Tag: சுந்தர் பிச்சை
சுந்தர் பிச்சை ஊழியர்களுக்கு மிரட்டல்
சுந்தர் பிச்சை ஊழியர்களுக்கு மிரட்டல்
சுந்தர் பிச்சை ஊழியர்களுக்கு மிரட்டல், நிறுவனத்தின் தலைவராக விளங்கக்கூடிய சுந்தர் பிச்சை அவர்கள் தற்பொழுது தனது ஊழியர்களுக்கு பகிரங்க அச்சுறுத்தல் அல்லது விரட்டலுடைய விடுத்துள்ளதாக செய்திகள் கசிந்துள்ளன.

கூகுள் நிறுவனம் உலக நிறுவனங்களில் மிக முக்கியமான நிறுவனம் ஒன்றாக காணப்படுகின்றது.
பல்வேறுபட்ட நிறுவனங்களை உருவாக்கி கூகுள் பலத்த சாதனைகளை உருவாக்கி இருக்கிறது .
மக்களோடு ஒன்றிணைக்கப்பட்டுள்ள இந்த கூகுள் மக்களும் google இல்லை என்றால் மக்கள் ; வாழ முடியாது என்ற சூழ்நிலை கூட கூகுள் நிறுவன உருவாக்கி இருக்கிறது .
அதன் அடிப்படையில் எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு மிகப்பெரும் முக்கியமான விடயங்களை தாங்கள் முன்னெடுக்கப்பட உள்ளதாகவும் அதன் பொழுது ரோபோக்களை இதற்குள் இணைத்து அதன் ஊடாக ஆர்ட்டிகள் இன்ஜினியரிங் பாவித்து பல்வேறுப்பட்ட விடயங்களை மேற்கொள்ள google திட்டமிட்டு இருக்கிறது.
இதனால் இதை உள்ளே கொண்டு வருகின்ற பொழுது மனித பயன்பாடு தவிர்க்கப்பட்டு அதன் ஊடாக பல்வேறுப்பட்ட நடவடிக்கை மேற்கொள்ள கூகிள் நிறுவன நிகழ்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது .
அவ்வாறு ரோபோக்கள் பயன்படுத்தப்பட்டால் பல லட்சக்கணக்கானவர்கள் வேலைவாய்ப்பு இழக்க வேண்டிய சூழல் உருவாகும் என்பதாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது .
அதற்கு ஒத்திசைவாக தற்போது சுந்தர் பிச்சை உடைய இந்த அச்சுறுத்தல் அல்லது மிரட்டலான பதில் வந்திருப்பதாக தெரிய வருகிறது.
- இஸ்ரேலுக்கு எதிராக கருது உரைத்தால் அமெரிக்கா கிரீன் கார்ட் இரத்து

- ஈரான் கடல் மூடல் உணவு தட்டு பாடு ஐநா

- ஈரான் எண்ணெய் வயல்கள் முடக்கம் அமெரிக்கா அறிவிப்பு

- லெபனானிலிருந்து ட்ரோன் ஊடுருவலுக்குப் பிறகு கலிலேயாவில் எச்சரிக்கை ஒலிகள்

- ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தில் இஸ்ரேலிய ராணுவ வீரர் நிகழ்வை மாணவர் முடக்கினார்

இந்திய ‘டிஜிட்டல் பொருளாதாரத்தை’ ஊக்குவிக்க கூகுள் நிறுவனம் 75,000 கோடி ரூபாய் முதலீடு!
இந்திய ‘டிஜிட்டல் பொருளாதாரத்தை’ ஊக்குவிக்க கூகுள் நிறுவனம் 75,000 கோடி ரூபாய் முதலீடு!
இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் நோக்கில், கூகுள் நிறுவனம் 75,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இது குறித்த தகவலை கூகுள்
நிறுவனத்தின் சி.இ.ஓ சுந்தர் பிச்சை, அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
அவர், “இந்திய டிஜிட்டல் பொருளாதாரத்தை வளர்க்க 10 பில்லியன் டாலர் முதலீட்டை நாங்கள செய்ய உள்ளோம். பிரதமர் நரேந்திர
மோடியின் கனவான டிஜிட்டல் இந்தியா திட்டத்தை ஆதரிப்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்” என ட்விட்டர் மூலம் கூறியுள்ளார்.
மேலும் அவர், “இந்தியாவின் எதிர்காலம் குறித்து நாங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை மற்றும் டிஜிட்டல் பொருளாதாரத்தின் மீது எங்களுக்கு இருக்கும் ஆர்வத்தையே எங்களது நடவடிக்கை பிரதிபலிக்கிறது” என்றுள்ளார்.
அடுத்த 5 முதல் 7 ஆண்டுகளுக்கு இந்த 75,000 கோடி ரூபாய் முதலீடானது இந்தியாவில் செய்யப்படும் எனத் தெரிவித்துள்ள
கூகுள், ஈக்வட்டி முதலீடுகள் மற்றும் பல்வேறு ஒப்பந்தங்கள் மூலம் அது செயல்படுத்தப்படும் எனக் கூறியுள்ளது.
இந்தத் திட்டம் குறித்து கூகுள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவை டிஜிட்டல் வசமாக மாற்ற இந்தத் திட்டமானது 4 வகையில் கவனம் செலுத்தும். முதலாவது, ஒவ்வொரு
இந்தியனுக்கும் அவனது தாய் மொழியிலேயே, மிகவும் மலிவான விலையில் தகவல் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இரண்டாவது, இந்தியாவின் தனிப்பட தேவைக்கு ஏற்றது போல செயல்பாடுகளில் ஈடுபடுவது. மூன்றாவது, டிஜிட்டல்
பரிமாற்றத்துக்குத் தயாராகும் வியாபரங்களுக்கு துணைபுரிவது. நான்காவது, சமூக நன்மைக்காக தொழில்நுட்பம் மற்றும் ஏஐ
உள்ளிட்டவற்றை பயன்படுத்துவது. குறிப்பாக சுகாதாரம், கல்வி மற்றும் விவசாயத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது” என விளக்கியுள்ளது.
கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள பெரும் தாக்கம் குறித்துப் பேசியுள்ள கூகுள், “நம் சுகாதாரம் குறித்தும் பொருளாதாரம்
குறித்தும் எழுந்துள்ள சவால்கள், இனி நாம் எப்படி வேலை பார்ப்பது மற்றும் எப்படி வாழ்வது என்பது குறித்து சிந்திக்க வைத்துள்ளது.
எனவே எங்கள் இலக்கானது, அடுத்து வரும் கண்டுபிடிப்பு அலையில் இந்தியா பயனடைவதை மட்டும் உறுதி செய்யாமல்,
அதை முன்னின்று வழிநடத்துவதிலும் துணை புரிவோம்,” எனக் கூறியுள்ளது.








