முச்சக்கரவண்டி விபத்தில் மூவர் காயம்
Posted in இலங்கை செய்திகள்

முச்சக்கரவண்டி விபத்தில் மூவர் காயம்

முச்சக்கரவண்டி விபத்தில் மூவர் காயம்

முச்சக்கரவண்டி விபத்தில் மூவர் காயம் ,வெல்லவாய பொலிஸ் பிரிவின் மூன்றாம் தூண் பகுதியில், எல்ல-வெல்லாவாய பிரதான வீதியில், முச்சக்கர வண்டி ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

முச்சக்கர வண்டியே இவ்வாறு விபத்தில்

கோடீஸ்வர தொழிலதிபர் கொலை
கோடீஸ்வர தொழிலதிபர் கொகோடீஸ்வர தொழிலதிபர் கொலைலை

கதிர்காமத்திற்கு யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த முச்சக்கர வண்டியே இவ்வாறு விபத்தில் சிக்கியுள்ளது.

விபத்தில் இரண்டு பெண்கள் மற்றும் சாரதி காயமடைந்து வெல்லவாய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

ஆபத்தான நிலையில்

அவர்களில் ஒருவர், ஆபத்தான நிலையில், மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பண்டாரவளை, அம்பதண்டேகம பகுதியைச் சேர்ந்தவர்களே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முச்சக்கரவண்டி மீது மரம் விழுந்தது சிறுவன் காயம்
Posted in இலங்கை செய்திகள்

முச்சக்கரவண்டி மீது மரம் விழுந்தது சிறுவன் காயம்

முச்சக்கரவண்டி மீது மரம் விழுந்தது சிறுவன் காயம்

நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிளாசோ தோட்டத்திற்கு செல்லும் வீதியில் நேற்று இரவு நானுஓயா பிரதான நகர் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்றின் மீது மரம் விழுந்ததில் சிறுவன் ஒருவர் காயமடைந்தான்.

காயமுற்ற சிறுவன் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறான் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

கிளாசோ பகுதியில் இருந்து நானுஓயா நோக்கி பயணித்து கொண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்றின் மீதே மரம் முறிந்து விழுந்தது.

வீதியோரத்தில் உள்ள காட்டுப்பகுதியில் மரம் ஒன்றைச் சட்ட விரோதமாக வெட்டிக் கொண்டிருந்த வேலையில் திடீரென மரம் வீதியில் சென்ற முச்சக்கரவண்டி மீது வீழ்ந்தமையால் இந்த விபத்துச் சம்பவம் நேர்ந்துள்ளது.

இந்த விபத்தினால் அந்த வீதியூடான போக்குவரத்து சற்று நேரம் பாதிப்பு ஏற்பட்டது. முச்சக்கரவண்டி முழுமையாகச் சேதமடைந்துள்ளது