Tag: யானை தாக்குதலுக்கு
யானை தாக்குதலுக்கு உள்ளாகி ஒருவர் மரணம்
யானை தாக்குதலுக்கு உள்ளாகி ஒருவர் மரணம்
கரடியனாறு – மரப்பாலம், புத்தம்புரிக் குளத்தில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவர் யானை தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்டகப்பட்ட சம்பவம் இன்று (13) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மயிலவெட்டுவானை சேர்ந்த 42 வயதுடைய இராசமன்னன் தேவராசா என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார்.
யானை தாக்குதலுக்கு உள்ளாகி ஒருவர் மரணம்
குறித்த நபர் நேற்று இரவு களத்தில் மீன்படிக்கச் சென்றவர் காலையில் வீடு திரும்பாத நிலையில், அவரை உறவினர்கள் தேடிச் சென்ற நிலையில் குளத்துக்கு அருகாமையில் யானை தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்த நிலையில் சடலமாக கிடப்பதை கண்டு பொலிஸாருக்கு தெரிவித்தனர்.
இதனையடுத்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கு நீதிமன்ற அனுமதியை பெறுவதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டுவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்
- விடுதலைப் புலிகள் முகாம் குறித்த பொய்யான தகவல் தொடர்பாக நபர் கைதுby நிருபர் காவலன்
- உணவு பொருள் விலை எகிறும் எச்சரிக்கைby நிருபர் காவலன்
- பெல்ட் அணியாவிட்டால் இனி கைதுby நிருபர் காவலன்
- இந்திய மணப்பெண் மரணம் தொடர்பாக கணவர் மற்றும் மாமியார் மீது குற்றச்சாட்டுby நிருபர் காவலன்
- பயங்கரவாதத் தடுப்பு தற்காலிக ஏற்பாடுகள்by நிருபர் காவலன்












