49 பேருக்கு கொரோனா-பேலியகொட மீன்சந்தை அடித்து பூட்டு

Spread the love

49 பேருக்கு கொரோனா-பேலியகொட மீன்சந்தை அடித்து பூட்டு

பேலியகொட மீன் சந்தை கட்டடத் தொகுதியில் 49 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கு முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையின் போதே,

கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதென களனி சுகாதார அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.

நாட்டின் பல்வேறு இடங்களிலிருந்தும் அதிகமானோர் பேலியகொட மீன்

சந்தைக்கு வருகைத் தருவதால், தொற்று நோய் பிரிவின் அறிவுறுத்தலுக்கமைய,

நேற்று முன்தினம் (19) இங்கு பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள 100 பேருக்கு பிசிஆர் பரிசோதனை

முன்னெடுக்கப்பட்டதாகவும் இதன்போது, 49 பேருக்கு கொரோனா

தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *