Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
கொரோனா மரணங்களை மறைக்கிறது அரசாங்கம்
கொரோனா மரணங்களை மறைக்கிறது அரசாங்கம்
கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை, அரசாங்கம் மறைப்பதாக, ஐக்கிய மக்கள் சக்தி குற்றஞ்சாட்டியுள்ளது.
இது தொடர்பாக கருத்துத் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்துள் எம்.பி ஹரின் பெர்ணான்டோ, நாட்டின் எதிர்க்கட்சி என்ற வகையில், இந்த தொற்றுநோய் சூழ்நிலையில், மக்கள்
முகங்கொடுத்த பிரச்சினைகள் தொடர்பாக தெரிவிப்பதற்கு, ஒரு அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது என்று தெரிவித்தார்.
நேற்று இரவு மாத்திரம், ராஜகிரிய, கம்பாஹா, குருநாகல் ஆகிய பகுதிகளில், 4 மரணங்கள் பதிவாகியிருந்தது என்றும் எனினும் இது
தொடர்பாக அறிவிக்கபடவோ, மொத்த இறந்தோரின் எண்ணிக்கையில் சேர்த்துக்கொள்ளப்படவோ இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
இவ்வாறு உயிரிழந்தவர்களின் மரணச் சான்றிதழ், ஐக்கிய மக்கள் சக்தியிடம் உண்டு என்றும் அதில், இறப்புக்கு, கொரோனா வைரஸே காரணம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
இதன்மூலம், நாட்டை கொரோனா வைரஸில் இருந்து காப்பதற்கான முயற்சியை, அரசாங்கம் கைவிட்டுள்ளது என்பது
தென்படுவதாகவும் இது, நாட்டை பேரழிவுக்குள் இட்டுச் செல்லும் என்றும் அவர் தெரிவித்தார்.
இலங்கையின் முதலாவது கொரோனா வைரஸ் நெருக்கடியின்போது, கொரோனாவைக் கட்டுப்படுத்திய வெற்றியாளர் கிண்ணத்தை, ஜனாதிபதி சுவீகரித்தார் என்றும்
எனினும், இந்த வைரஸ் தொடர்பாக உலக நாடுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்ற நிலையில்,
இரண்டாவது அலை அபாயத்தின் போது, இலங்கை அரசாங்கம் அதைக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டது என்றும் அவர் தெரிவித்தார்.
இலங்கையில் கொவிட் 19 உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36
இலங்கையில் கொவிட் 19 உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36
இலங்கையில் கொவிட் 19 உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36 ஆக அதிகரித்துள்ளது.
இதுதொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் ,கந்தானை பிரதேசத்தைச் சேர்ந்த 84 வயதான
பெண் ஒருவர் தனியார் வைத்தியசாலையிலிருந்து மாற்றப்பட்டு
IDH வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இந்த வைத்தியசாலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
நீண்டகாலமாக நோயினால் பாதிக்கப்பட்டிருந்த இவர் உயிரிழப்பதற்கு காரணமாக கொவிட் 19 நிமோனியா நிலைமையே என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மரணம் இலங்கையில் பதிவான 36 ஆவது கொவிட் 19 தொற்று
நோயாளரின் மரணமாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதி செய்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிப்பு
பல பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிப்பு
கம்பஹா மாவட்டத்தில் மேலும் 2 பிரதேசங்கள் ,தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
கந்தானை மற்றும் மாபாகே ஆகிய பொலிஸ் பிரிவுகள் இத்தருணத்திலிருந்து மீண்டும் அறிவிக்கும் வரையில்
தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள் என்ற ரீதியில் பெயரிடப்பட்டிருப்பதாக COVID 19 தொற்றுப் பரவலை தடுக்கம் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
மொரட்டுவ பொலிஸ் வலயத்திற்குள்
இதேவேளையில் ,மொரட்டுவ பொலிஸ் வலயத்திற்குள் அங்குலான வடக்கு மற்றும் அங்குலான தெற்கு ஆகிய கிராம உத்தியோகத்தர்
பிரிவுகள் இரண்டும் இத்தருணத்தில் இருந்து மீண்டும் அறிவிக்கும் வரையில் தனிமைப்படுத்தல் பிரதேசங்கள் என்ற ரீதியில்
பெயரிடப்படுவதாக கொவிட் 19 வைரசு தொற்றைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
குருநாகல் மாநகர எல்லை பிரதேசத்திற்குள்
குருநாகல் மாநகர எல்லை பிரதேசத்திற்குள் இலிப்பு கெதர கிராம உத்தியோகத்தர் பிரிவு மற்றும் கடவீதிய கிராம உத்தியோகத்தர் பிரிவு ஆகிய கிராம உத்தியோத்தர் பிரிவுகள் இரண்டை தவிர குருநாகல் மாநகர எல்லை பிரதேத்திற்குள் ஏனைய பகுதிகளும்:
குளியாப்பிட்டிய பொலிஸ் வலயத்திற்குள்
குளியாப்பிட்டிய பொலிஸ் வலயத்திற்குள் கலகெதர, ஹம்மலவ மற்றும் இகல கலுகோமுவ, ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள்
மூன்றைத்தவிர தவிர குளியாப்பிட்டடி பொலிஸ் வலையத்தில் ஏனைய பிரதேசங்களும்
இத்தருணத்தில் இருந்து தனிமைப்படுத்தல் நிலையில் இருந்து விடுவிக்கப்படுவதாக கொவிட் – 19 தொற்று பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
சிறைக் காவலர்கள் இருவருக்கு கொரோனா
சிறைக் காவலர்கள் இருவருக்கு கொரோனா
போகம்பரை பழைய சிறைச்சாலையின் சிறைக் காவலர்கள் இருவருக்கு, கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனை மூலமே தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
அடையாளம் காணப்பட்ட இவர்கள் தெல்தெனிய சிகிச்சை நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாடசாலையை காப்பாற்றுங்கள்- கள்ள அமைச்சான -கல்வி அமைச்சு – படம் உள்ளே
பாடசாலையை காப்பாற்றுங்கள்- கள்ள அமைச்சான -கல்வி அமைச்சு – படம் உள்ளே
மத்திய மாகாணம் நுவரெலியா மாவட்டம் ஹட்டன் கல்வி வலயத்திற்கு உட்பட்ட வட்டவளை தமிழ் மகா வித்தியாலயத்தில் கல்வி அமைச்சின் “அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை”
செயற்திட்;டத்தின் கீழ் புதிய வகுப்பறை கட்டடம் ஒன்று கட்டடப்பட்டு அதன் கட்டுமான பனிகள் தற்போது தற்காலிகமாக இடை நிருத்தப்பட்டுள்ளன.
ஹட்டன் கொழும்பு பிரதான பாதையின் அருகில் காணப்படும் இந்த பாடசாலையில் கட்டப்பட்டு வரும் இந்த கட்டடத்தின் அருகில்
பிரதான பாதையின் ஒரு பகுதி மண்சரிவிற்கு பாதிப்படைந்தால் இந்த நிர்மாண பனிகள் இடை நிருத்தப்பட்டுள்ளதாக தெரிய
வருகின்றது. இதற்கு பொருப்பான வீதி அபிவிருத்தி அதிகார சபை இதனை உடனடியாக திருத்தி அமைக்குமானால். பாடசாலையின்
கட்டட நிர்மாண பனிகளை முன்னெடுக்க முடியும். மலையக மாணவர்களின் கல்விக்கு கரம் கொடுக்கவும் முடியும் இதனை
உணர்ந்து செயற்பட வேண்டியது அதிகாரிகளின் கடமையாகும். தொடர்ந்து காலநிலை மாற்றங்களால் மேலும் இந்த பிரதேசம்
உடையுமானால் கட்டடம் பாதைக்கே வந்து விடும். இந்த விடயம் தொடர்பில் பல்வேறுபட்டவர்களுக்கு முறைபாடுகள் செய்த போதும்
இதுவரைக்கும் எந்த வித முடிவும் இல்லை. எனவே சம்பந்தபட்டவர்கள் இதற்கான உடனடி தீர்வை எடுப்பார்கள் என தெரிய வருகின்றது

பாடசாலையை காப்பாற்றுங்கள் 
பாடசாலையை காப்பாற்றுங்கள் 
இசை அமைப்பில் சாதனைகள் படைக்கும் இசைலயம் பகீரதன்- video
இசை அமைப்பில் சாதனைகள் படைக்கும் இசைலயம் பகீரதன்- video
இலங்கையில் மிகவும் சிறந்த முன்னணி கிட்டார் வாந்திய கலைஞர் இசைலயம் பகீரதன் தொடர்ச்சியாக பல பாடல்களுக்கு இசையமைத்து வருகின்றார்.
இவர் இலங்கையில் பல இசைக்கு ழுக்களில் தன்னுடைய இசை ஆளுமையை தொடர்ச்சியாக வெளிப்படுத்து பலருடைய பாராட்டுக்களை பெற்றுள்ளார்.
இசைத்துறையில் இருக்கும் நீண்டகால அனுபவத்தின் அடிப்படையில் இவருடைய ஒவ்வொரு பாடல்களின் இசையமைப்பும் கூர்ந்து கவனிக்கப் படுகின்றன.
இவர் பல இசையமைப்பாளர்களின் வளர்ச்சிக்கு பக்க பலமாக இருந்து வருவதால் இளம் கலைஞர்களால் மதிக்கப் படும் ஒருவராக இருந்து வருகின்றார்.
முதல் தரப் பாடல்களை அதிகமாக வெளியிட்டு வரும் சுபர்த்தனா படைப்பக்கத்தில் மூத்த இசையமைப்பாளராக இருந்து பல
பாடல்களுக்கு இசையமைத்து வரும் இவருடைய பாடல் ஒன்றை அண்மையில் திரைப் பாடகர்கள் முகேஷ் – குரலிசைவாணி பிரதா ஆகியோர் பாடியிருந்தனர்
அந்தப் பாடல் ஒரு திரைப் பாடல் போன்று செவிகளில் விழுந்ததோடு மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் அளவுக்கு சிறப்பாக அமைந்திருந்தது.
இங்கே இசைலயம் பகீரதன் அவர்களின் இசையில் ஒரு இளம் பாடகி சாரங்கா பாடிய பாடல் மனதிற்கு இதமாக அமைந்துள்ளது
. இவர் மேலும் பல பாடல்களுக்கு இசையமைத்து வருவதாக அறிய முடிகிறது.
இசைலயம் பகீரதன் அவர்களின் இசைப்பயணம் தொடர வாழ்த்துக்கள்!
கோட்டா ஆட்சியின் அலங்கோலம் – இதோ பாருங்கள்- படம் உள்ளே
கோட்டா ஆட்சியின் அலங்கோலம் – இதோ பாருங்கள்- படம் உள்ளே
மத்திய மாகாணம் நுவரெலியா மாவட்டம் நுவரெலியா மாநகர சபைக்கு உட்பட்ட பிரதேசத்தில் மாநகர சபையினால் நிர்வகிக்கபட்டு வரும் பஸ் நிலையமே இது.
இந்த பஸ் நிலையம் அன்மையில் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச அவர்களின் நாட்டை சுத்தமாக வைத்திருப்போம்
என்ற உன்னத செயற்திட்டத்திற்கு கீழ் இளைஞர் யுவதிகளினால் பல சமூகத்திற்கு தேவையான கருத்துகளையும் அறிவுரைகளையும் கூறும் சித்திரங்கள் வரைந்து அழகுப்படுத்தபட்டுள்ளன.
இருந்தும் இந்த பஸ் நிலையத்தை முறையாக பராமரிப்பதில் நுவரெலியா மாநகர சபை விழகிருப்பதால். இந்த பஸ் நிலையத்தை பயன்படுத்தி வரும் பயணிகள் பல
இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். இந்த பஸ் நிலையத்தில் காணப்படும் அனைத்து இருக்கைகளும் உடைந்து பாவனைக்கு உகந்ததாக இல்லை.; துர்ர இடங்களுக்கான பஸ்கள்
வரும் வரையில் பயணிகள் நின்றுக் கொண்N;ட காத்திருக்க வேண்டும். குறிப்பாக இரவு வேலைகளில் குளிருடன் பயணிகள்
பெரும் இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். நுவரெலியா என்றதும் அதன் பசுமையும் அதன் அழகுமே அனைவரினது மனங்களிலும் வரும் எண்ணமாகும்.
இந்த அழகிற்கு குத்தகமான பாராமரிப்பை இங்கு காணக் கூடியதாக இருக்கின்றது. இவ்வாறான நிலையில் இதனை திருத்தி அமைக்க வேண்டியது மாநகர சபையின் கடமையாகும்.
இந்த பஸ் நிலையத்தில் கொழும்பு கண்டி குருனாகல் யாழ்ப்பானம் வெலிமடை பண்டாரவலை பதுளை கதிர்காமம் காலி ஹட்டன் புஸ்ஸல்லாவ பூண்டுலோயா
ராகல உடபுஸ்ஸல்லாவ மீபிலிமான கந்தபளை வலப்பனை போன்ற இடங்களுக்கும் நுவரெலியாவ சூழவுள்ள தோட்ட மற்றும்
கிராமங்களுக்கு செல்லும் தனியார் மற்றும் அரச போக்குவரத்து பஸ்களும் சொகுசு பஸ்களும் நிருத்தபட்டு வருகின்றது என்பது குறிப்பிடதக்கது.


கோட்டா ஆட்சியின் அலங்கோலம்
வத்தளை தமிழ் குடும்பம் மீதான தாக்குதல் செய்தி தொடர்பில் மனோ எம்பி நடவடிக்கை
வத்தளை தமிழ் குடும்பம் மீதான தாக்குதல் செய்தி தொடர்பில் மனோ எம்பி நடவடிக்கை
வத்தளை ஹெந்தலை பிரதேசத்தில் ராமலிங்கம் தங்கராஜா, விமலா சுப்பிரமணியம் என்ற தமிழ் குடும்பத்தை
துன்புறுத்தி வீட்டை கைப்பற்ற முனைந்த நபர்கள் மீது நடவடிக்கை எடுங்கள். இந்த குடும்பத்து தமிழ் பெண்ணை தாக்கியுள்ள நபர்களை கைது செய்யுங்கள்.
வத்தளை பொலிஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்ட இந்த தமிழ் குடும்பத்தவர்கள், கடந்த மாதம் 4ம், 13ம் மற்றும் இம்மாதம் 7ம் திகதிகளில், யோஹான் விக்ரமசிங்க என்ற பொதுஜன பெரமுன
(SLPP) என்ற ஆளும் கட்சி வத்தளை பிரதேச சபை உறுப்பினருக்கும், அவரை சார்ந்த நபர்களுக்கும் எதிராக தந்த
புகார்கள் தொடர்பில், வத்தளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி செலோகம ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதையும் கண்டறியுங்கள்,
இதுபற்றிய செய்தி நேற்றைய சக்தி தொலைக்காட்சி செய்தியறிகையில் வெளியாகி தமிழ் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுபற்றி எமது கம்பஹா மாவட்ட அமைப்பாளர் சசிகுமார் உட்பட ஆதரவாளர்கள் மற்றும் சம்பந்தபட்ட குடும்பத்தினர் தன்னிடம் நேரடியாக புகார் செய்துள்ளதாக, தமுகூ தலைவர் மனோ கணேசன்
எம்பி, இன்றைய கட்சி தலைவர்கள் கூட்டத்தை அடுத்து, சட்ட ஒழுங்கு துறை அமைச்சர் சமல் ராஜபக்சவிடம், நேரடியாக எடுத்து கூறி கேட்டார்.
ஆளும் கட்சி அரசியல்வாதியாக இருந்தாலும், இந்த பிரதேச சபை உறுப்பினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அமைச்சர் சமல் ராஜபக்ச, எம்பி மனோ கணேசனிடம் உறுதியளித்தார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
இதையடுத்து, மனோ கணேசன் எம்பி, வத்தளைக்கு பொறுப்பான மேல்மாகாண வடக்கு பிரதி பொலிஸ் மாதிபர் விஜயஸ்ரீ தொடர்பு கொண்டு, இவ்விடயம் பற்றி பிரஸ்தாபித்து, வத்தளை பொலிஸ் பொறுப்பதிகாரியின் அசமந்த போக்கு மற்றும் அரசியல் சார்ந்த செயற்பாடு பற்றி கவனிக்கும்படியும், வத்தளை கெரவலபிடிய பகுதியில் வசிக்கும் தமிழ் குடும்பங்களை அச்சுறுத்தி, அவர்களது காணி, வீடுகளை அபகரிக்கும் திட்டமா இது என விசாரிக்கும்படியும் அறிவுறுத்தினார்.
இதுபற்றி உடன் நடவடிக்கை எடுப்பதாக, பிரதி பொலிஸ் மாதிபர் விஜயஸ்ரீ, மனோ கணேசன் எம்பியிடம் உறுதியளித்தார்.
சற்று முன், வத்தளை பொலிஸ் பொறுப்பதிகாரி செலொகமவை தொடர்பு கொண்ட மனோ எம்பி, இத்தகைய புகார்கள் உம்மீது வத்தளை வாழ் தமிழ் மக்கள் கூறாத வண்ணம் நடந்துக்கொள்ளும் என கூறியுள்ளார்.
256 பொலிஸாருக்கு கொரோனா
256 பொலிஸாருக்கு கொரோனா
மேல் மாகாணத்தில் 256 பொலிஸாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இதில் 6 பேர் பூரண சுகமடைந்துள்ளனரெனவும் மேலும் 250 பேர்
தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் 317 பொலிஸார் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி
வைக்கப்பட்டுள்ளதுடன், 1,447 பொலிஸார் சுயதனிமையில்
இருப்பதாகவும் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் கொரனோவால் 35ஆவது நபர் மரணம்
இலங்கையில் கொரனோவால் 35ஆவது நபர் மரணம்
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 78 வயதுடைய ஆண் ஒருவர்,
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மரணமடைந்துள்ளதாகத்
தெரிவிக்கப்படுகின்றது.
பொதுப் போக்குவரத்துச் சேவைகள் மீண்டும் இன்று ஆரம்பம்
பொதுப் போக்குவரத்துச் சேவைகள் மீண்டும் இன்று ஆரம்பம்
மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டதைத்
தொடர்ந்து, பொதுப் போக்குவரத்துச் சேவைகள் மீண்டும் இன்று ஆரம்பமாவதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கை போக்குவரத்துச் சபையின் பஸ்கள் இன்று சேவையில்
ஈடுபடுத்தப்பட உள்ளதாக சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்தார்.
தூர இடங்களுக்கான பஸ் சேவைகளும் ஆரம்பிக்கப்படும் என அவர் கூறினார்.
முறையான வேலைத்திடட்டத்தின் கீழ், தனியார் பஸ் சேவைகளும் நடத்தப்படும்
என தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன தெரிவித்துள்ளார்..
நோய் அறிகுறிகள் தென்படாத தொற்றுக்குள்ளானவரின் மூலம் வைரஸ் பரவும் ஆபத்து
நோய் அறிகுறிகள் தென்படாத தொற்றுக்குள்ளானவரின் மூலம் வைரஸ் பரவும் ஆபத்து
நோய் அறிகுறிகள் தென்படாத கொரோனா தொற்றுக்குள்ளானவரின் மூலம் வைரஸ் பரவும் ஆபத்து நிலை
உயர் மட்டத்தில் காணப்படுவதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இலங்கையில் அடையாளம் காணப்படும் நோயாளர்களுள் பெரும் எண்ணிக்கையானவர்களுக்கு நோய்க்கான அறிகுறிகள் தென்படுவதில்லை என்றும் இவர்களின் அறியாமை
மற்றுமொருவருக்கு நோய் பரவுவதற்கு காரணமாக இருப்பதாகவும் தொற்று நோயியல் பிரிவின் விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
தொற்று நோயியல் பிரிவின் விசேட வைத்தியர் மேலும் தெரிவிக்கையில், தற்பொழுது இவ்வாறான நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும், கொழும்பு மாநாகர சபை
எல்லைக்குள் பெரும்பாலான பகுதிகளில் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் பயணங்களை வரையறுத்து தொற்றை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
வீடுகளில் தனிமைப்படுத்தலுக்காக ஈடுப்படுத்தப்படும் நபர்களின் தனிமைப்படுத்தல் எவ்வாறு இடம்பெற வேண்டும் என்ற விடயம் தொடர்பிலும் விசேட வைத்தியர் தெளிவுப்படுத்தினார்.
வயதானோர் மற்றும் தொற்றா நோய் உள்ளவர்கள் வீடுகளிலேயே இருக்குமாறும், வீடுகளில் இருந்து ஒருவர் மாத்திரம் தமது
தேவைகளுக்காக வெளியே செல்வது பொருத்தமானது என்றும் வைத்தியர் குறிப்பிட்டார்.
யாராவது நபர் வீட்டில் தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டால் அந்த வீட்டில் ஏனைய உறுப்பினர்களும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுவது முக்கியமான விடயமாகும் என்றும் கூறினார்.
இதேவேளை வீடுகளில் தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டிருக்கும் குடும்பங்கள் முன்னெடுக்கப்பட வேண்டிய சரியான சுகாதார நடைமுறை பற்றியும் அவர் தெளிவுப்படுத்தினார்.
அதிக விலையில் அரிசி விற்பனை செய்த 50 பேர் கைது
அதிக விலையில் அரிசி விற்பனை செய்த 50 பேர் கைது
புத்தளம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை
நடவடிக்கையின்போது, நிர்ணய விலைக்கு அதிக விலையில், அரிசி
விற்பனையில் ஈடுபட்ட 50 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கிராமிய வைத்தியசாலை மூடப்பட்டது; வைத்தியர் உள்ளிட்ட குழுவினருக்கு கொரனோ
கிராமிய வைத்தியசாலை மூடப்பட்டது; வைத்தியர் உள்ளிட்ட குழுவினருக்கு கொரனோ
கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கிராமிய வைத்தியசாலையின் வைத்தியர், தாதியர்கள், பணியாளர்கள்
உள்ளடங்களாக 16 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று, பொதுசுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.
மேற்படி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற நோயாளர் ஒருவருக்கு, கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டதையடுத்தே, வைத்தியசாலையை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் வைத்தியசாலையை அண்மித்து அமைந்துள்ள மருந்தகங்கள் சிலவும் மூடப்பட்டுள்ளதுடன், மருந்தகங்களில்
பணியாற்றியவர்களையும் தனிமைப்படுத்தியுள்ளதாக சுகாதார பரிசோதகர்கள் மேலும் தெரிவித்தனர்.
குறித்த தொற்றாளர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளதுடன், பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்தியுள்ளார்
என்றும் எனவே அவர் பயணித்த பஸ் மற்றும் பயணிகளின் விவரங்களைப் பெற்றுக்கொள்வதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்
தும்பர சிறைச்சாலையில் எழுவருக்கு தொற்று
தும்பர சிறைச்சாலையில் எழுவருக்கு தொற்று
போகம்பறை தும்பர சிறைச்சாலையிலும் பழைய போகம்பறை சிறைச்சாலையிலும் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஏழு
கைதிகளுக்கு, கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக, சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தும்பர சிறைச்சாலையில் ஆறு பேரும் போகம்பறை பழைய சிறைச்சாலையில் ஒருவருமே தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர் என்று, அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.
கொழும்பிலுள்ள சிறைச்சாலைகளிலிருந்து தனிமைப்படுத்தலுக்காக, போகம்பறை சிறைச்சாலைக்கு அனுப்பி
வைக்கப்பட்டவர்களுக்கே கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
மேற்படி எழுவரையும் கொரோனா சிகிச்சை மய்யங்களுக்கு அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன்,
சிறைச்சாலையில் தொற்றுநீக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இலங்கையில் கொரோனா – தற்போது மூன்றாவது எச்சரிக்கை
இலங்கையில் கொரோனா – தற்போது மூன்றாவது எச்சரிக்கை
கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டு நோய் அறிகுறிகள் இல்லாமல் இருப்பவர்களை மீண்டும் வீடுகளுக்கு அனுப்பி
வைப்பதற்கான வழிகாட்டல் வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
இதன் பிரகாரம், முதலாவது பீசீஆர் பரிசோதனை நடத்தப்பட்டு 14 நாட்கள் கழிந்த பின்னர், இரண்டாவது பரிசோதனை நடத்தாமல்,
அவர்களை வீடுகளுக்கு அனுப்பி வைக்கப் போவதாக அவர் கூறினார்.
இடைப்பட்ட சிகிச்சை நிலையங்களில் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட போதிலும், நோய் அறிகுறிகள் காட்டாதவர்கள் தத்தமது வீடுகளில் 14 நாட்கள் தனிமைப்படுத்தி வைக்கப்படுவார்கள்.
தற்போதைய தொற்றுப் பரம்பல் நாளுக்கு நாள் மாறி வருவதால், மக்களின் வாழ்க்கை முறையை பேணும் வழிமுறைகள் கருதி சுகாதார அமைச்சு நான்காவது எச்சரிக்கை மட்டத்தை பிரகடனம்
செய்துள்ளது. தொற்றுப் பரம்பல் நீண்ட காலம் நீடிக்கலாம் என சுகாதார அமைச்சின் பொதுச் சுகாதார சேவைகளுக்குப் பொறுப்பான பிரதிப் பணிப்பாளர் சுசீ பெரேரா தெரிவித்தார்.
இலங்கை தற்போது மூன்றாவது எச்சரிக்கை மட்டத்தில் உள்ளது. சில இடங்களில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுலில்
இருந்தாலும், ஏனைய பகுதிகளில் சில கட்டுப்பாடுகளுடன் மக்கள் வாழ்க்கையையும், தொழில்களையும் முன்னெடுத்துச் செல்ல வேண்டியிருக்கிறது என்று அவர் கூறினார்
முல்லேரியா வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் பிரியந்த கருணாரட்ன கருத்து வெளியிடுகையில், இங்குள்ள பீசீஆர் கருவிகள் பழுது பார்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இங்கு நாளாந்தாம் சுமார் ஆயிரம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாக அவர் மேலும் கூறினார்.
ஊரடங்கு நாளை நீக்கம் – தனிமைப்படுத்தல் பிரதேசங்களும் அறிவிப்பு
ஊரடங்கு நாளை நீக்கம் – தனிமைப்படுத்தல் பிரதேசங்களும் அறிவிப்பு
மேல் மாகாணத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள தனமைப்படுத்தல் ஊரடங்கு நாளை காலை 5.00 மணிக்கு நீக்கப்படுவதாக இராணு தளபதி லெப்டினென் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிpத்துள்ளார்.
கொழும்பில் இனங்காணப்பட்ட 12 பொலிஸ் பிரிவுகள் மற்றும் ஆபத்தான பகுதிகளாக இனங்காணப்பட்டுள்ள தொடர்மாடி கட்டிடங்கள் சிலவற்றை தனிமைப்படுத்த தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுதொர்பாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:
இதுவரையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள அனைத்து பிரதேசங்களிலும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நாளை (09) காலை 5.00 மணிக்கு நீக்கப்படுவதாக கொவிட் – 19 தொற்று பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
இருப்பினும் கீழ் குறிப்பிடப்படும் பிரதேசங்கள் மீண்டும் அறிவிக்கும் வரையில் தனிமைப்படுத்தல் பிரதேசங்களாக பெயரிடப்பட்டுள்ளன.
கொழும்பு மாவட்டத்தில்
• மட்டக்குளி பொலிஸ் பிரிவு
• முகத்துவாரம் பொலிஸ் பிரிவு
• புளுமெண்டல் பொலிஸ் பிரிவு
• கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவு
• கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவு
• கரையோர பொலிஸ் பிரிவு
• ஆட்டுப்பட்டித் தெரு பொலிஸ் பிரிவு
• மாளிகாவத்தை பொலிஸ் பிரிவு
• தெமட்டகொட பொலிஸ் பிரிவு
• வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவு
• பொரள்ளை பொலிஸ் பிரிவு
• வாழைத்தோட்டம் பொலிஸ் பிரிவு
கம்பஹா மாவட்டம்
• வத்தளை பொலிஸ் பிரிவு
• பேலியகொடை பொலிஸ் பிரிவு
• கடவத்த பொலிஸ் பிரிவு
• ராகம பொலிஸ் பிரிவு
• நீர்கொழும்பு பொலிஸ் பிரிவு
• பமுனுகம பொலிஸ் பிரிவு
• ஜா-எல பொலிஸ் பிரிவு
• சப்புகஸ்கந்த பொலிஸ் பிரிவு
களுத்துறை மாவட்டம்
• ஹொரணை பொலிஸ் பிரிவு
• இங்கிரிய பொலிஸ் பிரிவு
• வேக்கட கிராம உத்தியோகஸ்தர் பிரிவு
குருநாகல் மாவட்டம்
• குருநாகல் மா நகர எல்லை பகுதிக்குள்
• குளியாப்பிட்டிய பொலிஸ் பிரிவு
கேகாலை மாவட்டம்
• மாவனல்ல பொலிஸ் பிரிவு
• ரூவான்வெல்லை பொலிஸ் பிரிவு
இதேபோன்று கீழ் குறிப்பிட்ட வீடமைப்பு திட்டத்தில் கொவிட் – 19 தொற்று பரவல் தொடர்பில் கடும் அனர்த்தத்துடனான இடமாக அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும் இந்த வீடமைப்பு திட்டங்களில் வாழும் பொது மக்கள் வீடுகளுக்கிடையில் நடமாடுவது தவிர்த்து பயணங்களை வரையறுத்து தமது வீடுகளுக்குள்ளேயே தங்கியிருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
• மெத்சந்த செவன
• மிஹிஜய செவன
• மோதர ரன்மிண செவன
• சிரிசந்த உயன தெமட்டகொட
• மாளிகாவத்தை Nர்ளு வீடமைப்பு
ஆயுதங்களுடன் 7 பேர் கைது- தொடரும் விசாரணை
ஆயுதங்களுடன் 7 பேர் கைது- தொடரும் விசாரணை
ஊரடங்கு உத்தரவு அமுலில் இருந்த காலப்பகுதியில், களுத்துறை சென்றல் சந்தியில், களுத்துறை விசேட அதிரடிப் படை அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட வீதிச் சோதனை
நடவடிக்கைகளின்போது. சட்டவிரோதமான முறையில் முச்சக்கர வண்டி மற்றும் கார் ஒன்றில் கொண்டுச்செல்லப்பட்ட ஆயுதங்கள் சிலவற்றுடன் எழுவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
இதன்போது, நவீன ரக சொகுசு கார் ஒன்றையும் முச்சக்கர வண்டி ஒன்றையும் நான்கு வாள்கள், ஆறு அரிவாள்கள், ஒரு கைக்குண்டு, இரு டீ-56 ரக துப்பாக்கி தோட்டாக்கள், இரு வெற்று டீ-56 ரக
துப்பாக்கி தோட்டங்கள் மற்றும் கையடக்க தொலைபேசிகள் என்பவற்றை கைப்பற்றிய பொலிஸார், 22 மற்றும் 36 வயதுக்கு
உட்பட்ட பயாகலை பகுதியைச் சேர்ந்த மூவரையும், களுத்துறை பகுதியைச் சேர்ந்த இருவரையும், மத்துகமைப் பகுதியைச் சேர்ந்த இருவரையும்; கைதுசெய்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களை, களுத்துறை நீதிமன்றத்தின் பதில் நீதவான் ரவி டொமிங்கோ முன்னிலையில்
ஆர்படுத்தியபோது, மூவரை மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை
மேற்கொள்ளவும், ஏனைய நால்வரை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதிவான் உத்தரவிட்டார்.
ஊரடங்குச் சட்டத்தை மீறிய 150 பேர் கைது-403 வாகனங்கள் பறிமுதல்
ஊரடங்குச் சட்டத்தை மீறிய 150 பேர் கைது-403 வாகனங்கள் பறிமுதல்
கடந்த 24 மணித்தியாலங்களில் ஊரடங்குச் சட்டத்தை மீறிய 150 பேர் கைது
செய்யப்பட்டுள்ளதாகப் பிரதிப் பொலிஸ்மா அதிபரும் பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
மேலும் நேற்று (06) 21 வாகனங்களைப் பொலிஸார் கைபற்றியிருப்பதாகவும்,
ஊரடங்குச் சட்டத்தை மீறிய 2,600 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளதோடு,
403 வாகனங்களையும் பொலிஸார் இதுவரையில் கைபற்றியிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
கொரனோ -1400 பொலிஸார் சுயதனிமைப்படுத்தலில்
கொரனோ -1400 பொலிஸார் சுயதனிமைப்படுத்தலில்
மேல்மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானப் பொலிஸாரின் எண்ணிக்கை 221ஆக அதிகரித்துள்ளது.
கொழும்பில் உள்ள பொலிஸ் நிலையங்களில் பணியாற்றும் பெரும்பாலானப்
பொலிஸாரே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உள்ளனர்.
கொரோனா தொற்றுக்கு உள்ளானப் பொலிஸாருடன் நெருங்கிப் பழகிய 300 பொலிஸார் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு
அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் 1400 பொலிஸார் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.







