என்னிடம் சொன்னதை செய்யாமலேயே போயிட்டியே சுஷாந்த்…. சானியா மிர்சா உருக்கம்
பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புட் மறைவிற்கு டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா சமூக வலைதளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
என்னிடம் சொன்னதை செய்யாமலேயே போயிட்டியே சுஷாந்த்…. சானியா மிர்சா உருக்கம்
சானியா மிர்சா, சுஷாந்த் சிங்
பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புட், மும்பையில் உள்ள தனது வீட்டில் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரின் மறைவு திரையுலகினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி
உள்ளது. சுஷாந்த் சிங் மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. 34 வயதாகும் சுஷாந்தின் திடீர்
மறைவுக்கு பிரபலங்கள் பலரும் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் வாயிலாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, சுஷாந்த் குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “சுஷாந்த் மனம்
உடைந்துவிட்டது. ஒரு நாள் நீயும் நானும் சேர்ந்து டென்னிஸ் விளையாடலாம் என கூறினாய். எப்போதும் சிரிப்புடன் இருக்கும்
நபர் நீ. செல்லும் இடமெல்லாம் அனைவருக்கும் சந்தோசத்தை பரப்பினாய். ஆனால் நீ இவ்வளவு வலியுடன் இருந்தாய் என்பது
எங்களுக்கு தெரியாமல் போய்விட்டது. இந்த உலகம் உன்னை நிச்சயம் மிஸ் பண்ணும் என் நண்பரே.” என உருக்கமாக பதிவிட்டுள்ளார்






