 18-ஆம் திகதி (நாளை) அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். 19 ஆம்

திகதி மத்திய வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். 20 ஆம் திகதி மத்திய மேற்கு வங்கக் கடல், வட தமிழகம் மற்றும் ஆந்திர கடலோர

பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். இதனால் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு

மீன்பிடிக்க செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். என்றும் சென்னை வானிலை ஆய்வு நிலையம் அறிவித்துள்ளது.

வெப்பச் சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு,

விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி,

நாகை ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

தர்மபுரி, சேலம், திருவண்ணாமலை, திருப்பத்தூர் ஆகிய 4 மாவட்டங்களில் (இன்று) ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும். வரும் 19 ஆம் திகதி (நாளை மறுதினம்) மத்திய

கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது

மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, மேற்கு-வடமேற்கு திசையில் ஆந்திரா கடற்கரையை நோக்கி

நகரக்கூடும்.என்றும் சென்னை வானிலை ஆய்வு நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

Posted in உலக செய்திகள்

கொரனோ வெறியாட்டம் =-அமெரிக்காவில் அம்புலன்ஸ் இன்றி மருத்துவமனைகள் திணறல்

கொரனோ வெறியாட்டம் =-அமெரிக்காவில் அம்புலன்ஸ் இன்றி மருத்துவமனைகள் திணறல்

அமெரிக்காவில் கொரனோ வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில்

Kansas City, Missouri, போன்ற மருத்துவமனைகளில் அம்புலன்ஸ்

அனுப்பிட அந்த அமருத்துவ மனைகள் மறுத்து வருகிறது

கரணம் நோயாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் இந்த திணறல் ஏற்பட்டுள்ளது

அவசர நோயாளர்கள் மட்டும் அம்புலன்ஸ் அழைக்க அனுமதிக்க படுகின்றனர்

,இதில் எது அவசர நோயாளர் என்ற வரையறை காணப்படவில்லை என மக்கள் விசனம் தெரிவித்து வருகின்றனர் .

வல்லரசு அமெரிக்காவில் கோரத் தாண்டவம் ஆடும் கொரனோ தாக்குதலினால்

அந்த நாடு சின்னா பின்னமாகி வருகின்றமை குறிப்பிட தக்கது

Posted in உலக செய்திகள்

அமெரிக்காவில் எட்டு மில்லியன் பேர் கொரனோவால் பாதிப்பு

அமெரிக்காவில் எட்டு மில்லியன் பேர் கொரனோவால் பாதிப்பு

உலக மிரளவ வைத்து வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி அமெரிக்காவில்

இதுவரை சுமார் எட்டு மில்லியன் பேர் பாதிக்க பட்டுள்ளனர் ,

மேலும் எதிர் வரும் மாதங்களில் இதன் பாதகிப்பு விகிதம்

இரட்டிப்பாகும் என கடும் எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளதுடன்

மார்கழி மாதம் முடிவதற்குள் ஐந்து லட்சம் பேர் வரை பலியாக கூடும் என எதிர்பார்க்க படுகிறது

Posted in உலக செய்திகள்

பாங்கொக்கில் அரச அதிபரை பதவி விலக கோரி மக்கள் போராட்டம்

பாங்கொக்கில் அரச அதிபரை பதவி விலக கோரி மக்கள் போராட்டம்

பாங்கொக்கில் ஆளும் அரச அதிபரை பதவி விலக கோரி மக்கள்

பெரும் எழுச்சியுடன் போராட்டத்தை நடத்தினர்

இதில் கலந்து கொண்ட மக்கள் மீது தடியடி ,கண்ணீர் புகை குண்டு தாக்குதல் மேற்கொள்ள பட்டது

மேலும் வன்முறை ,கலவரத்தை தூண்டினார்கள் என்ற குற்ற சாட்டில்

நூற்றுக்கு மேற்பட்டவர்கள் அரச பயங்கரவதை அடக்குமுறைக்கு உள்ளாக்க பட்டு கைது செய்ய பட்டுள்ளனர்

மேற்படி போராட்ட காரர்களின் பின்னால் சீனா உள்ளது என ஆளும்

அரச அதிபர் தெரிவித்து வருகின்றமை கவனிக்க தக்கது

பாங்கொக்கில் அரச அதிபரை
பாங்கொக்கில் அரச அதிபரை
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

லண்டனில் -மக்கள் பார்க்க வாலிபன் மீது கத்தி வெட்டு

லண்டனில் -மக்கள் பார்க்க வாலிபன் மீது கத்தி வெட்டு

இன்று மதியம் 12.15 மணியளவில் Surrey Quays Shopping Centre

,பகுதியில் பதினெட்டு வயது வாலிபன் மீது மர்ம நபர்கள் திடீர் கத்தி வெட்டு தாக்குதலை நடத்தினர் .

இதில் பலத்த வெட்டு காயங்களுக்கு உள்ளான வாலிபர் அம்புலன்ஸ்

உலங்குவானூர்தி மூலம் மருத்துவமனைக்கு எடுத்து செல்ல பட்டார்

காயமடைந்த வாலிபர் மிக ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் ,போலீசார்

இது தொடர்பான விசாரணைகளை தீவிர படுத்தி விசாரித்து வருகின்றனர்

இந்த படுகொலை தாக்குதலுக்கு உரிய காரணம் உடனடியாக தெரிய வரவில்லை

லண்டனில் மக்கள் பார்க்க
லண்டனில் மக்கள் பார்க்க
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் நாள் ஒன்றுக்கு 28,000 பேர் கொரனோவால் பாதிப்பு-138 பேர் பலி

பிரிட்டனில் நாள் ஒன்றுக்கு 28,000 பேர் கொரனோவால் பாதிப்பு-138 பேர் பலி

பிரிட்டனில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ வைரஸ் நோயின்

தாக்குதலில் சிக்கி நாள் தோறும் இருபத்தி எட்டாயிரம் பேர் பாதிக்க பட்டு வருகின்றனர்

ஐப்பசி மாதத்தின் முதல் வாரத்தில் நாள் ஒன்றுக்கு 28,000 என்ற விகிதத்தில் இந்த தொற்று கண்டறிய பட்டு வருகிறது

இதுவே இம் மாதம் இறுதியில் நாற்பது ஆயிரத்தி கடக்கும் என அச்சம் வெளியிட பட்டுள்ளது

நாள் ஒன்றுக்கு மரணம் நூறுக்கு மேல் ஏற்பட்டுள்ளது,கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் 138 பேர் பலியாகியுள்ளனர்

இதுவே எதிர்வரும் நான்கு வாரத்திற்குள் பலநூறு மக்கள் பலியாக

கூடும் என்ற அபாய எச்சரிக்கை மீள் விடுக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

Posted in உலக செய்திகள்

போலி பாஸ்போர்ட்டில் தப்ப முயன்ற அமெரிக்க தமிழர் கைது

போலி பாஸ்போர்ட்டில் தப்ப முயன்ற அமெரிக்க தமிழர் கைது

போலி பாஸ்போர்ட்டில் அமெரிக்காவை விட்டு தப்ப முயன்ற அமெரிக்க தமிழரை அதிகாரிகள் கைது செய்தனர்.

போலி பாஸ்போர்ட்டில் தப்ப முயன்ற அமெரிக்க தமிழர் கைது
கைது

அமெரிக்காவில் வசித்து வரும் தமிழர் துரைகந்தன் முருகன் (வயது 41). சிறுமியை

பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக அவர் மீது நியூ ஜெர்சி மாகாணத்தில் வழக்கு இருக்கிறது.

இதற்கிடையே, அமெரிக்காவை விட்டு தப்புவதற்காக, சிகாகோ சர்வதேச விமான நிலையத்துக்கு முருகன் வந்தார்.

வழக்கமான விசாரணைக்காக, எல்விஸ் டயாஸ் என்பவர் பெயரிலான இந்திய பாஸ்போர்ட்டையும், பயண அனுமதி

அட்டையையும் அதிகாரிகளிடம் அளித்தார். ஆனால், அவரது உடைமைகளை பரிசோதித்தபோது, முருகன் பெயருக்குரிய ஆவணங்கள் இருந்தன.

உடற்கூறு பரிசோதனையின்போது, அவர் பெயரில் பாலியல் வழக்கு நிலுவையில் இருப்பதை காட்டியது.

இதையடுத்து, அவரிடம் விசாரித்தபோது, தன் பெயர் முருகன் என்றும்,

உடல்நலமின்றி இருக்கும் தனது தந்தையை பார்ப்பதற்காக, நண்பரின் பாஸ்போர்ட்டை பயன்படுத்தி அமெரிக்காவை விட்டு

செல்ல முயன்றதாக ஒப்புக்கொண்டார். அவர் கைது செய்யப்பட்டு, நியூ ஜெர்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

Posted in உலக செய்திகள் குற்ற செய்திகள்

உயிருடன் குளிர்பதன பெட்டியில் சகோதரனை அடைத்து கொன்ற கொடூரம் உயிரிழப்பு

உயிருடன் குளிர்பதன பெட்டியில் சகோதரனை அடைத்து கொன்ற கொடூரம் உயிரிழப்பு

சேலத்தில் உயிருடன் குளிர்பதன பெட்டியில் வைக்கப்பட்டு மீட்கப்பட்ட முதியவர் சிகிச்சை பலனின்றி அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார்.

உயிருடன் குளிர்பதன பெட்டியில் வைக்கப்பட்ட முதியவர் உயிரிழப்பு


உயிரிழந்த முதியவர் பாலசுப்பிரமணிய குமார்
சேலம்:

சேலம் கந்தம்பட்டி பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணிய குமார் (வயது 74).

இவருடைய தம்பி சரவணன் (70). இவர்களின் தங்கை மகள்கள் ஜெயப்பிரியா, கீதா. இவர்கள் 4 பேரும் ஒரே வீட்டில் வசித்து

வருகின்றனர். இந்த நிலையில் பாலசுப்பிரமணிய குமாருக்கு உடல்நிலை பாதித்தது.

இதையடுத்து சேலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். சம்பவத்தன்று ஆஸ்பத்திரியில் இருந்து

பாலசுப்பிரமணிய குமாரை அவரது தம்பி சரவணன் வீட்டுக்கு அழைத்து வந்தார். பின்னர் அண்ணன் இறந்துவிட்டார் என்று

கூறிக்கொண்டு உயிருடன் உள்ளவரை இறந்தவர்களின் உடலை வைக்க கூடிய குளிர் பதன பெட்டியில் (பிரீசர் பாக்ஸ்) வைத்துள்ளார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சூரமங்கலம் போலீசார் வந்து குளிர்பதன பெட்டியில் குளிரில் நடுங்கிக் கொண்டிருந்த

முதியவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.

இதைத்தொடர்ந்து மிகவும் அஜாக்கிரதையாக எந்திரத்தை கையாண்டதாகவும், முரட்டுத்தனமாக செயல்பட்டு உயிருடன் உள்ள அண்ணனை குளிர்பதன பெட்டியில் வைத்ததற்காகவும் 2

பிரிவுகளின் கீழ் சரவணன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சரவணன் சற்று மனநலம் பாதித்தவர் என்று போலீசார் தெரிவித்தனர்.

இந்நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாலசுப்பிரமணிய குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

உயிருடன் குளிர்பதன பெட்டியில்
உயிருடன் குளிர்பதன பெட்டியில்
Posted in உலக செய்திகள்

லண்டனில் £127,000 நகை கொள்ளையடித்த திருடன் சிக்கினான்

லண்டனில் £127,000 நகை கொள்ளையடித்த திருடன் சிக்கினான்

பிரிட்டனில் ,லண்டன் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக தங்க ,நகை

கொள்ளையில் ஈடுபட்ட ஐரோப்பிய நாட்டை சேர்ந்த வெள்ளை இன திருடன் ஒருவர் சிக்கியுள்ளார்

ஆடம்பரமாக வாழ்வதற்காக இந்த கொள்ளையில் தான் ஈடுபட்டதாக

அவன் தனது ஒப்புதல் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளான்
இவர் கொள்ளையடித்த நகைகளின் பெறுமதி சுமார் £127,000

பவுண்டுகளாகும் ,இலங்கை பணத்தில் 12 மில்லியன் ரூபாவுக்கு மேலாகும்

தற்பொழுது கைதான இவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணைகளை

மேற்கொண்ட வண்ணம் உள்ளனர்
தமிழர்கள் பரந்து வாழும் லாண்டம் பகுதியில் பரவலாக தங்க நகை கொள்ளை இடம்பெற்று வந்தது

இந்த திருடனுக்கு அதில் தொடர்பு இருக்க கூடும் என சந்தேகிக்க படுகிறது ,

அவ்வாறு எனின் தமிழ் கொள்ளையர்களும் சிக்கும் அபாயம் உள்ளது

Posted in உலக செய்திகள் உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

ஈரானுக்குள் வீழ்ந்து வெடித்த 50 ஏவுகணைகள் – பதட்டம் அதிகரிப்பு

ஈரானுக்குள் வீழ்ந்து வெடித்த 50 ஏவுகணைகள் – பதட்டம் அதிகரிப்பு

ஆர்மேனியா மற்றும் அசேர்பியன் படைகளிற்கு எதிராக கடும் மோதல்கள்

இடம்பெற்ற வண்ணம் உள்ளது ,இவ்வேளை ஈரானின் கிழக்கு பகுதியில்

Karabakh அண்மித்த எல்லை பகுதியில் சுமார் ஐம்பது ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன

உளவு விமானங்கள் தகவல்கள் வழங்க அவ்விடத்தை நோக்கி ஏவுகணைகள்

தொடராக ஏவி விடப்பட்டன ,மேற்படி உளவு பார்த்தலில் ஈடுபட்டு கொண்டிருந்த

அசேர்பியன் உளவு விமானங்களை தாம் சுட்டு வீழ்த்தியுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது

இந்த ஏவுகணை தாக்குதல் அமெரிக்கா ,இஸ்ரேல் படைகள் ஆதரவுடன்

தாக்குதலை நடத்தும் நாட்டு படைகளிற்கு ஈரான் விரைவில் தாக்குதல் தொடுக்கும் என எதிர் பார்க்க படுகிறது

Posted in உலக செய்திகள் குற்ற செய்திகள் பிரித்தானிய செய்தி

கற்பழிப்பு குற்றவாளிகளை காப்பாற்றிய போலீஸ் – பிரிட்டனில் வெடித்த சர்ச்சை

கற்பழிப்பு குற்றவாளிகளை காப்பாற்றிய போலீஸ் – பிரிட்டனில் வெடித்த சர்ச்சை

பிரிட்டனில் கடந்த ஒருவருடத்திற்குள் ,அதாவது பங்குனி மதம் வரையிலாக

இடம்பெற்ற பாலியல் குற்றவியல் குற்ற விசாரணை தொடர்பாக போலீசார்

உரிய முறையில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவே இல்லை எனவும் ,

குற்றாவளிகள் மீது கடும் தண்டனைகள் விதிக்கப்படவில்லை என்ற

குற்ற சட்டு தற்பொழுது பூதாகரமாக வைக்க பட்டுள்ளது

இது தொடர்பான ஆவண காட்சிகள் அடங்கிய திடுக்கிடும் தகவல்கள்

வெளியாகியுள்ளது ,மேற்படி சம்பவம் பிரிட்டனில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது ,

பாதிக்க பட்டவர்களை தொடர்பு கொண்டு மேற்படி ஆவண காட்சி தொகுப்பு வெளியிட பட்டுள்ளது குறிப்பிட தக்கது

Rape has always been a difficult crime to prove, but the criminal justice system has now reached crisis point.

In the year ending March 2020, 99% of rapes reported to police in England and Wales resulted in no legal proceedings against alleged attackers.

With convictions at the lowest level on record, we face an uncomfortable question: has rape become the perfect crime?

Posted in உலக செய்திகள் குற்ற செய்திகள்

8 மாத சிசுவை குப்பை தொட்டியில் வீசிய பெண் – அதிர்ச்சியில் மக்கள்

8 மாத சிசுவை குப்பை தொட்டியில் வீசிய பெண் – அதிர்ச்சியில் மக்கள்

அமெரிக்கா New Haven பகுதியில் 24 வயதுடைய இளம் பெண் ஒருவர்

தான் பெற்ற எட்டு மாத சிசுவை குப்பை தொட்டியில் வீசியுள்ளார் .அவ்வேளை

குப்பை எடுக்க வந்த சுத்திகரிப்பு தொழிலாளி சிசுவின் அலறல் சத்தம்

கேட்டு ஓடி வந்து பார்த்தனர் . பலத்த காயங்களுடன் பெண் சிசு குப்பை தொட்டியில் கிடந்துள்ளது .

உடனே போலிஸுக்கு தகவல் வழங்க விரைந்து வந்த போலீசார் சிசுவை

மீட்டு மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டது

தொடர்ந்து சிசு சிகிச்சை பெற்று வருகிறது .தற்போது தயார் கைது

செய்ய பட்டு நீதிமன்றில் ஆயர்படுத்த பட்டுள்ளார்

8 மாத சிசுவை குப்பை தொட்டியில்
8 மாத சிசுவை குப்பை தொட்டியில்
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

80நிமிடத்தில் 5 பெண்களை கத்தியால் குத்திய நபர் – பிரிட்டனில் பயங்கரம்

80நிமிடத்தில் 5 பெண்களை கத்தியால் குத்திய நபர் – பிரிட்டனில் பயங்கரம்

பிரிட்டன் Belfast, Northern Ireland பகுதியில் மிதி வண்டியில் பயணித்த

நபர் ஒருவர் என்பது நிமிடத்தில் ஐந்து பெண்களை மிக கோரமாக கத்தியால் குத்தியுள்ளார்

19 முதல் 22 வயதுடைய பெண்களை இலக்கு வைத்தே மேற்படி கொடூர தாக்குதலை நடத்தியுள்ளார்

இவரது கத்தி குத்து தாக்குதல் தொடர்பான காணொளிகள் வெளியிட பட்டுள்ளன

கழுத்து ,கால், கை ,மார்பு ,மற்றும் தோள்பட்டை ,வயிறு என்பனவற்றை

இலக்கு வைத்து தாக்குதல் நடத்த பட்டுள்ளது
.பிரிட்டனில்

சமீப காலமாக கத்தி குத்து தாக்குதல்கள் அதிகரித்துள்ளது ,இதனை

கட்டு படுத்த இரகசிய காமராக்களை வீதிகள் மற்றும் வீடுகள் முன்பாக பொருத்த பட்டுள்ளது

இதுவரை 26 ஆயிரத்திற்கு மேற்பட்ட இரகசிய கமராக்கள் வீதிகள் மற்றும்

வீடுகள் முன்பாக பொருத்த பட்டுள்ளதான திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி இருந்தமை குறிப்பிட தக்கது

80நிமிடத்தில் 5 பெண்களை கத்தியால்
80நிமிடத்தில் 5 பெண்களை கத்தியால்
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

கொரோனா தாக்கினால் காது கேட்காது – பிரிட்டன் விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்

கொரோனா தாக்கினால் காது கேட்காது – பிரிட்டன் விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்

கொரோனா தாக்கினால் சிலருக்கு காது கேட்கும் திறன் நிரந்தரமாக போய்விடுவதற்கு வாய்ப்பு உள்ளது என இங்கிலாந்து விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

கொரோனாவால் காது கேட்கும் திறன் இழப்பு – இங்கிலாந்து விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்

கொரோனா வைரஸ் தொற்றால் நுரையீரல், சிறுநீரகம், இதயம் உள்ளிட்ட உறுப்புகள் பாதிக்கும், ஆண் செக்ஸ் ஹார்மோன் டெஸ்டோஸ்டிரான் உற்பத்தி பாதிக்கும் என

கண்டறியப்பட்டிருந்தது. இந்த வரிசையில் இப்போது கொரோனா தாக்கினால் சிலருக்கு காது கேட்கும் திறன் நிரந்தரமாக

போய்விடுவதற்கு வாய்ப்பு உள்ளது என இங்கிலாந்து விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

லண்டன் பல்லைக்கழக கல்லூரியின் விஞ்ஞானிகள் உள்ளிட்டோர் நடத்திய ஆய்வில், கொரோனா வைரசால் ஏற்படுகிற பக்க விளைவு,

செவித்திறன் இழப்பு என்றும், அதே நேரத்தில் உடனடியாக சரியான ஸ்டீராய்டு சிகிச்சை எடுக்கிறபோது, மீண்டும் கேட்கும் திறனை மீட்டெடுக்க முடியும் என்றும் தெரியவந்துள்ளது.

‘பி.எம்.ஜே. கேஸ் ரிப்போர்ட்ஸ்’ பத்திரிகையில் இந்த ஆய்வு முடிவு வெளியாகி உள்ளது.

லண்டனில் 45 வயதான ஆஸ்துமா நோயாளி ஒருவருக்கு கொரோனா தாக்கியபோது, பல்வேறு சிக்கல்கள் எழுந்து, தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து ரெம்டெசிவிர் மருந்து, ஸ்டீராய்டு

மருந்துகள் அளித்தும், ரத்தம் செலுத்தியும் அவர் குணம் அடைந்தார். ஆனால் அவரது காதுகள் கேட்கும் திறனை இழந்தன.

இதுபற்றி விஞ்ஞானிகள் கூறுகையில், வைரசால் ஏற்படுகிற அழற்சியும், உடலில் ரசாயனங்கள் அதிகரிப்பும் காது கேட்காமல் செய்து விடுகிறது என தெரிவித்தனர்.

Posted in உலக செய்திகள்

காரில் கிலோ கணக்கில் கஞ்சா -அதிர்ச்சியில் பொலிஸ் – கடத்தல் கும்பல் தப்பி ஓட்டம்

காரில் கிலோ கணக்கில் கஞ்சா -அதிர்ச்சியில் பொலிஸ் – கடத்தல் கும்பல் தப்பி ஓட்டம்

ஆந்திராவில் விபத்துக்குள்ளான காரில் இருந்தவர்களுக்கு உதவி செய்வதற்காக சென்ற போலீசார், விபத்தில் சிக்கிய காரில் 140

கிலோ கஞ்சா போதைப்பொருள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

விபத்துக்குள்ளான காரில் இருந்தவர்களுக்கு உதவச்சென்ற போலீஸ் – காரில் கிலோ கணக்கில் கஞ்சா இருந்ததை கண்டு அதிர்ச்சி
விபத்துக்குள்ளான கார்

ஆந்திரபிரதேச மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் கேசப்பள்ளி என்ற பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நேற்று விபத்து

ஏற்பட்டது. நெடுஞ்சாலையில் வேகமாக வந்த கார் சாலையின் நடுவே இருந்த டிவைடரில் மோதிய விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தையடுத்து, அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்த போலீசார் விபத்துக்குள்ளான காரில்

இருந்தவர்களுக்கு உதவி செய்வதற்காக உடனடியாக சம்பவ
இடத்திற்கு விரைந்து வந்தனர்.

ஆனால், போலீசார் வருவதற்கு முன்னரே விபத்துக்குள்ளான காரில் இருந்தவர்கள் காரை அப்படியே விட்டு விட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டனர்.

விபத்து நடந்த இடத்திற்கு வந்த போலீசார் காரில் இருந்தவர்கள் அனைவரும் தப்பிச்சென்றதால் சந்தேகமடைந்தனர். இதையடுத்து, விபத்துக்குள்ளான காரை சோதனை செய்தனர்.

அப்போது காரின் இருக்கை பகுதிகளில் 140 கிலோ அளவிற்கு கஞ்சா போதைப்பொருள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

கார் விபத்துக்குள்ளானதால் போலீசில் சிக்கிக்கொள்வோம் என்ற அச்சத்தில் கஞ்சா கடத்தல் கும்பல் காரை அப்படியே விட்டு விட்டு தப்பிச்சென்றிருப்பது போலீசாருக்கு தெரியவந்துள்ளது.

இதையடுத்து, விபத்துக்குள்ளான காரையும், அதில் இருந்த 140 கிலோ கஞ்சாவையும் கைப்பற்றிய போலீசார் இந்த சம்பவம்

தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தப்பிச்சென்ற கடத்தல் கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் ஆந்திராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காரில் கிலோ கணக்கில் கஞ்சா
காரில் கிலோ கணக்கில் கஞ்சா
Posted in உலக செய்திகள்

ராணுவ ஹெலிகாப்டர்கள் நேருக்கு நேர் மோதல்- 15 பேர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானின் ஹெல்மாண்ட் மாகாணத்தில் ராணுவ ஹெலிகாப்டர்கள்

ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 15 பேர் உயிரிழந்திருக்கலாம்

என அஞ்சப்படுகிறது.விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர்காபூல்:


ஆப்கானிஸ்தானின் ஹெல்மாண்ட் மாகாணத்தின் தெற்கு

பகுதியில் உள்ள நாவா மாவட்டத்தில் விமானப்படை வீரர்கள் நேற்று இரவு

ஹெலிகாப்டர்களில் பறந்து பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது இரண்டு ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின.


சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் மீட்பு பணியில்

ஈடுபட்டனர். இந்த விபத்தில் 15 வீரர்கள் உயிரிழந்திருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன. 

ராணுவ ஹெலிகாப்டர்கள்
ராணுவ ஹெலிகாப்டர்கள்
Posted in உலக செய்திகள்

வரிக்கட்ட மறுத்த ரஜினிக்கு -எச்சரிக்கை விடுத்த நீதிமன்றம்

வரிக்கட்ட மறுத்த ரஜினிக்கு -எச்சரிக்கை விடுத்த நீதிமன்றம்

ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு சொத்து வரியாக நிலுவையில் உள்ள ரூ.6.50 லட்சத்தை செலுத்தும்படி மாநகராட்சி

நோட்டீஸ் அனுப்பியதற்கு எதிராக ரஜினி வழக்கு தொடர்ந்திருந்தார்.

மாநகராட்சி சொத்து வரி நோட்டீஸ்: ரஜினி மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்
ரஜினிகாந்த், ராகவேந்திரா திருமண மண்டபம்


சென்னையில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு சொத்து வரியாக நிலுவையில் உள்ள ரூ.6.50 லட்சத்தை செலுத்தும்படி மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியது. இந்த

நோட்டீசை ரத்து செய்யக்கோரி ராகவேந்திரா திருமண மண்டப உரிமையாளரான நடிகர் ரஜினிகாந்த், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அவர் தாக்கல் செய்த மனுவில், ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை மத்திய, மாநில அரசுகள் விதித்த பொதுமுடக்கம் காரணமாக மண்டபம் வாடகைக்கு விடாமல் காலியாகவே இருந்ததால் சொத்து

வரியை ரத்து செய்து உத்தரவிட வேண்டும், கொரோனா கால வரி குறைப்புக்கு ராகவேந்திரா மண்டபத்திற்கு தகுதி உள்ளது என அந்த மனுவில் ரஜினிகாந்த் கூறியிருந்தார்

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மாநகராட்சி அனுப்பிய நோட்டீசுக்கு எதிராக 10 நாட்களில் வழக்கு தொடர்ந்து நீதிமன்ற நேரத்தை வீணடிப்பதாக நீதிபதி கண்டனம் தெரிவித்தார்.

அத்துடன், அபராதம் விதித்து வழக்கை தள்ளுபடி செய்யப்போவதாகவும் நீதிபதி எச்சரித்தார். வழக்கை விசாரணைக்கு ஏற்க முடியாது என்றும் தெரிவித்தார்.

இதனையடுத்து மனுவை திரும்ப பெறுவதாக ரஜினி தரப்பு வழக்கறிஞர் கூறினார். வழக்கை திரும்ப பெறுவது தொடர்பாக மனு அளிக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார்.

அதனைத் தொடர்ந்து ரஜினி சார்பில் மனு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ரஜினியின் சொத்து வரி நோட்டீசுக்கு எதிரான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி முக்கிய செய்திகள்

லண்டனில் 14 நாள் வீட்டில் தனிமை படுத்த மறுத்த தமிழ் பெண்ணுக்கு 10 ஆயிரம் தண்டம்

லண்டனில் 14 நாள் வீட்டில் தனிமை படுத்த மறுத்த தமிழ் பெண்ணுக்கு 10 ஆயிரம் தண்டம்

இலங்கையில் இருந்து லண்டனுக்கு ஸ்பான்சர் மூலம் வருகை தந்த தமிழ்

இளம் பெண் ஒருவர் ,கணவருடன் இணைந்து 14 நாட்களுக்கு வீட்டில் சுயதனிமை படுத்தி தங்கி இருக்க மறுத்து ,வெளியில் நடமாடியுள்ளார் .

இதனை அவதானித்த அதிகாரிகள் அவருக்கு பத்தாயிரம் பவுண்டுகள்

தண்டம் அறவிட்டுள்ளனர் .இவர்களை கண்காணித்து வந்தவர்களினாலே இந்த அபராத தொகை விதிக்க பட்டுள்ளது ,.

தற்பொழுது அமூல் படுத்த பட்ட சட்ட பிரகாரம் ஆறு பேருக்கு மேல் விழாக்களில் நபர்கள் கூட முடியாது ,மேலும் அயலவர்கள்

,அயல் வீட்டாருடன் உறவாடவோ ,செல்லவோ முடியாது என்ற விதிகள் ,

உள்ளது ,இதனை அலட்சியம் செய்து உலாவும் நம்ம தமிழர்கள் இவ்விதம் சிக்கி தவித்து வருகின்றனர்

அதுபோலவே பத்துமணிக்கு பின்னர்உணவகத்தை திறந்து வியாபாரம் செய்த தமிழர் கடை ஒன்றுக்கும் தண்டம் அறவிட பட்டுள்ளது .

இக்காலத்தில் அரசு விதித்துள்ள விதிகளை மீறி செயல்படின் அது கிரிமினல்

குற்றமாகிறது ,அவ்விதம் பாதிக்க பட்ட சில தமிழர்கள் கருத்துக்கள் இவ்விதமாக உள்ளனவாம் .

கடந்த தினம் நோயின் தாக்குதலில் சிக்கி 141 பேர் பலியாகியுள்ளனர் ,

ஆபத்தின் அபாயத்தை உணர மறுப்பவர்கள் ,..இவ்விதம் சிக்கிதவித்து வருகின்றமை குறிப்பிடதக்கது ,

மக்களே எச்சரிக்கை ,அரசு கூறும் விதிகளை பின் பற்றுங்கள் ,குளிர்காலத்தில்

நோயின் தாக்குதல் நாள் ஒன்றுக்கு நாற்பது ஆயிரத்தை கடக்கும் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .

நத்தார் தினத்திற்கு முன்பாக நாடு முழுமையாக அடித்து பூட்டும் நிகழ்வு இடம்பெறும் என்றே எதிர் பார்க்க படுகிறது ,

லண்டன் மாநகரம் அதிக நோயாளர்களை கொண்ட இரண்டாவது புள்ளியில்

நிற்கிறது ,இதனை அடுத்து சில சிட்டிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்க

பட்டு அடித்து மூட படவுள்ளதாக லண்டன் மேயர் அறிவித்துள்ளமை இங்கே கவனிக்க தக்கது,வரும் முன் தடுப்போம் ,உயிரை காப்போம்