Author: நலன் விரும்பி
பொது சுகாதார பரிசோதகர்களின் கோரிக்கைகளையும் அரசாங்கம் மறு பரிசீலனை செய்ய வேண்டும் -இராதாகிருஷ்ணன்
பொது சுகாதார பரிசோதகர்களின் கோரிக்கைகளையும் அரசாங்கம் மறு பரிசீலனை செய்ய வேண்டும்
இராதாகிருஷ்ணன்
பொது சுகாதார பரிசோதகர்களின் கோரிக்கைகளையும் அரசாங்கம் மறு பரிசீலனை செய்ய வேண்டும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
பொது சுகாதார பரிசோதகர்கள் கொரோனா தோற்று கடமையிலிருந்து விலகி இருக்க தீர்மானித்திருப்பதாக தெரிவித்திருக்கும் கருத்து தொடர்பாக கருத்து
தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தலவாக்கலையில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும் பொழுதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்
இன்று உலகம் பூராவும் கொரோனா தொற்று பெரும் அளவில் பரவி வருகின்றது. இலங்கையிலும் கடந்த சில வாரங்களாக
ஒவ்வொருநாளும்கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் கண்டுபிடிக்கப் படுகிறார்கள்.
இவ்வாறான ஒரு சூழ்நிலையில் பொது சுகாதார பரிசோதகர்கள் தங்களுடைய கடமையில் இருந்து விலகி இருப்பது இந்த தொற்று பரவாமல் இருப்பதை தடுப்பதற்கு உகந்த ஒரு விடயமாக நான் கருதவில்லை.
எனவே அரசாங்கம் இவர்களை அழைத்து கலந்துரையாடி இவர்கள் கேட்கும் அந்த அதிகாரங்களை இவர்களுக்கு வழங்கி அவர்களையும் இணைத்துக் கொண்டு இந்த கொரோனா
தொடர்பான நடவடிக்கையில் ஈடுபட முடியுமாக இருந்தால் அதுவே வெற்றியான செயல்பாடாக இருக்கும் என நான் கருதுகின்றேன்.
கடந்த காலங்களில் பொது சுகாதார பரிசோதகர்கள் தங்களை
அர்ப்பணித்து இந்த கடமையில் ஈடுபட்டதை நாங்கள் காண முடியும் எனவே அனைவரையும் இணைத்துக் கொண்டு இந்த
பயணத்தை செல்வோமாக இருந்தால் மாத்திரமே கொரோனா தொற்று பரவுவதை தடுக்க முடியும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்


மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இதுவரை 5546 பீ.சீ.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இதுவரை 5546 பீ.சீ.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன
கொரோனா வைரஸ் தொற்று நாடுபூராகவும் 2 ஆயிரத்தி 700 ஐ தாண்டியிருக்கின்ற நிலையில் கொரானா தொற்றினை
உறுதிப்படுத்தும் பீ.சீ.ஆர் பரிசோதனைகள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இதுவரை 5 ஆயிரத்தி 546
மேற்கொள்ளப்பட்டுள்ளதாக போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் டாக்டர் திருமதி. கலாரஞ்சினி கணேசலிங்கம்
அரசாங்க தகவல் திணைக்கள மாவட்ட ஊடகப் பிரிவிற்கு தகவல் தெரிவித்தார்.
இதுவரை மேற்கொள்ளப்பட்ட 5546 பீ.சீ.ஆர். பரிசோதனைகளில் 317 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் இவ்வாறு
உறுதிப்படுத்தப்பட்டவர்களின் பரிசோதனை மாதிரிகள் தனிமைப்படுத்தும் நிலையங்களில் இருந்து கொண்டுவரப்பட்டவையென அவர் மேலும் தெரிவித்தார்.
இதுதவிர இப்போதனா வைத்தியசாலையில் விசேடமாக ஆரம்பிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் பிரிவில் வைத்து கண்காணிக்கப்பட்ட நோயாளர்களில் மார்ச் மாதம் 13 ஆந் திகதி தொடக்கம் 31 வரையான காலப்பகுதியில் 31 நோயளர்களில் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் ஏப்ரல் மாதத்தில் 79 நோயாளர்களில் 2 பேருக்கும், மே மாதத்தில் 70 நோயாளர்களில் 23 பேருக்கும், ஜூன் மாதத்தில் 16 பேரில் ஒருவருமாக மொத்தம் 32 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் ஜூலை மாதம் 17ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 19 நோயாளர்களில் எவருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கொழும்பில் நடுத்தர வர்க்க மக்களுக்கு விசேட வீட்டுத் திட்டம் அமுலாகும்- மனோ
கொழும்பில் நடுத்தர வர்க்க மக்களுக்கு விசேட வீட்டுத் திட்டம் அமுலாகும்- மனோ
கொழும்பில் வாடகை வீடுகளில் வாழும் மத்திய வர்க்கத்தை சார்ந்த அரசு ஊழியர்கள், தனியார் ஊழியர்கள், சுயதொழில் செய்பவர்கள் ஆகிய நடுத்தர மட்ட வருமானம் பெறுகின்ற
குடும்பங்களுக்கு, அவர்கள் இன்று வாடகையாக செலுத்தும் தொகையையே சொந்த வீட்டுக்கான மாத கட்டணமாக மாற்றி அவர்களுக்கு சொந்த மனைகளை வழங்கும் வீட்டுத் திட்டத்தை
சஜித் ஆட்சியில் முன்னெடுப்போம் என முன்னாள் தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
மட்டக்குளிய, வெள்ளவத்தை, கொட்டாஞ்சேனை ஆகிய பகுதிகளில் நடைபெற்ற பிரசார கூட்டங்களில் உரையற்றிய மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது, எமது நல்லாட்சியின் போது,
வடகொழும்பில் 13,500 தொடர்மாடி வீட்டுமனைகளை கட்டி பின்தங்கிய குடிசைகளில் இங்கு வாழும் மக்களை புதிதாக குடியமர்த்தினோம்.
இன்னமும் இத்தகைய 10,000 தொடர்மாடி வீட்டு மனைகளுக்கு அடித்தளம் இட்டுள்ளோம். கடந்த நான்கு வருடங்களில் வட கொழும்பில் குடிசைகள் வெகுவாக மறைந்து விட்டன. நண்பர்
அமைச்சர் சம்பிக ரணவக்க இந்த அபிவிருத்திக்கு பொறுப்பாக இருந்தார். இந்த வீட்டு திட்டங்களில் பாரபட்சமின்றி குடிசைகளில் வாழ்ந்த தமிழ், முஸ்லிம் மக்களே பெரும்பான்மையாக
குடியேற்றப்பட்டார்கள். பாரபட்சங்கள் நிகழாவண்ணம் நாம் கண்காணித்து கொண்டோம்.
இதற்கு முந்தைய ராஜபக்ஷ அரசாங்க காலத்தில் இந்த தமிழ், முஸ்லிம் மக்களை கொழும்பில் இருந்து வெளியேற்ற முயற்சிகள் நடந்ததையும், அப்போது அவற்றுக்கு எதிராக நாம் போராடி
அவற்றை தடுத்து நிறுத்தியதையும் மக்கள் மறக்க மாட்டார்கள்.
அதேபோல் மத்திய தர வர்க்க மக்களுக்கான விசேட வீட்டு மனைத்திட்டத்தை முன்னெடுக்கும்படி கோரிகைகளை பலமுறை நான் அன்றைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் விடுத்தேன்.
என்னுடன் இணைந்து இதற்காக நண்பர் முஜிபுர் ரஹ்மானும் கோரிக்கை விடுத்தார்.
எனினும் பிரதமர் ரணில் இதை கடைசிவரை தட்டிக்கழித்தே விட்டார். இந்த நடுத்தர வர்க்க மக்களுக்கான வீட்டுத் திட்டம்
நடைமுறையாகும் பட்சத்தில், அது அன்றைய தேசிய வீடமைப்பு அமைச்சராக இருந்த சஜித் பிரேமதாசவின் கீழ் வந்திருக்கும்.
இதுதான் இந்த திட்ட ஆலோசனை ஏற்றுக்கொள்ளப்படாததன் காரணாமா என எனக்கு புரியவில்லை.
எனினும் எமது ஆட்சியின் கீழ் இந்த திட்டம் நடைமுறையாகும். இது கொழும்பில் பெரும்பான்மையாக வாடகை வீடுகளில் வாழும்
தமிழ், முஸ்லிம் மக்களுக்கு பெரும் வரப்பிரசாதமாக அமையும் எனவும் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
தபால் மூலம் வாக்களிப்பு இன்றுடன் நிறைவு
தபால் மூலம் வாக்களிப்பு இன்றுடன் நிறைவு
பொதுத் தேர்தலை முன்னிட்டு தபால் மூலம் வாக்களிப்பதற்கான இறுதி நாள் இன்றாகும்.
நேற்று (20) வாக்களிக்க தவறிய அனைத்து அரச உத்தியோகத்தர்களுக்கும் இன்றைய தினம் வாக்களிக்க முடியும்.
பொதுத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு கடந்த 13 ஆம் திகதி ஆரம்பமாகி கடந்த 17 ஆம் திகதியுடன் முடிவடைந்தது.
எனினும் அந்த காலப்பகுதியில் தபால் வாக்கினை செலுத்த தவறியோருக்கு நேற்றும் (20) இன்றும் (21) மேலதிக தினங்களாக வழங்கப்பட்டுள்ளன.
இதேவேளை, சமய ஸ்தலங்களில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டாம் என சகல கட்சிகளையும் தேர்தல்கள் ஆணைக்குழு கேட்டுள்ளது.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, ஹம்மாந்தோட்டை மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களில் சமய ஸ்தலங்களில் தேர்தல் பிரச்சாரம் முன்னெடுக்கப்படுவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மேலும், இதுவரை பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய 4,052 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதில் 3,200 முறைப்பாடுகள் மாவட்ட தேர்தல்கள் காரியாலயங்களுக்கு கிடைத்துள்ளதாகவும் 852 முறைப்பாடுகள் தேசிய தேர்தல் முகாமைத்துவ பிரிவுக்கும் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
வீடு ஒன்றில் இருந்து இராணுவ சீருடைகள் மீட்பு
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய குழுவின் உறுப்பினர் எனப்படும் ´பெரல் சுனிலுடன்´ நெருங்கிய தொடர்பை பேணிய உதேனி என்ற ´கிரியா´ என்பவர் வலஸ்முல்ல போவல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசேட அதிரடி படையின் தங்காலை முகாம் அதிகாரிகளால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது சந்தேக நபரின் வீடு சோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் அங்கிருந்து இராணுவ சீருடைகள் பலவும், கைக் குண்டு ஒன்றும், துப்பாக்கி ரவைகள் சிலவற்றையும் பொலிஸ் விசேட அதிரடி படையின் மீட்டுள்ளனர்.
58 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் இராணுவத்தில் இருந்து இடை விலகியவர் என தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் வலஸ்முல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Recovery of military uniforms from one of the houses
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய குழுவின் உறுப்பினர் எனப்படும் ´பெரல் சுனிலுடன்´ நெருங்கிய
தொடர்பை பேணிய உதேனி என்ற ´கிரியா´ என்பவர் வலஸ்முல்ல போவல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசேட அதிரடி படையின் தங்காலை முகாம் அதிகாரிகளால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது சந்தேக நபரின் வீடு சோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் அங்கிருந்து இராணுவ சீருடைகள் பலவும், கைக் குண்டு
ஒன்றும், துப்பாக்கி ரவைகள் சிலவற்றையும் பொலிஸ் விசேட அதிரடி படையின் மீட்டுள்ளனர்.
58 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் இராணுவத்தில் இருந்து இடை விலகியவர் என தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் வலஸ்முல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
10 பொலிஸ் அதிகாரிகள் பேருக்கு இடமாற்றம்
10 பொலிஸ் அதிகாரிகள் பேருக்கு இடமாற்றம்
சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர், பொலிஸ் அதிகாரி ஒருவர் மற்றும் உதவிப் பொலிஸ் அதிகாரிகள் 8 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சேவையின் நிமித்தம் தேர்தல் ஆணைக்குழு மற்றும் பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் இந்த இடமாற்றம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
அதன் அடிப்படையில் அனுராதபுரம் வலயத்திற்கு பொறுப்பாக இருந்த சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி விஜித் த அல்விஸ் ஹட்டன் வலயத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் தீவிரவாத ஒழிப்பு மற்றும் விசாரணை பிரிவின் உதவி பொலிஸ் அதிகாரி எம்.ஆர் நூறுதீன் பொலிஸ் விசேட பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆறாவது விசேட விமானம் இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு புறப்பட்டது
ஆறாவது விசேட விமானம் இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு புறப்பட்டது
இலங்கையில் சிக்கியிருந்த 170 இந்திய பிரஜைகள் விசேட ஏர் இந்தியா விமானம் (AI 0282) மூலமாக 2020 ஜூலை 18 ஆம் திகதி கொழும்பிலிருந்து டில்லிக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
கொவிட்19 காரணமாக நாடு திரும்ப முடியாத நிலையில் உலகளவில் சிக்கியிருக்கும் இந்திய பிரஜைகளை இந்தியாவுக்கு அனுப்புவதற்கான, இந்திய அரசின் ‘வந்தே பாரத் மிஷன்’
திட்டத்தினுடைய நான்காவது கட்டத்தின் ஓர் அங்கமாக இந்த விமானப் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் இந்திய பிரஜைகளை சந்தித்திருந்த
இந்திய பதில் உயர் ஸ்தானிகர் கௌரவ வினோத் கே ஜேக்கப் அவர்கள், அப்பயணிகளின் பாதுகாப்பான பயணத்துக்காக வாழ்த்துக்களையும் பகிர்ந்திருந்தார்.
இந்திய உயர் ஸ்தானிகராலயத்தில் மேற்கொள்ளப்பட்ட பதிவுகளின் அடிப்படையில் இந்த விமானத்திற்கான பயணிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் அவசரமாக
நாடு திரும்ப வேண்டிய நிலையில் இருப்பவர்களுக்கு, குறிப்பாக நிர்க்கதியாகியுள்ள குடிபெயர் தொழிலாளர்கள், விசா
காலாவதியான நிலையில் தங்கியிருப்பவர்கள், மருத்துவ உதவிகள் தேவைப்படுவோர், கர்ப்பிணிகள், பெண்கள், முதியவர்கள், குடும்ப உறுப்பினரின் மரணத்தை தொடர்ந்து உடனடியாக இந்தியா
திரும்புவதற்கு கோரிக்கைகளை முன் வைத்திருப்போர் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட தரப்பினருக்குவெளிநாடுகளில் சிக்குண்டிருப்பவர்களுக்காக இந்திய உள்துறை அமைச்சினால் வெளியிடப்பட்ட நிர்ணயிக்கப்பட்ட செயற்பாட்டுமுறைமையின் பிரகாரம், முன்னுரிமை வழங்கப்படும்.
கொவிட் 19 காரணமாக சர்வதேச பயணங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் நாடு திரும்ப முடியாமல் இலங்கையில் சிக்கியிருந்த இந்திய பிரஜைகள், சொந்த நாடு நோக்கிய தமது பயணம் குறித்து மகிழ்ச்சியினை
வெளிப்படுத்தியிருந்தனர். கொழும்பிலிருந்து தூத்துக்குடிக்கு ஜூன் 01ஆம் திகதி இந்திய கடற்படை கப்பல் ஐஎன்எஸ் ஜலஷ்வா கப்பற் சேவை, 2020 மே 29, ஜூன் 15, ஜூன் 22 ஜூலை 03 மற்றும் ஜூலை 08 ஆகிய திகதிகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட ஏர் இந்திய விமான சேவைகள், ஏனைய பல விசேட விமான சேவைகள் மற்றும் இன்றைய விமான சேவை உட்பட்ட சேவைகள் மூலமாக 1800 க்கும் அதிகமான இந்திய பிரஜைகள் இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
நாடு திரும்ப முடியாமல் இலங்கையில் தங்கியிருக்கும் இந்தியர்கள் இதுவரையில் தம்மை இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் இணையத்தளத்தில் பதிவு செய்ய தவறியிருப்பின் கீழ்வரும் இணையத்தளத்தில் பதிவு செய்யுமாறு கோரப்படுகிறார்கள். https://hcicolombo.gov.in/COVID_helpline நாடு திரும்ப முடியாமல் இலங்கையில் தங்கியிருக்கும் இந்திய பிரஜைகள் இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் இணையத்தளம் மற்றும் சமூக ஊடகங்களில் பதிவிடப்படும் அறிவித்தல்களை அறிந்து கொள்ளுமாறும் நாம் கோரிக்கை விடுக்கின்றோம்.
அமெரிக்காவிற்காக உளவு பார்த்தவருக்கு ஈரானில் மரண தண்டனை
அமெரிக்காவிற்காக உளவு பார்த்தவருக்கு ஈரானில் மரண தண்டனை
ஈரான் முக்கிய ராணுவத் தலைவரான குவாசிம் சொலைமானி கொல்லப்பட்டதில், அமெரிக்காவுக்கு உளவு பார்த்ததாக குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
அமெரிக்காவிற்காக உளவு பார்த்தவருக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றம்
முகமது மௌசாமி மஜ்த்
அமெரிக்கப்படை ஈராக் எல்லையில் ஈரானின் முக்கிய ராணுவத் தலைவர்களில் ஒருவராக கருதப்பட்ட சொலைமானியை விமானத்
தாக்குதல் நடத்தி கொன்றது. இதில் மற்றும் சில முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டனர்.
சொலைமானி கொல்லப்படுவதற்கு முன் அவரது நடமாட்டம் குறித்து அமெரிக்காவின் சி.ஐ.ஏ.-விற்கு ஈரானைச் சேர்ந்த முகமது
மௌசாமி மஜ்த் என்பவர் உளவு பார்த்து தகவல் கூறியதாக குற்றம்சாட்டப்ட்டது.
மேலும், இஸ்ரேலின் உளவுத்துறைக்கும் உளவு பார்த்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இந்நிலையில் இன்று காலை முகமது மௌசாமிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது
லண்டனில் இரண்டுகட்ட சோதனைகளிலும் கொரனோ மருந்து வெற்றி – ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்
லண்டனில் இரண்டுகட்ட சோதனைகளிலும் கொரனோ மருந்து வெற்றி – ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்
கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் சோதனை வெற்றி பெற்றதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இரண்டுகட்ட சோதனைகளிலும் வெற்றி – ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்
கொரோனா வைரஸ் பரிசோதனை
கொரோனா வைரஸ் தொற்று உலகையே அச்சுறுத்தி வருகிறது. கொரோனா வைரஸை கட்டுக்குள் கொண்டு வர உலகம் முழுவதும் சுமார் 100-க்கு மேற்பட்ட தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனால் அனைத்தும் தற்போது வரை சோதனையிலேயே இருந்து வருகிறது.
இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்துள்ள தடுப்பூசி இறுதி கட்டத்தை எட்டியதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் சோதனை வெற்றி பெற்றதாக தற்போது அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இது தொடர்பாக 1077 நபர்களுக்கு தடுப்பு மருந்து செலுத்தப்பட்டதில் அவர்களுக்கு கொரோனா எதிர்ப்பு ஆற்றல் கிடைத்திருப்பது சோதனையில் உறுதியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1077 நபர்களுக்கு தடுப்பு மருந்து செலுத்தப்பட்டதில் அவர்களுக்கு கொரோனா எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன் டி-செல்களையும் (வெறும் தடுப்பூசி மட்டும் செலுத்தும் போது சில மாதங்களுக்கு மட்டுமே நோய் எதிர்ப்பு சக்தி இருக்கும். ஆனால் கில்லர் டி-செல்கள் ஆண்டுக்கணக்கில் உடலில் நீடிக்கக் கூடியது) உருவாக்கியுள்ளது என்பது சோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 3-ம் கட்ட பரிசோதனையில் அதிகமானோர் பரிசோதனையில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 கோடி தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திடம் பிரிட்டன் ஆர்டர் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கொரோனா ரைவஸ் மக்களை அச்சுறுத்தி வரும் இந்த நேரத்தில் ஆக்ஸ்போர்டின் அறிவிப்பு மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
தமிழகத்தில் ஒரே நாளில் 50 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை
தமிழகத்தில் ஒரே நாளில் 50 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 50 ஆயிரத்து 800 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 19 லட்சத்தை கடந்துள்ளது.
தமிழகத்தில் ஒரே நாளில் 50 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை – 19 லட்சத்தை கடந்த மொத்த எண்ணிக்கை
கோப்பு படம்
சென்னை:
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான விவரங்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது.
அந்த தகவலின் படி, மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 4 ஆயிரத்து 985 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 75 ஆயிரத்து 678 ஆக அதிகரித்துள்ளது. இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் உள்ளடக்கம் ஆகும்.
வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 51 ஆயிரத்து 348 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், வைரஸ் பாதிப்பில் இருந்து நேற்று ஒரே நாளில் 3 ஆயிரத்து 861 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 21 ஆயிரத்து 776 ஆக அதிகரித்துள்ளது.
ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் மட்டும் 70 பேர் பலியாகியுள்ளனர். இதனால் மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 551 ஆக அதிகரித்துள்ளது.
இதற்கிடையில், தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரிசோதனையின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
குறிப்பாக நேற்று ஒரே நாளில் 50 ஆயிரத்து 800 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 19 லட்சத்து 6 ஆயிரத்து 617 ஆக அதிகரித்துள்ளது.
அதேபோல், மாநிலம் முழுவதும் நேற்று ஒரே நாளில் மட்டும் 52 ஆயிரத்து 87 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலம் முழுவதும் மக்களிடம் இருந்து எடுக்கப்பட்ட பரிசோதனை மாதிரிகளின் மொத்த எண்ணிக்கை 19 லட்சத்து 84 ஆயிரத்து 579 ஆக அதிகரித்துள்ளது.
பரிசோதனையை அதிகரிப்பதன் மூலமே வைரஸ் பரவியவர்களை கண்டுபிடித்து அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதாலேயே கொரோனாவை விரைவாக கட்டுப்படுத்த முடியும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நாடெங்கும் பலத்த மழை- வெள்ள பெருக்கு அபாயம்
நாடெங்கும் பலத்த மழை- வெள்ள பெருக்கு அபாயம்
மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில், குறிப்பாக வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் மத்திய மாகாணங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.
மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு
மழை நிலைமை:
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
காற்று :
புத்தளத்திலிருந்து கொழும்பு ஊடாக காலி வரையான கடற்பரப்புகளில் காற்றானது வடமேற்கு முதல் மேற்கு வரையான திசைகளிலிருந்து வீசக்கூடுவதுடன் நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு அல்லது தெற்கு திசையிலிருந்து வீசக்கூடும். காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 25 தொடக்கம் 35 கிலோ மீற்றர் வரை காணப்படும்.
புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
கடல் நிலை:
புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும்.
நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.
களுத்துறையிலிருந்து காலி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில்வரையான கடற்பரப்புகளில்கடல் அலைகள் 2.0 – 2.5 மீற்றர் உயரம் வரை (இது கரைக்கு வரும் அலைகளின் உயரம் அல்ல) மேலெழும்பக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் கரையோரப் பிரதேசங்களில் வசிக்கும் பொதுமக்களும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.
கதிர்காமம், உகந்தமலை முருகன் ஆலயங்களின் கொடியேற்ற திருவிழா நாளை
கதிர்காமம், உகந்தமலை முருகன் ஆலயங்களின் கொடியேற்ற திருவிழா நாளை
வரலாற்று பிரசித்திபெற்ற கதிர்காம கந்தன் ஆலயம் மற்றும் உகந்தமலை முருகன் ஆலயத்தின் வருடாந்த ஆடிவேல் விழா உற்சவத்தின் கொடியேற்ற திருவிழா நாளை(21)செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது.
கொடியேற்றம் இடம்பெற்று 15 நாள் திருவிழாவின் பின்னர் ஆகஸ்ட் மாதம் 4ஆம் திகதி தீர்த்தோற்சவத்துடன் ஆடிவேல் விழா நிறைவடையவுள்ளது. கொரோனா தொற்று அச்சம் காரணமாக ஆலயங்களின் திருவிழா , பக்தர்களின் வருகை என்பன என்பன மட்டுப்படுத்தப்பட்டிருப்பதாக ஆலயங்களின் தலைவர்கள் கூறியுள்ளனர்.
உகந்தமலை முருகன் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ க.கு.சீதாராம் குருக்கள் தலைமையில் இவ்வருட கொடியேற்ற திருவிழா நாளை காலை 10.30 மணியளவில் நடைபெறவிருக்கிறது.
இம்முறை ஆடிவேல் விழா உற்சவம் குறைந்தளவு பக்தர்களுடன் நடாத்த ஆரம்ப குழுக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அன்னதானம், பாத யாத்திரை என்பன முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளன.
பகல் திருவிழா காலை 7மணி முதலும் இரவு திருவிழா மாலை 5மணி முதலும் நடைபெறவுள்ளன. திருவிழா உபயகாரர்கள் 50 பேர் வலை இரவில் தங்குவதற்கு அனுமதிக்கப்படுவர். திருவிழா காலங்களில் ஏனைய பக்தர்கள் இரவில் தங்குவதற்கு அனுமதியில்லை.
ஐந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை
ஐந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை
ஐந்து மாவட்டங்களில் மண்சரிவு எச்சரிக்கை கட்டிட ஆய்வு அமைப்பினால் விடுக்கப்பட்டுள்ளது.
காலி, களுத்துறை, கொழும்பு, இரத்தினபுரி மற்றும் கேகாலை
ஆகிய மாவட்டங்களுக்கு இந்த மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கை நாளை காலை 9.00 மணி வரையில் ஏற்புடையதாகும்.
தமிழர்கள் இன விடுதலைக்காக சேர்ந்து பயணிக்கக் கூடாது என்பதில் அரசு கவனமாக உள்ளது-சிறிதரன்
தமிழர்கள் இன விடுதலைக்காக சேர்ந்து பயணிக்கக் கூடாது என்பதில் அரசு கவனமாக உள்ளது-சிறிதரன்
தமிழர்கள் இன விடுதலைக்காக சேர்ந்து பயணிக்கக் கூடாது என்பதில் அரசாங்கம் கவனமாக உள்ளது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்ப்பாளருமான சி. சிறீதரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி, தர்மபுரம் பகுதியில் நேற்று (19) இடம்பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், நாங்கள் இந்த நாட்டிலே மிக முக்கியமான தருணத்திலே நிற்கின்றோம். மிக நெருக்கடியான தருணத்திலே நிற்கின்றோம். காரணம் தேர்தல் வருகின்ற போது தான் அந்த தேர்தல் காலத்திலே எங்கள் கட்சியின் உடைய கடந்த கால செயற்பாடுகள் இந்த அடுத்த 5 ஆண்டுகளிலே என்ன விடயங்களை கையாளப் போகின்றது என்ற முக்கிய விடயங்களை தேர்தல் களத்திலே நாங்கள் சொல்லுகின்றோம்.
60 வருடங்களுக்கு முதல் இந்த மண் எவ்வளவு காடாக இருந்திருக்கும் இந்த பிரதேசம். எவ்வாறு இருந்தது இந்த பிரதேசத்தில் நாங்கள் குடியேறி எவ்வாறு மாற்றி அமைத்தோம் இன்றைக்கு 60 ஆண்டுகள் கடந்து இந்த இடம் எப்படி மாறி இருக்கிறது ஏன் நாங்கள் இந்த இடத்திலே குடியேறினோம் அதற்கான காரணம் என்ன?
58 க்களில் அல்லைக் கந்தளாயிலே முதன் முதலில் 156 விவசாயிகள் காடையர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்கள். அதே ஆண்டுகளில் தான் அநுராதபுரம் பகுதியில் பெரும்பாண்மையாக வாழ்ந்த எங்கள் மக்களும் திருகோணமலையில் பெரும்பாண்மையாக வாழ்ந்த எங்கள் மக்களும் மலையக பகுதியில் வாழ்ந்த எங்கள் மக்கள் இனம் என்பதனை மையமாக வைத்து பலி எடுக்கப்பட்டார்கள். இவ்வாறு எல்லாம் கடந்து வந்த இனப் படுகொலைகளைத் தாண்டி நாங்கள் எங்களுடைய ஈழதேசத்திலே குடியேறி நில அடையாளங்களோடு எங்களை நாங்கள் அடையாளப்படுத்திக் கொண்டோம்.
அடையாளப்படுத்தி வாழுகின்ற காலத்தில் தான் ஒரு பெரும் தலைவருக்கு கீழே ஒரு தேசிய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தோம். தந்தை செல்வாவின் வழிகாட்டலிலே அறவழிப் போராட்டங்களைத் தொடர்ந்து ஒரு ஆயுதப் போராட்டத்தின் முக்கியத்துவம் இந்த மன்ணிலே முதன்மை பெற்றிருந்தது.
அதற்காக பல ஆயிரக் கணக்கானவர்களை இந்த மண்ணிலே விதைத்திருக்கின்றோம். பல லட்சக் கணக்கான மக்களை இழந்திருக்கின்றோம். கோடிக் கணக்கான சொத்துக்களை இழந்திருக்கின்றோம். இவற்றை எல்லாம் இழந்து தான் இந்த மன்ணிலே ஒரு தேர்தல் மூலமாக அடுத்த வாழ்வைப் பற்றி சிந்திக்கின்றோம். இந்தக் காலத்திலே எங்களை இழந்து போனால் அல்லது நாங்கள் தமிழினம் என்பதனை சொல்ல மறந்து போனால் எமது வாழ்க்கையும் இல்லாமல் போகும் என்பதனை பலர் விளக்கமாக சொன்னார்கள்.
33 கட்சிகள் இருக்கின்றன பல நூற்றுக் கணக்கானவர்கள் இங்கு போட்டியிடுகிறார்கள். காரணம் இலங்கையில் இருக்கின்ற அரசியல் எங்களை கொஞ்சம் கொஞ்சமாக கூறுபோட்டு எங்களிடம் இருக்கின்ற அரசியல் பலத்தை எங்களிடம் அடிப்படையாக உள்ள கொள்கையை சிதைப்பதற்கான முழு முயற்சிகளையும் அவர்கள் மேற்கொள்கிறார்கள். அந்த முயற்சிகளில் இருந்து விடுபட வேண்டுமா அல்லது நாங்கள் எங்களுடைய வாக்குக்களை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு சிதறடித்து யாரும் இல்லாத இனமாக அழிந்து போகப் போகின்றோமா?என அவர் மேலும் தெரிவித்தார்.
மோதி சிதறிய இராணுவ வண்டி – இராணுவம் பலி
மோதி சிதறிய இராணுவ வண்டி – இராணுவம் பலி
நுகேகொட மேம்பாலத்தில் தனியார் பேருந்து ஒன்றும் இராணுவ
கெப் ரக வாகனம் ஒன்றும் இன்று (20) காலை நேருக்கு நேர் மோதி
விபத்துக்கு உள்ளானதில் இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்தில் மேலும் இரு இராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு நோக்கி பயணித்த பேருந்தை முந்திச்செல்ல முற்பட்ட மற்றுமொரு
பஸ் வண்டி எதிரே வந்த இராணுவ கெப் வாகனத்துடன் நேருக்கு நேர் மோதியதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இராணுவ கெப் வண்டியின் சாரதியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸ்
ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
விபத்தில் காயமடைந்த இராணுவ வீரர்கள் இருவரும் கொழும்பு தேசிய
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
தெற்கு நெடுஞ்சாலையில் ஒரு பகுதி தற்காலிகமாக மூடல்
தெற்கு நெடுஞ்சாலையில் ஒரு பகுதி தற்காலிகமாக மூடல்
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பின்னதூவ மற்றும் இம்மதுவ
இடையிலான பகுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அப்பகுதியில் ஏற்பட்ட சிறிய மண் சரிவு காரணமாக இப்பகுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இன்று (20) காலை முதல் நாட்டின் பல பகுதிகளில் சீரற்ற வானிலை காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
வீதியில் பற்றி எரியும் போதைவஸ்து கடத்தல் விமானம் – video
வீதியில் பற்றி எரியும் போதைவஸ்து கடத்தல் விமானம் – video
போதைவஸ்து கடத்தி வந்த சிறிய ரக விமானம் ஒன்று திடீரெனெ
இயந்திர கோளாறு காரணமாக வீதியில் தரை இறங்கியது
அவ்வேளை அந்த விமானம் தீ பற்றி எரியும் திகில் காட்சி வெளியாகி
பர பரப்பை கிளப்பியுள்ளது
போதைவஸ்து கடத்தலில் பெயர் பெற்ற நாடாக மெஸ்சிக்கோ விளங்குவது குறிப்பிட தக்கது
கோப்பி கோட்டைக்குள் போதைவஸ்து – இத்தாலி விமான நிலையம் முற்றுகை – படம் உள்ளே
கோப்பி கோட்டைக்குள் போதைவஸ்து – இத்தாலி விமான நிலையம் முற்றுகை – படம் உள்ளே
இத்தாலிய மிலான் விமான நிலையத்திற்கு வந்த பொதிகளை சோதனை செய்த பொழுது சுங்க பிரிவினருக்கு அதிர்ச்சி காத்திருந்தது
கோப்பி கோட்டைக்குள் போதைவஸ்து அடைக்க பட்டு இத்தாலிக்கு அனுப்பி வைக்க பட்டுள்ளது .
கொலம்பியாவில் இருந்து இவ்விதம் இத்தாலிக்கு அனுப்பி வைக்க பட்டுள்ள பொழுதே இந்த விடயம் கண்டு பிடிக்க பட்டுள்ளது
மேற்படி போதைவஸ்து கடத்தலுடன் தொடர்புடைய நபர்களை கைது செய்யும் வேட்டையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்


பெற்றமைகளை கொடூரமாக கொன்ற தந்தை – அதிர்ச்சியில் போலீஸ்
பெற்றமைகளை கொடூரமாக கொன்ற தந்தை – அதிர்ச்சியில் போலீஸ்
Eden Hills பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து அவசர உதவி பிரிவுக்கு
அழைப்பு ஒன்று பறந்து வந்தது ,விரைந்து சென்ற மருத்துவ உதவி
குழுவினர் அறையை திறந்து பார்த்த பொழுதும் அதிர்ச்சி காத்திருந்தது
எரிவாயுவை திறந்த விட்ட படி அரை எங்கும் நச்சு கலந்த நிலையில் காண பட்டது
இதில் சிக்கி மூன்று வயது இசிறுமி பலியானர் ,தந்தை ஆபத்தான நிலையில் மீட்க பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார் .
திட்டமிட்டு மக்களை கொலை செய்தார் என்ற குற்ற சாட்டில் 43 வயது தந்தையார் கைது செய்ய பட்டுளளார்
தொடர்ந்து மேற்படி கொலை தொடர்பான விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

அகோர எறிகணை தாக்குதல் – இராணுவ வெறியாட்டம் -அப்பாவி மக்கள் பலி
அகோர எறிகணை தாக்குதல் – இராணுவ வெறியாட்டம் -அப்பாவி மக்கள் பலி
சிரியாவின் இட்லி பகுதியில் அமைய பெற்றுள்ள Tal Wasit கிராமத்தை
நோக்கி நடத்த பட்ட சரமாரியான பல்குழல் எறிகணை தாக்குதலில்
சிக்கி பல டசின் அப்பாவி மக்கள் பலியாகியும் படுகாயமடைந்துள்ளனர்
தொடர்ந்து சிரியா அரச இராணுவம் மற்றும் துருக்கிய ஆதரவு கிளர்ச்சி
படைகளுக்கு இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன
கடந்த ஒன்பது ஆண்டுகளாக நீண்டு செல்லும் சிரியாவின் போரில் சுமார் நன்கு லட்சம் மக்கள் வரை பலியாகியும் முப்பது லட்சம்
மக்கள் அகதிகளாக இடம்பெயரந்துள்ளனர் என்பது குறிப்பிட தக்கது








