மணமகனின் வாயோடு வாய் வைத்து சிகரெட் புகையை உறிஞ்சும் மணமகளின் வீடியோ
Posted in இலங்கை செய்திகள்

மணமகனின் வாயோடு வாய் வைத்து சிகரெட் புகையை உறிஞ்சும் மணமகளின் வீடியோ

மணமகனின் வாயோடு வாய் வைத்து சிகரெட் புகையை உறிஞ்சும் மணமகளின் வீடியோ

மணமகனின் வாயோடு வாய் வைத்து சிகரெட் புகையை உறிஞ்சும் மணமகளின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமூக வாழ்வில் திருமணம் என்ற உறவு மிக முக்கியமானது. ஆண், பெண் உறவின் எல்லைக்கோடு திருமணம் என்ற புள்ளியின் மூலம் இணைக்கப்படுகிறது. இந்தியாவில் பல்வேறு திருமண முறைகள் இருந்தாலும் அவரவர் கலாசார முறைப்படி நடத்தப்பட்டு வருகிறது.

சைவ, அசைவ விருந்து, பாட்டுக் கச்சேரி என நகர் புறங்களில் நடைபெறும் திருமண விழாக்களுக்கு எடுக்கப்படும் போட்டோ, வீடியோக்கள் தற்போது பெரும் பாய்ச்சலாக வேறு திசையை நோக்கி பயணிக்க ஆரம்பித்திருக்கிறது. அது சமூகத்தில் பெரும் அதிர்வுகளையும் ஏற்படுத்தி வருகிறது.

மணமகனின் வாயோடு வாய் வைத்து சிகரெட் புகையை உறிஞ்சும் மணமகளின் வீடியோ

மணமகனுக்கு மது ஊற்றிக் கொடுக்கும் மணமகள், செயற்கை மழையை பெய்ய வைத்து அதில் மணமக்கள் முழுமையாக நனைய வைத்து புகைப்படம்,

வீடியோக்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஃப்ரீ வெட்டிங் ஷூட் என அழைக்கப்படும் இப்படியான புகைப்படங்கள், வீடியோக்கள் உயரமான மலைப்பிரதேசங்கள், நீர்வீழ்ச்சிகள், இயற்கை சூழல் நிறைந்த வனப்பகுதிகளில் எடுக்கப்படுகின்றன. ஆபத்தான முறையில் கடலிலும் இப்படியான ஷூட்டிங் நடத்தப்பட்டு வருகிறது.

கேரளாவில் சமீபத்தில் அரைகுறை ஆடைகளுடன் மணமகள் மற்றும் மணமகன் ஆகிய இருவரும் திருமணத்துக்கு முன்பு பங்கேற்ற ஃப்ரீ வெட்டிங் ஷூட் புகைப்படம் எடுக்கப்பட்டது. இப்புகைப்படங்கள் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வை ஏற்படுத்தின.

இந்த நிலையில், சமூக வலைதளங்களில் தற்போது வெளியாகியுள்ள வீடியோ ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மணமகனின் வாயோட வாய் வச்சு சிகரெட் புகையை மணமகள் உறிஞ்சும் அந்த வீடியோவிற்கு சமூக வலைதளங்களில் பலர் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

இலங்கை மட்டக்களப்பில் 180 தற்கொலை
Posted in இலங்கை செய்திகள்

இராணுவ சிப்பாய் தற்கொலை

இராணுவ சிப்பாய் தற்கொலை

அண்ணமார்கோவில், புன்னாலைக்கட்டுவன் பகுதியில் போதை பழக்கத்திற்கு ஆளான முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார்.

இவர் கடந்த காலத்தில் இராணுவத்தில் பணிபுரிந்து வந்த நிலையில், போதை பழக்கத்திற்கு அடிமையாகி இருந்ததால் வேலையில் இருந்து நிறுத்தப்பட்டார். பின்னர் கந்தக்காடு புனர்வாழ்வு மையத்திலும் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில் இன்றைய தினம் அவரது வீட்டுக்கு முன்னால் உள்ள மரம் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இராணுவ சிப்பாய் தற்கொலை

அண்ணமார்கோவில், புன்னாலைக்கட்டுவன் பகுதியை சேர்ந்த ஈஸ்வரன் சத்தியசீலன் (வயது 29) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். பிரேத பரிசோதனைகளின் பின்னர் அவரது சடலமானது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது

கோர விபத்தில் மூவர் பலி
Posted in இலங்கை செய்திகள்

கோர விபத்தில் மூவர் பலி

கோர விபத்தில் மூவர் பலி

அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் மூவர் பலி மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏ9 வீதி பனிச்சங்குளம் பகுதியில் இன்று (15) அதிகாலை கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த வேன் விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

வீதிக்கருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றின் பின்பகுதியில் வேன் மோதிய நிலையில் குறித்த லொறி முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றுமொரு லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதன்போது பின்னால் இருந்த லொறியின் சாரதி வாகனத்தை விட்டு இறங்கிய இருந்த நிலையில் இரண்டு லொறிகளுக்கு இடையில் சிக்கி பலத்த காயங்களுக்கு உள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கோர விபத்தில் மூவர் பலி

லொறியின் பின்பகுதியில் பயணித்த ஒருவரும், வேனின் முன் இருக்கையில் பயணித்த நபர் ஒருவரும் படுகாயங்களுக்கு உள்ளாகி மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளனர்.

மேலும், வேனில் பயணித்த மூன்று பெண்களும், லொறியில் பயணித்த ஆண் ஒருவரும் காயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், லொறியில் பயணித்த மூன்று ஆண்கள் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முல்லேரியா புதிய நகரம், வெல்லம்பிட்டி மற்றும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 38, 46 மற்றும் 58 வயதுடையவர்களே விபத்தில் உயிரிழந்துள்ளனர். விபத்து தொடர்பில் வேன் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

14000 வீடுகளுக்கு இலவச சூரிய ஔி மின்சாரம்
Posted in இலங்கை செய்திகள்

14000 வீடுகளுக்கு இலவச சூரிய ஔி மின்சாரம்

14000 வீடுகளுக்கு இலவச சூரிய ஔி மின்சாரம்

சூரிய ஒளி மின்சாரத் திட்டத்தின் கீழ், அரைவாசிப் பணிகள் நிறைவடைந்த 11,000 வீடுகள் மின்சார விநியோகத்திற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இந்த 11,000 வீடுகள் அதிகாரசபையினால் நடைமுறைப்படுத்தப்பட்ட 15 திட்டங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்டுள்ளன. இந்த திட்டங்கள் 2015-2019 க்கு இடையில் செயல்படுத்தப்பட்டன.

குறைந்த வருமானம் பெறும் 25,000 வீடுகளுக்கு சோலார் பேனல்கள் மூலம் மின்சாரம் வழங்கும் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதுடன், அது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவினால் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த திட்டம் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு மற்றும் மின் சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சின் கூட்டு திட்டமாக செயல்படுத்தப்படுகிறது.

14000 வீடுகளுக்கு இலவச சூரிய ஔி மின்சாரம்

பாதி கட்டி முடிக்கப்பட்ட குறைந்த வருமானம் பெறும் 25,000 வீடுகளை தேர்வு செய்து அந்தந்த வீடுகளை பூரணப்படுத்தி சோலார் பேனல்கள் அமைக்க முன்மொழியப்பட்டது.

இதுவரை தெரிவு செய்யப்பட்டுள்ள 11,000 பாதி கட்டி முடிக்கப்பட்ட வீடுகளுக்கு மேலதிகமாக மேலும் 14,000 வீடுகளும் இந்த நாட்களில் தெரிவு செய்யப்படவுள்ளன.

இந்தத் திட்டத்தின் ஊடாக 25,000 வீடுகளுக்கு மின்சாரம் வழங்குவது மட்டுமின்றி, 500 மெகாவாட் புதுப்பிக்கத்தக்க சக்தியை தேசிய மின்கட்டமைப்பில் சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தத் திட்டத்திற்காக சுமார் 650 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நேரடி முதலீடு செய்யப்படும். இத்திட்டத்தின் 400 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான பொருட்கள் உள்ளூரிலேயே கொள்வனவு செய்யப்படும். ஏனைய பணத்திற்கு மாத்திரமே வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இத்திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 648 கிகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மின்சார உற்பத்தியின் காரணமாக, இலங்கைக்கான எரிபொருள் எண்ணெய் இறக்குமதியின் வருடாந்த சேமிப்பு 116.64 மில்லியன் அமெரிக்க டொலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது.

14000 வீடுகளுக்கு இலவச சூரிய ஔி மின்சாரம்

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான உதவியின் அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்ட பல வீடமைப்புத் திட்டங்கள் நிதிப் பிரச்சினைகளால் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளதால் அவ்வாறான வீடுகளை நிறைவு செய்வதற்கு இந்தத் திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்படவுள்ளது.

குறிப்பாக மொனராகலை, அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, பொலன்னறுவை, அனுராதபுரம், வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஆகிய 11 மாவட்டங்களில் அரச காணிகளில்

கிராமங்களாக ஆரம்பிக்கப்பட்டுள்ள வீடுகளில் பாதி கட்டி முடிக்கப்பட்ட வீடுகளை பூரணப்படுத்தி சோலார் பேனல்கள் மூலம் மின்சாரம் முதல் கட்டத்தில் வழங்கப்படவுள்ளது.

ஐ சேனல் தனியாருக்கு இரகசியமாக விற்கப்பட்டதா
Posted in இலங்கை செய்திகள்

ஐ சேனல் தனியாருக்கு இரகசியமாக விற்கப்பட்டதா

ஐ சேனல் தனியாருக்கு இரகசியமாக விற்கப்பட்டதா

அரசுக்குச் சொந்தமான அலைவரிசையான ஐ (Eye Channel), ஜூன் 30 இலிருந்து ஆறுமாத காலத்திற்கு செல்லுபடியாகும் வகையில் ,மாதந்தோறும் ரூ. 250

மில்லியனுக்கு வி.ஐ.எஸ் ஒளிபரப்பு தனியார் நிறுவனத்திற்கு ரகசியமாக விற்கப்பட்டதாக தேசிய மக்கள் சக்தி கட்சியானது நேற்று குற்றஞ்சாட்டியுள்ளது.

ஐ சேனல் தனியாருக்கு இரகசியமாக விற்கப்பட்டதா

சனல் ஐயின் ஒளிபரப்பு நேரமானது எந்தவித வெளிப்படைத்தன்மையுமின்றி விற்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்தை வெகுசன ஊடக அமைச்சர் நேற்று சமர்ப்பித்துள்ளதையடுத்து, ரூபவாஹினி

ஊழியர்கள் மற்றும் இந்த ஒப்பந்தம் தொடர்பில் அறிந்தவர்கள் இதற்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் கலாநிதி நளிந்த ஜெயதிஸ்ஸ ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

அசானி பட்டால் அழுத மக்கள் கொண்டாடும் சிங்களவர்கள் VIDEO IN
Posted in இலங்கை செய்திகள்

அசானி பாட்டால் அழுத மக்கள் கொண்டாடும் சிங்களவர்கள் VIDEO IN ||asani saregamapa songs|zee tamil asani saregamapa songs|

மக்களை அழவைத்த அசானி ,இலங்கை கண்டி சின்ன குயில் கொண்டாடும் சிங்களவர்கள்,மக்கள் கண்ணீர் செவ்வி ,கண்ணீரில் கரைந்த தமிழினம் ,நெஞ்சுருக்கும் சம்பவங்கள் ,அசானியின் இரண்டாவது பாடல் காட்சிகள் இதோ,

asaani ,asaanisong Msrilankaasaani
srilankaasaani ,saregamapalittlechamps ,srilankachildasaani ,zeetamil ,zeetamilsongs

sa re ga ma pa li’l champs||asani saregamapa songs|zee tamil asani saregamapa songs|

நீர்க்குழாய்களுக்கு தீயிட்ட 6 மாணவர்கள் கைது
Posted in இலங்கை செய்திகள்

மனைவியை வீட்டுக்குள் பூட்டிவிட்டு தீ வைப்பு

மனைவியை வீட்டுக்குள் பூட்டிவிட்டு தீ வைப்பு

மனைவியை வீட்டுக்குள் பூட்டிவிட்டு வீட்டுக்கு தீ வைத்த நபர் கைது செய்யப்பட்டதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.

களுத்துறை, கமகொட, ரஜவத்த பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இருவருக்கும் இடையில் சில காலமாக குடும்பத் தகராறு இருந்து வந்ததாகவும், சந்தேகநபர் ஞாயிற்றுக்கிழமை (13) மாலை மது போதையில் வந்து ரப்பர் மெத்தை, தலையணைகள் மற்றும் துணிகளை வீட்டில் வைத்து விட்டு மனைவி இருந்தமை இதுவரையிலான விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தீயினால் வீட்டின் சமையலறை முழுவதும் சேதமடைந்துள்ளது, ஆனால் முறைப்பாட்டாளர் தனது ஆடைகளுடன் வீட்டை விட்டு வெளியே வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேர்வின் சில்வா
Posted in இலங்கை செய்திகள்

உங்கள் தலைகளுடன் தான் வருவேன்;மேர்வின் சில்வா

உங்கள் தலைகளுடன் தான் வருவேன்;மேர்வின் சில்வா

“நான் வட மாகாணத்திற்கு வருவேன். விகாரைகள் மீது கை வைத்தால் அல்லது பௌத்த மதகுருக்கள் மீது கைவைக்க முயன்றால் நான் மீண்டும் களனியவிற்கு வரும்போது வெறும் கையுடன் வர மாட்டேன்.

உங்கள் தலைகளுடன் தான் வருவேன். வேலையை செய்வதற்கு எனக்கு அமைச்சர் பதவி தேவையில்லை” என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

நேற்று களனியவில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

வெளிநாடு சென்றுள்ள இலங்கையருக்கு வீடுகள்
Posted in இலங்கை செய்திகள்

வெளிநாடு சென்றுள்ள இலங்கையருக்கு வீடுகள்

வெளிநாடு சென்றுள்ள இலங்கையருக்கு வீடுகள்

தொழில் வாய்ப்புக்காக வௌிநாடுகளுக்கு சென்றுள்ள இலங்கை பணியாளர்களுக்கு வீடுகளை அமைத்து கொடுக்கும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை இணைந்து ஆரம்பித்துள்ளன.

இந்த வீடுகளை நிர்மாணிக்கும் திட்டம் மூன்று முறைகளின் மூலம் செயற்படுத்தப்படவுள்ளது.

வெளிநாடு சென்றுள்ள இலங்கையருக்கு வீடுகள்

இந்த வீடமைப்புத் திட்டத்திற்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் நிதியுதவி வழங்குவதுடன், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

இது தொடர்பான கூட்டு அமைச்சரவைப் பத்திரம் எதிர்வரும் காலங்களில் விடயங்களுக்கு பொறுப்பான அமைச்சர்களான பிரசன்ன ரணதுங்க மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோரால் சமர்ப்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டுத் தேவை உடைய வெளிநாட்டுப் பணியாளர்கள் தொடர்பில் ஏற்கனவே கணக்கெடுப்பை மேற்கொண்டுள்ளதுடன், சுமார் 1,000 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

70 பயணிகளுடன் பயணித்த பஸ் விபத்து
Posted in இலங்கை செய்திகள்

கொழும்பில் பஸ் விபத்து 7 பேர் காயம்

கொழும்பில் பஸ் விபத்து 7 பேர் காயம்

பம்பலப்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டூப்ளிகேஷன் வீதிக்கு அருகில் இன்று (14) அதிகாலை பஸ் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

கொழும்பில் இருந்து கதிர்காமம் நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று தும்முல்லயிலிருந்து வந்த லொறியுடன் மோதி வீதியில் கவிழ்ந்துள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

கொழும்பில் பஸ் விபத்து 7 பேர் காயம்

விபத்தின் போது பேருந்தில் சுமார் 15 பயணிகள் இருந்தனர், இரண்டு பெண்கள் மற்றும் ஐந்து ஆண்கள் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மின்விளக்கு இன்றி பேருந்து இயங்கியதாலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

வாகனத் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது
Posted in இலங்கை செய்திகள்

சிறுமி துஷ்பிரயோகம் பெரியப்பா கைது

சிறுமி துஷ்பிரயோகம் பெரியப்பா கைது

வீட்டில் வறுமை காரணமாக பெரிய தந்தையின் வீட்டில் தமது பிள்ளையை தங்க வைத்த நிலையில் பெரிய தந்தை மகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி உள்ளதாக, ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளனர்.

வறுமை காரணமாக 17 வயதான தமது மகளை, தந்தையின் அண்ணா வீட்டில் பெற்றோர் தங்க வைத்துள்ளனர்.

சிறுமி துஷ்பிரயோகம் பெரியப்பா கைது

இந்நிலையில் சிறுமியின் பெரிய தந்தை நீண்ட காலமாக சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி வந்துள்ளார். இது குறித்து சிறுமி தனது பெற்றோருக்கு தெரியப்படுத்தியதையடுத்து, சனிக்கிழமை பெற்றோரால் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் , சிறுமியின் பெரிய தந்தையை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் , சிறுமியை வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

1 பில் டொலர்களை தாண்டியது வருமானம்
Posted in இலங்கை செய்திகள்

1 பில் டொலர்களை தாண்டியது வருமானம்

1 பில் டொலர்களை தாண்டியது வருமானம்

2023ஆம் ஆண்டில் இலங்கையின் சுற்றுலா வருமானம் 1 பில்லியன் அமெரிக்க டொலர்களை தாண்டியுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் தரவுகள்

காட்டுகின்ற அதேவேளை, ஓகஸ்ட் மாதத்தின் முதல் 10 நாட்களில் 51,594 சுற்றுலாப் பயணிகள் வருகைதந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஓகஸ்ட் மாதத்திலும் 9,146 இந்திய பிரஜைகள் வருகை தந்துள்ள நிலையில், இந்தியாவிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகின்றனர்.

1 பில் டொலர்களை தாண்டியது வருமானம்

இதேவேளை, ஐக்கிய இராச்சியத்திலிருந்து 6,939 பேரும், சீனாவிலிருந்து 3,707 பேரும், பிரான்சிலிருந்து 3,249 பேரும், ஜேர்மனியிலிருந்து 3,155 பேரும், ரஷ்யாவிலிருந்து 2,385 சுற்றுலாப் பயணிகளும் இந்த மாதத்தில் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

ஜூலை மாதத்தில் மொத்தம் 143,039 சுற்றுலாப் பயணிகள் வந்ததாகவும் அதன்படி, இந்த வருடத்தில் இதுவரை 819,507 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர் என்றும் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவிக்கிறது.

அரசியல் ஒரு சாக்கடை அரசியல்வாதி தாக்கு
Posted in இலங்கை செய்திகள்

அரசியல் ஒரு சாக்கடை அரசியல்வாதி தாக்கு

அரசியல் ஒரு சாக்கடை அரசியல்வாதி தாக்கு

பலர் அரசியலில் ஈடுபடுவதை சாக்கடை என்று கூறுகின்றார்கள் ஆனால் அதனை சுத்தம் செய்வதற்கு யாரும் வருவதில்லை.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

கண்டி புனித சில்வெஸ்டர் கல்லூரியின் கலை அமுது விழா 2023 கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றும் போதே இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

பலர் அரசியலில் ஈடுபடுவதை சாக்கடை என்று கூறுகின்றார்கள் ஆனால் அதனை சுத்தம் செய்வதற்கு யாரும் வருவதில்லை. ஆனால் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இன்று பரிணாமங்களுடன் விஸ்தரித்து பல இளைஞர் யுவதிகளுக்கான பயிற்சி நெறிகளை வழங்கி நாட்டின் கொள்கை தீர்மானத்தில் சந்தர்ப்பத்தையும் வழங்கி வருகிறோம்.

ஜனாதிபதி அவர்களுடன் மலையக மக்களின் அபிவிருத்திக்கான சந்திப்பு இடம்பெற்றது. ஆனால் எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் மலையக பிரதிநிதிகள் இதனில் பங்கு கொள்ளாது தவிர்த்தனர்.

எமது மக்களின் அபிவிருத்திக்காக ஒன்றினையாது தமது அரசியல் நோக்கத்திற்காக எமது மக்களைப் பிரித்தாள நினைத்து இவர்கள் மட்டுமல்லாது எமது மக்களின் அபிலாசைகளையும் புறந்தள்ளி உள்ளார்கள்.

அரசியல் ஒரு சாக்கடை அரசியல்வாதி தாக்கு

கண்டி புனித சில்வர்ஸ்டர் கல்லூரி இலங்கைக்கு இளம் தலைவர்களை உருவாக்குகின்றனர் இம்மகத்தான செயலில் நானும் இணைந்து கொள்வது பெரும் மகிழ்ச்சியாகும். இக்கல்லூரி கட்டிட வசதிகளையும் நவீன கற்றல் வசதிகளையும் எதிர்பார்த்து இருப்பதை நான் அறிந்தேன்.

அந்த வகையில் எனது அமைச்சின் நிதியத்தின் தலைவர் பாரத் அருள்சாமி ஊடாக இக்கல்லூரிக்கு நவீன திறன் வகுப்பறை ஒன்றிணையும் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் கட்டிடத்தையும் வழங்க நான் தீர்மானித்துள்ளேன்.

இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக உள்ள இப் பாடசாலை வளர்ச்சியில் நாம் என்றும் முன் நின்று செயல்படுவோம். இன அடையாளம் எமது உரிமை சிலர் இதனை இனவாதமாக மாற்றுவதாலயே

அரசியல் ஒரு சாக்கடை அரசியல்வாதி தாக்கு

எமது நாடு இவ்வாறான பொருளாதார வீழ்ச்சியை அடைந்தது. இளம் மக்கள் பிரதிநிதிகளாக நாம் இதனை மாற்றி அமைப்போம். என்றும் நாங்கள் உங்களுடன் என்று அமைச்சர் ஜீவன் தொண்டமான் என தெரிவித்தார்.

இந்நிகழ்வின் போது பிரதம அதிதியாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான், சிறப்பு அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ராமேஸ்வரன், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் பாரத் அருள்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

எகிப்துக்கு பறந்தார் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா
Posted in இலங்கை செய்திகள்

13வது திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி மீது விமர்சனம்

13வது திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி மீது விமர்சனம்

அரசியலமைப்பின் 13வது திருத்தத்தின் ஊடாக ஜனாதிபதி முன்னெடுக்கும் அரசியல் செயற்பாடுகளை கண்டிப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.

நாடு ஜனநாயக அரசியல் நெருக்கடியை நோக்கி நகர்வதாக அதன் சிரேஷ்ட உப தலைவர் பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.

அதேநேரம் ரணில் விக்கிரமசிங்க அதிகாரத்தை பிளவுபடுத்த முயற்சித்ததன் காரணமாகவே ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அதிகாரத்தை இழந்தார் என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.

13வது திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி மீது விமர்சனம்

எவ்வாறாயினும், நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு வடக்கு கிழக்கில் இனப்பிரச்சினைக்கு ஏதேனும் தீர்வு காணப்பட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டில் இடம்பெற்ற கலவரங்கள், ஹர்த்தால்கள் மற்றும் போராட்டங்களிலிருந்து எந்தவொரு கட்சியும் பாடம் கற்கவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

நாட்டில் அனைத்து துறைகளிலும் நெருக்கடியான சூழல் நிலவுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மலையிலிருந்து தவறி விழுந்த பிரித்தானிய பிரஜை
Posted in இலங்கை செய்திகள்

மலையிலிருந்து தவறி விழுந்த பிரித்தானிய பிரஜை

மலையிலிருந்து தவறி விழுந்த பிரித்தானிய பிரஜை

பிரித்தானிய பிரஜை ஒருவர் சிறிய சிறிபாத மலையில் இருந்து தவறி சுமார் 50 அடி கீழே விழுந்துள்ளார்.

இன்று (13) காலை பண்டாரவளை, எல்ல சுற்றுலாப் பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் சுற்றுலா பயணியின் ஒரு காலில் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மலையில் இருந்து தவறி விழுந்த சுற்றுலா பயணி தற்போது தியத்தலாவ ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யானை தாக்குதலுக்கு உள்ளாகி ஒருவர் மரணம்
Posted in இலங்கை செய்திகள்

யானை தாக்குதலுக்கு உள்ளாகி ஒருவர் மரணம்

யானை தாக்குதலுக்கு உள்ளாகி ஒருவர் மரணம்

கரடியனாறு – மரப்பாலம், புத்தம்புரிக் குளத்தில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவர் யானை தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்டகப்பட்ட சம்பவம் இன்று (13) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மயிலவெட்டுவானை சேர்ந்த 42 வயதுடைய இராசமன்னன் தேவராசா என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார்.

யானை தாக்குதலுக்கு உள்ளாகி ஒருவர் மரணம்

குறித்த நபர் நேற்று இரவு களத்தில் மீன்படிக்கச் சென்றவர் காலையில் வீடு திரும்பாத நிலையில், அவரை உறவினர்கள் தேடிச் சென்ற நிலையில் குளத்துக்கு அருகாமையில் யானை தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்த நிலையில் சடலமாக கிடப்பதை கண்டு பொலிஸாருக்கு தெரிவித்தனர்.

இதனையடுத்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கு நீதிமன்ற அனுமதியை பெறுவதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டுவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்

கார் விபத்து ஐவர் படுகாயம்
Posted in இலங்கை செய்திகள்

கார் விபத்து ஐவர் படுகாயம்

கார் விபத்து ஐவர் படுகாயம்

எரிபொருள் ஏற்றிச்சென்ற பௌசரும், காரொன்றும் நேருக்கு நேர் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் காரில் பயணித்த ஐவர் படுகாயமடைந்துள்ளனர் என்று திம்புள்ள – பத்தன பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்கள் கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா- கிளங்கள் ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் திம்புள்ள – பத்தனை சந்தியில் வைத்தே சனிக்கிழமை (12) இரவு 10 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

கார் விபத்து ஐவர் படுகாயம்

வெலிமடையிலிருந்து கொட்டகலை எரிபொருள் கூட்டுத்தாபனத்தின் தேயிலை களஞ்சியசாலை வளாகத்துக்கு பயணித்துக்கொண்டிருந்த எரிபொருள் பௌசரும், நோர்வூட்டிலிருந்து தலவாக்கலை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த காருமே இவ்வாறு நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.

கார் வேகமாக செலுத்தப்பட்டுள்ளது எனவும், அதன் சாரதி மதுபோதையில் இருந்துள்ளார் எனவும் பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

விபத்தில் காயமடைந்த ஐவரும் நோர்வூட் பகுதியைச் சேர்ந்த 20 -30 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என விபத்து தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துவரும் திம்புள்ள – பத்தன பொலிஸார் தெரிவித்தனர்.

வாகனத் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது
Posted in இலங்கை செய்திகள்

சிறுமியை திருமணம் செய்ய அழைத்துச் சென்றவர் கைது

சிறுமியை திருமணம் செய்ய அழைத்துச் சென்றவர் கைது

15 வயதான சிறுமி ஒருவரை திருமணம் செய்வதாகக் கூறி அழைத்துச் சென்ற இளைஞர் முல்லைத்தீவு கள்ளப்பாட்டு பகுதியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசுவமடுவினை சேர்ந்த குறித்த சிறுமியை காணவில்லை என கடந்த மாதம் சிறுமியின் பெற்றோரால் விசுவமடு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

சிறுமியை திருமணம் செய்ய அழைத்துச் சென்றவர் கைது

அதனையடுத்து, நேற்று (12) முல்லைத்தீவு கள்ளப்பாட்டில் வைத்து கள்ளப்பாட்டினை சேர்ந்த 26 வயதுடைய இளைஞரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக முல்லைத்தீவு, மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், கைதுசெய்யப்பட்ட இளைஞரை தடுப்புக் காவலில் வைத்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன்போது கடந்த மாதம் இந்த இளைஞர் சிறுமியை திருமணம் செய்வதாக கூறி அழைத்துச் சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.

பருத்தித்துறையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

ஆணின் சடலம் மீட்பு மிரட்டும் படுகொலைகள்

ஆணின் சடலம் மீட்பு மிரட்டும் படுகொலைகள்

இலங்கை வெல்லவாய – ஊவா குடாஓயா பகுதியில் ஆன் ஒருவர் சடலம் கண்டு பிடிக்க பட்டுள்ளது .

சிதைவடைந்த நிலையில் சடலம் காணப்படுவதால் ,பல வாரங்களுக்கு முன்னதாக இவர் இறந்திருக்கலாமா என் அசந்தேகிக்க படுகிறது .

இவர் தற்கொலை புரிந்தாரா அல்லது படுகொலை செய்ய பட்டாரா என்பது தொடர்பான விசாரங்கள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

ஆற்றில் மிதந்த ஆணின் சடலம் இலங்கையில் எகிறும் கொலைகள்
Posted in இலங்கை செய்திகள்

பஸ் தரிப்பிடத்தில் ஆண் ஒருவர் சடலமாக மீட்பு

பஸ் தரிப்பிடத்தில் ஆண் ஒருவர் சடலமாக மீட்பு

மட்டக்களப்பு – கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள பாலமீன்மடு ஆரம்ப வைத்தியசாலை வளாக பகுதியிலுள்ள பஸ் தரிப்பிட கட்டிடத்தில் ஆண் ஒருவர் இன்று (12) பிற்பகல் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பெகாக்குவில் பொலிஸார் தெரிவித்தனர்

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற பொலிசார் விசாரணை மேற்கொண்ட போது

குறித்த நபர் மைக்கல் என்று அழைக்கப்படுவதாகவும் இவர் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக இந்தபகுதி பொது கட்டிடங்களான சந்தை மற்றும்

பஸ்தரிப்பிட கட்டிடங்களில்; தங்கி வாழ்ந்து வருதாகவும் இவர் தொடர்பான மேலதிக விபரங்கள் தெரியவில்லை பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

பஸ் தரிப்பிடத்தில் ஆண் ஒருவர் சடலமாக மீட்பு

குறித்த சடலத்தை பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கான நீதிமன்ற அனுமதியை பெறும் நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்குவில் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.