நாகை மீனவர்கள் 12 பேர் சிறைப்பிடிப்பு
Posted in இலங்கை செய்திகள்

நாகை மீனவர்கள் 12 பேர் சிறைப்பிடிப்பு

நாகை மீனவர்கள் 12 பேர் சிறைப்பிடிப்பு

நாகை மீனவர்கள் 12 பேர் சிறைப்பிடிப்பு ,எல்லை தாண்டி வந்து பிடித்ததாக தமிழக மீனவர்கள் 12 பேரை அவர்களின் விசைப்படகுகளுடன் துப்பாக்கி முனையில் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

நாகப்பட்டினம் மாவட்டம், அக்கரைப்பேட்டை மீனவ கிராமத்தைச் சேர்ந்த சிலம்புச் செல்வன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் சனிக்கிழமை (26) குனா, செஞ்சிவேல், வெங்கடேசன், சின்னஅப்பு, கார்த்தி, ரகு உள்ளிட்ட 12

மீனவர்கள் நேற்று முன்தினம் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றுள்ளனர். நள்ளிரவு கோடியக்கரைக்கு தென்கிழக்கே 40 கடல் மைல் தொலைவில் அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் நாகை மீனவர்கள் 12 பேரையும், விசைப்படகையும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி துப்பாக்கி முனையில் கைது செய்துள்ளனர்.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட 12 பேரும் விசாரணைக்காக மயிலட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு முதற்கட்ட

விசாரணைக்கு பின்னர் மீனவர்கள் படகுடன் யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

அதைத்தொடர்ந்து மாலையில் பருத்தித்துறை நீதிமன்றத்தில் அவர்கள் ஆஜர் படுத்தப்பட்டனர். நீதிமன்ற உத்தரவின்படி அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 12 நாகை மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் நாகையில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

லொறி மீது துப்பாக்கிச்சூடு சாரதி கைது
Posted in இலங்கை செய்திகள்

லொறி மீது துப்பாக்கிச்சூடு சாரதி கைது

லொறி மீது துப்பாக்கிச்சூடு சாரதி கைது

லொறி மீது துப்பாக்கிச்சூடு சாரதி கைது ,மீகஹஜதுரவில் போக்குவரத்து சோதனையின் போது நிறுத்தத் தவறிய லொறி மீது சூரியவெவ பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

லுணுகம்வெஹரவிலிருந்து சூரியவெவ நோக்கி பயணித்த லொறியானது, பொலிஸாரின் சமிக்ஞைகளை மதிக்காமல், பொறுப்பற்ற முறையில் ஓட்டிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர். இதற்கமைய, வாகனத்தின் ஒரு டயர் மீது துப்பாக்கியால் சுட்ட பிறகு வாகனம் நிறுத்தப்பட்டது.

இதன்போது, லொரி சோதனையிட்டபோது, 17 மாடுகளை ஏற்றிச் சென்றது தெரியவந்தது.

இதற்கமைய, சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளன​ர்.

காசா போரின் இருண்ட தருணம் வடக்கில் வெளிவருவதாக ஐ நா
Posted in இலங்கை செய்திகள் உலக செய்திகள்

காசா போரின் இருண்ட தருணம் வடக்கில் வெளிவருவதாக ஐ நா

காசா போரின் இருண்ட தருணம் வடக்கில் வெளிவருவதாக ஐ நா

காசா போரின் இருண்ட தருணம் வடக்கில் வெளிவருவதாக ஐ நா ,ஹமாஸ் போராளிகள் மீண்டும் ஒருங்கிணைவதைத் தடுக்க தரைவழித் தாக்குதலை

நடத்துவதாக இஸ்ரேல் கூறியுள்ள வடக்குப் பகுதியில் காஸா போரின் “இருண்ட தருணம்” வெளிவருவதாக ஐ.நா மனித உரிமைத் தலைவர் கூறியுள்ளார்.

“நாங்கள் பேசுகையில், இஸ்ரேலிய இராணுவம் ஒரு முழு மக்களையும் குண்டுவீச்சு, முற்றுகை மற்றும் பட்டினியின் அபாயத்திற்கு உட்படுத்துகிறது” என்று வோல்கர் டர்க் கூறினார்.

சர்வதேச மனிதாபிமான சட்டங்களுக்கு மதிப்பளிப்பதை உறுதி செய்ய ஜெனிவா ஒப்பந்தத்தின் கீழ் மாநிலங்களுக்கு கடமை இருப்பதாகக் கூறிய அவர், உலகத் தலைவர்கள் செயல்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

இஸ்ரேலிய இராணுவத்திடம் இருந்து உடனடி பதில் எதுவும் இல்லை, ஆனால் அதன் துருப்புக்கள் “நூற்றுக்கணக்கான பயங்கரவாதிகளை”

கொன்றுவிட்டதாகவும், அக்டோபர் 6 அன்று ஜபாலியாவில் இருந்து 45,000 பொதுமக்களை வெளியேற்றியதாகவும் கூறியுள்ளது.

உலக சுகாதார அமைப்பின் (WHO) தலைவர், வடக்கு காசாவில் கடைசியாக செயல்பட்டு வந்த மருத்துவமனைகளில் ஒன்றை இஸ்ரேலிய துருப்புக்கள்

சோதனை செய்ததாக வெளியான செய்திகளால் தான் மிகவும் கவலையடைந்ததாகக் கூறினார்.

டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறுகையில், அருகிலுள்ள ஜபாலியாவின் தாக்குதலுக்கு மத்தியில் கிட்டத்தட்ட 200 நோயாளிகளால்

நிரம்பி வழியும் பீட் லாஹியாவில் உள்ள கமல் அட்வான் மருத்துவமனையுடன் WHO தொடர்பை இழந்துவிட்டது.

காசாவின் ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம், இஸ்ரேலிய துருப்புக்கள் நோயாளிகள், ஊழியர்கள் மற்றும் இடம்பெயர்ந்தவர்களை தடுத்து

வைத்துள்ளதாகவும், இஸ்ரேலின் இராணுவம் “பயங்கரவாதிகளின் இருப்பு தொடர்பான” உளவுத்துறையின் அடிப்படையில் “அப்பகுதியில்” தனது படைகள் செயல்படுவதாக கூறியது.

வாக்குச்சீட்டு விநியோகம் இன்று ஆரம்பம்
Posted in இலங்கை செய்திகள்

வாக்குச்சீட்டு விநியோகம் இன்று ஆரம்பம்

வாக்குச்சீட்டு விநியோகம் இன்று ஆரம்பம்

வாக்குச்சீட்டு விநியோகம் இன்று ஆரம்பம் ,கொழும்பு மற்றும் வன்னி மாவட்டங்களின் உத்தியோகபூர்வ தபால் வாக்குச் சீட்டுகள் அடங்கிய

பாதுகாக்கப்பட்ட பொதிகள் விநியோகம், இன்று (26) ஆரம்பிக்கப்படவுள்ளதாக, தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சட்ட நடவடிக்கைகள் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கொழும்பு மற்றும் வன்னி மாவட்ட பத்திரப் பொதிகள் விநியோகம், நேற்று (25),

குறிப்பிட்ட மாவட்டங்களின் தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும், தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கொழும்பு மற்றும் வன்னி மாவட்டங்களுக்கான தபால் மூல வாக்களிப்பு ஒக்டோபர் 30, நவம்பர் 1 மற்றும் நவம்பர் 4ஆம் திகதிகளில் இடம்பெறும் என, தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 2024 பொதுதேர்தலுக்கு 738,002 தபால்மூல வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இலங்கையில் முதன்முறையாக தேர்தலில் போட்டியிடும் திருநங்கை
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் முதன்முறையாக தேர்தலில் போட்டியிடும் திருநங்கை

இலங்கையில் முதன்முறையாக தேர்தலில் போட்டியிடும் திருநங்கை

இலங்கையில் முதன்முறையாக தேர்தலில் போட்டியிடும் திருநங்கை ,இலங்கை சோசலிச கட்சியின் மகளிர் விவகார செயலாளர் சானு நிமேஷா,

இலங்கை தேர்தலில் போட்டியிடவுள்ள முதல் திருநங்கை என்ற வரலாற்றை படைத்துள்ளார்.

இவர், நடைபெறவுள்ள பொதுதேர்தலில், கேகாலை மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார்.

“பொதுத் தேர்தலில் போட்டியிட எனக்கு வாய்ப்பளித்த இலங்கை சோசலிசக் கட்சிக்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். முதன்முறையாக தேர்தலில்

போட்டியிட திருநங்கை ஒருவரை நிறுத்தியதன் மூலம் சரித்திரம் படைத்தேன்” என, நிமேஷா ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

தேர்தல் திகதியில் மாற்றம்
Posted in இலங்கை செய்திகள்

தேர்தல் திகதியில் மாற்றம்

தேர்தல் திகதியில் மாற்றம்

தேர்தல் திகதியில் மாற்றம் நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்காக குறிக்கப்பட்ட திகதி, இன்னும் ஓரிரு நாட்களில் மாற வாய்ப்புள்ளதாக, அரச வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்ற தேர்தல் சட்டத்தின் 10வது பிரிவின்படி, தேர்தலுக்கு ஒதுக்கப்பட்ட நாளில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அந்தச் சட்டத்தின்படி, ஒக்டோபர் 4ஆம் திகதி முதல் ஒக்டோபர் 11ஆம் திகதி வரை வேட்புமனுக்கள் கோரப்பட்டன.

வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாளிலிருந்து ஐந்து வாரங்களுக்கு குறையாமலும் ஏழு வாரங்களுக்கு மிகையாகமலும் வாக்கெடுப்புக்கான திகதியை நிர்ணயிக்க வேண்டும் என்று, சட்டம் தெளிவாகக் கூறுகிறது என்று, நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அதன்படி, வேட்புமனு தாக்கல் முடிவடைந்த ஒக்டோபர் 11ஆம் திகதி முதல் கணக்கிடப்படும் ஐந்து வார கால அவகாசம் நவம்பர் 15ஆம் திகதியும், ஏழு வார கால அவகாசம் நவம்பர் 29ஆம் திகதியும் நிறைவடையும் என்று கூறப்படுகிறது.

எவ்வாறாயினும், தற்போது நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நவம்பர் மாதம் 14ஆம் திகதி, சட்டக் காலத்தில் இடம்பெறாததால், அன்றைய தினம் நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவது சட்டத்திற்கு முரணானது எனவும், அவர்கள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இது மக்களின் இறையாண்மையை மீறுவதாக, அறிஞர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர். இந்நிலையில், இது தொடர்பாக தேர்தல் ஆணையகமும் கவனம் செலுத்தியுள்ளதாக அறியமுடிகிறது.

சட்ட ஆலோசனைக்கு பின்னர், நாடாளுமன்ற தேர்தல் திகதி மாற்றப்படும் என, அரச வட்டாரத் தகவல்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, புதிய திகதியைக் குறிப்பிட்டு புதிய வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட வேண்டும்.

அதிபருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
Posted in இலங்கை செய்திகள்

அதிபருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

அதிபருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

அதிபருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ,ஹட்டன் கல்வி வலையத்திற்குட்பட்ட டிக்கோயா என்பீல்ட் தமிழ் மகாவித்தியாலயத்தின் முன்பாக பெற்றோர்கள் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

குறித்த பாடசாலையின் அதிபர் பாலியல் சேட்டையில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருவதாகவும் இதனால் பாடசாலையில் கல்வி பயிலுகின்ற மாணவர்களின்

கல்வி நடவடிக்கை மற்றும் ஒழுக்கம் பாதிக்கப்படுவதாக எதிர்ப்பு தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது .

இந்த அதிபர் குறித்து பலமுறை ஹட்டன் கல்வி வலையத்திற்கு பெற்றோர்கள் பல முறைப்பாடுகளை முன்வைத்த போதும், ஹட்டன் வலைய கல்வி பணிமனை எவ்வித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் இன்றைய

தினம் பெற்றோர்கள் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது ஹட்டன் வலைய கல்வி பணிமனையின் பணிப்பாளர் மற்றும் உதவி கல்வி

பணிப்பாளர் ஆகிய குழுவொன்று சம்பவம் இடம் பெற்ற பாடசாலைக்கு விரைந்தனர்.

பெற்றோர்களின் முறைப்பாற்றிற்கு அமைய இன்றைய தினம் டிக்கோயா என்பீல்ட் தமிழ் மகா வித்தியாலத்திற்கு வருகை தந்த ஹட்டன் வலைய கல்வி பணிப்பாளர் ஆர்.விஜேந்திரன் தெரிவிக்கையில்,

பெற்றோர்களின் முறைப்பாட்டுக்கமைய குறித்த பாடசாலையின் அதிபர் இராதகிருஷணன் என்பவரை ஹட்டன் வலைய கல்வி பணிமனை அழைத்து விசாரனைகளை மேற்கொள்வதோடு இந்த சம்பவம் தொடர்பாக மத்திய

மாகாண கல்வி தினைக்களத்தின் செயலாளருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் வலைய கல்வி பணிமனை பணிப்பாளர் ஆர். விஜேந்திரன் தெரிவித்தார்.

சம்பவ இடத்துக்கு வருகை தந்த ஹட்டன் பொலிஸார் தமக்கு முறைபாடு கிடைத்துள்ளதாகவும் இந்த சம்பவம் தொடர்பாக தாம் விசாரனைகளை

மேற்கொள்வதாக ஹட்டன் பொலிஸார் அறிவித்த பின்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கலைந்து சென்றனர்.

ஓட்டமாவடியில் ஓட்டோ விபத்து மாணவி காயம்
Posted in இலங்கை செய்திகள்

ஓட்டமாவடியில் ஓட்டோ விபத்து மாணவி காயம்

ஓட்டமாவடியில் ஓட்டோ விபத்து மாணவி காயம்

ஓட்டமாவடி பிரதேச சபைக்கு முன்பாக இடம்பெற்ற ஆட்டோ விபத்தில் மாணவி ஒருவர் காயமடைந்துள்ளார்.

இந்தச் சம்பவம் வெள்ளிக்கிழமை (25) இடம்பெற்றுள்ளது. பாடசாலை விட்டு மாணவி வீடு செல்லும் போதே இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஓட்டமாவடி பிரதான வீதியால் வேகமாக பயணித்த ஓட்டோ வேகக் கட்டுப்பாட்டை இழந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இவ் விபத்தில் காயமடைந்தை பாடசாலை மாணவி வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இலங்கைக்கு விமானம் வழங்கிய அவுஸ்திரேலியா
Posted in இலங்கை செய்திகள்

இலங்கைக்கு விமானம் வழங்கிய அவுஸ்திரேலியா

இலங்கைக்கு விமானம் வழங்கிய அவுஸ்திரேலியா

இலங்கைக்கு விமானம் வழங்கிய அவுஸ்திரேலியா ,அவுஸ்திரேலிய அரசாங்கம், இலங்கை விமானப்படைக்கு (SLAF) Beechcraft King Air 350 என்ற Royal Australian Air Force கண்காணிப்பு விமானத்தை இலவசமாக வழங்கியுள்ளது.

இந்த விமானம், விமானப்படையின் வான்வழி கடல்சார் கண்காணிப்பு மற்றும் உளவுத் திறன்களை விரிவுபடுத்துவதுடன், அமைதியான மற்றும்

பாதுகாப்பான இந்திய பெருங்கடல் பிராந்தியத்தைப் பேணுவதற்கான இலங்கையின் தொடர்ச்சியான முயற்சிகளுக்கு பங்களிக்கும்.

அவுஸ்திரேலியா இந்த விமானத்தை இலங்கைக்கு வழங்கியமை, இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான பங்காளித்துவத்தை

வலியுறுத்துவதோடு, மனித கடத்தலை எதிர்த்துப் போராடுவதற்கும் பிராந்திய ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதற்கும் கூட்டு அர்ப்பணிப்பை வலுப்படுத்துவதாக, இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.

பிரபாகரனே எனது தம்பியை கடத்தினார்
Posted in இலங்கை செய்திகள்

பிரபாகரனே எனது தம்பியை கடத்தினார்

பிரபாகரனே எனது தம்பியை கடத்தினார்

பிரபாகரனே எனது தம்பியை கடத்தினார் ,தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனே என்னுடைய தம்பியை கடத்தினார்” என்று, ஈபிடிபியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

மேலும், தன்னை பிடிக்க முடியாமையால் போனதாலேயே தன்னுடைய தம்பியை பிரபாகரன் கடத்தி சென்றுவிட்டதாகவும், டக்ளஸ் கூறினார்.

கொழும்பில் தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

துப்பாக்கி தயாரித்த இடம் சுற்றிவளைப்பு
Posted in இலங்கை செய்திகள்

துப்பாக்கி தயாரித்த இடம் சுற்றிவளைப்பு

துப்பாக்கி தயாரித்த இடம் சுற்றிவளைப்பு

துப்பாக்கி தயாரித்த இடம் சுற்றிவளைப்பு ,மாத்தறையில் உள்ள சட்டவிரோத ஆயுத உற்பத்தி நிலையமொன்றில் நேற்று புதன்கிழமை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பை அடுத்து சந்தேக நபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுற்றிவளைப்பின் போது 63 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாகவும், பின்னர் அகங்கமவில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட

இரண்டு துப்பாக்கிகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சோதனையின் போது, ​​உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி, 9 மிமீ துப்பாக்கியின் ஐந்து தோட்டாக்கள், ஒரு வெல்டிங் இயந்திரம் மற்றும் பல்வேறு உபகரணங்களை அதிகாரிகள் கைப்பற்றினர்.

சந்தேகநபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் இரண்டு துப்பாக்கிகளை விற்பனை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது, அதன் பின்னர் மாத்தறை

பொலிஸார் கொள்வனவு செய்தவர்களை கண்டுபிடித்து ஆயுதங்களுடன் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 47 மற்றும் 54 வயதுடைய அஹங்கம பிரதேசத்தை சேர்ந்தவர்கள்.

சந்தேக நபர்கள், கைப்பற்றப்பட்ட பொருட்களுடன் மாத்தறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு வைக்கப்போவதாக அச்சுறுத்தல்
Posted in இலங்கை செய்திகள்

நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு வைக்கப்போவதாக அச்சுறுத்தல்

நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு வைக்கப்போவதாக அச்சுறுத்தல்

நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு வைக்கப்போவதாக அச்சுறுத்தல் ,மட்டக்களப்பு நீதிமன்ற கட்டட தொகுதியை குண்டுவைத்து தகர்த்தப் போவதாக, நேற்று (24) இரவு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலை குறிவைத்து 50க்கும் மேற்பட்ட ராக்கெட் தாக்குதல்

தொலைபேசி ஊடாக வந்த இந்த மிரட்டலால், அந்தப் பகுதியில் விசேட பாதுகாப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த நீதிமன்ற கட்டட தொகுதியை குண்டுவைத்து தகர்த்த போவதாக, நீதிமன்ற பதிவாளருக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று நேற்று இரவு வந்துள்ளது.

இதையடுத்து, இது தொடர்பில் உடனடியாக பொலிஸாருக்கு அறித்தார்.

இதை தொடர்ந்து, நீதிமன்ற கட்டட தொகுதிக்கு பொலிஸ் உயர் அதிகாரிகள் சென்று பார்வையிட்டதுடன், கட்டித்தை சுற்றிவர உள்ள பகுதிகளுக்கு, பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

அத்துடன், அந்தப் பகுதியில் விசேட பொலிஸ் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுவருவதுடன் புலனாய்வாளர்களும் கண்காணிப்பில் ஈடுபட்டுவருகின்றனர்.

மேலும், இன்றிலிருந்து, இந்த பகுதியை விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பில் ஈடுபடவுள்ளனர்.

இதேவேளை, மட்டக்களப்பில் சீயோன் தேவலாய தற்கொலை குண்டு தாக்குதல் மேற்கொண்ட ஸாரான் காசிமின் ஐ.எஸ்.ஐ.எஸ் என

சந்தேகிக்கப்படும் பலரது மற்றும் பிரதான சூத்திரதாரிகளின் வழக்கு இந்த நீதிமன்றில் இடம்பெற்று வருவதுடன், அந்த வழக்கின் ஆவணங்கள் இந்த நீதிமன்ற கட்டிட தொகுதி களஞ்சிய அறையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in இலங்கை செய்திகள்

யாழில் எலிக்காய்ச்சல்

யாழில் எலிக்காய்ச்சல்

யாழில் எலிக்காய்ச்சல் ,யாழ்ப்பாணத்தில் எலிக்காய்ச்சலால் வியாழக்கிழமை (24) ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வட்டுக்கோட்டை சங்கரத்தை பகுதியை சேர்ந்த சிறிஸ்கந்தராஜா சிவாஸ்கர் (வயது 34) என்பவரே உயிரிழந்துள்ளார்.

காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த 22ஆம் திகதி சங்கானை மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். அங்கிருந்து யாழ் .

போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக மாற்றப்பட்ட நிலையில் , சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழப்புக்கு எலி காய்ச்சலே காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக எலிக் காய்ச்சல் தொடர்பான எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில் வியாழக்கிழமை (24) ஒருவர் உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வன்னி மைந்தன் டிக் டாக் |அர்ச்சுனா உத்தியோக பூர்வ தளமாக அறிவிப்பு
Posted in இலங்கை செய்திகள்

வன்னி மைந்தன் டிக் டாக் |அர்ச்சுனா உத்தியோக பூர்வ தளமாக அறிவிப்பு

வன்னி மைந்தன் டிக் டாக் |அர்ச்சுனா உத்தியோக பூர்வ தளமாக அறிவிப்பு

வன்னி மைந்தன் டிக் டாக் |அர்ச்சுனா உத்தியோக பூர்வ தளமாக அறிவிப்பு என மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார் .

சாவகச்சேரி மருத்துவமனையில் இருந்து இன்று வரை அர்ச்சுனா இராமநாதனுக்கு ஆதரவாக வன்னி மைந்தன் டிக் டாக்,மற்றும் எதிரி இணையம் என்பன இயங்கிய வண்ணம் உள்ளது .

கடந்த 15 வருடங்களின் பின்னர் தமிழர் அரசியலில் எழுச்சி காணப்பட்டது ,ஒற்றை மனிதனாக இருந்து அர்ச்சுனா ஆரம்பித்து வைத்தார் .

அதனால் வன்னி மைந்தனாகிய நானும் எமது மக்களுக்கும் அவருக்கு பெரும் ஆதரவை ,வாழங்கினோம்.

அதன் ஒரு நம்பிக்கை வெளிப்பாடாக இப்பொழுது அர்ச்சுனா இராமநாதன் வன்னி மைந்தன் டிக் டாக் தளத்தை உத்தியோக பூர்வ தளமாக அறிவித்துள்ளார் .

என்று உங்களுடன் நங்கள் பாயணிப்போம் .காலம் காட்டிய வரலாற்று பதிவுகளில் நீங்கள் இடம் பிடித்துள்ளீர்கள் என்பதற்கு ,இந்த மக்கள் தன்னெழுச்சி காரணம் .

தளராது நடை போடு ,தடை உடைக்க படையெடு ,வெல்லட்டும் தமிழ் ,வாழ்க அர்ச்சுனா .

வீடியோ

இந்திய புலனாய்வு அமைப்புகளே முதலில் எச்சரித்தன
Posted in இலங்கை செய்திகள்

இந்திய புலனாய்வு அமைப்புகளே முதலில் எச்சரித்தன

இந்திய புலனாய்வு அமைப்புகளே முதலில் எச்சரித்தன

இந்திய புலனாய்வு அமைப்புகளே முதலில் எச்சரித்தன ,,அறுகம்பே பகுதியில் இஸ்ரேலியர்கள் மீது தாக்குதல் நடத்தலாம் என இந்திய புலனாய்வு அமைப்புகளால் இலங்கை பாதுகாப்புப் படையினருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

புலனாய்வுத் தகவல்களின்படி, வெளிநாட்டினரை இலக்காகக் கொண்டு இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.

அச்சுறுத்தல்கள் தொடர்பான உளவுத்துறை தகவல் முதலில் ஒக்டோபர் 7 ஆம் திகதி பெறப்பட்டதாக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய கூறினார்.

வெளிநாட்டு பிரஜைகளை இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக எங்களுக்கு தகவல்கள் கிடைத்துள்ளன என்றும் அவர் கூறினார்.

இரண்டு இலங்கையர்களில் தாக்குதலை நிறைவேற்றத் தயாராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. ஒருவர் ஈராக்கைத் தளமாகக் கொண்டவர் எனவும் கூறப்படுகிறது.

இவர்களுக்கு சுமார் ரூ.5 மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட நபர்களின் பெயர்கள் உட்பட அனைத்து தொடர்புடைய தகவல்களையும் இலங்கை அதிகாரிகளுக்கு இந்திய புலனாய்வு அமைப்புக வழங்கியுள்ளன.

அண்மைய நாட்களில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர்களை இஸ்ரேல் கொன்றதற்கு பழிவாங்கும் வகையில் அறுகம்பேயில் இந்த தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலஞ்சம் பெற்ற பொலிஸ் கைது
Posted in இலங்கை செய்திகள்

இலஞ்சம் பெற்ற பொலிஸ் கைது

இலஞ்சம் பெற்ற பொலிஸ் கைது

இலஞ்சம் பெற்ற பொலிஸ் கைது ,20,000 ரூபாவை இலஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டின் பேரில், கம்பளை தலைமையகப் பொலிஸ் நிலையத்தின்

பிரதான பொலிஸ் பரிசோதகர் ஒருவர் இலஞ்சம் ஊழல் தொடர்பான ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கம்பளையில் வசிக்கும் ஒருவரின் முறைப்பாட்டின் அடிப்படையில், காருக்கான எரிபொருளை செலுத்துவதற்கும், 25.10.2024 அன்று இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்குச் சென்று முறைப்பாடு செய்தவருக்கு எதிராக இருந்த

வழக்குத் தொடர்பில் விசாரணை செய்து அது தொடர்பான வாக்குமூலத்தை வழங்குவதற்கும் முறைப்பாட்டாளரிடம் குறித்த பரிசோதகர் 20,000 ரூபா இலஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது.

இதன்படி, லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் பேரில், கம்பளையில் உள்ள உணவகம் ஒன்றில் வைத்து ஆணைக்குழுவினால் அதிகாரிகளால் குறித்த பொலிஸ் பரிசோதகர் கைது செய்யப்பட்டார்.

அவர் கம்பளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பொலிஸாரால் மீட்பு ஆயுதங்கள்
Posted in இலங்கை செய்திகள்

பொலிஸாரால் மீட்பு ஆயுதங்கள்

பொலிஸாரால் மீட்பு ஆயுதங்கள்

பொலிஸாரால் மீட்பு ஆயுதங்கள் ,யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கூரிய ஆயுதங்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டது.

ஊர்காவற்துறை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய வியாழக்கிழமை (24) அன்று மேற்கொண்ட சுற்றிவழைப்பின் போது

வீடொன்றில் இருந்து ஐந்து வாள்கள் உள்ளிட்ட எழு கூரிய ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதுடன் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்பட்டவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

வன்முறையில் ஈடுபடுவதற்கு தயாராக குறித்த ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

மேலும் வீட்டில் வசித்த சந்தேக நபர் தலைமறைவான நிலையில் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுள்ள வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இலங்கையிலிருந்து வெளியேறிய இஸ்ரேலியர்கள்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையிலிருந்து வெளியேறிய இஸ்ரேலியர்கள்

இலங்கையிலிருந்து வெளியேறிய இஸ்ரேலியர்கள்

இலங்கையிலிருந்து வெளியேறிய இஸ்ரேலியர்கள் ,இலங்கைக்கு சுற்றுலா வந்திருந்த இஸ்ரேலிய பிரஜைகள் 22 பேர் வியாழக்கிழமை (24) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுள்ளனர்.

இலங்கையின் கிழக்குப் பிரதேசத்தில் உள்ள அறுகம்பை பகுதியில் வைத்து இஸ்ரேலியர்கள் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டிருந்ததால் மேலும் இலங்கையில் தங்கியிருப்பது ஆபத்தானது என இலங்கைக்கான அமெரிக்கத்

தூதரகமும், இஸ்ரேலிய அரசாங்கமும் அறிவித்ததையடுத்து குறித்த இஸ்ரேலியர்களை பாதுகாப்பாக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு அவர்களை அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இஸ்ரேலுக்கு ஒரு நிலையான கால அட்டவணைக்கமைய விமானங்கள் இல்லாததால், அவர்கள் துபாய்க்கு சென்று அங்கிருந்து இஸ்ரேல் செல்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாமல் ராஜபக்ஷ குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இரண்டரை மணித்தியாலங்கள் வாக்குமூலம்
Posted in இலங்கை செய்திகள்

நாமல் ராஜபக்ஷ குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இரண்டரை மணித்தியாலங்கள் வாக்குமூலம்

நாமல் ராஜபக்ஷ குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இரண்டரை மணித்தியாலங்கள் வாக்குமூலம்

நாமல் ராஜபக்ஷ குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இரண்டரை மணித்தியாலங்கள் வாக்குமூலம் ,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் சுமார் இரண்டரை மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கியபின்னர் அங்கிருந்து வெளியேறினார்.

இன்று காலை 09.00 மணியளவில் நாமல் ராஜபக்ஷ, வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு வந்திருந்தார்.

“ஆட்சி மாற்றம் ஏற்படும் போது, முன்னைய அரசாங்கத்தில் இருந்தவர்களை அழைத்து, அவர்களைக் கேள்வி கேட்பது நம் நாட்டின் அரசியல் கலாசாரமாகிவிட்டது

எங்களை வரச் சொன்னால், நாங்கள் வருகிறோம், நாட்டு மக்களுக்கு எங்களைப் பற்றி தவறான ஒரு படம் உருவாக்கப்பட்டுள்ளது. அதனை பொய்யாக்கவே நான் இன்று வந்தேன்.

2010 – 2015 ஒருவர் என் அலுவலகத்துக்கு வந்து பணம் வழங்கியதாக கூறப்பட்ட புகார் தொடர்பில் வாக்குமூலம் பெறவே எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டது” என்று நாமல் கூறினார்.

அரிசியின் கட்டுப்பாட்டு விலையில் மாற்றம் இல்லை – ஜனாதிபதி
Posted in இலங்கை செய்திகள்

அரிசியின் கட்டுப்பாட்டு விலையில் மாற்றம் இல்லை – ஜனாதிபதி

அரிசியின் கட்டுப்பாட்டு விலையில் மாற்றம் இல்லை – ஜனாதிபதி

அரிசியின் கட்டுப்பாட்டு விலையில் மாற்றம் இல்லை – ஜனாதிபதி ,விவசாயிகள் மற்றும் நுகர்வோருக்கு நியாயமான விலையை உறுதி செய்வதற்கான வழிமுறைக்கு அழைப்பு:
சிறிய மற்றும் நடுத்தர அளவிலான அரிசி ஆலைகளுக்கு குறைந்த உள்ளீடு செலவுகள்:

அரிசியின் கட்டுப்பாட்டு விலையில் மாற்றம் ஏற்படாது என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

விவசாயிகளுக்கு அதிக பலன்களை வழங்கும், ஒழுங்கமைக்கப்பட்ட விவசாயத் திட்டத்தை உருவாக்குவதற்கான நீண்ட கால வேலைத்திட்டத்திற்கான திட்டங்கள் நடந்து வருவதாகவும் அவர் எடுத்துரைத்தார்.

அரிசி ஆலைகள் மற்றும் விவசாய திணைக்கள அதிகாரிகளுடன் நேற்று (22) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இச்சந்திப்பின் போது, ​​மக்களுக்கான பிரதான உணவான அரிசியின் விலையை கட்டுப்படுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, நுகர்வோர் பொருட்களின் தற்போதைய விலைகள் குறித்து பங்கேற்பாளர்கள் கவனம் செலுத்தினர்.

கட்டுப்பாட்டு விலை ஸ்தாபிக்கப்பட்டதன் பின்னர் தாம் விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்வனவு செய்துள்ளதாக அரிசி ஆலை உரிமையாளர்களிடம் குறிப்பிட்ட ஜனாதிபதி, இந்த நிலையில் அரிசியின் விலையை மாற்றியமைப்பது நியாயமற்றது என அவர் நம்புகின்றார்.

மேலும், விவசாயிகள் தங்கள் அரிசிக்கு நியாயமான விலையைப் பெறுவதை உறுதி செய்யும் முறையான பொறிமுறையின் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.

அரிசியின் விலை செயற்கையாக உயர்த்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி திஸாநாயக்க, நீண்டகாலமாக கட்டுப்பாட்டு விலைகளை அமுல்படுத்தாமையே இந்த விலை ஸ்திரமின்மைக்கு காரணம் என குறிப்பிட்டார்.

இக்கலந்துரையாடலில் பங்கு பதுக்கல்காரர்களின் பிரச்சினை குறித்து ஆராயப்பட்டதுடன், இந்தக் குழுவை பதிவு செய்யுமாறு விவசாய அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை வழங்கினார்.

சிறிய மற்றும் நடுத்தர அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்கள் எதிர்கொள்ளும் நிதிச் சிக்கல்களைத் தணிக்க உள்ளீட்டுச் செலவுகளைக் குறைக்க வேண்டியதன் அவசியத்தையும் இந்த உரையாடல் எடுத்துரைத்தது.