Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

லண்டன் வேல்ஸில் கண்டு பிடிக்க பட்ட டைனோசர்

லண்டன் வேல்ஸில் கண்டு பிடிக்க பட்ட டைனோசர்

பீறிட்டான் வேல்ஸ் பகுதியிலுள்ள கடற்கரை பகுதி ஒன்றில் தந்தையுடன்

சென்று கொண்டிருந்த நான்கு வயது சிறுமி ஒருத்தி அந்த மணல் மேட்டு

பகுதியில் விசித்திரமான கால்தடம் ஒன்றை அவதனித்துள்ளார்

அதனை தந்தைக்கு தெரிய படுத்திய நிலையில் ,சுதாகரித்து

கொண்ட தந்தை பொலிசாருக்கு தகவல் வழங்கினார்

விரைந்து வந்த போலீசார் ,அதனை பார்வையிட்டு ஆராய்ச்சி நிபுணர்களுக்கு

தெரிவிக்க பட்ட நிலையில் அவர்கள் அதனை ஆய்வு செய்த

பொழுது அது டைனோசர் கால் தடம் என கண்டறிய பட்டுள்ளது

இதுவே பிரிட்டனில் கண்டு பிடிக்க பட்டதில் சிறந்ததும்

முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக உள்ளது என்றனர்

டைனோசர்
டைனோசர்
Posted in இந்தியா செய்திகள் உலக செய்திகள்

அமெரிக்காவில் காந்தி சிலை உடைப்பு – கோபத்தில் இந்தியர்கள்

அமெரிக்காவில் காந்தி சிலை உடைப்பு – கோபத்தில் இந்தியர்கள்

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள டேவிஸ் நகரின்

மத்திய பூங்காவில் மகாத்மா காந்தியின் 6 அடி உயர வெண்கலச்சிலை

வைக்கப்பட்டிருந்தது. இந்த சிலை சுமார் 300 கிலோ எடையுள்ள வெண்கலத்தால் உருவாக்கப்பட்டதாகும்.

இந்த சிலையை, நகராட்சி நிர்வாகம் 4 ஆண்டுகளுக்கு முன்பாக காந்தி

எதிர்ப்பு மற்றும் இந்திய எதிர்ப்பு அமைப்புகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில்

அங்கு வைத்தது. இந்த சிலையை விஷமிகள் தாக்கி, அதன் கணுக்கால்

பகுதி வெட்டப்பட்டு, சிலையின் முகத்தில் பாதி துண்டிக்கப்பட்டு காணாமல் போய் உள்ளது.

இதை கடந்த 27-ம் தேதி பூங்காவின் ஊழியர்தான் முதலில்

கண்டுபிடித்தார். இதுதொடர்பாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

இந்த சிலை டேவிஸ் நகருக்கு இந்திய அரசால் நன்கொடையாக வழங்கப்பட்டதாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

காந்தி சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவம் அமெரிக்க வாழ் இந்தியர்கள்

மத்தியில் மட்டுமின்றி, உலகெங்கும் உள்ள இந்தியர்கள் மத்தியில் வேதனையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இந்த சம்பவத்துக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதையொட்டி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள

அறிக்கையில், அமைதி மற்றும் நீதிக்கான உலகளாவிய சின்னத்துக்கு

எதிரான இந்த தீங்கிழைக்கும், இழிவான செயலை இந்திய அரசு வன்மையாக கண்டிக்கிறது” என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், இந்த விவகாரத்தை வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகம், அமெரிக்க

வெளியுறவுத்துறையின் கவனத்துக்கு எடுத்துச்சென்றுள்ளது. இது

குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளது.

அமெரிக்காவில் காந்தி சிலை சேதப்படுத்தப்படுவது இது முதல் முறையல்ல.

கடந்த ஆண்டு டிசம்பரில், வாஷிங்டனில் இந்திய தூதரகத்தின் முன்னால்

அமைக்கப்பட்டுள்ள காந்தி சிலையை காலிஸ்தான் பிரிவினைவாதிகள் சேதப்படுத்தியது நினைவுகூரத்தக்கது.

அமெரிக்காவில் காந்தி சிலை உடைப்பு
அமெரிக்காவில் காந்தி சிலை உடைப்பு
Posted in Uncategorized

மக்கள் முன்பாக இருவருக்கு தூக்கு தண்டனை

மக்கள் முன்பாக இருவருக்கு தூக்கு தண்டனை

ஈரானின் முக்கிய படையணி சேர்ந்த இராணுவத்தினரை கொன்றார்

என்ற குற்றச்சாட்டில் இருவருக்கு அந்த நாட்டு நீதிமன்றம் தூக்கு தண்டனை அறிவித்தது

அதன் படி மக்கள் ஒன்று கூடி நிற்க அவர்கள் முன்பாக இருவருக்கு தூக்கு தண்டனை அளிக்க பட்டது


ஈரானின் இந்த செயலுக்கு எதிராக மனித உரிமை மையம் கடும் கண்டனத்தை தெரிவித்துளளது

Posted in உலக செய்திகள்

பிரிட்டனில் பற்றி எரிந்த அகதிகள் முகாம் – நடந்தது என்ன ..?

பிரிட்டனில் பற்றி எரிந்த அகதிகள் முகாம் – நடந்தது என்ன ..?

பிரிட்டன் கென்ட் பகுதியில் அமைந்துள்ள அகதிகள் முகாம்

திடீரென தீ பற்றி எரிந்தது ,இதனால் அங்கிருந்த உடமைகள் தீயில்

எரிந்து நாசமாகின ,

தீயின் பரவலை அறிந்து விரைந்து வந்த பொலிசார் மற்றும்

தீயணைப்பு படையினர் தீயினை கட்டு பாட்டுக்குள் கொண்டு வந்தனர்

மேற்படி அனர்த்தம் தெடர்பான விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

பற்றி எரிந்த அகதிகள் முகாம்
பற்றி எரிந்த அகதிகள் முகாம்
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் சினோ ,மழை மக்களுக்கு எச்சரிக்கை

பிரிட்டனில் சினோ ,மழை மக்களுக்கு எச்சரிக்கை

பிரிட்டனில் எதிர்வரும் மணித்தியாலங்களில் கடும் பனிமழை

பொலிவு மற்றும் மழை இடம்பெறும் எனவும் இதனால் இயல்பு

வாழ்க்கை முடங்க படும் அபாயம் உள்ளதாகவும் ,இவ்வேளை

மக்களை விழிப்பாக இருக்கும் படி எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது

பிரிட்டனில் சினோ ,மழை
பிரிட்டனில் சினோ ,மழை
Posted in உலக செய்திகள்

கொரனோ தாக்குதல் அமெரிக்காவில் 3,652 மற்றும் பிரிட்டனில் 1,245 பேர் மரணம்

கொரனோ தாக்குதல் அமெரிக்காவில் 3,652 மற்றும் பிரிட்டனில் 1,245 பேர் மரணம்

பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி அமெரிக்காவில்

3,652 பேர் மரணமாகியுள்ளனர் மேலும் 169,033 ஆயிரம் பேர் பாதிக்க பட்டுள்ளனர்


அதேபோல பிரிட்டனில் கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் சுமார் 1,345 பேர் மரணமாகியும் 29,079 பேர் பாதிக்க பட்டுள்ளனர்

குளிர்காலம் ஆரம்பித்துள்ளதால் மேலும் இதன் பாதிப்பு அதிகரிக்க

படும் என ஏச்சரிக்க பட்டுள்ளது குறிப்பிட தக்கது

Posted in Uncategorized

விவசாயிகள் போராட்டத்தை நசுக்க இன்டர்நெட்டை முடக்கிய அரசு

விவசாயிகள் போராட்டத்தை நசுக்க இன்டர்நெட்டை முடக்கிய அரசு

இந்திய டில்லி பகுதியியல் ஆளும் மத்தியாசுக்கு எதிராக

விவசாயிகள் போராட்டம் நடத்திய வண்ணம் உள்ளனர்

இதனால் அவர்கள் போராட்டம் நாள் தோறும் வீரியம் அடைந்து

செல்லும் நிலையில் திடீரென அந்த பகுதியில் இணைய சேவையை மத்திய அரசு முடக்கியது

இதன் மூலம் இவர்கள் மூலம் பரப்ப படும் செய்திகள் தடுக்க பட்டால்

அதன் வாயிலாக இவர்கள் போராட்டத்த்தை நசுக்கி விடலாம் எனது

ஆளும் மோடி அரசின் நிலைப்பாடாக உள்ளது எனப்து குறிப்பிட தக்கது

Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் 5,286 பேருக்கு கொரனோ தடுப்பூசி போட பட்டது

இலங்கையில் 5,286 பேருக்கு கொரனோ தடுப்பூசி போட பட்டது

இந்தியாவால் வழங்க பட்ட கொரனோ தடுப்பூசிகள் இலங்கை வந்தடைந்த

நிலையில் இன்று முதன் முதலாக 5,286 பேருக்கு போடப்பட்டுள்ளது

,முன்னரணில்

பணிபுரியும் முக்கிய நபர்களுக்கே இந்த தடுப்பூசி பட்டுள்ளதாக

தெரிவிக்க பட்டுள்ளது

Posted in இலங்கை செய்திகள்

இலங்கைக்கு அமெரிக்கா மீளவும் எச்சரிக்கை

இலங்கைக்கு அமெரிக்கா மீளவும் எச்சரிக்கை

இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி மக்கள்

பலியாகிய வண்ணம் உள்ளனர் ,இதில் முஸ்லீம் மக்களே அதிகம் பலியாகியுள்ளனர்

,இவ்வாறு மரணமானவர்கள் சடலங்களை அடக்கம் செய்திட ஆளு இனவாத அரசு பல தடைகளை இட்டுள்ளது


இதனால் சீற்றமுற்ற அமெரிக்கா அணைத்து மக்களின் பாரம்பரிய ,கலாச்சாரங்களை

மதித்து அவர்களுக்கு இடம் அளிக்க வேண்டும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது

ஒரு வாரத்தில் அமெரிக்காவிடம் இருந்து வெளிப்பட்ட இரண்டாவது

சிக்கனல் இதுவாக உள்ளமை குறிப்பிட தக்கது

Posted in Uncategorized

இலங்கையின் சுதந்திர தினம் – தமிழர் வீடுகளில் சிங்கள கொடியேற்றுமாறு உத்தரவு

இலங்கையின் சுதந்திர தினம் – தமிழர் வீடுகளில் சிங்கள கொடியேற்றுமாறு உத்தரவு

இலங்கையின் சுதந்திர தின எதிர்வரும் மாசி மாதம் வரவுள்ள நிலையில்

அனைத்து வீடுகளில் சிங்கள கொடியை ஏற்றி மக்களை கொண்டாடுமாறு

இனவாத ஆளும் அரசு அறிவித்துள்ளது ,தமிழர் வீடுகளிலு இந்த கொடியினை

ஏற்றுமாறு மிரட்டல்கள் விடுக்க பட்டு வருவதாக அங்கிருந்து வரும்

தகவல்கள் தெரிவிக்கின்றன

Posted in இலங்கை செய்திகள்

1,223 கடைகள் ,நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

1,223 கடைகள் ,நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

இலங்கையில் பாவி வரும் கொரனோ நோயின் விதிகளை பின்பற்றாது

தமது நிறுவண்னங்கள் மற்றும் கடைகளை நடத்தி வந்த 1,223 நிறுவனங்களுக்கு

எதிராக சட்ட நடவடிக்கை மேக்கொள்ள பட்டுள்ளதாக இலங்கை

காவல்துறை தெரிவித்துள்ளது

இவர்களுக்கு விடுக்க பட அறிவுறுத்தலையும் ,சட்ட விதிகளையும் மீறி செயல்

பட்ட காரணத்தால் இந்த நடவடிக்கையை இந்த நிறுவனங்கள் மீது

தொடர பட்டுள்ளதாக குறிப்பிட பட்டுள்ளது

Posted in Uncategorized

30 பேர் காவல்துறையினரால் திடீர் கைது

30 பேர் காவல்துறையினரால் திடீர் கைது

இலங்கையில் பரவி வரும் நோயின் தாக்குதலை தடுக்கும் வகையில்

நிகழ்கால நிகழ்வுகளை மைய படுத்தி விடுக்க பட்ட விதிகளை மீறி செயல்

பட்ட முப்பது பேரை தாம் கைது செய்துள்ளதாக

காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்

கைதானவர்கள் அனைவருக்கும் தண்டம் அறவிட பட்டுள்ளதுடன்

சிலர் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ள படுகிறது

Posted in Uncategorized

பொலிசார் வேட்டையில் 15 பேர் கைது

பொலிசார் வேட்டையில் 15 பேர் கைது

இலங்கையில் பரவி வரும் வைரஸ் நோயின் தாக்குதல் தடுப்பு விதிகளை

மீறி செயல்பட்ட சுமார் பதின் ஐந்து பேரை தாம் கைது செய்துள்ளதாக

இலங்கை காவல் துறையினர் தெரிவித்துள்ளனர் ,கைதானவர்கள்

மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ள படும் எனவும் தெரிவிக்க படுகிறது

Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் கொரனோ வேட்டைக்கு 297 பேர் மரணமாம்

இலங்கையில் கொரனோ வேட்டைக்கு 297 பேர் மரணமாம்

இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி

இதுவரை ந் 97 பேர் மரணமாகியுள்ளனர்

மேலும் தடுப்பூசிகள் கிடைக்க பெற்றுள்ள நிலையில் மரண

எண்ணிக்கை குறைவடையும் என நம்ப படுகிறது

Posted in Uncategorized

மூத்த ஊடக போராளி மரணம்

மூத்த ஊடக போராளி மரணம்

இலங்கையின் குறிப்பிட்டு பேச கூடியவர்களளில்மலைக்கை இதழ் ஆசிரியர்

டொமினிக் ஜீவா முக்கியமானவர் ,இவரது பல்வேறு பட்ட சாதனைகள்

இன்றுவரை பேச படுகிறது ,பேனா முனை ஒன்று வீழ்ந்த செய்தி

கண்டு தவிக்கிறது பெரும் வாசக வட்டம் ,அன்னாருக்கு எமது கண்ணீர் அஞ்சலிகள்

Posted in Uncategorized

சர்வதேச ஊடகங்களில் அம்பலமாகியுள்ள சிறிலங்கா !!

சர்வதேச ஊடகங்களில் அம்பலமாகியுள்ள சிறிலங்கா !!

ஏஎவ்பி செய்தியினால் சர்வதேச ஊடகங்களில் அம்பலமாகியுள்ள சிறிலங்கா !!

இலங்கையில் யுத்தம் தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் விசாரணைக்கு ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அழைப்பு விடுத்துள்ளார் என செய்திட்டுள்ள சர்வதேச

செய்திநிறுவனமான (AFP)ஏஎவ்பி, யுத்த குற்றங்களில் ஈடுபட்டர்வகளுக்கு எதிராக தடைகளை விதிக்கவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார் என செய்தி வெளியிட்டுள்ளது.

ஏஎவ்பி இந்தச்செய்தி சர்வதேச ஊடங்களின் கவனத்தினை இன்று பெற்றுள்ளமையினை அவதானிக்ககூடியதாகவுள்ளது.

https://www.aljazeera.com/news/2021/1/27/un-rights-chief-seeks-sanctions-against-sri-lankan-generals-afp
https://www.lecourriercauchois.fr/actualite-273325-geneve-afp-conflit-separatiste-tamoul-au-sri-lanka-bachelet-veut-des-sanctions-contre-l-armee
https://www.france24.com/en/live-news/20210127-un-rights-chief-seeks-sanctions-against-sri-lanka-generals
https://www.channelnewsasia.com/news/asia/sri-lanka-united-nations-international-criminal-court-14052080
https://www.macaubusiness.com/un-rights-chief-seeks-sanctions-against-sri-lanka-generals/
https://www.lepoint.fr/monde/conflit-separatiste-tamoul-au-sri-lanka-bachelet-veut-des-sanctions-contre-l-armee-27-01-2021-2411536_24.php

மேலும் ஏஎவ்பி தனது செய்திக்குறிப்பில் தெரிவிக்கையில், சிறிலங்கா அரசாங்கம் ஒரு தசாப்தகாலத்திற்கு முன்னர்

முடிவடைந்த 37 வருட போரின் இறுதிகட்டத்தில் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான பொதுமக்களுக்கு நீதியை வழங்குவதற்கான வாக்குறுதிகளில் பின்வாங்கியுள்ளது.

உள்நாட்டின் நல்லிணக்க பொறுப்புக்கூறும் முயற்சிகள் தொடர்ந்தும் உரிய பலாபலன்களை அளிக்க தவறியுள்ளன. தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படுவதை மேலும்

ஆழமானதாக்கும் அமைப்பின் மீது மக்களிற்கு நம்பிக்கையின்மையை மேலும் அதிகரிக்கும்.

மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கண்காணிக்கப்படுவது அதிகரித்துள்ளது சுயதணிக்கை கலாச்சாரம் மீண்டும் காணப்படுகின்றது.

மனித உரிமை பேரவையின் உறுப்புநாடுகள் தஙகள் சொந்த நீதிமன்றங்களில் இலங்கையின் அனைத்து தரப்பினரும் இழைத்துள்ள சர்வதேச குற்றங்கள் குறித்து விசாரணைகளை

மேற்கொள்ளலாம்.
நம்பகதன்மை மிக்க குற்றச்சாட்டுகளிற்கு உள்ளானவர்களிற்கு எதிராக பயணத்தடை மற்றும் சொத்துக்களைபறிமுதல் செய்தல்

போன்றவற்றை முன்னெடுக்க வேண்டும் என ஆணையாளரின் அறிக்கையினைச் ஏஎவ்பி சுட்டிக்காட்டியுள்ளது.

ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் முதல் தடவையாக தனது அறிக்கையில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் சிறிலங்கா விவகாரம் குறித்து ஆராயவேண்டும் என தெரிவித்துள்ளார் எனவும் ஏஎவ்பி குறிப்பிட்டுள்ளது.

‘ஐநாவே ! சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்து’ என்ற முழக்கத்துடன் 2015ம் ஆண்டு நாடுகடந்த

தமிழீழ அரசாங்கம் முன்கையெடுத்திருந்த மில்லியன் கையெழுத்து போராட்டத்துடன் கருத்துருவாக்கமாக உருப்பெற்றிருந்த

இக்கோரிக்கை, படிப்படியாக தமிழர் தரப்புக்கள் அனைவரதும் முதன்மைக் கோரிக்கையாக மாறியுள்ளதோடு, இன்று ஐ.நா

ஆணையளரின் அறிக்கையூடாக முக்கிய பேசுபொருளமாக மாறியுள்ளமை இங்கு குறிப்பிடதக்கது

Posted in உலக செய்திகள்

சீனாவுடன் சமரசம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை – அமெரிக்கா

சீனாவுடன் சமரசம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை – அமெரிக்கா

சீனாவுடன் சமரசம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்று அமெரிக்கா திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

சீனாவுடன் சமரசம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை – அமெரிக்கா திட்டவட்டம்

அமெரிக்காவில் டிரம்ப் ஜனாதிபதியாக இருந்தபோது, சீனாவுடன் மோதல் போக்கு ஏற்படத்தொடங்கியது. அமெரிக்காவின் ரகசியங்களையும், அறிவுசார்சொத்துக்களையும் சீனா திருடுவதாக

குற்றம்சாட்டி, அந்த நாட்டின்மீது வர்த்தக போரை அமெரிக்கா தொடங்கியது. சீன பொருட்கள் மீது அமெரிக்கா கூடுதல் வரி

விதித்தது. பதிலடியாக இதேபோன்ற நடவடிக்கையை சீனாவும் மேற்கொண்டது. அமெரிக்க பொருட்கள் மீது சீனா கூடுதல் வரி விதித்தது. இதனால் வர்த்தக போர் தொடர்கிறது.

கொரோனா வைரஸ் தோற்றம், பரவல் பற்றிய உண்மையான தகவல்களை சீனா வெளியிடாமல் மறைத்து விட்டது. இதில் உலக சுகாதார நிறுவனமும் துணை போய் இருக்கிறது என்று

அமெரிக்காவின் டிரம்ப் நிர்வாகம் தொடர்ந்து குற்றம் சுமத்தி வந்தது. அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையேயான உறவு

இதுவரை இல்லாத அளவுக்கு மோசமான நிலையில் உள்ளது.

இப்போது பருவநிலை மாற்றம், மிகப்பெரிய பிரச்சினையாக பூதாகரமாகி வருகிறது.

இந்த நிலையில் அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. புதிய ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகத்தில் முன்னாள் வெளியுறவு மந்திரி ஜான் கெர்ரி பருவநிலை மாற்றம் தொடர்பான சிறப்பு

தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நேற்று முன்தினம் வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் முதன்முதலாக நிருபர்களுக்கு

பேட்டி அளித்தார். அப்போது அவர் சீனாவுடனான உறவு பற்றிய திட்டவட்டமாக கருத்துக்களை வெளியிட்டார். அவர் கூறியதாவது:-

சில முக்கிய விஷயங்களில் சீனாவுடன் அமெரிக்கா கடுமையான வேறுபாடுகளைக் கொண்டுள்ளது.

அமெரிக்காவின் வெளியுறவு மந்திரியாகவும், செனட் உறுப்பினராகவும் பணியாற்றிய நிலையில், அமெரிக்காவின் அறிவு-சார் சொத்துக்களை சீனா திருடுவதுபற்றியும், தென்

சீனக்கடல் விவகாரம் குறித்தும் நான் தெரிந்து வைத்திருக்கிறேன். நாம் எல்லோருமே இதை அறிந்திருக்கிறோம். பருவநிலை மாற்றம் தொடர்பான எந்த ஒன்றுக்காகவும், இதெல்லாம்

மாற்றப்போவதில்லை. பருவ நிலை மாற்ற பிரச்சினையில் உடன்பாடு ஏற்படுவதற்காக சீனாவுடன் அமெரிக்கா எந்த சமரசமும் செய்து கொள்ளப்போவதில்லை.

ஆனால் பருவநிலை மாற்றம், மிக முக்கியமான பிரச்சினை ஆகும். இதில் உலகின் 30 சதவீத கார்பன் கழிவுகளை சீனா வெளியிடுகிறது. அமெரிக்கா 15 சதவீத கார்பன் கழிவுகளை

மட்டுமே வெளியிடுகிறது. ஐரோப்பிய கூட்டமைப்புடன் சேரும்போது முத்தரப்பும் சேர்த்து 55 சதவீதத்துக்கும் அதிகமான கார்பன் கழிவுகளை வெளியிடுகின்றன.

எனவே நாம் முன்னேறுவதற்கு ஒரு வழியை கண்டுபிடிப்பது அவசரம் ஆகும். நாம் காத்திருந்து பார்ப்போம்.

ஆனால் சீனாவுடனான மற்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டியதின் அவசியம் குறித்து ஜோ பைடன் மிக தெளிவாக

இருக்கிறார். இதில் சிலர் கவலைப்பட்டது எனக்கு தெரியும். ஒன்றுக்காக மற்றொன்றை செய்து விட முடியாது.

பருவநிலை மாற்றத்தை பொறுத்தமட்டில் அது உலகுக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது. பருவநிலை மாற்றத்துக்கான பிரச்சினைகள் இப்போது இருப்பதை விட அதிகமாக இருக்க

முடியாது. அது இருந்துகொண்டுதான் இருக்கிறது. நாம் இந்த வார்த்தைகளை எளிதாக பயன்படுத்துகிறோம். பின்

விட்டுவிடுகிறோம். ஆனால் உலகளாவிய ஒரு பிரச்சினைக்கு முன்பாக நாம் மிகப்பெரிய செயல் திட்டத்தை வைத்திருக்கிறோம். இந்த பிரச்சினையை ஜோ பைடன் முற்றிலும் அறிந்து

வைத்திருக்கிறார். எனவே பருவநிலை மாற்றத்துக்கான பாரீஸ் உடன்படிக்கையில் நாம் மீண்டும் சேருவதற்கான நிர்வாக

உத்தரவில் அவர் கையெழுத்து போட்டிருக்கிறார். இவ்வளவு விரைவாக அதில் அவர் சேருவதில் காரணம் இருக்கிறது. இது அவசரமான பிரச்சினை ஆகும்.

நவம்பர் மாதம் கிளாஸ்கோவில் நடைபெறுகிற பருவநிலை மாற்ற உச்சி மாநாடுதான், உலகின் மிக மோசமான சுற்றுச்சூழல்

விளைவுகளை முறிடியப்பதற்கு கடைசி சிறந்த வாய்ப்பாக அமையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Posted in உலக செய்திகள்

பெண் டாக்டரை சுட்டுக்கொன்று விட்டு இந்திய டாக்டர் தற்கொலை

பெண் டாக்டரை சுட்டுக்கொன்று விட்டு இந்திய டாக்டர் தற்கொலை

அமெரிக்காவில் பெண் டாக்டரை சுட்டுக் கொன்று விட்டு, இந்திய டாக்டர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

அமெரிக்காவில் பெண் டாக்டரை சுட்டுக்கொன்று விட்டு இந்திய டாக்டர் தற்கொலை
டாக்டர் பரத் நெடுமாஞ்சி, டாக்டர் கேதரின் டாட்சன்

அமெரிக்க நாட்டில் டெக்சாஸ் மாகாணத்தின் தலைநகரமான ஆஸ்டின் நகரில், குழந்தைகள் நல ஆஸ்பத்திரி ஒன்று செயல்பட்டு வருகிறது.

அந்த ஆஸ்பத்திரிக்குள் கடந்த 26-ந் தேதி ஒருவர் கைத்துப்பாக்கியுடன் சென்று, அங்கிருந்தவர்களை

பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளதாக போலீசுக்கு புகார் சென்றது. அதைத் தொடர்ந்து போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

ஆனால் அதற்குள் பிணைக்கைதிகளில் பலர் அங்கிருந்து தப்பிவிட்டனர். எஞ்சியவர்களில் குழந்தைகள் நல மருத்துவரான

பெண் டாக்டர் கேதரின் டாட்சன் என்பவரை தவிர மற்றவர்கள் தப்பிச் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டு விட்டனர்.

அத்துடன் துப்பாக்கி வைத்திருந்த நபர், டாக்டர் கேதரின் டாட்சனை துப்பாக்கியால் சுட்டுக்கொன்று விட்டு, தானும் துப்பாக்கியால்

சுட்டுக்கொண்டு உயிர் துறந்தார். போலீசார் அங்கு வந்தபோது அவர்கள் இருவரையும் பிணங்களாகத்தான் பார்க்க முடிந்தது.

போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், துப்பாக்கியால் சுட்டு பெண் டாக்டரை சுட்டுக் கொன்று விட்டு, தானும்சுட்டு

தற்கொலை செய்து கொண்ட நபர் குழந்தைகள் நல மருத்துவர் என்றும், அவர் இந்திய வம்சாவளியை சேர்ந்த பரத் நெடுமாஞ்சி (வயது 43) என்றும் தெரிய வந்தது.

பரத் நெடுமாஞ்சி, முற்றிய புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார், கடந்த வாரம் இதே ஆஸ்பத்திரிக்கு வந்து, தன்னார்வலராக

சேருவதற்கு விண்ணப்பித்து இருந்தார், ஆனால் அவருக்கு அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது என்று உள்ளூர் ஊடகங்கள் கூறுகின்றன.

அவருக்கும் சுட்டுக்கொல்லப்பட்ட பெண் டாக்டர் கேதரின் டாட்சனுக்கும் என்ன தொடர்பு, எதற்காக அவரை சுட்டுக் கொன்று விட்டு, பரத் நெடுமாஞ்சி தற்கொலை செய்து கொண்டார் என்பது பற்றி எந்த தகவலும் இல்லை.

இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்துகின்றனர்.

இந்த சம்பவம், ஆஸ்டின் நகரை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது

Posted in உலக செய்திகள்

53 தலீபான்கள் கொன்று குவிப்பு

53 தலீபான்கள் கொன்று குவிப்பு

ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 53 தலீபான் பயங்கரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டனர்.

ஆப்கானிஸ்தானில் படைகள் அதிரடி – 53 தலீபான் பயங்கரவாதிகள் கொன்று குவிப்பு

ஆப்கானிஸ்தான் நாட்டில் நேற்றுமுன்தினம் காந்தஹார் மாகாணத்தின் அர்கண்டாப் மற்றும் டான்ட் மாவட்டங்களில்

பாதுகாப்பு படைகளின் சோதனைச்சாவடிகளை தாக்க தலீபான் பயங்கரவாதிகள் முற்றுகையிட்டனர். ஆனால் பாதுகாப்பு

படையினர் சுதாரித்துக் கொண்டு அவர்கள் மீது பயங்கர தாக்குதல் நடத்தினர்.

இதில் 31 தலீபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். தலீபான்களின் ஆயுதங்களும், வெடிபொருட்களும் அழிக்கப்பட்டன.

Posted in உலக செய்திகள்

விரைவில் மக்களை சந்திப்பேன் கொள்ளைராணி

விரைவில் மக்களை சந்திப்பேன் கொள்ளைராணிசசிகலா

சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை நிறைவடைந்ததை தொடர்ந்து பெங்களூரு சிறையில் இருந்து சசிகலா நேற்று விடுதலை செய்யப்பட்டார். கடந்த 20-ந்தேதி முதல்

அவர் கொரோனா தொற்று மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக அவர் பெங்களூர் விக்டோரியா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் சிறை அதிகாரிகள்

மருத்துவமனைக்கு வந்து சசிகலாவிடம் கையெழுத்து பெற்று அவரை விடுதலை செய்ததாக அறிவித்தனர்.

சசிகலா விடுதலையை அ.ம.மு.க.வினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகிறார்கள். இதனிடையே சசிகலா சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டாலும்,

தொடர்ந்து இன்னும் 3, 4 நாட்கள் அவர் விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற உள்ளார். அவர் சிகிச்சை

பெறும் கட்டிடத்தின் முன் பகுதியில் போலீசார் இரும்பு தடுப்புகளை வைத்து பாதூப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சசிகலா உடல்நிலையில் மேலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக விக்டோரியா மருத்துவமனை நிர்வாகம் அறிவித்து உள்ளது. சசிகலா சீராக உணவு உட்கொள்வதாகவும், உதவியுடன்

நடப்பதாகவும் மருத்துவமனை விளக்கம் அளித்துள்ளது. சசிகலா சிகிச்சைக்கு ஒத்துழைப்பு அளிக்கிறார் என்றும், அவரது உடல்நிலை

தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், விக்டோரியா மருத்துவமனையை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருகிற 30-ந்தேதி சசிகலாவுக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது. அதில் பாதிப்பு இல்லை என்றால் அன்றே அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என தெரிகிறது. மருத்துவமனையில்

இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டாலும், அவர் பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் தான் தமிழகத்திற்கு வர திட்டமிட்டுள்ளார். பிப்ரவரி 3-ந்தேதி அவர் சென்னை திரும்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டு

வருகின்றன. இதை தொடர்ந்து சசிகலாவுக்கு தமிழக எல்லையில் பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்படுகிறது. கர்நாடக-தமிழக

எல்லையான அத்திப்பள்ளியில் இருந்து சென்னை வரையில் வழி நெடுகிலும் சிறப்பான வரவேற்பு அளிக்க அவரது ஆதரவாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

சட்டமன்ற தேர்தலையொட்டி தங்கள் பலத்தை நிரூபிக்கும் வகையில் 1000-க்கும் மேற்பட்ட கார்கள் அணிவகுக்க ஊர்வலமாக சென்னைக்கு அவரை அழைத்து வர சசிகலா ஆதரவாளர்கள்

மற்றும் அ.ம.மு.க.வினர் திட்டமிட்டுள்ளனர். அவர் செல்லும் வழியில் சசிகலாவின் 66 வயதை குறிக்கும் விதமாக 66 இடங்களில் அவருக்கு வரவேற்பு அளிக்கவும் ஏற்பாடு செய்து வருகின்றனர். மேலும்

சென்னை செல்லும் வழியில் உள்ள முக்கிய கோவில்களில் வழிபாடு நடத்தவும் கட்சியினர் ஏற்பாடு செய்து வருகிறார்கள்.

இது சம்பந்தமாக சசிகலாவின் வக்கீல் ராஜாசெந்தூர் பாண்டியன் கூறியதாவது:-

சசிகலாவிடம் சிறை அதிகாரிகள் கையெழுத்து வாங்கி முறைப்படி விடுவித்து இருக்கிறார்கள். கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவதால் அது சம்பந்தமான அனைத்து நடைமுறைகளையும் அவர் பின்பற்றுகிறார்.

சசிகலா என்னிடம் ஒரு தகவலை தெரிவித்தார். விரைவில் தமிழக மக்களை சந்திப்பேன் என்று அவர் கூறினார். இந்த தகவலை மக்களிடம் சொல்லும்படியும் தெரிவித்தார்.

இவ்வாறு செந்தூர் பாண்டியன் கூறினார்.