கொரனோ -1400 பொலிஸார் சுயதனிமைப்படுத்தலில்
மேல்மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானப் பொலிஸாரின் எண்ணிக்கை 221ஆக அதிகரித்துள்ளது.
கொழும்பில் உள்ள பொலிஸ் நிலையங்களில் பணியாற்றும் பெரும்பாலானப்
பொலிஸாரே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உள்ளனர்.
கொரோனா தொற்றுக்கு உள்ளானப் பொலிஸாருடன் நெருங்கிப் பழகிய 300 பொலிஸார் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு
அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் 1400 பொலிஸார் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.