பொலிஸ் வேட்டை – 28 ஆண் பெண்கள் கைது
பேஸ்புக் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்துபாசாரம் ஒன்றில் போதைப்பொருள்களுடன் இருந்த 28 இளைஞர், யுவதிகளை அக்மீமன பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களுள் 26 இளைஞர்களும் 2 யுவதிகளும் உள்ளடங்குவதாகவும் இவர்கள் மாத்தளை,
அநுராதபுரம், மொரட்டுவ, அம்பாறை மற்றும் கொழும்பு ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கராப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவரால் இந்த விருந்துபசாரம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகவும் இவ்வாறு
கைதுசெய்யப்பட்ட அனைவரும் விஷ போதைப்பொருள்களை பயன்படுத்தியமை மற்றும் தனிமைப்படுத்தல் சட்டதிட்டங்களை
மீறியமை ஆகியவற்றின் கீழ், இன்று காலி நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக அக்மீமன பொலிஸார் தெரிவித்துள்ளனர்






