பாதசாரி மீது மோதிய லொறி
Posted in இலங்கை செய்திகள்

பாதசாரி மீது மோதிய லொறி

பாதசாரி மீது மோதிய லொறி

பாதசாரி மீது மோதிய லொறி ,இங்கிரிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரத்தினபுரி – பானந்துறை வீதியின் திவுல்பத பிரதேசத்தில் இரத்தினபுரி திசையிலிருந்து இங்கிரிய நோக்கி பயணித்த லொறியொன்று வீதியின் குறுக்காக பயணித்த பாதசாரி மீது மோதியுள்ளது.

விபத்தில் பலத்த காயமடைந்த பாதசாரி இங்கிரிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக ஹொரணை மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் இங்கிரிய – அக்கர 20 பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.

சடலம் ஹொரணை மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இங்கிரிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

புலமைப்பரிசில் பரீட்சையில் சாதித்த மாணவர்கள்
Posted in இலங்கை செய்திகள்

புலமைப்பரிசில் பரீட்சையில் சாதித்த மாணவர்கள்

புலமைப்பரிசில் பரீட்சையில் சாதித்த மாணவர்கள்

புலமைப்பரிசில் பரீட்சையில் சாதித்த மாணவர்கள் ,2024 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 18 மாணவர்கள் அதிக மதிப்பெண்களை பெற்றுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.

இன்று (24) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.

அதன்படி, அதிக மதிப்பெண் பெற்ற மாணவர், 188 மதிப்பெண்களை பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும், 17 மாணவர்கள் 187 மற்றும் 186 என்ற மதிப்பெண்களை பெற்றுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அதிக மதிப்பெண் பெற்ற 18 மாணவர்களில் 11 பேர் ஆண் பிள்ளைகள் என்றும் அவர் தெரிவித்தார்.

2024 ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சையில் 319,284 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்த நிலையில் அதில் 51,244 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.

அதன்படி, பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களின் சதவீதம் 16.05% ஆகும்.

இது கடந்த ஆண்டை விட அதிகமாகும்.

2023 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் 15.12% பேர் சித்தியடைந்திருந்தனர்.

மேலும், இந்த ஆண்டு பெறுபேறுகளின் படி, 77.96% மாணவர்கள் 70 மதிப்பெண்களுக்கும் அதிகமாக பெற்றுள்ளனர்.

இதுவும் கடந்த ஆண்டை விட சற்று அதிகமாகும்.

2023 ஆம் ஆண்டில், 77.75% மாணவர்கள் 70 மதிப்பெண்களுக்கும் அதிகமாக பெற்றிருந்தனர்.

மேலும், பரீட்சையில் தோற்றிய மாணவர்களில் 37.70% பேர் 100 மதிப்பெண்களுக்கும் அதிகமாக பெற்றுள்ளனர்.

இருப்பினும், 2023 உடன் ஒப்பிடும்போது இது குறிப்பிடத்தக்க வீழ்ச்சியாகும்.

கடந்த ஆண்டு, பரீட்சையில் தோற்றிய மாணவர்களில் 45.06% பேர் 100 மதிப்பெண்களுக்கும் அதிகமாக பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஊகவியலாளர் சுப்பிரமணியம் பாஸ்கரனுக்கு எதிராக போராட்டம்
Posted in இலங்கை செய்திகள்

ஊகவியலாளர் சுப்பிரமணியம் பாஸ்கரனுக்கு எதிராக போராட்டம்

ஊகவியலாளர் சுப்பிரமணியம் பாஸ்கரனுக்கு எதிராக போராட்டம்

கிளிநொச்சி மாவட்ட ஊகவியலாளர் சுப்பிரமணியம் பாஸ்கரனுக்கு எதிராக கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளும் மாவட்ட செயலகம் முன்பாக பாரிய கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடாத்தியிருந்தனர்.

கமவிதானை ஒருவரை கடுமையாக தாக்கிய குற்றச்சாட்டில் அவருக்கான தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசாங்க அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த ஊடகவியலாளர் பல காலமாக விவசாயிகளுக்கு எதிராக பல நடவடிக்கைகளும் போலியான செய்திகளும் வெளியிட்டு வந்துள்ளார்.

குறித்த ஊகவியலாளர் பொலிசாரின் செல்வாக்கை பயன்படுத்தி சக ஊடகவியலாளரை போலி குற்றச்சாட்டில் கைது செய்தும் உள்ளார்.

ஊசி சின்னத்தில் போட்டியிட்ட சுயேட்சை குழு உட்பட 09 பேர் மீது விசாரணை
Posted in இலங்கை செய்திகள்

ஊசி சின்னத்தில் போட்டியிட்ட சுயேட்சை குழு உட்பட 09 பேர் மீது விசாரணை

ஊசி சின்னத்தில் போட்டியிட்ட சுயேட்சை குழு உட்பட 09 பேர் மீது விசாரணை

ஊசி சின்னத்தில் போட்டியிட்ட சுயேட்சை குழு உட்பட 09 பேர் மீது விசாரணை ,தேர்தல் கணக்கறிக்கை தொடர்பில் யாழ் மாவட்டத்தில் ஊசி சின்னத்தில் போட்டியிட்ட சுயேட்சை குழு உட்பட 09 பேர் மீது விசாரணை

தேர்தல் கணக்கறிக்கை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் உட்பட 09 பேர் மீதான விசாரணைகளை யாழ்ப்பாண பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது போட்டியிட்ட வேட்பாளர்கள் தமது செலவீன அறிக்கைகளை தேர்தல் ஆணைக்குழுவுக்கு சமர்ப்பித்துள்ளனர்.

இந்நிலையில் தேர்தல் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்ட முறைப்பாடுகளுக்கு அமைய ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

அதன் அடிப்படையில், பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் உட்பட யாழ். தேர்தல் மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்ட சசிகலா ரவிராஜ், அ.உமாகரன், சி.மயூரன், த.கிருஸ்ணானந், ந. கௌசல்யா, குருசாமி சுரேன் உட்பட 09 பேர் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதில் சசிகலா ரவிராஜிடம் பொலிஸார் வாக்குமூலங்களை பெற்றுக்கொண்டுள்ளனர்.

ஏனையவர்களிடமும் வாக்குமூலங்களை பெற்ற பின்னர் தேர்தல் ஆணைக்குழுவுக்கு விசாரணை அறிக்கைகளை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை யாழ். தேர்தல் மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்டவர்களில் இதுவரை தமது தேர்தல் செலவீன அறிக்கைகளை தேர்தல் ஆணைக்குழுவுக்கு

சமர்ப்பிக்காத 35 பேருக்கு எதிராகவும் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஹவுதிகளை பயங்கரவாத அமைப்பாக டிரம்ப் மறுபெயரிடுகிறார்
Posted in இலங்கை செய்திகள் உலக செய்திகள்

ஹவுதிகளை பயங்கரவாத அமைப்பாக டிரம்ப் மறுபெயரிடுகிறார்

ஹவுதிகளை பயங்கரவாத அமைப்பாக டிரம்ப் மறுபெயரிடுகிறார்

ஹவுதிகளை பயங்கரவாத அமைப்பாக டிரம்ப் மறுபெயரிடுகிறார் ,யேமனின் ஹவுதிகளை பயங்கரவாத அமைப்பாக டிரம்ப் மறுபெயரிடுகிறார்: வெள்ளை மாளிகை

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் யேமனின் ஹூதிகளை ஒரு வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பாக (FTO) நியமித்தார், வெள்ளை மாளிகை

புதன்கிழமை ஒரு அறிக்கையில் கூறியது, டிரம்பின் முதல் பதவிக்காலத்தில் எடுக்கப்பட்ட முடிவை பிடன் நிர்வாகம் மாற்றியமைத்த பின்னர் இது இரண்டாவது முறையாகும்.

அக்டோபர் 7 அன்று இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலைத் தொடர்ந்து, செங்கடலில் உள்ள அமெரிக்க இராணுவ மற்றும் வணிகக் கப்பல்கள் மற்றும் இஸ்ரேலுடன் தொடர்புடையதாக அவர்கள் கூறிய கப்பல்கள் மீது ஹூதிகள்

தாக்குதல் நடத்தத் தொடங்கினர். தாக்குதலுக்கு இஸ்ரேலிய இராணுவத்தின் பதில் காஸாவின் பெரும்பகுதியை அழித்தது. காசாவில் உள்ள பாலஸ்தீனியர்களுடனான ஒற்றுமையை வெளிப்படுத்துவதாக ஈரான் ஆதரவு ஹூதிகள் கூறியுள்ளனர்.

ஹூதிகளை FTO ஆக மறுபரிசீலனை செய்வதற்கான பரிந்துரை முன்னாள் ஜனாதிபதி ஜோ பிடனின் பதவியில் இருந்த கடைசி மாதத்தில் அவரது மேசைக்கு வந்தது. இருப்பினும், பிடென் முடிவை உள்வரும் நிர்வாகத்திற்கு விட்டுவிட விரும்பினார்.

ஹூதிகளை எஃப்.டி.ஓ.வாக மறுசீரமைப்பதற்கான முடிவை முதலில் தெரிவித்த வாஷிங்டன் ஃப்ரீ பீக்கன், டிரம்ப் கையெழுத்திடும் உத்தரவு ஹூதிகளை ஆதரிப்பதற்காக ஈரானைக் கண்டிக்கும் என்று கூறியது.

“ஹூதிகளின் திறன்கள் மற்றும் செயல்பாடுகளை ஒழிப்பதற்கான” அமெரிக்கக் கொள்கையை விதிக்கும் உத்தரவை அறிக்கை மேற்கோளிட்டுள்ளது.

இலஞ்சம் பெற்ற குடிவரவு அதிகாரி கைது
Posted in இலங்கை செய்திகள்

இலஞ்சம் பெற்ற குடிவரவு அதிகாரி கைது

இலஞ்சம் பெற்ற குடிவரவு அதிகாரி கைது

இலஞ்சம் பெற்ற குடிவரவு அதிகாரி கைது 500,000 ரூபாயை இலஞ்சமாக கோரி பெற்றுக்கொண்ட குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரி ஒருவர் இலஞ்சக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம், நல்லூர் வடக்குப் பகுதியை சேர்ந்த நபரொருவர் வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைய அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசா இல்லாமல் இலங்கையில் தங்கியிருந்ததற்காக கைது செய்யப்பட்ட முறைப்பாட்டாளர், வெலிசறை குடிவரவு மற்றும் குடியகல்வு தடுப்பு மையத்திலிருந்து விடுவிப்பதற்கு

தேவையான ஏற்பாடுகளை செய்வதற்காக சந்தேகநபர் இந்த இலஞ்சத்தை பெற்றதாகக் கூறப்படுகிறது.

சந்தேகநபர் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் வெலிசறை தடுப்பு மையத்தில் பணிபுரியும் குடிவரவு அதிகாரி ஆவார்.

சந்தேகநபர் 20 ஆம் திகதி மதியம் வெலிசறை குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் தடுப்பு மையத்தில் வைத்து இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

சந்தேகநபர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கண்டி கொழும்பு வீதியில் போக்குவரத்து கட்டுப்பாடுகள்
Posted in இலங்கை செய்திகள்

கண்டி கொழும்பு வீதியில் போக்குவரத்து கட்டுப்பாடுகள்

கண்டி கொழும்பு வீதியில் போக்குவரத்து கட்டுப்பாடுகள்

கண்டி கொழும்பு வீதியில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் ,நிட்டம்புவ ஸ்ரீ விஜேராமய விகாரையில் வருடாந்த “துருது நத” மகா பெரஹெர ஊர்வலம் காரணமாக வீதி போக்குவரத்து மட்டுப்பாடு தொடர்பில் பொலிஸார் அறிவித்தல் விடுத்துள்ளனர்.

அதன்படி, நாளை (24) இரவு 8.30 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை பெரஹெர ஊர்வலம் இடம்பெறவுள்ளது.

இந்த ஊர்வலம் நிட்டம்புவ அத்தனகல்ல வீதியில் உள்ள களுவாகஸ்வில ஸ்ரீ விஜயராமய விகாரையில் இருந்து தொடங்கி, நிட்டம்புவ நகரத்தை அடைந்து, இடதுபுறம் திரும்பி

கொழும்பு-கண்டி பிரதான வீதியில் கொழும்பை நோக்கிச் சென்று, வால்வத்த சந்தியில் வலதுபுறம் திரும்பி ஸ்ரீ போதி விகாரையை சென்றடைய திட்டமிடப்பட்டுள்ளது.

பெரஹெர நிகழ்வைக் காண ஏராளமானோர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், கண்டி-கொழும்பு பிரதான வீதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே, நிட்டம்புவ நகரத்திலிருந்து மல்வத்த சந்தி வரையிலான வீதியின் ஒரு வழித்தடம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு கொழும்பு-நோக்கியும், கண்டி நோக்கியும் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்படும்.

அரசுக்கு இனி ஆதரவு வழங்கமாட்டேன் அர்ச்சுனா
Posted in இலங்கை செய்திகள்

அரசுக்கு இனி ஆதரவு வழங்கமாட்டேன் அர்ச்சுனா

அரசுக்கு இனி ஆதரவு வழங்கமாட்டேன் அர்ச்சுனா

அரசுக்கு இனி ஆதரவு வழங்கமாட்டேன் அர்ச்சுனா ,அரசுக்கு இனி ஆதரவு வழங்கமாட்டேன் – அர்ச்சுனா எம்.பி அதிரடி இன்றிலிருந்து பாராளுமன்றம் ஆரம்பிக்கப்பட்ட 64 நாட்கள் கடந்துள்ள நிலையில், பாராளுமன்றில் தனது

சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாக முறைப்பாடு வழங்கி 36ஆவது நாள் கடந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றில் இன்று (23) உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து வௌியிட்ட அவர்,

இன்றிலிருந்து மனதளவில் அரசாங்கத்திற்கு வழங்கிய அனைத்து ஆதரவை மீளப் பெற்றுக்கொள்வதாகவும், உண்மையான எதிர்க்கட்சியாக இருக்கப் போவதாகவும் அவர் தெரிவித்தார்.

மாபியா ஒருவர் கைது
Posted in இலங்கை செய்திகள்

மாபியா ஒருவர் கைது

மாபியா ஒருவர் கைது

மாபியா ஒருவர் கைது வெளிநாட்டினருக்கு அதிக விலைக்கு ரயில் டிக்கெட்டுகளை விற்பனை செய்யும் மோசடியில் ஈடுபட்டுவந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கண்டி குற்றத் தடுப்பு பணியக அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (22) மாலை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் கண்டி சுதுஹும்பொல பகுதியில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கண்டி, சுதுஹும்பொல பகுதியைச் சேர்ந்த 37 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

ஒடிஸி ரயிலுக்காக ஒன்லைனில் வாங்கிய 21 ரயில் டிக்கெட்டுகளும், அந்த ரயில் டிக்கெட்டுகளை விற்பனை செய்வதன் மூலம் ஈட்டப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 130,670 ரூபாய் பணமும்,

இதற்கு முன்னர் ரயில் டிக்கெட் விற்பனை பற்றிய தகவல்கள் பதிவு செய்யப்பட்ட 130 குறிப்புகளும், கையடக்க தொலைபேசி ஒன்றும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

COPD நோய் குறித்து வைத்தியர்களின் அறிவுறுத்தல்
Posted in இலங்கை செய்திகள்

COPD நோய் குறித்து வைத்தியர்களின் அறிவுறுத்தல்

COPD நோய் குறித்து வைத்தியர்களின் அறிவுறுத்தல்

COPD நோய் குறித்து வைத்தியர்களின் அறிவுறுத்தல் 40 வயதுக்கு மேற்பட்டவர்களில் 10 சதவீதம் பேருக்கு COPD என்ற நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் இருப்பதாக சுவாச வைத்திய நிபுணர் சமன்மலி தல்பதாது தெரிவித்துள்ளார்.

2017 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் இது தெரியவந்துள்ளதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நோய் குறித்து சமூகத்தில் சரியான புரிதல் இல்லை என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“உலகில் நிகழும் இறப்புக்களுக்கான காரணங்களில் இந்த நோய் 7வது இடத்தில் உள்ளது.”

உங்களுக்கு ஆஸ்துமா நோய் இருந்தாலும், நீங்கள் மருந்து எடுத்துக்கொள்வதில்லை.

இதனால் 20 அல்லது 30 வருடங்களில், நீங்கள் ஒரு COPD நோயாளியாக என்னிடம் வருவீர்கள். சிகரெட் புகை பயன்படுத்துகிறீர்கள்.

இதனால் உங்கள் நுரையீரல் காலப்போக்கில் சேதமடைகிறது என்பது உங்களுக்குத் தெரியாது.

உங்களுக்கு 45 வயது ஆகும்போது, ​​நீங்கள் மருத்துவர்களைத் தேடத் தொடங்குவீர்கள்.

அப்போது மூச்சு விடுவதில் சிரமம் இருப்பது போல் உணர்வீர்கள்.

மலை பங்கான பகுதியில் ஏறும் போது அது உணரப்படும்.

2017 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், இலங்கையில் 40 வயதுக்கு மேற்பட்டவர்களில் 10% பேருக்கு இது உள்ளது.

“இது முதலில் கண்டுபிடிக்கப்படாததற்குக் காரணம், அதைப் பற்றிய புரிதல் இல்லாததே.” என்றார்.

இந்த நோயைக் கட்டுப்படுத்துவது குறித்து மேலும் கருத்து தெரிவித்த வைத்திய நிபுணர் சமன்மலி தல்பதாது,

“இதைத் தடுக்க வேண்டுமானால் நாம் எங்கு வேலை செய்தாலும் சரி, எங்கு வாழ்ந்தாலும் சரி, தேவையற்ற காற்று மாசுபாட்டிற்கு ஆளாகாமல் இருப்பதன் மூலமும், முகக்கவசங்களை அணிவதன் மூலமும் இந்த நோயைத் தடுக்கலாம்.”

பெற்றோருக்கு இந்த COPD நோய் இருப்பது கண்டறியப்படாமலேயே உள்ளது. நடக்கவே கஷ்டமா இருக்கும்.

பின்னர் முச்சு விடுவதில் சிரமம் ஏற்படும். லேசான தடிமன் ஏற்பட்டாலும் அவர்களுக்கு கடினமாக இருக்கும்.

ஒரே சிகிச்சை இன்ஹேலர் மட்டுமே. வேறொன்றுமில்லை.

COPD என்பது ஆஸ்துமாவிலிருந்து வேறுபட்ட ஒரு நாள்பட்ட நோயாகும். “அதனால்தான் இன்ஹேலரை நீண்ட காலத்திற்குப் பயன்படுத்த வேண்டும்.” என்றார்.

உலக வங்கி பிரதிநிதிகள் குழு பிரதி அமைச்சருடன் சந்திப்பு
Posted in இலங்கை செய்திகள்

உலக வங்கி பிரதிநிதிகள் குழு பிரதி அமைச்சருடன் சந்திப்பு

உலக வங்கி பிரதிநிதிகள் குழு பிரதி அமைச்சருடன் சந்திப்பு

உலக வங்கி பிரதிநிதிகள் குழு பிரதி அமைச்சருடன் சந்திப்பு ,உலக வங்கியின் பிராந்திய நாட்டு இயக்குநர் (மாலைத்தீவு, நேபாளம் மற்றும் இலங்கை) டேவிட் சிஸ்லன் தலைமையிலான உலக வங்கி தூதுக்குழு குழு, பாதுகாப்பு பிரதி

அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை (ஓய்வு) திங்கட்கிழமை (20) கொழும்பில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்தது.

இலங்கையில் காலநிலை மீள்தன்மை பல கட்ட திட்ட அணுகுமுறை (CResMPA) திட்டம் தொடர்பில் உள்ள சவால்களை எதிர்கொள்வது மற்றும்

பிரச்சினைகளை தீர்ப்பதற்கான உத்திகளைப் பற்றி, குறிப்பாக நீண்டகால

திட்ட மேலாண்மை சவால்களை நிவர்த்தி செய்வதன் முக்கியத்துவம் தொடர்பிலும் இச்சந்திப்பின் போது கலந்துரையாடுடப்பட்டது.

இச்சந்திப்பின் போது CResMPA திட்டத்தை செயல்படுத்தும் போது எதிர்கொள்லப்படும் சவால்கள் மற்றும் தடைகள் பற்றிய பொதுவான விளக்கம் ஒன்றை உலக வாங்கி பிரதிநிதிகள் குழு வழங்கியது.

மேலும், இந்த சவால்களை நிவர்த்தி செய்வதற்கும் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்துவதை உறுதி செய்வதற்கும் அரசாங்கம் கருத்தில் கொள்ளக்கூடிய விடயங்கள் தொடர்பிலும் கருத்துக்களை முன்மொழிந்தனர்.

இந்த சந்திப்பு CResMPA திட்டத்தை செயல்படுத்துவதை விரைவுபடுத்துவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க நிலையை குறிக்கிறது.

இதன் மூலம் காலநிலை மாற்ற சவால்களை நிவர்த்தி செய்வதற்கு பங்களிப்பு செய்ய உதவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மோசமடையும் தேங்காய் தட்டுப்பாடு
Posted in இலங்கை செய்திகள்

மோசமடையும் தேங்காய் தட்டுப்பாடு

மோசமடையும் தேங்காய் தட்டுப்பாடு

மோசமடையும் தேங்காய் தட்டுப்பாடு ,அடுத்த சில மாதங்களுக்குள் 200 மில்லியன் தேங்காய்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக இலங்கை தென்னை கைத்தொழில் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

தற்போது நாட்டில் நிலவும் தேங்காய் தட்டுப்பாட்டிற்கு முக்கிய காரணம் உர விலை அதிகரிப்பு என இலங்கை தென்னை கைத்தொழில் சம்மேளனத்தின் தலைவர் ஜயந்த சமரகோன் தெரிவித்தார்.

மேலும், தேங்காய் சார்ந்த பொருட்கள் ஏற்றுமதி தொழில் துறைக்குத் தேவையான தேங்காய் இருப்புக்களை அவசரமாக இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், நாடு சுமார் 1 பில்லியன் டொலர் வருவாயை இழக்க நேரிடும் என்றும் அவர் தெரிவித்தார்.

தேசிய வர்த்தக சபை கேட்போர் கூடத்தில் நேற்று (21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேற்கூறிய விடயங்களை தெரிவித்தார்.

நாட்டின் மாதாந்திர தேங்காய் தேவை 250 மில்லியன் என்றும், அதில் 150 மில்லியன் தேங்காய்கள் உள்நாட்டு நுகர்வுக்கும், 100 மில்லியன் தேங்காய்கள் தொழில்துறைக்கும் பயன்படுத்தப்படுவதாகவும் தலைவர் தெரிவித்தார்.

இந்நிலையில் நாட்டின் வருடாந்திர மொத்த தேங்காய் உற்பத்தி 3,000 மில்லியன் கொட்டைகளாக இருந்த போதிலும், கடந்த ஆண்டு அது 2,680 மில்லியன் கொட்டைகளாகக் குறைந்துள்ளதாகவும், இந்த ஆண்டு தேங்காய்

உற்பத்தி 2,400 முதல் 2,600 மில்லியன் கொட்டைகளாகக் குறையும் என்று தேங்காய் ஆராய்ச்சி நிறுவனம் கணித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் வரை 200 மில்லியன் தேங்காய் உற்பத்தி பற்றாக்குறை ஏற்படும் என்று தேங்காய் ஆராய்ச்சி நிறுவனம் கணித்துள்ளதாக ஜயந்த சமரகோன் மேலும் தெரிவித்தார்.

பேஸ்புக் ஊடாக நிதி மோசடி
Posted in இலங்கை செய்திகள்

பேஸ்புக் ஊடாக நிதி மோசடி

பேஸ்புக் ஊடாக நிதி மோசடி

பேஸ்புக் ஊடாக நிதி மோசடி ,மோசடியாக பேஸ்புக் கணக்கொன்றினுள் பிரவேசித்து உறவினரைப் போல ஆள்மாறாட்டம் செய்து நிதிமோசடியில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் நேற்று (21) இந்நாட்டிற்கு வந்தபோது, ​​கொழும்பு குற்றப்பிரிவின் அதிகாரிகள் குழுவினால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.

இந்த சந்தேக நபர் உறவினர் போல் தன்னை காட்டிக் கொண்டு மோசடியாக பேஸ்புக் கணக்கின் ஊடாக, மூன்று சந்தர்ப்பங்களில் வங்கிக் கணக்கு ஒன்றிலிருந்து 700,000 ரூபாயை வைப்பிலிடச் செய்திருப்பது தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக கடந்த 2024 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 22 ஆம் திகதியன்று கொழும்பு குற்றப்பிரிவுக்கு முறைப்பாடு கிடைத்தது. அதன் பின்னர் சம்பந்தப்பட்ட கணக்குகளை தணிக்கை செய்தபோது சந்தேக நபரை பொலிசார் அடையாளம் கண்டனர்.

சந்தேக நபர் தொடர்பாக வெளிப்படுத்தப்பட்ட தகவல்களின்படி, அவர் கட்டாரில் இருந்து வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

சந்தேக நபருக்கு எதிராக குடிவரவுத் தடை பெறப்பட்டதுடன், நேற்று அவர் நாட்டிற்கு வந்தவுடன், கொழும்பு குற்றப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால் கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மொன்னேகுளம பகுதியைச் சேர்ந்த 28 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

சீனாவில் இலங்கையின் புதிய கொன்சுலர் அலுவலகம்
Posted in இலங்கை செய்திகள்

சீனாவில் இலங்கையின் புதிய கொன்சுலர் அலுவலகம்

சீனாவில் இலங்கையின் புதிய கொன்சுலர் அலுவலகம்

சீனாவில் இலங்கையின் புதிய கொன்சுலர் அலுவலகம் ,சீனாவின் Chengdu நகரில் இலங்கையின் கொன்சுலர் அலுவலகம் ஒன்றை நிறுவுவதற்கான பணிகளை மேற்கொண்டு வருவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் சீன விஜயத்தின் போது இந்த விடயம் குறித்து கலந்துரையாடப்பட்டதாக வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

“அந்த மாநிலத் பிரதானி எங்களுக்குத் தேவையான இடத்தையும் வசதிகளையும் இலவசமாக வழங்க

ஒப்புக்கொண்டார். அதன்படி, எதிர்காலத்தில் Chengdu நகரில் வெளியுறவு அமைச்சாக ஒரு புதிய கொன்சுலர் அலுவலகத்தைத் திறக்க எங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.” என்றார்.

ஜனாதிபதியின் சீன விஜயம் குறித்து ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் வகையில் இன்று (22) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியின் சீன விஜயத்தின் போது, ​​இரு தரப்பினருக்கும் இடையே பொருளாதார, அரசியல் மற்றும் கலாச்சார

ஒத்துழைப்பை வளர்ப்பது குறித்து விரிவான கலந்துரையாடல்கள் இடம்பெற்றதாகவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

அனைத்துப் பிரிவினரையும் பொருளாதாரச் செயல்பாட்டில் ஈடுபடுத்தும் நோக்கில் இந்த ஆண்டு வரவு செலவு
Posted in இலங்கை செய்திகள்

அனைத்துப் பிரிவினரையும் பொருளாதாரச் செயல்பாட்டில் ஈடுபடுத்தும் நோக்கில் இந்த ஆண்டு வரவு செலவு

அனைத்துப் பிரிவினரையும் பொருளாதாரச் செயல்பாட்டில் ஈடுபடுத்தும் நோக்கில் இந்த ஆண்டு வரவு செலவு ,அனைத்துப் பிரிவினரையும் பொருளாதாரச் செயல்பாட்டில் ஈடுபடுத்தும் நோக்கில் இந்த ஆண்டு வரவு செலவு

நாட்டின் அனைத்துப் பிரிவினரையும் பொருளாதாரச் செயல்பாட்டில் ஈடுபடுத்தும் நோக்கில் இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தைத் தயாரிப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை தயாரிப்பது தொடர்பாக நிதி அமைச்சின் அதிகாரிகளுடன் நேற்று (21) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற முதற்கட்ட கலந்துரையாடலில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.

செயற்திறனுடனும் திறமையாகவும் பொருளாதார செயல்முறையை கையாள்கையில் பொதுப் போக்குவரத்தை நிறுவுவதன் முக்கியத்துவம்

மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது குறித்தும் இதன் போது ஆராயப்பட்டது.

பொதுப் போக்குவரத்தை வலுப்படுத்த அரசாங்கம் எவ்வாறு தலையிட வேண்டும் என்பது குறித்தும் அதற்கு வசதிகள் அளிப்பதற்கான நடவடிக்கை தொடர்பாகவும் இந்தக் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.

கடந்த அரசாங்கங்களில் பன்முகப்படுத்தப்பட்ட நிதிக்காக பெருமளவு நிதி ஒதுக்கப்பட்டிருந்தாலும், அந்தப் பணம் பயனுள்ள திட்டங்களுக்குப்

பயன்படுத்தப்படவில்லை எனவும் பன்முகப்படுத்தப்பட்ட நிதியை தேசிய திட்டங்களுக்குப் பயன்படுத்தக் கூடிய வகையில் வழங்குவது குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

நெல் கொள்வனவு செய்வதற்காக அரிசி உற்பத்தியாளர்களுக்கு வழங்கும் கடன்களை ஒரு வருடத்திற்குள் வசூலிப்பது குறித்தும் அந்த வர்த்தகர்களிடம் உள்ள அரிசி கையிருப்புகளை ஒழுங்குபடுத்துவது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

மேல் தளத்தில் உள்ள பொருளாதாரத்தை கீழ் மட்டத்திற்கு நகர்த்த வேண்டும் என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அனைத்து பிரதேசங்களுக்கும் பிரிந்து செல்லக் கூடிய ஒரு பொருளாதாரத் திட்டத்தைத் தயாரிப்பதன் முக்கியத்துவத்தையும் குறிப்பிட்டார்.

தற்பொழுது அமுலில் இருக்கும் நிவாரணம் வழங்கும் முறையில் குறைபாடுகள் உள்ளதாகவும் அவற்றை அடையாளங் கண்டு நிவாரணங்கள்

தேவையான சமூகத்தை சரியாக அடையாளம் கண்டு, அந்த செயல்முறையை விரைவுபடுத்த வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி இங்கு குறிப்பிட்டார்.

தொழில் அமைச்சரும் பொருளாதார மேம்பாட்டு பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயத்த பெர்னாண்டோ, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன,

ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளர் ரஸல் அபோன்சு, பிரதி திறைசேரி செயலாளர் ஏ.கே. செனவிரத்ன உள்ளிட்ட அதிகாரிகள் இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.

3 புதிய நியமனங்களுக்கு அமைச்சரவை அனுமதி
Posted in இலங்கை செய்திகள்

3 புதிய நியமனங்களுக்கு அமைச்சரவை அனுமதி

3 புதிய நியமனங்களுக்கு அமைச்சரவை அனுமதி

3 புதிய நியமனங்களுக்கு அமைச்சரவை அனுமதி ,அரச சேவையில் மூன்று சிரேஷ்ட பதவிகளுக்கான புதிய நியமனங்களுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி, இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கே.எச்.பி. பாலித பெர்னாண்டோவை சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக நியமிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

எவ்வாறாயினும், குறித்த நியமனம் ஒரு வருட காலத்திற்கு செல்லுபடியாகும் என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

இதேவேளை, ஆர்.ஏ. சந்தன சமன் ரணவீர ஆராச்சி காணி ஆணையாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை விவசாய சேவையின் விசேட தர அதிகாரியான கலாநிதி ஈ.ஆர்.எஸ்.பி. எதிரிமான்னவை விவசாய பணிப்பாளர் நாயகமாக நியமிக்கவும் அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

NPP எம்.பிக்களின் கொடுப்பனவுகள் ஒரே வங்கிக் கணக்கில் வைப்பு
Posted in இலங்கை செய்திகள்

NPP எம்.பிக்களின் கொடுப்பனவுகள் ஒரே வங்கிக் கணக்கில் வைப்பு

NPP எம்.பிக்களின் கொடுப்பனவுகள் ஒரே வங்கிக் கணக்கில் வைப்பு

NPP எம்.பிக்களின் கொடுப்பனவுகள் ஒரே வங்கிக் கணக்கில் வைப்பு ,தேசிய மக்கள் சக்தியின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களின்

கொடுப்பனவுகளும் ஒரு வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்படும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.

நிஹால் கலப்பத்தியுடன் ஆரம்பமான பயணத்தை தாங்கள் தொடர்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பொரளையில் உள்ள மக்கள் வங்கியில் உள்ள தற்போதைய வங்கிக் கணக்கில் தொடர்புடைய கொடுப்பனவுகள் வைப்பிலிடப்படும் என்றும், பின்னர் அந்தப்

பணம் பொது சேவைக்குப் பயன்படுத்தப்படும் என்று கூறிய பிரதி அமைச்சர், இது மக்களுக்கு மேலும் சேவை செய்வதற்கான வாய்ப்பை உருவாக்கும் என்றும் குறிப்பிட்டார்.

வெள்ளத்தில் மூழ்கிய 3000 ஏக்கர் வயல்
Posted in இலங்கை செய்திகள்

வெள்ளத்தில் மூழ்கிய 3000 ஏக்கர் வயல்

வெள்ளத்தில் மூழ்கிய 3000 ஏக்கர் வயல்

வெள்ளத்தில் மூழ்கிய 3000 ஏக்கர் வயல் ,அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக சுமார் 3,000 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளதாக காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் சுசில் ரணசிங்ஹ தெரிவித்துள்ளார்.

நீர் வடிகால் அமைப்பில் பற்றாக்குறை இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இன்று (21) பாராளுமன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதற்கிடையில், அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் பிரதி அமைச்சருமான வசந்த பியதிஸ்ஸ கருத்து தெரிவிக்கையில்,

வெள்ளத்தில் மூழ்கிய 3,000 ஏக்கர் நெற்பயிர்களில் சுமார் 1,000 ஏக்கர் வயல்கள் நீர் வடிந்தோடியதன் காரணமாக காப்பாற்றப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

மேலும் 1,000 ஏக்கர் நெற்பயிர்களை காப்பாற்ற முடியுமென தான் நம்புவதாகவும் பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ தெரிவித்தார்.

மணல் மோசடியில் சிக்கிய அரசியல்வாதிகள்
Posted in இலங்கை செய்திகள்

மணல் மோசடியில் சிக்கிய அரசியல்வாதிகள்

மணல் மோசடியில் சிக்கிய அரசியல்வாதிகள்

மணல் மோசடியில் சிக்கிய அரசியல்வாதிகள் ,மணல் அகழ்வு மோசடி சம்பவத்தின் பின்னணியில் இரண்டு முக்கிய அரசியல்வாதிகள் இருக்கின்றமை தெரியவந்துள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.

அர்ச்சுனா எம்.பிக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பம்
அர்ச்சுனா எம்.பிக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பம்அர்ச்சுனா எம்.பிக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பம்

பாராளுமன்றத்தில் இன்று (21) எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

“சிலாபம் மணல் நிறுவனத்திற்குச் சொந்தமான பளை என்றப் பகுதியில், ஒதுக்கப்பட்ட அளவை விட அதிகமாக மணல் அகழ்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது ஒரு பாரிய மோசடி என்று

தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணைகள் தற்போது இடம்பெறுகின்றன. சுமார் 400 மில்லியன் ரூபா ஊழல் பரிவர்த்தனை மற்றும் மோசடி நடந்ததாக தெரிவிக்கப்படுகிறது, இருப்பினும் இந்த மோசடிக்கு

இறுதியில் யார் பொறுப்பு என்று சொல்ல முடியாது, ஆனால் இரண்டு முக்கிய அரசியல்வாதிகள் இதில் ஈடுபட்டுள்ளனர்.

பல ஒப்பந்ததாரர்கள் பற்றிய தகவல்களும் எமக்கு கிடைத்துள்ளன.

அர்ச்சுனா எம்.பிக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பம்
Posted in இலங்கை செய்திகள்

அர்ச்சுனா எம்.பிக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பம்

அர்ச்சுனா எம்.பிக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பம்

அர்ச்சுனா எம்.பிக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பம் ,போக்குவரத்து பொலிஸாரின் உத்தரவுகளை புறக்கணித்து, செயற்பட்டமைக்காக பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக பொலிஸார் விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர்.

பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்வதற்காக கொழும்புக்கு வருகைதரும் சந்தர்ப்பத்தில், அனுராதபுரம் பகுதியில் போக்குவரத்துப் பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்துப் பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதன்படி, சம்பவம் தொடர்பான விடயங்கள் இன்று (21) நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.

மேலும், பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்த கருத்தானது, இனங்களுக்கிடையில் முரண்பாட்டை ஏற்படுத்தியதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக மோட்டார் வாகனச் சட்டம் மற்றும் தண்டனைச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.