Author: நலன் விரும்பி
கண்டதும் எல்லையில் மக்களை சுட்டு கொல்ல வடகொரியா உத்தரவு
கண்டதும் எல்லையில் மக்களை சுட்டு கொல்ல வடகொரியா உத்தரவு
சீனாவுடனான வடகொரியாவின் எல்லையிலிருந்து அரை மைல் தூரத்துக்குள் தென்படும் எவரையும் கண்டதும் சுட்டுக் கொல்ல
நாட்டின் இராணுவத்தினர் மற்றும் பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
வடகொரியாவில் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவரும் பொருட்டு, கிம் ஜாங் உன் இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.
கடுமையான இந்த புதிய நடவடிக்கையானது வியாழக்கிழமை நள்ளிரவில்
நடைமுறைக்கு வருவதற்கு ஒரு நாளுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எல்லைப்பகுதியில் உள்ள பொலிஸார் மற்றும் இராணுவ முகாம்களுக்கு
தேவையான துப்பாக்கி குண்டுகளையும் வடகொரிய அரசாங்கம் லொறிகளில் அனுப்பி வைத்துள்ளது.
மேலும், துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளும் அதிகாரிகள் மீது துறை
ரீதியான எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவலை முன்னிட்டு இரு நாடுகளும் எல்லைகளை மூடி வர்த்தகத்தை
நிறுத்திய போதிலும் எல்லை அருகாமையில் உள்ள மக்கள் ரகசியமாக வர்த்தகத்தை முன்னெடுத்து வந்துள்ளனர்.
- மெக்கா மீதான தாக்குதலை பொய் என ஹூதி அதிகாரி நிராகரித்தார்

- சவூதி அரேபியாக்கு அமெரிக்கர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை

- அமெரிக்க ஆளில்லா விமானத்தைச் சுட்டு வீழ்த்திய ஈரான்

- நாமல் ராஜபக்ச ஆஜராவதற்கு முன்னதாக கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் பாதுகாப்பு

- இஸ்ரேலுக்கான 2.8 பில்லியன் டாலர் ஆயுதத் தொகுப்பிற்கு அமெரிக்கா ஒப்புதல்

- மூன்று மாவட்டங்களுக்கு நிலை 1 நிலச்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

இலங்கையில் 553,000 பேர் போதைவஸ்துக்கு அடிமையாகியுள்ளனர் – வெளியான திடுக்கிடும் தகவல்
இலங்கையில் 553,000 பேர் போதைவஸ்துக்கு அடிமையாகியுள்ளனர் – வெளியான திடுக்கிடும் தகவல்
இலங்கையில் ஆளும் பவுத்த பேரினவாத சிங்கள அரசுகளின்
ஆட்சியில் நாடெங்கிலும் போதைவஸ்து பாவனைகள் அதிகரித்து காணப்படுகின்றன ,
அரசியல் ,மற்றும் போலீசார் செல்வாக்குடன் இந்த வியாபாரம் கொடி கட்டி பறக்கிறது .
தமிழர் தாயக பகுதியில் வைசிக்கும் தமிழர்களும் இந்த போதைவஸ்துக்கு அடிமையாகியுள்ளனர்
நாட்டின் மொத்த மக்கள் தொகையில் கடந்த ஆண்டு புள்ளி
விபரங்களின் படி 553,000 பேர் இதற்கு அடிமையாகியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
காவல்துறை திடீர் சுற்றிவளைப்பு – 433 பேர் கைது
காவல்துறை திடீர் சுற்றிவளைப்பு – 433 பேர் கைது
இலங்கையில் கடந்த இருபத்தி நமக்கு மணித்தியாலத்தில் காவல்துறையினர் விசேட அணிகள் நடத்திய திடீர்
சுற்றிவளைப்பில் மேல் மாகாணத்தில் 433 சந்தேக நபர்கள் கைது செய்ய பட்டுள்ளனர்
இவர்கள் பல்வேறு பட்ட குற்ற செயல்களுடன் தொடர்பு பட்டவர்கள் என தெரிவிக்க பட்டுள்ளது
ஒருவர் குத்தி கொலை – எகிறும் படுகொலைகள்
ஒருவர் குத்தி கொலை – எகிறும் படுகொலைகள்
கடந்த தினம் இரவு பஸ்கொட பிரதேசத்தில் சமையலறை கத்தியால் ஒருவர்
சரமாரியாக குத்தி படுகொலை செய்ய பட்ட நிலையில் சடலமாக மீட்க பட்டுள்ளார்
இவ்வாறு மீட்க பட்ட சடலம் தற்போது மரண பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது
இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய் தகராறு இந்த படுகொலையில் முடிந்துள்ளது
இது குறித்த விசாரணைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது
வெள்ளத்தில் மிதக்கும் மன்னார் – மக்கள் அவதி
வெள்ளத்தில் மிதக்கும் மன்னார் – மக்கள் அவதி
மன்னார் மாவட்டத்தில் நேற்று மற்றும் இன்று அதிகாலை பெய்த
கடும் மழை காரணமாக மாவட்டத்தில் தாழ் நில கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன.
மன்னார் பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட சாந்திபுரம், ஜீவபுரம்,
ஜிம்றோன் நகர், எமில்நகர், எழுத்தூர் உற்பட பல்வேறு கிராமங்கள் நீரினால் மூழ்கியுள்ளன.
மழை நீர் வடிந்து செல்லக் கூடிய விதமாக வடிகால் அமைப்புக்கள், ஒழுங்கான
முறையில் பராமரிக்கப்படாமையினால் மழை நீர் அனைத்தும் மக்களின் வீடுகளில் தேங்கியுள்ளது.
முன்னாள் பிரதேச செயலாளர்கள், காணி உத்தியோகஸ்தர்கள் ஆகியோரினால், கால்வாய்களுக்கு அருகில் வழங்கப்பட்ட
காணிகள் முற்றிலும் நீரினால் மூழ்கியுள்ளதுடன் மழை நீர் வடிந்தோடவும் தடையாக உள்ளது.
எனவே மன்னார் நகர சபை மற்றும் பிரதேச செயலகம் உடனடியாக குறித்த விடயத்தில் கவனம் செலுத்துமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வவுனியா வைத்தியசாலை ஊழியர்கள் ஆர்பாட்டம்
வவுனியா வைத்தியசாலை ஊழியர்கள் ஆர்பாட்டம்
வவுனியா வைத்தியசாலை சிற்றூழியர்களால் ஆர்பாட்டம் மற்றும் பணிபுறக்கணிப்பு இன்று (02) முன்னெடுக்கப்பட்டது.
வைத்தியசாலை வளாகத்தில் காலை 9 மணிக்கு முன்னெடுக்கப்பட்ட குறித்த போராட்டம் முற்பகல் 11 மணிவரையும் இடம்பெற்றது.
ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், தமது பணி நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்பட்டுத்தும் வகையில் கைவிரல் அடையாள
பதிவுசெய்யும் நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அதனை தவிர்த்து பழைய முறையின்படியே தாங்கள் கையொப்பம் இடுவதற்கான
செயற்பாட்டை தொடரவேண்டும் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கேட்டுக்கொண்டனர்.
எனினும், தமது கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் போராட்டம் தொடரும் என்றும் கூறியுள்ளனர்.
ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், “அரச சட்டங்கள் அனைவருக்கும் சமன், எமக்கு மட்டும் ஏன் இந்த அநீதி, மன அமைதியுடன்
பணிசெய்ய விடு” போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை ஏந்தியிருந்தனர்.
கண்டியில் நில நடுக்கம் – மக்கள் ஓட்டம்
கண்டியில் நில நடுக்கம் – மக்கள் ஓட்டம்
கண்டி பல்லேகல பிரதேசத்தில் லேசான நில அதிர்வு இடம்பெற்றுள்ளது.
புவி சரிதவியல் மற்றும் சுரங்க அகழ்வு அலுவலகம் இது தொடர்பாக தெரிவிக்கையில்
இன்று (2) காலை 7.06 மணியளவில் இது இடம்பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பான ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும் அந்த பிரிவு
தெரிவித்துள்ளது. சில தினங்களுக்கு முன்னர் கண்டி பல்லேகல
உள்ளிட்ட சில பகுதிகளில் இவ்வாறான பதிவு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
சகல பாடசாலைகளிலும் 6 தொடக்கம் 13 ஆம் தரம் வரையான வகுப்புக்கள் ஆரம்பம்
சகல பாடசாலைகளிலும் 6 தொடக்கம் 13 ஆம் தரம் வரையான வகுப்புக்கள் ஆரம்பம்
சகல பாடசாலைகளிலும் 6 தொடக்கம் 13 ஆம் தரம் வரையான
வகுப்புக்களின் கல்வி நடவடிக்கைகள இன்று முதல்
வழமைபோன்று இடம்பெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
காலை 7.30 மணி தொடக்கம் பிற்பகல் 1.30 மணி வரை கற்றல் கற்பித்தல்
செயற்பாடுகள் வழமை போன்று இடம்பெறவுள்ளது. இதேவேளை தரம்
1 முதல் தரம் 5 வரையான பாடசாலைகள் செப்டம்பர் 8 ஆம் திகதி முதல் வழமைக்கு திரும்பும் எனவும் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
மகனை கொன்று தானும் தூக்கில் தொங்கிய தாய் – பிரிட்டனில் நடந்த பயங்கரம்
மகனை கொன்று தானும் தூக்கில் தொங்கிய தாய் – பிரிட்டனில் நடந்த பயங்கரம்
பிரிட்டனில் பத்தொன்பது வயது இளம் பெண் ஒருவர் தனது காதலனுடன்
ஒன்றாக வசித்து வந்தார் ,இதனால் இவர்களுக்கு இரண்டு வயதில் அழகிய ஆண் குழந்தை ஒன்றும் உள்ளது
இவ்வேளையில் காதலன் ,காதலி மற்றும் ,மகனை கைவிட்டு கருத்து வேறு பாடு காரணமாக பிரிந்து சென்று விட்டார்
இந்த துயரை தங்கி கொள்ள முடியாத காதலி தனது மகனை கொன்று
தானும் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார், மேற்படி சம்பவம் பெரும் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது
பிரிந்து செல்தல் குற்றமா என்றால் இந்த நாட்டில் இல்லை என்பதாகும் ,ஆனால் அதனால்
இந்த மரணம் நிகழ்ந்துள்ளதால் போலீசார் உரிய தீர்வான விடையத்தை
தெரிவிக்க திணறி வருகின்றனர் ,தொடர்ந்து வழக்கு விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது
இதுபோலவே தமிழர்களும் தற்கொலை செய்து வருகின்ற செயல் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது

லண்டனில் மக்கள் மீது கத்தி குத்து தாக்குதல் -மூவர் காயம்
லண்டனில் மக்கள் மீது கத்தி குத்து தாக்குதல் -மூவர் காயம்
இன்று மதியம் லண்டன் secondary school in Stockport.பகுதியில் உள்ள
பாடசாலை அருகே மக்கள் மீது நடத்த பட்ட திடீர் கத்தி குத்து
தாக்குதலில் சிக்கி மூவர் பலத்த படுகாயமடைந்த நிலையில்
மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்
இந்த கத்தி குத்து தாக்குதல் ஏன் இடம்பெற்றது என்பது தொடர்பாக போலீசார் எதனையும் தெரிவிக்கவில்லை
விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது
இதில் ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க படுகிறது ,லண்டனில்
இவ்வாறான சம்பவங்கள் நாள் தோறும் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது
15 வயது மாணவனை கற்பழித்த டீச்சர் – பிரிட்டனில் நடந்த பயங்கரம்
15 வயது மாணவனை கற்பழித்த டீச்சர் – பிரிட்டனில் நடந்த பயங்கரம்
பிரிட்டனில் அதி உயர் பாடசாலை ஒன்றில் டீச்சராக பணியாற்றி வந்த
திருமணம் முடித்த முப்பத்தி மூன்று வயதுடைய டீச்சர் ஒருவர்
தனது 15 வயது மாணவனுடன் செக்ஸ் உறவில் ஈடுபட்டுள்ளார்
இதன் ஊடாக இவர் கர்ப்பமாகியுள்ளார்
தனது குழந்தைக்கு அந்த மாணவனே தந்தை என அவர் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்
,சிறுவனை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய நிலையில் இவர்
குற்றவாளியாக அடையாளம் காணப் பட்டுளளதுடன் ,
இந்த குற்றம் நிரூபணமானால் இவருக்கு பல்லாண்டுகள் சிறை தண்டனை கிடைக்க பெறலாம் என எதிர் பார்க்க படுகிறது

மலையக தோட்டங்களில் மது உற்பத்தி – கண்டு கொள்ளாத காவல்துறை photo
மலையக தோட்டங்களில் மது உற்பத்தி – கண்டு கொள்ளாத காவல்துறை photo
மலையகத்தில் மது விற்பனை மது உற்பத்தி கொரோனோ நோய் பரவலின் பின்னர் அதிகரித்துள்ளது. கொரோனா நோய் பரவல் காரணமாக மதுபானசலைகள் மூடியிருந்த வேலையில் சுயமான
மது உற்பத்திகள் தோட்டங்கள் தோரும் முன்னெடுக்கபட்டன. இதன் பிரதிபளிப்பாக தொடர்ந்தும் சட்டவிரோத மதுபான தயாரிப்புகள் தோட்டங்கள் தோரும் முன்னெடுக்கபட்டு வருகின்றன. இதனால்
சமூக பின்னடைவும் சமூக நோய்களும் மலையகத்தில் உறுவாக வாய்ப்புகள் உள்ளது. இதனை கண்டறிந்து தடை செய்ய வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும்.
இந்த மது உற்பத்திகளுக்கு தோட்டங்கள் தோரும் ஒவ்வொறு பெயர்களும் உள்ளன முன்னர் போன்று கசிப்பு கள் சாராயம் என்று கூறுவதில்லை புனைப் பெயர்களே அதிகம். அந்த வகையில்
அன்மை காலம் முதல் டொப்பு என்ற பெயரில் தயாரிக்கபட்ட சட்ட விரோத மது உற்பத்தியே இது. இந்த உற்பத்திகள் பொலித்தீன் பைகளில் நிரப்பபட்டு வினியோகிக்கப்படுகின்றது. இதற்கான
மூலப்பொருட்களாக பழங்கள் குறிப்பாக அன்னாசி பழம் பப்பாசி பழம் சீனி ஈஸ்ட் உட்பட பல வெறியும் சுவையும் வர கூடிய
பொருட்கள் போடபட்டு மிக நீண்ட நேரம் பதப்படுத்தபட்டு வினியோகிக்கப்படுகின்றன. இது உடம்புக்கு கேடு விளைவிக்க கூடியது. இதனுடன் மேலும் கிதுள் கள்ளும் உற்பத்தி
செய்யப்படுகின்றது. இதற்கு மூலப்பொருட்களாக கிதுள் பானி சீனி ஈஸ்ட் உட்பட பல வெறியும் சுவையும் வர கூடிய பொருட்கள்
போடபட்டு மிக நீண்ட நேரம் பதப்படுத்தபட்டு உற்பத்தி செய்யப்படுகின்றது.
பொதுவாக தோட்டங்களில் மது உற்பத்திக்கு மதுவரி அதிகாரிகளினதும் பொலிஸாரின்; ஒத்துழைப்பும் அவர்களின் முறையற்ற செயற்பாடுகளும் காரணமாக இருக்கின்றது.
இந்நிலையில் மக்களை குறை கூறுவதில் நியாயம் இல்லை. இவர்கள் தோட்ட புரங்களில் காணப்படும் சட்டவிரோத மினி பார்கள் அழிக்க நடவடிக்கை எடுக்காமையும்¸ காவல் துறையினர்
ஒத்துழைப்பு வழங்குகின்றமையும்¸ சட்டவிரோத மது உற்பத்தியாளர்களுக்கு சட்டத்தின் மூலம் முறையான தண்டனை வழங்காமையும் ஒரே பிரதேசத்தில்; அளவுக்கு அதிகமாக பார்களை
நடாத்த அனுமதி வழங்கியமையும் தோட்ட தொழிலாளர்களின் மது பாவனை அதிகரிக்க காரணமாக இருந்து வருகின்றது. மலையக தோட்ட புறங்களில் சட்ட விரோத மது உற்பத்திகளையும் மது
பாவனையையும் இல்லாதொழிக்க வேண்டுமானால் சட்டம் தனது கடமையை செய்ய வேண்டும். அதன் பலயீனம் பெருந்தோட்ட மக்களை பாதிப்படைய செய்கின்றது.
தற்போது சில தோட்டக்குடியிருப்புகள் தோரும் சட்டவிரோதமான முறையில் தற்போதும் மதுபானம் விற்கப்படுகின்றது. தோட்டத்தொழிலாளர்களின் தாழ்நிலை வருமானத்தில் குறைந்த
விலையில் நிறைந்த பயணை அடையக் கூடிய மது வகைகளையே பயன்படுத்தி வருகின்றனர். இது அவர்களின் உடல் நலத்தையும் பாதித்து வருகின்றது. இவ்வாறான சட்ட விரோத மது உற்பத்திகள்
மலையக தோட்ட புறங்களில் மாத்திரம் நடைபெறவில்லை ஆங்காங்கே அனைத்து பிரதேசங்களிளும் நடைபெற்று
வருகின்றது. இதனை இல்லாதொழிக்க சம்பந்தபட்ட அதிகாரிகள் முன் வர வேண்டும். மது ஒழிப்பிற்கான ஜனாதிபதியின் செயற்திட்டத்தையும் முன்னெடுக்க வேண்டும்.

மலையக தோட்டங்களில் மது உற்பத்தி 
திருத்தப்படாமல் இருக்கும் டன்சின் தோட்ட பஸ் நிலையம்- கோட்டா அரசின் சாதனை photo
திருத்தப்படாமல் இருக்கும்
டன்சின் தோட்ட பஸ் நிலையம்- கோட்டா அரசின் சாதனை photo
நுவரெலியா மாவட்டம் கொத்மலை பிரதேசத்திற்கு உட்பட்ட பூண்டுலோயா நகரத்தில் இருந்து நுவரெலியாவிற்கு செல்லும்
பிரதான பாதையில் டன்சினன் தோட்டத்தில் காணப்படும் பஸ் நிலையமே இது. இந்த பஸ் நிலையத்தை டன்சினன் தோட்டம்
விவேகானந்தா தமிழ் வித்தியாலயத்தில் கல்வி கற்க வரும் நூற்றுக் கணக்கான மாணவர்கள் உட்பட ஆசிரியர்களும்; தோட்ட மக்களும் நாளாந்தம் பாவித்து வருகின்றனர்.
தற்போது இந்த பஸ் நிலையம் உடைவடைந்து கூரைகள் பாதிக்கபட்ட நிலையில் சுற்றுபுரங்களும் கும்பைளினால்
மூடப்பட்டு காணப்படுகின்றது. இதனை திருத்தி அமைப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவிக்கபட்ட போதும் இது
வரைக்கும் திருத்தி அமைக்கப்படவில்லை. குறிப்பாக பூண்டுலோயா நகரத்தில் இருந்து நுவரெலியாவிற்கு செல்லும் இந்த பிரதான பாதையின் அதிகளவிலான பகுதிகள் பாதிக்கபட்டு
குன்றும் குழியுமாகவே காணப்படுகின்றது. இவ்வாறான நிலையில் இந்த பஸ் நிலையமும் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பது
வேதனைக்குறியது. மழை காலங்களில் எந்த ஒரு பயணியும் இந்த பஸ் நிலையத்திற் நிற்க கூட முடியாது.
இவ்வாறான நிலையில் இந்த பஸ் நிலையத்தை உடனடியாக திருத்தி அமைத்து கொடுக்க வேண்டியது மத்திய மாகாண
போக்குவரத்து அதிகார சபையின் கடமையாகும். இதனை உடனடியாக திருத்தி அமைத்து தருமாறு இப் பிரதேச பெருந்தோட்ட மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


திருத்தப்படாமல் இருக்கும்டன்சின்
150 வருடங்கள் அடிப்படை வசதிகள் இன்றி வாழும் இந்த மக்கள் photo
150 வருடங்கள் அடிப்படை வசதிகள் இன்றி வாழும் இந்த மக்கள் photo
4 தலைமுறைகளாக 150 வருடங்கள் அடிப்படை வசதிகள் இன்றி வாழும்
இந்த மக்களின் பிரச்சனைக்கு தீர்வு எப்போது
எழில் கொஞ்சும் மலையகத்தின் நுவரெலியா நகரம் குட்டி லண்டன் என அழைக்கப்டும் நகரமாகும் இங்கு அனைத்து விடயங்களும் அழகாக காணப்பட்ட போதும். நகரத்தின் மத்தியில் காணப்படும்
குதிரை பந்தய திடலில் வாழ்ந்து வரும் மக்கள்; தற்போது பல்வேறுப்பட்ட அடிப்படை வகதிகள் இன்றி தொடர்ந்து 4
தலைமுறைகளாக 150 வருடங்களுக்கு மேல் அடிப்படை வசதிகள் இன்றி பாதிப்புக்கு உள்ளளாகியுள்ளனர். தற்போதும் 55 தற்காலிக
வீடுகளில சிறுவர்கள் முதியோர்கள் உட்பட 300 பேர் வாழ்ந்து வருகின்றனர்.
இந் நிலமை தொடர்பாக மேலும் தெரியவருவதாவது. ஆங்கிலேயர் காலத்திலேயே இந்த குதிரை பந்தய திடல் அமைக்கபட்டது. அப்போது அங்கு வேலை செய்வதற்தும் குதிரைகளை
பராமறிப்பதற்கும் இவர்கள் அழைத்து வரப்பட்டார்கள். இதன் நிர்வாகம் ஆங்கிலேயரினாலும் பின்னர் நுவரெலியா நகர சபையும்
2000 ஆம் ஆண்டுக்கு பின்னர் விiயாட்டுத்துறை அமைச்சும் நடாத்தி வருகின்றது.
இந்த காலப்பகுதியில் மேற்டி மக்களின் அடிப்படை தேவைகளை எவரும் பூர்த்தி செய்யாத நிலையில் பல்வேறுப்பட்ட
பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர் தற்போதும் தற்காலிக இறப்பர் சீட் மூலம் வேயப்பட்ட வீடுகளில் வாழ்ந்து வருகின்றனர். குடிப்பதற்கு முறையான நீர்¸ மலசலகூடம்¸
மின்சாரம்¸ போக்குவரத்து¸ சுகாதாரம்¸ சிறுவர் பாரமரிப்பு¸ மற்றும் வசதிகள் இன்றியும் பல சமூகப்பிரச்சனைகளுக்கும் முகம் கொடுத்துள்ளனர்.
தற்போது இருக்கின்ற வீட்டை கூட திருத்தி அமைப்பதற்கு விiயாட்டுத்துறை அமைச்சு தடுத்து வந்தது. தங்கள் வீடுகளை எந்தவிதமான அபிவிருத்திகளையும் செய்ய முடியாது.
அதனை பார்வையிடுவதற்கு அதிகாரிகள் நியமிக்கபட்டுள்ளனர். இவர்களுக்கு கிடைக்க வேண்டிய வசதிகளையும் மருத்து வருகின்றது. மழைக் காலங்களில் வெள்ளத்தினாலும்
பாதிப்படைந்தனர் இந் நிலையில் சம்பந்தப்ட்ட அதிகாரிகள் தங்களுக்கு முறையான தீர்வை பெற்றுத்தருமாறு மக்கள் கோரிக்கைளை முன் வைக்கின்றனர்.
இந்த விடயம் தொடர்பாக நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் முன்னால் அமைச்சருமான கலாநிதி வே. இராதாகிருஸ்ணன் கவனத்திற்கும் அப்போது கொண்டு வந்தனர்.
அதன் பயனாக விளையாட்டுதுறை அமைச்சின் அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு பேச்சுவார்ததை நடாத்தி வேறு இடத்தில் 46 புதிய வீடுகள் கட்ட தீர்மானித்து இந்த மக்களின் பிரச்சனைக்கு
தீர்வினை பெற்றுக் கொடுப்பதற்றான நடவடிக்கை எடுக்கபட்ட போதும் இது வரைக்கும் நடைமுறைப்படுத்தவில்லை இந்த திட்டம் தொடர்பான வரை படங்கள் கூட வெளியாகின. அதிகாரிகளும்
நேரடியாக வந்து பார்வையிட்டு சென்றனர். இவ்வாறான நிலையில் இந்த செயற்திட்;டம் முறையாக நடைமுறைப்படுத்தாமை வேதனைக்குறியதுடன்; இதனை உடனடியா
நடைமுறைப்படுத்துமாறு மக்கள் கோரி;க்கைவிடுக்கின்றனர். பாதிப்புக்கு உள்ளான மக்கள் தங்களுக்கு புதிய வீட்டுத்திட்டம் வருகின்றது என்று ஆசையுடன் இருக்கும் வேலையில் மேலும் ஒரு
புதிய ஏமாற்றம் வந்துள்ளது. அதுதான் இவர்கள் வாழும் இடத்திற்கு அருகிலேயே விளையாட்டுத்துறைக்கான உல்லாச விடுதி அமைக்கும் செயற்திட்டம். தற்போது இந்த செயற்திட்டத்திற்கு பல
மில்லியன் ரூபா செலவு செய்து இந்த விடுதி அமைக்கபட்டு வருகின்றது. பாதிக்கபட்ட மக்கள் அந்த விடுதியை பார்த்து கவலை அடைந்தும் வருகின்றனர்.
இருக்க விடு இல்லை வீடு ஒழுகின்றது வெள்ளத்தால் பாதிப்பு சிறுவர்கள் முதல் பெரியோர்கள் வரை பாதிப்பு பல சமூக
சீர்கேடுகள் கண் முன்னனே நடைபெற்றறுக் கொண்டு இருக்கும் இவ்வேலையில் இவர்களுக்கு வீடு அமைப்பதற்கு பதிலாக விளையாட்டுதுறை அமைச்சு உல்லாச விடுதி அமைப்பது வேதனைக்குறியதே.
04 தலைமுறைகளாக இந்த பிரதேசத்தில் வாழும் மக்களின் பிரச்சனைக்கு உரிய தீர்வினை சம்பந்தபட்டவர்கள் பெற்றுக் கொடுக்க வேண்டும். தொடர்ந்து இந்த மக்கள் 05 ஜனாதிபதிகளையும் பல அரசியல் பிரமுகர்களையும்
உறுவாக்குவதற்கு காரணமாக இருந்துள்ளனர். சிலர் இங்கையே பிறந்து வாழ்ந்து இறந்தும் உள்ளனர்.
இந்த பிரதேசத்தில் வாழும் மக்ககளின் பிள்ளைகளுக்கு குறித்த வீடுகளில் இருந்து கல்வி கற்க முடியாத நிலையும் தோன்றி உள்ளது.
இளைஞர் யுவதிகள் வேறு இடங்களுக்கு சென்றால் தாங்கள் இருக்கும் இடத்தை கூட யாரிடமும் சொல்வதில்லை. காரணம் பிரதேசத்தின் அவல நிலை.


150 வருடங்கள் அடிப்படை வசதிகள்
புலிகளின்குரல் வானொலி மீது சிறிலங்கா அரசின் நடவடிக்கை.
புலிகளின்குரல் வானொலி மீது சிறிலங்கா அரசின் நடவடிக்கை.
தேசத்தின் வாசத்தை சுவாசித்து வாழும் உங்களுக்கு , புலிகளின்குரல் நிறுவனத்தின் புரட்சிகர வணக்கங்கள்.
தாயகத்தில் 2009ம் ஆண்டுவரை பண்பலையில் ஒலித்து வந்த புலிகளின்குரல் வானொலி, எமது ஆயுத மௌனிப்புக்கு பின்னர், 2009ம் ஆண்டு யூலை – 05, கரும்புலிகள் நாள் முதல் இணையத்தில்
மீண்டும் ஒலிக்கத்தொடங்கியதை நீங்கள் யாவரும் அறிவீர்கள்.
இந்த 11 ஆண்டுகளாக எமது இணையத்தளத்தில் ஒலித்து வந்த
புலிகளின்குரல் வானொலியை, தற்போது ஆட்சியில் உள்ள சிறிலங்கா அரசானது தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி, நிறுத்துவதற்கான முயற்சியினை மேற்கொண்டுள்ளது.
சிறிலங்கா அரசின் இச் செயற்பாட்டிற்கு இந்த உலகமும் ஒத்துழைக்கின்றது. எமது இணையத்தளத்திற்கு சேர்வர் வழங்கும்
நிறுவனம், மற்றும் Google play store , Apple Store நிறுவனங்களுக்கு சிறிலங்கா அரசானது ஒரு உத்தியோகபூர்வ கடிதத்தினை அனுப்பி வைத்துள்ளது.
அதில் எமது வானொலிக்கான சேவையை நிறுத்துமாறும், இது விடுதலைப்புலிகளின் உத்தியோகபூர்வ
வானொலியெனவும்,இவர்கள் வன்முறையை தூண்டுகிறார்கள் எனவும் குறிப்பிட்டு, அக் கடிதத்தை அனுப்பிவைத்துள்ளார்கள்.
எமது வானொலிக்கு இணையத்தள சேர்வரினை வழங்கிய நிறுவனத்தினர், தங்களோடு இணைந்து எமது வானொலியை
தொடர்ந்தும் செயற்படுத்த முடியாது என கூறியதற்கு அமைய, எமது இணையத்தளம் வேறு சேர்வர் நிறுவனத்தோடு இணைந்து
தற்போது மீண்டும் இயங்குகின்றது என்பதை தங்களுக்கு அறியத்தருகின்றோம்.
ஆனால் Google play store மற்றும் Apple Store நிறுவனங்கள் சிறிலங்கா அரசின் வேண்டுகோளுக்கு இணங்க, எமது வானொலிக்கு என பிரத்தியேகமாக அமைக்கப்பட்டு, சேவையில்
இருந்த செல்லிடப்பேசிகளின் மென் பொருட்கள் (Apps) மற்றும் முகப்புத்தகம் போன்றவற்றை, பாவனையில் இருந்து
நிறுத்தியுள்ளது என்பதனை உங்களுக்கு அறியத்தருகின்றோம்.
எனவே, வெகு விரைவில் எதோ ஒரு வழியில், எமது
வானொலிக்குரிய மென்பொருட்கள் இணைக்கப்படும் என்பதனை எமது மக்களுக்கு அறியத்தருகின்றோம்.
எத்தனையோ தடைகளை சந்தித்த எமது வானொலி, இத் தடையையும் கடந்து, தொடர்ந்து தேசத்தின் வாசம் சுமந்து
தேசியத்தலைவரின் எண்ணக்குரலாக ஒலித்துக் கொண்டே இருக்கும் என்பதனை உங்களுக்கு அறியத்தருகின்றோம்.
புலிகளின்குரல் நிறுவனம்
26.08.2020
www.pulikalinkural.com
நீதிபதி மீது திடீர் தாக்குதல்- குற்றவாளி தப்பி ஓட்டம்
நீதிபதி மீது திடீர் தாக்குதல்- குற்றவாளி தப்பி ஓட்டம்
அமெரிக்கா தலைநகர் New York City பகுதியில் உச்ச கிரிமினல் நீதிமன்ற
நீதிபதியுமாக விளங்கி வரும் பெண் நீதிபதி தனது நீதிமன்றுக்கு காலை
ஒன்பது மணியளவில் நடந்து சென்ற வண்ணம் இருந்தார்
அப்பொழுது
அவரை பின் தொடர்ந்து வந்த நபர் ஒருவர் திடீரென தாக்குதலை நடத்தி விட்டு மறைந்து விட்டார்
பலத்த காயங்களுக்கு உள்ளான அவர் சிகிச்சை பெற்றுவந்தார்
,எனினும் தற்போது அவர் உடல் நலமாக உள்ளதாக தெரிவிக்க படுகிறது
இவர் மீது நடத்த பட்ட இந்த தாக்குதல் காரணம் குறித்து உடனடியாக
தெரிவிக்க படவில்லை ,போலீஸ் விசாரணைகள்தொடர்ந்த வண்ணம் உள்ளது
வீழ்ந்து கொண்டிருந்த விமானத்தில் குதித்து தப்பிய விமானிகள் உள்ளிட்ட நால்வர்
வீழ்ந்து கொண்டிருந்த விமானத்தில் குதித்து தப்பிய விமானிகள் உள்ளிட்ட நால்வர்
அமெரிக்கா Norfolk கடற்படை விமானதளத்தில் இருந்து பறப்பில்
ஈடுபட்ட விமானம் ஒன்று விபத்தில் சிக்கியது ,இதனால அந்த
விமானம் தரையை நோக்கி வேகமாக வீழ்ந்து கொண்டிருந்தது ,
அப்பொழுது பிரதான நுழைவாயில் வாயிலாக இரண்டு விமானிகள்
மற்றும் இரு சிப்பந்திகள் அதில் இருந்து குதித்து உயிர் தப்பித்து கொண்டனர்
விமானம் வீழ்ந்து சுக்கு நூறானது ,ஆனால் மயிரிழையில் இவர்கள் தப்பித்து கொண்ட செயல் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது
குறித்த விமான விபத்து தொடர்பில் தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன ,உயிர் வாழும் அதிஷ்டம் இப்படியும்
நிகழும் என்பதற்கு இது ஒரு முன் உதாரணம் ஆகும் என்பதாக பதிய பெற்றுள்ளது

படுக்கை அறைக்குள் புகுந்த அனகொண்டா பாம்பு – பதறி ஓடிய குடும்பம்
படுக்கை அறைக்குள் புகுந்த அனகொண்டா பாம்பு – பதறி ஓடிய குடும்பம்
அவுஸ்ரேலியா குயின்லாந் பகுதியில் உள்ள வீடொன்றின் கூரையை பிய்த்து கொண்டு
இரண்டு பாம்புகள் வீழ்ந்துள்ளன
இதில் இரண்டு படுக்கையறைக்குள் வீழ்ந்துள்ளது கண்டு அந்த வீட்டின் உரிமையாளர் அதிர்ச்சி அடைந்தார்
ஒரு பெண் பாம்ப்பினை துரத்திய வண்ணம் பாலுறவில் ஈடுபட இரு பாம்புகள் முனைந்துள்ளன
வீட்டின் கூரையின் மேல் அமைக்க பட்டிருந்த சீட்டினை உடைத்து கொண்டு
அவை அவர்கள் உறங்கும் படுக்கை அறைக்குள் பாலுறவை பகிர வீழ்ந்துள்ளன
இதனால் அதிர்ச்சியுற்ற வீட்டின் உரிமையாளர்கள் அவசர இலக்கத்திற்கு
அழைத்த நிலையில் பாம்பு பிடி நிபுணர்கள் வரவழைக்க பட்டு பாம்பு பிடிக்க பட்டது
ஒவ்வொரு பாம்ப்பின் எடையும் சுமார் இருபத்தி ஐந்து கிலோ என தெரிவிக்க பட்டுள்ளது ,மயிரிழையில் குடும்பத்தினர் தப்பித்தனர்
,இல்லை எனின் பாம்புக்கு இவர்கள் இரையாகி இருப்பார்கள் என சுட்டி காட்ட பட்டுள்ளது
மயிரிழையில் மனிதர்கள் தப்பித்து கொண்ட செயல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

படுக்கை அறைக்குள் புகுந்த 
ஒரு டிரக் – மூன்று கார்கள் மோதல் – முறிந்த மனித கால்கள்
ஒரு டிரக் – மூன்று கார்கள் மோதல் – முறிந்த மனித கால்கள்
இன்று காலை பத்துமணியலாவில் அவுஸ்ரேலியா Campbelltown Road
near Ben Lomond Road பகுதியில் டிரக் ஒன்றுடன் இரு கார்கள் மோதி சிதறின
இதில் குறித்த வாகனங்களை ஒட்டி சென்ற இருவர் கால்களில்
பலமான காயங்களுக்கு உள்ளான நிலையில் மீட்க பட்டு
மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க
பட்டுள்ளனர்
டிரக் சாரதிகள் காயங்கள் ஏதும் இன்றி தப்பித்து கொண்டனர்
,மேற்படி விபத்தால் அந்த வழி சாலையில் வாகன நெரிசல்
ஏற்பட்டுள்ளது ,மேற்படி விபத்து தொடர்பில் தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

இலங்கை வந்த ரசியாவின் 3 போர் கப்பல்
இலங்கை வந்த ரசியாவின் 3 போர் கப்பல்
ரஷ்யாவின் யுத்தக் கப்பல்கள் 3 ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளன.
அட்மிரல் ட்ரிபக், அட்மிரல் வினோகிராதொவ், பொரிஸ் புட்டோமா
ஆகிய 3 கப்பல்களே ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ளன.
விநியோக தேவைகள் மற்றும் அலுவலக பணியாளர்களின் ஓய்வுக்காக
இக்கப்பல்கள் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ளதுடன்,
சுகாதார ஆலோசனைகள் மற்றும் முறைகளுக்கமைய இக் கப்பலுடனான தொடர்புகள் பேணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்தக் கப்பல்கள் நாளை மறுதினம் இலங்கையிலிருந்து புறப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.







