Tag: இந்தியாவில் 3.43 லட்சம்
இந்தியாவில் 3.43 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு- இதுவரை 9900 பேர் மரணம்
இந்தியாவில் 3.43 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு- இதுவரை 9900 பேர் மரணம்
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3.43 லட்சமாக உயர்ந்துள்ள நிலையில், இதுவரை கொரோனாவுக்கு 9900 பேர் பலியாகி உள்ளனர்.
இந்தியாவில் 3.43 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு- இதுவரை 9900 பேர் மரணம்
கொரோனா பரிசோதனை
புதுடெல்லி:
இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, பொதுவெளியில் மக்கள் நடமாட்டம் அதிகரித்திருப்பதாலும், பரிசோதனைகளை
அதிகரிப்பதாலும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்கிறது. அதேசமயம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவது ஆறுதல் அளிப்பதாக உள்ளது.
இந்நிலையில், இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் மொத்தம் 343091 பேர் கொரோனாவால்
பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 10667 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 380 பேர் மரணம்
அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9900 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா சிறப்பு வார்டு
இதுவரை 180013 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 10215 பேர் டிஸ்சார்ஜ்
செய்யப்பட்டுள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 153178 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 110744 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 46504 பேருக்கும், டெல்லியில்
42829 பேருக்கும், குஜராத்தில் 24055 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.






