இவரை நாங்களே போட்டு தள்ளினோம் ஐ எஸ் உரிமை கோரல்
Posted in உலக செய்திகள்

இவரை நாங்களே போட்டு தள்ளினோம் ஐ எஸ் உரிமை கோரல்

இவரை நாங்களே போட்டு தள்ளினோம் ஐ எஸ் உரிமை கோரல்

ஆப்கான் நாடாளும் தலிபான் துணை ஆளுநரான ,
நிசார் அகமது அஹ்மதியை ,பட்காக்ஷான் மாகாணத்தில்
வைத்து போட்டு தள்ளியது நாங்கள் தான் என ஐஎஸ்ஐஎல்
பயங்கரவாத அமைப்பு உரிமை கோரியுள்ளது .

செவ்வாய்கிழமையன்று கார் வெடிகுண்டு வெடித்ததில்,
நிசார் அஹ்மத் அஹ்மதியும் ,அவரது ஓட்டுநரும் கொல்லப்பட்டனர்,மேலும்
ஆறு பொதுமக்கள் காயமடைந்தனர்.

இவரை நாங்களே போட்டு தள்ளினோம் ஐ எஸ் உரிமை கோரல்

ISIL பயங்கரவாதிகள் தலிபான் நிர்வாக அதிகாரிகளை குறிவைத்து தாக்கி வருகின்றனர் ,, இதில் வடக்கு பால்க் மாகாண கவர்னர் மார்ச் மாதம் அவரது அலுவலகத்தில் ,நடந்த தாக்குதலில் கொல்லப்பட்டதற்கு ,பொறுப்பேற்க வேண்டும் என தெரிவிக்க பட்டுள்ளது .

தலிபான்கள் உள்ளக கட்டமைப்பில் பல ஓட்டைகள் உள்ளதையும் ,
சிவில் நிர்வாகாத்தை கட்டி காப்பாற்ற முடியாது, திண்றிய வண்ணம் உள்ளது .

பலமான அமைப்பாக தன்னை உருவாக படுத்தி கொண்டாலும் ,வீழ்த்த பட்ட முக்கிய மூளைகள் ,இழப்பு ,பெரும் இழப்பு என படுகிறது .

போராட்ட காரர்கள் மீது கண்ணீர் குண்டு தாக்குதல் | இலங்கை செய்திகள்
Posted in இலங்கை செய்திகள்

பல்கலைக்கழக மாணவா்களின் ஆா்ப்பாட்டத்தின் மீது நீா்த்தாரை பிரயோகம்

பல்கலைக்கழக மாணவா்களின் ஆா்ப்பாட்டத்தின் மீது நீா்த்தாரை பிரயோகம்

அனைத்து பல்கலைக்கழக மாணவா் ஒன்றியத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆா்ப்பாட்ட பேரணி காரணமாக விஜயராம சந்தியில் இருந்து ஜயவா்தனபுர பல்கலைக்கழகம் வரையான வீதி மூடப்பட்டுள்ளது.

பொலிஸாரால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தொிவிக்கப்படுகிறது.

அனைத்து பல்கலைக்கழக மாணவா் ஒன்றியத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆா்ப்பாட்ட பேரணியை கலைப்பதற்காக ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு அருகில் இந்த நீா்த்தாரை மற்றும் கண்ணீா்ப்புகை பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.

No posts found.
மட்டு விபத்தில் இருவர் படுகாயம்
Posted in இலங்கை செய்திகள்

மட்டு விபத்தில் இருவர் படுகாயம்

மட்டு விபத்தில் இருவர் படுகாயம்

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் குருக்கள்மடத்தில் புதன்கிழமை மாலை (07) இடம் பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயம் அடைந்த நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

கட்டுநாயக்காவில் இருந்து கல்முனை நோக்கி சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து அதே திசையில் முன்னே சென்று கொண்டிருந்த கார் ஒன்றின் மீது மோதியதனால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இதில் மட்டக்களப்பில் இருந்து இரத்தினபுரி நோக்கி பயணித்துக் கொண்டிருந்த கார் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் அதில் பயணித்த இருவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

No posts found.
வெள்ளம் மிதக்கும் உக்ரைன் தவிக்கும் மக்கள்
Posted in உலக செய்திகள்

வெள்ளம் மிதக்கும் உக்ரைன் தவிக்கும் மக்கள்

வெள்ளம் மிதக்கும் உக்ரைன் தவிக்கும் மக்கள்

உக்ரைனில் குளக்கட்டு உடைக்க பட்ட நிலையில் ,டினிப்ரோ ஆற்றின் அருகே உள்ள ,இரண்டாயிரம் வீடுகள் ,வெள்ளத்தில் மிதக்கின்றன , இந்த பகுதியில் வசித்து வரும்,மூவாயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் அங்கிருந்து ,
அகதிகளாக இடம் பெயர்ந்துள்ளனர் .

ரஷ்யா படைகள் தொடர் முனேற்றதை தடுக்க ,
மேற்கொள்ள பட்ட ,தற்காலிக தடுப்பு யுத்தத்தால் ,மக்கள் பாதிக்க பட்டுள்ளனர் .

வெள்ளம் மிதக்கும் உக்ரைன் தவிக்கும் மக்கள்

மக்களை காப்பாற்ற என கோரி நடத்த படும் போராட்டத்தில் ,
அதே மக்களை பணயமாக வைத்து நடத்த படும் இவ்விதமான சம்பவங்கள் ,
ஆளும் அரசுகளுக்கு எதிராக மக்களை திசை திருப்பும் நிலைக்கு
ஏற்படுத்துச்செல்லும் என்பதாகி காலம் காண்பிக்க போகிறது .

இவ்வாறான தொடர் சம்பவங்கள் நீடித்தால் ,
அது மக்கள் மத்தியில் ஒருவித பதட்டத்தை ஏற்படுத்தும் ,


அதன் மூலம் ,மக்கள் கொந்தளிப்பு ,அல்லது அவர்கள் பாதுகாப்பான,
இடங்களை நோக்கி நகரும் நிலையை ஏற்படுத்தும் ,
அவ்விதமான செயல் நோக்குகளில் ஒன்றாக ஆய்வுக்குள் உள்ளடக்கம் பெறுகிறது .

துருக்கி இராணுவ தாள்மீது ரொக்க தாக்குதல்
Posted in உலக செய்திகள்

துருக்கி இராணுவ தாள்மீது ரொக்கட் தாக்குதல்

துருக்கி இராணுவ தாள்மீது ரொக்கட் தாக்குதல்

ஈராக்கில் உள்ள துருக்கி ராணுவ தளம் ராக்கெட் தாக்குதலுக்கு நடத்த பட்டுள்ளது ,தாக்குதல் இடம்பெற்றுள்ளதை ஏற்றுக்கொண்டுள்ள துருக்கிய இராணுவம் ,அங்கு ஏற்பட்ட சேதவிபரங்கள் தொடர்பாக எதனையும் தெரிவிக்கவில்லை .

குருதீஸ் போராளிகளே இந்த ஏவுகணை ரொக்கட் தாக்குதலை ,
நடத்தியுள்ளதாக தெரிவிக்க படுகிறது .

குருதீஸ் போராளிகள் தாயாக பகுதிகளை ஆக்கிரமிக்கும் ,இன அழிப்பு நடவடிக்கையில் ,துருக்கி ஈடுபட்டு வருவதாக, பாதிக்க பட்ட குருதீஸ் மக்கள் தெரிவித்து வருகின்றனர் .

துருக்கி இராணுவ தாள்மீது ரொக்கட் தாக்குதல்

தமது முகாம் தாக்குதலை அடுத்து ,போராளிகள் வாழ்விடங்கள்
மீது விமனா தாக்குதலை துருக்கி ஆரம்பித்துள்ளது .

குருதீஸ் தலைவர் அப்துல்லா உஜாலான் துருக்கி சிறையில் அடைக்க பட்ட பின்னர் ,அந்த அமைப்பின் போராட்டம் அமெரிக்கா ,சார்புடன் அதி வளர்ச்சி பெற்றமை,இங்கே குறிப்பிட தக்கது.

Posted in இலங்கை செய்திகள்

கஜேந்திரகுமார் எம்.பி கொழும்பில் வைத்து கைது! (PHOTO)

கஜேந்திரகுமார் எம்.பி கொழும்பில் வைத்து கைது!

தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி கொழும்பில் வைத்து இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

வடமராட்சி, மருதங்கேணி விவகாரம் தொடர்பில் வாக்குமூலம் பெற நாளை பொலிஸ் நிலையம் வருமாறு அறிவித்தல் வழங்கப்பட்ட நிலையில் இன்று அதிகாலை கொழும்பில் உள்ள அவரது வீட்டை சுற்றிவளைத்த பொலிசார் அவரை கைது செய்துள்ளனர்.

கஜேந்திரகுமார் எம்.பி கொழும்பில் வைத்து கைது!

இன்று பாராளுமன்றத்தில் மருதங்கேணி விவகாரம் தொடர்பில் உரையாற்ற இருந்த நிலையில் இந்த கைது இடம்பெற்றுள்ளதுடன், கைது செய்யப்பட்ட எம்.பி கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். பின்னர் மருதங்கேணி அழைத்து வர நடவடிக்கைகள் இடம்பெறுவதாக அறிய முடிகிறது.

இதேவேளை, மருதங்கேணியில் கடந்த 2 ஆம் திகதி சிவில் உடையில் வந்த பொலிசார் அவர் மீது தாக்குதல் நடத்தியதுடன், பிஸ்ரல் காட்டி மிரட்டியதாக செய்திகள் வெளிவந்த நிலையில் பொலிசாரின் கடமைக்கு இடையூறை ஏற்படுத்தியதாக பொலிசார் தற்போது நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in இலங்கை செய்திகள்

வரலாற்று சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்தில் தூக்கு காவடி எடுத்த பெண்கள்

வரலாற்று சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்தில் தூக்கு காவடி எடுத்த பெண்கள்

வரலாற்று சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்தில் தூக்கு காவடி எடுத்த பெண்கள் பலரும் கவனத்தையும் ஈர்த்துள்ளனர்.

சைவர்களுடைய வழிபாடுகளில் நேர்த்திக்கடன் முக்கியம் பெறுகின்றது. தங்களுக்கு நேரும் துன்பங்கள், ஆபத்துக்கள் இந்த நேர்த்திக்கடன் மூலம் நீங்கும் என்பது அவர்களது நம்பிக்கையும் கூட.

வரலாற்று சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்தில் தூக்கு காவடி எடுத்த பெண்கள்

நேற்றைய தினம் வற்றாப்பளை கண்ணகைத்தாயின் பொங்கல் விழாவாகும். உப்பு நீரிலே விளக்கெரியும் புதுமைகள் நிறைந்த கண்ணகைத்தாய்க்கு தமிழர்களின் வீரம் செறிந்த போராட்ட அமைப்பு வானூர்தி மூலம் பூத்தூவிய வரலாற்று பெரு நிகழ்வின் பின் நேற்று இரண்டு பெண்கள் பறவைக்காவடி எடுத்து தமது நேர்த்திக்கடனை நேர்த்தியாக நிறைவேற்றினார்கள்.

Posted in இலங்கை செய்திகள்

தாயுடன் ஏற்பட்ட முரண்பாடு: 648 காஸ்சிலிண்டருடன் வாகனத்தை கடத்திய மகன்- வவுனியாவில் பரபரப்பு

தாயுடன் ஏற்பட்ட முரண்பாடு: 648 காஸ்சிலிண்டருடன் வாகனத்தை கடத்திய மகன்- வவுனியாவில் பரபரப்பு

தாயுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக 648 காஸ் சிலிண்டருடன் மகன் வாகனத்தை கடத்திச் சென்ற சம்பவம் வவுனியாவில் இன்று பதிவாகியுள்ளது.

தாய் நெளுக்குளம் பொலிசில் செய்த முறைப்பாட்டையடுத்து பொலிசார் விரைந்து சென்று வாகனத்தை மீட்டுள்ளதுடன், அதனை கடத்திச் சென்ற மகனையும் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தியுள்ளனர்.

தாயுக்கும், மகனுக்கும் நீண்ட நாளாக இருந்த முரண்பாட்டால் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

No posts found.
தமிழ் தேசிய மக்கள் முன்னனியை தேடி பொலிசார் யாழில் வேட்டை: கஜேந்திரகுமார் எம்.பியும் விரைவில் கைது?
Posted in இலங்கை செய்திகள்

தமிழ் தேசிய மக்கள் முன்னனியை தேடி பொலிசார் யாழில் வேட்டை: கஜேந்திரகுமார் எம்.பியும் விரைவில் கைது?

தமிழ் தேசிய மக்கள் முன்னனியை தேடி பொலிசார் யாழில் வேட்டை: கஜேந்திரகுமார் எம்.பியும் விரைவில் கைது?

தமிழ் தேசிய மக்கள் முன்னனியைத் தேடி பொலிசார் யாழில் விசே கைது வேட்டையை ஆரம்பித்துள்ளதுடன், அதன் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களும் கைது செய்யப்படலாம் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

யாழ் வடமராட்சி, மருதங்கேணி பகுதியில் தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீது பொலிஸ் புலனாய்வு துறையினர் தாக்குதல் நடத்தியமை மற்றும்

பொலிசார் சுட முற்பட்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையளில் பொலிசார் கைது நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.

தமிழ் தேசிய மக்கள் முன்னனியை தேடி பொலிசார் யாழில் வேட்டை: கஜேந்திரகுமார் எம்.பியும் விரைவில் கைது?

கட்சியின் மகளிர் அணித் தலைவி மற்றும் ஒரு நபர் இன்று மருதங்கேணி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கஜேந்திரகுமார் எம்.பியையும் பொலிஸ் நிலையம் வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர் அங்கு வைத்து கைது செய்யப்படலாம் என பொலிஸ் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே இது குறித்து கஜேந்திரகுமார் எம்.பி சபாநாயகரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.

No posts found.
Posted in இலங்கை செய்திகள்

வவுனியாவைச் சேர்ந்த முன்னாள் அரசியல் கைதி ஆனந்தவர்ணனை ரிஐடி விசாரணைக்கு அழைப்பு

வவுனியாவில் வசித்து வரும் முன்னாள் அரசியல் கைதி ஆனந்தவர்ணனை ரிஐடி விசாரணை பிரிவுக்கு வருமாறு இன்று (05.06) அழைப்பாணை வழங்கப்பட்டுள்ளது.

வவுனியா, தோணிக்கல் பகுதியில் வசித்து வரும் முன்னாள் அரசியல் கைதியான செல்வநாயகம் ஆனந்தவர்ணனணையே நாளை 07 ஆம் திகதி காலை 9 மணிக்கு வவுனியாவில் அமைந்துள்ள பயங்கரவாத விசாரணை மற்றும் தடுப்பு பிரிவுக்கு சமூகமளிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவைச் சேர்ந்த முன்னாள் அரசியல் கைதி ஆனந்தவர்ணனை ரிஐடி விசாரணைக்கு அழைப்பு

அவருக்கு அனுப்பப்பட்டுள்ள அழைப்பாணையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவின் பிரிவு 01 இன் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைக்கு அமைய வாக்குமூலம் ஒன்றை தருவதற்கு, 2023 ஆம் ஆண்டு 6 ஆம் மாதம் 7 ஆம் திகதி காலை 9 மணிக்கு பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் வவுனியா கிளைக்கு சமூகமளிக்குமாறு அழைக்கின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல்துறையால் ஒருவர் சுட்டு கொலை
Posted in இலங்கை செய்திகள்

வவுனியாவில் அரச காணியை அடாவடியாக பிடிக்க முயன்றதால் இரு இனங்களுக்கு இடையில் முரண்பாடு: பொலிசார் அதிரடி

வவுனியாவில் அரச காணியை அடாவடியாக பிடிக்க முயன்றதால் இரு இனங்களுக்கு இடையில் முரண்பாடு: பொலிசார் அதிரடி

வவுனியா, குருமன்காடு பகுதியை அண்மித்த அரசாங்கத்திற்கு சொந்தமான குளத்து நீரேந்து பிரதேசத்தை கையகப்படுத்தும் வகையில் சிலர்

முன்னெடுத்த நடவடிக்கை காரணமாக அங்கு மக்களுக்கு இடையில் இரு குழுக்களாக முரண்பாடு ஏற்பட்டையடுத்து பொலிசாரின் தலையீட்டினால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது

இன்று (04.06) காலை முதல் மதியம் வரை இடம்பெற்ற இவ்முரண்பாடு தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, குருமன்காடு பகுதியை அண்மித்த பட்டானிச்சூர் புளியங்குளத்தின் நீரேந்து பிரதேசத்தை விடுமுறை நாட்களில் சிலர் கையகப்படுத்தி வேலி அடைத்து வந்திருந்தனர்.

இதனையடுத்து, 2011 ஆம் ஆண்டின் கமநல அபிவிருத்தி சட்டத்தினால் திருத்தம் செய்யப்பட்ட 2000ம் ஆண்டு 46 ஆம் இலக்க கமநல அபிவிருத்தி சட்டத்தின் 83 ஆம் பிரிவின் பிரகாரம் பட்டானிச்சூர் புளியங்குளத்தின் சட்ட

விரோதமாக அமைக்கப்பட்ட வேலியினை அகற்றுவதற்கான கட்டளை வவுனியா கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் மாவட்ட பிரதி ஆணையாளர் பா.தேவரதன் என்பவரினால் கடந்த 08.05.2023 அன்று பிறப்பிக்கப்பட்டது.

வவுனியாவில் அரச காணியை அடாவடியாக பிடிக்க முயன்றதால் இரு இனங்களுக்கு இடையில் முரண்பாடு: பொலிசார் அதிரடி

அதில், வவுனியா கோவில்குளம் கமநல அபிவிருத்தி திணைககள பிரிவில் அமைந்துள்ள பட்டாணிச்சூர் கமநலசேவை நிலையத்தின்

அதிகாரத்திற்குட்பட்ட பட்டானிச்சூர் புளியங்குளமானது கமநல அபிவிருத்தித் திணைக்களத்திற்கு சொந்தமான அளவை செய்யப்பட்டு எல்லைக்கற்கள் இடப்பட்டுள்ள குளமாகும்.

2013 ஆம் ஆண்டு மே மாதம் 5 ஆம் 6 ஆம் திகதி அரச விடுமுறை தினங்களில் (இரவு நேரத்தில்) பட்டாணிச்சூர் புளியங்குளத்திற்குள் உள் நுழைந்து குளத்திற்குரிய ஒதுக்கீட்டுப் பிரதேசத்தில் விரோதமான முறையில் இனம் தெரியாதோர்களால் வேலி அடைக்கப்பட்டுள்ளதை அவதானிக்கப்பட்டுள்ளது.

அதனால் 2011 ஆம் ஆண்டின் கமநல அபிவிருத்தி சட்டத்தினால் திருத்தம் செய்யப்பட்ட 2000ம் ஆண்டு 46 ஆம் இலக்க கமநல அபிவிருத்தி சட்டத்தின் 38(4) ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட்ட 83(1) இன் பிரகாரம்

அடைக்கப்பட்டவர்களாலே சட்ட விரோதமாக அடைக்கப்பட்ட வேலியை 22.05.2023 ஆம் திகதிக்கு முன்பு உடடியாக அகற்றுமாறு கட்டளை இடப்பட்டதுடன்,

அவர்களால் அகற்ற தவறின் 22.05.2023 ஆம் திகதியன்றோ அல்லது அதற்கு பின்னரான தினத்திலோ கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர், கோவில்குளம் கமநல சேவை நிலையம் என்பவரால் பொருத்தமான நிறுவனங்களின்

உதவியுடன் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பதுடன் அதற்கு செலவான நிதி உரிய சட்ட விரோத வேலியடைப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட நபர்களிடமிருந்து அறவிடப்படுவதற்கு நடவடிக்கை

மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பிறப்பிக்கப்பட்ட கட்டளையில் தெரிவிக்கப்பட்டிருந்தமையுடன் வவுனியா பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்தது.

எனினும், இன்று (04.06) காலை குறித்த பகுதியில் உள்ள அரசாங்கத்திற்கு சொந்தமான நீரேந்து பகுதியில் அமைந்துள்ள பள்ளிவாசல் சமூகத்தினர்

இணைந்து சட்டவிரோதமான முறையில் வேலி அமைக்கப்பட்ட பகுதியினுள் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்ததுடன், மரக்கன்றுகளையும் நாட்ட முனைந்தனர்.

இதன் போது, வவுனியா மாவட்ட கமக்கார சம்மேளனங்களின் தலைவர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து குறித்த பகுதியின் சுத்தப்படுத்தும் நடவடிக்கையினை நிறுத்துமாறு தெரிவித்திருந்தார்.

எனினும் தொடர்ந்தும் சுத்தப்படுத்தும் நடவடிக்னக முன்னெடுக்கப்பட்டமையினால் தமிழ் இளைஞர்கள் அவ்விடத்தில் ஒன்று கூடி எதிர்ப்பினை தெரிவித்திருந்தனர்.

இதனால் அவ்விடத்தில் பதட்டமான சூழ்நிலமை நிலவியதுடன் சில மணிநேர குழப்ப நிலமையினையடுத்து நிலமையினை வவுனியா பொலிஸார் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததுடன், இரு தரப்பினனரயும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்று இருவரிடமும் முறைப்பாட்டினை பெற்றனர்.

இவ்விடயத்தினை நீதிமன்றிக்கு எடுத்துச் செல்வதற்குரிய நடவடிக்கையினை பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.

No posts found.

முல்லைத்தீவில் இருந்து கிளிநொச்சிக்கு தண்ணீர் கொடுக்க முடியாது பிரதேசவாதமாக செயற்படும் சாள்ஸ் எம்.பி பகிரங்க குற்றச்சாட்டு
Posted in இலங்கை செய்திகள்

முல்லைத்தீவில் இருந்து கிளிநொச்சிக்கு தண்ணீர் கொடுக்க முடியாது பிரதேசவாதமாக செயற்படும் சாள்ஸ் எம்.பி பகிரங்க குற்றச்சாட்டு

முல்லைத்தீவில் இருந்து கிளிநொச்சிக்கு தண்ணீர் கொடுக்க முடியாது பிரதேசவாதமாக செயற்படும் சாள்ஸ் எம்.பி பகிரங்க குற்றச்சாட்டு

முல்லைத்தீவில் இருந்து கிளிநொச்சி மக்களுக்கு தண்ணீர் வழங்க கூடாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் பிரதேச வாதமாக செயற்படுவதாக குற்றம் சாட்டப்பட்டப்பட்டுள்ளது.

குறித்த குற்றச்சாட்டை வன்னி மாவட்ட ஈபிடிபி நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் முன்வைத்துள்ளார்.

முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் எல்லையோரமாகவுள்ள புளிக்குளம் நீண்டகாலமாக புனரமைக்கப்படாத நிலையில் காணப்பட்டது.

முல்லைத்தீவில் இருந்து கிளிநொச்சிக்கு தண்ணீர் கொடுக்க முடியாது பிரதேசவாதமாக செயற்படும் சாள்ஸ் எம்.பி பகிரங்க குற்றச்சாட்டு

கிளிநொச்சி மாவட்டத்தின் அறிவியல் நகர் மற்றும் பொன்நகர் மக்களின் நீர்தேவையை பூர்த்தி செய்யும் வகையில் குறித்த குளத்தை புனரமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு அதற்கான செயற்பாடுகளும் ஆரம்பமாகியுள்ளது.

தற்போது, குறித்த குளத்து நீரை கிளிநொச்சி மக்களுக்கு வழங்கக் கூடாது எனவும் அந்நீரை முல்லைத்தீவு மாவட்டத்திற்கே வழக்க வேண்டும் எனவும் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் குழப்பம் விளைவித்துள்ளார்.

குறித்த குளத்தை புனரமைத்து நீர் விநியோகிப்பதற்கான அனுமதிகள் அனைத்தும் பெற்று வேலைகள் ஆரம்பிக்கும் வரை அமைதியாக இருந்து விட்டு, தற்போது பிரதேச வாதம் பேசி செயற்படுவதை ஏற்க முடியாது.

முல்லைத்தீவு மாவட்டத்தைப் போன்று கிளிநொச்சி மாவட்டத்திலும் தமிழ் மக்கள் தான் வாழ்கிறார்கள் எனபதை தேசியம் பேசி பிரதேச வாதத்துடன்

செயற்படும் சாள்ஸ் எம்.பி புரிந்து கொள்ள வேண்டும் எனவும், கிளிநொச்சி மாவட்டத்தின் அறிவியல் நகர் மற்றும் பொன்னகர் மக்கள் நீர் பற்றாக்குறை காரணமாக பல்வேறு இடர்பாடுகளை சந்தித்துள்ளனர்.

அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த மாவட்டத்தின் எல்லையோர குளமான குறித்த புளிக்குளத்தை புனரமைத்து அதில் இருந்து அந்த மக்களுக்கு நீர் கொடுப்பதில் என்ன தவறு இருக்கின்றது என்பதை சாள்ஸ் எம்.பி தெளிவுபடுத்த வேண்டும் எனவும் திலீபன் எம்.பி கோரியுள்ளார்.

குறித்த குளத்தின் கீழ் முல்லைத்தீவில் வயல் நிலங்கள் இல்லை என்பதுடன் இவ் நீரை முல்லைத்தீவு மக்கள் பயன்படுத்தக்கூடிய ஏது நிலையும் இல்லை.

இதனால் வீணாக போகும் நீரை கிளிநொச்சி மக்கள் பயன்படுத்துவதில் என்ன பிரச்சனை இருக்கின்றது.

அதை விடுத்து இனவாதம், பிரதேசவாதம் பேசி தமிழ் மக்களை கூறுபோட்டு சுயநல அரசியல் லாபங்களுக்காக செயற்பட்டு அபிவிருத்தியை குழப்பக் கூடாது எனவும் திலீபன் எம்.பி தெரிவித்துள்ளார்.

No posts found.
சூடான் துணை படை வசம் வீழ்ந்த காட்டும் மியூசியம்
Posted in உலக செய்திகள்

சூடான் துணை படை வசம் வீழ்ந்த காட்டும் மியூசியம்

சூடான் துணை படை வசம் வீழ்ந்த காட்டும் மியூசியம்

சூடானில் அரச இராணுவத்தினருக்கும் ,துணை படைகளிற்கும் இடையில்,
கடும் மோதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

இவ்வாறான மோதல்களின் உச்சம் காரணமாக தற்போது ,
துணை படைகள் வசம் காற்றும் பகுதி மியூசியம் வீழ்ந்துள்ளதாக அறிவிக்க பட்டுள்ளது .

நாற்பது நாட்களை கடந்து ,தொடர்ந்து அரசு மற்றும்துணை ,
படைகளிற்கு இடையில் கடும் யுத்தம் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .

சூடான் துணை படை வசம் வீழ்ந்த காட்டும் மியூசியம்

இந்த துணைப்படைகளிற்கு ரஷ்யா வாடகை இராணுவமான,
வாக்னர் குழு ஏவுகணைகள் ,டங்கிகள் ,மற்றும் பெருமளவு
ஆயுதங்களை வழங்கி வருகிறது .

இவ்களின் ஆயுதங்கள் மூலம் சூடான் அரச இராணுவத்தை கடுமையாக ,
தாக்கிய வண்ணம் ,முழு நாட்டையும் தமது கட்டுப் பாட்டுக்குள் ,
கொண்டு வரும் நடவடிக்கையில் ,சூடான் துணை படைகள் ஈடுபட்ட வண்ணம் உள்ளன .

45 டேங்கரில் எண்ணெய் திருடி சென்ற அமெரிக்கா
Posted in உலக செய்திகள்

45 டேங்கரில் எண்ணெய் திருடி சென்ற அமெரிக்கா

45 டேங்கரில் எண்ணெய் திருடி சென்ற அமெரிக்கா

சிரியா பகுதியில் அத்துமீறி ஆக்கிரமித்து ,
நிலை கொண்டுள்ள அமெரிக்கா அங்கிருந்து ,
சிரியாவின் எண்ணெயை கொள்ளையடித்து சென்ற வண்ணம் உள்ளது .

45 டேங்கரில் இந்த எண்ணெய் திருட்டு இடம்பெற்றுள்ளது ,
பயங்கரவாதம் என்ற போர்வையில் மத்திய கிழக்கு நாடுகளை ,
ஆக்கிரமித்த அமெரிக்கா ,அதன் நேச நாட்டு கூட்டு படைகள் ,
அந்த மண்ணில் உள்ள இயற்கையை வளங்களை கொள்ளையடித்து,
சென்ற வண்ணம் உள்ளது .

45 டேங்கரில் எண்ணெய் திருடி சென்ற அமெரிக்கா

வடக்கு ஈராக் ,கசாக்கா எல்லை வழியாக எண்ணெய் கடத்தி செல்ல டுகிறது .
இவ்வாறான அமெரிக்கா இராணுவ ரோந்து அணிகளை இலக்கு வைத்தே ,
ஈரான் ஆதரவு போராளி குழுக்கள், தொடராக தாக்குதல்களை நடத்தி வருகின்றனர் .

அவ்வாறான நெருக்கடியான தாக்குதல்கள் அமெரிக்கா,
படைகளுக்கு ஏற்படுத்த பட்ட பொழுதும் ,மத்திய கிழக்கில் இருந்து, விலக மறுத்து ,தனது கொள்ளையில் ஈடுபட்ட வண்ணம் உள்ளதாக ,பாதிக்க பட்ட ,
நாட்டு மக்கள் தெரிவிக்கின்றனர் .

Posted in இலங்கை செய்திகள்

ஐ.நா பொதுச் சபையின் முக்கிய பதவியை ஏற்றுக்கொள்ளும் இலங்கை.!!

ஐ.நா பொதுச் சபையின் முக்கிய பதவியை ஏற்றுக்கொள்ளும் இலங்கை.!!

ஐ.நா பொதுச் சபையின் 78வது கூட்டத் தொடரின் துணைத் தலைவர்களாக ஆசிய-பசிபிக் பிராந்தியத்தைச் சேர்ந்த ஈரான், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

அதன்படி 2023 செப்டெம்பர் முதல் 2024 செப்டெம்பர் வரை ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் சார்பாக இலங்கை முக்கியமான பதவியை ஏற்றுக்கொள்கின்றது.

இதன்போது ஆபிரிக்கா சார்பாக காங்கோ, காம்பியா, மொராக்கோ, செனகல், உகாண்டா, சாம்பியாவும் ஆசியா பசிபிக் நாடுகளுக்கு ஈரான், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, உஸ்பெகிஸ்தானும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

ஐ.நா பொதுச் சபையின் முக்கிய பதவியை ஏற்றுக்கொள்ளும் இலங்கை.!!

கிழக்கு ஐரோப்பியாவிற்கு எஸ்டோனியாவும், லத்தீன் அமெரிக்க மற்றும் கரீபியன் தீவுகளுக்கு பொலிவியாவின் ப்ளூரினேஷனல் ஸ்டேட், சுரினாம் போன்ற நாடுகளும் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

ஐ.ந. பொதுச் சபையின் 78வது அமர்விற்கு துணைத் தலைவர்களாக மேற்கு ஐரோப்பிய மற்றும் பிற மாநிலங்களுக்கு ஐஸ்லாந்து, நெதர்லாந்தும் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

மேலும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட துணைத் தலைமை நாடுகள், ஐ.நா.பாதுகாப்பு சபையின் வீட்டோ அதிகாரம் கொண்ட ஐந்து நிரந்தர உறுப்பு சீனா, பிரான்ஸ், ரஷ்யா, பிரித்தானியா மற்றும் அமெரிக்காவுடன் இணைந்து செயற்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No posts found.
2024 ஜனாதிபதி தேர்தல்
Posted in இலங்கை செய்திகள்

2024 ஜனாதிபதி தேர்தல்

2024 ஜனாதிபதி தேர்தல்

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை நடாத்துவதற்கான
ஏற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக அரசாங்க
தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதற்கான முதல் கட்ட சந்திப்பு பல்வேறு தரப்பினருடன் ஜனாதிபதி
செயலகத்தில் கடந்த. திங்கட்கிழமை இடம்பெற்றது.

No posts found.
Posted in இலங்கை செய்திகள்

துப்பாக்கிகள் மாயம் தேடும் அரசு சிக்கிய கோட்டா

துப்பாக்கிகள் மாயம் தேடும் அரசு சிக்கிய கோட்டா

பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கும் ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவனம் எவன்கார்ட் நிறுவனத்திற்கு ஒப்படைத்திருந்த 103 தானியங்கி மற்றும் அரை

தானியங்கி துப்பாக்கிகள் மற்றும் 28,789 தோட்டாக்களுடன் தொடர்புடைய ஒப்பந்தங்கள் முடிவடைந்ததன் பின்னர் மீண்டும் கையகப்படுத்தப்படவில்லை என தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.

2011 ஆம் ஆண்டு கப்பல் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட துப்பாக்கிகளில் இதுவரை வழங்கப்படாத 04 தானியங்கி துப்பாக்கிகள் மற்றும் 03 அரை தானியங்கி துப்பாக்கிகள் உட்பட 13 துப்பாக்கிகள் காணாமல் போயுள்ளதாக கணக்காய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிகள் மாயம் தேடும் அரசு சிக்கிய கோட்டா

ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவனத்துக்கும் எவன்கார்ட் மெரிடைம் சர்வீஸ் தனியார் நிறுவனத்துக்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தம் 2019 ஜனவரி 24ஆம் திகதி காலாவதியாகியுள்ளதால் ஆயுதங்கள் மீள ஒப்படைக்கப்பட வேண்டுமென கணக்காய்வு அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, ரங்கல மற்றும் காலி மிதக்கும் ஆயுதக் களஞ்சியங்களில் இருந்து வரவேண்டிய சுமார் 80 கோடி ரூபா 07 வருடங்களுக்கு மேலாக அறவிடப்படவில்லை எனவும் கணக்காய்வு அறிக்கை தெரிவிக்கின்றது.

ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவனம், உள்நாட்டு மற்றும் கடல்சார் பாதுகாப்பு சேவைகளை வழங்குவதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை முறையான

முகாமைத்துவம் மற்றும் கட்டுப்படுத்த, பொருத்தமான உள்ளக கட்டுப்பாட்டு அமைப்புகளை ஏற்படுத்துதல் ஆகியவற்றில் நிர்வாகத்தின் கவனம் செலுத்தப்படவில்லை என கணக்காய்வு திணைக்களங்களுக்கு தெரியவந்துள்ளது.

Posted in இலங்கை செய்திகள்

மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட இலங்கையர்கள்.. ஆய்வொன்றில் வெளியான அதிர்ச்சியூட்டும் தகவல்.!!

மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட இலங்கையர்கள்.. ஆய்வொன்றில் வெளியான அதிர்ச்சியூட்டும் தகவல்.!!

இலங்கையில் 10-24 வயதுடையவர்களில், 39 வீதமானோர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வு ஒன்றில் அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது.

ஜெர்மனியில் உள்ள சமூக மனநலம் மற்றும் மனநோய் தொற்றுநோய்களின் மதிப்புமிக்க இதழில் வெளியிடப்பட்ட ஆய்வு முடிவின்படி, நாட்டிற்குள் உள்ள மனநலப் பிரச்சினையின் அளவை எடுத்துக்காட்டும் ஆபத்தான புள்ளிவிபரங்களும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

பேராதனைப் பல்கலைக்கழகம் மற்றும் களனிப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த குழு ஒன்று 20 வருட காலப்பகுதியில் 52,000 இலங்கையர்கள் உட்பட 33 ஆய்வுகளை மதிப்பீடு செய்து இந்த விபரங்களை வெளியிட்டுள்ளது.

No posts found.
Posted in இலங்கை செய்திகள்

உக்கிரேன் முன்னரங்க நிலைகள் மீது தாக்குதல் – முன்னேறும் ரசியா இராணுவம்

உக்கிரேன் முன்னரங்க நிலைகள் மீது தாக்குதல் – முன்னேறும் ரசியா இராணுவம்

உக்கிரேன் முன்னரங்க நிலைகள் மீது தாக்குதல் – முன்னேறும் ரசியா இராணுவம்உக்கிரேன் கிழக்கு Kupiansk பகுதிகள் முன்னரங்க நிலைகள் மீது ,ரசியா
இராணுவத்தினர் மீளவும் ,தாக்குதல்களை தொடுத்துள்ளனர் .இழந்த பகுதிகளை மீளவும் ஆக்கிரமிக்கும் நோக்குடன் ,ரசியா இராணுவம் தாக்குதல்களை தீவிர படுத்தியுள்ளது .உக்கிரேன் கிழக்கு பகுதிகள் நிலைகள் மீது ரசியா
இராணுவத்தின் குண்டுகள் வீழ்ந்து வெடித்தது பலத்த சேதங்களை ஏற்படுத்தியுள்ளது .இந்த அகோர வெடிகுண்டு ஏவுகணை தாக்குதல்கள் ,மீளவும் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
பத்து லட்சம் மக்களை மீளவும் போரில் ஈடுபடுத்தி ,உக்கிரேனை
ஆக்கிரமிக்க முனையும் ,ரசியாவின் திட்டம் ,உக்கிரேன் மக்கள் மத்தியில் மீளவும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது .

கவிழ்ந்த வான் தப்பிய மக்கள் காட்சிகள் உள்ளே
Posted in இலங்கை செய்திகள்

கவிழ்ந்த வான் தப்பிய மக்கள் காட்சிகள் உள்ளே

கவிழ்ந்த வான் தப்பிய மக்கள் காட்சிகள் உள்ளே

கொழும்பில் இருந்து நுவரெலியாவை நோக்கி பயணித்த வானொன்று, கொழும்பு- ஹட்டன் பிரதான வீதியில் செனன் பிரதேசத்தில் வைத்து வீதியிலேயே விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

எனினும், அதில் பயணித்த ஐவரும் எவ்விதமான பாதிப்புகளும் இன்றி தப்பியுள்ளனர்.

இவ்வனர்த்தம் இன்று (25) மாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

அந்த வானில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்க​ளே பயணித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிக வேகத்தில் பயணித்த போது, சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கத்தால், வாகனத்தை கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரமுடியாமல் போயுள்ளது என்பது

விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது எனத் தெரிவித்த ஹட்டன் பொலிஸார், சம்பவத்தில் யாருக்கும் எவ்விதமான காயங்களும்

ஏற்படவில்லை எனினும், வாகனத்துக்கு கடுமையான சேதம் ஏற்பட்டள்ளது என்றனர்.

கவிழ்ந்த வான் தப்பிய மக்கள் காட்சிகள் உள்ளே