Posted in உலக செய்திகள்

அமெரிக்கா வாகன தொடரணி மீது தாக்குதல் – சிதறிய கவச வண்டிகள்

அமெரிக்கா வாகன தொடரணி மீது தாக்குதல் – சிதறிய கவச வண்டிகள்

அமெரிக்கா இராணுவ வாகன தொடரணியை இலக்கு வைத்த நடத்த பட்ட தாக்குதலில் இராணுவ

கவச வண்டிகள் முற்றாக சிதறின ,இதில் பல இராணுவத்தினர் பலியாகியும் காயமடைந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது

தொடராக அமெரிக்கா இராணுவ அணிகள் இலக்கு வைத்து தாக்க பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது .

    Posted in உலக செய்திகள்

    ஹெலிகாப்டர் விபத்து- உயிரிழந்த 13 பேரின் உடல்களுக்கு மலரஞ்சலி செலுத்திய பிரதமர் மோடி

    ஹெலிகாப்டர் விபத்து- உயிரிழந்த 13 பேரின் உடல்களுக்கு மலரஞ்சலி செலுத்திய பிரதமர் மோடி

    முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உடல் நாளை காலை அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.

    ராணுவ ஹெலிகாப்டர் விபத்து- உயிரிழந்த 13 பேரின் உடல்களுக்கு மலரஞ்சலி செலுத்திய பிரதமர் மோடி
    மோடி அஞ்சலி செலுத்திய காட்சி

    தமிழகத்தின் மலை மாவட்டமான நீலகிரியில் குன்னூர் அருகே நேற்று நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்ட 13 பேர்

    உயிரிழந்தனர். அவர்களின் உடல்கள் இன்று சூலூர் விமானப்படை தளத்துக்கு சாலை மார்க்கமாக கொண்டு வரப்பட்டன. பின்னர் சூலூரில் இருந்து ராணுவ விமானத்தில் டெல்லிக்கு கொண்டு வரப்பட்டன.

    பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேரின் உடல்களும் இன்று இரவு 8 மணியளவில் டெல்லி வந்தடைந்தன. பாலம் விமானப்படை தளத்தில் அவர்களின் உடல்களுக்கு பிரதமர் மோடி மலர் தூவி அஞ்சலி

    செலுத்தினார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறினார். இதேபோல் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் மற்றும் முப்படைகளின் உயர் அதிகாரிகள், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரும் அஞ்சலி செலுத்தினர்.

    உயிரிழந்தவர்களின் உடல்கள்

    நாளை காலை பிபின் ராவத் உடல் அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. பிபின் ராவத் வீடு பாராளுமன்றம் அருகே உள்ள பாதுகாப்பு அமைச்சகத்தை

    அடுத்து இருக்கிறது. அங்கு காலை 11 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை பிபின் ராவத் உடலுக்கு அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    அஞ்சலிக்கு பிறகு பிபின் ராவத், அவரது மனைவி உடல்கள் காமராஜ் ரோடு வழியாக டெல்லி கண்டோன்மென்டில் உள்ள மயானத்துக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. அங்கு முழு

    அரசு மரியாதையுடன் 2 பேரின் உடல்களும் தகனம் செய்யப்படும் என பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

    உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்திய மோடி

    இதேபோல விபத்தில் பலியான மற்ற ராணுவ அதிகாரிகளின் உடல்களுக்கும் டெல்லியில் மரியாதை செலுத்தப்படுகிறது. அதன் பின்னர் அவரவர் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டு இறுதிச்சடங்குகள் நடக்கிறது.

    ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத்தின் இறுதிச் சடங்கில் இலங்கை ராணுவத் தளபதி சவேந்திர சில்வா கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

      Posted in Uncategorized உலக செய்திகள்

      பாம்புக்கு பயந்து வீட்டை கொளுத்திய தொழிலதிபர்

      பாம்புக்கு பயந்து வீட்டை கொளுத்திய தொழிலதிபர்

      மூட்டை பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்துவதா’ என்கிற பழமொழியை பலரும் கேட்டிருப்போம். ஆனால் இந்த பழமொழியை உண்மையாக்கும் வகையில் பாம்புக்கு பயந்து ஒருவர் தனது

      வீட்டையே கொளுத்திய சம்பவம் நடந்துள்ளது. ஆனால் இது இங்கு இல்லை அமெரிக்காவில்.

      அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தை சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கு 10 ஆயிரம்

      சதுரஅடி பரப்பளவில் கட்டப்பட்ட ஆடம்பர சொகுசு வீடு சொந்தமாக இருந்தது. இதன் மதிப்பு

      பாம்புக்கு பயந்து வீட்டை கொளுத்திய தொழிலதிபர்

      சுமார் 12 கோடியாகும். இவரது வீட்டுக்கு அடிக்கடி பாம்புகள் அழையா விருந்தாளியாய் வந்து செல்வது வழக்கமாக இருந்துள்ளது.

      அதன்படி சம்பவத்தன்று வழக்கம்போல் பாம்பு ஒன்று அவரது வீட்டுக்குள் வந்துள்ளது. பாம்பை விரட்டியடிக்க யோசித்த தொழிலதிபர் நிலக்கரி மூலம் புகையை ஏற்படுத்தி பாம்பை விரட்ட முடிவு செய்தார்.

      அதன்படியே அவர் வீட்டுக்குள் நிலக்கரியை பற்ற வைத்தார். அப்போது எதிர்பாராத விதமாக

      வீட்டில் தீப்பிடித்தது. பதற்றத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் தொழிலதிபர் திகைத்துபோய்

      நின்றுவிட்டார். கண்இமைக்கும் நேரத்தில் தீ மளமளவென பரவியதால் ஒட்டுமொத்த வீடும் கொழுந்துவிட்டு எரிந்தது.

      சில நிமிடங்களிலேயே 12 கோடி மதிப்புடைய அந்த ஆடம்பர வீடு இருந்த இடம் தெரியாத

      அளவுக்கு சாம்பலாகி போனது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

        Posted in உலக செய்திகள் குற்ற செய்திகள்

        பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்து சென்ற கும்பல்

        பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்து சென்ற கும்பல்

        பாகிஸ்தானில் உள்ள கடை ஒன்றில் திருடியதாக ஒரு இளம்பெண் உள்பட 4 பெண்களை சுமார்

        ஒரு மணி நேரம் தெருக்களில் நிர்வாணமாக அழைத்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

        பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் பைசலாபாத்தில் உள்ள ஒரு கடைக்கு 4 பெண்கள் சென்றனர். அப்போது அவர்கள் கடையில் பொருட்களை திருடியதாக பிடிக்கப்பட்டனர்.

        இதையடுத்து அங்கு பலர் கூடினார்கள். அவர்கள் ஒரு இளம்பெண் உள்பட 4 பெண்களையும்

        சரமாரியாக தாக்கினார்கள். பின்னர் அவர்களது உடைகளை கலைந்து நிர்வாணப்படுத்தினார்கள்.

        அப்பெண்கள் தங்களது ஆடைகளை திரும்பத்தரும் படி அங்கிருந்த கும்பலிடம் கெஞ்சினார்கள்.

        தங்களை விட்டு விடும்படி கதறி அழுதார்கள். ஆனால் எதையும் கண்டு கொள்ளாத கும்பல் 4 பெண்களையும் சுமார் ஒரு மணி நேரம் தெருக்களில் நிர்வாணமாக அழைத்து சென்றனர்.

        பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்து சென்ற கும்பல்

        இந்த சம்பவத்தின் 2 வீடியோக்கள் சமூகவலை தளங்களில் பரவி வருகிறது. அதில் 4 பெண்கள்

        கம்பால் தாக்கப்படுவதும், ஆடைகளை கலைந்து நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து செல்லும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.

        பாதிக்கப்பட்ட பெண்கள் கூறும்போது, ‘பைசலாபாத்தில் உள்ள பாவாசாக் சந்தைக்கு நாங்கள் சென்ற போது தாகம் எடுத்ததால் எலக்ட்ரிக் கடை ஒன்றுக்குள் சென்று தண்ணீர் பாட்டில் கேட்டோம்.

        ஆனால் நாங்கள் திருடும் நோக்கத்தில் கடைக்குள் நுழைந்ததாக அதன் உரிமையாளர் குற்றம்

        சாட்டினார். பின்னர் அவர்கள் எங்களை சரமாரியாக தாக்கினார்கள். எங்களை நிர்வாணப்படுத்தி வீடியோக்களையும் எடுத்தனர். இந்த கொடுமையை யாரும் தடுக்க முன்வரவில்லை’ என்றார்.

        5 பேர் கைது

        இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடவடிக்கை எடுத்தனர். இது குறித்து போலீஸ் செய்தி தொடர்பாளர் கூறும்போது, இந்த துரதிஷ்டவசமான சம்பவத்தில் 5 முக்கிய குற்றவாளிகளை கைது செய்து உள்ளோம்.

        தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.விரைவில் தகுந்த தண்டனை வாழுங்க படும் என்கிறார் .

        இதில் சம்பந்தப்பட்ட அனைவரும் சட்டத்துக்கு முன் நிறுத்தப்படுவார்கள் என்றார்.

        மக்கள் மத்தியில் இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

          Posted in உலக செய்திகள்

          போலீசார் மீது கைக் குண்டு தாக்குத்தல்

          போலீசார் மீது கைக் குண்டு தாக்குத்தல்

          பாகிஸ்தான் காவல்துறையினரை இலக்கு வைத்து நடத்த பட்ட கைக்குண்டு தாக்குதலில் சிக்கி

          இருவர் படு காயமடைந்துள்ளனர்

          மேற்படி தாக்குதலை அடுத்து குறித்த பகுதி சுற்றிவளைக்க பட்டு தேடுதல் முடுக்கி விட பட்டுள்ளது

            Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

            வீழ்ந்துநொறுங்கிய அமெரிக்கா விமானம் – விசாரணையில் இராணுவம்

            வீழ்ந்துநொறுங்கிய அமெரிக்கா விமானம் – விசாரணையில் இராணுவம்

            அமெரிக்கா இராணுவத்தின் முக்கிய உளவு பார்க்கும் ,ஆள் இல்லா விமானம் ஒன்று அமெரிக்கா

            மெஸ்சிக்கோ
            எல்லை பகுதியில் வீழ்ந்து நொறுங்கியுள்ளது

            மேற்படி விமான விபத்து தொடர்பில் பூரண விசாரணைகளை அமெரிக்கா இராணுவம் ஆரம்பித்துள்ளது

            சமீப நாட்களாக பல நாடுகளின் இராணுவ வானூர்திகள் வீழ்ந்து நொறுங்கி வருகின்றமை குறிப்பிட தக்கது

              Posted in Uncategorized உலக செய்திகள்

              வீழ்ந்து நொறுங்கிய இராணுவ உலங்குவானூர்தி

              வீழ்ந்து நொறுங்கிய இராணுவ உலங்குவானூர்தி

              பாகிஸ்தான் காஸ்மீர் பகுதி எல்லையோரமாகி பறப்பில் ஈடுபட்ட பாகிஸ்தான் இராணுவத்திற்கு

              சொந்தமான உலங்கு வானூர்தி ஒன்று திடீரென வீழ்ந்து நொறுங்கியது ,இதன் பொழுது அதில்

              பயணித்த இரண்டு விமானிகள் பலியாகியுள்ளனர்

              எனினும் இது விபத்து அல்ல எனவும் இந்தியா இராணுவம் சுட்டு வீழ்த்தி இருக்கலாம் என்ற சந்தேகம் நிலவுகிறது

                Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

                சவூதி தலைநகர் மீது ஏவுகணை தாக்குதல்

                சவூதி தலைநகர் மீது ஏவுகணை தாக்குதல்

                சவூதி தலைநகர் மீது ஏமன் இராணுவத்தினர் திடீர் ஏவுகணை தாக்குதலை நடத்தினர்


                மூன்று ஏவுகணைகள் ஏவப்பட்டன ,ஆயினும் அவை சவுதி விமான எதிர்ப்பு ஏவுகணைகளினால்

                சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

                  Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                  லண்டனில் நாற்றத்துடன் பிட்ஸா விற்ற கடை அடித்து பூட்டு

                  லண்டனில் நாற்றத்துடன் பிட்ஸா விற்ற கடை அடித்து பூட்டு

                  லண்டன் Thanet மாவடடத்தில் உள்ள பிட்சா கடை ஒன்று அடித்து பூட்ட பட்டுள்ளது ,அந்த

                  கடைக்குள் திடீரென புகுந்த சுகாதார சோதனையாளர்கள் நடத்திய சோதனையில் அங்கிருந்த


                  dirty oven,ஊத்தை ஓவன் fridge குளிரூட்டி , fryer அடுப்பு என்பன மிக அசுத்தம் நிறைந்த நிலையில் காணப்பட்டுள்ளது ,அவற்றுடன் வைத்தே பிட்ஸா தயாரித்து மக்களுக்கு வழங்க பட்டுள்ளது

                  இதனால் அந்த கடைக்கு ஒரு புள்ளி மட்டும் வழங்க பட்டுள்ளது ,இவ்வாறு பிரிட்டனில் வழங்க பட்டால் அந்த கடை மிக மோசன நிலையில் உள்ளது என்பதாகும் ,

                  லண்டனில் நாற்றத்துடன் பிட்ஸா விற்ற கடை

                  லண்டனில் நாற்றத்துடன் பிட்ஸா விற்ற கடை

                  தற்போது அந்த கடை தொடர்ப்பன செய்தி உள்ளூர் ஊடகங்களில் வெளியாகி நிலையில் தற்போது
                  அந்த கடைக்கு செல்லும் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி உற்றுள்ளனர் ,இதனால் அந்த கடையின் வியாபாரம் பலத்த வீழ்கை அடைந்துள்ளது

                  பழைய உணவுகள் ,மற்றும் இவ்வாறான சுகதர முறைமையற்ற முறையில் ,உணவகங்கள் நடத்தா பட்டால் இதே நிலை ஏற்படும் என்பதை நம்ம தெமில் உணவகங்கள் கருத்தில் எடுத்து கொண்டால் சிறப்பானது

                  லண்டனில் நாற்றத்துடன் பிட்ஸா விற்ற கடை அடித்து பூட்டு

                  ஏன் எனில் உங்கள் கடைகளுக்கு இவர்கள் வந்து சென்றால் புள்ளி இரண்டு அல்லது ஒன்றை

                  பெற்று விட்டுப் தங்கள் ஐந்து ,அல்லது நான்கு என புலுடா விடுபவர்களே ,உள்ளூர் ஊடகங்களில் உங்கள் கடைகள் நாறடிக்க படும் என்பதற்கு இது ஒரு சான்று

                  அலட்சியத்திலும் ,மமதையிலும் உலாவது உரிய முறையில் கடைகளை நடத்தி மக்களின்

                  நன்மதிப்பை பெற்று கொள்வதே வியாபாரத்தின் வெற்றியாகும் – நம்ம கடைகள் எல்லாமே நம்பர்

                  வன் என பீற்றி திரிபவர்கள் இதை கொஞ்சம் காதில் போட்டால் நல்லது .இன்று இவர்களுக்கு நாளை உங்களுக்கு .

                  உங்கள் கடைகளுக்குள் நுழைய முன்பு இரகசிய கண்காணிப்பை மேற்கொன்டு அதன் பின்னர் கடைகளுக்குள் இவர்கள் செல்வதான கருத்தியல் உள்ளது குறிப்பிட தக்கது

                  லண்டனில் நாற்றத்துடன் பிட்ஸா விற்ற கடை அடித்து பூட்டு

                  The owner of a pizza takeaway has voiced his frustration after it was slapped with a one-star food hygiene rating.

                  Iraj Noori’s business in Ramsgate, STB Pizza, was found to have a dirty oven, fridge, fryer and chopping boards when visited by an inspector.

                  It now has the unwanted accolade of being among the worst-rated eateries in the Thanet district, and customers have started falling by the wayside.

                  But its owner says the low score is not a true reflection of his business, and says it must be reinspected as the issues were quickly resolved.

                  As well as noting how the “general cleanliness was poor throughout”, the Food Standards Agency (FSA) discovered a water leak in the walk-in chiller and a number of broken tiles in a preparation room.

                  A large amount of unclean cardboard – harbouring bacteria – was also found placed on the floor around the West Dumpton Lane premises.

                  As a result of the discoveries, STB was given a one-star rating

                    Posted in இந்தியா செய்திகள் உலக செய்திகள்

                    13 மக்களை சுட்டு கொன்ற இந்திய இராணுவம் – வாகனங்கள் எரிப்பு

                    13 மக்களை சுட்டு கொன்ற இந்திய இராணுவம் – வாகனங்கள் எரிப்பு

                    இந்தியா நாகலாந்தில் போராட்டக்காரர்களை இலக்கு வைத்து இந்தியாஇராணுவம் சூட்டு தாக்குதலை நடத்தியது

                    இதன் பொழுது 13 அப்பாவி மக்கள் பலியாகினர் , மேலும் பலர் காயமடைந்துள்ளனர் ,அரச

                    மற்றும் இராணுவ வாகனங்கள் என்பனவும் தீ வைத்து எரிக்க பட்டுள்ளன
                    தொடர்ந்து பதட்டம் நிலவி வருகிறது

                    இந்தியா இராணுவத்தின் இந்த தாக்குதலுக்கு பலத்த கண்டனம் எழுந்துள்ளது

                      Posted in உலக செய்திகள்

                      பிரிட்டனில் நத்தார் தினத்தை அண்மித்து லக்கடவுன் வரும் வாய்ப்பு

                      பிரிட்டனில் நத்தார் தினத்தை அண்மித்து லக்கடவுன் வரும் வாய்ப்பு

                      பிரிட்டனில் புதிதாக பரவி வரும் கொரனோ நோயானது வேகமாக பரவி வருகிறது ,இந்த

                      நோயானது 160 பேருக்கு பரவியுள்ளதாக சமீப குறிப்புக்கள் தெரிவிகின்றன ,இதனை அடுத்து

                      எதிர்வரும் நத்தார் தினத்தை அண்மித்து மேலும் பிரிட்டனில் லக்கடவுன் ஏற்படும் பேராபத்து நிலவுகிறது

                      இதனால் பொருட்களுக்கு தட்டு பாடு ஏற்படலாம் என எதிர் பார்க்க படுகிறது

                        Posted in உலக செய்திகள் குற்ற செய்திகள்

                        பேரூந்துக்குள் வைத்து 33 மக்களை உயிரோடு எரித்து கொன்ற தீவிரவாதிகள்

                        பேரூந்துக்குள் வைத்து 33 மக்களை உயிரோடு எரித்து கொன்ற தீவிரவாதிகள்

                        மாலியில் பேரூந்து ஒன்றில் பயணம் செய்து கொண்டிருந்த மக்களை இலக்கு வைத்து

                        தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர் ,இதில் அதில் பயணம் செய்த அனைவரையும் தீமூட்டி எரித்து

                        படு கொலை செய்தனர்


                        மேற்படி சம்பவம் உலக நாடுகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

                          Posted in உலக செய்திகள்

                          லிபியா அதிபர் தேர்தல் கடாபியின் மகன் போட்டியிட கோர்ட்டு அனுமதி

                          லிபியா அதிபர் தேர்தல் கடாபியின் மகன் போட்டியிட கோர்ட்டு அனுமதி

                          லிபியாவில் முகமது அல் மெனிபி அதிபராக இருந்து வரும் நிலையில், புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கு வருகிற 24-ந் தேதி மற்றும் ஜனவரி 24-ந் தேதி என 2 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது.

                          லிபியா அதிபர் தேர்தல் கடாபியின் மகன் போட்டியிட கோர்ட்டு அனுமதி
                          கடாபியின் மகன் சையிப் அல் இஸ்லாம்
                          திரிபோலி :

                          வடஆப்பிரிக்க நாடானா லிபியாவில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக சர்வாதிக ஆட்சி புரிந்து வந்தவர் மோமர் அல் கடாபி. கடந்த 2011-ம் ஆண்டு இவர் கிளர்ச்சிப்படையினரால்

                          சுட்டுக்கொல்லப்பட்டார். அங்கு தற்போது முகமது அல் மெனிபி அதிபராக இருந்து வரும்

                          நிலையில், புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கு வருகிற 24-ந் தேதி மற்றும் ஜனவரி 24-ந் தேதி என 2 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது.

                          இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கு சர்வாதிகாரி கடாபியின் மகன் சையிப் அல் இஸ்லாம் கடாபி

                          கடந்த மாதம் 14-ந் தேதி வேட்பு மனுதாக்கல் செய்தார். ஆனால் அவர் தனது தந்தையின் ஆட்சி

                          காலத்தின் போராட்டக்காரர்களுக்கு எதிராக வன்முறையை பயன்படுத்திய குற்றசாட்டை

                          சுட்டிக்காட்டி அவரது வேட்பு மனுவை அந்த நாட்டின் தேர்தல் ஆணையம் நிராகரித்தது. இதை எதிர்த்து, சையிப் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

                          இந்த நிலையில் நேற்று இந்த வழக்கை விசாரித்த அந்த நாட்டு கோர்ட்டு, சையிப்பை தகுதி நீக்கம்

                          செய்யும் தேர்தல் ஆணையத்தின் முடிவை ரத்து செய்து, அவர் தேர்தலில் போட்டியிட அனுமதி

                          வழங்கி தீர்ப்பளித்தது. இதனால் சர்வாதிகாரி கடாபியின் மகன் சையிப் அதிபர் தேர்தலில் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.

                            Posted in உலக செய்திகள்

                            ஓடுபாதையில் விமானத்தை தள்ளி சென்ற மக்கள் – என்னங்கடா இது

                            ஓடுபாதையில் விமானத்தை தள்ளி சென்ற மக்கள் – என்னங்கடா இது

                            பயணிகளும், பாதுகாப்பு படையினரும் ஒடுபாதையில் நின்று விட்ட அந்த விமானத்தை

                            அங்கிருந்து தள்ளிக்கொண்டு போய் அது நிற்க வேண்டிய இடத்துக்கு கொண்டு போய் நிறுத்தினர்.

                            நடுவழியில் கார், பஸ் நின்று விட்டால் அதில் பயணிக்கிற பயணிகள் இறங்கி வந்து அவற்றை

                            தள்ளி விடுவதை நம்மில் பலரும் பார்த்து இருக்கிறோம். இதை பலரும் கிண்டலடிப்பது உண்டு.

                            ஆனால் ஒரு விமானம் இப்படி திடீரென நின்றுபோய் பயணிகள் தள்ளி விட்டு பார்த்திருக்கிறீர்களா?

                            இப்படி ஒரு வினோத காட்சி நேபாளத்தில் அரங்கேறி சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருக்கிறது.

                            அங்குள்ள பாஜூரா நகரத்தில் கோல்டி விமான நிலையத்தில் டாரா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின்

                            விமானம் ஒன்று தரை இறங்கும்போது, ஓடுபாதையில் சென்றபோது திடீரென அதன் பின்புற டயர் வெடித்து நின்று விட்டது.

                            என்ன செய்வது என அறியாமல் விமானி திகைத்தார்.

                            இதற்கிடையே மற்றொரு விமானம் அங்கு வந்து தரை இறங்க முடியாமல் வானில் வட்டமடிக்கும் சூழல் உருவானது.

                            ஆனால் அங்கிருந்த பயணிகளும், பாதுகாப்பு படையினரும் ஒடுபாதையில் நின்று விட்ட அந்த

                            விமானத்தை அங்கிருந்து தள்ளிக்கொண்டு போய் அது நிற்க வேண்டிய இடத்துக்கு கொண்டு போய் நிறுத்தினர்.

                            இதை அங்கிருந்தவர்கள் தங்கள் செல்போனில் படம் பிடித்து சமூக ஊடகங்களில் வெளியிட அது கேலி, கிண்டலுக்கு வழிவகுத்து விட்டது..

                              Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                              பிரிட்டனில் புதிய ஓமிக்ரான் கொரானாவுக்கு மருந்து கண்டுபிடிப்பு

                              பிரிட்டனில் புதிய ஓமிக்ரான் கொரானாவுக்கு மருந்து கண்டுபிடிப்பு

                              உலகளாவிய ரீதியில் வேகமாக பரவி வரும் ஓமிக்ரான் ரக நோயிற்கு எதிராக போராடி


                              மக்களை காப்பாற்றும் புதிய மருந்து ஒன்றுக்கு பிரிட்டன் அங்கிகாரம் வழங்கியுள்ளது

                              குறித்த நோயினால் பாதிக்க பட்டவர்களுக்கு வழங்க பட்ட மருந்து முறையான பலனை வழங்கிய

                              நிலையில் இந்த மருந்து அங்கீகரிக்க பட்டுள்ளதாக அறிவிக்க பட்டுள்ளது

                                Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                                லண்டனில் Co op கடைக்குள் வீழ்ந்து இறந்த நபர்

                                லண்டனில் Co op கடைக்குள் வீழ்ந்து இறந்த நபர்

                                லண்டனுள் புகழ் பெற்றதும் அதிக மக்கள் பாவனையில் உள்ள வர்த்தக நிலையாமாக விளங்கும் Co-op


                                கடைக்குள் நபர் ஒருவர் வீழ்ந்துள்ளார் ,அவர் வீழ்ந்ததும் தலையில் பலமான

                                அடிகாயங்களுக்கு உள்ளான நிலையில் , அவர் இறந்துள்ளார்

                                அம்புலன்ஸ் சேவை விரைந்து வந்த பொழுதும் அவரது உயிரை காப்பாற்ற முடியவில்லை ,மதியம்

                                2,30 மணியளவில் Walderslade பகுதியில் இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது

                                  Posted in உலக செய்திகள் குற்ற செய்திகள்

                                  என் மனைவி பிள்ளையை சுடப்போறேன் -போலீசுக்கு போனில்கூறிய கொலைகாரன்

                                  என் மனைவி பிள்ளையை சுடப்போறேன் -போலீசுக்கு போனில்கூறிய கொலைகாரன்

                                  அமெரிக்கா புளோரிடா பகுதியில் 57 வயதுடைய கணவர் காவல்துறையின் அவசர எண்ணுக்கு

                                  அழைத்து
                                  எனது மனைவி மற்றும் இருபிள்ளைகளை சுட்டு விட்டேன் என தெரிவித்துள்ளார்

                                  அதிர்ச்சியடைந்த போலீசார் விரைந்து சென்று முற்றுகையிட்டதால் அவர்கள் உயிர் ஆபத்து இன்றி காப்பாற்ற பட்டனர்

                                  மேற்படி சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

                                    Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                                    லண்டனுக்குள் கடத்த பட்ட 2 4 மில்லியன் போதைவஸ்து முறியடிப்பு

                                    லண்டனுக்குள் கடத்த பட்ட 2 4 மில்லியன் போதைவஸ்து முறியடிப்பு

                                    லண்டன் டோவர் வழியூடாக வான் சாரதி ஒருவர் அந்த வானின் எரிபொருள் டாங்கிக்குள்

                                    மறைத்து எடுத்து வரப்பட்ட சுமார் 30 கிலோ எடையுள்ள கொக்கையின் போதைவஸ்து

                                    எல்லையோர காவல்படை சோதனையில் மடக்கி பிடிக்க பட்டுள்ளது

                                    லித்து வேனியா நாட்டை சேர்ந்த சாரதி ஒருவரே இந்த துணிகர கடத்தலை மேற்கொண்ட போது

                                    போலீசாரிடம் வசமாக மாட்டி கொண்டார்

                                    இது தொடர்பாக இடம்பெற்று வந்த நீதி விசாரணைகளில் குற்றவாளியாக இனம் காணப்பட்ட

                                    இவருக்கு ஒன்பது வருடம் ,ஒன்பது மாதம் சிறை தண்டனை வழங்க பட்டுள்ளது

                                      Posted in உலக செய்திகள்

                                      எல்லையில் ஈரான் இராணுவம் குவிப்பு

                                      எல்லையில் ஈரான் இராணுவம் குவிப்பு

                                      ஆப்கானிஸ்தான் ஈரான் எல்லைப் பகுதியில் ஈரான் இராணுவம் தனது விசேட படையணிகளை குவித்துள்ளது

                                      தீவிரவாதிகள் இதன் ஊடாக ஊடுருவலாம் என்பதாலும் இஸ்ரேல் படைகள் இதனை பயன்

                                      படுத்தி பெரும் தாக்குதல் ஒன்றை ஈரானுக்கும் நடத்த கூடும் என்ற உளவு தகவலை அடுத்தே

                                      மேற்படி படை குவிப்பை ஈரான் திடீரென நடத்தியுள்ளது

                                      இதனால் எல்லை பகுதியில் பதட்டம் நிலவுகிறது ,விமான படையினர் தொடர் கண்காணிப்பு

                                      பணியில் ஈடுபட்ட வண்ணம் உள்ளனர்

                                        Posted in உலக செய்திகள்

                                        ஈரானில் பாரிய நிலநடுக்கம் – பேரழிவு

                                        சற்று முன்னர் ஈரானில் பாரிய நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது ,இதன் அதிர்வு 4,5 ஆக பதிவாகியுள்ளது

                                        இந்த அதிர்வின் சேத விபரங்கள் உடனடியாக வெளியாகவில்லை ,எனினும் சுயாதீன தகவல்களின்

                                        படி பலநூறு மக்கள் பலியாகி இருக்க கூடும் எதிர்பார்க்க படுகிறது