Author: நலன் விரும்பி
இலங்கையில் மேலும் 7 பேருக்கு கொரோனா
இலங்கையில் மேலும் 7 பேருக்கு கொரோனா
இலங்கையில் மேலும் 07 பேருக்கு கொவிட் 19 வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வந்த 07 பேருக்கே இவ்வாறு
கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக
அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.
அதன்படி, நாட்டின் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 2752 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் இதுவரை 2064 பேர் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.
இதுவரை 11 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள நிலையில், 677 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
4 கொரோனா தடுப்பூசிகள் பாதுகாப்பானவை என நிரூபணம் – ரஷிய
4 கொரோனா தடுப்பூசிகள் பாதுகாப்பானவை என நிரூபணம் – ரஷிய
ரஷியாவில் தயாரிக்கப்பட்டு வரும் 4 கொரோனா தடுப்பூசிகள் பரிசோதனையில் பாதுகாப்பானவை என நிரூபணமாகியுள்ளது என அந்நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார்.
4 கொரோனா தடுப்பூசிகள் பாதுகாப்பானவை என நிரூபணம் – ரஷிய பிரதமர்
கோப்பு படம்
மாஸ்கோ:
உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் பல்வேறு நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அந்த முயற்சியில் ஈடுபட்டுவரும் நாடுகளில் ஒன்றான ரஷியா உள்நாட்டு தயாரிப்பான 4 கொரோனா தடுப்பூசிகள் பாதுகாப்பானவை என தெரிவித்துள்ளது.
இது குறித்து ரஷிய பிரதமர் மிக்கைல் மிசுஸ்டின் அந்நாட்டு பாராளுமன்றத்தில் நேற்று கூறுகையில், ’நாட்டில் மொத்தம் 17 அறிவியல் ஆராய்ச்சி மையங்கள் கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் ஆராய்ச்சி பணியில் ஈடுபட்டு வருகின்றன. ஒட்டுமொத்தமாக 26 வகையிலான தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு மற்றும் மனித நல்வாழ்வு கண்காணிப்பதற்கான கூட்டாட்சி சேவையின் தகவலின் அடிப்படையில் 4 தடுப்பூசிகள் பாதுகாப்பானவை என நிரூபணமாகியுள்ளது. மேலும், இரண்டு தடுப்பூசிகள் இறுதிக்கட்ட பரிசோதனையில் உள்ளன. இவை ஹமேல்யா தொற்றுநோய் மற்றும் நுண்ணுயிரியல் அறிவியல் ஆராய்ச்சி மையம் மற்றும் பாதுகாப்பு துறையின் கூட்டு ஆராய்ச்சியால் உருவாக்கப்பட்டுள்ளது.
அதேபோல் மேலும், இரண்டு தடுப்பூசிகள் தொடக்க நிலை பரிசோதனையில் உள்ளன. இவை வைராலஜி, பயோடெக்னாலஜி ஆராய்ச்சி மையம்
மற்றும் தடுப்பூசிகள் மற்றும் சீரம் பற்றிய அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்டு வருகிறது’’ என அவர் தெரிவித்தார்.
2 நாட்களுக்கு ஒருமுறை கொரோனா பரிசோதனை செய்யும் டிரம்ப்
2 நாட்களுக்கு ஒருமுறை கொரோனா பரிசோதனை செய்யும் டிரம்ப்
எப்போது சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது சாத்தியம் இல்லாமல் போகிறதோ அப்போது மட்டுமே முகக்கவசத்தை
பயன்படுத்துவதாகவும், 2 அல்லது 3 நாட்களுக்கு ஒருமுறை தான் கொரோனா பரிசோதனை மேற்கொள்வதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.
2 நாட்களுக்கு ஒருமுறை கொரோனா பரிசோதனை செய்யும் டிரம்ப்
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பு 40 லட்சத்தை கடந்து சென்றுகொண்டிருக்கிறது. அதேபோல் கொரோனா பலி எண்ணிக்கை 1 லட்சத்து 45 ஆயிரத்தை கடந்துள்ளது.
இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் 2 அல்லது 3 நாட்களுக்கு ஒருமுறை தான் கொரோனா பரிசோதனை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது இதுகுறித்து அவர் கூறுகையில் “ நான் தொடர்ச்சியாக கொரோனா பரிசோதனை செய்கிறேன்.
சராசரியாக 2 அல்லது 3 நாட்களுக்கு ஒருமுறை கொரோனா பரிசோதனைக்கு என்னை உட்படுத்திக் கொள்கிறேன்” எனக் கூறினார்.
அதனைத் தொடர்ந்து முகக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து பத்திரிக்கையாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பியபோது “நான்
எப்போதும் முகக்கவசம் வைத்திருப்பேன். ஆனால் எப்போது சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது சாத்தியம் இல்லாமல் போகிறதோ அப்போது மட்டுமே முகக்கவசத்தை பயன்படுத்துவேன். மக்களும்
அதைப் போலவே தேவைப்படும்போது மட்டும் முகக்கவசத்தை பயன்படுத்த அறிவுறுத்துகிறேன்” என டிரம்ப் பதிலளித்தார்.
மேலும் அவர் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைவதற்கு முன்பு அது மிகவும் மோசம் அடையும் என எச்சரிக்கை விடுத்தார்.
அதேசமயம் கொரோனாவுக்கான தடுப்பூசிகள் மற்றும் சிகிச்சைகள் மூலம் இறப்பு மற்றும் பாதிப்பு விகிதம் குறையும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்தப் பேட்டியின் போது டிரம்ப் கொரோனா வைரசை மீண்டும் சீனா வைரஸ் என குறிப்பிட்டார்.
தாய்லாந்தில் தொழில் வாய்ப்பு மோசடி செய்தவர்கள் தொடர்பாக குற்றப்புலனாய்வு பிரிவிடம் முறைப்பாடு
தாய்லாந்தில் தொழில் வாய்ப்பு மோசடி செய்தவர்கள் தொடர்பாக குற்றப்புலனாய்வு பிரிவிடம் முறைப்பாடு
தொழில் வாய்ப்பை பெற்றுத்தருவதாக இணையத்தளத்தின் ஊடாக விளம்பரத்தை வெளியிட்டு பண மோசடியில் ஈடுபட்டமை
தொடர்பான தகவல்களை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வெளியிட்டுள்ளது.
தாய்லாந்தில் பாதுகாப்பு சேவையில் உள்ள தொழில் வாய்ப்புக்காக நபர்களை தெரிவு செய்து அந்த தொழில் வாய்ப்புக்காக பணத்தை செலுத்திய பின்னர் குறிப்பிட்ட வகையில் தொழில்வாய்ப்பை
பெற்றுக்கொடுக்கவில்லை என்று சிலர் முறைப்பாடு செய்துள்ளனர் என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தாய்லாந்தில் இலங்கை தூதரகத்தில் விடயங்கள் கண்டறியப்பட்டன. இலங்கையர்களுக்கு தாய்லாந்தில் இவ்வாறான தொழில் வாய்ப்புக்கான சந்தர்ப்பம் இல்லை என்று தூதரகத்தினால்
உறுதி செய்யப்பட்டிருப்பதாக வெளிநாட்டு வேலைவாய்பு பணியகத்தினால் இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையில் ஈடுபட்டோருக்கு
எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக பணியகத்தினால் இந்த முறைப்பாடு குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களில் இணைத்துக்கொள்ளப்படுவதாக குறிப்பிட்டு சில மோசடிகாரர்கள் நாட்டில் முக்கிய ஊடகங்களில் விளம்பரப்படுத்துவதுடன் அதற்காக பணத்தை செலுத்தி தொழில் வாய்ப்பு கிடைக்காதவர்கள்
தொடர்பான தகவல்கள் அடிக்கடி வெளியாகின்றன. இவ்வாறான மோசடிக்காரர்களுக்கு எதிராக பணியகத்தின் விசேட விசாரணைப்பிரிவு சுற்றிவளைப்புக்களை மேற்கொண்டு சட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகின்றது.
இந்திய – இலங்கை இடையிலான பொருளாதார ஒத்துழைப்பு நெருக்கம்
இந்திய – இலங்கை இடையிலான பொருளாதார ஒத்துழைப்பு நெருக்கம்
இலங்கை மற்றும் இந்திய நாடுகளிடையிலுமான நிரப்பு பொருளாதார பலத்தினை உரிய முறையில் பயன்படுத்துவதற்கான பொருளாதார பாதுகாப்பினை சமநிலைப்படுத்தும் வகையில் எதிர்காலத்துக்கான கொள்கைகளை வகுக்கவேண்டியதன் அவசியத்தை இன்றைய நிலை தோற்றுவித்திருப்பதாகவும் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.
இந்தியா இலங்கை இடையிலான பொருளாதார ஒத்துழைப்பினை வலுவாக்குதல்
“இந்தியா இலங்கை இடையிலான பொருளாதார ஒத்துழைப்பினை வலுவாக்குதல்” என்ற தலைப்பில் 2020 ஜூலை 21 ஆம் திகதி நடைபெற்ற மெய்நிகர் கருத்தரங்கு ஒன்றில் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கௌரவ கோபால் பாக்லே அவர்கள் உரை நிகழ்த்தினார். சர்வதேச உறவுகள் மற்றும் தந்திரோபாய கற்கை நெறிகளுக்கான லக்ஷ்மன் கதிர்காமர் நிலையம் (LKIIRSS) மற்றும் இந்திய வர்த்தக மற்றும் கைத்தொழில் சங்க சம்மேளனம் (FICCI) ஆகியவற்றின் ஏற்பாட்டில் இந்த மெய்நிகர் கருத்தரங்கு இடம்பெற்றிருந்தது.
- வெளிவிவகார அமைச்சின் செயலர் ரவிநாத ஆரியசிங்க மற்றும் FICCI தலைவர் டாக்டர்.சங்கிதா ரெட்டி ஆகியோர் FICCI மற்றும் LKIIRSS ஆகிய நிறுவனங்களின் சிரேஸ்ட அதிகாரிகள் என்ற அடிப்படையில் கலந்துகொண்டிருந்த அதே சமயம் இலங்கை முதலீட்டுச் சபை, சுற்றுலாத்துறை ஊக்குவிப்பு பணியகம், மற்றும் நனோ தொழில்நுட்ப நிறுவனம் ஆகியவற்றின் பிரதிநிதிகளும் இந்த கருத்தரங்கில் பங்கேற்றிருந்தனர்.
- இங்கு உரை நிகழ்த்தியிருந்த உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே அவர்கள், இலங்கை மற்றும் இந்தியா இடையிலான பரந்த உறவு குறித்து கருத்துக்களை தெரிவித்திருந்த அதேசமயம் கொவிட் 19 நோய் காரணமாக முன்னொருபோதும் இல்லாதவகையில் ஏற்பட்டுள்ள சவால்களை வினைத்திறனுடனும் துரிதமாகவும் எதிர்கொள்வதற்கு தேவையான இருதரப்பு ஒத்துழைப்பினை மேலும் விரிவாக்கவேண்டியதன் அவசியம் குறித்தும் சுட்டிக்காட்டினார். இரு நாடுகளிடையிலுமான நிரப்பு பொருளாதார பலத்தினை உரிய முறையில் பயன்படுத்துவதற்கான பொருளாதார பாதுகாப்பினை சமநிலைப்படுத்தும் வகையில் எதிர்காலத்துக்கான கொள்கைகளை வகுக்கவேண்டியதன் அவசியத்தை இன்றைய நிலை தோற்றுவித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
- உட்கட்டமைப்பு, சக்தி வலு, தொடர்பாடல், தகவல் தொழில்நுட்பம், விவசாயம், உற்பத்தி, மருந்து துறை, சுற்றுலாத்துறை மற்றும் கல்வி ஆகிய துறைகளில் சிறந்த முறையில் ஒத்துழைப்பினை மேற்கொள்ளமுடியும் எனவும் உயர் ஸ்தானிகர் கௌரவ கோபால் பாக்லே அவர்கள் சுட்டிக்காட்டினார். இந்த துறைகளிலும் பரஸ்பரம் நன்மை தரக்கூடிய ஏனைய துறைகளிலும் ஸ்திரமான ஈடுபாடு எதிர்பார்க்கக்கூடியதும் உறுதியானதுமான கொள்கைத் தோற்றப்பாடுகளின் உந்துதலுடனான வளமான சூழலை உருவாக்கும் எனவும் அவர் சுட்டிக் காட்டினார். அது மட்டுமல்லாமல் வர்த்தக ரீதியிலான வலுவான உறவைக் கொண்டிருக்கும் இரு நாடுகளிடையில் பரந்தளவிலான நீண்டகால உறவினை கட்டி எழுப்புவது ஆளுமை விருத்தி, வேலை வாய்ப்பு மேம்பாடு மற்றும் சிறப்பான எதிர்காலம் ஆகியவற்றுக்கான வாய்ப்புக்களை உருவாக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
- கொவிட் 19 காரணமாக ஏற்பட்டிருக்கும் சகல சவால்களுக்கு மத்தியில் பொருளாதார மீட்சியின் முக்கியத்துவம் தொடர்பாக இங்கு கருத்துக்களை தெரிவித்திருந்த வெளிவிவகார செயலர் ரவிநாத ஆரியசிங்க, எதிர்காலத்தினை வடிவமைப்பதற்கான தற்போதைய ஒத்துழைப்புக்கள் மற்றும் கடந்தகால வெற்றிகளில் இரு தரப்பும் கவனம் செலுத்தவேண்டிய அவசியம் தொடர்பாகவும் சுட்டிக் காட்டினார்.
- மருந்துத்துறை, விவசாயம், உற்பத்தி துறை, தொடர்பாடல், சுற்றுலாத்துறை மற்றும் விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் ஆகிய துறைகளில் காணப்படும் வாய்ப்புக்கள் தொடர்பாகவும் இரு தரப்பையும் சார்ந்த துறைசார் நிபுணர்கள் இங்கு சுட்டிக்காட்டியிருந்தனர். அத்துடன் துறை சார் செயல் புள்ளிகள் உரிய முறையில் பின்பற்றப்படுமெனவும் இந்த கருத்தரங்கில் இணங்கப்பட்டது.
இதுவரை அக்ரஹார காப்புறுதி பலன்களைப் பெறாத அரச ஊழியர்களுக்கு அதற்கான வசதி
இதுவரை அக்ரஹார காப்புறுதி பலன்களைப் பெறாத அரச ஊழியர்களுக்கு அதற்கான வசதி
அக்ரஹார காப்புறுதி பயன்களை இதுவரையில் கொண்டிராத ஓய்வு பெற்ற 600,000 இலட்சம் அரசாங்க ஊழியர்களுக்கு அக்ரஹார காப்புறுதி பயன்களை வழங்குவதற்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
இதற்கு அமைவாக நேற்யை தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது பிரதமர் இதற்கான பரிந்துரையை முன்வைத்தார். அமைச்சரவையினால் இதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானம் பின்வருமாறு:
03.ஓய்வுபெற்ற அரசாங்க ஊழியர்களுக்காக நடைமுறைப்படுத்தப்பட்ட அக்ரஹார காப்புறுதி பரிந்துரையின் கீழான நன்மைகளை மேலும் விரிவுபடுத்துதல்
2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 01 ஆம் திகதிக்குப் பின்னர் அரசாங்க சேவையில் ஓய்வுபெற்ற ஓய்வூதியக்காரர்களுக்கான அக்ரஹார காப்புறுதி முறைக்கு உள்ளடக்கப்படக்கூடிய
நன்மைகளை பெற்றுக் கொள்வதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இருப்பினும் ஓய்வூதியக்காரர்களில் பெரும்பாலானோர் 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் திகதிக்கு முன்னர் அரசாங்க
சேவையில் ஓய்வுபெற்றவர்களாக இருப்பதினால் அவர்களையும் அக்ரஹார காப்புறுதி முறைக்குள் உள்வாங்கப்படுவதற்கு வசதிகள் செய்யுமாறு ஓய்வூதியக்காரர்களின் சங்கத்தினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக, தற்பொழுது 2016 ஜனவரி மாதம் 01ஆம் திகதிக்குப் பின்னர் ஓய்வுபெற்ற அரச ஊழியர்களுக்கு மாத்திரம் உரித்தாகியுள்ள அக்ரஹார பயன்கள் அந்த தினத்திற்கு
முன்னர் ஓய்வுபெற்ற அரச ஊழியர்களுக்கும் பெற்றுக் கொடுப்பது தொடர்பில் திறனாற்றல் அபிவிருத்தி தொழில்வாய்ப்பு மற்றும் தொழிலாளர் தொடர்பு அமைச்சர் அவர்களினாலும் அரச நிர்வாகம் உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சர் அவர்களினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டுப் பரிந்துரை
நிதி, பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சர் என்ற ரீதியில் கௌரவ பிரதமர் அவர்களினால் வழங்கப்பட்ட உடன்பாட்டை கவனத்தில் கொண்டு அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டது. இதேபோன்று நிதி, பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சர் என்ற ரீதியில் கௌரவ பிரதமர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரையை கவனத்தில்
கொண்டு கீழ் கண்ட வகையில் செயல்ப்படுவதற்காக அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
• அக்ரகார காப்புறுதி பரிந்துரை முறையின் கீழ் அனைத்து அரச ஊழியர்களுக்கும் ஓய்வுபெற்றவர்களுக்கும் நன்மைகளைப்
பெற்றுக் கொள்ளக்கூடிய வகையில் தரமான சிறப்பான சுகாதார சேவை வசதிகளை வழங்குவதற்காக அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் அரசாங்கத்தின் அனைத்து முக்கிய வைத்தியசாலைகளில் அரச ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியகாரர்களுக்காக ஒதுக்கப்பட்ட வார்ட் தொகுதி ஒன்றை
முன்னெடுப்பதற்காக பொருத்தமான முறையொன்றை வகுத்தல்
• அரச சேவையில் ஓய்வுபெற்ற ஓய்வூதியகாரர்களுக்கு மத்தியில் ஓய்வூதிய சம்பள முரண்பாடு மேலும் நீடிப்பது அவதானிக்கப்படுவதுடன் இந்த முரண்பாடுகளை சரி செய்வதற்காக பொருத்தமான சிபாரிசுகளை சமர்ப்பிக்குமாறு தேசிய சம்பள ஆணைக்குழுவிடம் கோருகின்றோம்.a
தனிமைப்படுத்தலை நிறைவு செய்த மேலும் 126 பேர் விடுவிப்பு
தனிமைப்படுத்தலை நிறைவு செய்த மேலும் 126 பேர் விடுவிப்பு
கிளிநொச்சி, இரணைமடு விமானப்படை முகாமில்
தனிமைப்படுத்தலை நிறைவு செய்துக் கொண்ட 126 பேர் வௌியேறியுள்ளதாக விமானப்படை தெரிவித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் இன்று வரை 25,316 பேர் தனிமைப்படுத்தல் செயற்பாட்டை நிறைவு செய்து வீடு திரும்பியுள்ளனர்.
மேலும், நாட்டில் அமைந்துள்ள 47 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 4,984 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் மழை
நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் மழை
நாட்டில் மேல், சப்ரகமுவ, தென் மற்றும் மத்திய மாகாணங்களில் இன்று (23ஆம் திகதி) மழையுடனான வானிலை சற்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேல், சப்ரகமுவ, தென் மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடமேல் மாகாணத்திலும் அனுராதபுரம் மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சப்ரகமுவ மாகாணத்திலும் நுவரெலியா, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு
மழை நிலைமை:
நீர்கொழும்பிலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாகபொத்துவில் வரையான கடற்பரப்புகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
காற்று :
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்குமுதல் தெற்கு வரையான திசைகளிலிருந்து வீசக்கூடும். காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 25-35 கிலோ மீற்றர் வரை காணப்படும்.
மன்னாரிலிருந்து புத்தளம், கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
கடல் நிலை:
மன்னாரிலிருந்து புத்தளம், கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும்.
நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.
புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில்வரையான கடற்பரப்புகளில் கடல் அலைகள் 2.0 – 2.5 மீற்றர் உயரம் வரை (இது கரைக்கு வரும் அலைகளின் உயரம் அல்ல) மேலெழும்பக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் கரையோரப் பிரதேசங்களில் வசிக்கும் பொதுமக்களும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.
நளினிக்கு ஒரு மாதம் சிறை சலுகைகள் ரத்து
நளினிக்கு ஒரு மாதம் சிறை சலுகைகள் ரத்து
வேலூர் சிறையில் சிறை விதிகளை மீறிய புகாரில் நளினிக்கு வழங்கப்பட்டு வந்த சலுகைகள் ஒரு மாதத்திற்கு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நளினிக்கு ஒரு மாதம் சிறை சலுகைகள் ரத்து
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன் வேலூர் ஆண்கள் ஜெயிலிலும், அவருடைய மனைவி
நளினி பெண்கள் ஜெயிலிலும் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 28 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனை அனுபவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் வேலூர் பெண்கள் சிறையில் உள்ள நளினி தற்கொலைக்கு முயன்றார். சக கைதியுடன் ஏற்பட்ட
வாக்குவாதத்தால் அறையில் துணியால் கழுத்தை நெரித்து தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வெளியானது.
இதற்கிடையில் நளினியின், தாயார் பத்மா சிறைத்துறை டிஜிபிக்கு கடிதம் எழுதினார். அதில் கொலை வழக்கு தொடர்பாக சிறையில்
உள்ள நளினியை புழல் சிறைக்கு மாற்றக் கோரி அந்த கடிதத்தில் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் நளினிக்கு ஒரு மாதம் சிறை சலுகைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. வேலூர் சிறையில் சிறை விதிகளை மீறிய புகாரில் நளினிக்கு வழங்கப்பட்டு வந்த சலுகைகள் ஒரு
மாதத்திற்கு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பார்வையாளர்கள் நளினிக்கு பொருட்களை வழங்குதல் உள்ளிட்ட
சலுகைகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சக கைதி, வார்டனுடன் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக நளினி தற்கொலைக்கு முயன்ற நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பெற்றோரை கண்முன்னே கொன்ற தலிபான் பயங்கரவாதிகளை சுட்டு வீழ்த்திய 15 வயது சிறுமி
பெற்றோரை கண்முன்னே கொன்ற தலிபான் பயங்கரவாதிகளை சுட்டு வீழ்த்திய 15 வயது சிறுமி
ஆப்கானிஸ்தானில் தனது பெற்றோரை கொன்ற தலிபான் பயங்கரவாதிகளை 15 வயது சிறுமி சுட்டுக்கொண்டு பழிதீர்த்துள்ளார்.
பெற்றோரை கண்முன்னே கொன்ற தலிபான் பயங்கரவாதிகளை சுட்டு வீழ்த்திய 15 வயது சிறுமி
சிறுமி கோமர் குல்
காபுல்:
ஆப்கானிஸ்தானில் பல ஆண்டுகளாக உள்நாட்டுப்போர் நிலவி வருகிறது. நாட்டின் சில பகுதிகளில் ஆதிக்கம் செலுத்தி வரும் தலிபான் பயங்கரவாதிகளை ஒழிக்கும் நடவடிக்கையில் அந்நாட்டு பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த மோதல்களின் போது சில சமயங்களில் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் வசிக்கும் அப்பாவி பொதுமக்களை குறிவைத்தும் தலிபான் பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர்.
குறிப்பாக அரசுப்படையினருக்கு ஆதரவு தெரிவிப்பவர்களையும், அரசுப்படையினருக்கு ரகசிய தகவல் வழங்குகிறார்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையின் பொதுமக்களையும் ஈவு இரக்கமின்றி தலிபான்கள் கொன்று வருகின்றனர்.
இந்நிலையில், ஆப்கானிஸ்தான் அரசுக்கு ஆதரவு தெரிவித்த தனது தந்தை மற்றும் தாயை கொன்ற தலிபான் பயங்கரவாதிகளை 15 வயது நிரம்பிய சிறுமி சுட்டுக்கொன்று பழிதீர்த்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இச்சம்பவம் கடந்த வாரம் நிகழ்ந்த போது தற்போதுதான் இது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
ஆப்கானிஸ்தானின் கோர் மாகாணம் தைவாரா மாவட்டம் கிர்வா கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமி கோமர் குல். இவரது குடும்பத்தில் மொத்தம் 4 பேர். தாய், தந்தை, சகோதரருடன் கோமர் குல் வசித்து வந்தார்.
கிர்வா கிராம தலைவராக செயல்பட்டு வந்த கோமரின் தந்தை ஆப்கன் அரசுக்கு ஆதரவாகவும் செயல்பட்டு வந்தார். இதனால் ஆத்திரமடைந்த தலிபான்கள் கடந்த வாரம் இரவு கோமரின் வீட்டிற்கு சென்றனர்.
கோமரின் தந்தை மற்றும் தாயை வீட்டில் இருந்து வெளியே தரத்தரவென இழுத்து வந்த தலிபான்கள் இவருவரையும் கடுமையாக தாக்கினர். தடுக்க முயற்சித்த கோமரையும் தாக்கினர். இறுதியாக தந்தை மற்றும் தாயை
வீட்டின் வாசலில் வைத்து கோமர் மற்றும் அவரது சகோதரரின் கண்முன்னே சுட்டுக்கொன்றுனர்.
தந்தை மற்றும் தாய் கண்முன்னே சுட்டுக்கொல்லப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்த கோமர் வீட்டிற்குள் சென்றார். அங்கு தனது தந்தை பாதுகாப்பிற்காக வைத்திருந்த ஏகே 47 நவீன ரக துப்பாக்கியை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு வெளியே வந்தார்.
சிறுமி கோமர் குல் மற்றும் அவரது சகோதரர்
தந்தை மற்றும் தாய் கொல்லப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சியும், பெற்றோரை கொன்றவர்களை பழிவாங்க வேண்டும் என்ற கோவமும் கொண்டிருந்த கோமர் தனது வீட்டின் வாசலில் நின்று கொண்டிருந்த தலிபான்களை கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினார்.
கோமர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் வாசலில் நின்றுகொண்டிருந்த 2 தலிபான்கள் தலையில் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
கோமரிடம் இருந்து துப்பாக்கியை வாங்கிய அவரின் சகோதரனும்
பெற்றோர் உயிரிழப்புக்கு காரணமான தலிபான்களை குறிவைத்து தாக்குதல் நடத்தினான்.
சிறுவன் சுட்டதில் சில தலிபான்கள் காயமடைந்தனர். கோமர் மற்றும் அவரது சகோதரர்கள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் அதிர்ச்சியடைந்த எஞ்சிய தலிபன்கள் உயிருக்கு பயந்து அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.
இதையடுத்து தந்தை மற்றும் தாயை இழந்தபோதிலும் அவர்கள் உயிரிழக்க காரணமான பயங்கரவாதிகளை கொன்று பழித்தீர்த்ததால் கோமர் குல் சற்று ஆறுதல் அடைந்துள்ளார்.
பொற்றோரை கொன்ற தலிபான்களை 15 வயது சிறுமி கோமர் குல் மற்றும் சகோதரர் இருவரும் இணைந்து சுட்டுக்கொன்ற சம்பவம் ஆப்கான் முழுவதும் பேசுபொருளாகியுள்ளது. இருவருக்கும் அந்நாட்டு அதிபர் உள்பட அனைத்து தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், தலிபான் பயங்கரவாதிகளை எதிர்த்து மேலும் சண்டையிட தான் தயாராக உள்ளதாக கோமர் குல் தெரிவித்துள்ளார்.

லண்டனில் வீட்டுக்குள் இருந்து இரு சடலங்கள் மீட்பு – நடந்தது என்ன …?
லண்டனில் வீட்டுக்குள் இருந்து இரு சடலங்கள் மீட்பு – நடந்தது என்ன …?
பிரிட்டன் Oxford Avenue, Gorleston பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் இருந்து இரண்டு மனித சடலங்கள் மீட்க பட்டுள்ளன
கடந்த தினம் இரவு 7,30 மணியளவில் ஆண் ,மற்றும் பெண் சடலமாக மீட்க பட்டுள்ளனர்
இந்த மரணம் எவ்விதம் இடம்பெற்றது என இதுவரை தெரிவிக்க படவில்லை .தொடர்ந்து குற்ற தடுப்பு போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
இது கொலையா ..? அல்லது தற்கொலையா ..? இயற்கை இறப்பா என்பது தொடர்பில் தெரியவரவில்லை

வங்கிகளில் கடன் பெறும் மக்கள் சிரமத்திற்குள்ளாகும் தற்போதைய முறையை மாற்ற வேண்டும் – பிரதமர்
வங்கிகளில் கடன் பெறும் மக்கள் சிரமத்திற்குள்ளாகும் தற்போதைய முறையை மாற்ற வேண்டும் – பிரதமர்
வங்கிகளில் கடன் பெறும் போது மக்கள் சிரமத்திற்குள்ளாகும் தற்போதைய முறையை மாற்ற வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைவர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நேற்று (2020.07.21) காலை கண்டி மாவட்டத்தின் உடுதும்பர பிரதேசங்கள் சிலவற்றில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
உடுதும்பரயில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றிய பிரதமர் கருத்து வெளியிடுகையில், வங்கிகளில் கடன் பெற செல்லும் மக்கள் சிரமத்திற்குள்ளாகும் வகையில் விண்ணப்பங்கள் நிரப்புவதற்கு உள்ள முறையை எதிர்வரும் காலங்களில் மாற்றுவதாக குறிப்பிட்டுள்ளார்.
2005ஆம் ஆண்டு அதிகாரத்திற்கு வந்த பின்னர் நாட்டில் முப்பது வருடங்கள் காணப்பட்ட சிவில் யுத்தத்தை நாங்கள் நிறைவு செய்தோம். அதன் பின்னர் வரலாற்றில் என்றும் இல்லாத வகையில் நாட்டின் அனைத்து மாகாணத்திற்கும் ஒரே முறையில் அபிவிருத்திகளை ஏற்படுத்தினோம். அதிவேக நெடுஞ்சாலைகள் உட்பட நெடுஞ்சாலைகள் விமான நிலையங்கள், துறைமுகங்கள், பாடசாலைகள் ஆகிய அனைத்து பிரிவுகளிலும் ஒரே சம அளவிலான அபிவிருத்திகளை நாடு முழுவதும் மேற்கொண்டோம்.
2015ஆம் ஆண்டின் பின்னர் அதிகாரத்திற்கு வந்த அரசாங்கம் அந்த அபிவிருத்திகளை பின்நோக்கி கொண்டு சென்றது. கண்டிக்கு வரும் அதிவேக நெடுஞ்சாலையும் எங்கள் காலத்திலேயே ஆரம்பிக்கப்பட்டது. நல்லாட்சி அரசாங்கம் கண்டியை மறந்துவிட்டது. எங்கள் புதிய அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்ததனை தொடர்ந்து கொழும்பு – கண்டி அதிவேக நெடுஞ்சாலை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும். அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகமவில் இருந்து குருநாகல் வரையிலான பகுதிகளில் இதுவரையில் வேலைகள் நிறைவு செய்யப்பட்டு வருகின்றது. வௌ;வேறு உறுப்பினர்களுக்கு அதிவேக நெடுஞ்சாலைகளின் பகுதிகளை வழங்குவதே தாமதத்திற்கு காரணமாகும். எங்கள் அரசாங்கத்தின் கீழ் வெகு விரைவில் கண்டி வரை அதிவேக நெடுஞ்சாலை அமைக்கும் நடவடிக்கையை நிறைவு செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்வோம்.
கடந்த அரசாங்கம் வேலை செய்வதனை நிறுத்தி விட்டு தொடர்ந்து பழிவாங்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டது. அனைவரையும் பழிவாங்கினார்கள். ஆணைக்குழுக்களை அமைத்தார்கள். குற்றச்சாட்டுகள் இன்றி எங்கள் பிள்ளைகளை சிறையில் அடைத்தார்கள். எங்கள் அமைச்சர்கள், உறுப்பினர்கள், உதவிய வர்த்தகர்கள் என அனைவரையும் நிதி குற்ற விசாரணை பிரிவு என விசேட விசாரணை பிரிவை அமைத்து சிறையில் அடைத்தார்கள். அதற்கு பிரதமரால் மாத்திரமே முறைப்பாடு செய்ய முடியும். அந்த முறையில் சட்டத்தை உடைத்தார்கள். சட்டத்தை உடைத்து பழிவாங்கும் நடவடிக்கைகளை ஆரம்பித்தார்கள். அதற்கு மேல் அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
அதன் பின்னர் அந்த அரசாங்கத்தின் ஜனாதிபதிக்கும் ,பிரதமருக்கும் இடையிலான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்தது. அந்த மோதலினால் ஜனாதிபதி என்னை அழைத்து பிரதமர் பதவியை ஏற்குமாறு கூறினார். நான் அதனை ஏற்றேன். அந்த காலப்பகுதியில் சிறிய காலப்பகுதி ஒன்றுக்கே பிரதமர் பதவியை ஏற்க முடியும் என்பது எனக்கு தெரியும். அன்று நாங்கள் எதிர்கட்சியில் இருந்த போது எங்கள் குழுவில் ஐம்பத்து இரண்டு பேர் இருந்த போதிலும் எங்களுக்கு எதிர்கட்சி தலைமைத்துவம் வழங்கப்படவில்லை. 16 ஆசனங்கள் கொண்டிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு எதிர்கட்சி தலைவர் பதவி வழங்கப்பட்டது. எதிர்கட்சியின் பிரதான கொறடா பதவி மக்கள் விடுதலை முன்னணிக்கும் வழங்கப்பட்டது. அது தான் அன்று நாடாளுமன்றம் செயற்பட்ட முறையாகும். அந்த விடயங்களை மேற்கொள்வதற்கு சபாநாயகர் புதிய சட்டத்திட்டங்களை கொண்டு வந்தார். இறுதியாக பிரதமர் பதவியை பெற்றுக் கொண்டு மீண்டும் எதிர்கட்சிக்கு செல்லும் போது எதிர்கட்சி தலைவர் பதவியை பெற்ற முடிந்தது. அதன் பின்னரே புதிய கட்சி ஒன்றில் பிரதேச சபை தேர்தில் போட்டியிட்டு அந்த தேர்தலில் வெற்றி பெற்றோம். எங்கள் கட்சிக்கு மூன்றாயிரம் கணக்கிலான உறுப்பினர்கள் உள்ளனர். பிரதேச சபை தேர்தலில் 71மூ ஆசனங்களை எங்களால் வெற்றியீட்ட முடிந்தது. ஜனாதிபதி தேர்தலிலும் நாங்கள் தாமரை மொட்டியில் போட்டியிட்டு கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் வெற்றி பெற்றார்.
பிரதமர் மற்றும் ஜனாதிபதி இரண்டு கட்சிகளில் இருக்கும் போது நாட்டிற்கு சேவைகள் ஒன்றும் நிறைவேற்றப்படாதென்பதனை நாங்கள் பார்த்தோம். அந்த தரப்பினர் சண்டையிடுவதனை மாத்திரமே செய்தார்கள். அதனால் ஜனாதிபதி பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிக்கு நிச்சயமாக பிரதமர் பதவியும் நாடாளுமன்றமும் காணப்பட வேண்டும். அப்படி இல்லை என்றால் நாடு ஒன்றில் அபிவிருத்திகள் ஏற்படாது. நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும் என்றால் எங்கள் ஜனாதிபதியின் கொள்கை வேலைத்திட்டங்களை முன்னெடுக்க கூடியவர்களை நாடாளுமன்றத்திற்கு நியமிக்க வேண்டும். இந்த வேலைத்திட்டத்தை செய்வதற்காக இந்த தேர்தலில் பொதுஜன பெரமுனவை வெற்றி பெற செய்ய வேண்டும்.
இம்முறை தேர்தலில் களமிறக்கப்பட்டுள்ள எங்கள் குழுவினர், கிராமங்கள் குறித்து, பிரதேசங்கள் குறித்து, நாடு குறித்து மாத்திரமின்றி, சர்வதேச அரசியல் தொடர்பிலும் சிறந்த விழிப்புணர்வு கொண்டவர்களாகும். ஐக்கிய தேசிய கட்சி இன்று இரண்டாக பிளவுப்பட்டுள்ளது. பண்டாரநாயக்க அவர்களும், டீ.ஏ.ராஜபக்ஷ அவர்களும் ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து விலகி ஸ்ரீங்கா சுதந்திர கட்சியை கட்டியெழுப்பினார்கள். அவர்களை தொடர்ந்து சந்திரிக்கா அவர்கள் போன்று நாங்களும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை முன்னோக்கி கொண்டு வந்தோம். பின்னர் எங்களை கட்சியில் இருந்து விலக்கியமையினால் எங்களுக்கு வேறு கட்சியை உருவாக்க நேரிட்டது. நாங்கள் மொட்டினை உருவாக்கி வெற்றியை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்றோம்.
பெண்கள்களின் எதிர்காலத்தை வெற்றிகரமாக்கிக் கொள்வதற்கு பொருத்தமான வேலைத்திட்டம் அவசியமாகும். சுயதொழிலில் ஈடுபடும் பெண்களுக்கு விசேட கடன் முறையை அமைப்பது அவசியமாகும். இன்று கடன் பெற சென்றால் வங்கிகளில் வழங்கும் விண்ணப்பங்களை பார்க்கும் போதே பயம் ஏற்படுகின்றது. வங்கிகளில் கடன் வழங்கும் முறை மாற்றமடைய வேண்டும். அதனை நாங்கள் தினமும் கூறுகின்றோம். வங்கிகளில் கடன் பெற்று ஏதாவது தொழிற்சாலையை ஆரம்பிக்க கூடிய வேலைத்திட்டம் ஒன்றை தயாரிக்க வேண்டும். அதனால் வங்கிகளுக்கு மத்திய வங்கியின் ஆலோசனை கிடைக்க வேண்டும். இலகு முறை ஒன்றை பின்பற்ற வேண்டும். பெண்களுக்காக விசேட வேலைதிட்டம் ஒன்றையும் கடன் பணம் வழங்கி சுய தொழில் தொழிற்சாலை ஆரம்பிக்க நடவடிக்கை மேற்கொள்ள நாங்கள் எதிர்பார்க்கின்றோம். இந்த விடயத்திற்கமைய அவர்களின் வாழ்க்கையை வெற்றிகராக மேற்கொள்ள கூடிய வாய்ப்பு கிடைக்கும். அதேபோன்று தொழில் சந்தர்ப்பத்தை அதிகரிக்கும் வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பிப்போம்.இதற்கு முன்னர் நாங்கள் அரசாங்கத்தை பொறுப்பேற்ற சந்தர்ப்பத்தில் அரச தொழிலில் ஏழு லட்சம் பேர் வரையிலானோரே இருந்தனர்.
நாங்கள் அரசாங்கத்தை ஒப்படைக்கும் போது 15 லட்சம் பேர் வரையில் இருந்தனர். நாங்கள் ஒரே நேரத்தில் அனைத்து பட்டதாரிகளுக்கும் தொழில் வழங்கினோம். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் பட்டதாரிகள் அனைவருக்கும் ஒரே நேரத்தில் தொழில் வழங்குவதாக கூறினார். கூறியதனை போன்றே நாங்கள் தொழில் வழங்கினோர். எனினும் தேர்தல் சட்டத்திற்கமைய அவர்களுக்கு தற்காலிகமாக வீட்டில் இருக்க நேரிட்டுள்ளது. தொழிலை ஏற்றவர்களுக்கு சம்பளமும் கிடைக்கின்றது.
ஒரு லட்சம் தொழில் வழங்கும் வேலைத்திட்டமும் அதே போன்ற வேலைத்திட்டமாகும். முதல் முறையாக ஒரு பேனையில் ஒரு லட்சம் தொழில் வழங்கப்படுகின்றது. பொதுவாக ஆறு வேலைகளாவது செய்திருந்தால் தான் அரசாங்க தொழில் கிடைக்கும். முதல் முறையாக பரீட்சையில் தோல்வியடைந்தவர்களை பார்த்து தொழில் வழங்கப்படுகின்றது.
நாங்கள் மூன்றில் இரண்டு அதிகாரம் கேட்கின்றோம். ஏன் மூன்றில் இரண்டு கேட்கின்றோம். அரசியலமைப்பை மாற்ற வேண்டும் நாட்டிற்கு பொருத்தமான புதிய அரசியலமைப்பு ஒன்று வேண்டும். நாட்டில் உள்ள பிரச்சினைகளுக்கு பதில் வழங்கும், நாட்டின் ஒற்றுமையை பாதுகாக்கும் அரசியலமைப்பு ஒன்றை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும்.
பின்னர் கண்டி, தெல்தெனிய நகரத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட பிரதமர், தந்தையின் வேலைத்திட்டங்களை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு அதிகாரம் கோரும் சஜித் பிரேமதாஸவின் தந்தையின் ஆட்சி யுகம் தொடர்பில் இவ்வாறு கருத்து வெளியிட்டார்,
சஜித் பிரேமதாஸ தலைமை தாங்கும் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் கொள்கை தொகுப்புகள் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கொள்கை தொகுப்புகளுக்கும் இடையில் ஒற்றுமை ஒன்று உள்ளது. இலங்கை மிக பழைமையான அரசியல் கட்சிகளில் ஒன்றான ஐக்கிய தேசிய கட்சியை பிளவுபடுத்தும் தலைமைத்துவத்தை ஏற்று செயற்பட்ட சஜித் பிரேமதாஸ, நாட்டை பிளவுப்படுத்துவதற்கும் ஒரு போதும் தயங்க மாட்டார்கள் என்பது எனது நம்பிக்கையாகும்.
சஜித் பிரேமதாஸ அனைத்து சந்தர்ப்பங்களிலும் தனது தந்தையின் வேலைத்திட்டத்தை முன்னோக்கி கொண்டு செல்வதற்கே அதிகாரத்தை கேட்கின்றார். ஆர்.பிரேமதாஸ காலம் தொடர்பில் நினைவுப்படுத்தினால் 88, 89 காலப்பகுதியில் காணப்பட்ட கலவர யுகமே எந்த ஒரு நபருக்கும் நினைவுக்கு வரும். பிரேமதாஸ யுகத்தின் கலவரம் காரணமாக கண்டியின் சில கிராமங்கள் படுகொலைகளுக்குட்பட்டது. நாய் – பூனையேனும் மீதம் வைக்கவில்லை. அந்த கலவரங்கள் தொடர்பில் இந்த பிரதேச மக்கள் என்ற ரீதியில் உங்களுக்கு புதிதாக ஒன்றும் கூற தேவையில்லை. அந்த கலவரத்தினால் முழு நாட்டிலும் 60 ஆயிரத்திற்கும் அதிக இளைஞர், யுவதிகள் கொல்லப்பட்டனர்.
1988ஆம் ஆண்டில் பேராதனை பல்கலைக்கழக வைத்திய பீட மாணவர்கள் மாத்திரம் 22 பேர் கொல்லப்பட்டனர். கண்டி மஹவத்தை படுகொலை சம்பவத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 157 ஆகும். அதில் 129 கொலை பிரேமதாஸ அரசாங்கத்தினாலேயே மேற்கொள்ளப்பட்டது. 28 பேரை மக்கள் விடுதலை முன்னணியின் வன்முறையாளர்கள் கொலை செய்தனர். 1989ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் பிரேமதாஸ அரசாங்கம், கண்டி டீ.எஸ்.சேனாநாயக்க மாவத்தையில் மேல் பகுதிக்கு செல்லும் பழைய மாத்தளை வீதியில் இளைஞர், யுவதிகள் பலர் எரித்து கொலை செய்யப்பட்டனர்.
பிரேமதாஸ யுகத்தில் கண்டி மாவட்டத்தின் கடுகன்னாவ, ரன்தெனிகல, கண்டி, சில்வெஸ்டர் வித்தியாலயம், அஸ்கிரி பொலிஸ் உத்தியோகபூர்வ இல்லங்கள், அங்கும்புர குண்டசாலை, கட்டுகஸ்தோட்டை தெல்வத்தை சித்திரவதை கூடங்கள் உட்பட பல பாரிய எண்ணிக்கையிலான சித்திரவதை கூடங்கள் இருந்தமை எங்களுகக்கு நினைவில் உள்ளது.
இடைக்கிடையே துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு பேராதனை பாளத்தில் இருந்து மகாவெலி கங்கைக்கு இழுத்து வீசப்பட்ட இளைஞர்களின் எண்ணிக்கை 200க்கும் அதிகம். கடுகன்னாவ நகரத்தில் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட 14 – 15 வயதுடைய சிறுமிகளின் சாம்பல்களை நாடாளுமன்றத்திற்கு கொண்டு சென்று அது தொடர்பில் முழு உலகினதும் அவதானம் செலுத்தப்பட்டது. அன்று காணப்பட்ட அரசாங்கம் அந்த சாம்பல்கள் எவ்வாறு நாடாளுமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டதென தேடிய போதிலும் அந்த சிறுமிகளை யார் கொலை செய்தார்கள் என தேடவில்லை. இதனால் இன்று மீண்டும் பிரேமதாஸ யுகம் ஒன்று ஏற்படுத்த மக்கள் அச்சப்படுகின்றார்கள் என பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த சந்தர்ப்பத்தில் முன்னாள் அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல, திலும் அமுனுகம, லொஹான் ரத்வத்தை, ஆனந்த அழுத்கமகே உட்பட இம்முறை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் கண்டி மாவட்டத்தில் பொது தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பலர் இணைந்திருந்தனர்.
புதிய கடற்படைத் தளபதி இராணுவ தலைமையகத்திற்கு விஜயம்
புதிய கடற்படைத் தளபதி இராணுவ தலைமையகத்திற்கு விஜயம்
ஸ்ரீ ஜயவர்தனபுரத்தில் அமைந்துள்ள இராணுவ தலைமையகத்திற்கு புதிதாய் நியமிக்கப்பட்ட 24 ஆவது கடற்படைத் தளபதியான வயிஷ் அத்மிரால் நிஷாந்த உளுஹேதென்ன நேற்று (21) விஜயத்தை
மேற்கொண்டு கொவிட் மைய தலைவரும், பாதுகாப்பு தலைமை பிரதானி மற்றும் இராணுவ தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வாவை சந்தித்தார்.
இராணுவ தலைமையகத்திற்கு வருகை தந்த கடற்படைத் தளபதியை தலைமையக நுழைவாயிலில் வைத்து இராணுவ
தலைமையகத்தின் பட்டாலியன் தலைமையக கட்டளை அதிகாரியான கேர்ணல் இந்திக பெரேரா வரவேற்றார்.
பின்பு இராணுவ தலைமையகத்திற்கு வருகை தந்த கடற்படைத் தளபதியை இராணுவ நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர்
ஜெனரல் சூல அபேநாயக வரவேற்று பின்னர் இராணுவ சம்பிரதாய முறைப்படி இராணுவ பீரங்கிப் படையணியினரால் அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி வைத்து வரவேற்கப்பட்டார்.
பின்னர் இராணுவ தளபதியின் பணிமனைக்கு சென்ற கடற்படைத் தளபதியை இராணுவ தளபதியான லெப்டினன்ட் ஜெனரல்
சவேந்திர சில்வா வாழ்த்துக்களை தெரிவித்து வரவேற்று பின்னர் இராணுவ தலைமையகத்திலுள்ள மூத்த உயரதிகாரிகளை கடற்படைத் தளபதிக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.
பின்னர் கடற்படைத் தளபதி மற்றும் இராணுவ தளபதி இருவருக்கும் இடையில் நல்லுறவை மேம்படுத்தும் நோக்கத்துடன் கடந்த கால நினைவுகளை பகிர்ந்து கொள்ளும் நோக்கத்துடன்
கலந்துரையாடல்கள் இடம்பெற்று இருவருக்கும் இடையில் இந்த சந்திப்பை நினைவு படுத்தும் முகமாக நினைவுச் சின்னங்கள் பரிமாறப்பட்டன.
இறுதியில் கடற்படைத் தளபதியினால் பிரமுகர்களின் வருகையை முன்னிட்டு கையொப்பமிடும் புத்தகத்தில் கையொப்பமிட்டு
தனக்கு கௌரவ மரியாதையை வழங்கி வைத்த இராணுவ தளபதி அவர்களுக்கும் நன்றிகளை தெரிவித்தார்.
மேன்மை தங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் 2020 ஆம் ஆண்டு 15 ஆம் திகதி 24 ஆவது புதிய கடற்படைத் தளபதியாக வயிஷ் அத்மிரால் நிஷாந்த உளுஹேதென்ன நியமிக்கப்பட்டார்.
புதிய கடற்படைத் தளபதி 1985 ஆம் ஆண்டு 13 ஆவது பயிற்சிகெடெற் அதிகாரியாக இணைந்து திருகோணமலை கடற்படை முகாமில் அடிப்படை பயிற்சியினை பெற்றுக்
கொண்டார். இந்த பயிற்சியினை வெற்றிகரமாக நிறைவு செய்ததன் பின்பு, அவர் 1987 ஆம் ஆண்டு ஜனவாரி 07 ஆம் திகதியாக இரண்டாவது லெப்டினனாக நியமிக்கப்பட்டார். பின்னர்
இவர் அடுத்தடுத்த தரவரிசைகளுக்கு சீராக உயர்த்தப்பட்ட பின்னர், அவர் 2015 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 01 ஆம் திகதி ரியர் அத்மிரல் பதவிக்கு உயர்த்தப்பட்டார்.
கடற்படைத் தளபதி கொழும்பு றோயல் கல்லூரியில் தனது கல்வியை மேற்கொண்டு சிறந்த பண்புகளையும் திறமைகளையும்
கொண்டு றோயல் கல்லூரிக்கு பெருமையை தேடித்தந்தவர். இவர் இருமுறை ஹேர்மன் லூஷ் கோப்பையை வென்று சிறந்த கெடற்
அதிகாரியாக கல்லூரியில் விளங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கவிடயமாகும்.

மரக்கறிகளுக்கு உரிய விலை, விவசாயிகளுக்கு பாதுகாப்பான எதிர்காலம்
மரக்கறிகளுக்கு உரிய விலை, விவசாயிகளுக்கு பாதுகாப்பான எதிர்காலம்
மரக்கறி விவசாயிகளுக்கு பாதுகாப்பானதொரு எதிர்காலம் உருவாகும் வகையில் தமது அறுவடைகளுக்கு உரிய விலையை
பெற்றுக்கொள்ளக்கூடிய முறைமை ஒன்றை தயாரிப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
மரக்கறிகள், பழவகைகள் மற்றும் ஏனைய பயிர்களை நாடளாவிய ரீதியில் விநியோகிப்பது விவசாயிகளையும் நுகர்வோரையும் பாதுகாக்கும் வகையில் இருக்க வேண்டுமென ஜனாதிபதி குறிப்பிட்டார்.
பொதுஜன முன்னணியில் இம்முறை பொதுத் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் வெற்றியை உறுதிசெய்யும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று (21)
நுவரெலியா மாவட்டத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டு, வலப்பனை நகரில் சந்தை வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த
மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டபோதே இதனைத் தெரிவித்தார். முன்னாள் இராஜாங்க அமைச்சர் சீ.பீ.ரத்னாயக்க மற்றும் நிமல் பியதிஸ்ஸ ஆகியோரினால் இச்சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அரச வங்கிக் கடன்கள் தங்களுக்கு நிவாரணத்தை பெற்றுத்தரும் வகையில் இல்லையென விவசாயிகள் ஜனாதிபதியிடம் தெரிவித்தனர். நுவரெலியா மாவட்டத்தின் அரச நிறுவனங்களில் பல்வேறு வெற்றிடங்கள் காணப்படுகின்றன. அவற்றுக்கு
நியமனங்களை பெற்று வருவோர் குறுகிய காலத்தில் இடமாற்றம் பெற்று வேறு மாவட்டங்களுக்கு சென்று விடுகின்றனர். அதன் காரணமாக பிரதேச மக்கள் தங்களின் தேவைகளை
நிறைவேற்றிக்கொள்வதில் பெரும் பிரச்சினைகளை எதிர்நோக்குவதாகவும் அவர்கள் ஜனாதிபதியிடம் தெரிவித்தனர்.
பொரமடுல்ல மத்திய மகா வித்தியாலயத்தின் விளையாட்டரங்கை அபிவிருத்தி செய்து, அதனை பாடசாலையுடன் இணைத்து பாலம் ஒன்றிணை நிர்மாணித்து தருமாறு மாணவர்கள் முன்வைத்த
கோரிக்கையினை ஜனாதிபதி இராணுவ தளபதியின் கவனத்திற்கு கொண்டு வந்தார். நாளைய தினமே அது பற்றி ஆராய்ந்து விரைவாக அக்கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை
எடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார். பிரதேச மக்கள் முன்வைத்த பிரச்சினைகளை உடனடியாக தீர்ப்பதற்கும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க ரிக்கில்லகஸ்கட பிரதேச சபை விளையாட்டரங்கில் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பில்
பங்குபற்றிய ஜனாதிபதிக்கு மகாசங்கத்தினர் பிரித் பாராயணம் செய்து ஆசிர்வதித்தனர்.
வலப்பனை வைத்தியசாலைக்கு பிக்குகளுக்கான வாட்டுத் தொகுதியொன்றை நிர்மாணித்து தருமாறு மகாசங்கத்தினர்
முன்வைத்த கோரிக்கை குறித்து ஆராய்ந்து அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
அபேட்சகர் சதாசிவம் சுப்பையா கந்தப்பளை சந்தை வளாகத்தில் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பிலும் ஜனாதிபதி
பங்குபற்றினார். வருகை தந்திருந்த பிரதேசவாழ் தமிழ் மக்கள் ஜனாதிபதி அவர்களை உற்சாகமாக வரவேற்றனர். ஜனாதிபதிக்கு ஆசிவேண்டி சமயக் கிரியைகளும் இடம்பெற்றன.
தரம் வாய்ந்த விதை கிழங்குகள் பற்றாக்குறைக்கு தீர்வை பெற்றுத் தருமாறு விவசாயிகள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தனர்.
கந்தப்பளையிலிருந்து நுவரெலியா வரையில் வீதியின் இருபுறமும் ஒன்றுகூடியிருந்த மக்களுடன் ஜனாதிபதி சுமூகமாக உரையாடினார்.
இயற்கை அழகிற்கு பாதிப்பு ஏற்பாடாத வகையில் நுவரெலியா மாவட்டத்தில் சுற்றாடலை பாதுகாக்குமாறு நுவரெலியா கிரகரி வாவிக்கு அருகில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் சந்திப்பில் பங்குபற்றிய ஜனாதிபதியிடம் மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
சுயதொழிலாக பெண்கள் சிலர் சேர்ந்து முன்னெடுத்து வரும் “பஜட் பெக்” மரக்கறி மற்றும் பழவகைகள் திட்டம் ஜனாதிபதியினால் பாராட்டப்பட்டது. வீழ்ச்சியடைந்துள்ள சுற்றுலா கைத்தொழில்
மற்றும் காணி உறுதிகள் இல்லாமையினால் எழுந்துள்ள பிரச்சினைகள் பற்றியும் ஜனாதிபதியிடம் தெரிவிக்கப்பட்டது.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சீ.பீ.ரத்னாயக்க மற்றும் எஸ்பி.திசாநாயக்க ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

ஆயுதங்களுடன் நபர் ஒருவர் கைது
ஆயுதங்களுடன் நபர் ஒருவர் கைது
எல்பிட்டிய, கனேகொட பகுதியில் துப்பாக்கிகள் உட்பட ஆயுதங்களுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விஷேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நபரிடம் இருந்து போரொ 12 வகை துப்பாக்கி ஒன்று, அதற்கான தோட்டாக்கள் 6, உள்நாட்டு துப்பாக்கி ஒன்று, கைக்குண்டு ஒன்று, ரி56 ரக துப்பாக்கிக்கான தோட்டாக்கள் 23 மற்றும் அதற்கான மெகசின் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதற்கு மேலதிகமாக 3 வாள்கள், இராணுவ சீருடை ஒன்று மற்றும் இராணுவ மேலாடைகள் மூன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய தேசிய கட்சி அதிகாரத்தை கேட்பது நாட்டில் எஞ்சியுள்ள வளங்களையும் விற்பதற்கே- மகிந்த முழக்கம்
ஐக்கிய தேசிய கட்சி அதிகாரத்தை கேட்பது நாட்டில் எஞ்சியுள்ள வளங்களையும் விற்பதற்கே- மகிந்த முழக்கம்
நாட்டின் எதிர்கால சந்ததியினருக்கு சொந்தமான அரச சொத்துக்களை வெளிநாட்டிற்கு விற்பனை செய்த ஐக்கிய தேசிய
கட்சி அரசாங்கம் பிட்பாக்கட்காரர்களுக்கு சமமானது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
நடைபெறவுள்ள தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி அதிகாரத்தை கேட்பது நாட்டில் எஞ்சியுள்ள வளங்களையும் விற்பனை செய்வதற்கே எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.
குண்டசாலை, பலகொல்ல பிரதேசத்தில் நேற்று (21) நடைபெற்ற சந்திப்பொன்றின் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த பிரதமர், சிறிகொத்தவை கைப்பற்றுவது மாத்திரமே ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகியவற்றின் முக்கிய குறிக்கோளாக
காணப்படுவதுடன், அவர்களுக்கு நாட்டை பாதுகாப்பதற்கோ, அபிவிருத்தி செய்வதற்கோ எவ்வித தேவையும் இல்லை என்றும் குறிப்பிட்டார்.
எனவே, மொட்டுடன் இணைந்து நாட்டை பாதுகாப்பதற்கும், நாட்டை அபிவிருத்தி செய்வதற்கும் ஒன்றிணையுமாறு ஐக்கிய தேசிய கட்சியினருக்கு அழைப்பு விடுப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
யாருடைய தேசதுரோக நிபந்தனைகளுக்கும் அடிபணியாது பலம் வாய்ந்த அரசாங்கமொன்றை உருவாக்க வேண்டுமாயின் மூன்றில்
இரண்டு பெரும்பான்மை பலம் அவசியம் என்றும், நாட்டிற்காக மொட்டு கட்சியை ஆட்சியில் இருத்துவது மக்களின் கடமை எனவும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.
அனைத்து இனத்தவர்களுக்கும் வாழக்கூடிய விதத்தில் ஒன்றிணைந்த நாடொன்றை உருவாக்கக் கூடிய ஒரே கட்சி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மாத்திரமே என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
குறித்த சந்திப்பில் முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டிருந்தனர்.
இத்தாலியிலுள்ள இலங்கைத் தொழிலாளர்களுக்கு உதவி
இத்தாலியிலுள்ள இலங்கைத் தொழிலாளர்களுக்கு உதவி
சண்டடோரியா 2020´ திட்டத்தின் கீழ் 2020 ஜூன் 01 முதல் ஆகஸ்ட் 15 வரையான காலப்பகுதிக்கு இத்தாலிய அதிகாரிகள் வழங்கியுள்ள பொது மன்னிப்பின் மூலமாக பயன்களை
அடைந்துகொள்வதற்காக இத்தாலியிலுள்ள இலங்கைத் தொழிலாளர்களுக்கு உதவும் முகமாக வெளிநாட்டு உறவுகள் அமைச்சர் தினேஷ் குணவர்தனவினால் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கொவிட்-19 சூழலில் இலங்கைத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை கருத்தில் கொண்டு, இலங்கையின் கடவுச்சீட்டுக்காக
விண்ணப்பிக்கும் தொழிலாளர்களிடமிருந்து போதிய ஆவணங்கள் இல்லாத காரணத்தினால் அறவிடப்படும் அபராதக் கட்டணத்தை தள்ளுபடி செய்து, கட்டணங்களை 140 யூரோவாக (330 யூரோ மற்று
ம் 420 யூரோவிலிருந்து) குறைப்பதற்கு அமைச்சர் குணவர்தன நடவடிக்கைளை முன்னெடுத்துள்ளார்.
இந்த முயற்சியானது, தற்போது இத்தாலியில் தங்கியுள்ள 20,000 இலங்கைத் தொழிலாளர்களுக்கு பயனளிப்பதாக அமைவதுடன்,
அவர்கள் இலங்கையின் கடவுச்சீட்டுக்களைப் பெற்றதன் பின்னர் இத்தாலியில் பணிபுரிவதற்கான வீசாக்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.
ஈரான் இராணுவ குழுமீது – இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் – ஐவர் பலி
ஈரான் இராணுவ குழுமீது – இஸ்ரேல் ஏவுகணை தகுதித்தல் – ஐவர் பலி
சிரியாவுன் தெற்கு டமகாஸ் பகுதிக்கு அருகில் தளம் அமைத்து இயங்கி வரும்
ஈரான் ஆதரவு போராளிகளாக விளங்கி வரும் ஸ்புல்லா நிலைகள் மீது இஸ்ரல் திடீர் ஏவுகணை தாக்குதலை நடத்தியது
இந்த தாக்குதலில் சிக்கி ஐந்து ஈரான் ஆதரவு படைகள் பலியாகியுள்ளனர்
இஸ்ரேல் இராணுவ சிப்பாயை உயிருடன் பிடித்து சென்றதற்கு பழிவாங்கும் தாக்குதலாக இது இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்க படுகிறது
கொரோனா உறுதி செய்யப்பட்ட இளம்பெண் துபாய் தப்பியோட்டம் – அதிகாரிகள் அதிர்ச்சி
கொரோனா உறுதி செய்யப்பட்ட இளம்பெண் துபாய் தப்பியோட்டம் – அதிகாரிகள் அதிர்ச்சி
மகாராஷ்டிராவில் கொரோனா உறுதி செய்யப்பட்டு வீட்டுத்தனிமையில் இருந்த இளம் பெண் சிறப்பு விமானம் மூலம் துயாய் தப்பிச்சென்ற சம்பவம் அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிராவில் கொரோனா உறுதி செய்யப்பட்ட இளம்பெண் துபாய் தப்பியோட்டம் – அதிகாரிகள் அதிர்ச்சி
கோப்பு படம்
மும்பை:
இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது.
நாட்டிலேயே வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை மற்றும் பலி எண்ணிக்கையில் மகாராஷ்டிர மாநிலம் முதலிடத்தில் உள்ளது.
இதற்கிடையில், நாட்டில் வைரஸ் உறுதி செய்யப்பட்ட பலர் தங்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் சிலர் கட்டுப்பாடுகளை மீறி சுதந்திரமாக வெளி இடங்களில் சுற்றித்திரியும் நி்கழ்வுகளும் நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில், கொரோனா உறுதி செய்யப்பட்டு வீட்டுத்தனிமையில் இருந்த பெண் ஒருவர் சுகாதாரத்துறை அதிகாரிகள் உள்பட யாருக்கும் தெரியாமல் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய்க்கு சிறப்பு விமானத்தில் தப்பிச்சென்ற சம்பவம் மகாராஷ்டிராவில் அரங்கேறியுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் குடும்பத்தினருடன் வசித்து வந்த 30 வயது நிரம்பிய பெண் புனேவில் தான் வாங்கிய அடுக்குமாடி குடியிருப்பின் பத்திரப்பதிவு நடைமுறைகளுக்காக கடந்த மார்ச் மாதம் இந்தியா வந்துள்ளார். அவர் மகாராஷ்டிரா வந்த சில நாட்களில் கொரோனா காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு சர்வதேச விமான பயணங்கள் தடை செய்யப்பட்டது.
இதனால் அப்பெண் புனேவில் உள்ள புனவாலே என்ற பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார்.
இதற்கிடையில், அந்த குடியிருப்பில் வசித்து வந்த நபர்களில் பலருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அப்பெண்ணுக்கு மேற்கொண்ட பரிசோதனையில் அவருக்கும் கடந்த 12 ஆம் தேதி கொரோனா
பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
கோப்பு படம்
கொரோனா அறிகுறிகள் சிறிய அளவில் இருந்ததால் அப்பெண்ணை வீட்டுத்தனிமையில் இருக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுரை வழங்கினர்.
இதையடுத்து, அப்பெண் உள்பட பலர் வசித்துவந்த அந்த அடுக்குமாடி குடியிருப்பு பகுதி முழுவதும் கொரோனா நோய் கட்டுப்பாட்டு பகுதியாக
அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், கொரோனா உறுதி செய்யப்பட்ட அப்பெண் மருந்து வாங்க செல்வதாக கூறிக்கொண்டு கடந்த 17-ம் தேதி தனது குடியிருப்பை விட்டு வெளியே சென்றார். ஆனால், அதன் பின் அவர் தனது குடியிருப்புக்கு திரும்பி வரவே இல்லை.
இது குறித்து தகவலறிந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் அப்பெண்ணின் நெருங்கிய உறவினர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது, வைரஸ் உறுதி செய்யப்பட்ட அப்பெண் மருந்து வாங்க செல்வதாக கூறி குடியிருப்பை விட்டு வெளியே சென்று மும்பையில் இருந்து இயக்கப்பட்ட சிறப்பு விமானத்தில் ஏறி தனது குடும்பத்தினர் வசித்து வரும் ஐக்கிய அரபு அமீரக நாட்டின் துபாய் நகருக்கு தப்பிச்சென்றுள்ளார் என்ற தகவல் அதிகாரிகளுக்கு தெரியவந்தது.
மும்பையில் இருந்து சிறப்பு விமானம் மூலம் துபாய் சென்றபோதும் சார்ஜா விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாகவும், பரிசோதனையில் தனக்கு அப்போது கொரோனா இல்லை என்பது உறுதியாகியுள்ளதாக அப்பெண் தனது உறவினரிடம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, 30 வயது நிரம்பிய அப்பெண் மீது கொரோனா விதிமுறைகளை மீறி வெளிநாடு தப்பிச்சென்ற குற்றத்திற்காக சுகாதாரத்துறையினர் போலீசில் புகார் அளித்தனர்.
இந்த புகாரையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அப்பெண்ணுக்கு துபாய் செல்ல சிறப்பு விமானத்தில் டிக்கெட் ஏற்பாடு செய்து கொடுத்தது யார் என்பது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கொரோனா உறுதி செய்யப்பட்டு வீட்டுத்தனிமைப்படுத்தலில் இருந்த இளம் பெண் விதிமுறைகளை மீறி யாருக்கும் தெரியாமல் சிறப்பு விமானத்தில் வெளிநாட்டிற்கு தப்பிச்சென்ற சம்பவம் மகாராஷ்டிர சுகாதாரத்துறையினர்
மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
லண்டன் – லூசியத்தில் ஏழுபேர் கைது – பெரும் தொகை பணம் மீட்பு – தொடரும் விசாரணை
லண்டன் – லூசியத்தில் ஏழுபேர் கைது – பெரும் தொகை பணம் மீட்பு – தொடரும் விசாரணை
லண்டன் லூசியம் பகுதியில் இன்று விசேட காவல்துறை அணியினர்
திடீர் சுற்றிவளைப்பு தேடுதல் ஒன்றை நடத்தினர் .
இதில் ஏழுபேர் கைதுசெய்ய பட்டனர்
இவர்கள் சட்டவிரோதமாக போதைவஸ்து கடத்தல் மற்றும் விற்பனையில்
ஈடுபட்ட பொழுதே இவர்கள் மடக்கி பிடிக்க பட்டுள்ளனர்
22 முதல் 36 வயதுடைய ஏழு நபர்களே இவ்விதம் கைது செய்யப் பட்டனர்
இவர்களிடம் இருந்து பெரும் தொகை பணம் மீட்க பட்டுள்ளது
உரைப்பை
ஒன்றில் கட்ட பட்ட நிலையில் மதில் ஒன்றுக்குள் மறைத்து வைக்க பட்ட நிலையில் பணம் மீட்க பட்டுள்ளது
துப்பாக்கிகள் ,கத்திகள் மற்றும் போதைவஸ்து என்பனவும் மீட்க பட்டுள்ளது
குற்ற தடுப்பு போலீசார் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர்








