Posted in இலங்கை செய்திகள்

தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் கிளிநொச்சிக்கு விஜயம்

தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் கிளிநொச்சிக்கு விஜயம்

தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இன்றைய தினம் (13) மாலை 5.30 மணியளவில் கிளிநொச்சிக்கு விஜயம் செய்தார்.

கிளிநொச்சி மாவட்டச்செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபருடன் கலந்துரையாடினார்.

நடைபெறவுள்ள தேர்தல் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற பணிகள் குறித்து கேட்டறிந்து கொண்டார்.

இந்த கலந்துரையாடலில் தேர்தல் ஆணையாளர் உள்ளிட்ட குழுவினர் மற்றும் கிளிநொச்சி மாவட்ட உதவி தேர்தல்கள் ஆணையாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

      Posted in உலக செய்திகள்

      சிபிஎஸ்இ பாடதிட்டத்தில் அரசியலமைப்பின் அடிப்படைக்கருத்துகளை நீக்கியதற்கு சீமான் கண்டனம்!

      சிபிஎஸ்இ பாடதிட்டத்தில் அரசியலமைப்பின் அடிப்படைக்கருத்துகளை நீக்கியதற்கு சீமான் கண்டனம்!

      இந்திய அரசியலமைப்பின் அடிப்படைக்கருத்துகளை மத்திய இடைநிலைக்கல்வி வாரியத்தின் பாடத்தொகுப்பிலிருந்து நீக்கியது பன்முகத்தன்மைக்கு எதிரான ஒற்றைமயமாக்கலின் மற்றொரு

      வடிவமே! என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில்…


      கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கினால் நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் யாவும் மூடப்பட்டுள்ள நிலையில் 2020-21 ஆம் ஆண்டுக்கான சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் 9-12ஆம் வகுப்புக்கான பாடங்களை 30 விழுக்காடு குறைப்பதாகக் கூறி, இந்திய அரசியலமைப்புச்சட்டத்திலுள்ள அடிப்படையானக்கருத்துகளை மொத்தமாக நீக்கியிருப்பது பேரதிர்ச்சி தருகிறது. தற்காலப்பேரிடர் சூழலிலும் தனது ஒற்றைமயமாக்கல் நடவடிக்கைகளை வீரியமாய்ச் செய்து வரும் மத்தியில் ஆளும் பாஜக அரசு, அதன் நீட்சியாகவே தற்போது பாடத்திட்டத்தில் கைவைத்து, இந்நாட்டின் அடிப்படைக்கட்டமைப்புத் தூண்களாக இருக்கிற சனநாயகம், மதச்சார்பின்மை, பன்முகத்தன்மை போன்றவற்றைப் பாடத்தொகுப்பிலிருந்து நீக்கி அறிவித்திருக்கிறது. பள்ளியில் பயிலும் பிஞ்சுகளின் உள்ளத்திலிருந்து சனநாயகம், மதச்சார்பின்மை, குடியுரிமை குறித்த சிந்தனைகளையே அகற்ற முயலும் மத்திய அரசின் பாசிச நடவடிக்கைகள் நாட்டின் ஒருமைப்பாட்டையே குலைக்கும் பேராபத்தாகும்.

      9ஆம் வகுப்புப் பாடத்திட்டத்தில் சனநாயக உரிமைகள் எனும் பாடமும், 10ஆம் வகுப்புப் பாடத்திட்டத்தில் சனநாயகம், பன்முகத்தன்மை, பாலினம், சாதி, சமயம், இயக்கங்கள்,

      போராட்டங்கள், சனநாயகத்திற்கு எதிரான சவால்கள் உள்ளிட்டவைகளும், 11ஆம் வகுப்புப் பாடத்திட்டத்திலிருந்து

      குடியுரிமை, தேசியவாதம், மதச்சார்பின்மை, கூட்டாட்சி, உள்ளாட்சி அமைப்புகள் உள்ளிட்டவைகளும், 12ஆம் வகுப்புப்

      பாடத்திட்டத்திலிருந்து பாகிஸ்தான், மியான்மர், வங்காளதேசம், இலங்கை மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளுடனான

      வெளியுறவுக்கொள்கைகள், மாறிவரும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி திட்டக்குழு, பணமதிப்பிழப்பு, இந்தியாவில் சமூக இயக்கங்கள் போன்ற அத்தியாயங்களும் நீக்கப்பட்டுள்ளன.

      இந்நாடு கொண்டிருக்கிற பன்முகத்தன்மை, மதச்சார்பின்மை எனும் மகத்தானக்கோட்பாடுகளை அடுத்தத் தலைமுறைக்குக் கடத்துவதைத் தடுக்கும்வகையில் அவற்றைப்

      பாடத்திட்டத்திலிருந்தே அப்புறப்படுத்தும் பாஜக அரசின் எதேச்சதிகாரச் செயல்பாடுகள் ஒற்றைமயக்காலின் மற்றொரு வடிவமே! மக்களாட்சிக்கும், சனநாயகத்திற்குமே ஊறு விளைவித்து

      இந்நாட்டின் அடிப்படைக்கட்டமைப்பையே ஒவ்வொரு நகர்வின் மூலமாகத் தகர்க்க முயலும் பாஜக அரசின் படுபாதக

      நடவடிக்கைகள் யாவும் வன்மையான கண்டனத்திற்குரியது. இதற்கெதிராக தேசிய இனங்களும், மாநிலக் கட்சிகளும், சனநாயக

      ஆற்றல்களும் அணிதிரண்டு அதனை முறியடிக்க வேண்டியது தற்காலத்தின் பெருங்கடமையாகிறது.

      Posted in உலக செய்திகள்

      இந்திய ‘டிஜிட்டல் பொருளாதாரத்தை’ ஊக்குவிக்க கூகுள் நிறுவனம் 75,000 கோடி ரூபாய் முதலீடு!

      இந்திய ‘டிஜிட்டல் பொருளாதாரத்தை’ ஊக்குவிக்க கூகுள் நிறுவனம் 75,000 கோடி ரூபாய் முதலீடு!

      இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் நோக்கில், கூகுள் நிறுவனம் 75,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இது குறித்த தகவலை கூகுள்

      நிறுவனத்தின் சி.இ.ஓ சுந்தர் பிச்சை, அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.


      அவர், “இந்திய டிஜிட்டல் பொருளாதாரத்தை வளர்க்க 10 பில்லியன் டாலர் முதலீட்டை நாங்கள செய்ய உள்ளோம். பிரதமர் நரேந்திர

      மோடியின் கனவான டிஜிட்டல் இந்தியா திட்டத்தை ஆதரிப்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்” என ட்விட்டர் மூலம் கூறியுள்ளார்.

      மேலும் அவர், “இந்தியாவின் எதிர்காலம் குறித்து நாங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை மற்றும் டிஜிட்டல் பொருளாதாரத்தின் மீது எங்களுக்கு இருக்கும் ஆர்வத்தையே எங்களது நடவடிக்கை பிரதிபலிக்கிறது” என்றுள்ளார்.

      அடுத்த 5 முதல் 7 ஆண்டுகளுக்கு இந்த 75,000 கோடி ரூபாய் முதலீடானது இந்தியாவில் செய்யப்படும் எனத் தெரிவித்துள்ள

      கூகுள், ஈக்வட்டி முதலீடுகள் மற்றும் பல்வேறு ஒப்பந்தங்கள் மூலம் அது செயல்படுத்தப்படும் எனக் கூறியுள்ளது.

      இந்தத் திட்டம் குறித்து கூகுள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவை டிஜிட்டல் வசமாக மாற்ற இந்தத் திட்டமானது 4 வகையில் கவனம் செலுத்தும். முதலாவது, ஒவ்வொரு

      இந்தியனுக்கும் அவனது தாய் மொழியிலேயே, மிகவும் மலிவான விலையில் தகவல் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

      இரண்டாவது, இந்தியாவின் தனிப்பட தேவைக்கு ஏற்றது போல செயல்பாடுகளில் ஈடுபடுவது. மூன்றாவது, டிஜிட்டல்

      பரிமாற்றத்துக்குத் தயாராகும் வியாபரங்களுக்கு துணைபுரிவது. நான்காவது, சமூக நன்மைக்காக தொழில்நுட்பம் மற்றும் ஏஐ

      உள்ளிட்டவற்றை பயன்படுத்துவது. குறிப்பாக சுகாதாரம், கல்வி மற்றும் விவசாயத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது” என விளக்கியுள்ளது.

      கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள பெரும் தாக்கம் குறித்துப் பேசியுள்ள கூகுள், “நம் சுகாதாரம் குறித்தும் பொருளாதாரம்

      குறித்தும் எழுந்துள்ள சவால்கள், இனி நாம் எப்படி வேலை பார்ப்பது மற்றும் எப்படி வாழ்வது என்பது குறித்து சிந்திக்க வைத்துள்ளது.

      எனவே எங்கள் இலக்கானது, அடுத்து வரும் கண்டுபிடிப்பு அலையில் இந்தியா பயனடைவதை மட்டும் உறுதி செய்யாமல்,

      அதை முன்னின்று வழிநடத்துவதிலும் துணை புரிவோம்,” எனக் கூறியுள்ளது.

          Posted in உலக செய்திகள்

          நெல்சன் மண்டேலாவின் மகள் திடீர் மரணம்

          நெல்சன் மண்டேலாவின் மகள் திடீர் மரணம்

          தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் அதிபரான நெல்சன்

          மண்டேலாவின் இளைய மகள் ஜிண்ட்சி மண்டேலா மருத்துவமனையில் காலமானார்.

          நெல்சன் மண்டேலாவின் மகள் காலமானார்
          ஜிண்ட்சி மண்டேலா

          தென் ஆப்பிரிக்காவில், இன வெறியை எதிர்த்துப் போராடியவர் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா. இவர் கடந்த 2013-ம் ஆண்டில் காலமானார்.

          இவரது மனைவி வின்னி மண்டேலாவும் இன வெறியை எதிர்த்துப் போராடி உள்ளார். கடந்த 2018-ம் ஆண்டில் வின்னி காலமானார்.

          இந்நிலையில், நெல்சன் மண்டேலாவின் இளைய மகள் ஜிண்ட்சி மண்டேலா (59), ஜோகனஸ்பர்க்கில் உள்ள மருத்துவமனையில்

          காலமானார். அவரது இறப்புக்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.

          ஜிண்ட்ஸி மண்டேலா டென்மார்க் நாட்டின் தூதராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது

          நெல்சன் மண்டேலாவின்
          நெல்சன் மண்டேலாவின்
          Posted in இலங்கை செய்திகள்

          பாதுகாப்பு நடவடிக்கைக்காகவே பாடசாலைகள் ஒரு வாரத்திற்கு திறப்பது தள்ளி வைப்பு

          பாதுகாப்பு நடவடிக்கைக்காகவே பாடசாலைகள் ஒரு வாரத்திற்கு திறப்பது தள்ளி வைப்பு

          பாடசாலைகளை ஒரு வாரத்திற்கு ஒத்திவைத்துள்ளமை பாதுகாப்பு நடவடிக்கையாகும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

          இருப்பினும் பொது மக்கள் இது தொடர்பில் கூடுதலான கவனம் செலுத்த வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார். கடந்த சில வாரங்களாக பொது மக்கள் சுற்றுலாப்பயணங்களில் ஈடுபடவில்லை. தம்மைப்போன்று ஏனையோரின் சுகாதார பாதுகாப்பு தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும்.

          நாடு திறக்கப்பட்டமை பொருளாதாரத்தைப் போன்று தமது வாழ்வாதார தேவைகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்கே ஆகும். இருப்பினும் கொரோனா வைரஸ் தொற்று அபாயம் நீங்கவில்லை என்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

          பொது தேர்தலை நடத்துவதைப் போன்று ஏனைய நடவடிக்கைகள் தொடர்பில் வழங்கப்பட்ட சுகாதார வழிகாட்டி ஆலோசனைகளுக்கு நடைமுறையில் அதிகாரம் வழங்குவது மிக முக்கியமானதாகும். இது தொடர்பில் சம்பந்தப்பட்ட வர்த்தமானி அறிவிப்பை வெளியிடுவது தொடர்பில் சுகாதார அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

          அநுராதபுரம், ,ராஜாங்கனை பிரதேசத்தில் சமீபத்தில் இடம்பெற்ற மரண நிகழ்வு மற்றும் அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற தான நிகழ்வு சுகாதார வழிகாட்டி ஆலோசனைகளை மீறிய வகையில் இடம்பெற்றுள்ளது என்றும் கூறினார்.

          இதனூடாக இந்த பிரதேசத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவியதாக அனில் யாசிங்க தெரிவித்துள்ளார். கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் பணியாற்றிய ஆலோசகர் ஊடாக ராஜாங்கனை பிரதேசத்தில் நடைபெற்ற தான நிகழ்வில் கலந்துகொண்டோருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாகவும் தற்பொழுது இந்த பிரதேசத்தில் கொரோனா தொற்று நோயாளிகள் 12 பேர் பதிவாகியிருப்பதாகவும் அவர் கூறினார்.

          தற்பொழுது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டி ஆலோசனைகளை கடைப்பிடிக்காத இடங்களில் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதற்கு உள்ள சூழ்நிலைக்கு இது சிறந்த உதாரணமாகும் என்று தெரிவித்த வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க இது தொடர்பில் பொது மக்கள் அவதானத்துடன் செயற்படவேண்டும் என்றும் தெரிவித்தார்.

          நாட்டை வழமை நிலைக்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை மேற்கொண்ட போதிலும் பொது மக்கள் தேவையற்ற வகையில் செயற்படுகின்றனர். இது தொடர்பில் பொது மக்கள் மீண்டு சிந்திப்பது மிக முக்கியமானதாகும்.

          Posted in இலங்கை செய்திகள்

          இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக யாழ் வருவோரின் எண்ணிக்கை அதிகம் – யாழ்அரசாங்க அதிபர்

          இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக யாழ் வருவோரின் எண்ணிக்கை அதிகம் – யாழ்அரசாங்க அதிபர்

          யாழில் இரண்டாவது கொரோனா அலையினை வெற்றிகரமாக முறியடிப்பதற்கு அனைத்து பொதுமக்களும் சுகாதார

          திணைக்களத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

          தற்போது கொரோனாஅபாயம் மீண்டும் ஆரம்பித்துள்ள நிலையில் , யாழ்ப்பாணத்தில் தற்போதைய நிலைமை தொடர்பில்

          ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

          யாழ்ப்பாண குடாநாட்டில் ஆரம்பத்தில் 16 பேர் தொற்றுக்குள்ளாகியிருந்த நிலையில் தற்போது 14 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள். இவர்களில்

          மூன்று குடும்பம் கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்துக்குச் சென்று வந்தவர்கள் என்ற அடிப்படையிலும், ஒரு குடும்பம் வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து வருகை தந்தவரின் குடும்பம் என்ற

          அடிப்படையிலும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள் மொத்தமாக நான்கு குடும்பங்களை சேர்ந்த 14 பேர் சுயதனிமைப்படுத்தலுக்கு

          உட்படுத்தப்பட்டிருக்கின்றார்கள் யாழ்மாவட்டத்தில் கொரோனா தொற்றினை தடுக்கும் செயற்பாடானது சுகாதார திணைக்களம் ஏனைய திணைக்களங்கள் மூலம் செயல்படுத்தப்படுகிறது.

          பொதுமக்களுடைய செயற்பாட்டின் மூலமே யாழில்கொரோனாவை கட்டுப்படுத்தி வைத்திருக்கின்றோம் தற்பொழுது இது சமூகத் தொற்றாக உருவாக கூடிய அபாயம்

          காணப்படுவதாக உணரப்படுகின்றது.
          இந்த நிலையில் இரண்டாவது அலையாக அதாவது முன்னரோடு ஒப்பிடும்போது நாளாந்தம் அறிக்கையிடப்படுகின்ற புள்ளி

          விவரங்களைப் பார்க்கும் போது நோயாளர்களின் எண்ணிக்கை சற்று கூடுதலாகவே காணப்படுகின்றது.


          யாழ் குடாநாட்டில் உள்ள அனைத்து பொதுமக்களும் மிகவும் விழிப்பாக இருந்து இந்த நிலைமையைச் சமாளிப்பதற்கு எமக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் . சுகாதார பிரிவினரின்

          சுகாதாரநடைமுறைகளை பின்பற்றி தேவையற்ற பயணங்களை தவிர்த்து மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும்.

          பாடசாலைகளுக்கு இன்றிலிருந்து ஒரு கிழமைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அலுவலகங்கள் யாவும் சீராக இயங்கி வருகின்றன. எனினும் தேவையுடையவர்கள் மட்டும்

          அலுவலகங்களுக்கு வருகைதந்து தங்களுடைய தேவைகளை பெற்றுக்கொள்ள முடியும் . அதே வேளையில் ஏனைய பொது

          தொடர்பு மற்றும் ஏனைய செயற்பாடுகளிலும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி பொது மக்கள் தமது அன்றாட

          தேவைகளை பூர்த்தி செய்யுமாறும் அரசாங்க அதிபர் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டார்.

          அதே நேரத்தில் இன்னுமொரு அபாயம் யாழ்ப்பாண மாவட்டத்திலே காணப்படுகின்றது. தற்போது இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக யாழ் குடாநாட்டுக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகமாக

          காணப்படுகின்றது. அதாவது நேற்று முன்தினம் கூட நான்கு பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள்.

          அவர்களுக்குரிய சட்ட நடவடிக்கை பொலீஸ் மற்றும் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

          யாழ்ப்பாணம் பாதுகாப்பாக இருக்க வேண்டுமாக இருந்தால் இவ்வாறு சட்டவிரோதமாக வருபவர்களை தடுக்க வேண்டும். அதாவது உங்களுடைய உறவினர்களோ அல்லது உங்களுக்கு

          தெரிந்தவர்களோ இவ்வாறான விடயங்களை அறிந்திருந்தால் அது தொடர்பில் அருகில் உள்ள கிராம சேவையாளர் அல்லது போலிசார் அல்லது அதற்குரிய அதிகாரிகளுக்கு உடனடியாக

          தெரியப்படுத்துங்கள். மேலும் எங்களுடைய யாழ் குடாநாட்டை கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பது பொதுமக்களுடைய கைகளில் தான் தற்போது இருக்கின்றது சுகாதார சுகாதார

          துறையினரின் அறிவுறுத்தலுக்கு ஆலோசனைகளுக்கு முக்கியத்துவம் வழங்கி அதனை பின்பற்றுவதன் மூலமே

          யாழ்ப்பாணத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என்றும் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் மேலும் தெரிவித்தார்.

              Posted in இலங்கை செய்திகள்

              ரயில்,பேருந்துகளில் உணவுகள் ,பொருட்கள் விற்க தடை – கோட்டா அரசு சாதனை

              கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் அனைத்து அரச மற்றும் தனியார் பஸ்களில் மேற்கொள்ளப்படும் பல்வேறு விற்பனை நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துவதற்கு நடவடிக்கை

              மேற்கொள்ளுமாறு போக்குவரத்து சேவைகள் முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தேசிய போக்குவரத்து ஆணைக்குழு

              மற்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

              சில நடமாடும் வியாபாரிகளால் சுகாதார முறைகளை பின்பற்றாது விற்பனை நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக பயணிகளிடமிருந்து

              போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சுக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

              ரயில்வே திணைக்களத்தினால் கடந்த மார்ச் மாதத்திலிருந்து ரயிலில், நடமாடும் வியாபாரிகள் பிரவேசிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

              சில நடமாடும் வியாபாரிகளால் தனியார் மற்றும் ,லங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களில் உணவு

              பொருட்கள், குடிநீர் போத்தல்கள் மற்றும் பழவகைகள் விற்பனை செய்யப்படுகின்றன.

              எனவே அவர்களால் சுகாதார பாதுகாப்பு வழிமுறைகள் முறையாக பின்பற்றாமல் மேற்கொள்ளப்பட்ட ,த்தகைய வியாபார

              நடவடிக்கைகளால் கொரோனா வைரஸ் தொற்று பரவக்கூடிய சாத்தியம் அதிகளவில் காணப்படுவதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

              அகையால், உடனடியாக ,ந்த நடமாடும் வியாபார நடவடிக்கைகளை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு

              அறிவுறுத்தியுள்ள அமைச்சர் மஹிந்த அமரவீர, ,ந்த நிலைமையைகட்டுப்படுத்த பாதுகாப்பு பிரிவினரின் ஒத்துழைப்பையும் பெற்றுக்கொள்ளுமாறு அறிவித்துள்ளார்.

                  Posted in இலங்கை செய்திகள்

                  பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று ஆரம்பம்

                  பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று ஆரம்பம்

                  பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புகளின் முதற்கட்டம் இன்று ஆரம்பமாகின்றது.

                  அதன்படி, சுகாதார பணியாளர்கள், குடும்ப சுகாதார சேவையாளர்கள் உள்ளிட்டோர் இன்றைய தினம் வாக்களிக்க

                  அனுமதிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

                  இன்று காலை 9.00 மணி முதல் பிற்பகல் 4.00 மணி வரை வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளன.

                  இதேவேளை நாளை (14) மற்றும் நாளை மறுதினங்களில் (15) அரச பணியாளர்களுக்கும், 16ஆம் 17ஆம் திகதிகளில் பொலிஸார்

                  மற்றும் முப்படையினரும் தபால் மூலம் வாக்களிக்க முடியும். இவ் திகதிகளில் வாக்களிக்க தவறும் வாக்காளர்கள் 20ஆம், 21ஆம் திகதிகளிலும் தபால் மூலம் வாக்களிப்புக்க முடியும்.

                  Posted in இலங்கை செய்திகள்

                  கடல்வழியாக இலங்கைக்குள் நுழைய முயன்றவர்கள் கடல்படையால் கைது

                  கடல்வழியாக இலங்கைக்குள் நுழைய முயன்றவர்கள் கடல்படையால் கைது

                  2020 ஜூலை 11 ஆம் திகதி யாழ்ப்பாணத்தின் தொண்டமனாறுக்கு வடக்கே கடல்களில் மேற்கொள்ளப்பட்ட ஒரு சிறப்பு தேடுதல்

                  நடவடிக்கையின் போது கடல் வழியாக சட்டவிரோதமாக இடம்பெயர முயன்ற 04 நபர்களுடன் ஒரு டிங்கியைக் இலங்கை கடற்படை கைது செய்தது.

                  அதன்படி, வடக்கு கடற்படை கட்டளை யாழ்ப்பாணத்தின் தோண்டமன்னாறு வடக்கே 11 கடல் மைல் தொலைவில் இந்த டிங்கியைக் கண்டது. இவர்களில் இருவர் இந்தியாவில் இருந்து

                  குடியேற முயன்ற இலங்கையர்கள் என்றும் மற்றைய இருவர் ஜூலை 10 ஆம் திகதி பருத்தித்துறை வழியாக சர்வதேச

                  கடல்களுக்கு ஐ.எம்.பி.எல் கடந்து புலம்பெயர்ந்தோருக்கு போக்குவரத்து வழங்குவதற்காக பயணம் செய்ததாகவும் தெரியவந்துள்ளது.

                  மேலும், இந்த இருவரும் வல்வெட்டித்துறை மற்றும் முல்லைத்தீவு பகுதிகளில் முந்தைய குடியிருப்பாளர்கள் என அடையாளம் காணப்பட்டனர். அவர்களில் ஒருவர் முன்னாள் விடுதலைப்

                  புலிகளின் உறுப்பினர், அவர் சுவாசக் கோளாறு காரணமாக சிகிச்சைக்காக யாழ்ப்பாண போதனா மருத்துவமனையில்

                  அனுமதிக்கப்பட்டார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 21-52 வயதுக்கு உட்பட்டவர்கள்.

                  Posted in இலங்கை செய்திகள்

                  அதிக இலாபம் பெற வேண்டுமானால் பெறுமதி சேர்க்கப்பட்ட பொருட்களை ஏற்றுமதி செய்யுங்கள் – ஜனாதிபதி

                  அதிக இலாபம் பெற வேண்டுமானால் பெறுமதி சேர்க்கப்பட்ட பொருட்களை ஏற்றுமதி செய்யுங்கள் – ஜனாதிபதி

                  விவசாயப் பொருட்களை ஏற்றுமதி செய்யும்போது பெறுமதி சேர்க்கப்பட்ட பொருட்களுக்கு முன்னுரிமையளித்து அதிக இலாபம்

                  ஈட்டுவதற்கு முயற்சிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் விவசாயிகளிடம் தெரிவித்தார்.

                  மிளகு மீள் ஏற்றுமதி முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. எனவே விதைகள், தூள் அல்லது வேறு ஆக்கப்பெற்ற பொருட்களாக பொதியிடப்பட்ட மிளகை ஏற்றுமதி செய்யுமாறு ஜனாதிபதி

                  அவர்கள் விவசாயிகளுக்கு தெரிவித்தார். பெறுமதி சேர்க்கும் முறைமையை பின்பற்றி அதிக அந்நியச் செலாவணியை ஈட்ட முடியுமென்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

                  பொதுஜன முன்னணியில் பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்காக நேற்று(12)

                  இரண்டாவது நாளாகவும் கண்டி மாவட்டத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு ஹசலக்கவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள்

                  சந்திப்பில் கலந்துகொண்டு ஜனாதிபதி அவர்கள் இதனைத் தெரிவித்தார்.

                  உடுதும்பர ஹசலக்க நவரத்ன விளையாட்டரங்கிலும் ஹசலக்க சந்தை வளாகத்திலும் இடம்பெற்ற மக்கள் சந்திப்புகள் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தையினால் ஏற்பாடு

                  செய்யப்பட்டிருந்தது. இடைத்தரகர்களிடம் அகப்பட்டு விடாது நெல் அறுவடைகளை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு விலைக்கு வழங்குமாறு ஜனாதிபதி அவர்கள் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

                  காட்டு யானைகளின் பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் ஜனாதிபதி அவர்கள் கிராமவாசிகளிடம் தெரிவித்தார். மினிப்பே பிரதேசவாசிகள்

                  முகங்கொடுத்துள்ள குடிநீர் பிரச்சினை குறித்தும் ஜனாதிபதி அவர்கள் இதன்போது கவனம் செலுத்தினார்.

                  ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் க.பொ.த உயர்தரம் வரை கல்வி கற்பதற்கான வசதிகளைக்கொண்ட பாடசாலை ஒன்று ஹசலக்க பிரதேசத்தில் இல்லாமையினால் பிள்ளைகள் எதிர்நோக்கும்

                  கஷ்டங்கள் குறித்தும் மக்கள் ஜனாதிபதியிடம் தெரிவித்தனர். முன்னாள் ஆளுநர் சரத் ஏக்கநாயக்கவும் இச்சந்திப்பில் கலந்துகொண்டார்.

                  Posted in இலங்கை செய்திகள்

                  வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவரும் நடவடிக்கை நிறுத்தம்

                  வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவரும் நடவடிக்கை நிறுத்தம்

                  வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவரும்

                  நடவடிக்கை நாளை (14) முதல் தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளது.

                  வெளிநாட்டு தொடர்புகள் தொடர்பான ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் எட்மிரல் ஜயநாத் கொலம்பகே இதனை கூறினார்.

                  நாட்டில் உள்ள தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் காணப்படும்

                  இடப்பற்றாக்குறையை கவனத்தில் கொண்டே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

                  கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் அதிகளவான கொவிட் 19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை

                  தொடர்ந்து அவர்களுடன் நெருங்கி பழகியவர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

                  Posted in இலங்கை செய்திகள்

                  அரச ஊழியர்களின் எதிர்காலத்தை ஐ.தே.க.வால் உறுதிப்படுத்த முடியாது- மகிந்த

                  அரச ஊழியர்களின் எதிர்காலத்தை ஐ.தே.க.வால் உறுதிப்படுத்த முடியாது- மகிந்த

                  அரச ஊழியர்களின் உரிமைகளுக்காக முன்நிற்பது அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பும் கடமையும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

                  அரச ஊழியர்கள் பழிவாங்கல் நடவடிக்கைக்கு உட்படுத்தப்படும் யுகம் மீண்டும் உருவாக இடமளிக்க போலதில்லை எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

                  மொறட்டுவ பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றிலேயே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

                  தொடர்ந்தும் உரையாற்றிய பிரதமர், தமது ஆட்சி காலத்திலேயே அரச ஊழியர்கள் பாதுகாக்கப்பட்டதாக குறிப்பிட்டார்.

                  அதன் காரணமாகவே கொவிட் 19 தொற்றை கட்டுப்படுத்த முடிந்தாகவும், அரச ஊழியர்களின் எதிர்காலத்தை ஐக்கிய தேசிய கட்சியால் உறுதிப்படுத்த முடியாது எனவும் கூறினார்.

                  யுத்தத்திற்கு பின்னர் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி பணிகள் இடைநடுவில் கைவிடப்பட்டதாக தெரிவித்த பிரதமர், கடந்த அரசாங்கம் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து தேவையற்ற அச்சுறுத்தல்களை முன்னெடுத்தாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்

                  Posted in இலங்கை செய்திகள்

                  காவல்துறை அதிரடி வேட்டை 993 பேர் கைது

                  காவல்துறை அதிரடி வேட்டை 993 பேர் கைது

                  இலங்கையில் காவல்துறையினர் நடத்திய திடீர் தேடுதல்

                  நடவடிக்கையில் சுமார் 993 பேர் கைது செய்ய பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்

                  இவ்வாறு கைதானவர்கள் பலவேறு குற்ற செயல்களில்

                  ஈடுபட்டவர்கள் என தெரிவிக்க பட்டுள்ளது

                  Posted in உலக செய்திகள்

                  லண்டனில் இரு நாட்களில் 9 பேருக்கு கத்தி குத்து -மூவர் பலி

                  லண்டனில் இரு நாட்களில் 9 பேருக்கு கத்தி குத்து -மூவர் பலி

                  லண்டனில் இரண்டு வார விடுமுறை நாட்களில் நடந்த கத்தி குத்து தாக்குதலில் ஒன்பது பேர் படுகாயமடைந்துள்ளனர் ,இதில் மூவர் பலியாகியுள்ளனர்

                  பலியானவர்கள் பெங் ,குரைடன் பகுதியில் துப்பாக்கி சூடு இடம்பெற்றுள்ளது
                  இது போன்ற வேறு சில பகுதியிலும் இடம்பெற்றுள்ளது

                  இரு நாட்களில் ஒன்பது பேர் கத்தி குத்துக்கு உள்ளாகி காயமடைந்துள்ளதும் ,மேலும் மூவர் பலியாகியுள்ள செயல் காவல்துறையினரை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது

                  மேற்படி சம்பவங்கள் தொடர்பில் தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

                      Posted in உலக செய்திகள்

                      முக கவசம் அணியாமல் வெளியில் சென்றால் €2,500 தண்டம் – 6 மாதம் சிறை

                      முக கவசம் அணியாமல் வெளியில் சென்றால் €2,500 தண்டம் – 6 மாதம் சிறை

                      டப்பிலினில் புதிய சட்டம் திங்கட் கிழமை முதல் அமுலுக்கு வருகிறது


                      இங்கு பொது சேவைகளில் பேரூந்து ரயில் போன்றவை உள்ளடங்களாக, முக கவசம் அணியாமல் சென்றால் அவருக்கு

                      இரண்டாயிரத்து ஐநூறு யூரோக்கள் தண்டம் அறவிட படுவதுடன் ஆறுமாதம் சிறை தண்டனை வழங்க படும் என அறிவிக்க பட்டுள்ளது

                      எனவே டப்பிலின் மக்களே எச்சரிக்கை ,இது உங்களுக்குமான முக்கிய செய்தியாகும்

                          Posted in உலக செய்திகள்

                          தீயில் எரிந்து சிசு பலி – பெற்றவர்கள் தப்பி ஓட்டம் -அவுஸ்ரேலியாவில் நடந்த சோகம்

                          தீயில் எரிந்து சிசு பலி – பெற்றவர்கள் தப்பி ஓட்டம் -அவுஸ்ரேலியாவில் நடந்த சோகம்

                          தென்மேற்கு அவுஸ்ரேலியா Avon Dam Road in Bargo பகுதியில் உள்ள வீடு ஒன்றில் திடீரென தீப்பிடித்து பற்றி எரிந்தது .


                          இதன் பொழுது அங்கிருந்த மூவர் அந்த தீயில் இருந்து தம்மை தற்காத்து கொள்ள தப்பி ஓடினர்

                          ஆனால் தீயின் வேகமமான பரவலில் சிக்கிய சிசு ஒன்று அந்த தீயில் சிக்கி

                          மூச்சு திணறி உயிரிழந்துள்ளது
                          எரிகாயங்களுடன் சிசு சடலமாக மீட்க பட்டுள்ளது

                          தப்பிய மூவரும் பெரும் மூச்சு திணறலுக்கு உள்ளான நிலையில் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர்

                          இந்த தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை ,மேற்படி

                          தீ விபத்து தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

                          தீயில் எரிந்து சிசு
                          தீயில் எரிந்து சிசு
                              Posted in உலக செய்திகள்

                              அமெரிக்காவில் இரு போலீசார் சுட்டு கொலை -கறுப்பின கொலைக்கு பழிதீர்ப்பு

                              அமெரிக்காவில் இரு போலீசார் சுட்டு கொலை -கறுப்பின கொலைக்கு பழிதீர்ப்பு

                              கடந்த தினம் அமெரிக்கா McAllen, Texas பகுதியில் இரு காவல்துறை

                              ஊழியர்கள் மர்ம ஆயுததாரிகளினால் சுட்டு படுகொலை செய்ய பட்டனர்

                              கறுப்பினத்தவரை கழுத்தில் நெரித்து கொலை செய்ததும் அதன் பின்னர்

                              எழுந்த கறுப்பின நிறவெறிக்கு எதிராக அமெரிக்காவில் பெரும் பதட்டம் நிலவியது

                              இவ்வேளை இந்த படுகொலைக்கு எதிராக மக்கள் கிளர்ந்து எழுந்தனர் ,

                              அதன் தொடர்ச்சியாகவே இந்த காவலர்கள் சுட்டு படுகொலை இடம்பெற்று இருக்கலாம் என கருத்தை படுகிறது

                              39 மற்றும் 45 வயதுடைய காவலர்களே இவ்விதம் படுகொலை செய்ய பட்டுள்ளனர் ,

                              மேற்படி சம்பவம் அமெரிக்கா காவல்துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

                              அமெரிக்காவில் இரு
                              அமெரிக்காவில் இரு
                                  Posted in உலக செய்திகள்

                                  249 வருட தேவாலயத்தை எரித்த நெருப்பு – அமெரிக்காவில் துயரம்

                                  249 வருட தேவாலயத்தை எரித்த நெருப்பு – அமெரிக்காவில் துயரம்

                                  அமெரிக்கா கலிபோனியா பகுதியில் அமைய பெற்றுள்ள 249 வருடங்கள்

                                  பழமை வாய்ந்த தேவாலயம் ஒன்று திடீரென தீயில் எரிந்து நாசமாகியுள்ளது

                                  250 தாவது ஆண்டு விழாவை கோலா கலமாக கொண்டாட தயாராகி வந்த வேளை இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது

                                  இந்த தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை ,விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

                                  249 வருட தேவாலயத்தை
                                  249 வருட தேவாலயத்தை
                                      Posted in இலங்கை செய்திகள்

                                      போலீசார் திடீர் சுற்றிவளைப்பு தேடுதல்; -385 பேர் கைது

                                      போலீசார் திடீர் சுற்றிவளைப்பு தேடுதல்; -385 பேர் கைது

                                      கடந்த தினம் மேல்மாகாணத்தில் காவல்துறையின் சிறப்பு அணிகள் திடீர் சுற்றிவளைப்பு தேடுதலை நடத்தினர்

                                      இதன் போது சுமார் 385 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்

                                      இவர்களின் அதிகமானோர் போதைவஸ்து விற்பனையில் ஈடுபட்டவர்க்ளும்

                                      அதற்கு அடிமையாகி அதனை பாவித்தவர்களுமே கைது செய்ய பட்டுள்ளனர் என தெரிவிக்க பட்டுள்ளது

                                          கொத்து குண்டு தாக்குதலில் 12 சிறுவர்கள் மரணம் - சவூதி அட்டூழியம்
                                          Posted in இலங்கை செய்திகள்

                                          மீனவரை சுட்டு கொன்ற பொலிஸ் அதிகாரிகள் மூவர் பணி நீக்கம்

                                          மீனவரை சுட்டு கொன்ற பொலிஸ் அதிகாரிகள் மூவர் பணி நீக்கம்

                                          லுனாவ பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் மீனவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்புடைய பொலிஸ் அதிகாரிகள் மூவரும் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

                                          பொலிஸ் சார்ஜன் ஒருவர் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் இருவரே இவ்வாறு பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

                                          பதில் பொலிஸ்மா அதிபர் மேற்கொண்ட உள்ளக விசாரணைகளின் அடிப்படையில் கல்கிஸ்ஸ சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியின்

                                          உத்தரவிற்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.