பொலிஸ் அதிகாரியாக நடித்த வாலிபர் சிக்கினார்
பொலிஸ் அதிகாரியாக தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள முயற்சித்த இளைஞன் ஒருவன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளான்.
நேற்று (15) பம்பலப்பிடிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொலிஸ் களப்படை தலைமையகத்தில் அமைந்துள்ள சர்வதேச பொலிஸ் சங்கத்திற்கு குறித்த சந்தேகநபர் வருகை தந்துள்ளார்.
பின்னர் சர்வதேச பொலிஸ் அடையாள அட்டை ஒன்றை பெற்றுக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் தான் பணியாற்றுவதாக அவர் இதன்போது தெரிவித்துள்ள நிலையில், சர்வதேச பொலிஸ்
சங்கத்தின் அதிகாரிகளுக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து நாரஹேன்பிட பொலிஸாருக்கு அறிவித்த பின்னர் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 23 வயதுடைய கொழும்பு 12 பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகநபர் இன்று (16) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ள நிலையில் நாரஹேன்பிட
பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.






