Author: நலன் விரும்பி
வீட்டுக்குள் புகுந்த வண்டி – நால்வர் பலி
வீட்டுக்குள் புகுந்த வண்டி – நால்வர் பலி
அவுஸ்ரேலியா Queensland பகுதியில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் நால்வர்பலியாகியுள்ளனர்
வேகமாக பயணித்த வண்டி ஒன்று சாரதியின் கட்டு பாட்டை இழந்து வீட்டுக்குள் புகுந்ததால் சம்பவ இடத்தில பலர் பலியாகினர்
குறித்த நாள் ஒன்றுக்குள் இதேபகுதியில் இவ்விதமான விபத்தில் சிக்கி நால்வர் பலியாகியுள்ளனர்
சாரதிகளின் அலட்சிய போக்கும் சாலை விதிகளை மீறி வேகமான கார் ஓட்டுதல் காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

காருக்குள் பெண் சிசுவை பூட்டி வைத்து கொன்ற தாய்
காருக்குள் பெண் சிசுவை பூட்டி வைத்து கொன்ற தாய்
அமெரிக்கா northern Virginia பகுதியில் கார் ஒன்றுக்குள் 11 மாத சிசுவை பெண் ஒருவர் பூட்டி வைத்து விட்டு சென்று விட்டார்
இவர் மீள காருக்கு திரும்பி வர தாமதமானது
அவ்வேளை என்பது முதல் 90 செல்சியஸ் வெப்பம் நிலவியாதல் சிசு மூச்சு தினறி பலியாகியுள்ளது
அருகில் கார் ஒன்றை நிறுத்திய நபர் காரின் பின் ஆசனத்தில் சிசு ஒன்று
தனியாக உள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்து காவல்துறைக்கு தெரிவித்தார்
இவ்வேளை போலீசார் விரைந்து செயல் பட்டு சிசுவை காப்பாற்றிட முனைந்த பொழுதும் அது பயனளிக்கவில்லை
இது தொடர்பான விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது
அமெரிக்காவில் துப்பாக்கி சண்டை -4 பேர் பலி – 2 பேர் காயம்
அமெரிக்காவில் துப்பாக்கி சண்டை -4 பேர் பலி – 2 பேர் காயம்
அமெரிக்கா கலிபோனியாவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில்
நால்வர் பலியாகியுள்ளனர் .மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்
வால்மார்ட் கடை பகுதியில் இடம்பெற்ற திடீர் துப்பாக்கி சூட்டின் பொழுதே இந்த உயிரிழப்பு இடம்பெற்றுள்ளது
போலீசார் புலன் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்

இலங்கையில் போதைப்பொருளை முற்றாக ஒழிப்புபோம் – இராணுவ மந்திரி கூவல்
இலங்கையில் போதைப்பொருளை முற்றாக ஒழிப்புபோம் – இராணுவ மந்திரி கூவல்
கடத்தல்காரர்களுடன் இணைந்து செயற்படும் மற்றும் உதவி புரியும் சிறைச்சாலை, சட்ட அமலாக்க மற்றும் ஏனைய
அதிகாரிகளுக்கு விரைவில் தண்டனை வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் அச்சுறுத்தலை இல்லாதொழிப்பதற்காக எதிரிகளை அடையாளம் காண மற்றும் உறுதிப்படுத்த முறையான செயற்பாடு அவசியம்
எதிர்கால சந்ததியினருக்காக அனைத்து போதைப்பொருள் கடத்தல்காரர்களையும் சட்டத்தின் முன் கொண்டு வர வலியுறுத்து
ஊழல் மற்றும் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தல் என்பவற்றினூடாக பாதாள உலக குற்றவாளிகள் மற்றும் போதைப்பொருள்
தங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை ,ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக துஷ்பிரயோகம் செய்யும்
சீருடை அணிந்த அதிகாரிகளை அடையாளம் காண சட்ட அமலாக்க அதிகாரிகள் ஏற்கனவே அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார் .
“நாங்கள் இராணுவ கலாசாலையில் இருந்தபோது, மிகவும் ஆபத்தான எதிரி யாரெனில் அவர்கள் எமக்குள்ளே இருக்கும்
எதிரிகளாகும் என எங்களுக்கு கற்பிக்கப்பட்டது. போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிக்க நமக்குள் இருக்கும் இந்த எதிரியை நாம்
இப்போது அடையாளம் கண்டு உறுதிப்படுத்த வேண்டும். இல்லையெனில் அது ஒரு பயனற்ற முயற்சியாக அமைந்துவிடும் ”என பாதுகாப்பு செயலாளர் தெரிவித்தார்.
நிட்டம்புவ தேசிய ஆபத்தான ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபையில் ஜூன் 26 காலை இடம்பெற்ற புதிய புனர்வாழ்வு நிலையக்
கட்டிடத்தை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் விழாவில் உரையாற்றிய அவர், விரைவில் இலங்கையிலிருந்து
போதைப்பொருளை ஒழிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கவுள்ளதாக உறுதியளித்தார்.
போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் சமூகத்தில் மீண்டும் ஒன்றிணைக்கப்பட்டு பயனுள்ள வாழ்க்கையை தொடங்குவதற்காக
அவர்களுக்கு புனர்வாழ்வளிக்கும் செயற்பாடுகள் தொடங்கப்பட வேண்டும் எனவும் இதற்காக அவர்களுக்கு அனுதாபம், பரிவு
மற்றும் உதவி என்பன அவசியமாகும் என மேஜர் ஜெனரல் குணரத்ன தெரிவித்தார்.
ஏறக்குறைய 1,000 போதைப்பொருள் பாவனையாளர்களுக்கு புனர்வாழ்வளிப்பதை இலக்காகக் கொண்ட முழுமையான
புனர்வாழ்வு மையம் ஐக்கிய நாடுகளின் போதைப்பொருள் மற்றும் குற்றவியல் தொடர்பான அலுவலகத்தின் (UNODC) உதவியுடன் நிர்மாணிக்கப்படும்.
‘போதைப்பொருள் பாவனை மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினத்தை’ முன்னிட்டு இந்த நிகழ்வு இடம்பெற்றது.
தவறான செயல்களைச் செய்வதன் மூலம் சம்பாதித்த பணத்திலிருந்து தங்கள் குடும்பங்களுக்கு உணவளிக்கும் பாதாள உலக மற்றும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் அதற்காக
வெட்கப்பட வேண்டும் என் கூறிய பாதுகாப்பு செயலாளர், போதைப்பொருள் அச்சுறுத்தலை இல்லாமல் ஆக்குவது ஒரு
மகத்தான பணியாகும் என தெரிவித்ததுடன், எதிர்கால சந்ததியினருக்காக அனைத்து போதைப்பொருள்
கடத்தல்காரர்களையும் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டிய அவசியத்தையும் குறிப்பிட்டார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த பாதுகாப்புச் செயலாளர் , முதலாவதாக போதைப்பொருள் பாவனைக்கு இரையாகியுள்ள
சிறுவர்களையும் மீட்பதும், இரண்டாவது நமது எதிர்கால சந்ததியினரைக் காப்பாற்றுவதும், மூன்றாவது தவறு
செய்பவர்களுக்கு உதவியளிக்க உத்தியோகத்தை துஷ்பிரயோகம் செய்பவர்களை அடையாளம் காண்பதும் ஆகும் என தெரிவித்தார்.
இதன்போது கருத்து தெரிவித்த தேசிய ஆபத்தான ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை தலைவர் டொக்டர் லக்நாத் வெலகெதர, 1984
முதல் 36 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் தேசிய ஆபத்தான ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை
‘போதை மருந்து இல்லாத, ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான தேசத்தை உருவாக்குவதற்காக’ ஜனாதிபதி கோட்டபய
ராஜபக்ஷவின் வளமான தேசம் எனும் எண்ணக்கருவிற்கு அமைய சிகிச்சைகள் மற்றும் புனர்வாழ்வு வசதிகளை விரிவுபடுத்துவதாக தெரிவித்தார்.
சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையத்திற்கான ‘நவ திகந்தய’ புதிய கட்டிடம் ஜெர்மனிய அரசு மற்றும் போதைப்பொருள் மற்றும் குற்றவியல் தொடர்பான ஐக்கிய நாடுகளின் அலுவலகம்
நிதியுதவியுடன் நிர்மானிக்கப்படவுள்ள அதேவேளை, நிர்மாணம் பணிகள் இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்படவுள்ளன.
இதன் போது உரை நிகழ்த்திய ஜேர்மனியின் பிரதி தூதுவர் ஆண்ட்ரியாஸ் பெர்க், பயனுள்ள குற்றவியல் நீதி பதில்களின் மூலம் பயங்கரவாதம் மற்றும் வன்முறை தீவிரவாதத்தைத் தடுக்கவும்
எதிர்வினையற்றவும் இலங்கையின் திறனை வலுப்படுத்தும் மிகப் பெரிய திட்டத்தின் ஒரு பகுதியாக ஜெர்மனி இந்த முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்குகிறது என தெரிவித்தார்.
“இந்த புனர்வாழ்வு நிலையத்தின் விரிவாக்கமானது, தற்போது செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்களில நான்காவது திட்டமாகும்.
இது சிறைத் துறையில் திறனை வலுப்படுத்த ஏதுவாக அமையும் ” என அவர் தெரிவித்தார்.
தேசிய ஆபத்தான ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் புதிய கட்டிய விரிவாக்கமானது, தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள அதிக எண்ணிக்கையிலான போதைப்பொருள்
பாவனையாளர்களை சிறைச்சாலைகளிலிருந்து நீக்கும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் என பெர்க் மேலும் தெரிவித்தார்.
நாட்டில் போதைப்பொருள் அச்சுறுத்தலின் சவால்களை சமாளிப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளை இந்த திட்டம்
பூர்த்தி செய்யும் என்றும், இந்த பிரச்சினையை தீர்ப்பதில் சிகிச்சையை ஒரு தண்டனை முறையாக கருதவில்லை என அவர் தெரிவித்தார்.
“போதைப்பொருள் மற்றும் வன்முறை தீவிரவாதத்தை தடுப்பதில் அரசாங்கம், தேசிய ஆபத்தான ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை, சிவில் சமூகம், நீதித்துறை மற்றும் சிறை அதிகாரிகள்
ஆகியோருடன் இணைந்து பணியாற்ற நாம் விரும்புகிறோம்,” என அவர் குறிப்பிட்டார்.
ஐக்கிய நாடுகளின் போதைப்பொருள் மற்றும் குற்றவியல் தொடர்பான அலுவலகத்தின் உலகளாவிய கடல்சார் குற்றத் திட்டத்தின் தலைவர் ஆலன் கோல் கூறுகையில், கொவிட்-19
முடக்கங்களுக்கு மத்தியில் போதைப்பொருள் கடத்தலுக்கான நில வழிகள் தடைசெய்யப்பட்டுள்ளதால், போதைப்பொருள்
கடத்தல்காரர்களுக்கு கடல் மார்க்கம் இலகுவானதாக மாறியுள்ளது. எனினும் இலங்கை கடற்படை போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான பிராந்திய போராட்டமானது முக்கிய பங்குவகித்தது.
சிறைச்சாலைகள் மற்றும் போதைப்பொருள் அச்சுறுத்தல்களில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுப்பதற்கான ஆலோசனைகளை வழங்குவதாக உறுதியளித்த கோல்,
சிறைச்சாலை அமைப்பிலிருந்து அவர்களை வெளியேற்றுவதற்கான அரசாங்கத்தின் புதிய
மூலோபாயத்தையும், அவர்களை மறுவாழ்வு செய்ய அறிமுகப்படுத்தப்பட்ட முயற்சிகளையும் கோல் பாராட்டினார்.
இந்த நிகழ்வில் வெளியுறவு அமைச்சின் செயலாளர் ரவிநாத அரியசிங்க, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா,
புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் (ஓய்வு) தர்சன ஹெட்டியாராச்சி, சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷாரா
உபுல்தெனியா, பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் மலிக சூரியப்பெரும ஆகியோர் கலந்து கொண்டனர்.
இலங்கை வந்தடைந்த வெளிநாட்டு இராணுவம்
இலங்கை வந்தடைந்த வெளிநாட்டு இராணுவம்
அரேபிய நாட்டு கடற்படையை சேர்ந்த 51 பேர் இலங்கையை வந்தடைந்துள்ளனர்.
ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விஷேட விமானம் ஒன்றின்
மூலம் டுபாயில் இருந்து இன்று (28) காலை 6.15 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
கோத்தபாயாவின் எவன்காட் நிறுவனத்திற்கு சொந்தமான ஆயுத கப்பல் ஒன்றில்
சேவையாற்றுவதற்காக குறித்த கடற்படையினர் வருகை தந்துள்ளனர்.
விமான நிலையத்தில் வைத்து குறித்த கடற்படையினர் பீ.சீ.ஆர்
பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
ஊரடங்கு சட்டம் இன்று முதல் நீக்கம்
ஊரடங்கு சட்டம் இன்று முதல் நீக்கம்
நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் இன்று முதல் நீக்கப்படுவதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஜனாதிபதி ஊடக பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த 20 ஆம் திகதி முதல்
ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டு பல்வேறு சந்தர்ப்பங்களில் தளத்தப்பட்டிருந்தது.
கடந்த 13 ஆம் திகதி முதல் ஊரடங்கு சட்டம் நள்ளிரவு 12 மணி முதல் 4 மணி
வரையில் மாத்திரமே அமுல்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் இன்று முதல் ஊரடங்கு சட்டம் முழுமையாக நீக்கப்படுவதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
பற்றி எரிந்த வீடுகள் – தப்பி ஓடிய மக்கள்
மஸ்கெலியா, லெங்கா தோட்டத்திலுள்ள லயன் குடியிருப்பில்
நேற்று (27) இரவு ஏற்பட்ட தீ விபத்தால் 2 வீடுகள் சேதமடைந்துள்ளன.
ஒரு வீடு முழுமையாகவும் மற்றுமொரு வீடு பகுதி அளவும் சேதமடைந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மின் ஒழுக்கு காரணமாகவே தீப்பரவலம் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கும்
பொலிஸார், அனர்த்தத்தின்போது வீட்டில் இருந்தவர்கள் வெளியில் சென்றிருந்ததாகவும் கூறினர்.
இது தொடர்பில் கேள்வியுற்ற இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின்
பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான், உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்தார்.
தீ விபத்தால் பாதிக்கப்பட்ட 2 குடும்பங்களை பாதுகாப்பான இடமொன்றில் தங்கவைப்பதற்கான ஏற்பாடுகளை செய்ததுடன்,
அவர்களுக்கு 14 நாட்களுக்கு தேவையான உலர் உணவுப் பொருட்களை தனது சொந்த நிதியில் வழங்கியுள்ளார்.
அத்துடன், குறித்த லயன் குடியிருப்பு தொகுதியில் மின்ஒழுக்கு இருந்தால் விரைவில் அதனை சீர்செய்யுமாறு தோட்ட
முகாமைத்துவ அதிகாரிகளிடம் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் கோரிக்கை விடுத்தார்

கொரனோவால் குணமடைதோரின் எண்ணிக்கை 1,619 ஆக அதிகரிப்பு
கொரனோவால் குணமடைதோரின் எண்ணிக்கை 1,619 ஆக அதிகரிப்பு
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 1,619 பேர்
சிகிச்சையின் பின் பூரணமாக குணமடைத்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான சுமார் 821 கடற்படையினர்
பூரணமாக குணமடைத்துள்ள அதேவேளை கொரோனா வைரஸ்
தொற்றுக்குள்ளான சுமார் 428 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
COVID 19 பரம்பலின் தரவுகள்
புதுப்பிக்கப்பட்டது 2020-06-28 20:50:28
2033
உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகள்
383
சிகிச்சை பெறும் நோயாளிகள்
19
புதிதாக கண்டறியப்பட்ட நோயாளிகள்
1639
குணமடைந்த நோயாளிகளின் எண்ணிக்கை
11
இறப்பு எண்ணிக்கை
இலங்கை இராணுவம் தயாரித்த குளிரூட்டப்பட்ட யுனிபப்பல்ஸ் கப்பல்
இலங்கை இராணுவம் தயாரித்த குளிரூட்டப்பட்ட யுனிபப்பல்ஸ் கப்பல்
இலங்கை இராணுவ மின்சார மற்றும் பொறியியல் இயந்திர படையணி (ளுடுநுஆநு) படையினரால் இராணுவ புதிய கண்டுபிடிப்புகளில் மற்றொரு மைல்கல்லை பதித்துள்ளது.
இலங்கை இராணுவ மின்சார மற்றும் பொறியியல் இயந்திர படையணியின் படையினர் தயாரித்த 9 நவீன மயமாக்கப்பட்ட யூனிபபல் வாகனங்கள் ஒரு மீட்பு வாகனம் மற்றும் 3
கொள்கலன்களை கப்பல் ஊடக மேற்கு ஆபிரிக்காவில் நிலத்தால் சூழப்பட்ட தேசமான மாலியில் பணியாற்றும் இலங்கையின் ஐ.நா அமைதி காக்கும் படையினருக்காக அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.
பாதுகாப்பு தலைமை பிரதானியும் இராணுவத் தளபதியும் மற்றும் கொவிட் 19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர
சில்வா பிரதம அதிதியாக கலந்து கொண்டு நேற்றுக் காலை (26) ஆம் திகதி இராணுவ தலைமையகத்தில் அந்த வாகனங்கள் மற்றும் உதிரி பாகங்களை பார்வையிட்டார். அவற்றை கப்பலில் அனுப்பும்
ஏற்பாடுகளுக்காக பென் லைன் ஷிப்பிங் ஏஜென்சிகள் (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்தின் முகாமையாளர் திரு ரஹிலீன் பூராவிடம் கையளித்தார்.20200626un 9bஇலங்கை இராணுவ மின்சார மற்றும்
பொறியியல் இயந்திர படையணியின் படையினரின் தொழில் நுட்ப நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கண்ணிவெடி-எதிர்ப்பு வாகனங்கள் மற்றும் உபகரணங்கள் ஐ.நா.
விவரக் குறிப்புகளுடன் பொருந்தக்கூடிய வகையில் சர்வதேச தரங்களுக்கு இணையாக உதிரிபாகங்களைப் பயன்படுத்தி
உற்பத்தி செய்யப்படுவதால், அரசாங்கத்திற்கும் இராணுவத்திற்கும் ஒரு பெரிய அந்நிய செலாவணியை சேமிக்கிறது. பல ஆண்டுகளாக தென்னாப்பிரிக்க வாகனங்களுக்கு ஒத்ததாக அந்த வாகனங்களை
உற்பத்தி செய்வதில் இலங்கை இராணுவ மின்சார மற்றும் பொறியியல் இயந்திர படையணி முக்கிய பங்கு வகிக்கிறது.
இதன் போது ஊடகவியலாளர்களுக்கு பேசிய பிரதம அதிதி அவர்கள், மாலியில் ஐ.நா. கடந்த இரண்டு ஆண்டுகளில் படையினர்களுக்கு கிடைக்கக்கூடிய அத்தகைய வாகனங்களின்
எண்ணிக்கை குறித்து ஐ.நா.வுடன் ஒரு புரிந்துணர்வை எட்டியுள்ளோம். முன்னதாக, இறக்குமதி செய்யப்பட்ட றுஆயுணு வாகனங்கள், ஒவ்வொன்றும் சுமார் 40 மில்லியன் டொலர் செலவில்
ஐ.நா. படையினர்களுக்காக வாங்கப்பட்டன. அவை மிகவும் விலை உயர்ந்தவை. படைகள் பொதுவாக அந்த வாகனங்களுடன் ஒப்பிடுகையில் எங்கள் திறமையான இராணுவ மின்சார மற்றும்
பொறியியல் இயந்திர படையணியின் படையினர் அந்த செலவில் கிட்டத்தட்ட நான்கில் ஒரு பகுதியை செலவில் இந்த வாகனங்களை இங்கு தயாரிக்க முடிந்தது.
‘இந்த யுனிபபெல்கள் றுஆயுணு வாகனங்களுக்கு ஒத்தவை ஆனால் இதில் செல்லக்கூடிய எண்ணிக்கை அதிகம்.
அவை ஐ.நா. தேவைகள் மற்றும் விவரக் குறிப்புகளுக்கு
முழுமையாக குளிரூட்டப்பட்டுள்ளது. இந்த வாகனங்களுக்குள் அமர்ந்திருப்பது மிகவும் எளிதானதுஇ மேலும் மாலியில் நடவடிக்கைகள் பல ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்களை
உள்ளடக்கியிருப்பதால் எங்கள் படைகளுக்கு அதிகபட்ச வசதியை உறுதி செய்துள்ளோம். மற்றய யூனிபபல்களைப் போலல்லாமல் ஒவ்வொரு வாகனத்திலும் இரண்டு துப்பாக்கிகளை
வைத்திருக்கிறோம்இ இருப்பினும் ஒரு துப்பாக்கி மட்டுமே மற்றய வாகனங்களில் வசதி செய்யப்படுகிறது. நிபுணத்துவம் பெற்ற எங்கள் படையினர் மாலி மற்றும் பிற வெளிநாடுகளில்
பாராட்டத்தக்க கடமைகளைச் செய்கின்றன. கொவிட் -19 நெருக்கடியின் போதுஇ நமது படையினரை வீட்டிலேயே அடைத்து வைக்காமல் நேரத்தை வீணாக்காமல்இ புதுமைகள் மற்றும் புதிய
தயாரிப்புகளின் தொகுப்பை உருவாக்கி உள்ளோம் அவற்றை இங்கு தொடர்ந்து உற்பத்தி செய்தால் மில்லியன் கணக்கில் மீதப்படுத்த முடியும் எங்கள் திறன்கள் தெரிந்து
கொள்ளப்பட்டவுடன்இ எதிர்காலத்தில் வெளி நாடுகளிடமிருந்தும் இதற்க்கான கோரிக்கைகள் வரும் என நாங்கள் நம்புகிறோம்,
ஏனெனில் யுனிபபல் காலாட்படைக்கு மிகவும் அவசியமான ஒரு துணை ஆயுதமாகும் என லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.
தற்போது ஐ.நா அமைதி காக்கும் படையில் 20 அதிகாரிகள் மற்றும் 223 படையினராக மொத்தம் 243 பேர் லெப்டினன்ட் கேணல் நிஹால் காலகே தலைமையில், 65 வாகனங்களுடன் மாலி படையில் சேவை
செய்கின்றனர். இந்த வாகனங்கள் மற்றும் உபகரணங்கள் இன்று (26) இராணுவத் தளபதியிடம் ஒப்படைக்கப்படுவதற்கு முன்பு
வியாழக்கிழமை (25) கட்டு பெத்தை வேலை தளத்தில் வெளிநாட்டு பணிப்பாக பணிப்பாளர் மேஜர் ஜெனரல் டபிள்யூ.ஏ.எஸ். வனசிங்க அவர்களால் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டது.
இராணுவ தலைமையகத்தில் உத்தியோக பூர்வ ஒப்படைப்பு விழாவில் முதன்மை பணி நிலை அதிகாரிகள், பணிப்பாக உயர் அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் பங்குபற்றினர்.

ஈரான் அணு உலை வெடித்து சிதறியதா ..? வெளியான video
ஈரான் அணு உலை வெடித்து சிதறியதா ..? வெளியான video
ஈரான் தலைநகர் அருகில் உள்ள நிலக்கீழ் சுரங்கத்தில் எரிவாயு தாங்கி ஒன்று வெடித்து சிதறிய காணொளிகள் வெளியாகியுள்ளன
குறித்த பகுதியில் ஏவுகணை தாக்குதல் இடம் பெற்றுள்ளது என கூற படுகிறது ,
இதே பகுதியில் ஈரான் அணுகுண்டு சோதனை ஒன்றை நடத்தியதான செய்மதி புகை படங்கள் வெளியாகியுள்ளது
இது தொடர்பான காணொளிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
பிரிட்டனில் கொரனோ நோயால் 130 பேர் பலி
பிரிட்டனில் கொரனோ நோயால் 130 பேர் பலி
பிரிட்டனில் பார்வை வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் 130 பேர்
பலியாகியுள்ளனர் ,மேலும் 43,514 பேர் இதுவரை பலியாகியுள்ளனர் ,310,250
பேர் இதுவரை பாதிக்க பட்டுள்ளனர்
தொடர்ந்து இந்த நோயானது வேகமாக பரவி வருகிறது ,எனினும் மக்கள்
இயல்பு வாழ்வு வழமைக்கு முற்று முழுதாக திரும்ப வில்லை என்பது குறிப்பிட தக்கது
காணாமல் போன வாலிபன் சடலமாக மீட்பு
கொழும்பில் லஞ்சம் வாங்கிய ஐவர் கைது
கொழும்பில் லஞ்சம் வாங்கிய ஐவர் கைது
கொழும்பு பெஸ்டியன் மாவத்தை பகுதியில் கப்பம்கோரல் தொடர்பான குற்றச்செயல்களில் ஈடுபட்டுவந்த ஐவரை கொழும்பு
குற்றத்தடுப்பு பிரிவினர் கைதுசெய்துள்ளனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்ட அனைவரும் சட்ட நடவடிக்கைகளுக்காக நேற்று (26) புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்ட அனைவரும் கொழும்பு மனிங் சந்தைக்கு மரக்கறிகளை ஏற்றிச்செல்லும் லொறிகளிடம் இருந்து கப்பம் கோரிய சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்
லண்டனில் 50ஆயிரம் வியாபார கடன் எடுத்து சிக்கிய தமிழர்கள் – பெரும் ஆப்பு -வீடியோ
வியாபார கடன் எடுத்து சிக்கிய தமிழர்கள் – பெரும் ஆப்பு -வீடியோ
லண்டனில் 50ஆயிரம் வியாபார கடன் எடுத்தால் என்ன நடக்கும் – பெரும் ஆப்பு தமிழர்கள் சிக்கினர்
பிரிட்டனில் பரவி வரும் கொரனோ வைரஸ் நோயினை அடுத்து
தற்பொழுது வியாபார நடவடிக்கைகள் பலமாக பாதிக்க பட்டுள்ளன
இதனால் அரசு அந்த வியாபாரத்தை ஊக்குவிக்கும் முகமாக ஐம்பதாயிரம் வரை கடன் உதவி வழங்குகிறது
இந்த கடனை பொய் சொல்லி பெற்று கொண்ட தமிழர்கள் உள்ளிட்டவர்கள்
எதிர் நோக்கும் பெரும் பிரச்சனை தொடர்பாக எக்கவுண்டன் ஒருவர் விளக்குகிறார்
தமக்கு தாமே புதை குழி தோண்டிய தமிழ் வியாபாரிகளில் சிலர் பெரும் சிக்கலில் சிக்கியுள்ளனர் ,
கோவணத்தை உருவி ரோட்டில் விட்ட நிலையாக இது அமைந்துள்ளது
பொய் கூறி பெற்று கொண்ட பல்லாயிரம் பேர் சிக்கிய அபாயம் இதில் அழுத்தி படிக்க
இதோ இதில் அழுத்தி இந்த வங்கி கடனுக்கு கேட்க படும் கேள்விகள் என்ன என்பதும் இதனை பார்க்க ,பொய்யாக போலியாக செய்த தமிழர்களுக்கு ஆப்பு தான்

இந்த வங்கி கடனை எடுத்து சிக்கலில் மாட்டியுள்ள தமிழர்கள் இதோ இதனை பாருங்கள் ,நீங்கள் பெற்ற பணம் முழுவதும்
இரண்டரை வீத வட்டியுடன் மீள செலுத்த வேண்டும் ,வங்கி ரெப்ஸி அடிக்கவோ,சுத்தவோ முடியாது ,இதற்கு அரசே பொறுப்பு தெளிவாக உள்ளது
Bounce Back Loan scheme
Supporting UK businesses during coronavirus
See if you’re eligible for a government-guaranteed loan of £2,000 to £50,000 if your business has been affected by coronavirus (COVID-19).
- Businesses from all sectors can apply for a facility1
- Interest rate fixed at 2.5%
- No principle repayments for the first 12 months
- No set up or application fees
- No early repayment fees
- No personal guarantees are allowed, and no recovery action can be taken over a principal private residence or principal private vehicle
- You’re responsible for repaying 100% of the loan. Where default occurs, we follow our standard commercial recovery procedures (including the realisation of security) before we make a claim against the government’s guarantee for any shortfall. Loans are available to most business sectors, but restrictions apply
எவ்வாறு விண்ணப்பம் செய்வது …என்ன கேள்விகள் ,தொகை எவ்வளவு ,அதாவது ஐம்பதாயிரம் வங்கி கடனை எடுத்து 80 ஆயிரம் வரி செலுத்தும் நிலைக்கு தள்ள பட்டுள்ள மக்கள்
மேலும் இந்த வங்கி கடனை பெற்றவர்கள் மனைவியை ,அல்லது குடும்பத்தை கூப்பிட முடியா நிலை
மேலும் கிரிமினல் குற்றமாக உள்ளது ,மேலும் பெரும் மோசடி செய்தார்கள் என்ற குற்ற சாட்டில் விசாரணை இடம்பெறும் , தயவு
செய்து நண்பர்களே இதனை அதிகம் பகிருங்கள் ,ஆபத்தில் இருந்து தப்பித்து கொள்ளுங்கள்
இதில் அழுத்தி முழுமையான விபரங்கள் பார்க்க

சீனப் பொருட்களுக்கு தடை விதித்து தீர்மானம் போட்ட கிராமம்
சீனப் பொருட்களுக்கு தடை விதித்து தீர்மானம் போட்ட கிராமம்
மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் சீனப் பொருட்களுக்கு தடை விதித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சீனப் பொருட்களுக்கு தடை விதித்து தீர்மானம் போட்ட கிராமம்
கடையில் கட்டப்பட்டுள்ள பேனர்
புனே:
இந்தியா – சீன ராணுவ வீரர்களுக்கிடையே கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் ஏற்பட்ட மோதலில் இந்திய தரப்பில் ஒரு அதிகாரி உள்பட
20 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்குப் பிறகு எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது. சீனாவின் அத்துமீறலுக்கு
எதிராக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெறுகின்றன.
குறிப்பாக, சீனப் பொருட்களை புறக்கணிக்க வேண்டும், சீனப் பொருட்களை விற்பனை செய்வதற்கு தடை விதிக்க வேண்டும்
என்ற கோரிக்கை தீவிரமடைந்து வருகிறது. பலர் சீன பொருட்களை தவிர்க்கத் தொடங்கி உள்ளனர்.
இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலம் புனே அருகில் உள்ள கோண்ட்வே-தவாடே கிராம பஞ்சாயத்தில், சீனப் பொருட்களுக்கு
தடைவிதித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஜூலை 1ம் தேதி முதல் சீனப் பொருட்களை விற்பனை செய்யவோ, வாங்கவோ
கூடாது என அந்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அனைத்து கடை உரிமையாளர்களுக்கும்
சுற்றறிக்கை அனுப்பி உள்ளனர். சீனப் பொருட்களை அதிகாரப்பூர்வமாக தடை செய்த முதல் கிராமம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக பஞ்சாயத்து தலைவர் நிதின் திவாதி கூறுகையில், ‘சீனப் பொருட்கள் மீதான தடை குறித்து கிராம பஞ்சாயத்து
ஒப்பந்தக்காரர்களுக்கும் தெரிவிக்கிறோம். இந்த விஷயங்கள் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்படும். சீனப் பொருட்களின் விற்பனை
மற்றும் கொள்முதலை தடை செய்யுமாறு இங்குள்ள மக்களுக்கும் கடைகளுக்கும் தெரிவிக்க உள்ளோம். இதற்கான பதாகைகள் மற்றும் சுவரொட்டிகளை ஒட்ட உள்ளோம்’ என்றார்.
30 வருடங்களுக்கு பின்னர் தன்னை ஆண் என கண்டுகொண்ட பெண்- அதிர்ச்சியில் கணவர்
30 வருடங்களுக்கு பின்னர் தன்னை ஆண் என கண்டுகொண்ட பெண்- அதிர்ச்சியில் கணவர்
சில நேரங்களில் பிறப்பின் அபூர்வத்தை நினைத்து வியக்காமல் இருக்க முடியவில்லை. அப்படி ஒரு சம்பவம் தான் மேற்குவங்காளத்தில் நிகழ்ந்துள்ளது.
30 வருடங்களுக்கு பின்னர் தன்னை ஆண் என கண்டுகொண்ட பெண்
கோப்புப்படம்
மம்தா பானர்ஜி ஆளுகிற மேற்கு வங்காள மாநிலத்தில், பிர்பம் நகரை சேர்ந்தவர் அந்தப் பெண். 30 வயது. கடந்த 9 ஆண்டுகளுக்கு
முன்பாக அவருக்கு ஒரு ஆணுடன் திருமணம் நடந்தது. இருவரும் இத்தனை ஆண்டுகளாக இனிய மணவாழ்க்கையை நடத்தி வந்திருக்கிறார்கள்.
இந்த நிலையில் அந்தப் பெண், அடிவயிற்றில் கடுமையான வலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்கு சிகிச்சை பெறுவதற்காக
அவர் கொல்கத்தா நகரத்தில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் புற்றுநோய் ஆஸ்பத்திரிக்கு சென்றார்.
அங்கு அவருக்கு புற்று நோய் மருத்துவ நிபுணர் டாக்டர் அனுபம் தத்தாவும், புற்றுநோய் அறுவை சிகிச்சை மருத்துவ நிபுணர் டாக்டர் சமன்தாசும் மருத்துவ பரிசோதனைகள் நடத்தினர்.
அதில் இதுவரை பெண்ணாக தோன்றி வந்த அந்த பெண், பெண்ணே அல்ல, ஆண் என கண்டறிந்து அதிர்ச்சியில் உறைந்து
போயினர். அவருக்கு பெண்ணுக்குரிய உடல் உறுப்புகள் இருந்தன. அவரது குரலும் பெண் குரல்தான். ஆனால் அவருக்கு பிறப்பிலேயே
கருப்பையும், சினைப்பைகளும் இல்லை என்பதை டாக்டர்கள் கண்டறிந்தனர். அந்தப் பெண்ணுக்கு மாதவிலக்கும் வந்தது இல்லையாம்.
இதுபற்றி டாக்டர் அனுபம் தத்தா கூறியதாவது:-
இவருக்கு நேர்ந்திருப்பது ஒரு அபூர்வமான நிலை ஆகும். இப்படி 22 ஆயிரம் பேரில் ஒருவருக்கு வாய்ப்பது உண்டு. இவருக்கு
ஆண்களுக்கு உரிய ‘எக்ஸ் ஒய் குரோமசோம்’ தான் உள்ளது. பெண்களுக்குரிய ‘எக்ஸ்எக்ஸ் குரோமசோம்’ இல்லை என பரிசோதித்து அறிந்தோம்.
அடிவயிற்றில் வலி என்று அவர் சொன்ன உடன் தேவையான பரிசோதனைகளை செய்தபோது, ஆண்களுக்கு
அமைந்திருக்கக்கூடிய விதைப்பைகள் அவருக்கு உடலுக்குள் அமைந்திருந்ததை கண்டோம்.
அவருக்கு பயாப்சி பரிசோதனை செய்தோம். அதில் அவருக்கு விதைப்பை புற்றுநோய் இருப்பதை கண்டோம். தற்போது அவருக்கு
கெமோதெரபி சிகிச்சை அளிக்கிறோம். அவரது உடல்நிலை ஸ்திரமாக உள்ளது.
அவருக்கு உடலுக்குள் விதைப்பைகள் அமைந்திருந்தாலும், அவை உரிய வளர்ச்சியை பெறவில்லை. டெஸ்டோஸ்டீரான்
ஹார்மோனும் சுரக்கவில்லை. அவரில் சுரந்துள்ள பெண் ஹார்மோன் காரணமாக அவர் பெண்ணைப் போன்ற தோற்றத்தை பெற்றுள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
பிறந்து வளர்ந்து 30 வருடங்களான நிலையில் அவர் தான் ஒரு பெண் அல்ல, ஆண் என அறியவந்தபோது, அவரது மனநிலை எப்படி
இருந்தது என்று கேட்டபோது டாக்டர் அனுபம் தத்தா நேரடியாக பதில் அளிக்கவில்லை.
ஆனால், “அவர் பெண்ணாகவே வளர்ந்திருக்கிறார். 9 வருடங்களுக்கு முன்பாக ஒரு ஆணை திருமணம் செய்து கொண்டுள்ளார். தற்போது அவருக்கும், அவரது கணவருக்கும்
நாங்கள் கவுன்சிலிங் (ஆலோசனை) தருகிறோம். அவர்கள் தங்கள் வாழ்க்கையை இப்படியே இணைந்தே தொடரும்படி கூறுகிறோம்” என கூறினார்.
இந்த தம்பதியர் ஒரு குழந்தை பெற்றுக்கொள்ள முயற்சித்து இருக்கிறார்கள். ஆனால் இந்த முயற்சி தோல்வியில் முடிந்து
இருக்கிறது. இந்த பெண்ணின் தாய்வழி சித்திமார் 2 பேருக்கும் கடந்த காலத்தில் இதே பிரச்சனை இருப்பது கண்டறியப்பட்டு இருக்கிறதாம்.
இதுபற்றி டாக்டர் அனுபம் தத்தா குறிப்பிடுகையில், “இது மரபணு கோளாறு. இப்போது இந்தப் பெண்ணை பரிசோதித்து அறிந்த பின்னர் அவரது 28 வயது சகோதரிக்கு பரிசோதனைகள்
நடத்தினோம். அவரும் இந்தப் பெண்ணைப்போலவே பெண் தோற்றத்தில் ஆணாகவே இருக்கிறார்” என்று கூறி அதிர வைத்தார்
முழங்காலுக்கும் மொட்டைத்தலைக்கும் பாஜக முடிச்சு -ப.சிதம்பரம் பதிலடி
முழங்காலுக்கும் மொட்டைத்தலைக்கும் பாஜக முடிச்சு -ப.சிதம்பரம் பதிலடி
சீன ஆக்கிரமிப்பை எப்படி, எப்பொழுது மோடி அரசு அகற்றப்போகிறது என்ற கேள்விக்கு ஏன் இதுவரை பதில் இல்லை? என முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.
முழங்காலுக்கும் மொட்டைத்தலைக்கும் பாஜக முடிச்சு போடுகிறது- ப.சிதம்பரம் பதிலடி
ப.சிதம்பரம்
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில், பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு பணம்
திருப்பி விடப்பட்டதாகவும், பொதுமக்களுக்கான நிவாரண நிதியை குடும்ப அறக்கட்டளைக்கு திருப்பி விடுவது பெரிய மோசடி என்றும் பாஜக தலைவர் ஜே.பி. நட்டா குற்றம்சாட்டினார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
2005 ஆம் ஆண்டில் ராஜீவ் காந்தி அறக்கட்டளை அந்தமான் தீவுகளில் சுனாமி நிவாரணப் பணிகளுக்காகப் பிரதமர் நிவாரண
நிதியிலிருந்து ரூ.20 லட்சம் பெற்றது உண்மைதான். ஒவ்வொரு ரூபாயும் நிவாரணப் பணிகளுக்குச் செலவழிக்கப்பட்டு கணக்கு சமர்ப்பிக்கப்பட்டது. இதில் என்ன தவறு?
2005 நிவாரணப் பணிக்கும் 2020 சீன ஆக்கிரமிப்புக்கும் என்ன தொடர்பு? முழங்காலுக்கும் மொட்டைத்தலைக்கும் பாஜக முடிச்சு போடுகிறது!
சீன ஆக்கிரமிப்பை எப்படி, எப்பொழுது மோடி அரசு அகற்றப்போகிறது என்ற கேள்விக்கு ஏன் இதுவரை பதில் இல்லை?
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
பாடசாலைகள் முதற்கட்டமாக எதிர்வரும் திங்கட்கிழமை திறப்பு
பாடசாலைகள் முதற்கட்டமாக எதிர்வரும் திங்கட்கிழமை திறப்பு
கொரோனா வைரஸ் தாக்கத்தினால் மூடப்பட்டிருந்த பாடசாலைகளை மீண்டும் திறக்கும் நடவடிக்கையின்கீழ்
முதற்கட்டத்தின் கீழான பாடசாலைகள் எதிர்வரும் திங்கட்கிழமை திறக்கப்படவுள்ளன.
பாடசாலை அதிபர்கள், பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், பாடசாலை முகாமைத்துவம், கல்விசாரா ஊழியர்கள் போன்றோர்
ஆகியோருக்காக அன்றைய தினம் பாடசாலைகள் திறக்கப்டவருப்பதாக கல்வி அமைச்சின் செயலாளர் என்.எச்.எம். சித்திரானந்த தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர்களுடனான சந்திப்பில் செயலாளர் மேலும்
தெரிவிக்கையில்,,தொற்று நீக்கம் செய்தல், தூய்மைபடுத்துதல், பாடங்களுக்கான நேர அட்டவணை தயாரித்தல் போன்ற
பணிகளில் இவர்கள் ஈடுபடுவார்கள். இரண்டாம் கட்ட நடவடிக்கைகள் அடுத்த மாதம் 6ஆம் திகதி
ஆரம்பமாகவிருக்கின்றன. அன்றைய தினத்தில் தரம் 5ஆம், 11ஆம், 13ஆம் ஆண்டுகளைச் சேர்ந்த மாணவர்கள் பாடசாலைகளுக்குச்
செல்வது அவசியமாகும். பத்தாம், 12ஆம் தரங்களில் கற்கும் மாணவர்கள் ஜூலை மாதம் 20ஆம் திகதி பாடசாலைகளுக்கு அழைக்கப்படவிருக்கிறார்கள் என்றார்.
முககவசம் அணிவது கட்டாயம் – பொலிஸ்
முககவசம் அணிவது கட்டாயம் – பொலிஸ்
இலங்கையில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை ஏற்படும்
அச்சுறுத்தலுக்கு
மத்தியில் முககவசம் அணிவது மிக அவசியமாகும் என்று பிரதி பொலிஸ் மா அதியர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
சுகாதார விதி முறைகளுக்கு மாறாக செயல்படுவோருக்கு எதிராக சட்ட சடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறிளார்.
வவுனியா ஓமந்தையில் விபத்து20 பேர் காயம்
வவுனியா ஓமந்தையில் விபத்து20 பேர் காயம்
வவுனியா ஓமந்தை மத்திய மகா வித்தியாலயத்திற்கு அருகில் இன்று (27) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் 20 பேர் காயமடைந்துள்ளனர்.
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற சொகுசு பஸ் வண்டி ஒன்றே இவ்வாறு விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
விபத்தில் காயமடைந்தவர்கள் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தில் காயமடைந்த 15 பேர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ள நிலையில் ஏனைய 5 பேரும் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
பஸ்ஸின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனமையே விபத்துக்கான காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.








