Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
வெளிநாடு செல்லும் இலங்கையர்களுக்கான அறிவிப்பு
வெளிநாடு செல்லும் இலங்கையர்களுக்கான அறிவிப்பு
வெளிநாடு செல்லும் இலங்கையர்களுக்கான அறிவிப்பு ,தனியார் நிறுவனங்கள் மூலம் வெளிநாடுகளுக்குச் செல்லும் இலங்கையர்கள், தாங்கள் பயன்படுத்த விரும்பும் நிறுவனங்கள் குறித்த தகவலுக்கு 1989 என்ற உதவி
எண்ணை அழைக்குமாறு வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் அறிவுறுத்தியுள்ளார்.
பாராளுமன்றத்தில் நடைபெற்ற வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா தொடர்பான அமைச்சக ஆலோசனைக் குழு கூட்டத்தில்,
வேலைவாய்ப்புக்காக வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி நிதி மோசடியில் ஈடுபடும் நபர்கள் தொடர்பில் அண்மையில் நடைபெற்ற
வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் பங்குபற்றிய பாராளுமன்ற உறுப்பினர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.
இதற்குப் பதிலளிக்கும்போதே அமைச்சர் விஜத ஹேரத் இதனைக் கூறியுள்ளார்.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தால் அங்கீகரிக்கப்பட்ட முகவர் நிறுவனங்கள் மற்றும் கட்டணங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் பணியகத்தின் இணையதளத்தில் அறிந்துகொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எந்தவொரு தரப்பினரும் அங்கீகரிக்கப்பட்ட தொகையை விட அதிகமாகப் பெற்றுக்கொண்டால் அல்லது அனுமதிப்பத்திரம் இன்றி ஏதேனும்
செயற்பாடுகளில் ஈடுபட்டால் பணியகத்தில் முறைப்பாடு செய்ய முடியும் என அதிகாரிகளினால் இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவில் வசிக்கும் இலங்கையர்கள் அந்நாட்டின் இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படுவதாகவும் அவர்கள் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுவதாகவும் இந்த கூட்டத்தின் போது குறிப்பிடப்பட்டுள்ளது.
பட்டலந்த அறிக்கையை நிராகரித்தார் ரணில்
பட்டலந்த அறிக்கையை நிராகரித்தார் ரணில்
பட்டலந்த அறிக்கையை நிராகரித்தார் ரணில் ,பட்டலந்த வீட்டுத்தொகுதியில் பொலிஸ் அதிகாரிகளுக்கு இரண்டு வீடுகளை வழங்கியமை தொடர்பில் நான், அதற்கு மறைமுகப் பொறுப்பாளி என்று பட்டலந்த ஆணைக்குழு
அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது என தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அந்த அறிக்கையை தான் முழுமையாக நிராகரிப்பதாக கூறினார்.
ஏப்ரல் 10 அன்று பட்டலந்த விவாதம்
ஏப்ரல் 10 அன்று பட்டலந்த விவாதம்
ஏப்ரல் 10 அன்று பட்டலந்த விவாதம் ,உண்ணாட்டரசிறை (திருத்த) சட்டமூலம் தொடர்பான இரண்டாவது மதிப்பீட்டு விவாதத்தை மார்ச் 20ஆம் திகதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் குழுநிலை விவாதத்தின் பின்னர் பி.ப 6 மணி
முதல் 8 மணி வரை நடத்துவதற்கு சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் சனிக்கிழமை (15) கூடிய பாராளுமன்ற
அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.
அத்துடன், பாராளுமன்றத்தை ஏப்ரல் 8, 9 மற்றும் 10ஆம் திகதிகளில் கூட்டுவதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது. இதற்கமைய ஏப்ரல் 8ஆம் திகதி
செவ்வாய்க்கிழமை மு.ப 9.30 மணி முதல் 10.00 மணி வரையில் நிலையியற் கட்டளை 22இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான பாராளுமன்ற அலுவல்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
மு.ப 10.00 மணி முதல் மு.ப 11.00 மணிவரையான நேரம் வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காகவும், மு.ப 11.00 மணி முதல் 11.30 மணிவரையான நேரம் நிலையியற் கட்டளை 27(2) கீழான கேள்விகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.30 மணிவரையான காலப்பகுதி குற்றச் செயல்களின் வரும்படிகள் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீட்டுக்கான விவாதத்திற்காக ஒதுக்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.
ஏப்ரல் 09ஆம் திகதி புதன்கிழமை 10.00 மணி வரையில் நிலையியற் கட்டளை 22இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான பாராளுமன்ற அலுவல்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. மு.ப 10.00 மணி முதல் மு.ப 10.30
மணிவரையான காலப்பகுதி பிரதமரிடம் கேட்கப்படும் கேள்விகளுக்காக ஒதுக்கப்பட்டிருப்பதுடன், மு.ப 10.30 மணி முதல் மு.ப 11.00 மணி வரையான காலப்பகுதி வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காகவும், மு.ப 11.00 மணி முதல் 11.30 மணிவரையான நேரம் நிலையியற் கட்டளை 27(2) கீழான
கேள்விகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.00 மணிவரையான காலப்பகுதி பெறுமதி சேர் வரி (திருத்த)
சட்டமூலம் மீதான இரண்டாவது மதிப்பீட்டுக்கான விவாதத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
அன்றையதினம் பி.ப 5.00 பி.ப 5.30 மணி வரையில் எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு வேளையின் போதான
பிரேரணைக்கான விவாதத்திற்கும் நேரத்தை ஒதுக்குவதற்கு இங்கு தீர்மானிக்கப்பட்டது.
ஏப்ரல் 10ஆம் திகதி வியாழக்கிழமை, நிலையியற் கட்டளை 22இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான பாராளுமன்ற அலுவல்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. மு.ப 10.00 மணி முதல் மு.ப 11.00 மணிவரையான
நேரம் வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காகவும், மு.ப 11.00 மணி முதல் மு.ப 11.30 மணிவரையான நேரம் நிலையியற் கட்டறை 27(2) கீழான கேள்விகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.30 மணிவரையில், மார்ச் 14ஆம் திகதி சபையில் சமர்ப்பிக்கப்பட்ட “பட்டலந்த வீட்டுத் தொகுதியில் சட்டவிரோத தடுப்பு முகாம் மற்றும் சித்திரவதை முகாம் அமைத்து அவற்றை
நடத்திச் சென்றமை தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை” குறித்த விவாதத்தை நடத்துவதற்கும், இதற்கான இரண்டு நாள் விவாதத்தில் பிறிதொரு நாளை மே மாதத்தில் ஒதுக்குவதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.
வயோதிப சகோதரிகள் கொலை 15 வயது பேத்தி கைது
வயோதிப சகோதரிகள் கொலை 15 வயது பேத்தி கைது
வயோதிப சகோதரிகள் கொலை 15 வயது பேத்தி கைது ,மூதூர் – தாஹாநகர் பகுதியில் இன்று காலை இரண்டு சகோதரிகள் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், 15 வயதுச் சிறுமி கைது செய்யப்பட்டுள்ளார்.
இதில், 68 மற்றும் 74 வயதுடைய இரண்டு சகோதரிகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர்களில் ஒருவர் ஓய்வு பெற்ற ஆசிரியர் எனவும் மற்ற நபர் தாதி எனவும் தெரிவிக்கப்படுகிறது .
இந்நிலையில், கொலையுண்ட இருவரினதும் பேத்தியான 15 வயது சிறுமி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
இராஜினாமா கடிதம் கையளிப்பு
இராஜினாமா கடிதம் கையளிப்பு
இராஜினாமா கடிதம் கையளிப்பு ,ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் எம் .எஸ் நளீம், நேற்று (14), சபையில் பிரியாவிடை உரை நிகழ்த்திய பின்னர், செயலாளர் நாயகம் குஷானி
ரோஹனதீரவிடம், அவரது அலுவலகத்தில் வைத்து தனது இராஜினாமா கடிதத்தைக் கையளித்தார்.
அதன் போது, கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் உடனிருந்தனர்.
ஒருவர் அடித்து கொலை
ஒருவர் அடித்து கொலை
ஒருவர் அடித்து கொலை ,வெல்லாவௌி – சின்னவத்தை பிரதேசத்தில் நேற்று (14) மது அருந்தச் சென்ற நண்பர்களுக்கடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதில், வெல்லாவெளி சின்னவத்தை பக்கியெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய புவனேந்திரராசா என்பவரே உயிரிழந்துள்ளார்.
நேற்று பகல் 12 மணியளவில் புவனேந்திரராசா அவருடைய 3 நண்பர்களுடன் சின்னவத்தை பகுதியிலுள்ள வயல்பகுதிக்கு சென்று மதுபானம் அருந்தியுள்ளார்.
இந்த நிலையில் குறித்த நபருக்கும் ஏனைய 3 நண்பர்களுக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டதையடுத்து அவர் மீது 3 பேரும் பொல்லால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
குறித்த வயல்பகுதிக்கு மாலை வேளையில் சென்ற கிராம உத்தியோகத்தர் சடலம் ஒன்று இருப்பதைகண்டு பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து நீதிமன்ற அனுமதியை பெற்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மட்டு போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்ததுடன் குறித்த நண்பரை தாக்கி கொலை செய்த குற்றச்சாட்டின் 3 நண்பர்களையும் பொலிஸர் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காட்டுபகுதியில் இருந்து ஆண் சிசுவின் சடலம் மீட்பு
காட்டுபகுதியில் இருந்து ஆண் சிசுவின் சடலம் மீட்பு
காட்டுபகுதியில் இருந்து ஆண் சிசுவின் சடலம் மீட்பு ,மட்டக்களப்பு – சந்திவெளி பொலிஸ் பிரிவிலுள்ள மொறக்கொட்டான்சேனை காட்டை அண்டிய பகுதியில், வீசப்பட்ட நிலையில், ஆண் சிசுவின் சடலம் சனிக்கிழமை (15) காலையில் மீட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
ஆண் சிசுவை பெற்றெடுத்த பெண் ஒருவர் அந்த சிசுவை உரைப்பையில் கட்டிக் கொண்டு சென்று, அதனை சந்திவெளி பொலிஸ் நிலையத்தில் இருந்து சுமார் 3 கிலோமீற்றர் தூரம் கொண்ட மொறக்கொட்டான்சேனை காட்டையண்டிய பகுதியில் வீசிவிட்டு சென்றுள்ளார்.
இந்த நிலையில், இன்று காலை 9 மணியளவில் சடலம் ஒன்று இருப்பதை கண்டு பொதுமக்கள் பொலிஸாருக்கு தெரிவித்தனர்.
இதனையடுத்து பொலிஸார், நீதிமன்ற உத்தரவை பெற்று, சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அத்துடன், சிசுவை சம்பவதினமான இன்று பிறந்துள்ளதாகவும் சிசுவை பெற்றெடுத்து வீசிய பெண்ணை தேடிவருவதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சந்திவெளி பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் ,ஏப்ரல் மாதத்தின் முதல் வாரமளவில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம்
செய்யவுள்ளதாக பாராளுமன்றத்தில் இன்று (15) வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இந்தப் பயணத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையே பல புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்திட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் விஜித ஹேரத் குறிப்பிட்டார்
விபச்சாரியா நான் |அர்ச்சுனாவுக்கு வழக்கு போட்ட 2 வது பெண்
இரு சகோதரிகள் வெட்டிக் கொலை
இரு சகோதரிகள் வெட்டிக் கொலை
இரு சகோதரிகள் வெட்டிக் கொலை ,மூதூர் – தஹாநகரில் இரண்டு சகோதரிகள் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.
68 மற்றும் 74 வயதுடைய இரண்டு சகோதரிகளே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்
தமிழரசுக் கட்சியை சிதைக்க சதி
தமிழரசுக் கட்சியை சிதைக்க சதி
தமிழரசுக் கட்சியை சிதைக்க சதி ,தமிழரசுக் கட்சிக்கு எதிராக பல்வேறு சதி வலைகள் பின்னப்படுகிறது. அதிலும் தமிழரசுக் கட்சியை எப்படியாது சிதைத்து அதை உடைத்து கட்சியை பிளவு படுத்தி விட வேண்டும் என சிலர்
செயற்படுகின்றனர். என தமிழரசுக் கட்சியின் பதில் தலைவரும் வடக்கு மாகாண அவைத் தலைவருமான சீ.வீ.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார்.
யாழில் உள்ள அவரது அலுவலகத்தில் வியாழக்கிழமை (13) நடத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
புதிய தமிழரசுக் கட்சி உருவாக்கம் குறித்து பேசப்படுகிறது. உண்மையில் அப்படி கட்சிக்குள் இருப்பவர்கள் யாரும் கருதவில்லை. அப்படியான
எண்ணங்கள் கூட அவர்களிடத்தே இல்லை. ஏனெனில் கட்சியில் பலருடனும் இது தொடர்பில் பேசியிருந்த போது அவர்கள் அனைவரும் இதனை மறுதலித்துள்ளனர்.
குறிப்பாக தமிழ் மக்களின் நீண்ட கால பாரம்பரிய கட்சியாக இருக்கிறது. இந்த தமிழரசுக் கட்சியை எப்படியாவது உடைத்து விட வேண்டும் என்ற விசமத்தனமான பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுகிறது.
தமிழரசுக் கட்சியை பொறுத்த வரையில் கடந்த 75 வருடகால வரலாற்றில் சோரம் போகாத ஊழலில் ஈடுபடாத தமிழ் மக்களின் பாரம்பரிய கட்சியாக இந்தக் கட்சியே திகழ்ந்து வருகிறது.
இத்தகைய கட்சியை உடைக்க பலரும் பல சந்தர்ப்பங்களில் முயற்சி செய்திருந்தாலும் இது பலனளிக்காத நிலைமை ஏற்பட்டு உள்ளது.
இவ்வாறான நிலையில் ஜனநாயக தமிழரசு என்றும் புதிய தமிழரசு என்றும் புதிய புதிய பெயர்களைச் சொல்லிக் கொள்கின்றனர். அவ்வாறாக தமிழரசு
கட்சியை உடைப்பவர்களுக்கு தமிழரசு என்ற சொல்லும் தேவைப்படுவது ஆச்சர்யமானது.
ஆக மொத்தத்தில் தமிழரசை உடைக்கும் முயற்சி ஒருபோதும் நிறைவேறாது. ஆனால் தெற்கத்தேயே சிங்கள நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் உடைக்கும்
முயற்சியை தொடர்ந்து செய்தாலும் இது பலனளிக்காது என்பதையும் சொல்லி வைக்க விரும்புகிறேன்.
மேலும் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவராக நானும் பதில் செயலாளராக சுமந்திரனும் பதவிக்கு வருவதற்கு புதிதாக ஒன்றும் செய்யவில்லை. யாப்பில்
குளறுபடி செய்து இந்தப் பதவிகளுக்கு வரவில்லை. எமது கட்சியின் யாப்பிற்கு அமையதான் இப்போது அந்தப் பதவிகளை எடுத்திருக்கிறோம்.
இவ்வாறான நிலைமைகள் இருக்கத்தக்கதாக மக்கள் மத்தியில் பிழையான தகவல்களை பரப்பி விசமத்தனமான பிரச்சாரங்களை சிலர்
மேற்கொள்கின்றனர். அதுவும் இப்போது தேர்தல் காலம் என்பதால் இன்னும் இன்னும் அதிகளவில் போலிப் பிரச்சாரத்தை முன்னெடுக்கின்றனர்.
எனவே தமிழரசை பிளவுபடுத்தும் நோக்கில் முன்வைக்கப்படும் பொய்ப் பிரச்சாரங்களை சரியான முறையில் எமது மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு தமிழரசை இலக்கு வைத்து தமிழரசை உடைக்க முயற்சிகள் எடுத்தாலும் அதனூடாக விமர்சனங்கள் இருந்தாலும் அதையெல்லாம் தாண்டி நாம் முன்னேறுவோம்.
மாற்றான சிந்தனையில் பொறுப்பான அணுகு முறையை பின்பற்றி அனேகமாக எல்லா இடங்களிலும் சபைகளை கைப்பற்றுவோம். ஆனால் ஆட்சி அமைக்க தேவைப்படும் இடங்களில் ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகளுடனும் பேசுவோம் என்றார்.
வெலிவேரிய துப்பாக்கிச் சூடு: 3 குழுக்கள் விசாரணை
வெலிவேரிய துப்பாக்கிச் சூடு: 3 குழுக்கள் விசாரணை
வெலிவேரிய துப்பாக்கிச் சூடு: 3 குழுக்கள் விசாரணை ,வெலிவேரிய – அரலியகஸ்தேக சந்தியில் வியாழக்கிழமை (13) இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து கம்பஹா மாவட்ட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
தகவல்களின்படி, காரில் பயணித்த ஒருவரை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
இதன்போது அவரது இடது கையில் துப்பாக்கிச் சூட்டு காயம் ஏற்பட்டது, ஆனால் அவர் நிற்காமல் மருத்துவமனைக்கு காரை ஓட்டிச் சென்றார்.
மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் பிஸ்டல் வகை துப்பாக்கியைப் பயன்படுத்தி தாக்குதலை நடத்தியதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இந்த சம்பவம் குறித்து தற்போது மூன்று பொலிஸ் குழுக்கள் விசாரணை நடத்தி வருகின்றன
AI இல் ஆசிரியையை நிர்வாணப்படுத்திய மாணவர்கள்
AI இல் ஆசிரியையை நிர்வாணப்படுத்திய மாணவர்கள்
AI இல் ஆசிரியையை நிர்வாணப்படுத்திய மாணவர்கள் ,முன்னணி ஆண்கள் பாடசாலையின் மாணவர்கள் குழுவொன்று, செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி, அந்தப் பாடசாலையில் இளம் பெண் ஆசிரியை ஒருவரின்
நிர்வாண புகைப்படங்களை உருவாக்கிய சம்பவம் குறித்து கண்டி பிரதேச சிறுவர்கள் மற்றும் மகளிர் பணியகம் விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளது.
அந்த பாடசாலையில் 10 ஆம் வகுப்பு படிக்கும் இந்த மாணவர்கள், பாடசாலையில் ஒரு இளம் பெண் ஆசிரியையின் முகத்தின் புகைப்படங்களை உருவாக்கி பகிர்ந்து கொள்ள செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி வந்தனர்.
இந்த சம்பவம் ஆசிரியரால் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, அவர் கண்டி பொலிஸை அணுகி, சம்பவம் தொடர்பாக பிரதேச குழந்தைகள் மற்றும் மகளிர் பணியகத்தில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில், கண்டி பிரிவு சிறுவர்கள் மற்றும் மகளிர் பணியக அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பாடசாலைக்குச் சென்று, மாணவர்கள்
பயன்படுத்தியதாகக் கூறப்படும் மடிக்கணினி மற்றும் இரண்டு மொபைல் போன்களைக் கைப்பற்றி விசாரணைகளைத் தொடங்கியுள்ளதாக மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கண்டி பிரிவுக்குப் பொறுப்பான மூத்த பொலிஸ் கண்காணிப்பாளர் அனுருத்த பண்டாரநாயக்கவின் அறிவுறுத்தலின் பேரில், பிரிவு சிறுவர்கள் மற்றும்
மகளிர் பணியகத்தின் பொறுப்பதிகாரி, தலைமை ஆய்வாளர் தலைமையிலான பொலிஸ் குழு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது
விபச்சாரியா நான் |அர்ச்சுனாவுக்கு வழக்கு போட்ட 2 வது பெண்
விபச்சாரியா நான் |அர்ச்சுனாவுக்கு வழக்கு போட்ட 2 வது பெண்
விபச்சாரியா நான் |அர்ச்சுனாவுக்கு வழக்கு போட்ட 2 வது பெண்.
பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் சங்கவி மற்றும் சாலினி என்கின்ற இரண்டு யூடுப்பர்களையும் விபச்சாரி என தெரிவித்துள்ளார் .
ஆதாரமற்று பேசுவதை வாடிக்கையாக கொண்டு தமிழ் தேசியத்திற்கும் ,தமிழ் இனத்திற்கும் துரோகியாக உள்ள அர்ச்சுனா இப்படி பேசி திரிவது மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது .
மக்களிடம் வாங்கிய பணத்திற்கு கணக்கு காட்ட மறுக்கும் அர்ச்சுனா ,வெள்ள நிவாரண நிதி ,மருத்துவ முகாம் போன்றவற்றுக்கு சேகரித்த பணம் செலவு செய்து கொள்ளையடித்தது ஏப்பம் அடிக்கும் அர்ச்சுனா எப்படி மக்களுக்கும் உதவி செய்வார் ,…?
கீழே உள்ள காணொளியில் விபரம் பார்க்க
எல்ல வெல்லவாய வீதியில் மண் சரிவு
எல்ல வெல்லவாய வீதியில் மண் சரிவு
எல்ல வெல்லவாய வீதியில் மண் சரிவு ,மழையுடனான வானிலை காரணமாக, எல்ல – வெல்லவாய பிரதான வீதியில், கரந்தகொல்ல பகுதியில், 12வது கிலோமீட்டர் கம்பத்திற்கு அருகில், மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக குறித்த பகுதியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக பொலிஸார் சாரதிகளுக்கு அறிவித்துள்ளனர்.
குறித்த வீதியை சீரமைத்து மீண்டும் வழமைக்கு கொண்டுவரும் வரை மாற்று வழிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
அர்ச்சுனா மீது பாய்ந்த வழக்கு |சிக்கிய அர்ச்சுனா இராமநாதன் |சங்கவி அதிரடி
அர்ச்சுனா மீது பாய்ந்த வழக்கு |சிக்கிய அர்ச்சுனா இராமநாதன் |சங்கவி அதிரடி
அர்ச்சுனா மீது பாய்ந்த வழக்கு |சிக்கிய அர்ச்சுனா இராமநாதன் |சங்கவி அதிரடி.
பிரபல பெண் யூட்டுபர் சங்கவி மற்றும் ஷாலினியை விபச்சாரி என்ற பாரளுமன்ற உறுப்பினர்களை அர்ச்சுனா இராமநாதன் மீது வழக்கு போட்ட வீர பெண்மணி சங்கவி .
அப்பாவிகளை குறிவைத்து வன்மத்துடன் பழிவாங்கும் பாரளுமன்ற உறுப்பினராக மாற்றம் பெற்றுள்ள அர்ச்சுனா இராமநாதன் ,ஆளுகின்ற அனுரா அரசின் கூலியாக வேலை செய்யும் அர்ச்சுனா மக்களே என்ன செய்யலாம் சொல்லுங்கள் ,காணொளியை முழுமையாக பாருங்கள்
நகர அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகளுடன் ஜனாதிபதி சந்திப்பு
நகர அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகளுடன் ஜனாதிபதி சந்திப்பு
நகர அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகளுடன் ஜனாதிபதி சந்திப்பு ,ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் நகர அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (12) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் செயல்படுத்தப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் இந்த ஆண்டு வரவு -செலவுத் திட்டத்தில் அந்த நடவடிக்கைகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை முன்னுரிமை வழங்கவேண்டிய
திட்டங்களை அடையாளம் கண்டு திறம்பட பயன்படுத்துவது தொடர்பில் ஆராயும் நோக்கத்துடன் இந்தக் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யபட்டது.
முறையான நகர்ப்புற அபிவிருத்தியின் மூலம் நாட்டின் தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கான சாத்தியத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, நகர அபிவிருத்தித் திட்டங்களைத் தயாரித்து செயல்படுத்தும்
போது பொருளாதார, சமூக, சுற்றுச்சூழல் மற்றும் பௌதீக அடிப்படையில் ஒருங்கிணைந்த திட்டங்களை தயாரிப்பதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
நகர திட்டங்களை ஒன்லைனில் அங்கீகரிப்பதற்கான திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதோடு அதற்காக தொடர்புடைய நிறுவனங்களை ஒருங்கிணைப்பதன் முக்கியத்துவம் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
நாடு முழுவதும் 119 நகரங்களுக்கான நகர அபிவிருத்தித் திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதோடு அந்தத் திட்டங்களை விரைவாக செயல்படுத்துவது
மற்றும் எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்தும் இதன் போது விரிவாக ஆராயப்பட்டது.
நகர திட்டமிடல், மூலதன முதலீடுகள், அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் பரிந்துரைக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்துதல், நகர காணிப் பயன்பாட்டுக் கொள்கையை தயாரித்து
செயல்படுத்துதல், புதிய அபிவிருத்தித் திட்டங்களுக்கான ஒப்பந்தங்களை மேற்கொள்ளுதல், நிறைவு செய்வதற்குத் தவறியதால் புறக்கணிக்கப்பட்ட எந்தவொரு அபிவிருத்திபணியையும் பொறுப்பேற்று நிறைவு செய்தல்,
மூலதன அபிவிருத்தித் திட்டங்களைத் தயாரித்தல், சுற்றுச்சூழல் தரநிலைகளைத் தயாரித்தல் மற்றும் சுற்றுச்சூழல் அபிவிருத்தி நடவடிக்கைகளைத் தயாரித்தல், கட்டிட பொறியியல் மற்றும் ஏனைய
செயல்பாடுகளை மேற்கொள்வது மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் போன்ற நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு வழங்கப்பட்டுள்ள
பொறுப்பு மற்றும் செயல்பாடுகள் தொடர்பாகவும் இதன் போது மீளாய்வு செய்யப்பட்டது
குரங்குகளை பிடித்தால் பணம் கொடுப்போம்
குரங்குகளை பிடித்தால் பணம் கொடுப்போம்
குரங்குகளை பிடித்தால் பணம் கொடுப்போம் ,பயிர்செய்கைகளை நாசம் செய்யும் குரங்குகளை பிடித்து கொடுத்தால் ஒரு குரங்குக்கு 500 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை வழங்கப்படும் என்று அறிவியுங்கள் என ஐக்கிய மக்கள்
சக்தியின் கேகாலை மாவட்டஎம்.பி சுஜித் சஞ்சய பெரேரா அரசுக்கு ஆலோசனை வழங்கினார்
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (12) இடம்பெற்ற 2025 வரவு- செலவுத் திட்டத்தின் கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலைஆலோசனை வழங்கிய அவர் மேலும் பேசுகையில்,
காட்டு விலங்குகளினால் பயிர்ச்செய்கைகளுக்கு ஏற்படும் பாதிப்பு நாளாந்தம் தீவிரமடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் மோசமாக
பாதிக்கப்பட்டுள்ளார்கள். குரங்குகள் வருடாந்தம் 90 மில்லியன் அளவிலான தேங்காய்களை நாசம் செய்வதாக விவசாயத்துறை அமைச்சு குறிப்பிடுகிறது.
மார்ச் 15 ஆம் திகதி வீட்டுத் தோட்டங்களுக்கும், விளைநிலங்களுக்கும் வரும் காட்டு விலங்குகளை கணக்கிடுமாறு குறிப்பிடப்படுகிறது.
கணக்கிடுவதால் மாத்திரம் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது. குரங்குகளை பிடித்துக் கொடுத்தால் ஒரு குரங்குக்கு 500 அல்லது 1000 ரூபாய் வரை வழங்கப்படும் என்று அறிவியுங்கள்.
குரங்குகளே பயிர்ச்செய்கைகளை அதிகளவில் நாசம் செய்கின்றன. கருத்தடை செய்ய முடியாவிடின் அவற்றை தனித்த காட்டு பகுதிகளுக்காவது கொண்டு சென்று விடுங்கள் என்றார்.
சஜித்துக்கு ரணில் காலக்கெடு
சஜித்துக்கு ரணில் காலக்கெடு
சஜித்துக்கு ரணில் காலக்கெடு ,ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு காலக்கெடு விதித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கொழும்பு மாநகர சபையில் போட்டியிடுவதற்காக, ஐக்கிய மக்கள் சக்திக்கு (SJB) எதிர்வரும் 20 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்க ஐக்கிய தேசியக் கட்சி முடிவு செய்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினர்களிடையே நடைபெற்ற கலந்துரையாடலின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டது.
ஐக்கிய தேசியக் கட்சி எடுத்த மேற்கண்ட முடிவை, சிறிகொத்த கட்சி தலைமையகத்தில் புதன்கிழமை (12) நடைபெற்ற அமைப்பாளர்களுக்கான நியமன நிகழ்வில், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன அறிவித்தார்.
யாழின் 17 உள்ளூராட்சி சபைகளிலும் தே ம ச ஆட்சி அமைக்கும்
யாழின் 17 உள்ளூராட்சி சபைகளிலும் தே ம ச ஆட்சி அமைக்கும்
யாழின் 17 உள்ளூராட்சி சபைகளிலும் தே ம ச ஆட்சி அமைக்கும் ,யாழ்ப்பாணத்தில் உள்ள 17 உள்ளூராட்சி சபைகளில் தேசிய மக்கள் சக்தி ஆட்சி அமைக்கும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
உள்ளூர் அதிகார சபை தேர்தலுக்காக யாழ்ப்பாணத்தில் உள்ள 17 உள்ளூராட்சி சபைகளுக்குமான அங்கீகரிக்கப்பட்ட முர்களை நியமிக்கும் நடவடிக்கைகளுக்காக
வியாழக்கிழமை (13) காலை யாழ்ப்பாணத்தில் உள்ள தேர்தல்கள் அலுவலகத்திற்கு வருகை தந்த போது அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான கருணைநாதன் இளங்குமரன், ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவன், சண்முகநாதன் ஸ்ரீபவனந்தராஜா, தொகுதி அமைப்பாளர்கள், கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட சிலர் வருகை தந்திருந்தனர்.


























