Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
வவுனியாவில் குஞ்சு விட்ட ஈபிடிபி டக்ளஸ் குழு photo
வவுனியாவில் குஞ்சு விட்ட ஈபிடிபி டக்ளஸ் குழு
கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சின் திட்டத்திற்கமைவாக பருவகால நீர்த் தேக்கங்களை
மையப்படுத்தி வவுனியா மாவட்ட குளங்களில் மீன் குஞ்சுகள் விடப்பட்டன.
கடந்த இரு தினங்களாக இடம்பெற்ற இச் செயற்திட்டம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
நன்நீர் நிலைகளை பெருமளவில் கொண்ட வவுனியா மாவட்டத்தில் நன்நீர் மீன் வளர்ப்பை ஊக்குவிக்கும்
முகமாக மாவட்டத்தின் பல்வேறு குளங்களில் கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
அவர்களின் கருத்திட்டத்தின் அடிப்படையில் தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார
சபையினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் திட்டத்தின் பிரகாரம் மீன்குஞ்சுகள் விடப்பட்டன.
வவுனியா மாவட்டத்தின் காத்தார் சின்னகுளம், பெரியார் குளம், கருப்பனிச்சான் குளம், அலபத்த குளம், அழகர்
சமளங்குளம், கல்நாட்டினகுளம், கோவில்குளம், கருங்காலிக்குளம், கதிரங்குளம், திறப்பனகுளம் ஆகிய 10
குளங்களில் திலாப்பியா, ரோகு, கட்லா வகையான மீன்குஞ்சுகள் இவ்வாறு விடப்பட்டன.
தேசிய நீர் உயிரினச் செய்கை அபிவிருத்தி அதிகார சபையினர், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின்
சார்பில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வவுனியா மாவட்ட நிர்வாக செயலாளர் குலசிங்கம் திலீபன்
தலைமையிலான பிரதிநிதிகள் கலந்து கொண்டு இத் திட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.
பருவகால நீர்த் தேக்கங்களை மையப்படுத்தியதான நடைமுறைப்படுத்தப்படும் இந்த திட்டத்தினூடாக
விடப்படும் மீன்கள் எதிர்வரும் மே மாதமளவில் அறுவடைக்கு தயாராகும் என்று எதிர்பார்க்கப்படகின்றது.
இதன் மூலம் கிராமிய நன்னீர் மீன்பிடிப்பாளர்கள் தமது வருமானத்தை பெருக்க முடியும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
குறித்த நிகழ்வில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட கட்சியின் பிரதிநிதிகள்
பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.video



வடக்கு – கிழக்கு இணைந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வவுனியாவில் ஆர்ப்பாட்ட பேரணி photo
வடக்கு – கிழக்கு இணைந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வவுனியாவில் ஆர்ப்பாட்ட பேரணி
வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வவுனியாவில் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.
இன்று காலை 11.00 மணியளவில் வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட
உறவுகளிற்கு நீதிகோரி ஆரம்பமாகிய இப்பேரணி பஜார் வீதியின் ஊடாக வைத்தியசாலை சுற்றுவட்ட வீதியை
அடைந்து, மீண்டும் பழைய பேருந்து நிலையத்தை வந்தடைந்திருந்தது.
இதன் போது ‘எங்கே எங்கே பிள்ளைகள் எங்கே, வேண்டும் வேண்டும் நீதி வேண்டும், ஜனாதிபதியின் கருத்தை
வன்மையாக கண்டிக்கிறோம்’ என்ற கோசங்களை எழுப்பியவாறும், இலங்கையில் ஒவ்வொரு இனத்திற்கும்
ஒவ்வொரு நீதியா, கணவன்மாரை கையளித்த சின்னஞ்சிறு உறவுகளை எண்ணிப்பார் என்ற பதாதைகளையும்
தாங்கியவாறும் இவ் ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்து கொண்டிருந்தனர். வடக்கு கிழக்கு பகுதிகளைச் சோந்த பல
நூற்றுக்கணக்கான தாய்மார் குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டு தமது உறவுகளை மீட்டுத் தருமாறு
கண்ணீர் மல்க கோரிக்கையை முன்வைத்தனர்.
இவ் ஆர்ப்பாட்டப் பேரணியில் வன்னிப்பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், முன்னாள்
வடமாகாணசபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம், தமிழ் தேசிய முன்னணியின் சட்ட ஆலோசகர் க.சுகாஸ், மற்றும்
ஐந்து மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் தலைவிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.





கொரனோ வைரஸ் தாக்குதலில் 170 பேர் பலி
10 கை துப்பாக்கியுடன் நபர்கள் கைது
10 கை துப்பாக்கியுடன் நபர்கள் கைது
இலங்கை பண்டாரகம காவல்துறை பிரிவில் போலீசாரை மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 192
கிலோ போதைவஸ்து மற்றும் 10 கை துப்பாக்கிகள் ,தோட்டாக்கள் என்பனவற்றுடன் சிலர் கைது செய்ய பட்டுள்ளனர்
காவல்துறையினருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த கைது வேடடை இடம்பெற்றுள்ளது

சீனாவில் கூகிள் நிறுவனம் அடித்து பூட்டு
சீனாவில் கூகிள் நிறுவனம் அடித்து பூட்டு
சீனாவில் ஏற்பட்டுள்ள வைரஸ் நோய் தாக்கத்தை அடுத்து சீனாவில் கூகிள் நிறுவனத்த்தில் பணிபுரியும் ஊழியர்களை
தமது வீடுகளில் இருந்து பணிபுரியும் படி வேண்டியுள்ளது .
அனைத்து நிறுவனங்களும் மறு அறிவித்தல் வரை அடித்து பூட்ட பட்டுள்ளது
இதுபோலவே மக்டொனால்ஸ உணவகம்
300 உணவகங்களை பூட்டியுள்ளது குறிப்பிட தக்கது
இலங்கையில் 175 மாணவர்களுக்கு கொரனோ வைரஸ்
இலங்கையில் 175 மாணவர்களுக்கு கொரனோ வைரஸ்
இலங்கை சிறிபாத கல்லூரியில் கற்கை நெய் மேற்கொண்டு வந்துஜா சுமார் 175 மாணவர்கள் திடீர்
வைரஸ் நோய் தாக்கத்தில் சிக்கி பாதிக்க பட்டுள்ளனர் .
இவர்கள் அனைவருக்கும் கொரனோ வைரஸ் நோய் தாக்கம் தொற்றி இருக்கலாம் என நம்ப படுகிறது
இவ்வாறு பாதிக்க பட சிலருக்கு நிமோனியா தாக்கம் என கண்டறிய பட்டுள்ளது
எனினும் உண்மையான நோய் தாக்கத்தை இலங்கை அரசு மறைத்து வருவதாகவும் நம்ப படுகிறது
இந்த நோயினால் மாணவர்கள் பாதிக்க பட்டதை அடுத்து பெற்றோர்கள் பீதியில் உறைந்துள்ளனர்

யானை கட்சிக்குள் மோதல் – சஜித்துடன் 35 பேர் வெளிநடப்பு
யானை கட்சிக்குள் மோதல் – சஜித்துடன் 35 பேர் வெளிநடப்பு
ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட 35 பேர்
கலந்து கொள்வதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய தேசிக் கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று (30) இடம்பெறவுள்ளது.
இந்த கூட்டம் இன்று மாலை 3 மணிக்கு கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம் பெறவுள்ளதாக
கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.
இதில் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள தலைமைத்துவ பிரச்சினைக்கு தீர்வொன்றை பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டள்ளார்.
யானை கட்சியில் இருந்து இருவர் நீக்கம்
யானை கட்சியில் இருந்து இருவர் நீக்கம்
இலங்கையில் பிரதான கட்சியாக உள்ள ஐக்கிய தேசிய கட்சியின் செயல் குழுவிலிருந்து ரோஸி சேனநாயக்க
மற்றும் இம்தியாஸ் பாக்கீர் மரைக்கார் ஆகியயோர் அதிரடியாக நீக்க பட்டுள்ளனர்
என அந்த கட்சியின் முக்கிஸ்தர் அதிரடியாக அறிவித்துள்ளார் .
கட்சிக்குள் ஏற்பட்ட முறுகல் ,முரண்பாட்டின் காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ள பட்டுள்ளது
தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 சம்பளம் .தவறின் அரசு உடமையாக்க முடிவு
தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 சம்பளம் .தவறின் அரசு உடமையாக்க முடிவு
தோட்ட தொழிலாளர்களுக்கு தோட்ட நிர்வாகம் 1000 ரூபா சம்பளத்தை கொடுக்க தவறினால் தோட்டங்களை
அரசாங்கம் பொறுப்பேற்கும் என்று உயர் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன இன்று (30) காலை தெரிவித்தார்.
13 பில்லியன் ரூபா அப்போதைய காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் மற்றும் சேவைகளுக்காக
நிலுவையாக ஒப்பந்தகாரர்களுக்கு வழங்கப்பட வேண்டியுள்ளது.
கடந்த அரசாங்க காலப்பகுதியில் முறையற்ற நிதி முகாமைத்துவத்தின் காரணமாக இந்த நிலுவை ஏற்பட்டது
என்று தெரிவித்த அமைச்சர் இதற்காக குறை நிரப்பு பிரேரணை ஒன்று பாராளுமன்றத்தில் விரைவில்
சமர்ப்பிக்கப்படவிருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
இன்று காலை அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை
அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதனைத் சுட்டிக்காட்டியிருந்தார்.
தோட்ட தொழிலாளர்களின் 1000 ரூபா சம்பள அதிகரிப்பிற்கான கொடுப்பனவு தொகை இந்த குறை
நிரப்பு பிரேரணையில் உள்ளடங்கியுள்ளதா? என்று அமைச்சரிடம் கேட்ட போதே அவர் தோட்டங்களைப்
பொறுப்பேற்பது குறித்து கருத்து தெரிவித்தார்.
தோட்டங்கள் அரசாங்கத்துக்கே சொந்தமானவை. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தோட்ட
தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை 1000 ரூபாவாக அதிகரிப்பதற்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
இதனை தோட்ட நிர்வாகங்கள் நிறைவேற்ற தவறினால் தோட்டங்களை பொறுப்பேற்று அவை இளைஞர்களுக்கு
பிரித்து கொடுக்கப்படும் என்றும் அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் தெரிவித்தார். தோட்ட
தொழிலாளர்களுக்கு 1000 ரூபா வேதன அதிகரிப்பில் அரசாங்கம் உறுதியாக இருப்பதாகவும் அவர் கூறினார்
குத்து சண்டை புலிகளுக்கு பலத்த வரவேற்பு – வீடியோ
குத்து சண்டை புலிகளுக்கு பலத்த வரவேற்பு – வீடியோ
பாகிஸ்தானில் பதக்கம் வென்று நாடு திரும்பிய வடமாகாண குத்துச்சண்டை வீரர்களை கௌரவிக்கும்
நிகழ்வு வவுனியா தெற்கு கல்வி வலயத்தின் பணிப்பாளர் மு.ராதாகிருஸ்ணன் தலைமையில் வவுனியா தெற்கு
வலயக் கல்விப் பணிமனையில் இன்று (28) நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து வவுனியா குடியிருப்பில் அமைந்துள்ள இலங்கை திருச்சபை தமிழ்கலவன் பாடசாலை மற்றும்
வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலயம் என்பவற்றிலும் மாணவர்களுக்கு கௌரவிப்பு வழங்கப்பட்டது.
இலங்கையை பிரதிபலித்து பாக்கிஸ்தானில் நடைபெற்ற சர்வதேச கிக்பொக்சிங் குத்துச்சண்டை போட்டியில்
வவுனியாவை சேர்ந்த ஏழு வீரர்கள் கலந்துகொண்டு ஏழு பதக்கங்களை இலங்கைக்கு பெற்றுக்கொடுத்துள்ளனர்.
பாக்கிஸ்தான் லாகூரில் அமைந்துள்ள கடாபி விளையாட்டு மைதானத்தின் உள்ளக விளையாட்டு அரங்கில் கடந்த 23-01-
2020 தொடக்கம் 26-01-2020 ஆம் திகதி வரை நடைபெற்ற சர்வதேச கிக்பொக்சிங் குத்துச்சண்டை போட்டியில் கலந்து
கொண்ட வடக்கு மாகாண ஏழு குத்துச்சண்டை வீரர்கள் இலங்கைக்கு ஐந்து தங்கப்பதக்கங்களையும், இரண்டு
வெள்ளி பதக்கங்களையும் பெற்றுக் கொடுத்துள்ளனர்.
வவுனியா பண்டாரிக்குளம் விபுலானந்தா கல்லூரியை சேர்ந்த எஸ்.சஞ்சயன் (வயது 18) தங்கப்பதக்கத்தையும்,
பி.ராகுல் (வயது17) தங்கப்பதக்கத்தையும், ரி.நாகராஜா (வயது 18) தங்கப்பதக்கத்தையும், வவுனியா இலங்கை
திருச்சபை தமிழ் கலவன் பாடசாலை மாணவன் ஆர்.கெ.கெவின் (வயது 11) தங்கப்பதக்கத்தையும், வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலய மாணவன்
கெ.நிரோஜன் (வயது 16) தங்கப்பதக்கத்தையும், வவுனியா தமிழ்மத்திய மகாவித்தியாலயத்தை சேர்ந்த வி.வசீகரன்
(வயது 17) என்ற மாணவன் வெள்ளி பதக்கத்தையும், வவுனியா காமினி மகாவித்தியாலயத்தை சேர்ந்த எஸ்.
சிறிதர்சன் (வயது 18) வெள்ளிப்பதக்கத்தையும் வென்று இலங்கைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
சர்வதேச குத்துச்சண்டை பயிற்சிப்பாளரும், பிரன்ஸ் சவாட் குத்துச் சண்டை அமைப்பின் தலைவருமான சி.பூ.பிரசாத்
விக்கிரமசிங்க தலைமையில் இலங்கையில் இருந்து வடமாகாணத்தின் வவுனியாவை சேர்ந்த ஏழு வீரர்களும்,
தென்னிலங்கையை சேர்ந்த பதின்நான்கு வீரர்களுமாக 21 வீரர்கள் இலங்கையை பிரதிபலித்து பாக்கிஸ்தானுக்கு
பயணமாகியிருந்தனர். இவ்வீரர்கள் இலங்கைக்கு 13 தங்கப்பதக்கங்களையும் 06 வெள்ளிப்பதக்கங்களையும்
பெற்றுக் கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிரிட்டனில் சலூனுக்குள் புகுந்த பேரூந்து -25 பேர்காயம் – வீடியோ ,
பிரிட்டனில் சலூனுக்குள் புகுந்த பேரூந்து -25 பேர்காயம் – வீடியோ
சற்று முன்னர் பிரிட்டன் Sheffield ,பகுதியில் பேரூந்து ஒன்று சாரதியின் கட்டு பாட்டை இழந்து சலூனுக்குள்
புகுந்ததினால் அதில் பயணித்த 25 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் full video
மேலதிக செய்திகளை காணொளியில் பாருங்கள்
வவுனியா பிரதேச அதிகாரிகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் photo
வவுனியா பிரதேச அதிகாரிகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் photo
வவுனியா மாவட்டத்தில் அதிகாரத்தை பயன்படுத்தி பொதுமக்களின் காணிகளை அபகரித்த முன்னாள் பிரதேச
செயலாளர் உதயராசா உள்ளிட்ட அதிகாரிகளைக் கண்டித்து வடமாகாண மக்கள் திட்ட ஒன்றியத்தின்
ஏற்பாட்டில் இன்று (29.01) வவுனியா மாவட்டச் செயலகத்துக்கு முன் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் அரசே யுத்தத்தால் இடம்பெயர்ந்து இந்தியாவில் அகதிகளாக இருக்கும் மக்களின் காணிகளை
அபகரிக்காதே, காணி விற்பனையால் கிடைத்தது எத்தனை கோடி, காணி ஊழல்வாதிகளை வீட்டுக்கு அனுப்பு போன்ற
கோசங்களை எழுப்பியதுடன் பதாதைகளையும் தாங்கியிருந்தனர்.
இதேவேளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவிக்கும் போது,
வவுனியா நகர பிரதேச செயலாளராக முன்னர் கடமையாற்றியவர் பல காணி மோசடிகளில் ஈடுபட்டமை
வவுனியா பிரதேச அதிகாரிகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் photo
தொடர்பில் தகவல்களை வெளிகொணர்ந்ததை அடுத்து அவர் இடமாற்றப்பட்டுள்ளார். எனினும் அவரை பணி இடை
நிறுத்தம் செய்து விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும். அரசியல் வாதிகளினால் இம் மோசடிகள்
தொடர்பில் கேள்வி எழுப்பப்படாத நிலையில் சாதாரண மக்களே இவ்விடயங்களை ஆதாரத்துடன் வெளிப்படுத்தியிருந்தனர்.
வன்னியை சேர்ந்த 6 பாராளுமன்ற உறுப்பினர்களோ, அரசியல்வாதிகளோ இது தொடர்பில் கண்டு கொள்ளாமல்
இருக்கின்றனர். உயர் அதிகாரிகளின் ஊழல்கள் இவ்வாறே மறைக்கப்பட்டு வருகின்றது. எனவே இதில் சம்பந்தப்பட்ட
கிராம சேவகர்கள் குடியேற்ற உத்தியோகத்தர்கள் தொடர்பிலும் விசாரணை செய்ய வேண்டும்.
மக்கள் தாமாக துணிந்து வந்து முறைப்பாடு செய்ய ஆவண செய்யப்படவேண்டும். இந்தியாவில் உள்ளவர்களின்
காணிகளில் கிரவல் அகழப்படுகின்றது. இதனை உடன் தடுத்து நிறுத்தவேண்டும்.
ஊழல் அதிகாரிகளை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.எனவே நாம் 3 கோரிக்கைகளை முன்வைக்கின்றோம்.
அவையாவன காணி சம்பந்தமான விசாரணை ஆணைக்குழு நிறுவ வேண்டும். அது வடக்கில் உள்ள
அனைத்து பிரதேச செயலகங்கள் வாரியாகவும் விசாரணை நடத்த வேண்டும் மற்றும் இந்தியாவில் உள்ள எங்களது
மக்களின் காணிகளை எந்த பாவனையும் இல்லாமல் பாதுகாக்க வேண்டும் அடுத்து ஊழல் அதிகாரிகளை
வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கின்றோம் எனவும் தெரிவித்தனர்.




சீனாவில் போலீசாரை ஓட வைத்த நபர் – வீடியோ,
சீனாவில் போலீசாரை ஓட வைத்த நபர் – வீடியோ
சீன்சவ்வில் கொன்றானோ வைரஸ் தொற்றுக்கு உள்ளான Anhui மாகாணத்தில் உள்ள காவல்துறை நிலையம் ஒன்றுக்குள் புகுந்த நபர் ஒருவர் ஐநூறு முக மூடும் மாஸ்கட்டுக்களை வழங்கி விட்டு செல்கிறார் .
அவரை துரத்தி சென்ற காவலர்கள் இருவர் அவருக்கு சலூட் அடிக்கும் கட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது
கீழே அந்த காட்சியை கண்டு கழியுங்கள் full video
கோட்ட பாயாவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் – மைத்திரி முழக்கம்
கோட்ட பாயாவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் – மைத்திரி முழக்கம்
இலங்கையின் முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன ஆளும் கோட்டபாயவுக்கு முழு ஆதரவை மக்கள் வழங்க
வேண்டும் என வேண்டுதல் விடுத்துள்ளார் .
நல்லாட்சி வேந்தர் என கோரப்பட்டு வந்த இவரது ஆட்சியில் தான் சம்பந்தர் எதிர்க்கட்சி தலைவராக அறிவிக்க பட்டு
குஷி படுத்த பட்டு அந்த கட்சியின் அடிமையாக வைக்க பட்டார் .
இவரே தற்போது இந்த அறை கூவலை விடுத்துள்ளார்
கம்பிகளால் கட்டப் பட்ட நிலையில் மனித உடல்கள் மீட்பு
மகாவலி கங்கையின் ஊடாக நிர்மாணிக்கப்பட்டுள்ள ஹெபரவ ஶ்ரீலங்கா நிப்போன் நட்பு பாலத்தின் கீழ் மணல்
மேடொன்றில் இருந்து மனித எச்சங்கள் சில கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
குறித்த மனித எச்சங்கள் பாடசாலை, பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனம் ஒன்றின் ஆய்வு கூடத்தில் பரிசோதனைக்காக பயன்படுத்தப்பட்ட பின்னர்
அகற்றப்பட்ட மனித எச்சங்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளதாக கிராந்துருகோட்டை பொலிஸார் தெரிவித்தார்.
ஶ்ரீ லங்கா நிப்போன் நட்பு பாலத்தின் தூண்களின் கீழ் பகுதி இத்தினங்களில் புதுப்பிக்கப்படுவதால் அப்பகுதியில்
அகழ்வு பணிகளில் ஈடுபட்ட பணியாளர்களுக்கு மணல் மேடொன்றில் இருந்து இந்த மனித எச்சங்கள் கிடைக்கப்பெற்றுள்ளது.
அதனை தொடர்ந்து அது தொடர்பில் குறித்த பணியாளர்கள் கிராந்துருகோட்டை பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
அதன்படி, கடந்த தினம் பொலிஸ் குற்றவியல் பிரிவினரால் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில்
இதன்போது குறித்த மனித எச்சங்கள் கம்பிகளால் கட்டப்பட்டிருந்தமை அவதானிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், குறித்த மனித எச்சங்களை மகியங்கனை சட்டவைத்திய அதிகாரியிடம் ஒப்படைக்க நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளதாக கிராந்துருகோட்டை பொலிஸார் கம்பிகளால் கட்டப் பட்டதெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் கிராந்துருகோட்டை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.கம்பிகளால் கட்டப் பட்ட
இலங்கையில் 23 பேர் கொரனோ வைரஸ் பாதிப்பால் கண்டு பிடிப்பு
இலங்கையில் 23 பேர் கொன்றானோ வைரஸ் பாதிப்பால் கண்டு பிடிப்பு
இலங்கையில் சுமார் 23 பேருக்கு கொரனோ வைரஸ் தாக்கம் இருப்பது கண்டு பிடிக்க பட்டுள்ளது .
இந்த வைரஸ் தாக்குதலுக்கு உள்ளவர்கள் விசேட மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டு
கண்காணிக்க பட்டு வருகின்றனர்
மேற்படி செய்தியானது மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது

சீனாவில் இருந்து 63 மாணவர்கள் இலங்கை வந்தனர்,
சீனாவில் இருந்து 63 மாணவர்கள் இலங்கை வந்தனர்
சீனாவில் ஏற்பட்டுள்ள கொன்றானோ வைரஸ் தாக்குதல் உயிர் மிரட்டலை அடுத்தும் தற்பொழுது சீனாவில் கற்கை
நெறியை மேற்கொள்ள சென்றிருந்த சுமார் 200 க்கு மேற்பட்ட மாணவர்களில் 63 மாணவர்கள் நாடு வந்தடைந்தனர் .
இவர்கள் அனைவரும் தியத்தலாவ இராணுவ மருத்துவமனையில் மருத்துவ சோதனைக்கு உள்ளாக்க
பட்ட பின்னரே குடும்ப உறவுகளுடன் இணைய அனுமதிக்க படுகின்றனர்
மிரட்டல்கள் மூலம் தலைவர் பதவியை பறிக்க முடியாது – ரணில் முழக்கம்
மிரட்டல்கள் மூலம் தலைவர் பதவியை பறிக்க முடியாது – ரணில் முழக்கம்
இலங்கையில் யானை கட்சிக்குள் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது ,அந்த கட்சி உடையும் நிலையில் உள்ளது .
கட்சி தலைவர் பதவியில் இருந்து ரணில் விக்கிரமசிங்கா விலக மறுத்து வரும் நிலையில் அஜித் அணியினர் புதிய
கூட்டணி அணியில் போட்டியிட உள்ளதாக வெளியிட்ட நிலையில்
தொடர்ந்தும் தான் தான் யானை கட்சியின் தலைவர் என்வும் என்னை மிரட்டல்கள் மூலம் அந்த கட்சின் தலைவர்
பதவியில் இருந்து விலக்கிட முடியாது என ரணில் கூறியுள்ளார் .
இவரது நரித்தனத்தினால் இவருக்கு எதிராக இந்த போராட்டம் வெடித்துள்ளமை குறிப்பிட தக்கது
இலங்கை செல்லும் மக்களுக்கு பிரிட்டன் எச்சரிக்கை
இலங்கை செல்லும் மக்களுக்கு பிரிட்டன் எச்சரிக்கை
சீனாவில் கொரனோ வைரஸ் தாக்குதல் பாதிப்பை அடுத்து இலங்கை செல்லும் தமது பிரயைகளுக்கு பிரிட்டன் அவசர
எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
இலக்கையில் வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் நால்வர் கண்டு பிடிக்க பட்டனர் .இதனையே டுத்து
இலங்கை செல்லும் மக்கள் மிக விழிப்பாக இருக்கும்படி எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது
இலங்கையில் ஐந்தாயிரத்திற்கு மேற்பட்ட சீனத்தவர்கள் உள்ளமை குறிப்பிட தக்கது
சிங்கள கடற்படையால் 11 தமிழக மீனவர்கள் கைது
சிங்கள கடற்படையால் 11 தமிழக மீனவர்கள் கைது
இலங்கை – நெடுந் தீவு கடல்பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்தனர் என்ற குற்ற சாட்டில் சிங்கள
கடற்படையால் சுமார் 11 தமிழக மீனவர்கள் கைது செய்ய பட்டுள்ளனர் .
கைதானவர்கள் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முன்னிலை படுத்த படவுள்ளனர்
தமிழீழ விடுதலை புலிகள் அழிக்க பட்ட பின்னர் தமிழக மீனவர்களை இலக்கு வைத்து இலங்கை கடற்படை கைது செய்து வருகின்றமை குறிப்பிட தக்கது







