Author: நலன் விரும்பி
நில நடுக்கத்தில் சிக்கி 13 பேர் பலி – இருபது வீடுகள் அழிவு
நில நடுக்கத்தில் சிக்கி 13 பேர் பலி – இருபது வீடுகள் அழிவு
இன்று Ivory Coast நாட்டில் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இருபது வீடுகள் முற்றாக அழிந்தன
இவ்வேளை அந்த வீடுகளுக்குள் வசித்த சுமார் 13 பேர் பலியாகினர் ,மேலும்
டசின் கணக்கானோர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்
பாதிக்க பட்ட பகுதியில் தொடர்ந்து மீட்பது பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

பிரிட்டனில் வெடி குண்டுகள் மீட்பு – மக்கள் அவசர வெளியேற்றம்
பிரிட்டனில் வெடி குண்டுகள் மீட்பு – மக்கள் அவசர வெளியேற்றம்
பிரிட்டனில் இன்று Haywood Avenue, south Belfast பகுதியில்
இரண்டாம் உலக போரின் பொழுது பயன் படுத்த பட்ட கைகுண்டுகள் இரண்டு கண்டு பிடிக்க பட்டது
இதனை அடுத்து குறித்த வீடுகளுக்கு அருகில் உள்ள மக்கள் அவசரமாக வெளியேற்ற பட்டனர்
இதனை அடுத்து அங்கு பெரும் பதட்டம் ஏற்பட்டது ,குண்டு செயல் இழக்க வைக்கும் பிரிவினர் வரவழைக்க பட்டு குண்டு மீட்க பட்டது

பிரிட்டனில் கொரனோவில் சிக்கி 13 நாள் சிசு பலி
பிரிட்டனில் கொரனோவில் சிக்கி 13 நாள் சிசு பலி
பிரிட்டனில் பரவி வரும் கொரனோ வைரஸ் நோயின் தாக்குதலில் சிக்கி பதின் மூன்று நாள் சிசு ஒன்று பலியாகியுள்ளது
கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் 135 பேர் இந்த நோயில் சிக்கி பலியாகியுள்ளனர்
மேலும் இதுவரை பிரிட்டனில் இடம்பெற்ற பலி எண்ணிக்கை சுமார் 42,288 ஆக உயர்வடைந்துள்ளது
இதுவரை மூன்று லட்சம் மக்கள் இந்த நோயின் தாக்குதலுக்கு சிக்கி சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிட தக்கது
கடலில் வீழ்ந்த அமெரிக்கா விமானம் – பரசூட்டில் தப்பிய விமானிகள்
கடலில் வீழ்ந்த அமெரிக்கா விமானம் – பரசூட்டில் தப்பிய விமானிகள்
அமெரிக்கா இராணுவத்தின் விமானம் ஒன்று பிலிப்பைன்ஸ் கடல்
,படை ,கப்பலில் தரித்து பறப்பில் ஈடுபட்ட பொழுது விபத்தில் சிக்கியது
இதன் பொழுது இரு விமானிகளும் பாராசூட் மூலம் கடலில் குதித்தனர்
இவர்களை உலங்கு வானூர்தி விரைந்து சென்று காப்பாற்றியது
இந்த விபத்து தொடர்பான விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

பிள்ளை பெற்ற 14 வயது சிறுமி – தந்தையால் நடந்த கொடூரம்,
பிள்ளை பெற்ற 14 வயது சிறுமி – தந்தையால் நடந்த கொடூரம்,
இலங்கை காம்பாக பகுதியில் இளம் 14 வயது சிறுமி ஒருத்தி வளர்ப்பு தந்தை ஒருவரால்
பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த பட்ட நிலையில் கர்ப்பமடைந்தார் .
தாயின் இரண்டாவது கணவனால் இவர் கற்பழிக்க பட்ட நிலையில்தற்போது சிறுமி கம்பகாவில் குழந்தையை பெற்று எடுத்துள்ளார்
இது தொடர்பான நிதி விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உளள்து ,நாடு போரை போக்கை பாரு செல்ல கண்ணு
நாட்டில் 90 வீதமான கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளன-அரசாங்க அதிபர்
நாட்டில் 90 வீதமான கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளன-அரசாங்க அதிபர்
திருகோணமலை மாவட்டத்தில் எஞ்சியுள்ள நிலப்பரப்பில் கண்ணிவெடிகளை அகற்றுவது தொடர்பான கலந்துரையாடல்
இன்று மாவட்ட செயலகத்தில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி)எம்.ஏ.அனஸ் தலைமையில் நடைபெற்றது.
சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமைச்சின்
செயலாளர் டி.பி.ஜி.குமாரசிரி கருத்து தெரிவிக்கவயில் நாட்டில் 90 வீதமான பிரதேசங்களில் கண்ணிவெடி அகற்றப்பட்டுள்ளன. இன்னும் சி பகுதியிவுள்ள கண்ணிவெடிகள அகற்ற வேண்டும்.
திருகோணமலை மாவட்டத்தை பொறுத்தவரை மொத்தமாக 119.87 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பில் கண்ணிவெடிகளை
அகற்றவேண்டிய நிலை முன்னர் காணப்பட்டது. இதில் 119.13 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பில் இவை அகற்றப்பட்டுள்ளன.
அதன்படி இன்னும் 0.74 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பு மாத்திரமே கண்ணி வெடிகள் அகற்றப்பட வேண்டியுள்ளது.
எஞ்சியுள்ள பகுதியில் உள்ள கண்ணிவெடிகளை அகற்றும் பணி மக் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் அகற்ற
வேண்டிய நிலப்பரப்பின் உடமை யாருக்குறியது அகற்ற முன்னர் அப்பகுதியில் தொல்பொருளியல் சான்றுகள் உள்ள பிரதேசமா?
உள்ளிட்ட பல விடயங்களை துறைசார் திணைக்களங்களின் ஒருங்கிணைப்போடு ஆராய்ந்து தீர்க்கமான முடிவுக்கு வருவதுடன்
அது தொடர்பில் உரிய மாவட்ட அரசாங்க அதிபருக்கு அறிக்கையிடல் வேண்டும்.
அத்துடன் பிரதேச காணி பயன்பாட்டுக்கூட்டத்தில் இவ்விடயங்களை ஆராய்வதுடன் தீர்வு காண முடியாத விடயங்களை மாவட்ட மட்ட கூட்டத்திற்கு கொண்டு வரல்
வேண்டும். குறிப்பாக பிரதேச செயலாளர்கள் தமது பிரதேசங்களில் கண்ணிவெடிகள் அகற்றப்பட வேண்டிய இடம் தொடர்பில் பூரண விபரங்களை அறிந்து கொள்வதுடன் குறித்த கிராம
உத்தியோகத்தரும் இதனை தெரிந்திருத்தல் இன்றியமையாயதது.
தொல்பொருளியல் சார் இடங்கள் காணப்படுமாயின் அதனது வரலாற்று முக்கியத்துவத்தினை உணர்ந்து உரிய தரப்பிற்கு
அதனை அறிவித்து அவற்றை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு இன்றியமையாயதது. எனவே அகற்ற வேண்டிய பிரதேசம்
எந்நிறுவனத்திற்குரியது என்பதனை உரிய துறைசார் நிறுவனங்களின் ஒத்துழைப்பை பெற்று அறிந்து கொண்டு
முறையான அனுமதி மற்றும் பொறிமுறைக்கேற்ப உரிய முறைப்படி வெடிகள் அகற்றப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் துசித பி வணிகசிங்க ,கிழக்கு மாகாண பிரதி பிரதம செயலாளர் (நிர்வாகம்)
எச்.ஈ.எம்.டபிள்யு.ஜி.திசாநாயக்க ,திருகோணமலை மாவட்ட உதவி அரசாங்க அதிபர் என்.பிரதீபன், பிரதேச
செயலாளர்கள்,திணைக்கள தலைவர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
கதிர்காம ஆலயத்தின் வருடாந்த எசல உற்சவம் எதிர்வரும் 21ஆம் திகதி ஆரம்பம்
கதிர்காம ஆலயத்தின் வருடாந்த எசல உற்சவம் எதிர்வரும் 21ஆம் திகதி ஆரம்பம்
கதிர்காம ஆலயத்தின் வருடாந்த எசல உற்சவம் எதிர்வரும் 21ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
இதற்கமைவாக அதற்கான அழைப்பிதழை சம்பிரதாயபூர்வமாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் ஆலயத்தின் பஸ்நாயக்க நிலமே தில்ருவன் ராஜபக்ஷ நேற்று கையளித்தார்..
இந்த நிகழ்வு நேற்றுக்காலை விஜேராமவிலுள்ள பிரதரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.
கதிர்காம ஆலயத்தின் வருடாந்த எசல உற்சவம் எதிர்வரும் 21ஆம் திகதி ஆரம்பமாகி ஆகஸ்ட் மாதம் 04 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
துருக்கியை ஐரோப்பிய கூட்டமைப்பில் இணைக்க முடியாது – பிரான்ஸ் அதிரடி அறிவிப்பு
துருக்கியை ஐரோப்பிய கூட்டமைப்பில் இணைக்க முடியாது – பிரான்ஸ் அதிரடி அறிவிப்பு
துருக்கிய நாட்டினை ஐரோப்பிய கூட்டமைப்பில் இணைத்து கொள்ள
முடியாதது என பிரான்ஸ் மீளவும் திட்டவட்டடமாகி அறிவித்துள்ளது
முஸ்லீம் நாடு ஒன்று ஐரோப்பிய கூட்டமைப்பில் இணைத்து கொள்ள முயன்றால் அது பெரும் பிளவுகளை ஏற்படுத்தும்
என்பதுடன் ஐரோப்பா முஸ்லீம் நாடாக மாற்றம் பெறுவதை தடுத்திட முடியாது என்ற கொள்கை வலுத்து வருகிறது
அதனால் இந்த கருத்தில் முக்கிய நாடுகள் உறுதியாக உள்ளன ,ஆனால்
துருக்கி இணைந்தால் ஐரோப்பா வர்த்தக ரீதியில் பலம் பெரும் என்ற கோரிக்கை பிரகடன முன் வைக்க படுகிறது ,
துருக்கி இணையவுள்ளது என்கின்ற காரணத்தால் பிரிட்டன் ஐரோப்பாவில்
இருந்து பிரிந்து செல்ல முக்கிய காரணமாக அமைந்தமை இங்கே குறிப்பிடலாம்
கொரோனா வைரஸை கட்டுப்படுத்த இலங்கை மேற்கொண்ட முயற்சிகள்
கொரோனா வைரஸை கட்டுப்படுத்த இலங்கை மேற்கொண்ட முயற்சிகள்
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கான தேசிய நடவடிக்கைகள் நிலையத்தின் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தலைமையில்இ முப்படை மற்றும் சுகாதாரத்
துறை அதிகாரிகள் ஆகியோரினால் நாட்டில் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக
வெளிநாட்டு இராஜதந்திர அதிகாரிகளுக்கு விளக்கமளிக்கும் கலந்துரையாடல் ஒன்று நேற்று முன்தினம் (ஜூன் 15) இடம்பெற்றது.
நாட்டில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் போது தாம் எதிர்கொண்ட கட்டுப்படுத்தும் முறைகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், தனிமைப்படுத்தல்
நடைமுறைகள் மற்றும் தனிமைப்படுத்தல் நிலையங்களின் செயற்பாடுகள், முப்படை மருத்துவர்களின் பங்கு, வைரஸ்
தொற்றுக்குள்ளான வெளிநாட்டவர் மற்றும் வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்கள் மற்றும் எதிர்கால சவால்கள் உள்ளிட்ட தேசிய பணிகள் தொடர்பான பல்வேறு விடயங்களை
இலங்கையிலுள்ள எட்டு வெளிநாட்டு பணியகங்களின் பாதுகாப்பு ஆலோசகர்கள் குழுவினருக்கு அதன் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெளிவுபடுத்தினார்.
இதன்போது, இக்கொடிய நோய் பரவலை கட்டுப்படுத்துவதற்காக இலங்கைக்கு உதவிகள் மற்றும் ஒத்துழைப்புக்கள் வழங்கிய அனைத்து சர்வதேச நாடுகளுக்கும் தமது நன்றியை தெரிவத்தார்.
இக்கலந்துரையாடலில், இலங்கைக்கான பங்களாதேஷ் உயர் ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் சிஎம்டிஈ செயத் எம்
ஹாகிம், இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர், கெப்டன் அசோக் ராவ், இந்திய உயர் ஸ்தானிகராலய உதவி பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் கேணல் ஆர்.எஸ்.
மிஸ்ரா, ஜப்பான் தூதரக பாதுகாப்பு ஆலோசகர் கெப்டன் காகு புகாஉரா, மாலத்தீவு உயர் ஸ்தானிகராலய ஆலோசகர்
லெப்டினன்ட் கேணல் இஸ்மாயில் நசீர், பாகிஸ்தான் பாதுகாப்பு உயர் ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் கேணல் சஜ்ஜாத் அலி, ரஷ்ய தூதரக இராணுவ, விமானப்படை மற்றும் கடற்படை ஆகிய
கூட்டுப்படைகளுக்கான பாதுகாப்பு ஆலோசகர் கேணல் டெனிஸ் ஐ ஷ்கோடா, பாதுகாப்பு மற்றும் அமெரிக்க தூதரக இராணுவ
இணைப்பு பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் கேணல் டிராவிஸ் ரே கொக்ஸ், சீன மக்கள் குடியரசின் தூதரக இராணுவ இணைப்பு
பாதுகாப்பு ஆலோசகர் (பி.ஆர்.சி) சிரேஷ்ட கேணல் வான் டோங் மற்றும் சீன மக்கள் குடியரசின் தூதரக இராணுவ இணைப்பு
பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட். கேணல் சாங் கியான்ஜின் ஆகியி வெளிநாட்டு இராஜதந்திரிகள் கலந்துகொண்டனர்.
மகனை காட்டி கொடுத்த தாய் – கைது செய்த பொலிஸ்
மகனை காட்டி கொடுத்த தாய் – கைது செய்த பொலிஸ்
வீதியில் சென்றவர்களின் கைப்பேசிகளை பட்டப்பகலில் பறித்து சென்ற இரு இளைஞர்களை எதிர்வரும் ஜுலை மாதம் 1 ஆம் திகதி
வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த மே மாதம் 15 ஆம் திகதியன்று சம்மாந்துறை பொலிஸ் எல்லைக்குட்பட்ட காரைதீவு மற்றும் நிந்தவூர் பகுதியில்
பட்டப்பகலில் வீதியில் தனியாக சென்றவர்களின் பெறுமதியான கைப்பேசிகள் மோட்டார் சைக்கிளில் வந்தவர்களால் பறித்து செல்லப்பட்டதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்து.
அதற்கமைய சுமார் ஒரு மாத காலமாக சம்மாந்துறை பொலிஸ் நிலைய குற்றப்புலனாய்வு அதிகாரிகள் உள்ளிட்ட விசேட பொலிஸ்
குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் காரணமாக சம்பவம் தொடர்பில் 2 சந்தேகநபர்கள் நேற்று (17) கைதாகினர்.
குறித்த கொள்ளையர்கள் கைப்பேசிகளை பறித்து செல்வதற்காக பயன்படுத்திய மோட்டார் சைக்கிளின் இலக்கத்தகட்டினை சிசிடிவி
காணொளி காட்சியினை அடிப்படையாக கொண்டு இனங்கண்ட பொலிஸார் பாலமுனை பகுதியை சேர்ந்த 20 மற்றும் 22 வயதுடைய உறவு முறை சகோதரர்களை தாயின் உதவியுடன் கைது செய்தனர்.
குறித்த கைது நடவடிக்கைக்கு பொலிஸாருக்கு கைதான சந்தேக நபரின் தாய் ஒருவர் ஒத்துழைப்பு வழங்கியதுடன்
கொள்ளையடிக்கப்பட்ட கைப்பேசிகளும் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
1000 ரூபாய் சம்பளம் தொடர்பான பேச்சுவார்த்தை 25 ஆம் திகதி
1000 ரூபாய் சம்பளம் தொடர்பான பேச்சுவார்த்தை 25 ஆம் திகதி
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக 1000 ரூபா வழங்குவது தொடர்பான பேச்சுவார்த்தை எதிர்வரும் 25 ஆம் திகதி
நடைபெறும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நிதிச்செயலாளரும் முன்னாள் மத்திய மாகாண அமைச்சரும்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற வேட்பாளருமாகிய மருதபாண்டி ரமேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அவர் இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில்,
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினர்களுக்கு இடையிலான கலந்துரையாடலொன்று அலரிமாளிகையில் (18) நடைபெற்றது.
பெருந்தோட்ட துறையின் முக்கியஸ்தர்கள், பெருந்தோட்ட அமைச்சர் ரமேஸ் பத்திரண, முன்னாள் அமைச்சர் மஹிந்தாநந்த
அளுத்கமகே மற்றும் இ.தொ.காவின் உப தலைவர் செந்தில் தொண்டமான், புதிய பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான்,
சிரேஷ்ட உறுப்பினரும் சட்டத்தரணியுமான இராஜதுரை, முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோர் இச்சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.
பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாட் சம்பளம் 1000 ரூபா வழங்குவது தொடர்பாக இடம்பெற்ற இப்பேச்சுவார்த்தையில் ஒரு சுமூகமான தீர்வு எட்டப்பட்டுள்ளது.
அடுத்தகட்ட பேச்சுவார்த்தை எதிர்வரும் 25 ம் திகதி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெறவுள்ளதாகவும்
அன்றையதினம் பெருந்தோட்ட தொழிலாளர்களின் 1000 ரூபா சம்பளம் தொடர்பான சாதகமான தீர்வு கிடைக்கும் என அவர் தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் 237 பேர் கைது
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் 237 பேர் கைது
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய விசாரணைகளை விரைவில் நிறைவு செய்ய எதிர்ப்பார்ப்பதாக பொலிஸ் ஊடக
பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
குறித்த விசாரணைகளுக்கு அமைய மேலும் சில சந்தேகநபர்கள் கைது செய்யப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
தற்போதைய நிலையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் 237 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக நேற்று
(17) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு தெரிவித்திருந்தார்.
பொலிஸ் ஊடக பேச்சாளருக்கு பதவியுயர்வு
பொலிஸ் ஊடக பேச்சாளருக்கு பதவியுயர்வு
பொலிஸ் மக்கள் தொடர்பு பிரிவு பணிப்பாளர் மற்றும் பொலிஸ் ஊடக பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான டபிள்யூ.ஜே.எம்
சேனாரத்ன சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் மற்றும் தேர்தல் ஆணைக்குழுவின் இணக்கத்துடன் இந்த பதவியுயர்வு வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, 2018-01-01 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் அவருக்கு இந்த பதவியுயர்வு வழங்கப்பட்டுள்ளது
எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் தபாலகங்கள் மூலம் விவசாய – கடற்றொழில் ஓய்வூதிய பயனாளிகளுக்கான ஓய்வூதியம்
எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் தபாலகங்கள் மூலம் விவசாய – கடற்றொழில் ஓய்வூதிய பயனாளிகளுக்கான ஓய்வூதியம்
2020 ஜுன் மாதத்திற்கான விவசாய மற்றும் கடற்றொழில் ஓய்வூதிய பயனாளிகளுக்கான ஓய்வூதியகொடுப்பனவு எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் தபாலகங்கள் மூலம் வழங்கப்படவுள்ளது.
இதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக கமத்தொழில் மற்றும் கமநல காப்புறுதிச் சபையிள் தலைவர் மகேந்திர ஹரிசந்திர தெரிவித்துளளார்
2020ஆம் ஆண்டு ஜுன் மாதத்திற்கான ஓய்வூதியத்தை பெற்றுக்கொள்ளவுள்ள அனைத்து விவசாய ஓய்வூதியத்தை பெறும் ஓய்வூதிய பயனாளிகள் மற்றும் கடற்றொழிலாளர்களில்
ஓய்வூதியத்தை பெறும் ஓய்வூதிய பயனாளிகளுக்கான ஓய்வூதியத்தை செலுத்தவதற்குத் தேவையான மானியத்தை இந்த ஜூன் மாதம் 22ஆம் திகதி தொடக்கம் நாட்டில் உள்ள அனைத்து
தபால் அலுவலகங்களுக்கும் வழங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக விவசாய மற்றும் கமநல காப்புறுதி
சபையின் தலைவர் சட்டத்தரணி பிரேமசந்திர யாப்பா விசேட ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.
இதற்கமைவாக விவசாய ஓய்வூதியம் மற்றும கடற்றொழில் ஓய்வூதியத்தை பெறும் ஓய்வூதியத்திற்கு உரித்தான அனைத்து
ஓய்வூதிய பயனாளிகளும் தமக்கு உரித்தான தபால் அலுவலகங்கள் மூலம் இந்த மாதம் 20ஆம் திகதியான திங்கட்கிழமை தொடக்கம் எந்தவித சிரமங்களுமின்றி சம்பந்தப்பட்ட ஓய்வூதியத்தை
பெற்றுக்கொள்ள முடியும் என்று பிரேமசந்திர யாப்பர் இந்த அறிக்கையின் மூலம் மேலும் தெரிவித்துள்ளார்.
சீனாவில் மீள வேகமாக பரவத்தொடங்கிய கொரோனா
சீனாவில் மீள வேகமாக பரவத்தொடங்கிய கொரோனா
பீஜிங்கில் கொரோனா வைரஸ் கொத்து கொத்தாக பரவத்தொடங்கிய நிலையில் அங்கு 90 ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று பரிசோதனை முழுவீச்சில் நடத்தப்பட்டு வருகிறது.
சீன தலைநகரில் கொத்து கொத்தாக பரவத்தொடங்கிய கொரோனா
கொரோனா வைரஸ் பரிசோதனை
சீன தலைநகர் பீஜிங்கில் கொரோனா எட்டிப் பார்க்கவில்லை. அது
பாதுகாக்கப்பட்ட நகரமாகவே, அரணாக அனைவருக்கும் தோன்றியது.
சீனாவின் உகான் நகரத்தில் தோன்றி, தலைநகர் பீஜிங் வரை அந்த நாட்டையே உலுக்கிய கொரோனா 5 மாத கால பேராட்டத்துக்கு பிறகு ஏப்ரல் மாதம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
அது சீன மக்களுக்கு நிம்மதியைத்தந்தது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு கொஞ்சம் கொஞ்சமாக திரும்பத்தொடங்கினர். அவர்களின் முகத்தில்
மகிழ்ச்சி தாண்டவமாட தொடங்கியது. பள்ளிகள் திறக்கப்பட்டு விடும் என மாணவர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் நிலவின.
ஆனால் பீஜிங் மக்களுக்கு மட்டுமல்லாது ஒட்டுமொத்த சீன மக்களுக்கும் ஏற்பட்டது நிரந்தர நிம்மதி அல்ல, இடைக்கால
நிம்மதிதான் என்று சொல்லத்தக்க விதத்தில் அங்கு மறுபடியும் கொரோனா பரவத்தொடங்கி உள்ளது.
தலைநகர் பீஜிங்கில் 56 நாட்களுக்கு பிறகு கடந்த 11-ந் தேதி முதன்முதலாக ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
அதைத்தொடர்ந்து அங்கு மீண்டும் கொரோனா ஆதிக்கம் செலுத்த தொடங்கி உள்ளது. தினமும் பலருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு
வருகிறது. இது கொரோனாவின் 2-வது அலை தாக்குதல் என்று நம்பப்படுகிறது.
கொரோனா வைரஸ் பரிசோதனை
இந்த நிலையில் நேற்று காலையுடன் முடிந்த 22 மணி நேரத்தில் பீஜிங்கில் மட்டும் 27 பேருக்கு கொரோனா கொத்து கொத்தாக பரவி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
உலகத்துக்கு கொரோனா வைரசை முதன்முதலில் அறிமுகம் செய்து வெளிப்படுத்தியது உகான் நகர கடல்வாழ் உயிரின மாமிச
சந்தை என்றால், இப்போது பீஜிங்குக்கு இரண்டாவது அலை வீச வழி வகுத்திருப்பது அங்குள்ள ஜின்பாடி மொத்த விற்பனை சந்தை.
கொரோனாவின் 2-வது அலையில் பீஜிங்கில் மட்டும் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 106 ஆக அதிரடியாக
உயர்ந்து இருக்கிறது. இந்த தகவலை பீஜிங் நகர செய்தி தொடர்பாளர் சூ ஹெஜியன் உறுதி செய்து இருக்கிறார்.
இதுபற்றி அவர் கூறுகையில், “பீஜிங்கில் கொரோனா தொற்று நோய் நிலைமை மிகவும் கடுமையாக இருக்கிறது. இது எங்கள்
அதிகபட்ச முன்னுரிமையாக அமைந்து விட்டது. நாங்கள் அங்கு அனைத்து கட்டுப்பாட்டு நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம்.
ஒவ்வொரு நிமிடமும் எங்கள் நடவடிக்கை தொடரும்” என்று கவலையுடன் குறிப்பிட்டார்.
பீஜிங்கில் கொரோனா வைரஸ் தொற்று கொத்து கொத்தாக பரவத்தொடங்கி இருப்பதையொட்டி, பாதிப்புக்குள்ளான
பகுதிகளில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. அது மடடுமல்ல அந்த நகரை சேர்ந்த 90 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை முழுவீச்சில் நடத்தப்பட்டு வருகிறது.
இதில் என்ன வேடிக்கை என்றால், சர்ச்சைக்குரிய ஜின்பாடி மொத்த சந்தைக்கு மே 30-ந் தேதியில் இருந்து 2 லட்சத்துக்கும் அதிகமான
மக்கள் சென்று வந்திருக்கிறார்கள். அவர்களில் எத்தனைபேருக்கு இப்போது தொற்று பரவி இருக்கிறதோ என்ற கவலை, பீஜிங் நகர நிர்வாகத்தை வாட்டி வதைக்கிறது.
அதனால்தான் அந்த சந்தையை சுற்றிலும் உள்ள குடியிருப்பு பகுதிகள் அத்தனையிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள்
போடப்பட்டுள்ளன. பீஜிங் நகரம் போர்க்கால நிலையில் வைக்கப்பப்டுள்ளதாக ஞாயிற்றுக்கிழமையன்று அந்த நகர அதிகாரிகள் தெரிவித்தது இங்கு நினைவுகூரத்தக்கது.
சீனாவில் நேற்று மொத்தம் 40 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், 32 பேருக்கு உள்ளூர் பரவல் என்றும் 8 பேருக்கு வெளியூர் மூலமான பரவல் என்றும் தகவல்கள் கூறுகின்றன.
ஹெபெய் மாகாணத்தில் 4 பேருக்கும், சிச்சுவான் மாகாணத்தில் ஒருவருக்கும் தொற்று பாதித்துள்ளது. 6 பேருக்கு எந்தவித
அறிகுறிகளும் இன்றி கொரோனா தாக்கி இருப்பது அங்கு சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையே ஒரே நாளில் 7 பேர் கொரோனாவில் இருந்து சிகிச்சைக்கு பின் மீண்டு வீடு திரும்பி உள்ளதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
சீனாவில் நேற்றைய நிலவரப்படி கொரோனா தொற்று பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 83 ஆயிரத்து 221 ஆகும்.
சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 4,634 ஆக பதிவாகி இருக்கிறது. சிகிச்சைக்கு பின்னர் குணம் அடைந்தோர் எண்ணிக்கை 78 ஆயிரத்து 377 ஆக உள்ளது.
பீஜிங் நிலவரம் பற்றி சீன நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் தலைமை தொற்று நோய் நிபுணர் வு ஜூன்யு பேட்டி ஒன்றில் கூறும்போது “ தற்போது நிலைமை மிகவும் மோசமாகி
இருக்கிறது. பீஜிங்கில் கொத்து கொத்தாக பரவத்தொடங்கி உள்ளது. எல்லாவற்றுக்கும் காரணம் ஜின்பாடி மொத்த விற்பனை
சந்தைதான். இது மிகப்பெரிய சவாலாக இப்போது உருவெடுத்துள்ளது. இது தொடர்பான விசாரணையையும் முடுக்கி விட்டுள்ளோம்” என கூறினார்.
சீனாவில் கொரோனாவின் 2-வது அலை தாக்கத்தொடங்கி இருப்பது அந்த நாட்டு மக்களுக்கு கவலையை ஏற்படுத்தி இருக்கிறது
என்றால் உலக நாடுகளுக்கு அது அதிர்ச்சியை தந்துள்ளது. கொரோனாவே, உனக்கு ஒரு முடிவு வராதா?
பூமியை தொடர்பு கொள்ள முயற்சிக்கும் 36 வேற்றுகிரக மனிதர்கள்
பூமியை தொடர்பு கொள்ள முயற்சிக்கும் 36 வேற்றுகிரக மனிதர்கள்
நமது விண்மீன் மண்டலத்தில் 36 அறிவார்ந்த வேற்றுகிரக சமூகங்கள்
நம் பூமியை தொடர்புகொள்ள முயற்சிக்கின்றன என ஆய்வு ஒன்றில் கூறப்பட்டு உள்ளது.
பூமியை தொடர்பு கொள்ள முயற்சிக்கும் 36 அறிவார்ந்த வேற்றுகிரக சமூகங்கள்
வேற்றுகிரகவாசி
வேற்றுகிரகவாசிகள் இருக்கிறார்களா? இருந்தால் அவர்கள் எப்படி இருப்பார்கள்? நம்மை போன்று இருப்பார்களா? அல்லது
சினிமாவில் காட்டப்படும் உருவங்களில் இருப்பார்களா? இது போன்ற எண்ணற்ற கேள்விகள் நம் மனதில் எழுவது உண்டு.
வேற்று கிரகவாசிகள் உள்ளார்களா என்ற கேள்விக்கு நமது விஞ்ஞானிகள் கிட்டத்தட்ட ஆம் என்றே பதிலளித்து உள்ளனர்.
வேற்று கிரகவாசிகள் நமக்கு அருகிலோ, வெகு தொலைவிலோ நம்மை போலவே ஒரு உயிர் வாழ்வதற்கான சாத்தியக்கூறும்
இருக்கிறது. ஆனால், அவர்கள் உணவு சாப்பிட்டு, தண்ணீர் குடித்து நம்மை போலவே இருப்பார்களா என்பது சந்தேகம். அவர்கள் வேறு
மாதிரியாக இருக்கவும் வாய்ப்பு உள்ளது. ஒருவேளை, அப்படி யாராவது எங்காவது இருந்தால் நம்மை கண்டுபிடிப்பதும் சிரமம்
அல்ல. அவர்களது இடத்தில் இருந்து பயணிக்க தொடங்கியிருந்தால் 500 ஆண்டுகளிலேயே நம்மை அடைந்திருக்கலாம்.
அதுபோன்ற சம்பவம் இதுவரை நடக்கவில்லை. அதனால், அனேகமாக அதுபோல யாரும் இல்லாமல் இருக்கலாம். அல்லது,
நம்மை கவனிக்காமல் அவர்கள் கடந்துபோயிருக்கலாம். அல்லது, எங்கும் பயணப்படாமல் அவர்கள் தங்கள் வேலையை மட்டும் பார்த்துக் கொண்டிருப்பவர்களாகக்கூட இருக்கலாம்.
36 நாகரிகங்கள் பூமியைத் தொடர்பு கொள்ள முயற்சிக்கக்கூடும் என்று ஏலியன் ஆய்வு வெளிப்படுத்துகிறது – ஆனால் நாம் தயாராக இல்லை.
நமது விண்மீன் மண்டலத்தில் தகவல் தொடர்பில் 36 அறிவார்ந்த வேற்றுகிரக சமூகங்கள் இருக்கலாம் என்று ஆய்வு ஒன்று கூறுகிறது.
வேற்றுகிரகவாசிகள் உலகம் முழுவதும் தகவல் தொடர்பு சமிக்ஞைகளை அனுப்பக்கூடும் என்று தெரிய வந்துள்ளது.
நாட்டிங்ஹாம் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி, நமது சொந்த பரிணாம வளர்ச்சியின் அடிப்படையில், மற்ற கிரகங்களில்
புத்திசாலித்தனமான வாழ்க்கை உருவாக எவ்வளவு சாத்தியம் என்பதை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட ஆய்வின்படி,
சமிக்ஞைகளை ஒளிபரப்பக்கூடிய புத்திசாலித்தனமான வாழ்க்கை ஒருவருக்கொருவர் சராசரியாக 17,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் உருவாகும் என கண்டறியப்பட்டு உள்ளது.
பூமி இதுவரை பிரபஞ்சத்தில் மனித வாழ்க்கையை நடத்தும் திறனில் தனித்துவமானது என்பதை நிரூபித்துள்ளது, இது நாம் உண்மையிலேயே தனியாக இருக்கிறோமா என்ற கேள்வி தற்போது எழுந்து உள்ளது.
புதிய ஆய்வின்படி, நமது பால்வீதி விண்மீன் மண்டலத்தில் உள்ள குறைந்தபட்சம் 36 புத்திசாலித்தனமான நாகரிகங்கள் பூமியை
தொடர்பு கொள்ளலாம் என்று விஞ்ஞானிகள் கணக்கிட்டுள்ளனர். இருப்பினும், நேரம் மற்றும் தூரம் காரணமாக, அவை
இருக்கின்றனவா அல்லது எப்போதாவது இருந்தனவா என்பதை நாம் ஒருபோதும் அறிய முடியவில்லை என ஆய்வு கூறுகிறது.
தி ஆஸ்ட்ரோபிசிகல் ஜர்னலில் வெளியிடப்பட்ட நாட்டிங்ஹாம் பல்கலைக்கழகத்தின் ஆய்வு அறிக்கையில் இது கூறப்பட்டு உள்ளது.
இந்த ஆய்வு முந்தைய கணக்கீடுகள் டிரேக் சமன்பாட்டை அடிப்படையாகக் கொண்டவை, இது 1961 இல் வானியலாளரும்
வானியற்பியலாளருமான பிராங்க் டிரேக்கால் எழுதப்பட்ட சமன்பாடு ஆகும்.
விண்மீன் வேற்றுகிரக வாழ்க்கையில் பலவீனமான மற்றும் வலுவான வரம்புகளை ஏற்படுத்த ஆய்வாளர்கள்
ஆஸ்ட்ரோபயாலஜிகல் கோப்பர்நிக்கன் கோட்பாடுகளை உருவாக்கினர்.
இதன் மூலம் நமது விண்மீன் மற்றும் நட்சத்திரங்களின் வயது, நட்சத்திரங்களின் உலோக உள்ளடக்கம் மற்றும் உயிர்வாழக்கூடிய சாத்தியக்கூறுகள் ஆகியவை அடங்கும்.
உயிர்கள் வாழக்கூடிய மண்டலம் என்பது ஒரு நட்சத்திரத்திலிருந்து சரியான தூரம், மிகவும் சூடாகவோ அல்லது குளிராகவோ
இருக்காது. அங்கு நீர் இருந்தால் உயிர் வாழ்க்கை கிரகத்தின் மேற்பரப்பில் சாத்தியமாகலாம்.
ஆஸ்ட்ரோபயாலஜிகல் கோப்பர்நிக்கன் வலுவான வரம்பு என்னவென்றால், பூமியைப் போலவே ஒரு கிரகத்தில் உயிர்களின் வாழ்க்கை 4.5 முதல் 5.5 பில்லியன் ஆண்டுகளுக்கு இடையில்
உருவாக வேண்டும், அதே நேரத்தில் பலவீனமான வரம்பு என்னவென்றால், ஒரு கிரகம் வாழ்க்கையை உருவாக்க
குறைந்தபட்சம் 4 பில்லியன் ஆண்டுகள் ஆகும், ஆனால் அதற்குப் பிறகு எப்போது வேண்டுமானாலும் உருவாகலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
இந்த சாத்தியமான வேற்றுகிரக நாகரிகங்களுக்கிடையிலான சராசரி தூரம் சுமார் 17,000 ஒளி ஆண்டுகளுக்கு சமமாக இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கணக்கிட்டனர். அந்த சமிக்ஞைகளைக்
கண்டறிதல் அல்லது தற்போதைய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தகவல்தொடர்புகளை அனுப்புவது இவ்வளவு நேரம் எடுக்கும் என கணிப்பதே கிட்டத்தட்ட சாத்தியமற்றது ஆகும்.
மேம்பட்ட வேற்றுகிரக நாகரிகங்களின் சமிக்ஞைகளைப் பெறுவதற்கான தொழில்நுட்ப அடிப்படையில் பூமியும் அதன் மக்கள்தொகையும் இன்னும் முன்னேறவில்லை
ஒரு தகவல்தொடர்பு நாகரிகத்தின் வாழ்நாள் முக்கிய அம்சம் என்பது தெளிவாகிறது, மேலும் கேலக்ஸிக்குள் இருப்பவர்கள் ஒரு சில செயலில் உள்ள சமகால நாகரிகங்களைக் கூட கொண்டிருக்க
மிக நீண்ட ஆயுட்காலம் தேவைப்படுகிறது. பிற சாத்தியமான நாகரிகங்கள் பூமியில் உள்ளதைப் போல நீண்ட காலமாக
இருக்கின்றனவா? என்பது கேள்விக்குறியே என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.
இந்த வேற்றுகிரகவாசி வாழ்க்கைக்கான தேடல் 7,000 ஒளி ஆண்டுகளுக்குள் எதையும் வெளிப்படுத்தவில்லை என்றால், இது
இரண்டு விஷயங்களில் ஒன்றைக் குறிக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
முதலாவதாக, இந்த நாகரிகங்களின் ஆயுட்காலம் 2,000 ஆண்டுகளுக்கும் குறைவானது என்று பரிந்துரைக்கக்கூடும்.
இரண்டாவதாக, பூமியில் உள்ள வாழ்க்கை தனித்துவமானது மற்றும் ஆய்வில் நிறுவப்பட்ட ஆஸ்ட்ரோபயாலஜிகல்
கோப்பர்நிக்கன் வரம்புகளை விட மிகவும் சீரற்ற செயல்பாட்டில் நிகழ்கிறது என்று அது பரிந்துரைக்கலாம்.
இது குறித்து ஆய்வு நடத்திய நாட்டிங்ஹாம் பல்கலைக்கழகத்தின் வானியற்பியல் பேராசிரியர் கிறிஸ்டோபர் கான்செலிஸ் கூறியதாவது:-
எங்கள் புதிய ஆராய்ச்சி, வேற்றுகிரக அறிவார்ந்த நாகரிகங்களுக்கான தேடல்கள் வாழ்க்கை எவ்வாறு உருவாகிறது
என்பதை வெளிப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், நம்முடைய சொந்த மனித நாகரிகம் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதற்கான தடயங்களையும் தருகிறது.
“அடிப்படையில், புத்திசாலித்தனமான வாழ்க்கை பூமியில் உள்ளதைப் போன்ற பிற பூமி போன்ற கிரகங்களில் உருவாகும்
என்ற அனுமானத்தை நாங்கள் செய்தோம், எனவே சில பில்லியன் ஆண்டுகளுக்குள் வாழ்க்கை தானாகவே பரிணாம வளர்ச்சியின் இயல்பான பகுதியாக உருவாகும்.
டிரேக் சமன்பாட்டின் அடிப்படையில் எங்கள் கணக்கீட்டிற்கும் முந்தையவற்றுக்கும் உள்ள முக்கிய வேறுபாடு என்னவென்றால்,
வேற்றுகிரக வாசிகள் வாழ்க்கை எவ்வாறு வளர்ச்சியடைந்தது என்பது குறித்து நாங்கள் மிகவும் எளிமையான அனுமானங்களைச் செய்கிறோம்.
அவற்றில் ஒன்று என்னவென்றால், வாழ்க்கை ஒரு விஞ்ஞான வழியில் உருவாகிறது – அதாவது சரியான நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டால் வாழ்க்கை உருவாகும்.
‘ஒரு நட்சத்திரத்தின் வாழக்கூடிய மண்டலத்தில் எந்த கிரகங்களின் எந்த பகுதி உயிரை உருவாக்கும்?’ போன்ற கேள்விகளுக்கு
பதிலளிக்க இயலாது. மற்றும் வேற்றுகிரகவாசிகளின் வாழ்க்கையின் எந்தப் பகுதியும் அறிவார்ந்த வாழ்க்கையில்
உருவாகும்?’ நாம் இதுவரை செய்யாத ஒரு வேற்றுகிரகவாசிகளின் வாழ்க்கையை கண்டுபிடிக்கும் வரை இதுகுறித்து பதிலளிக்க முடியாது.
அதாவது, பூமியில் புத்திசாலித்தனமான வாழ்க்கையைப்போல் கேலக்ஸியில் வேறு எங்காவது புத்திசாலித்தனமான வாழ்க்கை
அங்கேயும் அதே வழியில் உருவாகும். மற்றொரு அனுமானம் என்னவென்றால், அவை சிக்னல்கள் வழியாக தங்கள் இருப்பை ஒருவிதத்தில் தெரியப்படுத்துகின்றன.
தற்போது, செயற்கைக்கோள்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் இருந்து ரேடியோ பரிமாற்றம் போன்ற சமிக்ஞைகளை மட்டுமே நாங்கள் குறுகிய காலத்திற்கு உருவாக்கி வருகிறோம். நமது
“தொழில்நுட்ப” நாகரிகம் சுமார் நூறு ஆண்டுகள் பழமையானது. ஆகவே, விண்மீன் முழுவதும் 36 வேற்றுகிரக வாசிகள் இதே
காரியத்தைச் செய்கிறார்கள் என்று கற்பனை செய்து பாருங்கள் என கூறினார்.
உதவி பேராசிரியரான ஆய்வின் இணை ஆசிரியர் டாம் வெஸ்ட்பி கூறும்போது
வானியல் உயிரியல் கோப்பர்நிக்கன் வரம்புகள் என்னவென்றால், புத்திசாலித்தனமான வாழ்க்கை 5 பில்லியன் ஆண்டுகளுக்குள்
அல்லது சுமார் 5 பில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு உருவாகிறது – 4.5 பில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு தகவல்தொடர்பு மனித நாகரிகம் உருவான பூமியைப் போன்றது.
ஆஸ்ட்ரோபயாலஜிகல் கோப்பர்நிக்கன் வலுவான வரம்பைப் பயன்படுத்தி கணக்கீடுகளின் அடிப்படையில், நமது விண்மீன்
முழுவதும் 36 தகவல்தொடர்பு உடைய அறிவார்ந்த நாகரிகங்கள் இருக்கலாம். இது பூமியில் செயல்படும் வித வாழ்க்கையைபோல்
உருவாகிறது என்று இந்த ஆய்வு கருதுகிறது என்று வெஸ்ட்பி கூறினார்.
டெல்லி மத்திய மந்திரிக்கு கொரோனா: மராட்டியத்தில் 3307 பேர் பாதிப்பு
டெல்லி மத்திய மந்திரிக்கு கொரோனா: மராட்டியத்தில் 3307 பேர் பாதிப்பு
டெல்லி மாநில சுகாதாரத்துறை மந்திரி, ஆர்.ஜே.டி. கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியாக இருந்தவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
டெல்லி மாநில மந்திரி, முன்னாள் மத்திய மந்திரிக்கு கொரோனா: மராட்டியத்தில் இன்று 3307 பேர் பாதிப்பு
டெல்லி மாநில சுகாதாரத்துறை மந்திரி சத்யேந்தர் ஜெயின்
கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் வேகமாக பரவி
வருகிறது. குறிப்பாக டெல்லி, மகாராஷ்டிரா, சென்னையில் பாதிப்பு அதிகமாக உள்ளது.
கொரோனாவின் கோரப்பிடில் பொதுமக்கள் மட்டுமல்ல அரசியல் கட்சி தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில மந்திரிகள் சிக்குகின்றனர்.
இன்று டெல்லி மாநில சுகாதாரத்துறை மந்திரி சத்யேந்தர் ஜெயினுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் பீகார் மாநில எய்ம்ஸ் மருத்துவமனையில் ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய
மந்திரியாக பதவி வகித்தவர் காய்ச்சல் மற்றும் இருமல் அறிகுறியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தற்போது அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் இன்று ஒரேநாளில் 3307 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 114 பேர்
உயிரிழந்துள்ளனர். அம்மாநிலத்தில் இதுவரை 1,16,752 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 5651 பேர் உயிரிழந்துள்னர்
தமிழரசுக் கட்சி வேட்பாளர்களுக்கு கூட்டம் இல்லை என அறிவித்து விட்டு இரகசியமாக கூட்டம் நடத்திய சத்தியலிங்கம்
தமிழரசுக் கட்சி வேட்பாளர்களுக்கு கூட்டம் இல்லை என அறிவித்து விட்டு இரகசியமாக கூட்டம் நடத்திய சத்தியலிங்கம்
வவுனியாவில் தமிழரசுக் கட்சியில் போட்டியிடுகின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட வேட்பாளர்களுக்கு கூட்டம் ஒன்று நடைபெறவிருந்த நிலையில், இன்று கூட்டம் நடைபெறாது
என வேட்பாளர்களுக்கு தெரியப்படுத்தி விட்டு தனது ஆதரவாளர்களுக்கு முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம் கூட்டம் நடத்தியுள்ளார்.
குறித்த கூட்டத்தில் தமிழரசுக் கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், முன்னாள்
பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா அவர்களும் பிரசன்னமாகியிருந்தனர்.
குறிப்பாக தமிழரசுக் கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரின் பிரசன்னத்துடன் வவுனியாவில் உள்ள தமிழரசுக் கட்சி
அலுவலகத்தில் கூட்டமைப்பில் போட்டியிடும் வேட்பாளர்களுடனான சந்திப்பு ஒன்று ஏற்பாடாகியிருந்தது. குறித்த சந்திப்பில் எம்.ஏ.சுமந்திரன் கலந்து கொள்வதை முன்னாள்
பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் எதிர்திருந்தார். இதனையடுத்து கூட்டம் நடைபெறாது என அனைத்து
வேட்பாளர்களுக்கும் தெரியப்படுத்தி விட்டு, முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம் அவர்கள் தமிழரசுக் கடடசியின் வவுனியா கிளையினரை அழைத்து கூட்டத்தை கூட்டியுள்ளார்.
இதில் மாவை சேனாதிராஜாவும், எம்.ஏ.சுமந்திரன், சாந்தி சிறிஸ்கந்தராஜா அவர்களும் பிரசன்னமாகியிருந்தனர்.
ஏனைய தமிழரசுக் கட்சி வேட்பாளர்களை புறக்கணித்து வவுனியா கிளையை அழைத்து கூட்டத்தை கூட்டியமை வடமாகாண சபை உறுப்பினர் சத்தியலிங்கம் அவர்கள் தனித்து தேர்தல் பிரச்சார
நடவடிக்கையில் ஈடுபட முனைப்பு காட்டுவதையும், கூட்டமைப்பு வேட்பாளர்கள் மத்தியில் குத்து வெட்டுக்கள் ஏற்பட்டுள்ளதையும்
வெளிப்படுத்துவதாக தமிழரசுக் கட்சி ஆதரவாளர்கள் பலரும் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, குறித்த கலந்துரையாடலுக்கு தமிழரசுக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் அவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்படப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து நான் விலகுகிறேன் என்ற செய்தி ஒரு திட்டமிட்ட பொய்
ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து நான் விலகுகிறேன் என்ற செய்தி ஒரு திட்டமிட்ட பொய்
இதற்கு பின் முன்னாள், இந்நாள் அமைச்சர்கள் இருவர் உள்ளார்கள் – மனோ கணேசன்
இன்றைய கொழும்பு மாவட்ட அமைச்சர் மற்றும் முன்னாள் கொழும்பு மாவட்ட அமைச்சர் ஆகியவர்களின் இரகசிய
கும்பல்களினால் நடத்தப்படும் வசையும், பொய்யும் மட்டும் பாடும் இணையத்தளங்களில், “மனோ கணேசன், சஜித்தை விட்டு விலகி
செல்கிறார்” என்ற ஒரு பொய் செய்தி சிங்களத்தில் சற்று முன் பிரசுரமாகியுள்ளது.
இது பொய். அப்பட்டமான பொய். இவர்களின் கையறு நிலையை இது காட்டுகிறது. திடீர் திடீர் என “அங்கிருந்து இங்கே, இங்கிருந்து அங்கே” பாயும் தவளை அரசியலை நான் ஒருபோதும்
செய்ததில்லை என்பதை மக்கள் அறிவார்கள். நான் எங்கே இருந்தாலும், எனது கட்சியிலேயே இருக்கிறேன். ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் பிரேமதாச மீது, நம்பிக்கை வைத்து, நான்
பயணிக்கிறேன். என்னுடன், எனது கட்சியும், எமது கூட்டணியும் உறுதியாக பயணிக்கின்றன என தமிழ் முற்போக்கு கூட்டணி
தலைவரும், முன்னாள் தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சரும், கொழும்பு மாவட்ட எம்பியுமான மனோ கணேசன் கூறியுள்ளார்.
இது தொடர்பில் மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது,
புதிய தேசிய கூட்டணியில் சேரும் போது அல்லது விலகும்போது, கூட, “எடுத்தேன் கவிழ்த்தேன்” என ஒரேயொரு விடயத்தை
மாத்திரம் காரணமாக வைத்துகொண்டு, நான் சேருவதும் இல்லை. பிரிவதும் இல்லை. நாம் மிகவும் பொறுமையாக, நிதானமாகவே
எங்கள் முடிவுகளை எடுக்கிறோம். வேகம் இருப்பது போல் எமக்குள் விவேகமும் இருக்கிறது.
நான் நாளுக்கு ஒரு அணி மாறிக்கொண்டு இருந்தால், சிங்கள மக்கள் எம்மை சூழ்ந்து வாழும், இந்நாட்டின் இந்த பிரதேசத்தில்
எனக்கு மரியாதை இருக்காது. அதனால், நான் பிரதிநிதித்துவம் செய்யும் மக்களுக்கும் மரியாதை இருக்காது. தேர்தலை
எதிர்நோக்கும் இவ்வேளையில், இவர்கள் இந்த மரியாதையையே திட்டமிட்டு குழப்ப முயல்கின்றனர்.
இந்நாட்டில் செயற்படுகின்ற எந்தவொரு சிறுபான்மை கட்சி தலைவர்களையும் விடவும், எனக்கு அன்றே வந்த அமைச்சு பதவிகளையும் உதறி தள்ளிவிட்டு, ஐதேக தலைவர் ரணில்
விக்கிரமசிங்க எதிர்கட்சி தலைவராக இருக்கும் போது, அவருடன் மிகவும் பொறுமையுடன் பதினைந்து வருடங்கள் இருந்த ஒரே கூட்டு கட்சி தலைவர் நான்தான்.
இன்று எங்கள் பொறுமைக்கு முடிவு வந்து விட்டதால், நாங்கள் ஒரு கட்சியாக, கூட்டணியாக புதிய தேசிய கூட்டணியை ஸ்தாபித்து
அதில் அங்கம் வகிக்கிறோம். அதன் தலைவராக சஜித் பிரேமதாச அவர்கள் பதவி வகிக்கின்றார். அவர் மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கின்றது.
இன்று இந்நாட்டில் ஆளும் பொதுஜன முன்னணியும், ஐக்கிய தேசிய கட்சியும் பார்த்து பயப்படும் அணியாக எமது ஐக்கிய மக்கள் சக்தி நிலவுகிறது. அதனாலேயே நாள்தோறும் அவதூறுகளை இந்த
இரண்டு கட்சியினரும் எம்மீது எடுத்து வீசுகிறார்கள். ஐக்கிய தேசிய முன்னணியில் இருந்த வேளையில், கடந்த கொழும்பு மாநகரசபை
தேர்தலின் போது கூட இதே இணையதளம் என் மீது களங்கம் கற்பித்து அபாண்ட பொய் செய்திகளை எழுதியது.
நாமே உருவாக்கியுள்ள, புதிய தேசிய வெற்றிக்கூட்டணியின் ஸ்தாபகர்களில் நானும் ஒரு முதன்மையாளர். இதில் இருந்து
விலகும் தேவை எமக்கு இல்லை. எதிர்வரும் தேர்தலில், நாம் வெற்றி வாகை சூடுவோம்.
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் – படுகாயங்களுக்கு உள்ளானவர்களுக்கு அரசாங்க செலவில் தொடர்ந்து விசேட சிகிச்சை
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் – படுகாயங்களுக்கு உள்ளானவர்களுக்கு அரசாங்க செலவில் தொடர்ந்து விசேட சிகிச்சை
கடந்த வருடம் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலில் அங்கவீனமடைந்துள்ளவர்கள் மற்றும்
படுகாயங்களுக்குள்ளானவர்களை அரசாங்கத்தின் செலவில் ஸ்ரீ ஜயவர்தனபுர
ஆஸ்பத்திரிய தொடர்ந்தும் சிகிச்சைகளை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இந்த சிகிச்சைகளுக்கான அனைத்து செலவுகளையும் சுகாதார அமைச்சின்
கீழ் இயங்கும் சுகாதார அபிவிருத்தி நிதியின்ஊடாக செலவிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
படுகாயங்களுக்கு உள்ளானவர்களில் 139 பேர் தற்போது மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 39 பேர் நீண்டகால
விஷேட மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்தப்பட வேண்டியவர்களென வைத்தியர்கள் சிபாரிசு செய்
துள்ளனர்.அவர்களுக்கு விசேட சிகிச்சைநடைமுறையொன்றை மேற்கொள்ள வேண்டுமென விசேட மருத்துவ நிபுணர்களும்
டாக்டர்களும் பேராயர் கர்தினால் மெல்கம்ரஞ்சித் ஆண்டகையிடம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பாக நேற்றைய தினம் சுகாதார அமைச்சர் பவித்ரா தேவி வன்னியாராச்சி பேராயரைச் சந்தித்து பேச்சுவார்த்தை
நடத்தினார். அரசாங்கம் மேற்கொண்டுள்ள இந்த தீர்மானத்துக்காக பேராயர் தமது நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.







